Jump to content

தீபாவளி என்றால் என்ன..??!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீப ஒளித் திருநாள்

diwali250_07112007.jpg

அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி.

தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

நரகாசுரன் வதம் ...

இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.

நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.

நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.

கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.

நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.

தீபாவளியின் இன்னொரு கதை ...

இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட.

ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம்.

ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது.

பிற கதைகள் ..

விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமணம்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்ற ஒரு புராணக் கருத்தும் உண்டு.

வங்கத்தில் காளி தேவியை வணங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ஒரு விதமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நான்கு நாளும் ஒரு வகையான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடுகிறார்கள். பூஜைகள் செய்கிறார்கள்.

முதல் நாளை நரக சதுர்தசியாக கொண்டாடுகிறார்கள். தீய சக்திகள் அழிந்து (அதாவது நரகாசுகரன் அழிந்த நாள்) வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தினமான 2வது நாள் அமாவாசை தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள்.

3வது நாளில் கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது.

4 நாள் யம திவிதியை தினமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அன்றைய தினம் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து வணங்கி, ஆசிர்வாதம் பெறும் தினம் இது.

பட்டாசு வெடிப்பது ஏன்:

தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். ஏன் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறோம், பட்டாசுகள் வெடிப்பது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு.

வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.

தென்னிந்தியாவில் நரகாசுரன் வதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமரும், சீதையும் அயோத்தி திரும்பியதையும், ராமர் பட்டம் சூட்டிக் கொண்டதையுமே, தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு விதமாக இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மக்களும் கொண்டாடினாலும் கூட தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாள் என்பதாகவே உள்ளது என்பதால் தீபாவளித் திருநாள், இந்துக்களின் மிக முக்கிய திருநாளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்.கொம்

-----------

வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம்.

அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.

மேற்கு நாடுகளில் இதே காரணத்துக்காகத்தான் halloween festival கொண்டாடப்படுகிறது..! :rolleyes:

Link to comment
Share on other sites

எங்களைச்சுற்றி 1000 நரகா சூரர்கள் இருக்கும் போது எப்படி நிம்மதியாய் தீபாவளி கொண்டாடுவது? எல்லா நரகா சூரர்களின் வதம் முடிக்கும் நாள்தான் எம்மவர்களுக்கு தீபாவளியே

Link to comment
Share on other sites

மகிந்த ராஜபக்ஸ தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீப ஒளியின் மூலம் அமைதியும் பயங்கரவாத இருளும் அகல வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த பொங்கலுக்கும் தான் வாழ்த்துச் சொல்லுறார்..! அதற்காக.. பொங்கலை...?????! :wub::rolleyes:

Link to comment
Share on other sites

மகிந்த நத்தாருக்கும் வாழ்த்துச் சொல்வார். ஆனால் மகிந்த தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதற்கு விசேட அர்த்தம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த நத்தாருக்கும் வாழ்த்துச் சொல்வார். ஆனால் மகிந்த தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்வதற்கு விசேட அர்த்தம் உண்டு.

மகிந்தவுக்கு விசேட காரணம் இருக்கோ இல்லையோ உங்களிடம் இருக்கு மகிந்த சார்பா அதை வெளியிட.. பிராமண கசப்புவாதம்..! அது காட்டிக் கொடுத்திடும் உங்களை...! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த தைப் பொங்கலுக்கும் தான் வாழ்த்துச் சொன்னவர். விசேட காரணமோ, இல்லையோ அதை எதிர்க்க வேண்டிய விசேட காரணம் கன்னடர் வழி அமைப்புக்களுக்கு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்கு இவ்வளவு அர்த்தங்கள் இருக்கோ??நான் நினைத்தேன் ஆட்டு இறைச்சியும் கறியும் தண்ணியும் புது சாரமும் உடுத்து சந்தியில இருந்து சண்டிதனம் பண்ணுறது தான் தீபாவளி என்று நினைத்தேன்.

