Jump to content

ஏன் சிங்கள இனவெறி அரசியல் தலைமைகள் அழிக்கப்படக் கூடாது??????


Recommended Posts

2001ம் ஆண்டு சிங்கள இனவெறி தரப்பிற்கும் தமிழர் தரப்பிற்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது முதல் இன்று வரை ஏராளமான தமிழ் அரசியல்துறைச் செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொண்டர்கள் என பலர் சிங்கள இனவெறி அரசின் இயந்திரங்களினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அன்று மட்டு/அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கவுசல்யன், முன்னால் அம்பாறை அரசியல் பொறுப்பாளர் பாவா எனத் தொடங்கி ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் என்று பலரையும் சேர்த்து இன்று தமிழ்ச்செல்வனில் முடிந்திருக்கின்றது

இவைகள் மிகத் தெளிவாக சிங்கள அதிகார இயந்திரங்களினால் இனங்காணப்பட்டு, தேர்தெடுக்கப்பட்டு படுகொலைகள் நடந்தேறியுள்ளன. இப்படுகொலைகளின் நோக்கமே தமிழர்களின் தேசியத்தை நோக்கிய அரசியல் சக்திகளை இல்லாது ஒழிப்பதே. அது மட்டுமல்லாது ஈழத்தமிழர்களது பேச்சுவார்த்தை மூலமான நகர்வுகளை இல்லாதொழிப்பதும் ஆகும்.

இன்று எம்முன் உள்ள கேள்வி என்னவென்றால், நாமும் ஏன் சிங்கள இனவெறி அரசியல் தலைமைகளை அழித்தொழிக்கக் கூடாது?என்பதே!

"முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்", எதிரிக்கு புரியும் பாஷையில் பதிலளித்தாலே, அவன் தேர்ந்தெடுத்த இலக்கு பிழையென்று அவனுக்குப் புரியும். சர்வதேசம் எனும் மாயையை ஒரு புறம் தள்ளி வைத்து விட்டு, எதிரிக்குப் பதிலளிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

தற்போது இலங்கைத் தீவில் நடைபெறுவது வெறுமனே சிங்கள பேரினவாத அரசுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்கவைக்க சர்வதேச சமூகத்தினுடனான போராட்டமே. போராட்டம் சிங்களர்களுக்கு மட்டுமே அடித்த காலம் எப்பொழுதோ முடிந்துவிட்டது. அதை விட்டு நீங்கி இப்பொழுது எமது உரிமைகளை ஏற்குமாறு பல்வேறு நாடுகளுடனும் நடைபெறும் "சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு" நிர்ப்பந்திக்கும் போராட்டமே இப்பொழுது நடைபெறுகிறது.

சிங்களம் எதிர்பார்ப்பதும், நம்மில் பலர் ஆத்திரத்தில் எதிர்பார்ப்பதும் ஒரு விடயத்தையே. சிங்களர்க்கு கண்மண் தெரியாமல் அடி என்பதுதான் அது. உண்மையில் சிங்களம் இதை எதிர்பார்ப்பது நயவஞ்சகத்துடன். போராட்டம் அதன் தற்போதைய நிலையில் இருந்து கீழ்நிலையை அடைவதையே சிங்களம் விரும்புகிறது. நாம் ஆத்திரத்தினால் அதன் விளைவுகளை அறியாமல் இதை விரும்புகிறோம்.

உண்மையில், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் நாம் 10 விழுக்காடு தன்னும் செயலாற்றாமல் இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் எமது நேர்மையான போராட்ட நியாயங்களை எம்முடன் ஊடாடும் அந்தந்த நாட்டு மக்களுக்கு, தலைவர்களுக்கு சிறிது சிறிதாக அவர்கள் மூளையில் ஏற்ற வேண்டும். வெறுமனே ஊர்வலம் செய்வதும் ஓய்ந்து விடுவதும் போதாது. சிறுகச் சிறுக ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டிய காலம் இது.

நாம் செயலாற்றாமல் இருப்பதால், தாயகத்தில் இழப்புக்களும் அவலங்களும் தொடரவே செய்யும்.

