Jump to content

துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு செவ்வி வழங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசன் அவர்களிடம் செய்தியாளர் ஒருவர் கருணாநிதியின் அஞ்சலிக் கவிதை தொடர்பில் ஜெயலலிதா கூறி வரும் கருத்துக்கள் குறித்து கேட்ட போது அவர் அது குறித்து நேரடியாகப் பதிலிறுக்காமல் தமிழகமெங்கும் எமது போராட்டத்துக்கு ஆதரவலை பெருகி வருகிறது என்பதை மட்டும் குறிப்பிட்டிருந்தார்..!

இதுதான் விடுதலைப்புலிகளின் தமிழகம் தொடர்பான நிலைப்பாடு என்பதை அது தெளிவாக இனங்காட்டியது.

அவர்கள் அரசியல்வாதிகளின் பத்திரிகையாளர்களின் தனிப்பட்ட நிலைகளுக்கு முக்கியமளிக்காமல் ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆதரவு என்பதைத்தான் கோரி நிற்கின்றனர்.

சோவின் எழுத்துக்களுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பது வேறு... அதை வைச்சு வழமையான பார்பர்னிய உச்சாடணம் செய்து தமிழக ஆதரவு தளத்தை கூறிடுவது.. தமிழ் தேசிய எழுச்சிக்கு விரோதமான செயல்.

ஜெயலலிதா பார்பர்னிச்சி.. அவர் அப்படித்தான் பேசுவார்.. அவரை கொழுத்துவோம் என்று நடேசன் அண்ணா பதில் சொல்லுவார் என்று எதிர்பார்த்துக் கேட்ட கேள்வியாக அமைந்திருக்கத் தக்கதாக இருந்தாலும் கூட...நடேசன் அண்ணா அளித்த மிகச் சாதுரியமானதும் தமிழக மக்கள் மற்றும் தமிழீழ மக்கள் மீதான அக்கறையுடன் கூடிய பதிலானதே முக்கியமானது. அதற்குத்தான் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தமிழ்செல்வன் அண்ணா தொடர்பான சோவின் எழுத்துக்களைப் புறக்கணிப்பது வரவேற்கத்தக்கதுடன் சோவுக்கும் ஒரு உறுதியான செய்தி அனுப்பப்படுவதுமாகிறது.

ஆனால் அதை சிலர் தமது பார்பர்னிய - பிராமண எதிர்ப்பு பிரச்சாரங்களில் *** கலந்தடித்து.. ஆகா ஓகோ என்பது தமிழீழ மக்கள் எதிர்பார்க்கும் தமிழகத்தின் சாமாணிய மக்களின் ஆதரவையும் அரசியல்வாதிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளையும் செய்ய உதவியாக அமையாது. மாறாக தமிழகத்தில் உள்ள சமூக பிளவுத்தளங்களூடு தமிழக ஆதரவுத்தளமும் பிளவுபடவே வகை செய்யும்.

எனவே இது தொடர்பில் சோவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து துக்ளக்கை எரிக்கிறதென்று ஆதரவு தளத்தை சிதைக்காத வகையில் நடந்து கொள்வது என்பது முக்கியமானது. சாமாணிய மக்களுக்கு இவற்றை தெளிவாகச் சொல்வதும் முக்கியமானது..!

தமிழக மக்கள் ஒன்றைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.. புலம்பெயர்ந்த தமிழர்களின் எல்லாச் செயற்பாடுகளுக்கும் விடுதலைப்புலிகள் காரணம் என்று நீங்கள் எண்ணிடக் கூடாது. விடுதலைப்புலிகள் மிகவும் உறுதியாக தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவையே நாடி நிற்கின்றனர் ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் என்பதை அவர்கள் பல தடவைகள் சொல்லி விட்டனர். எனவே சோவின் துக்ளக் எதிர்ப்பை பார்பர்னிய உச்சரிப்புடன் ஒருங்கிணைத்து பிராமண சமூகத்துக்கு எதிராக குரலாக்க சிலர் செய்யும் முயற்சிகளுக்கும் சோ தமிழ்செல்வன் அண்ணா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்து செயற்பட வேண்டிக் கொள்வதே எமது இக்கருத்தின் நோக்கம்..!

*** பெரியார் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

-----------------

இணையவன் நான் எனது கருத்தில் நீங்கள் குறிப்பிட்டது போல பெரியார் என்று எழுதவில்லை. எனது தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு அமைய நான் அவரை அப்படி மதிக்கவும் இல்லை. ஈ வெ ராமசாமி என்றே குறிப்பிட்டிருந்தேன். எனது கருத்தின் கீழ் நான் எப்படிக் குறிப்பிடுறேனோ அப்படியே குறிப்பிடுங்கள். உங்களின் தனிப்பட்ட நிலைகளை திருத்தம் என்ற போர்வையில் எனது கருத்துள் தயவுசெய்து திணிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோவின் எழுதிய தலைப்பிற்காக துக்ளக் இதழின் பிரதிகள் கொழுத்தப்பட்டமையை வன்மையாக கண்டிக்கவேண்டும். சோ இராமசாமி ஐயருக்கு தனது கருத்துக்ளை எழுதுவதற்கான சுதந்திரத்தில் தலையிடுதல் எந்த வகையிலும் நியாயமாகாது. வேண்டுமானால் அந்த சஞ்சிகையை வாங்கி படிப்பதை நிறுத்தலாம். அல்லது அந்த சஞ்சிகையை இறக்குமதி செய்து விற்பனை செய்வதை அதனை விற்றுவரும் வர்த்தகர்கள் நிறுத்தியிருக்கலாம். துக்ளக் சஞ்சிகைக்கு வாசகர்கள் இருப்பதன் காரணமாகவே அது இறக்குமதி செய்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலச்சுவடு, உயிர்மை போன்ற இலக்கிய சஞ்சிகைகளுக்கு இல்லாத வாசகர் தளம் துக்ளக் சஞ்சிகைக்கு இருப்பதே இந்நிலமைக்கு காரணம். தன்னுடைய சொந்த இனத்தவர் ஏளனப்படுதப்படுவதை சுவைக்கும் தன்மை கொண்டவர்கள் நம்மத்தியில் இருப்பதே இதற்கு காரணம்.

அரசியல்வாதிகளை கேலி செய்வதே துக்ளக்கின் முதன்மை விடயமாக இருக்கிறது. இதனை சுவைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் இவற்றுக்கு திரு. சோ. ஐயர் தீனி போடுகிறார். பிரித்தானியாவில் வெளிவரும் பிறைவேற் ஐ என்ற வார சஞ்சிகை இது போன்றதே. அதற்கும் பரந்து பட்ட வாசகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடயங்களை பிரசுரிப்பதில்லை. ஆனால் திரு.ஐயர் தமிழ்தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரசுரித்து வருகிறார்.

இனி, திராவிட இயக்கங்கள் - பிராமணியம் விடயமாகப் பார்ப்போம்.

தமிழ்தேசியத்தின் ஆதரவுத்தளம் திராவிடஇயக்கஙகளின் தொண்டர்கள் மத்தியிலிருப்பதும், அதற்கு எதிரானதளம் பாரப்பனர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது எனபதனை உணரந்து கொள்ள சவர அலகை ஒத்த கூர்மதி தேவையில்லை. சாதாரணமானவர்களாலேயே உணரந்து கொள்ளலாம். பார்ப்னர்களுக்கு விடுதலைப்புலிகளை எதிர்ப்பதற்கு ஒரே ஓரு காரணம் இருக்கலாம். அதாவது ராஜிவ் காந்தி என்ற அரை பிரமாணன் (தந்தை பார்சி, தாய் பிராமணி) கொலையில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதான வலுவான சந்தேகம்.

இதனைத் தவிர்த்தால் அவர்கள் ஏன் விடுதலைப்புலிகளை எதிர்க்கவேண்டும்?

திராவிட இயக்கத்தினரையோ. தந்தை பெரியாரையோ அவர்களது கொள்கைகளையோ விடுதலைப்புலிகள் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. அதுபோல் பிராமணியத்தை அதன் தலைவர்களையோ அவர்கள் எதிர்த்து கருத்துச் சொன்னதில்லை.