மகிந்த தைப் பொங்கலுக்கும் தான் வாழ்த்துச் சொன்னவர். விசேட காரணமோ, இல்லையோ அதை எதிர்க்க வேண்டிய விசேட காரணம் கன்னடர் வழி அமைப்புக்களுக்கு உண்டு.

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது.மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான்.மலைகளை பெயர்த்து,பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான்.வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள்,சடங்குகள் தோன்றின.நிர்வனங்கள்,நிர்வாகப

??டங்கள் தோன்றின.கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ,இஸ்லாமிய,இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும்,இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

இப்படி நான் சொல்லவில்லை எங்களின்ட மதிபுகுரிய ஒருத்தர் சொல்லி இருகிறார் இதுவும் கன்னடவழி அமைப்புகள் சொல்வதும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கு போல.

Link to comment
Share on other sites

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது, கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது. மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான். மலைகளை பெயர்த்து, பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான். வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள், சடங்குகள் தோன்றின. நிருவனங்கள், நிர்வாகபீடங்கள் தோன்றின. கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும், இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

அட ரொம்ப நன்னா சொல்லியிருக்காங்களே! எவா அவா?

Link to comment
Share on other sites

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது.மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான்.மலைகளை பெயர்த்து,பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான்.வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள்,சடங்குகள் தோன்றின.நிர்வனங்கள்,நிர்வாகப??டங்கள் தோன்றின.கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ,இஸ்லாமிய,இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும்,இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

புத்தன்!!

அற்புதமான வசனங்கள். யார் அந்தப் பெரியவர்?

அந்த மையக் கருத்துத்தான் "கடவுள்" என்பது. மனித மனங்களினாலே உருவாக்கப்பட்ட எண்ணம் அது. அதை உண்மை என நம்பிவிடுவதும், அதன்மீது கோட்பாடுகளை உருவாக்கி வீணே காலவிரயத்தை செய்வதும், அதற்காக போர் என புறப்படுவதும் சுத்த முட்டாள்தனமே அன்றி வேறில்லை.

மக்கள் மறதிக்காரர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தாமாகவே ஒரு கொள்கையை உருவாக்குவது. பின்பு அதை அப்படியே நம்பிவிடுவது. அதனிடம் சரணடைந்து விடுவது. :wub::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"அன்றொரு காலம் பலயுகங்களுக்கு முன்னம் இந்தப் பூமியில் ஒரு கருத்து பிறப்பு எடுத்தது கருத்துகளின் மைய கருத்தாக அது புனிதம் பெற்றது.மனிதர்களை அது ஆழமாக பற்றி கொண்டது.அந்த கருத்திற்கு மனிதன் பொருள் வடிவம் கொடுத்தான்.மலைகளை பெயர்த்து,பாறைகளை தகர்த்து கலை வடிவம் கொடுத்தான் ஆயிரம் ஆயிரம் ஆலயங்கள் எழுந்தன.அந்த கருதிற்கு மனிதன் விளக்கங்களை கொடுத்தான்.வியாக்கியானங்கள் அளித்தான் அர்த்தங்களை குவித்தான் வேதங்கள் தோன்றின சித்தாந்தங்கள் பிறந்தன.கிரிகைகள்,சடங்குகள் தோன்றின.நிர்வனங்கள்,நிர்வாகப

??டங்கள் தோன்றின.கோசானு கோடி அடியார்கள் தோன்றினர்.ஆராதனைகள் நடத்தினர்.

அந்த மைய கருத்தில் இருந்து பல நாகரிகங்கள் தோன்றின கிறிஸ்தவ,இஸ்லாமிய,இந்து பெளத்த நாகரீகங்களாக மானிடம் பிளவு பெற்றது.போர்கள் நடந்தன் நாடுகளும்,இனங்களும் மோதின பூமியில் இரத்த ஆறுகள் ஓடின.அந்த கருத்து மனிதர்களை ஆழமாக பற்றி பிடித்து ஆட்டி படைத்தது."

