Jump to content

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையும் இந்தியாவும் கண்டமேடை எனும் ஒரு பொது அடித்தளத்தின் மேல் தான் அமைந்துள்ளன. இந்தப் புவியியல் அமைப்பு இலங்கையின் வடமுனைக்கும் இந்தியாவின் தென் துருவத்திற்குமிடையில் ஒரு பாலம் அமைந்திருப்பது போன்ற தோற்றப்பாட்டைக் கொடுக்கக் கூடும். நான் இராமர் இருந்தாரா இல்லையா என்றெல்லாம் தீர்ப்பெழுத வரவில்லை. ஆனால் இப்படியான பண்டைய கட்டமைப்புகள் இருந்தனவா என அறிய, நுணுக்கமான முறைகள் எல்லாம் நவீன தொல்பொருளியலில் தற்போது பயன்படுகின்றன. இந்தியாவுக்கோ அல்லது முன்னேறிய இன்னொரு நாட்டுக்கோ இத்தொழில்நுட்பங்கள் எட்டாதவை அல்ல. இதை சீரியசாக எடுத்துக் கொள்ளாததால் ஆய்வுகள் செய்யப் படாமல் இருக்கக் கூடும். அல்லது ஆழ ஆராயப் போய் அப்படி இல்லை என்று கண்டுபிடித்தால் மதத்தை வைத்து அரசியல் நடத்தும் கைங்கரியத்தில் ஆப்பு விழலாம் என்ற பயமும் உண்மையான விஞ்ஞான ஆய்வைத் தள்ளிப் போட ஒரு காரணமாக இருக்கலாம். இதற்காகத்தான் திறந்த மனதுடன் இப்படியான விடயங்கள் அணுகப்பட வேண்டும். யேசுவின் உடலைப் போர்த்தியதாக ஒரு துணி கண்டுபிடிக்கப் பட்ட போது முதலில் வத்திக்கான் அதை ஒரு புனிதப் பொருளாக மறைத்து வைத்தது. பின்னர் வத்திக்கான் தலைமையில் மாற்றம் வந்த போது இத்துணியின் மாதிரிகள் உலகின் சில முன்னணி ஆய்வுகூடங்களுக்கு காபன் டேற்றிங் செய்வதற்காக அனுப்பப் பட்டன. திறந்த மனதுடனான அணுகுமுறை இப்படிப் பட்ட உணர்ச்சி மயமான விவகாரங்களைத் தீர்த்து வைக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

எனது கேள்வி பல நுற்றாண்டு காலமாக சொல்லப்படும் இராமாயணத்தில் வரும் அதே இடத்தில் அதேபகுதியில் இந்த பாலம் போன்ற அல்லது பாலம் எப்படி உருவாகியது?

இப்போ தான் இதை கடலுக்கடியில் கண்டுபிடித்தார்கள்.

ஆனால் இராமாயணத்தில் பல பல நுற்றாண்டுகளுக்கு முன்பே அந்த பகுதியை குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றார்கள். அதற்கான அடையாள சின்னங்களும் நம்பிக்கை தருவதாக பல இருக்கின்றன

இதன் பொருள் என்ன?

உங்களுக்காக இந்த இணைப்பு. இராஜஇராஜ சோழன் தஞ்சாவூர் கோவிலை எப்படிக் கட்டியிருப்பான் என்பது பற்றிய ஒரு ஆய்வு.

http://video.google.ca/videoplay?docid=-5096103596865842301

நன்றி துயவன்

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள தமிழ் லினக்ஸ்,

தேடிப்பார்க்க வேண்டும் என்பதே சுருக்கமான பதில். சில சாத்தியமான விளக்கங்கள் தரலாம். இராமாயணம் எழுதப் பட்ட காலத்தில், தென்னிந்தியாவை ஒட்டிய புவியமைப்பு அறியப்பட்டிருக்கலாம்.அது ஒரு கற்பனைக் கதையாக எழுதப்பட்டதாக ஒரு சாரார் சொல்வதால், எழுதியவர் இப்புவியியல் அமைப்பை தனது கதையில் இராமர் கட்டிய பாலமாகச் சித்திரித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவையெல்லாம் தெளிவாக வேண்டுமெனில், இராமாயணத்தின் உண்மையான வயது கணிக்கப் பட வேண்டும். அக்காலப் பகுதியில், அப்பிராந்திய நாகரிகத்தில் இது போன்ற புவியியல் அறிவு இருந்ததா எனப் பார்க்க வேண்டும். தொல்பொருள் மற்றும் இதிகாச இயல் போன்ற துறைகளில் வியாக்கியானம் தான் முக்கியமானது. அந்த வியாக்கியானம் அதைச் செய்பவரின் விருப்பு வெறுப்பினால் அன்றி, தகவல்களினால் உருவாக்கம் பெற வேண்டும்.உதாரணத்திற்கு, பைபிளை அப்படியே யாரும் நம்புவதோ பின் தொடர்வதோ மூட நம்பிக்கை. ஒவ்வொரு கருத்தும் அது என்ன காலத்தில் எந்த கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவரால் எழுதப் பட்டது எனப் பார்த்த பின்னரே அதன் உண்மைத்தன்மை தெரியவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவரால் எழுதப் பட்டது எனப் பார்த்த பின்னரே அதன் உண்மைத்தன்மை தெரியவருகிறது.

