Jump to content

ஆண்களுக்கு மீசை அழகா?


Recommended Posts

ஆணுக்கு அழகு மீசை. சங்க காலத்தில் ஆண்கள் முறுக்கு மீசையுடன் வலம் வந்தனர். நாகரீகம் வளர வளர மனிதனின் நடை, உடை பாவனை மாறியது. முறுக்கு மீசையும் தொங்கு மீசையானது. வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்களில் பெரும்பாலான பேர் மீசை இல்லாத முகத்தையே விரும்புகின்றனர். தமிழர்களில் பெரும்பாலான பேர் மீசை வைத்துக்கொள்வதை அவசியமாக கருதுகிறார்கள்.

இன்றைய இளைஞர்கள் கூட அரும்பு மீசையை தடவிப்பார்த்து `நாம பெரிய மனுசனாயிட்டோம்' என்று சந்தோஷப்பட்டுக் கொள்வதுண்டு. இப்படி பலருக்கு பல விதமான ரசனைகள் உண்டு.யாழ் கள உறுப்பினர்கள் இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? (தயவு செய்து நாட்டுக்கு இந்த கருத்து கணிப்பு தேவையா என கேட்காதீர்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மீசை பிடிக்கிறதில்ல. தாடி மீசை இரண்டும் என்றா கொஞ்சம் பிடிக்கும்..! சுத்தமான முகம் ரெம்பப் பிடிக்கும்...! நான் பாத்திருக்கேன் சில பெண்களுக்கும் மீசை இருக்குது. அவங்க இப்ப மழுச்சிட்டு வாழுறாங்க..! அதுயேன் பெண்களுக்கு மீசை முளைக்குது..??! :D:wub:

Link to comment
Share on other sites

எனக்கு மீசை பிடிக்கிறதில்ல. தாடி மீசை இரண்டும் என்றா கொஞ்சம் பிடிக்கும்..! சுத்தமான முகம் ரெம்பப் பிடிக்கும்...! நான் பாத்திருக்கேன் சில பெண்களுக்கும் மீசை இருக்குது. அவங்க இப்ப மழுச்சிட்டு வாழுறாங்க..! அதுயேன் பெண்களுக்கு மீசை முளைக்குது..??! :lol::wub:

:D இதுக்குப் பதில் சொல்ல குருவியண்ணா தான் உகந்தவர். அவர் இப்ப எங்கேயோ. ம்ம் ம்ம் எல்லாம் காலம்.

மீசை இல்லாத ஆண்களின் முகம் தான் வடிவு. :blink::huh::lol::D ஜம்முத்தம்பி என்ன நித்திரையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீசை இல்லாத ஆண்களின் முகம் தான் வடிவு. :D:blink::huh::lol: ஜம்முத்தம்பி என்ன நித்திரையோ?

நிலாதான் அந்த பச்சை பாலகனை கெடுக்கிறா போல இருக்கு.... :D:lol::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ்பாணத்தில் இருந்து மீசையோட கொழும்பிற்கு படிக்க போனனான் அப்ப அந்த வீட்டில் இருந்த முதியவர் தம்பி இந்த மீசையை எடுத்து போடு பார்க்க தமிழன் மாதிரி இருக்கு உங்க பிரச்சினைகுள்ள ஏன் மாட்டுபடுவான் என்று அறிவுரை கூறினார். :wub:

Link to comment
Share on other sites

நிலாதான் அந்த பச்சை பாலகனை கெடுக்கிறா போல இருக்கு.... :D:blink::wub:

:huh::lol::D:lol::lol::( பெரிய கண்டுபிடிப்பு.

எனக்கு வேணும்தான். :D

Link to comment
Share on other sites

ஜம்முத்தம்பி என்ன நித்திரையோ?