இப்படி நான் சொல்லவில்லை எங்களின்ட மதிபுகுரிய ஒருத்தர் சொல்லி இருகிறார் இதுவும் கன்னடவழி அமைப்புகள் சொல்வதும் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கு போல.

தீபாவளிக்கு இவ்வளவு அர்த்தங்கள் இருக்கோ??நான் நினைத்தேன் ஆட்டு இறைச்சியும் கறியும் தண்ணியும் புது சாரமும் உடுத்து சந்தியில இருந்து சண்டிதனம் பண்ணுறது தான் தீபாவளி என்று நினைத்தேன்.

மேலே சொன்ன உங்களின் பதில் தான் கீழே வரவேண்டியது. அரைகுறையாகக் கடவுளைப் பற்றித் தெரிந்தவர்களும், 4ம் ஆண்டோடு படிக்காமல் முன்னுக்கு வரலாம் என்று நினைத்தவர்களும், முயற்சி செய்யாமல் வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என்று நினைத்து ஏமாந்து போன, சிலர் தான் தங்களின் இயலாமையைக் கடவுள் என்று ஒன்றின் மேல் பழியைப் போட்டுத் திட்டிக் கொண்டிருப்பவர்கள்.

நீங்கள் சொன்ன இந்தக் கன்னடவழி அமைப்புக்களின் கதையைப் பார்த்தாலே தெரியும். வாழ்க்கையில் தோற்றுப் போன சிலர் தான் சுடலை ஞானம் பேசிக் கொண்டிருப்பவர்கள்.

நீங்கள் சொன்ன வசனம் கிறிஸ்தவ மதத்தில் உள்ள வசனமாகிய," இறைவன் சில விதைகளை விதைத்தான். அவை கல்லில் மேல் விழுந்தன. நீரில் மேல் விழுந்தன" என்ற வசனத்தை உல்டா பண்ணியது போலக் கிடக்கே.

Link to comment
Share on other sites

வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 - கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள்.

இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 - கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 10 - கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசன் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த - சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

(‘குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931)

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன்

ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60- நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா?

புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்! பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து - புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்?

‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 - பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று;

மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு;

அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று;

பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு;

இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து;

அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவது ஆறு;

இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு;

மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன் படவேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் - மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது.

கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று.

அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் - நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை - தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.-

http://thamilachi.blogspot.com/2007/11/blog-post_9257.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்?

இவருக்கு ரோட்டு ரோட்டாகச் சிலை கட்டி அபிசேகம் செய்பவர்கள், இதனால் ஏற்படும் வீண் பணவிரையம் பற்றிச் சிந்திக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தீபாவளிக்கு ஒரேயொரு கதை கிடையாதா?? ஏன் இந்து மதத்தில் எல்லாவற்றிற்கும் பல "கதைகள்" உள்ளன என்று யாராவது விளங்கப்படுத்துங்களேன்.. நாங்கள் புனிதமான கதைகளையும், புனிதமாக்கப்பட்ட "கதை"களையும் மட்டும் ஏற்றுக்கொண்டு, அசிங்கங்களை அழித்துவிடுவோம்.. சமூகக் கடமையல்லவா! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

தீபாவளி.. ஒரு தீபத்திருநாள். இருள் சூழ்ந்த காலப்பகுதியில் இருளகற்றி மக்கள் தங்களை குளிர்காலத்துக்குரிய காலநிலைக்கு ஏற்ப தயார்ப்படுத்த என்று கொண்டாடப்படுகிறது என்பதுதான் யதார்த்தம். அப்படி இருந்தும்... இன்னும் கிருஸ்ணரையும் நரகாசுரனையும் வைச்சு வந்த கதையை நம்பி தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. அதை டிஸ்புறூவ் பண்ண நிக்கிறவையும்.. நரகாசுரனை தமிழன் என்று ஆக்கிறவையையும் என்னென்று சொல்லி.... பாராட்ட...! *** :)

Link to comment
Share on other sites

இவருக்கு ரோட்டு ரோட்டாகச் சிலை கட்டி அபிசேகம் செய்பவர்கள், இதனால் ஏற்படும் வீண் பணவிரையம் பற்றிச் சிந்திக்க வேணும்.

