Jump to content

சாமத்திய வீடு கொண்டாடுவது அசிங்கமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குள் சில மேதவிகள் இருக்கின்றார்கள். வெள்ளையன் சிரிப்பான், அவனுக்கு முன்னால் நாகரீகம் காட்ட வேண்டும் என்று, தமிழரோடு கதைக்கின்றபோதும் அரைநுனி ஆங்கிலமோ, அல்லது தாங்கள் சார்ந்த நாட்டில் பேசப்படுகின்ற மொழியில் தான் உரையாடிக் கொள்வார்கள்.

சமாத்தியவீடு தொடர்பாகவும் ஏதோ விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால் யூதர்களின் வாழ்க்கை முறையைத் தட்டிப் பார்த்தபோது அங்கும் சமாத்தியவீடுக்கு நிகரான நிகழ்வு கொண்டாடப்படுவது தெரியவருகின்றது. என்றைக்குமே தங்களை உயர்ந்த இனமாகவும், சிறிய சமுதாயமாக இருந்து கொண்டு உலகத்தை ஆட்டுவிக்கின்ற அளவுக்கு அவர்கள் வளர்ந்தாலும் அவர்கள் தங்களின் பண்பாட்டை விட்டு விலத்துவதில்லை.

அதனால் தான் உலகில் எங்கு சென்றாலும் உயர்வாகவும், ஒன்றாகவும் தங்களுடைய அடையாளங்களோடும் வாழ்கின்றார்கள்.

ஆனால் அவர்கள் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சமாத்தியவீடு கொண்டாடுகின்றார்கள்.ஆண்கள் 13 வயதும், பெண்கள் 12 வயதும் அடைகின்றபோது அதற்கான சடங்கு செய்யப்படுவதோடு, விழிப்பூட்டல்களும் நடக்கின்றன.

இது பற்றிய இணைப்பு ஆங்கிலத்தில் உள்ளது. நெடுங்காலபோவான், அல்லது வெற்றிவேல், தயாண்ணா என்று யாராவது முடிந்தால் தமிழ்படுத்துங்கள். என்னால் மாவீர்ர நாள், பாலா அண்ணாவின் நினைவு தினங்கள் வரைக்கும் இதில் மினக்கெட்டு ஈடுபடமுடியாதுள்ளது.

--------------------

In Judaism, Bar Mitzvah (Hebrew: בר מצוה, "one (m.) to whom the commandments apply") and Bat Mitzvah (בת מצוה, "one (f.) to whom the commandments apply," or Bas Mitzvah in Ashkenazi pronunciation), are the terms to describe the coming of age of a Jewish boy or girl. According to Jewish law, when Jewish children reach the age of majority (generally thirteen years for boys and twelve for girls) they become responsible for their actions, and "become a Bar or Bat Mitzvah." This also coincides with physical puberty.[1] Prior to this, the child's parents are responsible for the child's adherence to Jewish law and tradition, and after this age, children bear their own responsibility for Jewish ritual law, tradition, and ethics and are privileged to participate in all areas of Jewish community life. [2]

In modern Jewish observance, the occasion of becoming a Bar Mitzvah or (in non-Orthodox congregations) a Bat Mitzvah is usually associated with the young man or woman being called to read the Torah and/or Haftorah portion at a Sabbath or other service, and may also involve them giving a d'var Torah including a discussion of that week's Torah portion. Precisely what the Bar/Bat Mitzvah may do during the service varies in Judaism's different denominations, and can also depend on the specific practices of various congregations. Regardless of the nature of the celebration, males become entirely culpable and responsible for following Jewish law once they reach the age of 13, and females once they reach the age of 12.

மேலும்: http://en.wikipedia.org/wiki/Bar_Mitzvah

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

ஓ , கொண்டாடி விட்டாலும்.ஆக மற்றவர்களை விட ஒரு நல்ல வீடியோ வர வேண்டும்.ஒரு சிலைட் சோ வைப்பினம்.பின்னாலே போத்தில் போத்திலாக பாயும்.பிறகு பழைய சச்சரவுகள் தொடங்கும்.பிறகு பொலிஸ் வந்து யாருக்கு வெறியோ அவர் அந்த இரவை நாலு கம்பிக்குள் கழிப்பார்.

