Jump to content

பிரித்தானிய தகவல்கள்


Recommended Posts

லண்டன் கொலைகள்

சம்பவம் - 1

நேற்று இரவு லண்டன் ஈஸ்ட் காம்-இல்பேர்ட் (Eastham, Ilford) பகுதியில் நிகழ்ந்த குழு சண்டை (Gang Fight) ஒன்றில் 23 வயது தமிழ் இளைஞன் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் நடந்த சண்டைகளின் தொடர்ச்சியாகவே நேற்றய கொலை நடந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவம் - 2

ஏறத்தாள ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் லூசியம் - கட்போர்ட் (Lewisham, Catford) பகுதியை அண்டிய பிரதேசத்தில் உள்ள Favorite Chicken Shopஇல் ( KFC போன்றது) நடுதர வயது தமிழர் ஒருவர் குத்தி கொல்லப்பட்டார். குத்தப்பட்டவரும் குத்தியவரும் அந்த நிறுவனத்தில் வேலை செய்தவர்களாவர். இருவரும் ஆரம்பத்தில் சாதாரணமாக பேசி கொண்டிருந்தாகவும் இருவரின் ஊர் குறித்த பேச்சு எழுந்த போது இருவரும் ஒருவரை ஒருவர் தாழ்த்தி பேசியதாகவும் அது வாய்தகறாக மாறி குடிபோதையில் வேலை செய்துகொண்டிருந்தவர் அருகில் இருந்த கோழி வெட்டும் கத்தியால் குத்தியதாககவும் கூறப்பட்டது.

இது தவிர சிறிது காலத்திற்கு முன்பு லண்டன் டூட்டிங் பகுதியில் உதைபந்தாட்ட போட்டியை தொடர்ந்து குழு சண்டையில் தமிழர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்கே போகிறது லண்டன் தமிழினம் :cry:

Link to comment
Share on other sites

  • Replies 232
  • Created
  • Last Reply

வாழ்க தமிழ் புகழ்!

மதன் எல்லா பேப்பரிலும் இது வந்ததா? எங்கள் புகழ் உலகம் பூராகவும் பரவினதா? ஜாலி!.. இப்பதான் பாரதி கண்ட கனவு பலிச்சிருக்கு. ஜாலி!..ஜாலி.. :evil:

Link to comment
Share on other sites

வாழ்க தமிழ் புகழ்!

மதன் எல்லா பேப்பரிலும் இது வந்ததா? எங்கள் புகழ் உலகம் பூராகவும் பரவினதா? :evil:

South London Press உள்ளிட்ட சில பத்திரிகைகளில் போட்டிருக்கின்றார்கள். தாக்கியவர் தாக்கப்பட்டவர் இருவருமே தமிழர்கள் என்பதாலும் அடிக்கடி நடைபெறும் சம்பவம் என்பதாலும் இதை அவர்கள் பெரிதாக கணக்கில் எடுப்பதில்லை.

Link to comment
Share on other sites

தெற்கு லண்டனின் பல பகுதிகளிலும் ஆசிய கலாச்சார நிகழ்ச்சி நடக்க ஏற்பாடாகி இருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக நேற்று ஞாயிற்று கிழமை South East London Plumstead Common பகுதியில் ஆசிய கலாச்சார விழா (Asian Mela) நடந்தது. அது ஒரு கலாச்சார விழாவாக மட்டும் அன்றி அந்த பிரதேச ஆசிய மக்கள் ஒன்று கூடும் ஒரு நிகழ்வாகவும் அமைந்தது. அந்த பிரதேசத்தில் தமிழ் மக்களின் அளவு குறைவாக இருந்தமையினால் தமிழ் நிகழ்சிகள் அதிகம் இடம்பெறவில்லை. சிறிய தமிழ் குழந்தைகள் தமிழ் கலாச்சார உடையுடன் கலந்து கொண்ட ஆடல் நிகழ்சிகள் நடைபெற்றன. அடுத்த ஆண்டு விழாவின் போது மேலும் தமிழ் நிகழ்சிகளை இடம்பெற செய்யமுடியும் என்று நினைக்கின்றேன்.