மேற்கூறிய கட்டுரையில் கூறிய காரணங்கள் ஒன்றும் உங்களுக்கு நியாயமாக படவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி.. ஒரு தீபத்திருநாள். இருள் சூழ்ந்த காலப்பகுதியில் இருளகற்றி மக்கள் தங்களை குளிர்காலத்துக்குரிய காலநிலைக்கு ஏற்ப தயார்ப்படுத்த என்று கொண்டாடப்படுகிறது என்பதுதான் யதார்த்தம். அப்படி இருந்தும்... இன்னும் கிருஸ்ணரையும் நரகாசுரனையும் வைச்சு வந்த கதையை நம்பி தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. அதை டிஸ்புறூவ் பண்ண நிக்கிறவையும்.. நரகாசுரனை தமிழன் என்று ஆக்கிறவையையும் என்னென்று சொல்லி.... பாராட்ட...! ***

அது சரி பூமத்திய ரேகைக்குக் கிட்டவுள்ள இந்திய இலங்கைப் பகுதிகளில் அண்ணளவாகப் 12 மணிநேரம் இரவும், பன்னிரண்டு மணிநேரம் பகலுமாகத்தானே உள்ளது.. குளிர் காலம் எப்போது ஆரம்பிக்கின்றது? மாசி மாதப் பனிகாலத்தில்தானே குளிரைக் கண்டோம்! :)

சில நேரம் வட ஐரோப்பாப் பகுதியில் நேரம் மாற்றம் செய்யும் நாளுக்கு அடையாளமாகத் தொடங்கி, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்த பண்டிகையாக இருக்கலாம்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி பூமத்திய ரேகைக்குக் கிட்டவுள்ள இந்திய இலங்கைப் பகுதிகளில் அண்ணளவாகப் 12 மணிநேரம் இரவும், பன்னிரண்டு மணிநேரம் பகலுமாகத்தானே உள்ளது.. குளிர் காலம் எப்போது ஆரம்பிக்கின்றது? மாசி மாதப் பனிகாலத்தில்தானே குளிரைக் கண்டோம்! :)

சில நேரம் வட ஐரோப்பாப் பகுதியில் நேரம் மாற்றம் செய்யும் நாளுக்கு அடையாளமாகத் தொடங்கி, கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்த பண்டிகையாக இருக்கலாம்.. :)