மிகுதி ,ஒவ்வொருவரின் கருத்தை தொடர்ந்து தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருமே குடிக்கின்றது தப்பு என்று விவாதிக்கமாட்டீர்கள். ஏதோ இது கொண்டாடுவதால் தான் எங்கட சனம் குடிச்சுப் போட்டுச் சண்டை பிடிக்கின்ற மாதிரியல்லவோ கதை போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்துக்கு நன்றிகள். அதுதான் இரத்தினச் சுருக்கமா மொழி பெயர்ந்திட்டீங்களே.

நான் பார்த்தவாக்கில்... புகலிடத்துக்கு வந்தும் பெனிவிட் எடுக்கிறவையும்.. ஊரில அடிமட்டத்தில இருந்து வந்து புகலிடத்தில எழுந்தவையும் தான் இந்த சாமத்தியவீடு அசிங்கம் என்று அநேகம் குரல் கொடுக்கினம். அவைதான் தாங்கள் ஊரில் செய்த தவறுகளை மறைக்க அவற்றை நாகரிகப் புரட்சிகளா சித்தரிக்கினம். அவை காணாததைக் கண்ட பேரதிர்சியில உதுகளைச் செய்யினமே தவிர.. சமூகவியல் நோக்கோடு அணுகிறதா எனக்குத் தெரியல்ல..! :D:D

Link to comment
Share on other sites

பிறகு அந்த பெண் வாழ்க்கையில் என்னெல்லாம் கஸ்டப்பட போகிறாளோ?

இப்ப சந்தோசமா கொண்டாடிட்டுப் போகட்டுமே விடுங்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்தவாக்கில்... புகலிடத்துக்கு வந்தும் பெனிவிட் எடுக்கிறவையும்.. ஊரில அடிமட்டத்தில இருந்து வந்து புகலிடத்தில எழுந்தவையும் தான் இந்த சாமத்தியவீடு அசிங்கம் என்று அநேகம் குரல் கொடுக்கினம்.

அது சரி அடிமட்டம் என்றால் என்ன ? எப்படியான அளவீடு உங்களது?? படிப்பறிவில்லாதவர்கள், வறுமையில் வாடுவோர்கள், சொத்து ஏதும் என்றி அன்றாடம் காச்சிகளாயுள்ளோர், தினக்கூலிகள்.. இதில் ஏதாவதா?

அடிமட்ட வாழ்வில் இருப்போர் ஊரில் சாமத்தியச் சடங்கு செய்வதில்லையோ???

சமூக அந்தஸ்த்து உள்ளோர் பெரிய அழைப்பிதழ் அடித்து வெகு விமர்சையாகக் கொண்டாடுபவர்களோ?

யூதர்கள் செய்வதையும் தமிழர்கள் செய்வதையும் முதலில் சரியாக ஒப்பிடுங்கள்.. இரண்டும் ஒரே நோக்கத்திற்காக அல்ல.

பெண்கள் "ருது"வானதைக் கொண்டாடவும், ஆண்கள் "கடு"க் கண்டதைக் கொண்டாடவும் தேவையான சமூகவியல் காரணங்களை தமிழர்களை முன்வைத்துச் சொல்லுங்கள்..

யூதர் செய்வதெல்லாம் நாமும் செய்ய வேண்டுமென்றால் முதலில் சிங்களைவர்களை ஒடுக்கி அவர்களை அகதி முகாம்களில் இருத்தவேண்டும்!

Link to comment
Share on other sites

இதெல்லாம் விடுங்கோ இப்போ அதை எப்படி சொல்லினம் தெரியுமோ... Saree ceremonyம்...

எனக்குத்தெரிஞ்சு ஒரு மாமி.. ஒரு வெள்ளை மாமிக்கு சொன்னவ....

"This is very inportant event for a girl.. and we make that special.. when she wearing saree first time..we all get together and celebrate that and we call that saree ceremony"

நிஜமாவா?..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அடிமட்டம் என்றால் என்ன ? எப்படியான அளவீடு உங்களது?? படிப்பறிவில்லாதவர்கள், வறுமையில் வாடுவோர்கள், சொத்து ஏதும் என்றி அன்றாடம் காச்சிகளாயுள்ளோர், தினக்கூலிகள்.. இதில் ஏதாவதா?

அடிமட்ட வாழ்வில் இருப்போர் ஊரில் சாமத்தியச் சடங்கு செய்வதில்லையோ???

சமூக அந்தஸ்த்து உள்ளோர் பெரிய அழைப்பிதழ் அடித்து வெகு விமர்சையாகக் கொண்டாடுபவர்களோ?

