Jump to content

அஞ்சலிப் பரணி - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

அஞ்சலிப் பரணி

- வ.ஐ.ச.ஜெயபாலன்

எவர்க்கும் பணியா வன்னி

பிள்ளைகளைப் பறிகொடுத்து

விம்மி அழுகிறது.

எதிரிகள் அறிக

எங்கள் யானைக் காடு சிந்துவது

கண்ணீர் அல்ல மதநீர்.

விழு ஞாயிறாய்

பண்டார வன்னியனும் தோழர்களும்

கற்சிலை மடுவில் சிந்திய குருதி

செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில்

எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை

புதைத்து வருகின்றோம்.

புலருகிற ஈழத்தின்

போர்ப்பரணி பாடுதற்க்கு.

எங்கள் மூன்று அம்மன்களும்

பதினெட்டுக் காதவராயன்களும்

முனியப்பர்களும் எங்கே ?

அசுரப்பறவைகளின் சிறகில் வருவதாய்

வாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என

வன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது.

போராளிகளுக்காக

தேன் வாசனையை

வாகை மலர் அரும்புகளில்

பொதிந்து காத்திருக்கும்

வன்னிகாடே வன்னிக் காடே

உன்மனதைத் தேற்றிக்கொள்.

உன் புன்னகை மன்னன்

பாண்டவருடன் களபலியானான்.

அவன்தான் தாயே

பலதடவை

காலனை வென்று ஞாலப் பந்தில்

புலிச்சினை பொறித்த உன் தவப் புதல்வன்.

நாம் கலங்குவதை அவன் விரும்பான்

தன் உயிரிலும் தாங்கிய கொடியை

ஐநாவில் ஏற்றுக எனப் பணித்தே அவன் போனான்

visjayapalan@gmail.com

Link to comment
Share on other sites

நான் இங்கு எழுதுவது சிலருக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். என்னை என் முழுமையுடனனும் கருத்துச் சுதந்திரத்துடனும் போராளிகளும் ராஜதந்தரிகளும் ஏற்றிருக்கிறார்கள். எனது கவிதை வாசிக்கிறவர்களுக்காக என் முக்கத்தையும் என் கட்டற்ற சுதந்திர உணர்வையும் அழித்துக்கொள்ள முடியாது. நான் தொடர்ந்து யாழுக்கு பங்களிப்பு செய்வது பற்றி உங்கள் கருத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நண்பனாக தொடரலாம் அல்லது நண்பனாக விலகிச் செல்லலாம்? எப்பவும் நட்பிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர்கள் எப்போதுமே கட்டற்ற சிந்தனையுடன் இருக்கவேண்டும்.. பிறரின் விருப்பங்களுக்காக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடாது. எனவே தொடர்ந்தும் உங்கள் கவிதைகளைத் தாருங்கள்..

Link to comment
Share on other sites

கவிஞர்கள் எப்போதுமே கட்டற்ற சிந்தனையுடன் இருக்கவேண்டும்.. பிறரின் விருப்பங்களுக்காக உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடாது. எனவே தொடர்ந்தும் உங்கள் கவிதைகளைத் தாருங்கள்..

கிருபனின் கருத்தை நானும் வழி மொழிகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா ஜெயபாலன் .படைப்பாளி என்று வந்துவிட்டால் சகலதையும் சகித்துகொண்டு எழுதுங்கோ. விரும்பினவர்கள் படிப்பார்கள்."போகவா நிற்கவா என்று கேட்பது அழகல்ல ஒருபடைப்பாளிக்கு"

Link to comment
Share on other sites

ஜயா ஜெயபாலன் .படைப்பாளி என்று வந்துவிட்டால் சகலதையும் சகித்துகொண்டு எழுதுங்கோ. விரும்பினவர்கள் படிப்பார்கள்."போகவா நிற்கவா என்று கேட்பது அழகல்ல ஒருபடைப்பாளிக்கு"

நன்றி நண்பர்களே, என்னால் இழக்க முடியாதது எல்லா கருத்து ஒற்றுமை வேற்றுமைகளோடும் முதலாவது எனது விடுதலை ஆதரவு, இரண்டாவது எனது தோழ தோழியரும் நண்பர்களும் நண்பியரும். இரண்டு அணியிலும் எனது பூரண சுதந்தரம் மதிக்கப் படுகிறதுதான் எனது பாக்கியம். கருத்து வேறு பாடுள்ள தோழ தோழியரை நண்பர்களை நண்பியரை எதிரிகளாக்குவதல்ல அவர்களை இயன்ற வரை வென்றெடுக்கிற முடிவில்லாத முயற்ச்சியே கவிஞன் என்கிற வகையில் எனது பங்களிப்பு. மதிப்புக்குரிய சாஸ்திரி உட்பட யாருடைய மனதையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

