Jump to content

கொஞ்சி விளையாட..!!!


Recommended Posts

baby8plvx1.jpg

கொஞ்சி விளையாட..!!!

புலர்ந்தது பொழுது

மலர்ந்தது என் வதனம்

எழுந்தேன் படுக்கைவிட்டு

தொழுதேன் உன்கால்களை

ஏன் என்று நீ கேட்கிறாயா?

எப்போதேனும் உன் கால்களை

வார நான் குனியும் போது

உனக்கு ஐயம் வராதல்லவா?

சரியன்பே கொஞ்சம்

சிரி உன்னிதழ்விரித்து...

குளிர்த்து நீராடிவிட்டு

குளிர்போக சுடுநீரில்

அன்பைக் கலந்து

அணங்கு நான்

தேநீர் தயாரிக்க

போகணும் அன்பே...

சிரி ஒருமுறை சிரி

குவி உன்னிதழைக் குவி

கவி நீயானாலும்

பல கவி நான்

எழுதுவேன் உன்னிதழ் மேல்..!

மங்கை நான் அருகிருக்க

அங்கை அள்ளத் துடிக்கையில்

அன்பே...

கொங்கைகள் ஏங்குமடா!

சங்குக் கழுத்தும்

உன்னிதழ் முத்தத்திற்காக

காத்திருக்குதடா!

பொங்குகின்ற இன்பம் கோடி

மங்கை எனக்குள்ளே...

ஏங்குகின்ற என்னை ஏனடா

அலட்சியம் செய்கிறாய்?

தூங்குகின்ற சிறு பிள்ளை போல

பாசாங்கு செய்யாதே

நடிக்காதே எழுந்திரு

துடிக்கின்றேன் காளையே

உன் அணைப்புக்குள்

நான் அடங்கணும்

சத்தமின்றி நீ இடும்

முத்தத்தில் நான் உருகணும்

மஞ்சத்தில் தோகை விரித்து

நெஞ்சில் தலைசாய்த்து

கெஞ்சலோடு நான் சிணுங்கணும்

தொட்டிலில் கொஞ்சி விளையாட

சிறு முல்லைப் பூவொன்று

நீ தருவாயா..!

பிஞ்சு விரல்கள்

என் தேகம் தொடுகின்ற

இன்பம் அதுவும் தருவாயா..!!

:wub::):D

Link to comment
Share on other sites

:D நிலாவுக்கு கொஞ்சநாளா என்னமோ ஆகிப்போச்சு..... தை பிறந்தால் வழி பிறக்கும்! :lol: ... ம்... தொடருங்கள்..... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா கவிதை நல்லாயிருக்கு விரைவில் உங்கள் ஏக்கம் தீர வாழ்த்துக்கள் :wub:

Link to comment
Share on other sites

நிலா அக்கா கவிதை சூப்பரா இருக்கு :wub: எல்லோரும் தை பிறகட்டும் வழி பிறக்கும் என்று சொல்லுறபடியா பேபியனா நான் மாட்டுபொங்கல் வரட்டும் வழிபிறக்கும் என்று சொல்லுறேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

:lol::D என்ன எல்லோரும் "தை பிறாந்தால் வழி பிறாக்கும்" என்கிறீங்க?

ஏன் தீபா"வளி" பிறந்தால் "வலி" எல்லாம் பறந்து "வழி" பிறக்க கூடாதோ? :wub::lol:

கருத்துசொன்ன (நக்கலடிச்ச) அண்ணா இன்னிசை விகடகவி & ஜம்முபேபிக்கும் நன்றிங்கோ :D

Link to comment
Share on other sites

வெண்ணிநிலா உங்களுக்குள் சுரக்கும் கவிதை இனியது. உங்கள் இருவரதும் இன்பப் பொழுதிலும் தொடரும் உலகமும் சூழலும் நினைவுகளும் உருவாகும் மனச்சித்திரங்களும் சேர்ந்தால் கவிதை ஒரு நதியாக பெருகுமே. நேரமுள்ளபோது இக்கவிதையை நான் "எடிற்" பண்ணினல் எப்படி அமையும் என பார்க்கலாமா_ உங்கள் அனுமதி இருந்தால்

Link to comment
Share on other sites

அட எங்கட வெண்ணிலாவிற்கு தரைநிலவாகி.. கொஞ்சி விளையாடுகிற நேரமா இது.