சமூக அக்கறை, சமூக அறிவியல் என்று எதுவுமே அற்று ஏதோ பிறந்தமா உழைச்சமா வாழ்ந்தமா குட்டி போட்டமா.. குட்டிகளை வளர்த்து.. அதுகளைக் குட்டி போட வைச்சமா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம்..! :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியவீடு கொண்டாடுவது அசிங்கம் என்ற மாதிரிக் கட்டுரை வரைபவர்களுக்குத் தான், இது அசிங்கமில்லை என குறிப்புணர்த்தவே இது தேவைப்பட்டது. தவிரவும் தமிழர்கள் எத்தனை பேர் உண்மையான விளக்கத்தோடு செய்கின்றார்கள் என்றால் அதைக் ஒன்றுமே செய்யமுடியாது.

சமீபத்தில் கனடாவில் தமிழ்செல்வன் அண்ணாவின் வீரவணக்க நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதற்குப் போய் வந்த, சிலர் வானொலியில் தொலைபேசி எடுத்துக் கதைக்கின்றபோது, அதை " இந்த விழாவிற்கு இத்தனை மக்கள் வந்தார்கள், பெருமையாக இருந்தது" என்று அதை ஒரு களியாட்ட நிகழ்வு போன்றே கதைத்தார்கள். ( நான் யாரையும் அழுது கொண்டு சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.) ஆனால் ஒருவருடைய வீரவணக்கத்தைக் கூட வேறுபடுத்த முடியாத நிலமையில் தான் எம்மவர்கள் சிலர் இருக்கின்றார்கள்.

சாமத்திய வீடும் ஏன் தேவை, அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் புரியாத நிலமையில் மக்கள் சிலர் இருந்தால் அதற்கு ஒன்றுமே செய்யமுடியாது. அதனால் தான் என்னவோ, 10 வயதில் போடுகின்ற உடுப்பை 20 தாண்டியதும் போடுகின்றார்கள் போல. குறைந்த பட்சம் அதைப் புரிய வைப்பதற்காவது சாமத்தியவீடு தேவைப்படுகின்றது.

-------------------------------------

யூதர்கள் தன்னுடைய இனத்தை விட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்வதில்லை. அது இன அழிவுக்கு வழி செய்திடும் என அவர்கள் அவதானமாகவே இருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

யாரு சொன்னது தமிழர்கள் மட்டுந்தான் சாமத்தியவீடு கொண்டாடுறதெண்டு???

எனக்குத்தெரிந்த வெனிசுலா நாட்டு நண்பருடன் ஒரு நாள் கலைகலாச்சாரம் பற்றி கதைக்கும்போது

சொன்னார்,அவர்களின் நாட்டில் மட்டுமல்லாது,பல தென் அமெரிக்க நாடுகளில் பெண்கள்

வயதுக்கு வந்தவுடன்,நம் ஊரில் உள்ள சாமத்தியவீடு கொண்டாடும் முறை போன்று,அவர்களும் கொண்டாடுவதாக !!

ஆக யாரென்றாலும்,மற்றைய இனங்களின் பழக்கவழக்கங்களை தெரிந்துகொண்டு கருத்தெழுதிறது நலம்

அத்துடன் நாம் எங்கிருந்தாலும் நம்முடைய கலாச்சாரத்தை பின்பற்றுறது தப்பிலைதானே!!

Link to comment
Share on other sites

ஆனால் அவர்கள் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சமாத்தியவீடு கொண்டாடுகின்றார்கள்.ஆண்கள் 13 வயதும், பெண்கள் 12 வயதும் அடைகின்றபோது அதற்கான சடங்கு செய்யப்படுவதோடு, விழிப்பூட்டல்களும் நடக்கின்றன.

இப்ப தான் நேக்கு பிரச்சினை விளங்கிச்சு யூதர்களிள் ஆண்களிற்கும் சாமர்த்திய சடங்கு செய்கிறார்கள் ஆனா இங்கே இல்லை அது தான் இவ்வளவு பிரச்சினை :D பேசாம இரண்டு பேருக்கும் வைத்து விட்டா ஒரு பிரச்சினையும் இல்லை என்று நினைகிறேன் :D ...............ஏனேன்றா எப்ப பார்த்தாலும் "சாமர்த்திய வீடு" பிரச்சினையை ஆண்கள் தான் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள் :D அது தான். சாமர்த்திய வீடு கொண்டாடினா நாலு பேரை சைட் அடிக்க ஏலும் அதற்காவது கொண்டாடுங்கோ!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"கொண்டாடுறவன் கொண்டாடட்டும் விடுறவன் விடட்டும் அதை பற்றி யாழில கருத்து எழுதுறவை தான் பாவம்" :(