இருந்தாலும் தமிழ்த்தேசியத்தின் எழுச்சியை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவதில்லை. அதனால் விடுதலைப்புலிகளை எதிர்க்கிறார்கள்.

(சோ என கோமாளி நடிகராக தெரிந்த இராமசாமிஐயரை 1981 ல் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன் அப்போது அவர் விஸ்வ கிந்து பரிசத் என்ற அமைப்பின் சார்பில் அங்கு வந்து சில் இடங்களில் உரையாற்றினார். வி. எச்.பி அமைப்பு என்பது ஒரு இந்து அடிப்படைவாத அமைப்பு என்பதை நான் அப்போது அறிந்;திருக்கவில்லை.)

jkpo;Njrpaj;jpd; MjuTj;jsk; jpuhtpl,af;fqfspd; njhz;lu;fs; kj;jpapypUg;gJk;> mjw;F vjpuhdjsk; ghug;gdu;fshNyNa cUthf;fg;gl;Ls;sJ vdgjid czue;J nfhs;s rtu myif xj;j $u;kjp Njitapy;iy. rhjhuzkhdtu;fshNyNa czue;J nfhs;syhk;. ghu;g;du;fSf;F tpLjiyg;Gypfis vjpu;g;gjw;F xNu XU fhuzk; ,Uf;fyhk;. mjhtJ uh[pt; fhe;jp vd;w miu gpukhzd; (je;ij ghu;rp> jha; gpuhkzp) nfhiyapy; tpLjiyg;GypfSf;F njhlu;G ,Ug;gjhd tYthd re;Njfk;.

,jidj; jtpu;j;jhy; mtu;fs; Vd; tpLjiyg;Gypfis vjpu;f;fNtz;Lk;?

jpuhtpl ,af;fj;jpdiuNah. je;ij ngupahiuNah mtu;fsJ nfhs;iffisNah tpLjiyg;Gypfs; ntspg;gilahf Mjupf;ftpy;iy. mJNghy; gpuhkzpaj;ij mjd; jiytu;fisNah mtu;fs; vjpu;j;J fUj;Jr; nrhd;djpy;iy.

,Ue;jhYk; jkpo;j;Njrpaj;jpd; vOr;rpia mtu;fshy; rfpj;Jf; nfhs;s Kbatjpy;iy. mjdhy; tpLjiyg;Gypfis vjpu;f;fpwhu;fs;.

(Nrh vd Nfhkhsp ebfuhf njupe;j ,uhkrhkpIaiu 1981 y; aho;g;ghzj;jpy; re;jpj;Njd; mg;NghJ mtu; tp];t fpe;J guprj; vd;w mikg;gpd; rhu;gpy; mq;F te;J rpy; ,lq;fspy; ciuahw;wpdhu;. tp. vr;.gp mikg;G vd;gJ xU ,e;J mbg;gilthj mikg;G vd;gij ehd; mg;NghJ mwpe;;jpUf;ftpy;iy.)

Link to comment
Share on other sites

தன்னுடைய சொந்த இனத்தவர் ஏளனப்படுதப்படுவதை சுவைக்கும் தன்மை கொண்டவர்கள் நம்மத்தியில் இருப்பதே இதற்கு காரணம்.

ஏளனம் செய்யப்படுவது மட்டுமல்ல சொந்த இனத்தை ஏளனம் செய்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். அதற்கும் மேலாக சொந்த இனம் கொல்லப்படும் போது அதை ரசித்து ஊக்கப்படுத்துபவர்களும் இருக்கின்றார்கள்.

உதாரணமாக

இலங்கை அரசு படுகொலைகளை செய்யும் போது அதை திரிவுபடுத்தி செய்திகளை வெளியிடுபவர்கள்

படுகொலைகளை கண்டித்து புலம் பெயர் மக்கள் ஊர்வலங்கள் நடத்தும் போது அதை எதிர்த்து நஞ்சுத்தனமாக கருத்துக்களை வெளியிடுபவர்கள்

இலங்கை அரசின் படுகொலைகளை மூடிமறைக்கப் பாடுபடுபவர்கள் என பல காரியங்களை செய்பவர்கள் இருக்கின்றார்கள்

இதற்க்கு ஒரு எடுத்துக்காட்டாக வங்காலையில் ஒரு குடும்பம் சிங்கள இன வெறியர்களால் கோரமாக படுகொலை செய்யப்பட்ட தை தொடர்ந்து அந்த கிராம மக்கள் தமிழகத்துக்கு அகதியாக போனார்கள். அவ்வாறு அகதியாக போன தமிழர்கள் பிபிசி தமிழோசைக்கு பேட்டி கொடுக்கையில் ராணுவத்தின் அட்டுளியங்களுக்கு பயந்து நாட்டை விட்டு வந்ததாக சொன்னார்கள். இந்த மக்கள் கருத்தை தமிழகத்தில் இருக்கும் சந்திரகாசன் என்னும் ஈழத்தமிழன் அவர்கள் சொல்வதில் உண்மையில்லை. புலிகளின் ஆட்சேர்ப்பிற்கு பயந்தே இவர்கள் வந்தார்கள் என்பதே உண்மை என்று கருத்துரைத்தார். இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன? சிங்களம் படுகொலைகளை அரங்கேற்றும் போது அதை நாங்கள் திரிவுபடுத்துவோம் என்று சிங்களத்தின் இனப்படுகொலைகளை ஊக்குவிப்பதே ஆகும்.

இன்னும் ஒரு சம்பவத்தை சொல்வதானால் புலம் பெயர் வாழ் மக்கள் அதே படுகொலைக் காட்சிகளை தாங்கிய பதாகைகளை தாங்கி நியாயம் கேட்டு போராட்டங்கள் செய்த போது அந்தப்படுகொலைகளை புலிகள் செய்ததாக திரித்தார்கள். படுகொலை நடந்த அடுத்தநாள் பிபிசி தமிழோசை பேட்டி கண்ட போது அந்த பகுதி மக்களும் கத்தோலிக்க ஆயரின் கருத்துக்களும் அந்த இடத்தில் எடுக்கப்பட்ட தடயங்களும் சிங்கள காடைகள் தான் படுகொலை செய்தது என்பதை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இருந்தும் மனிதாபிமானமுள்ள புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தை சிதைக்க முற்படுவதின் மூலம் கொலைகளை ரசித்து ஊக்கப்படுத்துபவர்கள் இருக்கின்றார்கள்.

இனம் என்ற உணர்வை மீறிய தனிமனித உளவியல் நோய், மதப்பற்று, புத்தியீவிகள் என்ற கர்வம் உயர்குடிகள் என்ற மமதை போன்ற பல காரணிகள் இதற்கு காரணம்.

இனி, திராவிட இயக்கங்கள் - பிராமணியம் விடயமாகப் பார்ப்போம்.

தமிழ்தேசியத்தின் ஆதரவுத்தளம் திராவிடஇயக்கஙகளின் தொண்டர்கள் மத்தியிலிருப்பதும், அதற்கு எதிரானதளம் பாரப்பனர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளது எனபதனை உணரந்து கொள்ள சவர அலகை ஒத்த கூர்மதி தேவையில்லை. சாதாரணமானவர்களாலேயே உணரந்து கொள்ளலாம். பார்ப்னர்களுக்கு விடுதலைப்புலிகளை எதிர்ப்பதற்கு ஒரே ஓரு காரணம் இருக்கலாம். அதாவது ராஜிவ் காந்தி என்ற அரை பிரமாணன் (தந்தை பார்சி, தாய் பிராமணி) கொலையில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதான வலுவான சந்தேகம்.

பார்பனர்கள் ஈழவிடுதலைப்போராட்டத்தை எதிர்ப்பதற்கு திராவிடர்கள் ஈழவிடுதலைப்போராட்டத்தை ஆதரிக்கும் நிலையோ அல்லது ராஜீவ் கொலையோ காரணம் என்பதற்கு அப்பால் பல உண்மைகள் இருக்கின்றது.