அஞ்சலிப் பரணி பாடி முடியாத நேரதில் முக்கியம் தானோ..? சரி சரி சிரியுங்கோ சிரித்துக் கொண்டே கவி படியுங்கோ அல்லது கவி வடியுங்கோ.

தீப ஒளி வாழ்த்துக்கள் சும்மா ஒரு கடமைக்குக் கூட சொல்ல முடியாத நாட்களாகி விட்டது.

இருந்தாலும் கவிதை அருமையிலும் அருமை:lol: வெண்ணிலா வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அஞ்சலிப் பரணி பாடி முடியாத நேரதில் முக்கியம் தானோ..? .

சுனாமியில் அடிபட்டு மீண்டதுபோல இருக்கிறது. ஆனாலும் வாழ்க்கையும் ஒரு இனத்தின் இருப்பும் ஜீவ நதிபோல. அது தேங்காமலும் அதேசமயம் பின்வாங்காமல் முன் நோக்கியும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும். இதுதானே கலைகள் தரும் சேதி. இதுதானே விடுதலையின் இயங்கியல்.

Link to comment
Share on other sites

வெண்ணிநிலா உங்களுக்குள் சுரக்கும் கவிதை இனியது. உங்கள் இருவரதும் இன்பப் பொழுதிலும் தொடரும் உலகமும் சூழலும் நினைவுகளும் உருவாகும் மனச்சித்திரங்களும் சேர்ந்தால் கவிதை ஒரு நதியாக பெருகுமே. நேரமுள்ளபோது இக்கவிதையை நான் "எடிற்" பண்ணினல் எப்படி அமையும் என பார்க்கலாமா_ உங்கள் அனுமதி இருந்தால்

:o தாராளமாக எடிற் பண்ணுங்க . அபப்டியே அதை என் பார்வைக்கும் காட்டுங்க. நன்றிகள் poet :lol:

Link to comment
Share on other sites

அட எங்கட வெண்ணிலாவிற்கு தரைநிலவாகி.. கொஞ்சி விளையாடுகிற நேரமா இது.

அஞ்சலிப் பரணி பாடி முடியாத நேரதில் முக்கியம் தானோ..? சரி சரி சிரியுங்கோ சிரித்துக் கொண்டே கவி படியுங்கோ அல்லது கவி வடியுங்கோ.

தீப ஒளி வாழ்த்துக்கள் சும்மா ஒரு கடமைக்குக் கூட சொல்ல முடியாத நாட்களாகி விட்டது.

இருந்தாலும் கவிதை அருமையிலும் அருமை:lol: வெண்ணிலா வாழ்த்துக்கள்.

:o என்ன வசி அண்ணா இப்படி கேட்டுப்புட்டீங்க நான் கொஞ்சி விளையாடிய நெரத்தின் பின்னர் தான் அஞ்சலிப்பரணி பாட வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துடுட்து. :lol::D அதற்காக என்னை போய் இக்கவிதை முக்கியமோ என கேட்டால் என்ன செய்ய?

நன்றிகள் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதை அழகு. எல்லோரும் சொல்லுற மாதிரி தை பிறந்தால் வழி பிறக்கட்டும்

Link to comment
Share on other sites

தை பிறந்தால் வழி பிறக்கும் . (எல்லாரும் சொல்லுறாங்க நானும் சொல்லிப்பாக்கிறன் :lol: ).... வாழ்த்துக்கள் நிலா ! :o

Link to comment
Share on other sites

உங்க கவிதை அழகு. எல்லோரும் சொல்லுற மாதிரி தை பிறந்தால் வழி பிறக்கட்டும்

:lol: என்னப்பா எல்லோரும் நக்கல் அடிக்கிறாங்க என்று பார்த்தால் நீங்களுமா? தாங்க முடியல்லைப்பா :lol:

தை பிறந்தால் வழி பிறக்கும் . (எல்லாரும் சொல்லுறாங்க நானும் சொல்லிப்பாக்கிறன் :) ).... வாழ்த்துக்கள் நிலா ! :)

:rolleyes::wub: உண்மையாக என்னால் உங்க லொள்ளுகளை தாங்க முடியல்லையுங்கோ

Link to comment
Share on other sites

நிலவிற்கே ஆசை வந்தால்

பூமிதான் தாங்குமா?