Link to comment
Share on other sites

நன்றி . கருத்து வேறு பாடுள்ள தோழ தோழியரை நண்பர்களை நண்பியரை எதிரிகளாக்குவதல்ல அவர்களை இயன்ற வரை வென்றெடுக்கிற முடிவில்லாத முயற்ச்சியே

நல்லது யெயபாலன்: அண்ணா உங்கள் முயற்சியின் மூலம் பாரிசில் எச்சில் இலைக்காக பிச்சையெடுத்த கொண்டு மாற்று கருத்தாளர் என்று கதைவிட்டு கூட்டம் கூட்டிகொண்டு திரிகின்ற ஒருவரையேனும் உங்களால் மாற்ற முடிந்தால் சந்தோசமே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் அவர்களை மாற்ற முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை ஏனெனில் அவர்களுடன் எல்லாம் வாதாடிபார்த்து விட்டவன் என்கிற முறையில் தான் சொல்கிறேன் நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் சாஸ்திரி,

மகிழ்ச்சி

தோழர்களையும் தோழியர்களையும் பெறுவதும் பேணுவதும்தானே வாழ்வின் வரப்பிரசாதம். அரசியலிலும் அதுதான் பெரும் பலம். இருபக்கத்திலும் தவறுகள் நடந்திருக்கலாம். வெல்ல முடியாதபோதும்கூட நட்பும் பேசுவதும் நமது ஞானக்கண் திறக்க உதவுமல்லவா. . பேசுவதன்மூலம் நமது வட்டம் சிறிது பருத்தாலும் ஞானம் சிறிது அதிகரித்தாலும் நன்மைதானே. நட்பும் நன்மைதானே. விடுதலைக்கு இவையும் பலம் சேர்க்கும்தானே. எனது முயற்ச்சியில் மெதுவாகவேனும் இத்தகைய நன்மையே கிடைத்து வருகிறது என்றால் நம்புவீர்களா சாஸ்திரி.

Link to comment
Share on other sites

சுனாமியில் அடிபட்டுத் தப்பியதுபோல இருக்கிறது. அமரரின் மரணம் வெளி நாடுகாளில் பல அரசியல் வாதிக்களையும் ராஜதந்திரிகளையும் எங்கள் பக்கம் திரரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழ்ச்செல்வனின் இழப்பு அத்தகையது. வெள்ளை அரசியால் ராஜதந்திரிகள் மத்தியில் நாம் அவரது ராணுவப் பக்கத்தையல்ல சமாதான தூதுவர் பக்கத்தை எதிர்பார்க்கிறார்கள்.நாமும் அதையே முன்னிலைப் படுத்த வேண்டடும். இது குறித்து என்னிடம்ம் சில மேற்க்கு நாட்டு அறிஞர்கள் கேட்டார்கள்.

Link to comment
Share on other sites

ஜெயபாலன் உங்கள் கவிதைகள் தொடரட்டும்.உலகம் ஆயிரம் சொல்லட்டும்.உங்களுக்கு நீங்களே நீதிபதி.

Link to comment
Share on other sites

விழு ஞாயிறாய்

பண்டார வன்னியனும் தோழர்களும்

கற்சிலை மடுவில் சிந்திய குருதி

செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில்

எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை

புதைத்து வருகின்றோம்.

புலருகிற ஈழத்தின்

போர்ப்பரணி பாடுதற்க்கு.

புதைக்கிறோம் புதைக்கிறோம் -எங்கள்

புன்னகையைப் புதைக்கிறோம்

அழுவதற்காக அல்ல. ஈழம் சிரிப்பதற்காக!

காலத்தின் கண்ணாடி கவிதை - உணர்ந்து

கவிதை படைப்பவன் கவிஞன்

நல்லதொரு கவிதை ஜெயபாலன் அண்ணா.