Link to comment
Share on other sites

யாருமே குடிக்கின்றது தப்பு என்று விவாதிக்கமாட்டீர்கள். ஏதோ இது கொண்டாடுவதால் தான் எங்கட சனம் குடிச்சுப் போட்டுச் சண்டை பிடிக்கின்ற மாதிரியல்லவோ கதை போகுது

சாமத்திய வீட்டில் உண்மையில் நடந்த சம்பவங்களை தான் குறிப்பிட்டுள்ளேன்.ஏதோ நீங்கள் நினத்த மாதிரி விவாதம் போக வேண்டுமென நினத்த மாதிரி எழுதியுள்ளீர்கள். நான் யதார்த்தமாக நடந்ததை எழுதியுள்ளேன்.

எமது சமுதாயத்தின் போட்டி,பொறாமை ஊரில் இருந்து இங்கு வரை சுமந்து வரப்பட்டு அது அமுல் படுத்தப்படுகிறது.ஒரு சின்ன பெண் ருதுவானால் உள்ள பூங்கா முழுக்க கொண்டு திரிந்து ஏதோ சினிமா பாடல் காட்சி எடுப்பது போல் காட்டாயம் எடுக்க வேண்டுமா?.

இனி முஸ்லிம் சுண்ணத்து செய்கிறான்.தமிழ் ஆண்களும் இனி செய்ய வேண்டுமென்றவாறு உங்கள் கதை போகுது.ஆக யூதன் செய்தால் என்ன ,வெள்ளை செய்தால் என்ன நாங்கள் தமிழர் என்ற தனித்துவத்தை ஏன் இழக்க வேண்டும்?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நுணாவிலான்

தலைப்பின் ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கின்றேன். இங்கே சிலர் சாமத்தியவீடு என்பது அசிங்கம் என்ற மாதிரிக் கதைப்பவர்களுக்காகத் தான் இதை இணைக்கின்றேன் என்று. எனவே உங்களுக்கு திரும்பவும் விளங்கப்படுத்தத் தேவையில்லை என நினைக்கின்றேன்.

இப்போதைய சாமத்தியவீடு மட்டுமல்ல, கலியாணம் வீடும் கூட கமராமான், ஸ்டாட், அக்சன் சொன்னப்புறம் தான் மணமகளோ, மணமகனோ நடந்து மேடைக்கு வருகின்ற நிலமையுள்ளது. ஆனால் அதற்காக யாரும் கலியாணம் வேண்டாம் என்று சொன்னமாதிரிக் காணமுடியவில்லை.

யாரையும் பின்பற்றச் சொல்லிச் சொல்லவில்லை. அடுத்தவனுக்கு வெக்கப்பட்டுக் கொண்டு ஏன் கடைப்பிடிக்கின்ற மூடநம்பிக்கையற்ற செயற்பாடுகளை இடைநடுவில் கைவிட வேண்டும் என்பது தான் என் வினா!

சரியோ பிழையோ சம்பிர்தாயங்களும், கலைநிகழ்வுகளும், விழாக்களும் தான் நாம் தமிழர் என்ற அடையாளத்தைப் பேண வேண்டும் என்ற உயிர்ப்பைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

அதைத் தொலைக்கக் கூடாது என்றால் அவை எமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால் தற்போது மக்கள் நடந்து கொள்ளும் விதத்தில் அல்ல..

Link to comment
Share on other sites

நான் பார்த்தவாக்கில்... புகலிடத்துக்கு வந்தும் பெனிவிட் எடுக்கிறவையும்.. ஊரில அடிமட்டத்தில இருந்து வந்து புகலிடத்தில எழுந்தவையும் தான் இந்த சாமத்தியவீடு அசிங்கம் என்று அநேகம் குரல் கொடுக்கினம். அவைதான் தாங்கள் ஊரில் செய்த தவறுகளை மறைக்க அவற்றை நாகரிகப் புரட்சிகளா சித்தரிக்கினம். அவை காணாததைக் கண்ட பேரதிர்சியில உதுகளைச் செய்யினமே தவிர.. சமூகவியல் நோக்கோடு அணுகிறதா எனக்குத் தெரியல்ல.