:wub: நீங்களுமா அக்கா நக்கல் பண்ணுறீங்க? வானிலாவுக்கு ஆசை வந்திச்சா பூமி தனக்குமோ தெரியா ஆனால் இந்த வெண்ணிலாவுக்குமா? :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:wub::D:huh::blink:

என்ன சார் ஆச்சுது. மழைக்க நனைஞ்சு நனைச்சு சளிபிடிச்சிட்டா..!

வெண்ணிலா பெண்ணிலாவாயிட்டுது போல..! எனி எல்லாம் இப்படித்தான் கவிதையா வரும்.. வயசுக் கோளாறு என்றது இதைத்தான்.

பிள்ள ஏதேனும் நல்ல செய்தியெட்டா களத்திலும் சொல்லுங்கோ நாலு பெரிய மனிசர் வாழ்த்துவமில்ல. :D:lol:

Link to comment
Share on other sites

:wub::D:huh::blink:

:lol::D

வெண்ணிலா பெண்ணிலாவாயிட்டுது போல..! எனி எல்லாம் இப்படித்தான் கவிதையா வரும்.. வயசுக் கோளாறு என்றது இதைத்தான்.

பிள்ள ஏதேனும் நல்ல செய்தியெட்டா களத்திலும் சொல்லுங்கோ நாலு பெரிய மனிசர் வாழ்த்துவமில்ல. :D:lol:

:lol: என்ன நெடுக் அண்ணா இப்படி சொல்லிடீங்க? அப்போ வெண்ணிலா இவ்வளவுநாளும் ஆணிலாவாகவா இருந்திச்சு? :( ஐயோ வயசுக்கோளாறுமில்லை ஒரு கோளாறுமில்லை. சும்மா எழுதினேன் அதை இங்கே போட்டால் இப்படியா எல்லோரும் நக்கலடிப்பீங்க?

ஹாஹா நல்ல சேதி ஒண்ணுமில்லை. அபப்டியிருந்தால் என் அன்புத்தம்பி ஜம்மு எல்லாமே சொல்லுவான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" கொஞ்சி விளையாட"

கஞ்சமின்றி

மஞ்சத்தில் கொஞ்சிட

வெட்கத்தை விட்டு

கெஞ்சி கேட்கும்

நிலாவின்

கொஞ்சும் கவிதை!

அழகா இருக்கு!!!

நிலா! ஒரு முரண்பாடு அதுதான் விளங்கவில்லை.

" தொழுதேன் உன்கால்களை

ஏன் என்று நீ கேட்கிறாயா?

எப்போதேனும் உன் கால்களை

வார நான் குனியும் போது

உனக்கு ஐயம் வராதல்லவா?"

இந்த வரிகள்!

காதலோடும்...

தேடலோடும்..

எழுதியது என நினைக்க

நெஞ்சினில்

ஊடலோடு

எழுதியது போல் இருக்கு!

" எப்போதும் உன் கால்களை வார"

சிறு மழலையை

தொட்டிலில் கொஞ்சிடவா

மஞ்சத்தில்

மன்னனை தழுவுகிறார்கள் பெண்கள்?

அப்போ...

காதலோ? ஏன்

சிறு துளி தேடல் கூடவா இல்லை

அந்த கொஞ்சலில்?? :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நிலா.... காலங்காத்தால தேனீருக்கு முதலே இப்படி கவிதையா?? இன்னும் அடிக்கடி கவிதைகள் பொங்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நிலா.... காலங்காத்தால தேனீருக்கு முதலே இப்படி கவிதையா?? இன்னும் அடிக்கடி கவிதைகள் பொங்க வாழ்த்துக்கள்

:lol::lol: ஏன் இப்படி கேட்கிறீங்க? :unsure: இது கவிதையுங்கோ :(

Link to comment
Share on other sites

" கொஞ்சி விளையாட"

கஞ்சமின்றி

மஞ்சத்தில் கொஞ்சிட

வெட்கத்தை விட்டு

கெஞ்சி கேட்கும்

நிலாவின்

கொஞ்சும் கவிதை!

அழகா இருக்கு!!!

நன்றிகள் இவள் அக்கா. உங்களின் இவ்வரிகளும் அழகு.

நிலா! ஒரு முரண்பாடு அதுதான் விளங்கவில்லை.

