Jump to content

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு


Recommended Posts

செய்தி கேட்ட நேரம் முதல்

என்ர ஐயோ என்று வாய்விட்டு கத்தி கதறி அழவேணும் போல உள்ளது ......

ச்சீ .... இப்படி ஓருநாளுமே எவருமே நினைத்ததில்லை .

எவ்வளவு முறை ஆசையாய் சிறு பிள்ளையில் இருந்து அப்பாவின் தோளில் இருந்து ஆசையாய் பார்த்த ஞாபகம் .

சிங்களவன்ர இடத்தில இருக்கிறதால எதுவுமே செய்யமுடியவில்லை ....

இயக்கத்தில் ஒரு போராளியை இழக்கவில்லை எமது குடும்மபத்தில் முத்த சகோதரனை இழந்த சோகம் நெஞ்சை பிழிந்து எடுக்கின்றது . 1987 ஈம் ஆண்டு இந்திய .இராணுவம் வந்த நாளில் இருந்து எத்ததைன முறை துப்பாக்கி எண்ணை போடுவதற்காக நீங்களும் குணா (விரச்சாவு - புநகரி) பாப்பா அண்ணையும் வந்திருப்பிர்கள் .

இந்தளவு நாளும் வராத நினைவெல்லாம் இப்ப வந்து துலைக்குதே !

எவ்வளவு கோபமாக வந்தாலும் ஆசையாய் கதைத்து அனுப்பபுவிர்ளளே !

வயதில் இளமையென்றாலும் அப்பாகுட பிரசடசனை என்றால் ஓடிவந்து கதைத்தது உங்களுடன் தான் நினைக்கவே முடியளவில்லை இந்தச் செய்தியை !

எத்தனை முறை மட்டுவிலில் இந்தியன் ஆமிக்கு சிம்ம சொற்பனமாய நீங்கள் முவரும் இருந்திருப்பரிPர்கள்.

1993 குணா அண்ணையை சாவகச்சேரி இழந்த பொழுது தலைவரோட நிக்கிற எங்கட தினேசு அண்ணை என்டு எவ்வளவு பெருமையாய் கதைந்தம் அதற்கிடையில் கொண்டு போட்டாங்களே !!!!!!!!!!

முதல்ல நடேசு மற்றும் சிங்கன் இரண்டு பேரையும் இந்திய ஆமி சுட்டபோதிலும் (விரச்சாவு 1987 மட்டுவில்)

பாலன் ( வீரச்சாவு - மட்டுவில்)

லெப்.கேணல் சுட்டீ (விரச்சாவு -ஆனையிறவு 1990)

லெப்.கேணல்.குணா(விரச்சாவு -புநகரி)

கப்டன் கலைஞன் (விரச்சாவு -மண்டைதீவு)

லெப்.கேணல் மகேந்தி (விரச்hசவு- மன்னார்)

இந்தவளவு பேரும் விரச்சாவு அடைஞ்ச பொழுதிலும்

இப்பிடி ஒருநாளும் அழுததில்லைகாரணம் நிங்கள் இருந்தீர்கள் ஆனால்....

இன்று என்ன ??????

மன்னிக்கவும் அண்ணா ......

சிரித்து சிரித்து எஙடகட துன்பமெல்லாம் உலககறிய செய்த உங்களும் இறுதி முறையாக வாய்விட்டு அழக்ககுட முடியவில்லை.

இது எனது கதறல் மட்டுமல்ல தென்மராட்சியின் ஒவ்வொரு தமிழ் மகளனினதும் நெங்சை பிழிந்தெடுக்கும் கதறல் !!!!!

எவ்வளவோ வாய்விட்டு அலறுவதை எழுத வேணும்போல இருக்கிறது ஆனாலும் ஏலாம்ல் இருக்கிறது.

மட்டுவில் வாழ் மக்களின் பிதற்றல்.

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அதிர்ச்சியான செய்தி.. தமிழீழ அரசியல் வானில் புன்சிரிப்புடன் இருந்த நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது.

