Jump to content

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

பிரிட்டன் தேர்தலின் இறுதி நேர பிரச்சாரப் பொருளாக மாறும் இராக் விவகாரம்

பிரிட்டனில் மே மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் இறுதி நேரத்தில் முக்கிய வாதப் பொருளாக, இராக் போர் விவகாரம் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றது.

இராக் மீதான போர், சர்வதேச மட்டத்தில் சட்ட ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று பிரிட்டனின் அரச தலைமை வழக்கறிஞர், அரசுக்கு ஆலோசனை கூறியதாகவும், ஆனால் அரசாங்க தரப்பில் இருந்து வந்த கடுமையான அழுத்தம் காரணமாக அவர் பின்னர் தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும் கடந்த ஞாயிறன்று வெளியான பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்த பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளயர் அவர்கள், வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் இதனை தற்போது தூக்கிப்பிடிப்பதாக குறைகூறுகிறார்.

கடந்த நாடாளுமன்றத்தில் பெற்ற ஆசனங்களின் அடிப்படையில் மூன்றாவது நிலையில் உள்ள லிபரல் டெமொக்கிரட்டிக் கட்சியினர் ஆரம்பம் முதலே இராக் மீதான போரை எதிர்த்து வந்திருக்கின்றனர்.

போருக்கு செல்வதற்கான காரணத்தை நியாயப்படுத்த அரசாங்கத்தால் கூறப்பட்ட உளவுத் தகவல்கள் குறித்து பொது விசாரணை ஒன்று தேவை என்று அந்த கட்சியின் தலைவர் சார்ள்ஸ் கென்னடி கூருகிறார்.

கொன்சேர்வேட்டிவ் கட்சி போருக்கு தனது ஆதரவை வழங்கியிருந்த போதிலும், பிரதமர் பிளயரின் நேர்மையை அது குறைகூறுகிறது.

அவரால் முன்வைக்கப்பட்ட உளவுத்தகவல்கள் குறித்தே அந்த கட்சியின் தலைவரான மைக்கல் ஹவார்ட்டும் குறைகூறுகிறார்.

நன்றி - பிபிசி தமிழ்

Link to comment
Share on other sites

  • Replies 232
  • Created
  • Last Reply

பிரித்தானிய பொது தேர்தல் இன்னும் 6 நாட்களில் நடைபெற இருக்கின்றது. மே 5ம் திகதி நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் தமது வாக்குகளை தவறாது அளிக்க வேண்டும்.

தற்போதைய தொழிற்கட்சி, கன்சவேர்டிவ், லிபரல் என்று மூன்று முக்கிய கட்சிகள் தேர்தல் களத்தில் இருக்கின்றன. இவற்றுள் கன்சவேர்டிவ் கட்சி தீவிர போக்குடையது என்பதுடன் குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பாக கடுமையான போக்கை கொண்டிருக்கின்றது. மற்றய இரு கட்சிகளில் லிபரல் கட்சிக்கு ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு செல்வாக்கு இல்லை. இந்நிலையில் தொழிற்கட்சிக்கு வாக்களிப்பதே நமக்கு இருக்கும் ஒரே வழி. சிலர் கொள்கையளவில் லிபரல் நல்லது அதற்கு வாக்களிப்பதே நல்லது என்று நினைக்கின்றார்கள். ஆனால் அப்படி செய்யும் போது அது வாக்குகளை பிரிப்பதால் மறைமுகமாக கன்சவேர்டிவ் பதவிக்கு வரவே வழி வகுக்கும்.

Link to comment
Share on other sites

பிரித்தானிய தேர்தலுக்கு இன்றும் 3 நாட்கள் இருக்கும் நிலையில் தொழிற்கட்சி மற்றும் கன்சவேர்டிவ் கட்சி இடையே ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் ஆசியர்கள், கறுப்பினத்தவர் மற்றும் இந்நாட்டில் குடியேறியோர் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். எனவே ஈழதமிழர்கள் தவறாது வாக்களிக்க வேண்டும்.
Link to comment
Share on other sites

மதன் பிரித்தானியத் தேர்தல் தகவல்களையும், அதுபற்றிய கருத்துக்களையும் இணைப்பதற்கு நன்றிகள். சாத்தியமில்லை என்று சோம்பேறிகளாய் இருப்பதைக் காட்டிலும், முடிந்தளவு முயற்சி செய்வது நல்லதே.

Link to comment
Share on other sites

நம்ம டொனி பிளேயருக்கு தான்.. நாங்க கடந்த வருடம் தான் வாழ்வில முதல் முதல் வோட் பண்ணினம். :mrgreen:

ஓ அப்ப நீங்கள் லண்டன் பிரசை ம் ம் அம்மாச்சீ சவுண்டு விடேக்கை தெரியுது

நடத்துங்கோ

:twisted: :twisted: :twisted: :twisted:

Link to comment
Share on other sites

இரண்டையும் இணைத்துவிட்டேன். :D

தொழிற்கட்சி, கன்சவேர்டிவ் இந்த 2 கட்சியையுமா ?

