Jump to content

எது காதல்??


காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..??  

36 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

:mrgreen: என்ன ஒன்று முடிஞ்சவுடன் அடுத்ததுக்கு அத்திவாரமோ..??

முடிந்து விட்டால் அதை எண்ணி என்ன பயன்? அடுத்ததை தொடங்குவதில் தவறேதும் இல்லை

Link to comment
Share on other sites

  • Replies 272
  • Created
  • Last Reply

ஐயோ கடவுளே...!

சும்மா சொல்ல அதையே அரசியல் ஆக்கிட்டீங்களே! :D

அதென்ன சும்மா...எதிலும் ஒரு சமத்துவம் வேணாம்...அதுவும் இரண்டு மனிசருக்கிடையில ஏற்றுத்தாழ்வு வைச்சா என்னாகிறது...சச்சரவு வராது....ஏங்க காதல் என்ற தலைப்பில சச்சரவக் கிளப்புவான்...! :P :wink: :D

Link to comment
Share on other sites

முடிந்து விட்டால் அதை எண்ணி என்ன பயன்? அடுத்ததை தொடங்குவதில் தவறேதும் இல்லை

நல்ல கொள்கை தான் போங்க... ஒரு தடவை தான் ஒரு பரீட்சை எழுத முடியும் என்று வைப்பதற்கும் பத்துத் தடவைகள் அதே பரீட்சையை எழுத முடியும் என்று வைப்பதற்கும் இடையில் மனித மனம் எடுக்கும் நிலைப்பாடுகள் செயற்பாடுகள் வேறுபடும்...!

அதேபோற் தான் உண்மையான காதல் என்பது ஒரு தடவையே பரீட்சை எழுதுவது போன்றது...அங்கு மீள் பரீட்சைக்கு எல்லாம் இடம் கிடையாதது...! சும்மா காதல்...அதில எல்லாம் இருக்கும்...விரும்பின நேரம் விரும்பினது எழுதலாம்...! முன்னையதில பெயில் விட்டா பாதிப்பு அதிகம் பின்னையது பெயில் விட என்றே எழுதலாம்...!

எங்களுக்கு ஒரு தடவை எழுதுவதுதான் பிடிக்கும்...நல்லாத் தயார் செய்து எழுதினாப் பாஸ் தான்...இல்ல பெயில்...கோவிந்தா...! :P :wink: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினியும் பாவம் தான்...தமிழினி பெரிய பெருங்காயம் எண்டா அவாண்ட தங்கை சின்னப் பெருங்காயம்...இல்ல வெங்காயம் எண்டா தமிழினி பெரிய வெங்காயம்...அவவிண்ர தங்கை வெண்ணிலா சின்ன வெங்காயம்...அதுதானுங்களே நியாயம்..!

ஏங்க சமத்துவம் வேணும் என்றதுக்கரய் தங்கையை வெங்காயமாய் ஆக்கீடாதேங்க.. எங்களை வெங்காயமாய் நினைக்கலாம் விடலாம்.. அது அவர் அவர் இஸ்டம்.. பாவம் தங்கை அவங்க பெருங்காயமாகவே இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

Link to comment
Share on other sites

ஏங்க சமத்துவம் வேணும் என்றதுக்கரய் தங்கையை வெங்காயமாய் ஆக்கீடாதேங்க.. எங்களை வெங்காயமாய் நினைக்கலாம் விடலாம்.. அது அவர் அவர் இஸ்டம்.. பாவம் தங்கை அவங்க பெருங்காயமாகவே இருக்கட்டும்.

எவ்வளவு பெரிய தியாக மனசு அக்காவுக்கு...! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நக்கலா...?? உண்மையைச்சொன்னேன்.. :oops:

Link to comment
Share on other sites

என்ன நக்கலா...?? உண்மையைச்சொன்னேன்.. :oops:

ஏங்க கோவிக்கிறீங்க...இதற்காக தங்கை வந்து அவோட் தருவா வாங்கிக்கோங்க...! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

தேர்தல் நடத்திக் கொண்டு தேர்தல் என்றால் என்ன என்று கேட்பது போல...இருக்கு...! ஏன் தமிழினி..இது தொடர்பாக ஏதாவது விளக்கம் எதிர்பார்க்கிறீங்களோ...அதை கள உறுப்பினர்களிடம் நேரடியாக் கேக்க வேண்டியதுதானே...சுத்தி மாத்தி மழுப்பி....லூசுத்தனமா...அவசியமா.

..?! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேர்தல் நடத்திக் கொண்டு தேர்தல் என்றால் என்ன என்று கேட்பது போல...இருக்கு...! ஏன் தமிழினி..ஏதாவது விளக்கம் எதிர்பார்க்கிறீங்களோ...அதை கள உறுப்பினர்களிடம் நேரடியாக் கேக்க வேண்டியதுதானே...சுத்தி மாத்தி மழுப்பி....லூசுத்தனமா...அவசியமா.

..?!

_________________

என்னங்க இப்படி சொல்லீப்போட்டீங்க.. காதல் என்றதைப்பற்றி மற்றவங்களின் கருத்தை தெரிஞ்சு கொள்வம் என்று கேட்டம்.. அதற்கு ஒரு வரையறை.. அப்படி இப்படி என்று ஏதாவது இருக்கா என்று.. களத்தில இருக்கிற பெருந்தகைகள் தான் சொல்லனும்.. நம்ம மாதிரியாக்களுக்கு.. :oops: .

Link to comment
Share on other sites

என்னங்க இப்படி சொல்லீப்போட்டீங்க.. காதல் என்றதைப்பற்றி மற்றவங்களின் கருத்தை தெரிஞ்சு கொள்வம் என்று கேட்டம்.. அதற்கு ஒரு வரையறை.. அப்படி இப்படி என்று ஏதாவது இருக்கா என்று.. களத்தில இருக்கிற பெருந்தகைகள் தான் சொல்லனும்.. நம்ம மாதிரியாக்களுக்கு.. :oops: .