ஈழவிடுதலைப்போராட்டத்தில் மக்கள் சாதி வர்க்க வேறுபாடுககை கடந்து ஒன்றிணைந்துள்ளனர். இந்திய விடுதலைப்போர் மட்டுப்படுத்தப்பட்ட உயர்குடிகளின் கைகளில் நடந்தது. தாள்த்தப்பட்டவர்கள் இந்திய சுதந்திரப்போரில் பிரதான பங்கு வகிக்கவில்லை. தாள்த்தப்பட்டவர்கள் அதிகாரவர்க்கத்திடம் இருந்து விடுதலை வேண்டி போராடினார்கள்.

இருப்பில் இருந்த மனுதர்ம விதிகளில் நெகிழ்வுப்போக்கு கூட காட்டாமல் நடந்தது தான் இந்திய விடுதலைப்போராட்டம்.

பிரிட்டிஸ் அதிகாரத்திடம் இருந்து இந்தியாவின் அதிகாரவர்கத்திடம் இந்தியா ஒப்படைக்கப்பட்டது. இதுவே இந்திய சுதந்திரம். இன்றும் தாள்த்தப்பட்ட மக்கள் தீண்டத்தகாதவர்களே இந்தியாவில். இன்றுவரை ஆட்சி அதிகாரம் உயர்குடியின் கட்டுப்பட்டிலே இருக்கின்றது.

ஈழவிடுதலைப்போராட்டத்தின் போக்கு அவ்வாறு இல்லை என்பது வெளிப்படையானது. சுதந்திர ஈழம் நோக்கிய போராட்டம் சமத்துவமான மக்கள் வாழ்வை நோக்கி நகர்கின்றது. இந்த சமத்துவம் இந்தியாவில் ஒரு முன்னுதாரணமாக அமைந்தால் இந்தியாவின் அதிகாரவர்கம் தனது அதிகாரம் பறிபோகலாம் அல்லது பங்குபோடப்படலாம் என்று கருதுகின்றது. இதுவே பிராமணர்களின் எதிர்ப்பின் அடிப்படை.

இந்திய என்ற தேசத்தின் பாதுகாப்பு நலன்களுக்கும் சரி (இலங்கை இந்தியவுக்கு எதிரான நாடுகளின் நட்புறவை ஆழமாக பேணும் ஒரு நாடு) இந்தியாவின் சமத்துவத்துக்கும் சரி ஈழத்தின் அமைவு சாதகமானது என்பது உண்மையாயினும் அது இந்தியாவின் அதிகாரவர்க்க நலன்களுக்கு பங்கம் என்ற சிந்தனையே ஈழபோராட்டத்தில் பிராமணியத்தின் கடும் எதிர்ப்பிற்கு அடித்தளமிடுகின்றது. கணிசமான அளவு ஈழத்து உயர்குடி புத்தியீவிகளின் எதிர்பும் இன அழிப்பை பற்றிய அக்கறை இன்மைக்கும் இது காரணமாகவும் அமைகின்றது.

Link to comment
Share on other sites

இவர் விடுதலைப்புலிகளில் மட்டுமல்ல முன்பு போராடிய அனைத்து இயக்கங்களையுமே விரும்பாதவர். 83 களில் இந்திய மண்ணில் பயிற்சி முகாம்கள் இருந்த போது இவர் ஜே ஆரை பேட்டி காணும்போது பயிற்சி முகாம்கள் பற்றிய விபரங்களை ஜே ஆருக்கு கொடுத்தவர்.

இவர்கள் ஒருமைப்பாடு இந்திய தேசியம் பற்றி பேசுவது எல்லாம் புலுடா

இந்தியா பற்றிய இரகசியங்களை விற்றவர்களை பார்த்தால் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான்.

இவரும் போட்டுக்கொடுத்தவர்தான்

ஒருமையில் எழுதப்பட்டவை திருத்தப்பட்டுள்ளன. - இணையவன

Link to comment
Share on other sites

இதற்க்கு ஒரு எடுத்துக்காட்டாக வங்காலையில் ஒரு குடும்பம் சிங்கள இன வெறியர்களால் கோரமாக படுகொலை செய்யப்பட்ட தை தொடர்ந்து அந்த கிராம மக்கள் தமிழகத்துக்கு அகதியாக போனார்கள். அவ்வாறு அகதியாக போன தமிழர்கள் பிபிசி தமிழோசைக்கு பேட்டி கொடுக்கையில் ராணுவத்தின் அட்டுளியங்களுக்கு பயந்து நாட்டை விட்டு வந்ததாக சொன்னார்கள். இந்த மக்கள் கருத்தை தமிழகத்தில் இருக்கும் சந்திரகாசன் என்னும் ஈழத்தமிழன் அவர்கள் சொல்வதில் உண்மையில்லை. புலிகளின் ஆட்சேர்ப்பிற்கு பயந்தே இவர்கள் வந்தார்கள் என்பதே உண்மை என்று கருத்துரைத்தார். இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன? சிங்களம் படுகொலைகளை அரங்கேற்றும் போது அதை நாங்கள் திரிவுபடுத்துவோம் என்று சிங்களத்தின் இனப்படுகொலைகளை ஊக்குவிப்பதே ஆகும்.

இவர் தந்தை செல்வாவின் மகனா :icon_idea:

Link to comment
Share on other sites

அடுத்த நாட்டுக்காரன் எம்மைப் பற்றி எழுதியதற்கு அந்தப் பத்திரிகைகளைக் கொளுத்தியவர்கள், தமிழீழத்தைச் சேர்ந்த தமிழர்கள் புலிகளுக்கெதிராகவும் தமிழினத்திற்கெதிராகவும் செயற்படுபவர்களையும் எரிக்கலாமே! எமது இனத்தைச் சேர்ந்தவர்களையே எம்மால் திருத்த முடியவில்லை. ஆனால் மற்றநாட்டுக்காரன் எம்மைப் பற்றி ஏதாவது சொன்னவுடனே கொதித்தெழுந்து விடுவார்கள்.

தமிழகத்தில் இருந்து வரும் எத்தனையோ நாளிதழ்கள் பிடிகேடியர் தமிழ்ச்செல்வன் அண்ணாவின் மறைவையொட்டி பல கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரித்து வருகின்றன. அவற்றையிட்டு நாம் மகிழ்ச்சியடையவேண்டும். 'துக்ளக்' பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையால், தமிழகத்தில் இருக்கும் ஆதரவு எமக்குக் குறையப்போவதில்லை. தமிழ்நாட்டில் அரசியலில் இருப்பதே மிகவும் சிக்கலான விடயம். இந்தியாவில் அரசியல் என்பது நாம் நினைத்தும்கூடப் பார்க்க முடியாத ஒரு சாக்கடை என்றுதான் சொல்லவேண்டும். அதற்குள் இருந்து கொண்டு எமக்கு தொடர்ந்தும் குரல் கொடுப்பவர்களை நாம் மதிக்கவேண்டும். அதுமட்டுமின்றி, ஈழவிடுதலைப் பிரச்சாரங்களைப் பொறுத்தவரை இப்போது மிகவும் அதிகமாகத்தான் இருக்கிறது. கலைஞர் குடும்பத்தினர்கூட ஈழவிடுதலையைப் பற்றிப் பேசுகின்ற அளவிற்கு வந்திருப்பது வரவேற்கத்தக்க விடயம். இப்படியான நிலைமையில் சோ போன்ற ஓரிருவரால் அதற்குப் பாதகம் வருவதற்குச் சாத்தியம் இல்லை. ஆனால் எம்மவர்கள்தான் அதனைப் பெரிதுபடுத்துகிறார்கள். துக்ளக் பத்திரிகையை எரித்ததன் மூலம், எம்மை நாமே தாழ்த்திக் கொண்டோம் என்றுதான் சொல்லவேண்டும். நாய் குரைக்குது என்பதற்காக நாமும் குரைக்கலாமா? அப்படிக் குரைத்தோமானால் அதற்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துக்ளக் பத்திரிகையை தீயிட்டவர்கள் தங்கள் முகம்காட்டியே செய்திருக்கிறார்கள். முகமூடிக்குள் மறைத்ந்திருந்து செய்யவில்லை. இச்செயலைப் புரிந்தவர்களில் ஒருவரை புலம்பெயர் சமூகம் நன்கு அறியும் பாரீசில் முதல் புத்தகக் கடை தொடங்கியவர். வாரப்பத்திரிகை வெளியிடுபவர்.

