Jump to content

தீப ஒளி வாழ்த்துகள்...


Recommended Posts

காலம் யார் பற்றியும் கவலைப் படாமல் தன் சுழற்சியில் கவனமாய் இருக்கிறது. வருடம் தோறும் பல நூறு பண்டிகைகள் ஒவ்வொரு இனச் சமூகத்திற்கும் சொந்தமாக இருக்க... நம்மவரும் பல பண்டிகைகளை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பது வழமை. தீபாவளி தமிழர் பண்டிகையா என்கின்ற வாதத்தை எல்லாம் ஒதுக்கிவிட்டு அது தருகின்ற செய்தியோடு ஐக்கியம் ஆவது நன்மை பயக்கும்.

அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம் அதை அழிக்கக் கூடிய வல்லமையோடு சக்தி ஒன்று தோன்றும். அதன் பின்னர் ஒளி மயமான வாழ்வு கிடைக்கும்... இன்றைய காலத்தில் தீபாவளி தருகின்ற செய்தி அர்த்தம் நிறைந்தது. ஏதேனும் ஒளி பிறக்குமா?

எதிர்பார்ப்புடன்... இக்கவிதை...

Krish_with_kamsan_copy.jpg

பாவம் படர்ந்த

வாழ்வது தொலைந்த

தீபாவளி!

தீண்டும் துன்பமெல்லாம்

பொசுங்கும் இனி!

திரைகடல் மீதில்

தீபம் விடுவோம் - அந்தத்

திங்களவனை

விருந்துக்கழைப்போம்!

வீணை தீண்ட

விரல்கள் என்போம்

விசைகள் தீண்டும்

விரலை அவிப்போம்

பாசாங்கில்லாப்

பெண்ணை மதிப்போம்

பழகுவதற்கினிய

அன்பை வளர்ப்போம்

போருக்கு ஒரு

போர்வை கொடுப்போம்

வெள்ளைப் புறாவை

எங்கும் பறக்கவிடுவோம்.

Link to comment
Share on other sites

தீபாவளி வாழ்த்து கவிதை அழகு :wub: ஆனாலும் இந்த வருடம் எங்கள் தீபாவளி பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவே போய்விட்டார் பிறகு எப்படி தீபாவளியை கொண்டாட்டமுடியும் :lol: !!தற்போது தான் சிட்னியில் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வருகிறேன் நாளை தீபாவளியை கொண்டாட என்னால் முடியாது!! :lol:

போருக்கு ஒரு

போர்வை கொடுப்போம்

வெள்ளைப் புறாவை

எங்கும் பறக்கவிடுவோம்.

அழகிய வரிகள் வாழ்த்துகள் கவிருபன் அண்ணா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ் கவிதை-

புழுக்கம் நிறைந்த வாழ்க்கையில் வெம்மை

நினைவை மீண்டும் தொடாதவாறு

கற்பனைத் தேனில் சிந்தை மயங்கி

ஆனந்த வெள்ளத்துள் அமிழ்ந்தே கிடப்போம்!! :)

Link to comment
Share on other sites

ரூபன் நல்லா இருக்கு தீபாவளிக்கவிதை.

எனகும் ஒரு வெள்ளைப்புறா தாங்கோ பறக்க விடுறன்.

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா வெண்புறாவை உங்களிட்ட தந்தால் சூப் வைச்சு சாப்பிட மாட்டியள் என்று என்ன நிச்சயம்...?

என்றாலும் ஆசைப் படுறியள் ... இந்தாங்கோ.... 1903767444_f3ecf53a3e.jpg?v=0

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா வெண்புறாவை உங்களிட்ட தந்தால் சூப் வைச்சு சாப்பிட மாட்டியள் என்று என்ன நிச்சயம்...?

என்றாலும் ஆசைப் படுறியள் ... இந்தாங்கோ....

:lol: நன்றீங்கோ.

ஆனால் ரூபன் நீங்கள் சொல்வது போல நான் சூப் எல்லாம் வைச்சு சாப்பிடமாட்டேன். வேணும்ன்னா வந்து தந்துட்டு பறக்க விடும்வரை நின்று பார்த்துட்டு போங்களன் :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.