நிலா அக்கா எழும்பிட்டேன் மீசை இருந்தா தான் ஆம்பிளைக்கு அழகு சோ மீசை கட்டாயம் வேண்டும் பேபி கூட எவ்வளவு கஷ்டபட்டு மீசை வளர்த்து வைத்திருக்கு மம்மியிட்ட ஏச்சு வாங்கியும் :blink: ...........தாடியும் நேக்கு ரொம்ப பிடிக்கு மம்மியிட்ட பேச்சு விழுந்தது ஒருக்கா வளர்த்து வைத்திருந்ததிற்கு :D சோ தாடி இல்லை பட் மீசை கட்டாயம் வேண்டும் இது தான் பேபியின் தீர்ப்பு :D !!நிலா அக்கா மீசை இல்லாத ஆண்கள் முகம் தான் வடிவே அப்ப பேபி முகம் அழகில்லை என்று சொல்லுறது போல இருக்கு :lol: !!நுணாவிலன் அண்ணா உங்களுக்கு மீசை இருக்கோ சொல்லவே இல்லை!! :wub:

அப்ப நான் வரட்டா!!

நிலாதான் அந்த பச்சை பாலகனை கெடுக்கிறா போல இருக்கு.... :huh:

சபேஷ் மாமா நித்தாவால எழும்பி வந்துட்டேன் ஆமாம் நான் பச்சை பாலகன் தான் அது சரி மாமாவிற்கு மீசை இருக்கோ!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நிலா அக்கா எழும்பிட்டேன் மீசை இருந்தா தான் ஆம்பிளைக்கு அழகு சோ மீசை கட்டாயம் வேண்டும் பேபி கூட எவ்வளவு கஷ்டபட்டு மீசை வளர்த்து வைத்திருக்கு மம்மியிட்ட ஏச்சு வாங்கியும் :wub: ...........தாடியும் நேக்கு ரொம்ப பிடிக்கு மம்மியிட்ட பேச்சு விழுந்தது ஒருக்கா வளர்த்து வைத்திருந்ததிற்கு :D சோ தாடி இல்லை பட் மீசை கட்டாயம் வேண்டும் இது தான் பேபியின் தீர்ப்பு

பேபி! இவ்வளவு தமிழ் பற்று உள்ள நீங்கள் வீட்டில் அம்மாவை மம்மி என்று அழைக்காமல் "அம்மா" என்றே அழைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

குழந்தை பேசும் முதல் வார்த்தை அம்மா! அந்த முதல் வார்த்தையையே

இரவல் எடுத்து பேசும் அளவுக்கு தமிழுக்கு வறுமை வந்து விட்டதா என நான் பல

தடவை பலரையும் பார்த்து வெறுப்படைந்து இருக்கிறேன்

Link to comment
Share on other sites

மீசைதான் ஆண்மைக்கு அழகு. :wub::D

நரைத்த மீசை அதை விட அழகு...சத்தியாமாய் என்னை சொல்ல வில்லை பாருங்கோ....

Link to comment
Share on other sites

நானும் ஒரு சின்ன கருத்து கணிப்பு என்னுடைய குடும்பத்தில் எடுத்து பார்த்தேன்.அப்பாவும் ஒரு தங்கச்சியும் மீசை வேண்டுமென்றும்,அம்மா,மற்ற தங்கச்சி,அண்ணா மீசை வேண்டாமென்று வாக்களிச்சினம்.அப்போ அம்மாவின் கட்சி 3:2 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

Link to comment
Share on other sites

பேபி! இவ்வளவு தமிழ் பற்று உள்ள நீங்கள் வீட்டில் அம்மாவை மம்மி என்று அழைக்காமல் "அம்மா" என்றே அழைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