காதலின் அடிப்படைகள் என்று காரணம் போட்டுத் தேர்தலும் நடத்திக் கொண்டு இப்படிக் கேள்வியும் கேட்டோடன...பயந்தே போட்டம்..! என்னதான் காதல் பெருந்தகைகள் இருந்தாலும் உங்கள மாதிரி காதலடிப்படைகள் விளங்கினாக்கள் இருக்கேலுமோ எண்டது கேள்விக் குறிதான்...! எதுக்கும் பாப்பம் மற்றவையின்ர கருத்துக்களையும்...! குருவிகளுக்கு உதுகள் பற்றி அங்கின இங்கின பாத்துக் கேட்டறிஞ்சதுகள் தான் தெரியும்...விளக்கமா எல்லாம் தெரியாது...! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்க தேர்தல் அது இது எங்கிறீங்க.. என்னங்கா எங்களை பெருந்தகைகளாக்கிட்டீங்க அதுவும் காதலில.. :x

Link to comment
Share on other sites

பாவம் தமிழினிய வெங்காயம் எண்டிட்டாங்க..! :wink: :P :D

பாவம் வெங்காயம்.

:D :P :D :P

Link to comment
Share on other sites

அன்பு

55% [ 5 ]

அறிவு

0% [ 0 ]

அழகு

11% [ 1 ]

அந்தஸ்த்து

11% [ 1 ]

அறிமுகம்

11% [ 1 ]

ஏனையவை

11% [ 1 ]

அறிவு என்பதற்கு யாருமே வோட் போடேல்லை. அப்ப காதலுக்கு

அறிவு தேவையில்லை என்று உறுதியாயிட்டுது. :P

Link to comment
Share on other sites

ஒரு நிலையில இரண்டும் கசக்குமாம்...கத்தரிக்காயில சூத்தை இருக்கிறது தெரியாதது போல...காதல் வரேக்க சூத்தை தெரியாது...முத்தினாப்பிறம் தெரியுமாம்...! முத்தின கத்தரிக்க கறிக்கும் உதவாது...காதலும் முத்திப் பழுத்திட்டுதெண்டா சுவை இழந்து போயிடுமாம்...என்று பெரியவங்க சொல்லுறாங்க...நமக்குத் தெரியாதப்பா...சொன்னதச் சொன்னம்...! :P :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:

அட அப்ப கருத்துக்கணிப்பிலை இந்த கேள்வியையெல்லோ போட்டிருக்கவேணும்.. :lol:

அதுக்குள்ள:..

காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது தானே மண்ணங்கட்டி கத்திரிக்காய் இந்த இரண்டும் அடிக்கடி எல்லாத்திற்கும் பயன்படுத்துவார்கள். காரணம் தான் தெரியல.. காதலுக்கு மட்டும் அல்ல எல்லாத்திற்கும் தான் பயன்படுத்துவார்கள்.. :P

Link to comment
Share on other sites

காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்மந்தம்? :?: :?:

இரண்டும் க வரிசையில் ஆரம்பிக்கின்றன. இது கூடவா தெரியவில்லை. :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:?:

பாவம் தங்கை

வம்புக்கு இழுக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏங்க காதல் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..??

காதல் உருவாகுவது மூளையில்தான். எதிர்பாலரின் ஈர்ப்பால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் காதல் உருவாகுவதாதகவும் காமமே இதற்கு அடிப்படை என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

காதல் உருவாகுவது மூளையில்தான். எதிர்பாலரின் ஈர்ப்பால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் காதல் உருவாகுவதாதகவும் காமமே இதற்கு அடிப்படை என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார்.

அந்த எழுத்தாளரிடம் கேளுங்கள் அன்பு, பாசம், நேசம் இவைகள் எங்கிருந்து கிளம்புதாம் என்று...அதெங்க அவற்ற காலுக்காலையே...!

எல்லோருக்கும் தெரியும் மூளையில் இருந்துதான் உணர்வுகள் பிறக்கின்றன, உணரப்படுகின்றன என்பது...கண் பார்த்தாலும் உணராது மூளைதான் உணர்வது..பார்ப்பதை கடத்துவதும் உணர வைப்பதும் இரசாயனம் தான்.....பார்வைகள் எப்படி ஒருவருக்கு ஒருவர் மாறுபட வாய்ப்பிருக்கோ..அதேபோல் மூளைக்கு மூளை உணரப்படும் உணர்வுகளின் தன்மையிலும் வேறுபாடுகள் இருக்கு அதற்கு சந்தர்ப்பமும் அதிகம்...!

ஆண் பெண் காதல் என்பது பாலீர்ப்பு சம்பந்தப்பட்ட அன்புமிகுந்த காமம் கடந்தும் இருக்கலாம்... இல்லை...அன்பு மிகுந்து காமம் கலந்தும் இருக்கலாம்...காமம் மிகுந்து அன்பு கலந்தும் இருக்கலாம் அது அந்தந்த மூளையில் நிகழும் சிந்தனைக்குரிய இரசாயன மாற்றங்களின் அடிப்படையில் தங்கி இருக்கிறது...! எந்த இடத்திலும் அன்பில்லாமல் காதல் இல்லை...! அன்புக்கு அறிவு...அதாவது புத்தகம் படிக்கிற அறிவு தேவையில்லை...அன்பு மனிதனுக்கு மட்டுமல்ல...மற்ற உயிரிகளிடத்தும் அவற்றிற்கிடையே பரிமாறப்படுவதுதான்...அவற்றிற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:?:

ஆ சும்மா! :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.