பாலா அண்ணையில் இழப்பின் பின்னர் தமிழீழத்தின் அரசியல் பணிகளை சிறப்பாக முன்னெடுத்துச் சென்ற தமிழீழ அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் இழப்பு உலகமெல்லாம் வாழும் தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக உள்ளது. இழப்ப்புக்களையும் சோதனைகளையும் தாண்டிக் கடக்க வேண்டிய பாதை இன்னமும் நீளாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது தமிழர்கள் அனைவரினதும் கடமையாகும்.

அன்னாருக்கும் அவருடன் கூடவே மரணித்த மாவீரர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

கடவுளே என்ன கொடுமை! நம்பவே கஸ்ட்டமாக இருக்கு! எழுதவே கை நடுங்குது!

பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவர்களுக்கும் எனைய வீரர்களுக்கும் எனது வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் முற்றம் நின்று

பூங்கொத்து ஏந்தும் புன்னகை மன்னவனே!

யார் குற்றம் செய்தோம்? - எம் சுற்றங்கள்

கரைந்திடும் காலத்தில் உழல்கின்றோம்.

கண்களில் கசிகின்றோம்.

காவிய வேந்தனின் கரங்களில் வலுதரும்

கனலாய் பிறப்பெடுப்போம்.

விடுதலைத் தோழர்களே! உங்களுக்கு எங்களின் வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைக்க நினைக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. :icon_idea::(:( உலகத்தமிழர்கள் அனைவரும் ஓங்கி குரல் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.

ஏய்ய்ய்ய்ய் தமிழகமே!!!! இன்னும் ஏன் மெளனம்.பொங்கி எழு!!!தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் பெரும் குரல் கொடுத்து இந்தியாவிற்கு தமிழர்களின் துயரத்தை புரியவைக்க வேண்டும்.

ஏய்ய்ய்ய்ய் சர்வதேச சமூகமே! இன்னும் ஏன் பாரபட்சம், தமிழீத்தை அங்கீகரி!

Link to comment
Share on other sites

எத்தினதரம் பார்ததலும் அலுத்திடதா முகம் உங்களது !!!!இனி எப்ப தான் ?????அண்ணா !செய்தியை கேட்வுடன் உங்களைப் போல தான் எனக்கும் சிhப்பு வந்தது காரணம் உங்களையும் எவராலும் எதுவும் செய்ய முடியாது என்ற இறுமாப்பில் மன்னிக்வும் அண்ணா !செய்தி உண்மை என்று தெரிந்தவுடன் எதவுமெ செய்யமுடியவில்லை.தினேசு தினேசு என்று கண்ணாடி போட்டு நீங்கள் நடந்த மட்டுவில் இடமெல்லாம் பார்க்காவா எங்களை விட்டு அவசரப்பட்டு போநீர்கள் ????

Link to comment
Share on other sites

என்ன கொடுமை இது

செய்தி பார்த்ததும் இது வழமையான சிங்களவரின் பொய் கதையாக இருக்கக் கூடாதா என்று மனது ஏங்குது.

தமிழ்செல்வன் அண்ணாவிற்கும் அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் இழப்புக்கள் என்பது சகஜமானது. இழப்புக்களை எதிர்பார்க்காது அதற்கு ஏற்ப எம்மைத் தயார்படுத்தாது போராட முடியாது. இழப்புக்களால் துவண்டுவிடாமல் தொடர்ந்து போராடும் உறுதியை மக்கள் அனைவரும் பெற வேண்டியதே இவ்வேளையில் சு ப தமிழ்செல்வன் அண்ணா உட்பட போராளிகளுக்குச் செய்யும் அஞ்சலியாகும்.

சிங்களவனின் பேரினவாதக் கோரங்கரங்களை அடக்கும் வரை தமிழர்கள் ஓயக் கூடாது. ஏற்பட்டுவிட்ட இழப்புக்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு தொடர்ந்து செல்லுதலும் இழப்புக்களைக் குறைக்கும் வகையில் விவேகமாக நடந்து கொள்வதுமே இன்றைய வேளையில் அவசியமானது.

