Jump to content

அன்பின் அடிக்குறிப்பு.


Recommended Posts

அன்பின் அடிக்குறிப்பு....(7)

அன்பின் அடித்தளங்கள் எங்கே எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன என்று ஒரு ஆய்வு செய்வோமா..??

1. நம்பிக்கை

2. பயன்பாடு

3. காமம்

இந்த 1, 2 எமக்குப் புரியுது ஆனால் 3 வது கொஞ்சம் உதைக்குது.

காரணம் ..நாம் காமம் என்பதை பாவச் செயலாக காலங்காலமாக ஏற்றுக்கொண்டிருப்பதுதான்.

தஸ்லீமா க்கு ஏன் இந்தியாவில் அகதி அந்தஸ்து கொடுக்கவில்லை?????

தஸ்லீமாவின் எழுத்துக்கள் பங்களா தேசின் காமத்தையே கேள்விக்குள்ளாக்கின.

ஒரு மானிடன் அன்பு செலுத்துவதற்கும் காமத்தைப் புரிந்து கொள்வதற்கும் நிறைய நிறையவே தொடர்புண்டு.

ஓஸோவை ஒரு காமக் குருவாக சித்தரிப்பதில் ஏகாதிபத்திய அரசுகளுடன் சேர்ந்து.. எல்லா ஊழல் பேர்வழிகளும் பங்கு கொண்டார்கள்.

ஆனால் அவர் சொன்ன கருத்துகள் ..

குறிப்பாக,

உடலாலும் அன்பைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது...

காமம் என்பது மலையேறுவதல்ல, சமுத்திரத்தினுள் நீந்துவது என்பது...

மனநிலைத் தியானத்தைவிட உடநிலைத் தியானமே முக்கியம் என்பது..

இப்படி நிறைய.

நான் இங்கே சொல்லவருவது இதுதான்.

அன்பிற்கும் காமத்திற்கும் தொடர்புண்டு.

அது எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் தெளிவாக அறிதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

அன்பின் அடிக்குறிப்பு...(8)

சென்றமுறை காமத்திற்கும் அன்பிற்கும் நிறையவே தொடர்பிருக்கு என்று பார்த்தோம்.

ஆம்.

நிறைய நிறையவே தொடர்பிருக்கு.

ஆனால் எமது கலாச்சார நிர்ப்பந்தங்களால் அதை மூடி மறைக்கிறோம்.

ஒரு முறை ஒரு கவிஞர் எழுதினார்.(கலாப்ரியா/முழுக்கவிதைத் தொகுப்பு)

...நீ அழகாயில்லாததால் எனக்கு

தங்கையாகிவிட்டாய்...!

என்று.

இதை ஒரு உதாரணமாய் எடுத்து ஆய்வு செய்வோம்.

அவள் அழகாய் இருந்தால்...காதலி, நண்பி..,,,,இன்னும் என்னவோ ...!

அழகுக்கும்...உறவுமுறைக்கும் என்ன தொடர்பு என்பதுதான் பிரச்சினை.

தங்கை, காதலி, நண்பி.//////////////////////////இவர்களுடன் அன்பைத்தானே பகிரப் போகிறோம்.

அப்புறம் ஏன் உடலழகு பற்றிக் கவலைப்படுகிறோம்?

நான் உனக்காக என் எல்லாவற்றையுமே தருவேன், என்று அடிக்கடி காதல் வசனங்கள் கேட்டிருப்போம்.

எல்லாம் என்றால் என்ன?

உடல்/பொருள்/ஆவி.

சரி இந்த மூன்றையும் தனித்தனி பிரித்து உடலன்பு, பொருளன்பு, ஆவியன்பு(இதயம்) என்று சொல்ல முடியுமா?

மேலும்,

எனக்கு வயதோ உடலோ அழகோ முக்கியமில்லை அன்பு ஒன்றே போதும்.

என்ற கூற்றினை உற்று நோக்கிப் பார்த்தால்...........அது சாத்தியமானதாகவும் அதே நேரம் சாத்தியமில்லாமலும் தோன்றும்.

இந்த மாயையைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உடல் ..பொருள்...இதயம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணந்தே இருக்கிறது.

யதார்த்த உலகில் எமது இருப்பு இந்த மூன்றுடனும் ஒரு சிக்கலான, பின்னலான வடிவமைப்பில் பிணந்துள்ளது.

காமத்தைப் பற்றிய புரிதல், அன்பை ஆழமாகப் புரிவதற்கு எமக்கு உதவும்.

..............உங்கள் மனங்களில் ஒரு லயம் இல்லை. அலங்கோலமாகக் கிடக்கின்றன. எதுவுமே அங்கே நேராக இல்லை.

ஒவ்வொன்றும் சிக்கலான சந்தாக இருக்கிறது. ஒரு புதிராக இருக்கிறது.

எது என்னவாக இருக்கிறதென்று உனக்குதெரிவதில்லை. எதை ஏன் செய்கிறோம் என்பது தெரியவில்லை......... {ஓசோ..தம்ம பதம். பக்.409}

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.