Link to comment
Share on other sites

நுணாவிலானுக்கும் இளைஞனுக்கும் நன்றிகள். ஏழைக்கவிஞர்கள் காலம் காலமாக பொன்னையல்ல மண்ணையல்ல இந்த சுதந்தரமான இடத்தைத்தானனே எதிர்பார்க்கிறார்கள். விடுதலை வேட்கையும் கட்டற்ற சுதந்திரமும் சத்தியமும்தான் சங்ககாலத்தில் இருந்து புலவர் மரபு. இளமையில் இருந்து வாழ் நாள் சிலவாயினும் அவ்வண்ணமே வாழ விரும்பினேன். எங்கள் முன்னோரான சங்கப் புலவர்களுள் ஒருவரான ஒளவையார் பெரும் போர் விருப்பினனான அதியமானுக்கும் சூழ்ந்த பகைக்குமிடையில் பணிபுரிந்திருக்கிறார். இந்தவகையில் அதியனின் ஆயுளை அவர் நீடித்திருக்கிறார். அதியனை எதிர்த்த பெரிய மன்னர்களைப் பார்த்து "சிறுவர் ஆடக் கலங்கும் சிறு சுனையாயினும் இறங்கினால் அங்கு வாழும் முதலை யானையையும் வீழ்த்தும்" என எச்சரிக்கிறார். உண்மையில் இது நாடோடியான ஒளவையார் கூறிய இராணுவ புவி இயல் சூத்திரமாகும். இவ்வகையில் புலவர் பணியும் பெரிதே. ஒரு மன்னனைப் பார்த்து முகத்துக்கு நேரே பெருஞ்சிதிரனார் வணிகப் புலவனும் அல்லேன் என சினக்கிறார். இவர்கள்தான் எனது முன்னோர். நல் வாழ்த்துக்களுடன்.

Link to comment
Share on other sites

நெற்றி கண்ணை

காட்டிய போதிலும்

காட்டியதீசன்

ஆகிய போதிலும்

குற்றம் தன்னை

குற்றம் இதுவென

சுற்றிக்காட்டிய

செந்தமிழ் வீரன்

உன் போல் புலவன்

உன் போல் புலவன்

நெஞ்சத்துணிவுடன்

நேர்மைத்திறனுடன்

சொந்தக் கருத்தினை

சந்தத் தமிழுடன்

சொல்லத் தெரிந்தவன்

அவன் தான் புலவன்.

அந்தப் பரம்பரை

உந்தன் பரம்பரை

எந்த தடை உமை

என்ன செய்திடும்

நெஞ்சில்பட்டதை

நினைவை தொட்டதை

கொஞ்சு தமிழினில்

கோர்த்தே கொடுத்திட

அஞ்சிட வேண்டாம்

அருந்தமிழ் கவியே

Link to comment
Share on other sites

நெஞ்சத்துணிவுடன்

நேர்மைத்திறனுடன்

சொந்தக் கருத்தினை

........

சொல்ல

.........

அஞ்சிட வேண்டாம்

அருந்தமிழ் கவியே

நன்றி வெற்றிவேல்,

யாழ் களம் எனக்கு புதிய கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது. இராமர் பாலத்துக்கு மண்சுமந்த சிறு அணில்போலவேனும் தமிழரது, தமிழ்பேசும் முஸ்லிம்களது, தமிழ் பேசும் தலித்துகளது, பெண்களது ஒருங்கிணைந்த விடுதலைப் பாதைக்கு மண்சுமப்பேன். இதுவே சபதம். வள்ளுவன் சொன்ன இடிப்பாராக இருப்பதும் விடுதலைக்கான கடனல்லவா?

Link to comment
Share on other sites

அஞ்சலிப் பரணி இசைவடிவம் பெறுகிறது. இசை அமைப்பாளர் அதை தனி ராகத்தில் அல்லது இராக மாலிகையில் விருத்தமாக பாட விரும்புகிறார். பரணிக்கு என்ன என்ன ராகங்கள் பொருந்தும் என்பதை ஆராய்ந்து வருகிறோம். உங்கள் ஆலோசனைகளை வரவேற்க்கிறேன்

Link to comment
Share on other sites

எனக்கு உங்கள் கவிதைகள் மிகவும் பிடிக்கும்

நல்ல கருத்து பொதித்த கவிதைகள் நிறைய எழு்தவும்

நல்ல கலைஞ்ர்கள் பல கட்டங்களை தாண்டித் தான்

சாதித்ததாக சரித்திரம்

Link to comment
Share on other sites

நான் இங்கு எழுதுவது சிலருக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்

நல்ல நல்ல கவிதைகளை எழுதுற நீங்கள் ஏன் இப்படி நினைக்கிறீங்க?