15 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த நிகழ்ச்சிக்கு Sunrise Radio, Sony Entertainment மற்றும் Western Union உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆதரவளித்திருந்தனர். இதை தவிர Greenwich council மற்றும் அப்பகுதி தொழிற்கட்சி எம்பி John Austin ஆகியோரும் பக்கபலமாக இருந்ததுடன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

Link to comment
Share on other sites

இந்த நிகழ்ச்சியின் போது டிஜிட்டல் கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை கீழே இணைக்கின்றேன். அவை அவ்வளவு தெளிவாக இல்லை. மற்றய கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கும் போது அவற்றை பின்பு தருகின்றேன்.

southlondon19zi.jpg

southlondon28of.jpg

southlondon39ze.jpg

Link to comment
Share on other sites

இந்த நிகழ்ச்சியின் போது டிஜிட்டல் கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றை கீழே இணைக்கின்றேன். அவை அவ்வளவு தெளிவாக இல்லை. மற்றய கமராவினால் எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கும் போது அவற்றை பின்பு தருகின்றேன்.

இணைக்கப்பட்டவை அனைத்தும் தெளிவாகவே இருக்கின்றன. நன்றி

Link to comment
Share on other sites

இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் மனைவி செரி பிளேர். இவர் வக்கீலாக இருக்கிறார். ஆளும் தொழிலாளர் கட்சி தொடர்பான வழக்குகளில் இவரே பெரும்பாலும் ஆஜர் ஆகிறார். செரி பிளேர் இப்போது டெலிவிஷன் தொடரிலும் நடிக்கிறார்.

2 மணி நேரம் ஓடும் இந்த டெலிவிஷன் தொடர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்களின் மனைவிமார்களை பற்றியது. 3 முன்னாள் பிரதமர் களின் மனைவிகள் கிளாரிசா ஈடன், மேரிவில்சன், நார்மா மேஜர் ஆகியோரும் நடிக்கிறார் கள். அவர்களுடன் இணைந்து நடிக்கும் செரிபிளேர் அவர்களை பேட்டி காண்கிறார்.

Link to comment
Share on other sites

நன்றி சுண்டல்.

செரி பிளேயர் (Cherie Blair) கணவரைவிட தனது தொழில் மூலம் அதிகம் சம்பாதிப்பவர் என்று சண் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. இது தவிர அமெரிக்க பல்கலைக்கழகங்களில் விரிவுவைகள் நடத்துவதன் மூலம் தனியாக சம்பாதிக்கின்றார். தன்னுடைய கணவரின் பதவி மூலம் கிடைக்கும் அந்தஸ்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.

Link to comment
Share on other sites

இந்த நிகழ்வில் எடுத்த வேறு சில புகைப்படங்களை கீழே இணைத்துள்ளேன். முழுமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி விரைவில் Sony Entertainment Television Asia இல் ஒளிபரப்பாகும்.

southlondon41vb.jpg

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on4large1dm.jpg

southlondon59un.jpg

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on5large4ht.jpg

southlondon78ip.jpg

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on7large9tj.jpg

southlondon67dc.jpg

பெரிய அளவில் பார்க்க http://img137.echo.cx/my.php?image=southlo...on6large8rr.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மதன் .. நீங்களும் போய் இருந்தீர்களா.. ?

Link to comment
Share on other sites

ம் தமிழ் நிகழ்சிகளும் நடந்தன. இது இந்த பகுதியில் இருந்த அனைத்து ஆசியர்களுக்கு பொதுவான கலாச்சார விழா. இந்த பகுதியில் தமிழர்கள் குறைவு என்பதால் பங்களிப்பு குறைவாக இருந்தது. அது தவிர தமிழர்கள் தமது பிள்ளைகளை தமிழ் நிகழ்சிகளின் பங்கு பெற செய்வதில் அவ்வளவு முன்னிற்கவில்லை. அடுத்து Lewisham மற்றும் Bromley பகுதிகளை இணைத்து ஆசிய கலாச்சார தினம் நடாத்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. அந்த பகுதிகளின் அதிகம் தமிழர்கள் இருப்பதால் பங்களிப்பும் கூடுதாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