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்ப நீங்கள் லண்டன் பிரசை ம் ம் அம்மாச்சீ சவுண்டு விடேக்கை தெரியுது

நடத்துங்கோ

:D :mrgreen: :mrgreen:

Link to comment
Share on other sites

மதன் அண்ணா நானும் லேபர் கட்சிக்கே வோட்

போடுவதாக உள்ளேன். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லேபர்கட்சியிலும் வலதுசாரி இடதுசாரி என இரு பிரிவினர் இருப்பதை அவதானிக்கலாம் சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராக சட்ட வரைவு கொண்டு வரும் பொழுது லேபர் கட்சியிலுள்ள இடதுசாரி போக்குள்ளவர் எதிர்க்கும்போது கன்சர்வேட்டிவ்கட்சியும் லோபர்கட்சியும் ஒனறிணைந்து செயற்படுவதை பார்க்கலாம் சிறுபான்மையரின் செல்வாக்கு பாரளு மன்றத்தில் செலு்த வேணுமென்றால் லிபரல்டெமக்கிரேட்டுக்கு வோட்டு போட்டால் நல்லமென்று நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

மேலே பலர் குறிப்பிட்டது போல தொழிற்கட்சிக்கும் பழமைபேண் கட்சிக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. தொழிற்கட்சி தான் ஆட்சிக்கு வந்தால் 1951 ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அகதிகளுக்கான ஐநா வின் ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையின் கீழ்தான் இதுவரைகாலமும் அகதிஅந்தஸ்து அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது.

என்னைப்பொறுத்தவரையில் லிபரல் கட்சிக்கு வாக்களிப்பது பொருத்தமானதாயிருக்கும். அவர்களால் ஆட்சியமைக்க முடியாதென்பது வெளிப்படை. ஈழத்தவரது தற்போதைய அரசியல் பலத்தை அடிப்படையாக வைத்து நோக்குகையில் அவர்களால் பெரிய கட்சிகளில் பாரியளவு செல்வாக்கை செலுத்தக்கூடிய வல்லமை தற்போதைக்கு இல்லை. எனவே லிபரல் போன்ற கட்சிகளிற்கு வாக்களித்து அவர்கள் மூலம் எமது பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கு கொண்டு போவதற்கு முனையலாம். தகுந்த அணுகுறை மூலம் லிபரல் கட்சியை ஒப்பீட்டளவில் இலகுவாக அணுகலாம் (Lobby)

எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு மில்லியன் மக்கள் இலண்டன் வீதியில் அணிதிரண்டு எதிர்த்தும் பிளேயர் போருக்குச் சென்றார். எனவே அவரைப் புறக்கணிப்பதன் மூலம் மக்களை எதிர்த்து நகர்வுகளை மேற்கொண்டால் எப்படியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதை அரசியல்வாதிகளுக்கு விடுக்கும் ஒரு செய்தியாக இந்த வாக்களிப்பை வாக்காளர்கள் பயன்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

மதன் அண்ணா நானும் லேபர் கட்சிக்கே வோட்

போடுவதாக உள்ளேன். :wink:

பிள்ளை என்ர சார்பா 2 ஐ போடு பிள்ளை

vot1is.gif

Link to comment
Share on other sites

தவறாமல் இம்முறை வோட் போடுங்கள் வசி. ஈழ தமிழர்கள் பலரும் வோட் போடுவதில் அக்கறை கொள்வதில்லை, நீங்கள் ஒவ்வொருவரும் வோட் போடாமல் இருக்கும் போது அது கடும் போக்குள்ள கன்சவேர்டிவ் கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்பை அதிகரிக்கின்றது என்பதை மனதில் கொள்ளுங்கள். மே 5ம் திகதி அன்று என்ன வேலை இருந்தாலும் இதற்கென ஒரு அரை மணித்தியாலத்தை ஒதுக்கி தவறாமல் தொழிற் கட்சிக்கு வோட் போடுங்கள்,
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இந்த முறை வோட் போடச் சொல்றீங்கள்..

அப்ப இதுவரை போட்டதில்லையா..?? :D

Link to comment
Share on other sites

இதுவரை போடவில்லை..தமிழினி..:wink:

இம்முறை போடப்போகிறேன்.. எடுத்துக் காட்டிய

மதனுக்கு நன்றி :D .

நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவரி.

நீங்கள் எப்படி தமிழினி? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை போடவில்லை..தமிழினி..:wink:

இம்முறை போடப்போகிறேன்.. எடுத்துக் காட்டிய

மதனுக்கு நன்றி :D .

நீங்கள் எப்படி தமிழினி? :lol:

பிரித்தானியாவில் நிரந்தரமற்ற முகவரியில் இருக்கிறா(ரோ)வோ என்னவோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எப்படி தமிழினி?

