Jump to content

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் ...

படம்: சாரதா

வெளியீடு: 1962

குரல்: P. சுசீலா - PB. ஸ்ரீநிவாஸ்

வரிகள்: கவியரசு கண்ணதாசன்

இசை: KV. மகாதேவன்

அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன?

அவன்: காதல்

அவள்: அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்

அந்த உரிமைக்குப் பெயர் என்ன?

அவன்: குடும்பம்

அவள்: நினைத்தவன் அவளை மறந்துவிட்டால்

அந்த நிலமையின் முடிவென்ன?

அவன்: துயரம்

அவள்: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்

அங்கு பெண்மையின் நிலையென்ன?

அவன்: மௌனம்

அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன?

அவன்: காதல்

அவள்: இரவும் பகலும் உன் உருவம்

அதில் இங்கும் அங்கும் உன் உருவம்

அவன்: அடக்கம் என்பது பெண் உருவம்

அதை அறிந்தால் மறையும் என் உருவம்

அவள்: மறைக்க முயன்றேன் முடியவில்லை

உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை

அவன்: நினைக்கும் நிலையிலும் நான் இல்லை

உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன?

அவன்: காதல்

அவள்: கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை

என்னைக் கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

அவன்: வாதம் செய்வது என் கடமை

அதில் வழியைக் காண்பது உன் திறமை

அவள்: கண்டேன் கண்டது நல்ல வழி

அது காதலனுடனே செல்லும் வழி

அவன்: சொன்னேன் பலமுறை யாசிக்கிறாய்

நீ சொன்னதை நானும்.. யோசிக்கிறேன்

அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன?

அவன்: காதல்

Link to comment
Share on other sites

பாடல்: விழியில்

படம்: கிரீடம்

ஜி. வி. பிரகாசின் இசையில்

என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்..

 என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்.. 

 

Link to comment
Share on other sites

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்

தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே

இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே

ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை

என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்

இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

படம் : இந்திரா

இசை : ஏ.ஆர். ரஹ்மான்

பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்

வரிகள் : வைரமுத்து

http://www.youtube.com/watch?v=M6--E17NI6k

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்: நதியே நதியே காதல் நதியே

குரல்: உன்னி மேனன், குழுவினர்

வரிகள்: வைரமுத்து

இசை: ஏ.ஆர். ரகுமான்

படம்: ரிதம்

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ

சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு

உங்கள் வளைவுகள் அழகு

ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே

அது நங்கையின் குணமே

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்

...

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே

தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே

பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்

நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

Link to comment
Share on other sites

அருமையான றீமிக்ஸ் பாடல் ஒன்று

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

திரைப்படம்: பள்ளிக்கூடம்

இசை: பரத்வாஜ்

பாடியவர்கள்: சுபிக்ஷா, டாக்டர் நாராயணன்

ஆரம்ப நாட்களிலிருந்தே பரத்வாஜ் பாடல்கள் மீது எனக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. உணர்வுபூர்வமாக பாடல்களுக்கு இசையமைப்பவர்களில் பரத்வாஜிற்கு எப்போதும் இடம் உண்டு. பல பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். காதல் மன்னனில் இடம் பெற்ற 'வானும் மண்ணும் பாடல்', பூவேலியில் இடம் பெற்ற 'இதற்கு பேர் தான் காதலா', வசூல்ராஜாவில் இடம் பெற்ற 'காடு திறந்து கிடக்கின்றது' ஆட்டோகிராபில் இடம் பெற்ற 'நினைவுகள் நெஞ்சினில்' உள்ளிட்ட பல பாடல்களைக் குறிப்பிடலாம்.அவ்வகையில் 'பள்ளிக்கூடம்' படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நாராயணன், ரகுமான் குழுவில் சில ஆண்டுகளாக பாடி வருகிறார். தனியாக வித்யாசாகருக்கு சில பாடல்களையும் பாடியுள்ளார். 'பொய்'-ல் மூச்சு விடாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒரிரு முறை கேட்ட ஞாபகம். பாடல் நிச்சயமாக வெற்றி பெற்று இவருக்குப் புகழ் தேடி தரும் என்பது எனது எண்ணம்.

http://www.shyju.com/index.php?act=mlite&CODE=showdetails&s_id=22549

எதுக்கு தெரியலை

விவரம் புரியலை

....

மனசு மருகுதே

எதுக்கு தெரியுமா?

எனக்கு தெரியலை...