seasonsfull200304160945lj3.gif

காலமடா சாமி... வரலாறும் சமூகக்கல்வியும் எனிப் படிப்பிக்கனும் போல இருக்கே. மத்திய ரோகைக்கு அண்மையாக இருப்பினும் எங்கள் தேசத்துக்கும் மாரிகாலம் என்று ஒன்றிருக்குது கண்டிங்களோ. அக்காலத்தில பகல் குறைந்து இருள் அதிகமாக இருக்கும். மாரிகாலத்தில் உள்ள இரவுக்கும் பகலுக்கும் இடையில் குறைந்தது ஒரு மணி நேரமாவது இருள் அதிகமாக இருக்கும் வேறுபாட்டை உணரலாம். கோடையில் உள்ள இரவுக்கும் பகலுக்கும் இடையில் உள்ள நேரத்தோடு ஒப்பிடும் போது...! மாரி காலம் அதிகம் மழைகாலம் என்பதாலும் இருள் கூடுவது அதிகம் என்பதாலும்.. தீபத்திருநாள் மாரிகாலத்தில் கொண்டாடப்படும் வழமை ஏற்பட்டிருக்கும். ஏன் நரகாசுரனை அழிச்சதை சித்திரையில கொண்டாடி இருக்கலாம் தானே.... ஏன் ஐப்பசி கார்த்திகையில கொண்டாடனும்..??! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலமடா சாமி... வரலாறும் சமூகக்கல்வியும் எனிப் படிப்பிக்கனும் போல இருக்கே. மத்திய ரோகைக்கு அண்மையாக இருப்பினும் எங்கள் தேசத்துக்கும் மாரிகாலம் என்று ஒன்றிருக்குது கண்டிங்களோ. அக்காலத்தில பகல் குறைந்து இருள் அதிகமாக இருக்கும். குறைந்தது ஒரு மணி நேரமாவது இந்த வேறுபாட்டை உணரலாம். கோடைக்கும் மாரிக்கும் இடையில்...! மாரி காலத்தில் அதிகம் மழைகாலம் என்பதால் இருள் கூடுவது அதிகம் என்பதாலும்.. தீபத்திருநாள் மாரிகாலத்தில் கொண்டாடப்படும் வழமை ஏற்பட்டிருக்கும். ஏன் நரகாசுரனை அழிச்சதை சித்திரையில கொண்டாடி இருக்கலாம் தானே.... ஏன் ஐப்பசி கார்த்திகையில கொண்டாடனும்..??! :D

அப்ப குளிர்காலம் போய் மாரி காலம் ஆகிவிட்டது.. கார்த்திகையில் ஐந்து ஐந்தரைக்கு சூரியன் மறைந்துவிடுமா இலங்கையில்?? அதுபோல ஆறரை ஏழு மணிக்கு சூரிய அஸ்த்தமனம் வருமா?? ஒரு மணிநேர வேறுபாடு இருந்தது தாயகத்தில் இருக்கும்வரை தெரியாமல் போய்விட்டது!! :) "கதை"களுக்கும் ஒரு அளவு உள்ளது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப குளிர்காலம் போய் மாரி காலம் ஆகிவிட்டது.. கார்த்திகையில் ஐந்து ஐந்தரைக்கு சூரியன் மறைந்துவிடுமா இலங்கையில்?? அதுபோல ஆறரை ஏழு மணிக்கு சூரிய அஸ்த்தமனம் வருமா?? ஒரு மணிநேர வேறுபாடு இருந்தது தாயகத்தில் இருக்கும்வரை தெரியாமல் போய்விட்டது!! :) "கதை"களுக்கும் ஒரு அளவு உள்ளது! :)

seasonsfull200304160945lj3.gif

உங்களுக்காகத்தான் பாருங்கோ படம் போட்டிருக்குது விளங்க..

உலகின் பருவகாலங்கள் 4. கோடைகாலம் குளிர்காலம் இலையுதிர்காலம் இலை தளிர்காலம். (ஊரில் பலா மரத்தை அவதானிச்சா இது தெரியும்..!) நம்ம ஊரில குளிர்காலம் மழை அதிகம் என்பதால் மாரிகாலம் என்றும் அழைப்பர் கண்டிங்களோ. கதையில்லைங்கோ.. படத்தைப் பாருங்கோ விளங்கும்..! இலங்கை மத்தியகோட்டுக்கு அண்மைல தான் இருக்கே தவிர மத்திய கோட்டில இல்லை. பூமியும் சரிஞ்சுதான் சுத்துதே தவிர நிமிர்ந்து நிற்கேல்ல. ஊரில நீங்க எங்க உதுகளை அவதானிச்சிருப்பியள்.. இப்ப புலம்பெயர்ந்து வடதுருவத்துக்க அல்லது தெந்துருத்துக்க வந்த உடன உதுகள் பெரிசாத் தெரியுதாக்கும். நாங்க ஊரிலேயே அவதானிச்சிருக்கமுங்கோ..!