பத்திரிகை நடத்தும் ஒருவர் சாதாரணமாக பத்திரிகையைத் தீயிட முன்வரமாட்டார்.

ஆனால் இது நடந்திருக்கிறது.... இதிலிருக்கும் அகமன வெளிப்படுதலைத்தான் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

தமிழ்ச்செல்வன் அவர்களின் இழப்பு அனைத்துத் தமிழர்களையும் பாதித்திருக்கிறது. இதனை உலகெங்கும் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்வுகள் பறைசாற்றின. இழப்பு வீட்டிலும் நஞ்சைக் கக்கும் எழுத்தை சோ எழுதி வெளியிட்டதால் தமிழ் வாசகர்கள் கிளர்ச்சியுற்றதில் என்ன வியப்பு இருக்கிறது?

இது ஒருபுறம் இருக்கட்டும் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். (தேவை கருதி பின்வரும் செய்தியை மீள்பதிவிடுகிறேன்)

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் கோபியில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வைக்கப்பட்டிருந்த பதாகையை அகற்ற முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழின உணர்வாளர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=31276

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமச்சீரான விவாதம் ஒன்று நடக்கிறது. யாழ் களத்தின் ஆரோக்கியத்தைக் குறித்து நிற்கிறது இவ்விவாதம். சோவின் கருத்தை மட்டும் தான் எதிர்க்க வேண்டும், ஒட்டு மொத்தப் பத்திரிகையையோ அல்லது அது பிரதிநிதித்துவம் செய்யும் சமூகத்தையோ புண்படுத்தக் கூடாதாம். நாங்கள் உங்களைச் சொல்லவில்லை என்று தலை சொறிய வேண்டுமாம். யாருக்கும் கருத்தைச் சொல்கிற உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு எல்லையும் இருக்கிறது என்பது தான் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையான பாவனை விதியாகும். தமிழ்ச் செல்வன் எனும் போது ஈழத்தமிழர்கழுக்கு என்ன தோன்றுகிறது, அவரது மறைவு ஒரு ஈழத்தமிழனின் மனதில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது போன்ற கேள்விகள் துக்ளக் எரிப்பை வியாக்கியானம் செய்யும் போது கருத்தில் எடுக்கப் பட வேண்டியவையாகும். தமிழ்த் தேசியத்திற்காகப் பணியாற்றும் அன்பர்கள் சிலர் ஒரு அடையாள நடவடிக்கையாக ஒரு ஈழத்தமிழ்த் தலைவரை பரிகசித்த பிரசுரமொன்றை எரித்திருக்கிறார்கள் என்று மாத்திரமே இது பார்க்கப் பட வேண்டும்.வேறு என்ன செய்திருக்கலாம் என்று கனவான் தமிழ்த் தேசியர்கள் கருதுகிறார்கள்? அதை வாசிக்காமல் விட்டிருக்கலாம் என்கிறார் ஒருவர். வாசிக்காமல் விட்டால் அது ஒரு எதிர்ப்பு நடவடிக்கையையும் ஈழத்தமிழரிடையே ஊக்குவிக்கப் போவதில்லை. இன்னொரு கருத்து பிராமண அன்பர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாதென்கிறது. ரகுநாதன் உட்பட மற்றும் சிலர் சுட்டிக் காட்டியிருப்பது போல, தமிழகப் பார்ப்பனரிடம் மேலோங்கியுள்ள ஈழ எதிர்ப்புக்குப் பல பிராமணியச் சிந்தனை சார்ந்த காரணிகள் இருக்கையில், இனித்தான் நாம் பிராமணர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதா என்ன? துகளக் எரிப்பில் இவ்வளவு சிக்கலைக் கண்டு பிடித்திருப்போர் என்ன வகையான துலங்கலை ஈழத்தமிழர்கள் சோ போன்றோருக்குக் காட்ட வேண்டும் என்றும் தெளிவு படுத்தினால் நல்லது.

Link to comment
Share on other sites

ஐயோ ஐயோ பிராமண பாவம் பொல்லாதது. சோ என்ற பிராமணனை பகைக்காதீர்கள்:

துக்ளக்கை தீயிட்டு பாவத்தை வீணாய் வாங்கி கட்டிவிட்டார்கள் என்று ஒரு கூட்டம் இங்கே கூக்கிரலிடுகிறது.

ஒரு இனத்தின் அவலத்தில் குளிர் காய்கின்ற சோ(மாரி) போன்றவர்கள் திருந்த மாட்டார்கள் சொல்லித் திருந்தாதவர்களை தமிழ்நாட்டு மக்கள்தான் திருத்த வேண்டும்.

முன்னமிட்ட தீ பிரான்ஸ் நாட்டிலே

பின்னர் இடுகின்ற தீ தமிழ் நாட்டிலாகட்டும்

இன்று தமிழ் நாட்டில் காங்கிரஸ்காரர் அடி வாங்கினர். இந்த உணர்வு அணையக் கூடாது வளரவேண்டும். அந்த நெருப்பில் சோ(மாறி) போன்றோர் உருக்குலைந்து போவர்.

Link to comment
Share on other sites

"சோ" பிராமணர் என்பதால் எதிர்க்கிறீர்களா? அல்லது

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதால்

எதிர்க்கிறீர்களா? எது இங்கே முன்னிலைப்படுத்தப்படுகிறது?

Link to comment
Share on other sites

"சோ" பிராமணர் என்பதால் எதிர்க்கிறீர்களா? அல்லது

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதால்

எதிர்க்கிறீர்களா? எது இங்கே முன்னிலைப்படுத்தப்படுகிறது?

பிராமணரால் ஈழத்தவர் எந்த பெரிய பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை ஆகவே எமக்கு பிராமணிய எதிர்பு என்பது மிக கொஞ்சமே ஆனால் சோவை எதிர்பதற்கான காரணம் அவரின் கொச்சைபடுத்தும் கருத்துகள்தான்

அதுவே முதலாவது இவரை பிராமணர் என்ற வகைகுள் கொண்டுவந்தால் இந்து ராமும் பிராமணரே ஆகவேதான் பிராமணர்கள் நடத்தும் பத்திரிகைகள் தமிழீழ போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக இயங்கு கின்றது என எண்ண தோன்றுகின்றது

என்னை பொறுத்தவரையில் சோவினை எதிர்கும் காரணம் அவரின் கொச்சை படுத்தும் கருத்துகள்தான் எதிர்பது வேறு கொச்சை படுத்துவது வேறு சோ செய்வது கொச்சை படுத்தல் சிங்களவன் எழுதுவது போல தமிழ் செல்வன் அண்ணா இறந்த அடுத்த நாள் பத்திரிகையில் எழுதியவர்தான் உந்த சோ

அந்த பதிவு

அல்கொய்தா இயக்கத்தில் ஒருவர் மரணம் அடைந்தால், அமெரிக்க மாநிலங்களில் ஒன்றினுடைய கவர்னர் துக்கம் தெரிவிப்பாரா?

அப்படி தெரிவித்தால், அதற்குப் பிறகு அவர் தனது பதவியில் தொடர முடியுமா?

பிரிட்டனில் நாசவேலை புரிந்த இயக்கத்தின் தலைவர் ஒருவர் இறந்தால்,

அந்நாட்டில் முக்கிய பதவி வகிக்கிற யாராவது அழுது தீர்க்க முடியுமா? அப்படி அழுதுவிட்டு பதவியையும் அனுபவிக்க முடியுமா?