மனிதன் மரணித்துவிட்டால் எல்லாம் இழக்கப்பட்டதாகிட முடியாது. வீரனின் இழப்பு இன்னும் பல வீரர்களை உருவாக்கிச் செல்லும் என்பது எமது போராட்டத்தைப் பொறுத்தவரை செல்லக்கிளி அம்மானில் இருந்து தொடரும் உண்மையாகும்..! முதற் தாக்குதலிலேயே ஒரூ சிறந்த வீரனை இழந்து தான் வெற்றிகளைப் பெற்றோம் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

போர்க்களத்தில் வீழ்ந்த போராளிகளின் நினைவுகளைச் சுமந்தபடி.. மரணம் என்பது எமது போராட்டத்தை நசுக்க இடமளிக்காது... போராளிகளின் பாதச் சுவடுகளை பற்றி பயணிப்போம் விடுதலை நோக்கி. தாயகத்தின் விடுதலையின் மூலமே இப்போராளிகளுக்கு நாம் தகுத்த மரியாதையை அளிக்க முடியும்.

இத்தருணத்தில் நிதானமாகவும் அதேவேளை மேலும் இழப்புக்கள் நேராத வண்ணம் பாதுகாப்புப் பெறுவதும் புத்திசாதுரியமாக எதிரியை எதிர்கொள்வதுமே முக்கியமானது. மக்களும் சோகத்தால் துவண்டுவிடாது தொடர்ந்து விடுதலை வேட்கையோடு பயணிக்கவும் செயற்படவும் உறுதி கொள்வதே இம்மாவீரர்களுக்கு செய்யும் அஞ்சலியாகும். அதுவே போராடும் மக்களுக்கு அவசியமானதுமாகும்.

இழப்புகளைக் கண்டு அழுது புலம்பி துவண்டு நாம் எதையும் போராட்ட வரலாற்றில் சாதிக்க முடியாது. :icon_idea:

Link to comment
Share on other sites

தமிழ்ச்செல்வன் அண்ணாவுக்கும் அவருடன் ஆகுதியாகிய வேங்கைகளுக்கும் வீரவணக்கங்கள்!!

Link to comment
Share on other sites

சாவகச்சேரியில் இந்திய இராணுவத்திற்கு பாடம் படிப்பிச்சு போட்டு விளைவேலி வயிற்குள்ளாள் நீங்களும் குணா பாப்பா ருபன் நடந்து வந்த நாள் நினைவுக்கு வருகிதே !!!!!

Link to comment
Share on other sites

இலங்கை அரச பௌவுத்த பயங்கரவாதத்தின் கொடிய வான் தாக்குதலில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு, உலகநாடுகள் கடும் கண்டனம்.

ஜ வெள்ளிக்கிழமைஇ 2 நவம்பர் 2007 ஸ ஜ மோகனஏபிரகாம ஸ

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,

தமிழீழ

விடுதலைப் புலிகள்,

கிளிநொச்சி

2007.11.02

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

இன்று காலை ஆறு மணியளவில் எமது அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப். கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். வாகைக்குமரன் ஆகியோரும் சிறிலங்கா வான் படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதனை தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பன்னாட்டுச் சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சோ.சீரன்,

செயலர்,

தலைமைச் செயலகம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் துயரில் ஆழ்திய துக்க செய்திகேட்டு சோகத்தில் மூழ்கினர்.

உலகநாடுகள் பலவும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளதுடன் இலங்கை அரசிற்கு இறாஜதந்திர அளுத்தை பயன்படுத்திவருவதாக அறியமுடிகிறது.

ஜரோப்பிய இறாஜதந்திரிகள் தமிழ்செல்வன் மீதான தாக்குதலை கூட்டாக இணைந்து கண்டிக்கும் நோக்குடன் பலநாடுகள் உள்மட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த தாக்குதல் ஊடாக சமாதானம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக உலகநாடுகள் நம்புவதாகவும் தெரியவருகிறது. உலகநாடுகள் பலவற்றின் இறாஜதந்திரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்த தமிழ்செல்வன் மீதான தாக்குதலை தொடர்ந்து இலங்கையின் எதிர்கால அரசியல் , மற்றும் இராணுவ போக்குகள் பாரிய மாற்றத்திற்கு உள்ளாகும் எனவும் அறியமுடிகிறது.