சந்திரிக்கா அம்மையார் நேரமாற்றம் கொண்டு வரேக்க மாரிகாலம் இது சிரமமா இருக்கென்று மக்கள் குரல் கொடுக்கேல்லையோங்க. அது சரி ஊரில இருந்தாத்தானே உதுகள் தெரிய.

குளிர்காலம் என்று ஊரிலையும் இருக்குங்கோ..! ஐப்பசி தொடங்கி மாசி பங்குனி ஆரம்பம் வரை.. குளிர் இருக்கும்..! மாசிப்பனி மூசிப்பெய்யும் எண்டுவினம் தெரியுமாங்கோ.. நீங்கள் ஊரை மறந்திட்டியள் போல... நல்ல விசயம். அப்படியே தீபாவளியையும் மறக்கடிச்சிடுவம் என்று முயற்சிக்கிறியள் போல. கலோவின் பண்டிகை கொண்டாட பிள்ளைகளுக்கு மாஸ்கும் வெடியும் வேண்டிக் குடுப்பமே..??! அதெக்கெண்டால் நாங்கள் கண்ண மூடிக்கொண்டு ரெடியாகிடுவம். அப்பதான் பக்கத்திவீட்டு வெள்ளைக்காரனோட நாங்களும் சரிக்கு நிக்கிறதா தோற்றம் காட்டலாம்..! :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கு முனை 9 பாகை 50 கலை அகலாங்கில் முடிகின்றது. . பின்வரும் இணைப்பு சூரிய உதயம், சூரிய அஸ்த்தமனத்தைத் தருகின்றது. இதில் இருந்து எப்போது இருள் அதிகமாக இருக்கும் என்று நீங்களே கணித்துக் கொள்ளலாம்!

http://www.gaisma.com/en/location/jaffna.html

தீபாவளி வந்த தற்போதைய நாட்களில் பகல் பொழுது 12 மணித்தியாலங்களுக்கு சற்றுக் குறைவாக உள்ளது. அதற்காக ஒரு மணிநேரம் அதிகம் இருட்டு என்று அர்த்தமல்ல... எனவே இருளை அகற்ற ஐப்பசியில் தீபம் ஏற்ற வேண்டிய தேவையில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கு முனை 9 பாகை 50 கலை அகலாங்கில் முடிகின்றது. . பின்வரும் இணைப்பு சூரிய உதயம், சூரிய அஸ்த்தமனத்தைத் தருகின்றது. இதில் இருந்து எப்போது இருள் அதிகமாக இருக்கும் என்று நீங்களே கணித்துக் கொள்ளலாம்!

http://www.gaisma.com/en/location/jaffna.html

தீபாவளி வந்த தற்போதைய நாட்களில் பகல் பொழுது 12 மணித்தியாலங்களுக்கு சற்றுக் குறைவாக உள்ளது. அதற்காக ஒரு மணிநேரம் அதிகம் இருட்டு என்று அர்த்தமல்ல... எனவே இருளை அகற்ற ஐப்பசியில் தீபம் ஏற்ற வேண்டிய தேவையில்லை!