இவ்வளவு ஏன்? காஷ்மீரில் அராஜகம் புரிந்து வருகிற இயக்கங்களில் ஒன்றினுடைய தலைவர்களில் ஒருவர் மரணமடைந்தால், இந்திய அரசைச் சார்ந்த ஒரு அமைச்சர் கலங்கி கண்ணீர் சிந்தி, கவிதை எழுத முடியுமா? அப்படி ஒருவர் செய்தால், அதற்கு மேல் அவர் பதவியில் நீடிப்பாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோ துக்ளக் பத்திரிகையை ஆரம்பிக்க போவதாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடம் சொல்லிய போது அதற்கு நடிகர் திலகம் சொல்லிய பதில்

ஏற்கனவே குரங்கு

இனி இஞ்சி திண்ட குரங்கு தான் நீ என்று சோவை பார்த்து சொன்னாராம்.

இதை சோவே ஒரு இடத்தில் சொல்லியிருந்தார். அப்படியானவர் பற்றி நாம் பேசி என்ன..........?????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோ என்ற தமிழனவிரோதியின் கட்டுரை ஒரு புறம் இருக்கட்டும். அவனுடைய கட்டுரையால் பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவின் மரியாதை எள்ளவும் குறையப் போவதில்லை.

ஆனால் எனக்கு நம்மவர் சிலரின் செயற்பாட்டைப் பார்க்கின்றபோது, யார் சாதிவெறி பிடித்தவர்கள் என்பது குறித்து சந்தேகம் நிறையவே உண்டு. சோ என்ற தனிமனிதனின் ஏட்டில் வந்த கட்டுரையை விட ஒரு பார்ப்பானி என்ற கருத்தோட்டத்தில் வைக்கப்படுகின்ற எதிர்ப்புக்கள் தான் அதிகமாகத் தெரிகின்றது.

ஒரு கட்டுரையாளன் என்ன சாதி என்று தேடிய பின் கருத்தெழுதுகின்ற இவர்களை விட வேறு எவரும் சாதிவெறியர்களாக இருப்பார்கள் என்பது சந்தேகமே.

---------------------------

சோ என்பவனை திருத்த முடியும் என யாராவது கனவு கண்டால் அது அவர்களின் அறிவீனமே. அவ்வாறே சாதி தேடிக் கட்டுரையெழுதும் நம்மவர்களையும் திருத்தவே முடியாது.

Link to comment
Share on other sites

சாதி வெறிபிடித்த சோவின் கட்டுரைகளே அவருக்கு எதிரான சாதி சம்பந்தப்பட்ட கருத்துகளுக்கு வழியமைகின்றது இந்திய பிராமணர்களில் அதிகமானவர்கள் தமிழீழம் அமைவதை எதிர்கின்றார்கள் அவர்களை நாம் எதிர்பதில் சாதி வெறி இருப்பதாக நாம் நினைக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

For more than a quarter century, the members of the said elite group took a personal interest in weakening the struggle of the Sri Lankan Tamils. They were passionately opposed to Tamil militancy but were blind to State terrorism, which forced the Sri Lankan Tamils to take up arms. There were intellectuals who worked to create a wedge between the Sri Lankan Tamils and the Upcountry Tamils. Prominent journalists actively participated in exploiting breakaway militants to pave way to the division of the Tamil homeland of North and East.

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=23795

மேலுள்ள கட்டுரையில் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டுள்ளது ஈழவிடயத்தில் அக்கறை உள்ள அனைவருக்கும் தெரிந்த விடயம்.. ஏன் இவர்கள் இப்படியாக நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதை அறியாமல் இருப்பது மாதிரி இருப்பதுதான் புரியவில்லை!

Link to comment
Share on other sites

இங்ச லண்டனில லண்டன் குரல் என்ற ஒரு எச்ச பேப்பர் இடைக்கிடை தலை காட்டுது. அதில்

முக்கிய கருப் பொருள் அழிந்து கொண்டிருக்கும் சாதி வெறியை புலம் பெயர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்கி போராட்ட ஒற்றுமை முனைப்பை சிதறடிக்க முயற்சிக்கிறது.

கடைசியாக வந்த பேப்பரில் ஒரு ஊரின் பெயரை பாவித்து அங்கு நிலவிய சாதி பாகுபாட்டை பெரிது படுத்தி

அந்த மக்களுக்குள் பெரும் பிளவை ஏற்படுத்த முனைந்திருக்கிறார்கள். இந்த பேப்பர் தேசம் என்ற இதழின் உபரியாக வருகிறது.

இந்த பேப்பருக்கு லண்டன் வல்றம்சோ விநாயகர் கோவில் மக்கள் காசில் விளம்பர ஆதரவு கொடுத்து ஊக்கிவிக்கின்றது.

அன்பான லண்டன் மக்களே கவனம். இப்பேப்பர்களை கடைகளில் வைக்க அனுமதியாதீர்கள்.

குறிப்பாக வெம்பிளி கரோ சவுத்கோல் போன்ற இடங்களில் வைக்கப்படுகின்றன.

நச்சுக்கருத்துக்களை மிக நாசுக்காக திணிக்கிறார்கள்.

இந்த பேப்பருக்கும் பிரான்ஸ்சில் நடந்த சாதி மாநாட்டுக்கும் மிக தொடர்ப்பு இருக்கின்றது

துக்ளக்கில் ஆர்வம் காட்டுபவர்கள் இதையும் கவனித்தில் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி வெறிபிடித்த சோவின் கட்டுரைகளே அவருக்கு எதிரான சாதி சம்பந்தப்பட்ட கருத்துகளுக்கு வழியமைகின்றது இந்திய பிராமணர்களில் அதிகமானவர்கள் தமிழீழம் அமைவதை எதிர்கின்றார்கள் அவர்களை நாம் எதிர்பதில் சாதி வெறி இருப்பதாக நாம் நினைக்கவில்லை

இந்தியாவை விடுவோம். ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈழத்தில் இருக்கின்ற துரோகக் கும்பல்களையும் இவ்வாறு சாதி வெறி கொண்டு நோக்குவீர்களா ஐயா: ஈழவன்? டக்ளஸ் என்ன சாதி? சித்தாத்தன் என்ன சாதி? ஆனந்த சங்கரி என்ன சாதி? என்றும், எந்த இயக்கத்தில் கூடுதலான குறித்த சாதிக்காரர் இருக்கின்றார் என்பதைக் கண்டு பிடித்து, அந்தச் சாதிக்காரர் தமிழீழப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்று பிரகடனப்படுத்தி தமிழீழப் போராட்டத்துக்கு உங்களால் ஆன அரும்பணியை ஆற்றலாமே.

10 வருடத்தில் மீட்கவேண்டிய தமிழீழத்தை இப்படியான சாதிவெறி கொண்டு மக்களை பிளவுபடுத்தி 25 வருடங்களுக்கு இழுக்க வைத்த பெருமையோடு நில்லாமல், என்னமும் இழுக்க வைச்சு சாதனை செய்ய அனைத்து திராவிடச் சாதிப் பற்றாளர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகுக.

Link to comment
Share on other sites

இந்தியாவை விடுவோம். ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈழத்தில் இருக்கின்ற துரோகக் கும்பல்களையும் இவ்வாறு சாதி வெறி கொண்டு நோக்குவீர்களா ஐயா: ஈழவன்? டக்ளஸ் என்ன சாதி? சித்தாத்தன் என்ன சாதி? ஆனந்த சங்கரி என்ன சாதி? என்றும், எந்த இயக்கத்தில் கூடுதலான குறித்த சாதிக்காரர் இருக்கின்றார் என்பதைக் கண்டு பிடித்து, அந்தச் சாதிக்காரர் தமிழீழப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்று பிரகடனப்படுத்தி தமிழீழப் போராட்டத்துக்கு உங்களால் ஆன அரும்பணியை ஆற்றலாமே.

10 வருடத்தில் மீட்கவேண்டிய தமிழீழத்தை இப்படியான சாதிவெறி கொண்டு மக்களை பிளவுபடுத்தி 25 வருடங்களுக்கு இழுக்க வைத்த பெருமையோடு நில்லாமல், என்னமும் இழுக்க வைச்சு சாதனை செய்ய அனைத்து திராவிடச் சாதிப் பற்றாளர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகுக.