அற்புதமான ராகம்.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

பாடல்:அழகிய கண்ணே உறவுகள் நீயே

இந்த யூட்யூப் வீடியோவைப் பார்த்தேன். நடிகர் விஜயனின் மரணம், இந்தப் பாடல், பழைய நினைவுகள்.... இப்படி எதேதோ நினைவில். கண்ணில் ஓரம் வரமுயலும் நீர்த்துளியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.

Edited by nunavilan
Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பாடல்: இரகசிய கனவில்

படம்: பீமா

பாடியவர்கள்: மதுஸ்ரீ, ஹரிஹரன்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி

=======

பெ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்

என் இமைகளைக் கழுவுது சொல் சொல்

இளமையில் இளமையில் ஜில் ஜில்

என் இருதயம் நழுவுது செல் செல்

ஆ: முதல்பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம்

ஓ உதடுகளால் உனைப்படிப்பேன் இருந்திடு அரைநிமிடம்

தொலைவது போல் தொலைவது தான் உலகில் உலகில் புனிதம்

குழு: இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடுஅழகே

தொடத் தொடக் குழைகிற சுகம் சுகமே

கண் படப் படப் புதிர்களும் அவிழ்ந்திடுமே (இறகே இறகே)

சரணம்-1

========

பெ: மறுபடி ஒருமுறை பிறந்தேனே

விரல்தொடப் புருவமும் சிவந்தேனே

ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ

சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ

ஆ: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல எனை சூட

நரம்புகளோடு குறும்புகள் ஆடும் எழுதிய கணக்கு

எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு

பெ: ரகசிய கனவுகள் குழு: ஜல் ஜல்

பெ: என் இமைகளைக் கழுவுது குழு: சொல் சொல்

பெ: இளமையில் இளமையில் குழு: ஜில் ஜில்

பெ: என் இருதயம் நழுவுது செல் செல்

சரணம்-2

=========

ஆ: உயிரணு முழுவதும் உனைப் பேச உனைப்பேச

இமை தொழும் நினைவுகள் அனல் வீச அனல் வீச

ஓ நெனச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ

தலைவைத்து நான் தூங்கும் தலகாணிக் கூச்சம் நீ

பெ: எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே படர்வாயே

நெருங்குவதாலே நொறுங்கி விடாது இருபது வருடம்

ஓ தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம்

ஆ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்…..

பெ: குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு

முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு

அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு

குழு: இறகே இறகே … (இறகே இறகே)

http://www.youtube.com/watch?v=5PleK5gFsLI

Edited by nunavilan
Link to comment
Share on other sites

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு - தெய்வப்பிறவி

http://www.youtube.com/watch?v=VhW6k3bwpHQ

செந்தமிழ் தேன் மொழியாள் - மாலையிட்ட மங்கை

http://www.youtube.com/watch?v=9aIsbc2L39w

தேன் உண்ணும் வண்டு - அமர தீபம்

http://www.youtube.com/watch?v=pysavg47Sfs...feature=related

மடி மீது தலை வைத்து - அன்னை இல்லம்

http://www.youtube.com/watch?v=B-uTJgjcgWA...feature=related

Link to comment
Share on other sites

ஏ.ஆர். ரகுமானால் இசை அமைக்கப்பட்டு, லோறன்ஸ் அவர்களால் நடனமாடப்பட்ட(குழுவும்) படம் பார்த்தாலே பரவசம்.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

அவள் ஒரு தொடர்கதை படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ்

தெய்வம் தந்த வீடு

http://www.youtube.com/watch?v=yagEqY3RLQs

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்?

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன?

இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உண்மை என்ன பொய்மை என்ன

இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

................தெய்வம் தந்த வீடு.......................

Edited by nunavilan
Link to comment
Share on other sites

நாளை இந்த வேளை பார்த்து

படம்:உயர்ந்த மனிதன்

படல்: வாலி

இசை: எம்.எஸ்.வி

http://www.youtube.com/watch?v=wikWKGd7YH4...feature=related

பால் போலவே வான் மீதிலே

யார் காணவே நீ காய்கிறாய் ?

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா..

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு.. ஆ...

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்

எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்

கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்

பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்..

கலைஞனாகினான்..

( நாளை )

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்

சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்

மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்

மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்..

மயக்கம் கொண்டதேன்..