சமூக அக்கறை, சமூக அறிவியல் என்று எதுவுமே அற்று ஏதோ பிறந்தமா உழைச்சமா வாழ்ந்தமா குட்டி போட்டமா.. குட்டிகளை வளர்த்து.. அதுகளைக் குட்டி போட வைச்சமா என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கூட்டம்..!

சாமத்தியச்சடங்குள் பற்றி விமர்சிப்பவர்கள் யார் என்பதற்கு மேலே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சாமத்திய சடங்குகளை பற்றி விமர்சிப்பவர்கள் தமது தாயகத்தில் தவறுகள் விட்டவர்கள். அதாவது சாமத்திய சடங்குகளை விமர்சையாக செய்யாமல் தவறுகள் விட்டவர்கள்.

ஊரில் இருந்த வறிய மக்கள் புலம்பெயர் தேசத்தில் காணாததை கண்டவர்களாக பேரதிர்ச்சியில் இவ்வாறு விமர்சனம் செய்கின்றார்கள் ஏனையவர்கள் செல்வந்த மக்கள் ஊரிலே எல்லாவற்றையும் கண்டவர்களாதலால் அதிர்ச்சி இன்றி உள்ளனர்

சுட்டிக்காட்டப்படும் மக்கள் சமூக அக்கறையில் விமர்சனம் செய்யவில்லை.

அடுத்தது வறியமக்கள் தினக்கூலிகள் எல்லாம் மனிதவர்கத்துக்குள் அடங்காதவர் அவர்களுக்கு பிறக்கும் மழலைகள் பெற்றெடுக்கும் தாய் ஆடுமாடுகளுக்கு ஒப்பாக குட்டி போடும் இனம். அவைகளை குட்டி போட வைக்கும் கூட்டம்.

ஊரில் அடிமட்டம் என்று சொல்லப்படுவதில் வறுமையும் சாதியத்தில் தாழ்வையும் அதே நேரம் தான் அவ்வாறானவர் இல்லை என்ற திமிரும் முன்வைக்கப்படுகின்றது.

பெனிவிட்- அரசின் சலுகைகளை எடுப்பவர்கள் ஊரில் அடிமட்டத்தினர் என்ற கருத்து உருவாக்கப்படுகின்றது.

இவ்வாறுதான் மேலே சொல்லப்பட்ட கருத்து சாமத்திய சடங்கை வைத்து சமூக அக்கறை பேசுகின்றது. அதுவும் பாரதியை நினைவு படுத்தும் முண்டாசு கட்டிய உருவப்படத்துடன்.

சாமத்திய சடங்கின் விமர்சனம் என்பது இங்கு சிறு விசயம். மானுட உறவுகள் எவ்வளவு தூரம் ஈவிரக்கமற்ற சிந்தனையுடனும் வர்க்க மேலாதிக்க மனோபாவத்துடனும் அணுகப்படுகின்றது என்பதை பாருங்கள்.

சமூகவியல் அறிவியலுக்கு புரியாத ஒரு விசயம் இருக்கின்றது. உழைத்து வாழும் எவனும் எவனுக்கும் தாழ்ந்தவனோ அல்லது சமூக அக்கறை இல்லாதவனோ அல்ல. சமூக அக்கறை பற்றி பேசும் ஒருவன் வாழவேண்டுமானால் நாலுபேர் வயல்களிலும் தொழிற்சாலைகளிலும் வேர்வை சிந்தி உழைக்கின்றார்கள் என்று அர்த்தம். ஏர்பிடிக்காவிடில் முற்றிலும் துறந்த முனிவனும் உயிர்வாழ முடியாது. உழைப்பாழியின் தியாகத்தில் அவன் வியர்வை ரத்தத்தை உறிஞ்சித்தான் இந்த மானுடத்துக்கு விரோதமான இவ்வாறான திமிரை கூட பேச முடியும்.

சமூகவியல் சிந்தனை என்பதும் சமூகம் நிலைத்து நிற்கும் அத்திவாரம் என்பதும் அனைத்து தரப்பட்ட மக்களின் பிணைப்பினால் ஆனவை. ஒருவன் உக்காட்ர்நத இடத்தில் இருந்து உண்டி வளர்பான். என்னுமொருவன் அவன் உழைப்பில்லாமல் இருப்பதற்கும் சேர்த்து உழைப்பான். உழைப்பில்லாமல் இருப்பவனுக்கும் சேர்த்து உழைப்பதால் சிந்திக்கும் படிக்கும் நேரத்தை தியாகம் செய்திருப்பான். என்னுமொருவன் மலத்தை சுத்தம் செய்து கொண்டிருப்பான். என்னும் எத்தனையோ செயற்பாடுகள் சேர்ந்தது தான் சமூகம்.