குழந்தை பேசும் முதல் வார்த்தை அம்மா! அந்த முதல் வார்த்தையையே

இரவல் எடுத்து பேசும் அளவுக்கு தமிழுக்கு வறுமை வந்து விட்டதா என நான் பல

தடவை பலரையும் பார்த்து வெறுப்படைந்து இருக்கிறேன்

வெற்றிவேல் அண்ணா வீட்டை அம்மா என்று தான் கூப்பிடுறனான் "மம்மி: என்று கூப்பிட்டா அம்மாவிட்ட ஏச்சு தான் விழும் :D இங்கே சும்மா நம்ம கந்தப்பு தாத்தாவை டென்சன் ஆக்க தான் வெற்றி அண்ணா :huh: !!நாம இங்கே தான் மம்மி என்று எழுதுறோம் ஆனா இங்கே தமிழ் என்று சொல்லுறவை எல்லாம் என்ன செய்யீனம் என்று நேக்கு தானே தெரியும் :wub: !!நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா!! :blink:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நானும் ஒரு சின்ன கருத்து கணிப்பு என்னுடைய குடும்பத்தில் எடுத்து பார்த்தேன்.அப்பாவும் ஒரு தங்கச்சியும் மீசை வேண்டுமென்றும்,அம்மா,மற்ற தங்கச்சி,அண்ணா மீசை வேண்டாமென்று வாக்களிச்சினம்.அப்போ அம்மாவின் கட்சி 3:2 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது.

கள்ளவாக்கு போட ஏலாம் போயிட்டோ நுணாவிலன் அண்ணா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நுணுக்கம்! அப்பிடிக் கூப்பிடலாமா? அனுமதி பிளீஸ்

ஆமா நலமோடு வாழும் பகுதிக்கும் மீசைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? ஆதிக்கு யோசிச்சு யோசிச்சு மூளையும் நரம்பும் களைச்சுப் போச்சு....

Link to comment
Share on other sites

நானும் எங்கே போடலாம் என்றுதான் யோசித்து பார்த்தேன்.ஊரிலே பெரிய மீசை வைச்ச ஆட்கள் கூழ் குடிக்கேக்குள்ளே பார்த்திருக்கிறேன்.மீசை எல்லாம் பிரட்டி அடிச்சு ....அந்த கண்றாவியை பார்க்க முடியவில்லை.ஆகவே யாராவது இந்த வழியில் யோசிக்கிறாங்களோ என்று பார்த்தனான்.அது தான் இங்கு இணைத்துள்ளேன் :):D:)

Link to comment
Share on other sites

நான் பாத்திருக்கேன் சில பெண்களுக்கும் மீசை இருக்குது. அவங்க இப்ப மழுச்சிட்டு வாழுறாங்க..! அதுயேன் பெண்களுக்கு மீசை முளைக்குது..??! :D:)

அது ஏன் சில ஆண்களுக்கு மீசை முளைக்கிது இல்ல? :)

Link to comment
Share on other sites

:):) ஒரு காலத்திலை ஏனடா மீசை வளருதில்லையெண்டு கவலை இப்ப இது ஏண்டா வளருது எண்ட கவலை. :D:D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் சில ஆண்களுக்கு மீசை முளைக்கிது இல்ல? :)

ஓ.. இந்தக் கணக்கை சரியெய்யத்தான் பெண்களுக்கு முளைக்குதோ...! இப்பதான் விளங்கிச்சிது..! :D:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பரவலாக எல்லாக்கடைகளிலும் பெண்களுக்கான சேவிங்செற் விற்பனை செய்கின்றார்கள்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பரவலாக எல்லாக்கடைகளிலும் பெண்களுக்கான சேவிங்செற் விற்பனை செய்கின்றார்கள்! :)

அதுவா.. அது ஏனென்னா.. காலு கையி.. முகமு.. தலையை மட்டும் மறந்திட்டாங்க.. என்று எல்லா இடமும் உள்ள மயிர்களை மழுச்சி எறிஞ்சா தங்கட வடிவு கூடுமாம் என்று மழுக்கினம் பெண்கள். பாத்தாங்க ஆண்கள் சேவ் பண்ணிப் பண்ணி முகம் பொலிவாகிறாங்க.. பொறாமை தாங்க முடியல்ல.. உடன தாங்களும் இல்லாத பொல்லாத இடமெல்லாம் மழுயல் தான்..! :D:)

Link to comment
Share on other sites

என்னங்கடா இது மீசையில துவங்கி இப்ப சப்ஜெக்ட் வேற எங்கையோ போகிது.

ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி உடலில் உள்ள உரோமங்களை அகற்றுவது மேலைநாடுகளில் ஒன்றும் புதுசு இல்லை. முக்கியமாக சுகாதார காரணங்களிற்காக இப்படி செய்கின்றார்கள். அழகாக இருக்கவேண்டும் என்பதும் ஒரு காரணம்.