நாங்கள் போனமுறை தான் முதல் தடவையாய் போட்டம் இந்த முறையம் போடுவம்.. லேபர்ஸ்க்கு தான் நம்ம ஓட்டும்.. என்ன தான் செய்தாலும்.. பிளேயர் அங்கிள் பாவம் வரட்டும். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானியாவில் நிரந்தரமற்ற முகவரியில் இருக்கிறா(ரோ)வோ என்னவோ

ரோ வோ.. சந்தேகமா.. உங்களுக்கும்.. ம் பிரித்தானியாவில்.. நிலையாய் இங்கையும் இல்லை.. விதி விட்ட வழி .போறம்.. பாப்பம்.. :P

Link to comment
Share on other sites

இருக்கட்டும் பிள்ளையள் உங்க கள்ள ஓட்டு குத்த ஏலாதோ

உங்களுக்கு உதவ என்ர மச்சானை அனுப்பவே ???

கள்ள ஓட்டு குத்திறதில மன்னாதி மன்னன்

366113on.gif

Link to comment
Share on other sites

பிரிட்டிஷ் தேர்தலில் இராக் விவகாரம்

பிரிட்டிஷ் தேர்தல் பிரச்சாரத்தின் போது இராக் மீதான போர் குறித்த விவகாரத்தை பிரதமர் டொனி பிளயரின் தொழில் கட்சி அடக்கி வாசிக்க முயற்சித்த போதிலும், பிரச்சார காலத்தின் இறுதி வேளையில் பத்திரிகைகளை அலங்கரிக்கும் தலைப்புச் செய்திகளில் இராக் விவகாரம் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டது.

சில தினங்களுக்கு முன்னர் இராக்கில் ரோந்து நடவடிக்கை ஒன்றின் போது கிளர்ச்சிக்காரர்களால் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவரின் மனைவி தனது கணவரின் மரணத்துக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முக்கிய எதிர்க்கட்சிகளான கான்சர்வேட்டிவ் கட்சி மற்றும் லிபரல் டெமோகிரட்டிக் கட்சி ஆகியன, இராக் போரை பிரதமர் டொனி பிளயர் முன்னெடுத்த விதத்தை விமர்சித்து வருகின்ற போதிலும், இந்த சிப்பாயின் மரணம் தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்ட மறுத்து விட்டன.

ஈராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள்

தேர்தல் குறித்து அண்மையில் வெளியான கருத்துக் கணிப்புகள் சில, இந்த தேர்தலின் போது இராக் போர் விவகாரத்தை ஒரு முக்கியமான விடயமாக பெரும்பாலன மக்கள் பார்க்கவில்லை என்றே கூறியிருக்கின்றன.

ஆனாலும் இறுதி நேரத்தில் இராக் போர் குறித்து வெளியாகும் தலைப்புச் செய்திகள், ஒரளவுக்கு பிளயர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தலாம் என்றும், சில தொழிற்கட்சி ஆதரவாளர்கள், போரை ஆரம்பம் முதலே எதிர்த்த லிபரல் டெமொகிரட்டிக் கட்சியை நோக்கி சாய இவை ஊக்குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிபிசி தமிழ்

Link to comment
Share on other sites

லண்டன் பகுதியில் உள்ள Bexleyheath & Crayford பகுதிகளில் தொழிற்கட்சிக்கும் மற்றய கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது, இந்த பகுதியில் உள்ள ஈழத் தமிழர்கள் தவறாமல் உங்கள் வோட்டை தொழிற் கட்சிக்கு போடுங்கள்,
Link to comment
Share on other sites

பிரிட்டனில் இறுதி நேரப் பிரச்சாரம்

பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று, நாடு முழுவது பல இடங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக்கூடிய கடும் போட்டியுள்ளதாக கருதப்படும் தொகுதிகளை மையம் வைத்தே இன்றைய தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

இராக் மீதான படையெடுப்பில் இருந்த உண்மை நிலையினை பிரதமர் டோனி பிளயர் தரவில்லை எனக் கூறும் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும், லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினரும் அதற்காக டோனி பிளயர் வாக்காளர்களால் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் பி பி சிக்கு அளித்த பேட்டியொன்றில் பிரதமர் டோனி பிளயர் அவர்கள் பிரிட்டிஷ் பொருளாதார வளர்ச்சி, சுகாதாரத் துறை மற்றும் கல்வி ஆகியவற்றில் தன் அரசாங்கம் செய்துள்ளவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு மக்களிடம் கோரியுள்ளார்.

BBC Tamil

Link to comment
Share on other sites

பிரித்தானிய தேர்தல்கள் இரவு 10 மணியுடன் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி இருக்கின்றது. இதுவரை முடிவு வெளியாகிய 3 தொகுதிகளிலும் தொழிற்கட்சி வென்றுள்ளது 8)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தொழிற்கட்சியே வெற்றிபெறுகின்றது.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரித்தானிய தேர்தல்கள் இரவு 10 மணியுடன் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி இருக்கின்றது. இதுவரை முடிவு வெளியாகிய 3 தொகுதிகளிலும் தொழிற்கட்சி வென்றுள்ளது

நல்ல செய்தி மதன் கஸ்டப்பட்டது வீண் போகல.. பின்ன.. நாங்க வோர்ட் பண்ணினால்.. வெற்றி பெறாமல் எப்படி.. :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.