இதில் வாய்ப்பேச்சால் வர்க்கத்தால் சாதியால் உயர்ந்து அந்தஸ்து சமூக சிந்தனை கலாச்சாரம் பண்பாடு என்றும் ஒரு தரப்பு கதைத்தாலும் செயற்பாடால் தியாகத்தல் உழைப்பால் என்னுமொரு தரப்பு சமூக கட்டுமானத்திற்கும் மறு தரப்பின் உயர்வுக்கும் செயல் வடிவமாக இருக்கும். சுரண்டி மூக்கு முட்ட உண்டுவிட்டு அவன் குட்டி போடுறான் நாங்கள் பிள்ளை பெறுகிறம் என்று அறிவியல் சமூக சிந்தனை பேசுகின்றீர்கள்? பேசுங்கள் நல்ல பேசுங்கள். இதற்கும் ஒரு குதர்க்கத்தை எடுத்து வருவீர்கள் என்று தெரியும் எதை எடுத்து வந்தாலும் இந்த பதிலே உங்களது மானுடத்தின் மேலான சிந்தனைக்கு போதுமான விளக்கமாக இருக்கும்.

மேலும் ஒரு குறிப்பு

தத்தமது சொந்த நாடுகளில் வாழமுடியாத சூழலில் மேற்கு நாடுகளுக்கு உரிய அகதிப்பதிவுடன் வரும் ஏனைய நாட்டு அகதிகள் போல் ஈழத்து அகதிகள் பெரும்பாலும் மேற்கு நாடுகளுக்கு வருபவர்கள் அல்ல. மேற்கு நாடு ஒன்றுக்கு போக வேண்டுமானால் ஏற்படும் செலவு ஆதரவு எவ்வளவு தூரம் வேண்டும் என்று யாவருக்கும் தெரியும்

மேற்கு நாடுகளுக்கு போக முடியாமல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தங்கள் வசதிக்கேற்ப உழைக்க செல்லும் மக்கள் ஏராளம்

இந்த வசதிகள் அற்ற நிலையில் ஈழத்திலும் தமிழகத்திலும் அகதிகளாக இருக்கும் மக்கள் ஏராளம்

இந்தியாவுக்கு அகதியாக போக கூட படகுக்கு செலுத்த பணமில்லாமல் தாயகத்தில் தங்கிவிட்ட மக்களும் இருக்கின்றார்கள்.

போரின் கொடுமைகள் எமது மக்கள் வாழ்வை எவ்வளவு சீரளித்ததுள்ளது என்பது யாவருக்கும் தெரியும். இந்த நிலையில் புலம் பெயர் தேசத்தில் சாமத்திய சடங்கை விமர்சிப்பவன் எந்த நிலையில் உள்ளான் என்று சிந்திக்க வேண்டும். அவனே குட்டி போடும் கூட்டம் என்றால் எனைய எம்மக்கள் எந்தக் கதி? எம்மை தமிழினம் என்று சொல்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் சார்... நீங்கள், நான் குறிப்பிட்ட அடிமட்டம் தொடர்பில் விளங்கிக் கொண்டது உங்களின் எண்ணப்பாடே அன்றி எனதல்ல.

எனது கருத்தின் படி அடிமட்டமென்பது சமூக அக்கறை சமூகச் சிந்தனை வளர்ச்சி மற்றும் சமூகத்தின் தனித்துவக் காப்பு என்பவை தொடர்பான அக்கறைகள் ஏதுமின்றி வாழ்பவர்கள் அனைவரையும் எந்த வேறுபாடும் இன்றி வரையறுக்கிறது.

பெனிபிட் எடுக்கிறவங்க கூட ஒரு வகை சுரண்டல் பேர்வழிகள் தான். அடுத்தவர்களின் உழைப்பைச் சுரண்டித்தான் அரசுகள் இவர்களுக்கு கொடுக்கின்றன.