மற்றது, சேவ் எல்லாம் எடுத்து கஸ்டப்படத் தேவை இல்லை. லேசர்கதிர் மூலம் நிரந்தரமாக உரோமங்களை உடலில் இருந்து அகற்ற முடியும். உடலில் உள்ள உரோமங்களை முழுதாக அகற்ற கனடாக் காசில் சொல்வதானால் சுமார் $1,500 செலவாகும். பெண்கள் மட்டுமன்றி இங்கு ஆண்களும் அதிகளவில் இவ்வாறு உடலில் உள்ள உரோமங்களை அகற்றுகின்றார்கள்.

எனக்கும் யாராவது $1,500 காசு தந்தால் நானும் எண்ட உடலில தேவை இல்லாத இடங்களில் உள்ள உரோமங்களை அகற்ற ஆயத்தமாய் இருக்கிறன்.

கீழ சில படங்கள் இருக்கிது பாருங்கோ.

permanent_laser_hair_removal.jpg

hairpic.jpg

male-back-before-and-after.jpg

manchest2.jpg

laser4.jpg

back2.jpg

picture-03.jpg

ஆங்கிலம் தெரிஞ்ச ஆக்கள் மேலதிக தகவல்கள இஞ்சபோய் வாசியுங்கோ.. http://en.wikipedia.org/wiki/Laser_hair_removal

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடலில் உள்ள முடிகளை செயற்கைத்தனமாக அகற்றுவதில் உள்ள சுகாதாரக் காரணிகள் என்ன..??! முகத்தில் உள்ள முடிகளை தவிர..!

தோலில் உள்ள முடிகள் மனிதனின் ஓர்சீர்த்திடநிலையை (Homeostasis).. அதாவது உடல்வெப்பச் சீராக்கலில் மிக முக்கிய பங்காற்றுகிறது..! மனித உடலைச் சுற்றி ஒரு காற்றுப்படையை சிறைபிடித்து வைக்க அது உதவுகிறது. இதன் மூலம் தோலின் புறச்சூழல் அதிக மாற்றமின்றி உடலின் வெப்பநிலையை அண்மித்திருக்க செய்யப்படுகிறது. குறிப்பாக காலநிலை மாற்றங்களோடு உடலின் ஓர்சீர்த்திடநிலையை கட்டிக்காக்கும் பணியில் இந்த உரோமங்களுக்கு முக்கிய பணி இருக்கிறது..!

அழகு என்று சொல்லி உரோமத்தை அகற்றுகின்றனர். மயிர்க்கணுக்களில் எண்ணைச் சுரப்பிகள் உள்ளன. அவைதான் தோல் உலராமல் இருக்க எண்ணையை சுரக்கின்றன. இந்த எண்ணையில் உள்ள anti microbial agents நுண்ணங்கிகள் தோலில் ஏற்படுத்தும் தொற்றை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. உரோமங்களை அகற்றும் போது மயிர்க்கணுக்களும் சேதமாக வாய்ப்புள்ளது. இதனால் தோல் உலர்வடையவும் இதன் மூலம் பல பாதகமான பின் விளைவுகள் நேரவும் வாய்ப்பு ஏற்படும். அதற்கு பரிகாரமாக கிறீம்களை தருவர். கிறீம்களின் பாவனை தோலில் உள்ள வியர்வைச் சுரப்பித் துவாரங்களை மூடுவதால் மனித உடலின் சீரான உடற்தொழிபாட்டில் குழப்பங்கள் நேர இடமளிக்கப்படுகின்றன.

ஆக உரோமம் அகற்றக் காசு.. பின் தோலைப் பராமரிக்க வழங்கும் செயற்கை கிறீம்களின் வியாபாரத்தால் காசு.. ஆக மொத்தத்தில் மனிதனை அழகுபடுத்திறன் என்று இயற்கையான உடற்பாதுகாப்புச் செயற்பாட்டினை சீரழிச்சு வியாபாரம் செய்யுறாங்க. படிச்ச கூட்டம் முதல் படிக்காதது வரை அழகின் ரசனை மட்டத்தை இறக்கி.. உடல் உரோமத்தில போய் நிற்கிறது.. இது ரெம்ப வேடிக்கையானது..!