அஞ்சலிப்பரணி இசையமைச்சிடீங்களாஅ? அமைச்சிருப்பின் இணைப்பை தாங்கோ மறாக்காம

Link to comment
Share on other sites

எனக்கு உங்கள் கவிதைகள் மிகவும் பிடிக்கும்

நல்ல கருத்து பொதித்த கவிதைகள் நிறைய எழு்தவும்

நல்ல கலைஞ்ர்கள் பல கட்டங்களை தாண்டித் தான்

சாதித்ததாக சரித்திரம்

நன்றி கஜந்தி, உங்கள் வார்த்தைகள் சித்தத்தில் இனிப்பது. உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன். வெண்ணிலாவுக்கும் நன்றி. இசை அமைத்ததும் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இனிய கவிஞனே ,

நீ விடுதலைக்கு போராடும் வீரமிக்க தமிழ் குலத்தை சேர்ந்தவன் ,

புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி போர்க்களத்தில் பின் வாங்கும்

இலங்கை இராணுவம் போல கவி பாட மறுத்து பின்வாங்க

இது ஒன்றும் போர்களம் அல்ல, யாழ் களம்;

பின்வாங்க நீ ஒன்றும் இலங்கை இராணுவம் அல்ல, வீர தமிழன்.

எம் கவியே நிற்காது பொழியட்டும் உன் கவி மழை.

கவிதை என்னும் அருவிக்கு அணை போட யாரும் நினைத்தால்

அது அவர்களின் மடமை. கலங்காது கவி அருவி பெருகட்டும்.

எழுச்சி கவிதைகள் மூலம் விடுதலை நெருப்பை

நம்மவர் நெஞ்சினில் ஏற்றிட ,

வற்றாத தமிழில் வழங்கு உன் கவிதைகளை.

என்றும் அன்புடன்,

சோழ நாட்டு இளவல்.

Link to comment
Share on other sites

நன்றி சோழ நாட்டு இளவலே,

இனித் தமிழர் அடிமையெனத்

தலை பணிதல் இல்லை

இனித் தமிழர் கோழைகளின்

வழி தொடர்வதில்லை

இனித்தமிழர் மானுடத்தின்

விடுதலையென்றெழுந்தார்.

இனித் தமிழர் உலகத்தின்

விலங்குகளும் தகர்ப்பார்.

பண்டார வன்னியனின்

படை நாடந்த காடு

பணியாது ஒருபோதும்

ஈழவர் எம் வீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞ!

எம் சிந்தைகள் சிறக்க கவிபல புனைக.

நெடிய பயணம் உனது.

சஞ்சலம் கொள்ளற்க.

நும் புகழ் ஓங்குக.

Link to comment
Share on other sites

நமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமாதான தூதுவர் சுப தமிழ்ச்செல்வனின் மரணம் ஏற்படுத்திய அலைகளை வேறு எந்த இழப்பும் ஏற்படுத்தவில்லை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம்பொன் என்பார்கள். தமிழ் நாட்டில் மீண்டும் ஈழத்தமிழருக்கான ஆதரவுத் தளம் சுப தமிழ்ச் செல்வனின் மறைவில் ஏற்பட்ட அனுதாப அலையால் மிகப உறுதியாக அகன்றுள்ளது. தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்கள் பதிரிகையாளர்கள் இதுபற்றித் தொடர்புகொண்டு பேசினார்கள். அஞ்சலிப் பரணி வாசித்துவிட்டு தொடர்புகொண்ட குமுதம் முன்னைநாள் ஆசிரியரும் இன்றைய பத்தி எழுத்தாளருமான கிருஸ்ணா டாவின்சி தான் எழுதிய அஞ்சலியை அனுப்பி யிருந்தார். குமுதத்துக்கு சென்று வாசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

என்னுடைய கவிதை வாசகர்கள் சிலர் கவிதை மீழ் பிரசுரத்துக்கு ஆல்லது பாடுவதற்க்கு அனுமதி கேட்டு எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். எனது கவிதைகளை மீழ்பிரசுரம் செய்யவும் வேறு உடகங்களில் பயன்படுத்தவும் என்னிடம் அனுமதி பெறத்தேவையில்லை. எனினும் பயன்படுத்திய தகவல் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். அதிகமாக தமிழக வாசகர்களுக்கேஎ எனது கவிதைகள் தொடற்ச்சியாகக் கிடைத்தது. திண்ணை ஈழத்திலும் சிறீலங்காவிலும் சிலருக்கு கிட்டியது. திரு. மோகன் என்னை யாழ் இணையத்தில் இணைத்தபிறகு பரவலாக தாயக செல்வர்களுக்கும் செல்விகளூக்கும் எனது கவிதைகள் போய்ச் சேருவது மகிழ்ச்சி தருகிறது. பரபரப்பில் அஞ்சலிப் பரணியை வாசித்த ஒரு கலைஞர் அதை பாடலாக்கிய்யிருக்கிறார். எனதூ படைப்புகளை யாரும் என்ன் அனுமதி இல்லாமல் பயன் படுத்தலாம் என்பதை மீண்ணும் அறிவிக்கிறேன்.

வ.ஐ.ச.ஜெயபாலன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.