விலங்குகள் தான் தனது சமுதாயம் அதன் தனித்துவம் என்ற எந்தச் சிந்தனையும் இல்லாமல் தான் இயற்கைக்கு அமையப் பிறந்தது எப்படியோ அப்படியே வளர்ந்து தேடி ஓடி சாப்பிட்டு குட்டிபோட்டு.. பிறகு குட்டிக்கு குட்டி போடக் கற்றுக் கொடுத்து வாழ்கிறது. அப்படித்தான் கலாசாரம் பண்பாடு என்பன வற்றினூடு வரும் விழுமியமிக்க இனத்துவ தனித்துவங்களை காக்காத மனிதர்களும் நாகரிகம் என்பதை உணராத மனிதர்களும் ஏதோ பிறந்தமா வளர்ந்தமா குட்டி போட்டமா என்று வாழ்கின்றனர். இவர்கள் தான் அடிமட்ட மக்கள். இவர்களுக்குள் பொருளாதாரக் குறைவுள்ளோரும் அடங்கலாம் நிறைவுள்ளோரும் அடங்கலாம்.. படித்த மேதைகளும் அடங்கலாம் படிக்காத பாமரரும் அடங்கலாம்.

நான் தெளிவான எனது எண்ணக்கருவில் இருந்தே எனது கருத்தை வெளியிட்டேன். நீங்கள் உங்களின் எண்ணக்கருவின் படி அடிமட்டம் என்பதை சாதிய.. பொருளாதார வறுமை நிலை.. என்ற சாதாரண எண்ணக்கருக்களினூடு பெற முனைந்து அவற்றின் அடிப்படையில் உங்கள் கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள். அது உங்களின் எண்ணக்கரு. அதுவல்ல நான் குறிப்பிட்ட அடிமட்டம் என்பது. வாசகர்களும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கிருபன் அவர்களும் உங்களைப் போன்ற ஒரு எண்ணக்கருவோடு இருந்து கொண்டுதான் அதென்ன அடிமட்டம். அதற்கு என்ன அளவுகோல் என்று கேட்டார். நான் சுருக்கமாக அவருக்கு பதிலிறுத்திருக்கிறேன். அதுதான் உங்களுக்குமான பதில். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் வயசுக்கு வருவதைக் கொண்டாடுவதனால் சாமத்திய வீடு அசிங்கமில்லை என்று நிரூபித்தாயிற்று. எனவே சாமத்தியச் சடங்கைச் செய்வதனால் புலம் பெயர் நாடுகளில் வாழும் முன்னாள் அடிமட்டத்தினரும் மேல் மட்டத்திற்கு வந்துவிடலாம்.. ஆக நன்னாயிருக்கு...!

எப்படியோ காட்டுமிராண்டிக் கலாச்சாரங்களைப் புனிதப்படுத்தப் பலர் நம்மிடையே உள்ளனர்.. ***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதவிடாய் மற்றும் துணைப்பால் வளர்ச்சி என்பது உயர் பிரைமேட்டுக்கள் அடங்கும் பிரிவு விலங்குகள் எல்லாவற்றும் பொதுவானது. அவையெல்லாம் சாமத்தியச் சடங்கு செய்யுதா..???! இல்லையே. அப்ப எப்படி காட்டுமிராண்டிக் கலாசாரம் என்பீர்கள். குரங்கும் தான் புணர்ந்து குட்டி போடுது. கலியாணம் என்று முடிக்குதா இல்லைத்தானே. பிறகேன் மனிதன் மட்டும் கலியாணம் என்று சடங்குகள் வைத்து வாழ்த்துச் சொல்லி.. சாப்பாடு போட்டு..மொய் எழுதி காட்டுமிராண்டித்தனத்தைச் செய்யுறான்.. குரங்கு போல வேளைக்கு வேள கண்டதோடும் புணர்ந்து குட்டியைப் போட்டிட்டு போயிட்டு இருக்கிறதுதானே. அதுதானே அதி உன்னத நாகரிகம். சுதந்திரமான செயல். ***

Link to comment
Share on other sites

:lol::rolleyes: ஐயோ உந்த சாமாத்திய வீட்டுப் பிரச்சினை இன்னும் முடியலையா???

சரி ஏன் தலைப்புக்கு பொருத்தமில்லாத விசயம் எல்லாம் கதைக்கிறியள்???

Link to comment
Share on other sites

சிவலிங்கத்தை தடவித் தடவி பூசை அருச்சனை அபிஸேகம் செய்யிறமாம்...