நீங்கள் குழம்பி போய் இருகின்றீர்கள் என்பது தெளிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் பதில் வராவிட்டால் குழம்பிப் போய் இருக்கின்றேன் என்று சப்பை கொட்டுவது ஏளனத்தைத் தருகின்றது. தமிழீழ விடுதலைப் போரட்டத்தை ஆதரிக்கின்றேன் என்ற போர்வையில் விடுதலைப் போராட்டத்திற்குத் தேவையில்லாத சிக்கல்களை கோர்வையாக உருவாக்கிக் கொண்டுவருவதற்கு என்ன காரணம் சொல்லப் போகின்றீர்கள்.

தமிழீழவிடுதலைப் புலிகள் எப்போதாவது பிராமணர்களுக்கு எதிரானவர்களாகவோ, அல்லது எதிராகவோ நடந்து கொண்டிருக்கின்றார்களோ? சோவோ, இந்துராமோ தனிப்பட்ட விதத்தில் கொண்டிருக்கும் இனவெதிர்ப்பை ஒரு சமுதாயத்தை எதிராகக் காட்டுவதற்கு உங்களுக்கு என்ன உரிமையிருக்கின்றது?

poddu_05_11_07_02.jpg

இது தமிழ்செல்வன் அண்ணாவின் இறுதிக்கிரிகைகளின் போது, எடுக்க்பபட்ட படம். தமிழ் மக்கள் கொண்டிருக்கின்ற மதங்களின் பிரதிநிதிகளைப் புலிகள் மரியாதை கொடுப்பதோடு, அவர்களுக்கு கௌரவமும் செய்கின்றார்கள்.

நமக்குள் சில விளக்கம் குறைந்தவர்கள் இருக்கின்றார்கள். கருணா பிரிந்தபோது, புலம்பெயர் நாடுகளில் உள்ள கிழக்குவாழ் மக்களைத் தாக்கி, தமிழீழவிடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்த முயன்றார்கள்.

அது போன்று சோ என்ற காட்டுமிராண்டியைச் சாடுவதற்கு குறித்த சமுதாயத்தை எதிர்த்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மலினப்படுத்துவதோடு எதிரிகளையும் சம்பாதித்துக் கொடுக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

ஜாயா நீங்கள் குழம்பி இருப்பதாக் சொன்னேன் அதனை நீங்கள் நிருபித்து இருகின்றீர்கள்.புலிகளை பற்றி நான் கதைக்கவே இல்லை புலிகள் சாதி அடிப்படையில் பிரிவு பார்ப்பதாக நான் எங்கும் சொல்லவில்லை அப்படி சொல்லின் ஆதார்ரத்தை காட்டுங்கள் அதற்கு பிறகு நீங்கள் என்ன உரிமை இருகின்றது என சொல்லலாம்இது என் தனிப்பட்ட கருத்து .நான் ஒரு தனிமனிதன் என் கருத்து என்றைக்கும் புலிகளின் கருத்தாகமாட்டாது.அதை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம் .நான் சொன்னது இப்படியா யின் உங்கள் கருத்தான பெரியார் எதிர்பு வந்து விடுதலை போராட்டத்தை ஆதரிகிறீர்கள் என்றபோர்வையில் நீங்களும் சிக்கல் களை ஏற்படுத்துகிறீர்கள் என சொல்ல முடியும்

தமிழகத்தில் எமக்கு ஆதரவாக இருப்பவர்கள் பெரியார் திராவிட கழகத்தினரும் திராவிட கட்சிகள் சிலரும்தான் ஆகவே நீங்களும் பெரியார் கொள்கையை எதிர்கிறேன் பேர்வழி உங்கள் பெரியார் பற்ற்றிய மட்டமான கருத்துகளை வைப்பது எந்தவிதத்தில் நியாயம்

படம் போட்டு புலிகளின் கொள்கையை எனக்கு விளக்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை புலிகள் சமத்துவமான ஆட்சிதான் செய்கிறார்கள் செய்வார்கள் என எனக்கு தெரியும் சாதிய சகதிகுள் புலிகள் இல்லை என்பதும் எனக்கு நன்க்கு தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுவே முதலாவது இவரை பிராமணர் என்ற வகைகுள் கொண்டுவந்தால் இந்து ராமும் பிராமணரே ஆகவேதான் பிராமணர்கள் நடத்தும் பத்திரிகைகள் தமிழீழ போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக இயங்கு கின்றது என எண்ண தோன்றுகின்றது

என்னை பொறுத்தவரையில் சோவினை எதிர்கும் காரணம் அவரின் கொச்சை படுத்தும் கருத்துகள்தான் எதிர்பது வேறு கொச்சை படுத்துவது வேறு சோ செய்வது கொச்சை படுத்தல் சிங்களவன் எழுதுவது போல தமிழ் செல்வன் அண்ணா இறந்த அடுத்த நாள் பத்திரிகையில் எழுதியவர்தான் உந்த சோ

இந்தக் கருத்தினை முதலில் வழங்கியவர் தாங்கள் தானோ அல்லது பிறரை வைத்து எழுதிக் கொள்கின்றீர்களா?

தமிழீழ விடுதலைப்போரட்டத்தை நடத்திச் செல்லும் ஒரே ஒரு சக்தி புலிகள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இங்கே தமிழ்செல்வன் அண்ணாவின் வீரமரணத்தோடு கோர்வையாகச் சோவைப் பிராமணர் என்கின்றீர்கள். அத்தோடு பிராமணர்கள் தமிழீழப் போராட்ட்ததுக்கு எதிரானவர்கள் என்று தமிழீழப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை ஊன்றச் செய்கின்றீர்கள்.

எனக்குத் தெரியும். தாங்கள் என்ன எழுதினீர்கள் என்பதே தெரியாமல் தான் தாங்கள் எழுதிக் கொள்கின்றீர்கள் என்று. ஆனால் அப்படி எழுதப்படுபவையின் விளைவுகள் பாதிக்கப் போவது தமிழீழ விடுதலைப்போரைத் தான். மக்களின் துன்பங்களும், துயரங்களையும் தீர்க்க போராட்டத்தோடு அனைத்துத் தரப்பினரினதும் ஆதரவையும் எம் மண் வேண்டி நிற்க, ஒவ்வொரு சாதியினரும் எமக்கு எதிர் என்று பகைமை உருவாக்கப்படுகின்றது.

தமிழகத்தில் எமக்கு ஆதரவாக இருப்பவர்கள் பெரியார் திராவிட கழகத்தினரும் திராவிட கட்சிகள் சிலரும்தான் ஆகவே நீங்களும் பெரியார் கொள்கையை எதிர்கிறேன் பேர்வழி உங்கள் பெரியார் பற்ற்றிய மட்டமான கருத்துகளை வைப்பது எந்தவிதத்தில் நியாயம்

படம் போட்டு புலிகளின் கொள்கையை எனக்கு விளக்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை புலிகள் சமத்துவமான ஆட்சிதான் செய்கிறார்கள் செய்வார்கள் என எனக்கு தெரியும் சாதிய சகதிகுள் புலிகள் இல்லை என்பதும் எனக்கு நன்க்கு தெரியும்

உங்களைப் போன்ற ஆட்களுக்கு படம் போட்டு விளங்கப்படுத்தினாலும் புரியுமோ தெரியவில்லை ஐயா! இல்லாவிட்டால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு திராவிர அமைப்புக்களின் சாதி பார்த்துக் கருத்தெழுதும் விதத்தைச் செய்யமாட்டீர்கள்.

--------------------------------

ராமசாமி பற்றிய விவாதத்தின் போது நானும் சரி,நெடுங்காலபோவனும் சரி இந்து மதத்தைப் பற்றி இவர்கள் கதைக்கின்றபோது தான் இழுத்துக் கதைத்திருக்கின்றோம். அப்போது தெளிவாகவே காரணத்தைச் சொல்லியிருக்கின்றோம். இந்தியாவில் உள்ள இந்துக்களின் ஆதரவு தேவையில்லை என நீங்கள் நினைத்துத் தான் இந்து மதத்தைப் பற்றிக் கேவலமாக எழுதுகின்றபோது, அதற்குப் பதிலடியாக திராவிடக்கும்பலின் தலைவரைப் பற்றியும் நாம் எழுத வேண்டி ஏற்படுகின்றது. தவிரவும் நாங்கள் ராமசாமி என்ற கன்னடரைத் தாக்கிப் பேசின அளவு அண்ணாத்துரையையோ, அதன் பின்னர் திராவிடம் கதைத்த எவரையும் தாக்கிப் பேசவில்லை.