Link to comment
Share on other sites

நமாறியாததா.... சோழன். எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.... :icon_idea: உலகை இப்போ உலகமொழியால் வெல்லவேண்டும்... இல்லையேல் ... எல்லாபோராளிகளுக்கும்....நாடுக ளுக்கும்... உள்ளது தனிமொழி....(தான் :icon_idea: ) :icon_idea::)

Link to comment
Share on other sites

இன்று எம்முன் உள்ள கேள்வி என்னவென்றால், நாமும் ஏன் சிங்கள இனவெறி அரசியல் தலைமைகளை அழித்தொழிக்கக் கூடாது?என்பதே!

சிங்கள அரசியல் தலைமைகள் சிங்கள மக்களினால் காலத்திற்கேற்றவாறு தீர்மானிக்கப்படும். ரணில் ஒரு காலப்பகுதியில் அவர்களுக்குச் சிறந்த தலைவராக இருந்தார். இப்போது ராஜபக்ஸ அவ்வாறு தோற்றமளிக்கிறார். இனிவரும் காலங்களில் வேறு யாராவது தலைமைப் பொறுப்பை ஏற்கலாம்.

சிங்கள அரசியல் தலைமைகளை அழிப்பதால் அந்த வெற்றிடம் விரைவில் நிரப்பப்படுமே ஒழிய இனவாத அசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழின ஒழிப்பை முன்னெடுப்பதற்கு புதிது புதிதாக அரசியல்வாதிகள் முளைப்பார்களே தவிர எமக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. சிங்கள அரசியலிலும் எந்தவிதமான பின்னடைவும் ஏற்படப் போவதில்லை.

மாறாக சர்வதேச மாயையை சிங்கள அரசாங்கத்திற்கெதிராக திருப்ப முடியாவிடினும் எமக்கெதிராக இயங்க முடியாமல் செய்வதே புத்திசாலித்தனம்.

Link to comment
Share on other sites

பேரினவாதம் ஒடுக்கப்படத்தான் வேண்டும். அதற்குத் தருணமும் உண்டு. ஆத்திரப்படும் போது ஆபத்துக்குள் விழுந்துவிடும் சந்தர்ப்பமுண்டு. தமிழ்ச்செல்வனின் இழப்பு பேரிழப்புத்தான். ஆனால் தமிழ்ச் சமுதாயம் அடையப்போகும் தீர்வுpற்கு தற்போதைய செயற்பாடுகள் தடையாகக் கூடாது.

புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.

Link to comment
Share on other sites

நிலமை கனிந்துவரும் வேளை இழந்துவிட்டோமே ஒரு நாயகனை.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கும், சர்வதேஷ பிரமுகர்களின் கண்டனங்களிற்கும் உன் புன்னகையே பல்லாயிரம் பதில்களை கொடுத்ததே ஆனால் இன்று நீயுமில்லை, உன்புன்னகையுமில்லை மிஞ்சியிருப்பதோ உன் நினைவுகள் மட்டும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலமை கனிந்துவரும் வேளை இழந்துவிட்டோமே ஒரு நாயகனை.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கும், சர்வதேஷ பிரமுகர்களின் கண்டனங்களிற்கும் உன் புன்னகையே பல்லாயிரம் பதில்களை கொடுத்ததே ஆனால் இன்று நீயுமில்லை, உன்புன்னகையுமில்லை மிஞ்சியிருப்பதோ உன் நினைவுகள் மட்டும்தான்.

உண்மைதான்...அந்தப்புன்னகை தவழும் முகமும் எந்த சலனத்தையும் வெளிக்காட்டிக்கொள்ளாத பாங்குமே தமிழ்ச்செல்வன் அண்ணாவின் பலம்.! எப்போதும் எம் இதயத்தில் அவர் நிறைந்தே இருப்பார்!

ஆற்ற முடியாத் துயர் நெஞ்சை அழுத்துகின்றது இருப்பினும் நல்லதே நடக்கும்!...எங்கள் தலைமை விரைவில் விளக்கம் கொடுக்கும்!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதய சிங்களத் தலைமையை அழிப்பதென்பது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தலைமை எடுத்த முடிவுக்கு மாறானதல்லவா?