( நாளை )

Edited by nunavilan
Link to comment
Share on other sites

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன

படம்:வசந்த மாளிகை

பாடல்: கண்ணதாசன்

இசை: கே.வி.மகாதேவன்

Link to comment
Share on other sites

பாலா இயக்கிய நந்தா படம் (2001) சூர்யாவுக்கு நல்ல திருப்புமுனையைத் தந்த படம். தந்தையைக் கொன்றுவிட்டுச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு வாய்பேசமுடியாத காது கேளாத தாயையும் சகோதரியையும் பிரிந்திருந்து, திரும்ப வந்து லைலாவைச் சந்தித்துக் கடைசிக் காட்சியில் தாய் கொடுக்கும் விஷம் கலந்த சோற்றை வாங்கித் தின்றுவிட்டு வாயோரம் ரத்தம் வழியச் செத்துப் போகிறார். அருமையான ஒளிப்பதிவும் காட்சியமைப்பும் சிரத்தையுடன் நடித்துள்ள நடிகர்களும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் சேர்ந்து படத்தைத் தூக்கி நிறுத்தின.

துக்கங்கள், துன்பங்கள் நிறைந்த ரணமாகிப் போன வாழ்க்கைக்கிடையே தென்றல் வருடுவது போல வந்து ஆசுவாசப்படுத்துவது லைலா சூர்யா தொடர்பான காட்சிகள். இந்தப் பாடல் உண்மையிலேயே ஒரு மருந்து மாதிரி உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறது. சிநேகம் இருந்த மனங்களில் காதல் பூத்ததை வெளியே சொல்லாமல் இருவரும் தவிப்பை அடக்கிக்கொண்டு இருப்பதை சூர்யாவும் (உணர்ச்சியேயில்லாத இறுகிய முகம் ஒரு வசதி) லைலா(லூசுச் சிரிப்பு இல்லாமல் படம் முழுக்க அடக்கி வாசிக்க வேண்டிய கோபத்தை பிதாமகனில் பழி தீர்த்துக்கொண்டார்! அப்படியும் சரணத்திற்கு முன்பாக வரும் சுபா குழுவினரோடு பாடியிருக்கும் "மனசில் எதையோ" வரிகளில் சூர்யா பார்க்காத தருணத்தில் அவரது ட்ரேட் மார்க் சிரிப்பை எடுத்துவிடுவார்!) இருவரும் நன்றாகச் செய்திருப்பார்கள். வசனங்களுக்குத் தேவையில்லாத காட்சியமைப்பு அற்புதமாக இருக்கும். பின்னணிப் பாடலாக வரும் இந்தப் பாடலே மனதில் ஓடும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் இதமாய் நம்மைத் தழுவும் புல்லாங்குழல் இடையிடையேயும் தனது இனிய இசையை வெளிப்படுத்தியிருக்கும்.

மிகமிக அடங்கிய மெல்லிய குரலில் பாடத் தொடங்கும் பாலு பின்பு அப்படியே உச்ச ஸ்தாயிக்குக் குரலைக் கொண்டு சென்று அட்டகாசமாகப் பாடியிருப்பார். பாடுவதற்கும் கடினமான பாடல். "விழுகிறதே" "நனைகிறதே" என்ற வார்த்தைகளை அவர் அலையலையாய் பாடியிருப்பது கடற்கரைக் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கிறது. பாலுவின் குரலுக்கு வயதாகவில்லை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பாடல்.

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

புரியாத உறவில் நின்றேன்

அறியாத சுகங்கள் கண்டேன்

மாற்றம் தந்தவள் நீ தானே

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

மனசில் எதையோ மறைக்கும் விழியே

மனசைத் திறந்து சொல்லடி வெளியே

கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு

கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு

மனசைத் திறந்து சொல்லடி வெளியே

என் இதயத்தை... என் இதயத்தை வழியில்

எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்

உன் விழியினில்... உன் விழியினில் அதனை

இப்போது கண்டுபிடித்துவிட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்

அதை நான் கண்டேன் உன் புன்னகையில்

வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ

சலங்கை குலுங்க ஓடும் அலையே

சங்கதி என்ன சொல்லடி வெளியே

கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு

நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு

ஏலோ ஏலோ ஏலே ஏலோ

என் பாதைகள் என் பாதைகள் உனது

வழிபார்த்து வந்து முடியுதடி

என் இரவுகள் என் இரவுகள் உனது

முகம் பார்த்து விடிய ஏங்குதடி

இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே....

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே....

Link to comment
Share on other sites

நள தமயந்தி பாடல்: என்ன இது என்ன இது

இசை அமைத்து பாடியவர்: ரமேஸ் விநாயகம்

Edited by nunavilan
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.