" தொழுதேன் உன்கால்களை

ஏன் என்று நீ கேட்கிறாயா?

எப்போதேனும் உன் கால்களை

வார நான் குனியும் போது

உனக்கு ஐயம் வராதல்லவா?"

இந்த வரிகள்!

:lol::lol:இல்லைக்கா அது சும்மா விளையாட்டு வரிகள். அதாவது காலைவாரணும் என்று திட்டம் தீட்டிட்டாங்க. நானும் பதிலுக்கு அப்படி சொல்லிட்டேன். அதனால் தான் இவ்வரியில் நான் தொழுவேனே தவிர கால்களை வாரமாட்டேன் என சொல்லி இருக்கிறேன்.

காதலோடும்...

தேடலோடும்..

எழுதியது என நினைக்க

நெஞ்சினில்

ஊடலோடு

எழுதியது போல் இருக்கு!

:(ஊடலும் இல்லை தேடலும் இல்லை கூடலும் இல்லை. அப்படி ஒன்று நிஜங்களில் நிகழுமாயின் கவிதை அப்போது உயிரோட்டமாக வரும். இது சாதாரணமாக கற்பனைக்கவிதையே.

" எப்போதும் உன் கால்களை வார"

சிறு மழலையை

தொட்டிலில் கொஞ்சிடவா

மஞ்சத்தில்

மன்னனை தழுவுகிறார்கள் பெண்கள்?

அப்போ...

காதலோ? ஏன்

சிறு துளி தேடல் கூடவா இல்லை

அந்த கொஞ்சலில்?? :unsure:

இதற்குப்பதில் தற்போது சொல்ல முடியல்லை. ஏன்னா நான் இப்பவும் செல்வி வெண்ணிலா. :(:(

Link to comment
Share on other sites

வெண்ணிலா, நீங்கள் மஞ்சத்தில் கொஞ்சி (கெஞ்சி) விளையாடுகிறீர்களோ இல்லையோ.... இங்க கருத்துச் சொல்லும் கன பேர் தங்கட ஆசைகளை சொல்லி விளையாடுகினம்... :lol: (களத்தில யாரும் கோவிக்கக்கூடாது... )

ஆனாலும் வெண்ணிலா நீங்கள் காலை வாரணும் என்று எழுதிறதெல்லாம் மகா தப்பு தான்...(பழங்காலத்தில பெண்கள் கணவன் காலில் ஏன் விழுந்தாங்க என்று இப்ப தானே விளங்குது... என்ன பாவம் என்றால் யாருக்கும் காலை வார சந்தர்ப்பம் கிடைக்கலப் போல....நீங்க என்றாலும் சாதிச்சுக் காட்டுவீங்க என்று நம்பிறன்.... பாவம் யார் அந்த அப்பாவியோ....?கடவுள் காக்க.... )

Link to comment
Share on other sites

வெண்ணிலா, நீங்கள் மஞ்சத்தில் கொஞ்சி (கெஞ்சி) விளையாடுகிறீர்களோ இல்லையோ.... இங்க கருத்துச் சொல்லும் கன பேர் தங்கட ஆசைகளை சொல்லி விளையாடுகினம்... :) (களத்தில யாரும் கோவிக்கக்கூடாது... )

ஆனாலும் வெண்ணிலா நீங்கள் காலை வராணும் என்று எழுதிறதெல்லாம் மகா தப்பு தான்...(பழங்காலத்தில பெண்கள் கணவன் கால்ல ஏன் விழுந்தாங்க என்று இப்ப தானே விளங்குது... என்ன பாவம் என்றால் யாருக்கும் காலை வாரா சந்தர்ப்பம் கிடைக்கலப் போல....நீங்க என்றாலும் சாதிச்சுக் காட்டுவீங்க என்று நம்பிறன்.... பாவம் யார் அந்த அப்பாவியோ....?கடவுள் காக்க.... )

:lol: ஓ இங்கை கருத்துச் சொல்லி விளையாடுறார்களோ. அப்போ நீங்களுமோ ரூபன்?

:lol: சாதிச்சுடுவம் அதில் என்ன சந்தேகம்? :icon_idea: அப்பாவி பாவமோ? ஹீஹீஹீ :huh:

"கடவுள் காக்க" அட இதை இன்னும் மறக்கல்லையா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.