அண்மைய பிரித்தானிய விஞ்ஞான பாட வினாத்தாள்களில் இந்த உரோமம் அகற்றுதலின் பின்னணியில் எழும் கிறீம்களின் பாவனை எவ்வாறு தோலின் செயற்பாடுகளை பாதிக்கின்றன என்பது குறித்தான வினாக்களை அவதானிக்க முடிகிறது. உலகம் வியாபாரத்துக்க சிக்கிக் கிடந்தாலும்..சிந்திக்கவும் செய்கிறது என்பதற்கு இது நல்ல சான்று..!

பொதுவாக ஆண்கள் முக முடி மற்றும் சில இடங்களைத் தவிர உடல் முடி அகற்றுவது குறைவு. பெண்கள் தான் முகத்தில முடியில்லை எண்ணாக் கூட முகப்பொலிவு நாடி மழிக்கின்றனர். நான் நேரடியா அவதானிச்சிருக்கிறன் கேட்டும் இருக்கிறன். பெண்கள் சரியான லூசுகளோ என்று கூட நினைக்கும் படி... அவர்களின் சில நடத்தைகள் அமைந்திருக்கின்றன.

உடலில் உள்ள உரோமங்களால் என்ன சுகாதாரக் கேடு.. என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா.. கலைஞன்..???! :):lol:

Link to comment
Share on other sites

இந்த குளிரிக்கையும், வெக்கையுக்கையும் நாங்கள் ஹீட்டரையும் ஏசியையும் பாவிக்கிறம். நீங்கள் சொன்னமாதிரி உரோமம் ஒரு சீர்த்திடநிலையை ஏற்படுத்த காட்டுமனிதனுக்கு உதவக்கூடும். இஞ்ச மைனஸ் மூண்டு துவக்கம் மைனஸ் பதினைஞ்சு டிகிரியுக்க ஜக்கட்ட போட்டு, ஹீட்டருக்க இருந்தால் ஒழிய இல்லாவிட்டால் எங்கட கதை காலி. இத மாதிரி வெக்கை காலத்தில ஏசி...

மொடேர்ன் மனிதன் உரோமங்களை நம்பி வாழவில்லை. எல்லாம் பிசினசு உலகம். பல்லைக் காட்டினால் பலகோடி கிடைக்கும். உம்மெண்டு வாயை வச்சு இருந்தால் போலீசு பயங்கரவாதி எண்டு விசாரணைக்கு கூட்டிக்கொண்டு போகும்.

இப்படியான நிலமைகளில உரோமங்கள வளர்த்து காட்டுமிராண்டிகள் மாதிரி மற்ற ஆக்கள பயப்படுத்தாமல் நாகரீகமான மனிதனா டீசண்டா (ஆகக்குறைந்தது உடல் தோற்றத்திலாவது) இருக்கலாம்.

உரோமம் சாப்பாட்டுக்க விழுந்தால், போகக்கூடாத இடத்துக்க போனால் எல்லாம் சுகாதாரக் கேடுதான். இதுபற்றி மேலதிகமாக உங்களுக்கு விளக்கமா சொல்லி நிருவாகத்திடம் நான் வெட்டு வாங்கமுடியாது.

உரோமம் இல்லாமல் வழுக் வழுக் எண்டு உடம்பு இருந்தால் அதிலும் ஒரு சுகம் உள்ளது. கண்டபடி உடம்பை சொறியத் தேவையில்லை. இலகுவாக சவுக்காரம் போட்டு குளிக்கலாம். உடம்பில் ஊத்தை கிலோக் கணக்கில் ஒட்டிப்பிடித்துக்கொண்டு இருக்காது.

உங்களுக்கும் விருப்பம் எண்டால் லேசர் கதிர் மூலம் உரோமங்களை அகற்றி பாருங்கோ. வெட்கம் எண்டால் சொல்லுங்கோ, ரெண்டு பேரும் சேர்ந்து போவம். ஆனா என்ன இதுக்கு ஒரு $3,000 செலவாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.