global_ho_logo.gif

ஐக்கிய ராச்சியத்தில் ஏறத்தாள 570,000 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக உள்துறை அலுவலகம் (Home Office) அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் எதிர்கட்சிகள் சட்டவிரோதமாக தங்கியிருப்போரின் எண்ணிகையை விவாதங்களில் கேட்டபோதும் அதற்கு தொழிற்கட்சி அரசு பதிலளிக்கவில்லை, தொழிற்கட்சி குடியேறிகள் விடயத்தில் நெகிழ்வு போக்கை காட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில் அந்த விபரம் வெளியிடப்பட்டால் அது தேர்தலில் எதிர்ப்பலை உருவாக்கலாம் என்று அப்போது இதற்கு பதிலேதும் சொல்லாமல் மெளனமாக இருந்த அரசு இப்போது தேர்தல் முடிந்த நிலையில் அது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் அரசியல் தஞ்சம் கோரி தற்போது விசாரணையில் உள்ளோரும் அது நிராகரிக்கபட்ட நிலையில் அதனை எதிர்த்து அப்பீல் செய்தோரும் உள்ளடக்கப்படவில்லை.

தற்போது ஐக்கிய ராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை அடையாளம் காணவதற்கு இலகுவான வழிமுறை ஏதும் இல்லை. முக்கியமாக இதனை காரணமாக வைத்தே அடையாள அட்டை திட்டத்தை தொழிக்கட்சி அரசு ஆரம்பித்தது ஆனால் இதற்கு நாடாளும் சபையில் ஆதரவு குறையும் நிலையில் இதன் அவசியத்தை உணர்த்தவே சட்டவிரோதமாக தங்கியிருப்போரின் எண்ணிக்கையை இந்த சமயத்தில் வெளியிட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை கூட மிக குறைவான கணிப்பீடு என்றும் உண்மையில் இதைவிட அதிகமானோர் இருக்கலாம் என்று குடியேறிகளை கண்காணிக்கும் Migration WatchUK அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தி ஆதாரம்: பிபிசி இணையம்

ஆங்கிலத்தில் முழுமையாக படிக்க http://news.bbc.co.uk/1/hi/uk_politics/463...7273.stm

Link to comment
Share on other sites

என்ன லண்டன் கிட்டமுட்ட கொழும்பு மாதிரி இருக்கு...இல்ல ஆகிட்டா...! :P :D

படங்களுக்கு நன்றி மதன்...! :P

Link to comment
Share on other sites

லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் கொழும்பு மாதிரி என்ன கொழும்பே தான். ஆகிட்டுது ஆக்கிட்டோம் :P

பெரிய சாதனை தான் அடிச்சுக்கலைக்காட்டா சரி. 8) :? :wink:

Link to comment
Share on other sites

பெரிய சாதனை தான் அடிச்சுக்கலைக்காட்டா சரி. 8) :? :wink:

ரோட்டில கொத்துறொட்டிக் கடையும் இளனிக் கடையும்

போடாத குறை ஒன்றுதான் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை போட்டால் நல்ல பிஸ்னஸ் ஆச்சே .. வசி போடுவமோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிப்பு : புலம்பெயர்ந்த மக்களே!

பொலிஸுக்குத் தகவல் கொடுப்பதை விட்டுவிட்டு யாழுக்குள் ஏன் ஒட்டுகிறீர்கள்?

:evil: :twisted:

Link to comment
Share on other sites

எட சின்னப்பு எங்கையடாப்பு நிக்கிறாய். ஓடியாந்து எனக்கும் விளக்கம் சொல்லப்பா. நான்தான் மப்பிலை செப்புறனெண்டா இஞ்சை யாழ் இiணையத்திலையும் மப்புச் செப்பாக்கிடக்குது ?

Link to comment
Share on other sites

olympics_flag_369.jpg

2012ம் ஆண்டுக்குரிய ஒலிம்பிக் போட்டியை லண்டன் மாநகரில் நடத்துவதற்காக கடும் முயற்சியில் பிரித்தானிய தொழிற்கட்சி அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டி எந்த் நாட்டில் நடக்கும் என்பது வரும் ஜூலை மாதம் 6ம் திகதி சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். இந்த ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் வாய்ப்பு பல இன கலாச்சாரத்தை கொண்டுள்ள பிரித்தானியவாவிற்கு கிடைத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல நன்மைகளை அடையலாம்.