( 4,5 தடவைகள் பேசாமல் இவர்களின் கருத்துக்களை ஈழஆதரவு என்ற ஒரு வார்த்தையை முடிச்சுப் போட்டதால் விட்டிருக்கின்றோம். கடைசியாக வேலவன் கேட்டுக் கொண்டதற்காகவும் விட்டிருக்கின்றோம்.) ஆனால் பழைய குருடி... கதவைத் திறவடி கதை கணக்காக வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் இந்துக்களைச் சினம் ஊட்டுவதற்காகத் (தாங்கள் உற்படப்) பலர் நடந்து கொண்டிருக்கின்றார்கள்

பல தடவை விடுதலைப்போராட்டத்தோடு இணைத்துக் கதைக்க முயற்சித்தபோது அதைத் தவிர்க்க முயன்றிருக்கின்றோம். விவாதிக்க இயலாமையின் பால் சபேசன் தேசியத் தலைவரோடு ராமசாமியை இணைத்து முடிச்சுப் போட்டு, மடக்க முனைந்த சந்தர்ப்பங்களில் அவற்றைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைக்குத் திராவிட அமைப்புக்கள் தான் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவு தருகின்றார்கள் என்று புலம்புகின்றீர்கள். அந்த ஆதரவை என்றைக்குமே மனதார மதிக்கின்றேன். ஏனென்றால் அவர்கள் எமக்காகப்படுகின்ற கஸ்டம் மிகப்பெரியது

ஆனால் அவர்கள் மட்டும் ஆதரவு தருவதற்கும், மற்றவர்கள் ஆதரவு தராது போனமைக்கும், யார் காரணம்? அன்றைக்கு ராமசாமி என்ற மனிதர் ஏற்றி வைத்த ஆரிய - திராவிடப் பாகுபாட்டால் சமூதாயம் சிதைந்து போனதால் தானே? ஒட்டுமொத்த தமிழகத்தின் ஆதரவும் கிடைக்க வேண்டிய நிலையில், வெறுமனே திராவிட அமைப்பு சார்ந்தவர்களின் ஆதரவு மட்டும் தான் கிடைக்குது என்றால்..... யார் குற்றம்.....

Link to comment
Share on other sites

ஈழத்தில் உள்ள சாதி அமைப்பை இந்தியாவில் உள்ள சாதி அமைப்போடு ஒப்பிட்டுக் கருத்துச் சொல்வது தவறு. இரண்டும் வேறு வேறானவை.

இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். சிங்களவர்கள் மகாவம்ச மனவமைப்பில் கட்டுண்டு இருக்கிறார்கள் என்றால், இந்தப் பார்ப்பனர்கள் வர்ணாச்சிரம மனவமைப்பில் கட்டுண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் பார்ப்பனர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்ப்பதற்கும், ராஜீவ்காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அத்துடன் அவர்களின் எதிர்ப்புக்கும் தந்தை பெரியாருக்கும் முடிச்சுப் போடுவது குதர்க்கமானது. சிங்கள மக்கள் ஆதரிக்கின்ற அனைத்தையும் நாம் எதிர்க்கின்றோமா? அவர்கள் எதிர்க்கின்ற அனைத்தையும் நாம் ஆதரிக்கின்றோமா?

இல்லையே! இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதில் இரு தரப்பும் உறுதியாக இருந்த வரலாறு எல்லாம் இருக்கிறதே.

தமிழ்நாட்டிலும் கடவுளை மறுக்கின்ற வீரமணி அவர்களும், கடவுளை நம்புகின்ற மதுரை ஆதீனமும் ஈழத் தமிழர் விவகாரத்தில் ஒரே நிலையில் இருக்கிறார்களே! கிருஸ்ணய்யர் போன்ற ஓரிரு பார்ப்பனர்களும் சில விடயங்களில் வீரமணி சொல்வதை சொல்கிறார்களே!

இவர்கள் யர்ரும்"நீ ஆதரிக்கின்றாய், நான் எதிர்ப்பேன்" என்று குழந்தைப் பிள்ளைத்தனமாக அடம்பிடிக்கவில்லையே.

திராவிடக் கட்சிகள் ஆதரிப்பதால்தான், பார்ப்பனர்கள் எதிர்க்கின்றார்கள் என்று சொல்வதும், அதை நம்புவதும் நகைப்புக்கிடமானது.

ஆரம்ப காலத்தில் இருந்தே பார்ப்பனர்கள் எங்களை எதிர்த்தே வந்தார்கள். சார்பாக எழுதுவதாக காட்டிக் கொண்ட பார்ப்பனப் பத்திரிகைகளும் மறைமுகமாக நச்சுக் கருத்துக்களை பரப்பியே வந்தார்கள்.

தமிழீழ மக்களின் விடுதலையை இந்தியப் பார்ப்பனர்கள் எக் காரணம் கொண்டும் ஆதரிக்கப் போவதில்லை.

துக்ளக் சோ தமிழீழ விடுதலையை எதிர்ப்பதற்கு பார்ப்பனியம் தவிர வேறு காரணம் இல்லை.

இந்து ராம், நாராயணன், பி.ராமன் தொடங்கி பாலச்சந்தர், மணிரத்தினம், விசு என்று எல்லோரும் எங்களுடைய போராட்டத்தை கொச்சைப் படுத்துவதற்கு பார்ப்பனிய சிந்தனை மட்டும்தான் காரணம்.

இந்தப் பார்ப்பனியம் இந்தியாவில் ஒழிக்கப்படும் வரை, யார் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தாலும், தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கப் போவதில்லை.

நாங்கள் சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்காது, சண்டை பிடிக்காது நல்ல பிள்ளைகளாக இருந்தால், சிங்களவர்கள் எங்களுக்கு எதாவது உரிமைகளை இரக்கப்பட்டு தந்து விடுவார்கள் என்று நம்புகிறீர்களா?

அப்படித்தான் பார்ப்பனியத்தைப் பற்றி ஒன்றும் பேசாது வாய் மூடி இருந்தால், இந்தியப் பார்ப்பனர்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்ப்பது.

இரண்டுமே அர்த்தமற்ற எதிர்பார்ப்புக்கள். இவைகள் என்றைக்குமே நடக்கப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி இனம் கண்டபின்னர் கருத்தெழுதும் சக உறவுகளில் தாங்களும் ஒருவர் என்பதை நான் நிறையவே அறிவேன். உங்கள் மீது தனியான அபிப்பிராயம் நிறையவே உண்டு. அவ்வாறே இக்கருத்தையும் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்த்த ஒன்று தான்.

உங்களால் எத்தனை பார்ப்பானி என்று தமிழீழத்துக்கு எதிரானவர்களைக் காட்ட முடியும்? ஒரு 20 .... வேண்டாம். ஒரு 100 பேர்?

இங்கே சுட்டிக் காட்டிய பார்ப்பானிகள் என்ற ஆட்களினுள் விசு, சோவைத் தவிர மற்றய பெரும்பாலான ஆட்கள் எல்லோரும் மத எதிர்ப்புச் சிந்தனை கொண்டவர்கள் தாம்.

மாலன், சுஜாதா, மணிரத்தினம், இந்து ராம், பி. ராமன் எல்லோரும் இந்து மதத்தில் ஈடுபாடு காட்டாதவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் கடவுளை எதிர்த்து கதைப்பவர்கள்.