Link to comment
Share on other sites

எமது தேசியத்தலைவர் நினைத்தால் சிங்களத் தலைமைகளை அழிப்பதொன்றும் பெரிய விடயமல்ல. தலைவர் அவர்களின் நோக்கம் எதிரியை அழிப்பதுவோ, பழிக்குப் பழி வாங்குவதோ அல்ல. இன்று எதிரிகளாக இருப்பவர்கள் எமது அண்டைநாடாகும் காலம் வெகு தூரத்திலில்லை. இவ்வளவு வருடங்கள் பொறுத்த நாம் இன்னும் கொஞ்சம் பொறுப்போமே!!! இன்னும் 25 நாட்களில் அவரின் முடிவை எமக்குத் தெரியப்படுத்துவார். பொறுத்திருந்து கேட்போம்.

Link to comment
Share on other sites

சர்வதேசம்! சர்வதேசம்!! சர்வதேசம்!!! .... எல்லாம் ஒரு மாயை. சில உதாரணங்களைப் பார்ப்போமாயின் ....

அன்று சர்வதேசத்தால்(மேற்குலகால்) சர்வதேசத்தின் பயங்கரவாதிகளாக(இன்று பின் லாடனை எவ்வாறு மேற்கு நோக்குகிறதோ, அவ்வாறே) சித்தரிக்கப்பட்ட நெல்சன் மண்டேலாவோ, யாஷீர் அரபாத்தோ, இன்று சர்வதேச கதாநாயகர்கள். மேற்கினால் சில வருடங்களுக்கு முன் பிசாசாக சித்தரிக்கப்பட்ட கடாபி இன்று மேற்கின் நண்பன்.

ஒண்றை உற்று நோக்கின் தெரியும், மேற்கு அங்கீகரிக்க முற்பட்ட போராட்டங்களை விட தம்மைத்தாமே அங்கீகரித்த போராட்டங்களே கூடுதலாக நாடுகளாக மலர்ந்துள்ளன. இதற்கு எரித்திரியா ஓர் சிறந்த உதாரணம். ஆனால் மேற்கினால் அங்கீகரிக்க முற்பட்ட தென் சூடானோ, டாவூரோ, கொசோவோவோ இன்னும் நாடுகளாக சுதந்திரம் பெற முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று மேற்கினால் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்க முற்பட்ட தலபானை நோக்கி மேற்கிலிருந்து சில மாறுதல்கள் தெரிய முற்படுகிறது. தலபானுடன் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்ற சத்தங்கள் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தலபானின் உறுதி, தொடர்ந்து போராட்டத்தை கொண்டு செல்லுதல், ... என்று பல காரணங்களாக இருக்கலாம். இதை இந்திய படையினர் எம்மீது தொடுத்து விட்டுச் சென்ற காலத்தோடு ஒப்பிடலாம்.

மேலாக இன்று இலங்கையை விற்றால், வருவதை பிரித்தால் அதில் மூன்றில் இரண்டுக்கு கூடுதலான பங்கு மேற்குக்கோ, யப்பானுக்கோ சொந்தமானது. அவர்கள் இன்று ஏன் தலை கீழாக நிற்கிறார்களெனில், இன்று அங்கிருந்து ஒன்றும் வராவிடினும் தமது முதல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கே தலை கீழாக நின்று தாண்டவமாடுகிறார்கள். நாளை முதலும் காப்பாற்றப்பட மாட்டாது எனும் நிலை வர, முதலை காப்பாற்ற இண்று கொடுக்கும் விலைகளை இடை நிறுத்துவார்கள்.

இவற்றை பலம் தான் தீர்மாணிக்கும். அதை விட தெற்கில் நிரந்தரமற்ற சூழ்நிலை, பாதுகாப்பற்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதை விடுத்து சர்வதேசத்தை முற்று முழுதாக நம்பி நாம் ஏதும் சாதித்து விடப் போவதில்லை. சர்வதேசம் எங்கு பலமோ, அதனோடே நிற்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.