இதனை ஆதரிக்க விரும்புவோர் கீழுள்ள இணைய தளத்திற்கு சென்று தமது ஆதரவை பதிவு செய்யலாம், அது மட்டுமன்றி உங்கள் கைதொலைபேசியிலிருந்து London என்று 82012 எனும் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமும் ஆதரவளிக்கலாம்.

http://www.london2012.org/en/support/register/

image.gif

2012ம் ஆண்டுக்குரிய சர்வதேச ஒலிம்பிக் போட்டியை நடாத்த Madrid, London, New York, Paris மற்றும் Moscow ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன. இவற்றில் கடும் போட்டி பாரிஸ் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளிடையே இருப்பதாகவும் தற்போதைய நிலவரப்படி பாரிஸ் நகரம் முன்ணணியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. நாளை சிங்கப்பூர் நகரில் நடைபெறும் அனைத்துல ஒலிம்பிக் கமிட்டி (IOC) மகாநாட்டில் யார் இந்த போட்டியை நடாத்த போகின்றார்கள் என்பது தீர்மானிக்கப்படும்.

_41267725_becks_blair203.jpg

டேவிட் பெக்கம் மற்றும் டொனி பிளேயர் சிங்கப்பூரில்

இந்த ஒலிம்பிக் போட்டியில் லண்டன் நகரத்திற்கு ஆதரவளிப்பதற்காக பிரிட்டிஷ் பிரபலங்கள் பலர் சிங்கப்பூர் சென்றுள்ளனர். அண்மையில் சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் டொனி பிளேயர் (Tony Blair) அங்கிருந்து 2012 ஒலிம்பிக் போட்டியை லண்டனில் நடாத்துவதற்குரிய நடவடிக்கைகளை முழுமூச்சாக செய்து வருகின்றார். இவருடைய முயற்சி பலிக்குமா என்பது நாளை தெரியவரும்.

Link to comment
Share on other sites

Nelson_Mandela.jpg

இந்த போட்டியை லண்டனில் நடாத்துவதற்கு முன்னைய தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியை பல இன கலாச்சார மக்கள் வாழும் லண்டனை விட பொருத்தமான ஒரு இடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

"There is no city like London. It is a wonderfully diverse and open city providing a home to hundreds of different nationalities from all over the world. I can't think of a better place than London to hold an event that unites the world. " - Nelson Mandela

Link to comment
Share on other sites

_41272319_thankyou300.jpg

2012 ஒலிம்பிக் போட்டியை யார் நடத்துவது என்பதை தீர்மானிப்பதற்காக சிங்கப்பூரியில் சற்று முன்பு நடந்த தேர்தலில் லண்டன் வெற்றீயீட்டியுள்ளது.

_41273031_blair_ap203main.jpg

G8 மகாநாடு ஸ்கொட்லாண்டில் ஆரம்பிக்கும் நிலையில் ஒலிம்பிக் போட்டியை நடாத்தும் தேர்தலில் லண்டனின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக சிங்கப்பூர் சென்றிருந்த பிரதமர் டொனி பிளேடயருக்கு தனிப்பட்ட அரசியல் வெற்றியாகவும் இது கருதப்படும்.

-----------------------------------------------------------------

2012 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த லண்டன் தேர்வு

2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்த லண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று சிங்கப்பூரில் நடந்த பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டிக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லண்டன், பாரிஸ், நியூயார்க், மாட்ரிட், மாஸ்கோ ஆகிய ஐந்து நகரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. ஆனால், இன்று முன்னாதாக , நியூயார்க், மாட்ரிட் மற்றும் மாஸ்கோ ஆகிய நகரங்கள் முதலிலேயெ பரிசீலிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன.

பின்னர் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முடிவில், பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஷாக் ரோக் , லண்டன் நகரம் 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

Thanx: BBC

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.