சிவலிங்கம், சிவமகாலிங்கம், விஸ்ணுலிங்கம் என்று பெயர்கள் வேறை வைக்கிறமாம்.

அதோடு ஒப்பிடும் போது உதுகள் எல்லாம்? :lol:

Link to comment
Share on other sites

சாமத்தியவீடு ஆம்பிளைகளூக்கு கொண்டாடினா சிலது அசிங்கமாக இருக்ககூடும். பெண்களுக்கு கொண்டாடினா அது அசிங்கமா எண்டு பெண்கள் தான் சொல்லவேணும்.

நான் சில பெண்களை கேட்டுப்பார்த்தேன். உங்களுக்கு உங்கள் சாமத்தியவீடு செய்யுறது விருப்பமா அல்லது இல்லையா எண்டு. சிலருக்கு விருப்பம். சிலருக்கு விருப்பம் இல்லை.

புலத்தில் உள்ள சிறுமிகள் இதை விரும்புகின்றார்கள் என நினைக்கின்றேன். எனது ஒரு பெறாமகள் தனது அப்பாவிடம் எனக்கு இப்படி எல்லாம் செய்வீங்கள் தானே எண்டு சாமத்தியவீடு ஒன்றுக்கும் போன இடத்தில் கேட்டாள். அவளுக்கு அப்போது ஆறு வயது.

இதுவரை சாமத்திய வீடு கண்ட யாழில் உள்ள பெண்கள் உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டால் மேற்கொண்டு இந்த தலைப்பை என்ன செய்வது என்று நமது அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வர உதவியாக இருக்கும். :lol:

கு.போ, உங்களுக்கு சின்னனில வீட்டில சாமத்திய வீடு செய்ய இல்லையா?

Link to comment
Share on other sites

நல்லகாலம் செய்யவில்லை செய்திருந்தா வீட்டுகாறருக்கு தருணம் வரும்போது இறுதிக்கிரிகை செய்திருப்பன். அவையின்ரை நல்லகாலம் போல. :wub:

அப்ப நான் வரட்டா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியவீடு செய்திருந்தால் கொஞ்சமாவது அடக்கம், பண்பு இருந்திருக்கும்..... ம்.. என்ன செய்ய?

இறுதிக்கிரிகைகள் என்கின்றீர்கள். இந்துமுறைப்படியா அல்லது திராவிடமுறைப்படியா?

திராவிடமுறை என்று எனக்கு ஏதுமே தெரியவல்ல. வெள்ளையனைக் கொப்பி அடிச்சிருப்பினமோ?

Link to comment
Share on other sites

பெண் பூப்படைவது என்பது பெண்ணினுடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு.

தங்களுடைய மகள் எவ்வித பிரச்சனையும் இன்றி பூப்பெய்தி விட்டாள், பருவத்தின் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டாள் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

அந்த மகிழ்ச்சியை தமது உறவினர்களோடு கொண்டாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது.

ஆனால் தற்பொழுது செய்வது போன்று ஊர் உலகத்திற்கு சொல்லி ஆர்ப்பட்டம் செய்வது சரியா என்பது என்னுடைய கேள்வி.

தான் பருவமெய்திய விடயம் உலகம் முழுவதும் பகிரங்கப்படுத்துவதை சம்பந்தப்பட்ட பெண் உண்மையிலேயே விரும்புவாளா?

அந்தச் சிறுமியின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்கப்படுகிறதா?

வேறொரு இனமும் கொண்டாடுகிறது என்ற காரணம் ஒரு சடங்கை நியாயப்படுத்த போதுமானது அல்ல.

இன்றைக்கு நடக்கின்ற சாமத்தியச்சடங்குகள் சம்பந்தப்பட் சிறுமிகளின் அந்தரங்க உரிமையை பறிப்பது போன்று நடப்பதாகத்தான் நான் கருதுகின்றேன்.

புலம்பெயர் நாடுகளில் இந்தச் சடங்குகள் தேவையே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்திய விழாவிற்குப் எடுத்துச் செல்ல வசதியாக ஏதாவது கார்ட் இருக்கா? பேர்த்டே கார்ட், வலன்ரைன் கார்ட், வெடிங் கார்ட், அனிவேர்சரி கார்ட் எல்லாம் இருக்கு.. ஆனால் பியூபேர்ற்றிக் கார்ட் அகப்படுதில்லை..

மேடையில் போய் என்ன சொல்லலாம்? வெல் டன்??, யூ டிட் இற்??> :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.