(முன்பு ஒரு தடவை கமல்ஹாசன் என்ற நடிகருக்காகப் பரிந்து பேசினீர்கள். ஆனால் அவரது மருமகனான மணிரத்தினத்தைப் பார்ப்பானி என்கின்றீர்கள். வேடிக்கை தான். ஏன் கமலை இணைக்காமல் விட்டுவிட்டீர்கள்)

பிராமணர் இல்லாத காங்கிரஸ்காரர், நல்லக்கண்ணு, கம்னியுஸ்ட் காரர்கள், கிருஸ்ணசாமி, ஜெயக்காந்தன் என்ற நூற்றுக்கணக்கான ஆட்களை எம்மாலும் காட்டமுடியும். அவ்வாறே ஆதரவான எண்ணத்தோடு இருக்கின்ற இல.கணேசன், தொடக்கம் பல பாஜகவினரையும் இனம் காட்டிட முடியும். ஆனால் சாதி தேடிப் பதிலளிக்கின்ற ஆட்கள் நாங்களில்லை என்பதால் தவிர்க்கின்றோம்.

அதை விடவும் இவர்கள் ஆதரவு, இவர்கள் இல்லை என்று முடிவெடுக்கின்ற சக்தி யாருக்குமே கிடையாது.

Link to comment
Share on other sites

துக்ளக் சோ தமிழீழ விடுதலையை எதிர்ப்பதற்கு பார்ப்பனியம் தவிர வேறு காரணம் இல்லை.

இந்து ராம், நாராயணன்?!, பி.ராமன் தொடங்கி பாலச்சந்தர், மணிரத்தினம், விசு என்று எல்லோரும் எங்களுடைய போராட்டத்தை கொச்சைப் படுத்துவதற்கு பார்ப்பனிய சிந்தனை மட்டும்தான் காரணம்.

இந்தப் பார்ப்பனியம் இந்தியாவில் ஒழிக்கப்படும் வரை, யார் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தாலும், தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கப் போவதில்லை.

ஒட்டப்பாலத்தின் திரு எம்.கே நாராயணன்(Mayankote Kelath Narayanan) எப்போது பார்ப்பனர் ஆனார்? :)

அது மட்டும் அல்ல -

தமிழ்ச்செல்வன் அண்ணாவின் மரணத்தின் போது கூட புலித்துவேசத்தை கக்கிய

ஒரு பாபநாசம் பண்ணையார் (G.K வாசன்)

ஈ.வெ.ராமசாமியின் பேரன் (ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்)

வேலுரின் ஞானசேகரன்

மருத்துவர் ராமதாசின் சம்பந்தி (காங்கிரஸின் கிருஷ்ணசாமி)

சட்டமன்றத்திலேயே புலித்துவேசத்தை கக்கிய பீட்டர் அல்போன்சாக்கள்

மற்றும்

பட்டும் படாமலும் பேசிவிட்டு போகும் செட்டிநாட்டு அரசர் (சிதம்பரம்)

அம்மாவையே ஆட்டுவிக்கும் சாவி (மறவர் குலத்து மாணிக்கம் சசிகலா)

திரைமறைவில் சதி செய்யும்

சிவசங்கர் மேனன்

எம்.கே நாராயணன்

ஹோர்மிஸ் தாரகன் (2007 ஜனவரி வரை ரோவின் தலைவர்)

இவர்கள் எல்லாம் பிராமணர்களா? மேலே சொன்ன அதிகம் படித்த மேதாவிகளையும், அரசியல் வியாபாரிகளையும் விடவும், அக்ரகாரத்தில் அடுத்த வேலை சோற்றுக்கே என்ன செய்வோம் என்று தவிக்கிற அப்பாவி பிராமணர்கள் ஈழப்போராட்டத்திற்கு அதிகம் கேடு செய்கிறார்கள் என்று நிறுவ முனையும் அரசியல் அரைவேக்காடுகளை என்னவென்று சொல்வது???!!!. I doubt your knowledge about the complexity of Indian politics.

இந்த மாவீரர் வாரத்தில் வேண்டாத வாதங்களை தவிர்த்துவிட்டு மாவீரர்களின் தியாகத்திற்கு தலைவணங்கும் எண்ணமே மேலோங்கி இருப்பதால் அதிகம் எழுதமுடியவில்லை. இனிவரும் நாட்களில் கொஞ்சம் நேரம் கிடைக்க கூடும்.

Link to comment
Share on other sites

பாஜக கட்சி தமிழீழ ஆதரவுக் கட்சி என்று நம்புவது தவறானது.

யார் ஆதரவு, யார் ஆதரவு மாதிரி நடிக்கிறார்கள் என்பதை தமிழ்செல்வனின் வீரச் சாவில் பலர் உணர்ந்திருப்பார்கள்.

சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக நிலைப்பாடு எடுத்ததால், தமிழர்களுக்கு எதிரான கட்சி என்ற பெயரை எடுத்த பாஜக அதை மாற்றுவதற்கு, ஈழத் தமிழர்களுக்கு உணவு சேகரிப்பதாக போக்கு காட்டியது.

ஒரு நாள் மட்டும் சில இடங்களில் போக்கு காட்டி விட்டு, அதை அப்படியே விட்டு விட்டது. தமிழ்செல்வன் வீரச்சாவிற்கு ஒரு இரங்கல் கூட அக் கட்சியால் தெரிவிக்க முடியவில்லை.

ஈழத் தமிழர் வேறு, புலிகள் வேறு என்று சொல்கின்ற சோவின் நிலைப்பாட்டிற்கும் பாஜகவின் நிலைப்பாட்டிற்கும் அதிக வித்தியாசம் இல்லை.

இந்தியாவில் உள்ள பார்ப்பனியர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைக்கு எதிரானவர்கள்தான். ஒரிருவர் விதிவிலக்காக இருக்கலாம்.

காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பதற்கு அரசியல் காரணமாக இருக்கிறது. அரசியல் நிலவரம் மாறும் போது அவர்களின் எதிர்ப்பு மாறும்.

எங்களை ஆதரித்தவர்கள் சில காலங்கள் அமைதியாக இருந்தது உண்டு. விஜயகாந்த் சற்று அமைதியாகத்தான் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியுடன்தான் இனிக் கூட்டணி என்று அறிவித்துள்ள ராமதாஸ{ம் இனி கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பார்.

இப்படி அரசியல் கட்சிகள் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அரசியல் நலன் சார்ந்தது. இவைகள் அடிக்கடி மாறுபடும்.

ஆனால் இந்தியாவில் எமக்கான ஆதரவை எந் நிலையிலும் மாற்றிக் கொள்ளாத ஒரு தரப்பு இருக்கிறது. அவர்கள்தான் திராவிட இயக்கத்தினர். ஆயிரம் முறை சிறை சென்றாலும் அவர்கள் மாற மாட்டார்கள்.

அதே போன்று இந்தியாவில் எம்மீதான எதிர்ப்பை எந்நிலையிலும் மாற்றிக் கொள்ளாத ஒரு தரப்பு இருக்கிறது. அவர்கள்தான் இந்தப் பார்ப்பனர்கள். இவர்களும் எதிர்ப்பதை நிறுத்த மாட்டார்கள்.

மாலன், சுஜாதா, இந்து ராம் போன்றவர்கள் இந்து மதத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள்தான். மணிரத்தினம் போன்றவர்கள் தாம் கடவுளை நம்பவில்லை என்று சொல்லிக் கொண்டுபார்ப்பனியத்தை வளர்க்கின்ற வேலையைத்தான் செய்கிறார்கள். இவர்கள் இந்து மதத்திற்கு எதிராக என்ன செய்தார்கள் என்று யாராவது சொன்னால் நல்லது.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு எம்மை எதிர்க்கின்று அமெரிக்கா நாளை எம்மை ஆதரிக்கலாம். காங்கிரஸ் கட்சி ஆதரிக்கலாம். கம்யுனிஸ்ட் கட்சி ஆதரிக்கலாம்.

ஆனால் மகாவம்ச தேரவாத பௌத்த சிங்களப் பேரினவாதமும் எம்மை ஆதரிக்காது. இந்துப் பார்ப்பனியமும் எம்மை ஆதரிக்காது. இவர்களுடைய நலன்களும் எங்களுடைய நலன்களும் ஒருபோதும் ஒன்றுபடாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.