இப்ப கொஞ்சம் முன்னாடி பகல் 12 மணித்தியாலம் இரவு 12 மணித்தியாலம் எண்டிச்சினம். இப்ப சற்று முன் பிந்தி எண்டீனம். குளிர்காலத்தில மழை என்ற ஒன்று பெய்யுங்கோ. அது பெய்யனுன்னா கருமுகில் என்ற ஒன்று வருமுங்கோ. அது வந்திச்சுன்னா சூரிய வெளிச்சம் பெரிசா வராதுங்கோ... மாரிகாலத்தில இது அடிக்கடி நடக்கிறதால.. குறிப்பா தமிழர்கள் வாழும் பகுதியில வடகீழ் பருவப்பெயற்சிக் காலம் குளிர்காலத்தோட வருவதால இருட்டு அதிகம். நான் ரெம்பவே அவதானிச்சிருக்கிறன் ஊரில கோடையில 7 மணி வரை கிரிக்கெட் விளையாடலாம். ஆனால் மாரியில 6 மணிக்கே பந்தைப் பாக்கிறது கஸ்டமாகிடும்..! அந்த வகையில கிடத்தட்ட ஒரு மணி நேரத்தை சுட்டிக்காட்டினம். அதுக்கும் மேல மாரிகால கார்முகில் இன்னும் வேளைக்கு இரட்டப் பண்ணிடுங்கோ. அதுதான் தீபம் ஏற்றி மக்கள் தங்களை மாரிகாலத்துக்கு ஏற்ப தயார் பண்ணுறாங்க தீபாவளியில... இதையெல்லாம் அலசிப் பாக்கிற திறனை கொள்ளாம.. நரகாசுரனை.. தேடித் தாக்கி.. கிருஷ்ணரை சாட்டி மக்களை மு.....ள் என்று திட்டி திட்டிறவை யாரெண்டு...???! :)

Date Sunrise Sunset Length Change

Today 06:02 17:45 11:43

+1 day 06:03 17:45 11:42 00:01 shorter

+1 week 06:05 17:45 11:40 00:03 shorter

+2 weeks 06:08 17:46 11:38 00:05 shorter

+1 month 06:16 17:50 11:34 00:09 shorter

+2 months 06:29 18:05 11:36 00:07 shorter

+3 months 06:31 18:17 11:46 00:03 longer

+6 months 05:50 18:23 12:33 00:50 longer

கிருபன் சார் தந்த தரவின் படி இன்றிருக்கும் சூரிய உதயம் - அஸ்தமனத்துக்கு இடையிலான நேர வித்தியாச்சத்துக்கும் 6 மாதத்துக்குப் பின்னாடி அதாவது சித்திரை/வைகாசி (கோடைகாலம்) காலப்பகுதியில் சூரிய உதயத்துக்கும் அஸ்மனத்துக்கும் இடையிலான நேர வித்தியாசத்துக்கும் இடையில் 50 நிமிடங்கள் என்பது தரவில் தரப்பட்டுள்ளதை தெளிவாகக் காணலாம். இது எமது கூற்றை தெளிவாக மெய்ப்பிக்கிறது..! கிட்டத்தட்ட ஒரு மணி நேர வேறுபாடு என்பதை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் பருவகாலங்கள் 4. கோடைகாலம் குளிர்காலம் இலையுதிர்காலம் இலை தளிர்காலம். (ஊரில் பலா மரத்தை அவதானிச்சா இது தெரியும்..!) நம்ம ஊரில குளிர்காலம் மழை அதிகம் என்பதால் மாரிகாலம் என்றும் அழைப்பர் கண்டிங்களோ. கதையில்லைங்கோ.. படத்தைப் பாருங்கோ விளங்கும்..! இலங்கை மத்தியகோட்டுக்கு அண்மைல தான் இருக்கே தவிர மத்திய கோட்டில இல்லை. பூமியும் சரிஞ்சுதான் சுத்துதே தவிர நிமிர்ந்து நிற்கேல்ல. ஊரில நீங்க எங்க உதுகளை அவதானிச்சிருப்பியள்.. இப்ப புலம்பெயர்ந்து வடதுருவத்துக்க அல்லது தெந்துருத்துக்க வந்த உடன உதுகள் பெரிசாத் தெரியுதாக்கும். நாங்க ஊரிலேயே அவதானிச்சிருக்கமுங்கோ..!

இலங்கையில் வடகீழ் பருவம், தென்மேல் பருவம் என்று உண்டு.. வட பகுதியில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றினால் கார்த்திகையில் இருந்து மாசி-பங்குனி வரை மழை பொழியும். தென்மேல் பருவப் பெயற்சிக் காற்றினால் தென்பகுதிகளில் மற்றைய மாதங்களில் அதிக மழை பொழியும்.. நடுவில் மலை இருப்பதனால் மழை வடபகுதிக்குக் கிடைக்காது!