நிதர்சனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்செல்வன் அண்ணாவுக்கா இந்த நிலமை. தேசத்தின் குரலுக்கு பிறகு எங்கட குரலை இந்த உலகத்துக்கு எடுத்துசொன்ன இன்னொரு குரலும் ஓய்ந்து விட்டதா???

கடவுளே உனக்குமா கண்ணில்லை

அண்ணாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும் :icon_idea::(

Link to comment
Share on other sites

வருகிற 10 திகதி தான் ரவிராயின்ர முதலாவது நினைவு தினம் அதற்கிடையில நீங்களா அண்ணா !!!!!!

Link to comment
Share on other sites

கடவுளே இது பொய்யா இருக்க கூடாதா! உண்மையாக இருந்தால் சிங்களவனுக்கு இன்றே நல்ல பாடம் புகட்ட வேண்டும்! எங்கட நெஞ்சு வெடிக்க முன்னர்.

Link to comment
Share on other sites

என்ன கொடுமைப்பா தமிழ்செல்வன் அண்ணாவா எங்களை விட்டு போய்விட்டார்

கடவுளே கண்ணில்லையா

வீரத்தளபதிக்கு எனது வீரவணக்கங்கள்.....

Link to comment
Share on other sites

எத்தின தரம் கதைச்சாலும் அலுக்காமல் கேட்கிற குரலில நீங்கள தானே எங்களுக்கு முதல் இப்ப என்ன அண்ணா அவசரம் போட்டியள் ,,,,,,??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் பாணியில் இலங்கை அரசு

சமாதான செயலகம் புலிகளுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக முக்கிய உறுபினர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அரசின் நயகவஞ்சக செயலால் தமிழ்செல்வன் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிகின்றன

முன்னரும் லெப் கேணல் ஜொனியினை இந்திய அரசு சமாதான பேச்சுக்கு அழைத்து கொன்றது போல இன்று எமது அரசியல் துறை பொறுப்பாளர் கொல்லப்பட்டிருகிறார்.

Tamilselvan9.img_assist_custom.jpg

இதற்கு சர்வதேசம் என்ன செய்யபோகிறது மீண்டும் குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கவா போகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீர வணக்கம்!

மாவீரர்களின் கனவுகளைச் சுமந்தவாறு தொடரட்டும் பணி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பாணியில் இலங்கை அரசு

சமாதான செயலகம் புலிகளுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக முக்கிய உறுபினர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அரசின் நயகவஞ்சக செயலால் தமிழ்செல்வன் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிகின்றன

முன்னரும் லெப் கேணல் ஜொனியினை இந்திய அரசு சமாதான பேச்சுக்கு அழைத்து கொன்றது போல இன்று எமது அரசியல் துறை பொறுப்பாளர் கொல்லப்பட்டிருகிறார்.

Tamilselvan9.img_assist_custom.jpg

இதற்கு சர்வதேசம் என்ன செய்யபோகிறது மீண்டும் குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கவா போகின்றது

தயவுசெய்து இப்படியான குழப்பம் விளைந்த சூழலில் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்ந்திவிடக் கூடிய செய்திகளை ஆதாரங்கள் இன்றி பிரசுரிப்பதைத் தவிருங்கள்.

தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் அதன் அயற்புறக் கிராமங்களும் தாக்கப்பட்டு இரண்டு பொதுமக்களும் கொல்லப்பட்டு 6 மாதக் குழந்தை, பள்ளிச் சிறுவர்கள் உட்பட 6 பேர் காயமடைந்தும் உள்ளனர். :icon_idea:

http://www.sankathi.net/news/0211/kifir_news.html

Link to comment
Share on other sites

நவம். 5 ஆம் நாள் வரை தமிழீழ தேசிய துக்க நாளாக பிரகடனம்

ஜவெள்ளிக்கிழமைஇ 02 நவம்பர் 2007இ 04:19 Pஆ ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவையிட்டு எதிர்வரும் 5 ஆம் நாள் வரை தேசியத் துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

வன்னிப் பெருநிலம் எங்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் கறுப்பு- சிவப்பு- மஞ்சள் கொடிகளையும் கட்டி வருகின்றனர்.

புதனம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.