சரி இப்பருவங்கள் எப்படி உண்டாகின்றன..?

சித்திரையிலிருந்து புரட்டாதிவரை இந்திய உபகண்டத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் தாழமுக்கம் ஏற்படும். எனவே காற்று இந்து சமுத்திரத்தில் இருந்து வடபகுதி நோக்கி வீசும்.. அதிக ஈரப்பதன் கொண்ட காற்று இமயமலையைத் தாண்டி போக முடியாமல் மழையாகப் பொழியும்.

கார்த்திகை தொடக்கம்,மாசி-பங்குனி வரை மத்திய ஆசியா அதிகம் வெப்பம் இல்லாமல் இருப்பதனால், இமய மலைப் பகுதிக்கு மேற்பட்ட பகுதி குளிராகவும், இந்து சமுத்திரப் பகுதி சூடாகவும் இருக்கும். எனவே காற்று வடகீழ் பகுதியில் இருந்து தென்மேல் பகுதி நோக்கி வீசும்.. அதிக ஈரப்பதன் மழையைத் தரும்¬

சரி இதற்கும் இருள் காலத்திற்கும் என்ன சம்பந்தம்?

இருள் அதிகமாக தை மாதத்தில் உள்ளதனால், தீபாவளியைத் தை மாதத்திற்கு மாற்றலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்சம் முன்னாடி பகல் 12 மணித்தியாலம் இரவு 12 மணித்தியாலம் எண்டிச்சினம். இப்ப சற்று முன் பிந்தி எண்டீனம். குளிர்காலத்தில மழை என்ற ஒன்று பெய்யுங்கோ. அது பெய்யனுன்னா கருமுகில் என்ற ஒன்று வருமுங்கோ. அது வந்திச்சுன்னா சூரிய வெளிச்சம் பெரிசா வராதுங்கோ... மாரிகாலத்தில இது அடிக்கடி நடக்கிறதால.. குறிப்பா தமிழர்கள் வாழும் பகுதியில வடகீழ் பருவப்பெயற்சிக் காலம் குளிர்காலத்தோட வருவதால இருட்டு அதிகம். நான் ரெம்பவே அவதானிச்சிருக்கிறன் ஊரில கோடையில 7 மணி வரை கிரிக்கெட் விளையாடலாம். ஆனால் மாரியில 6 மணிக்கே பந்தைப் பாக்கிறது கஸ்டமாகிடும்..! அந்த வகையில கிடத்தட்ட ஒரு மணி நேரத்தை சுட்டிக்காட்டினம். அதுக்கும் மேல மாரிகால கார்முகில் இன்னும் வேளைக்கு இரட்டப் பண்ணிடுங்கோ. அதுதான் தீபம் ஏற்றி மக்கள் தங்களை மாரிகாலத்துக்கு ஏற்ப தயார் பண்ணுறாங்க தீபாவளியில... இதையெல்லாம் அலசிப் பாக்கிற திறனை கொள்ளாம.. நரகாசுரனை.. தேடித் தாக்கி.. கிருஷ்ணரை சாட்டி மக்களை மு.....ள் என்று திட்டி திட்டிறவை யாரெண்டு...???! :)

அப்ப மாரி காலத்தில கருமுகில் அதிகம் இருந்தால் 4 மணிக்கும் இருட்டியிருக்குமே! தந்த இணைப்பின்படி சூரியவெளிச்சம் எப்பவுமே 11 மணி 35 நிமிடத்திற்குக் கீழ் போனதில்லை.. எனவே இருள் அதிகம் என்பதும் அதிலும் ஐப்பசியில் இருள் அதிகம் என்பதால் தீபாவாளியைக் கொண்டாடுவது என்பதும் பொருத்தமாகத் தெரியவில்லை..

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கும் ஒரு "கதை" வைத்திருப்பீர்களே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.