சாதி பாக்கல்லையோ

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு நாளுக்கு 6.8 கி.மீ. படி ராமர் பாலம் கட்டியுள்ளார். இது எந்த தொழில்நுட்பத்தில் சாத்தியமானது என்று தெரியவில்லை. வெறும் பாறைகளைக் கொட்டுவதற்கே இதைவிட அதிக காலம் பிடிக்கும். அவர் கடவுள் அவதாரம்தானே.. அவருக்கு அது சாத்தியமென்றால் ஒரு வினாடியிலேயே அவர் அதை உருவாக்கியிருக்கலாம். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள தமிழ் லினக்ஸ்,

தேடிப்பார்க்க வேண்டும் என்பதே சுருக்கமான பதில். சில சாத்தியமான விளக்கங்கள் தரலாம். இராமாயணம் எழுதப் பட்ட காலத்தில், தென்னிந்தியாவை ஒட்டிய புவியமைப்பு அறியப்பட்டிருக்கலாம்.அது ஒரு கற்பனைக் கதையாக எழுதப்பட்டதாக ஒரு சாரார் சொல்வதால், எழுதியவர் இப்புவியியல் அமைப்பை தனது கதையில் இராமர் கட்டிய பாலமாகச் சித்திரித்திருக்க வாய்ப்பிருக்கிறது. இவையெல்லாம் தெளிவாக வேண்டுமெனில், இராமாயணத்தின் உண்மையான வயது கணிக்கப் பட வேண்டும். அக்காலப் பகுதியில், அப்பிராந்திய நாகரிகத்தில் இது போன்ற புவியியல் அறிவு இருந்ததா எனப் பார்க்க வேண்டும். தொல்பொருள் மற்றும் இதிகாச இயல் போன்ற துறைகளில் வியாக்கியானம் தான் முக்கியமானது. அந்த வியாக்கியானம் அதைச் செய்பவரின் விருப்பு வெறுப்பினால் அன்றி, தகவல்களினால் உருவாக்கம் பெற வேண்டும்.உதாரணத்திற்கு, பைபிளை அப்படியே யாரும் நம்புவதோ பின் தொடர்வதோ மூட நம்பிக்கை. ஒவ்வொரு கருத்தும் அது என்ன காலத்தில் எந்த கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்தவரால் எழுதப் பட்டது எனப் பார்த்த பின்னரே அதன் உண்மைத்தன்மை தெரியவருகிறது.

அப்போ இலங்கையிலும் இதன் பிரதிபலிப்பு எப்படி ஏற்பட்டது? திருக்கேதீஸ்வரம் திருகோணமலை திஸ்சமாகாராமை (கடலுக்கு நடுவில் ஒரு பாறை) போன்ற இடங்களிலும் இதன் அடையாள சின்னங்கள் இருக்கின்றன.

இந்த இடங்கள் எல்லாம் இராமாயணத்தில் கூறிப்பிடபடுகின்றன.

அதற்கு என்ன விளக்கம் தர போகின்றீர்கள்? புவியியல் அறிவு என்றா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குத் தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு நாளுக்கு 6.8 கி.மீ. படி ராமர் பாலம் கட்டியுள்ளார். இது எந்த தொழில்நுட்பத்தில் சாத்தியமானது என்று தெரியவில்லை. வெறும் பாறைகளைக் கொட்டுவதற்கே இதைவிட அதிக காலம் பிடிக்கும். அவர் கடவுள் அவதாரம்தானே.. அவருக்கு அது சாத்தியமென்றால் ஒரு வினாடியிலேயே அவர் அதை உருவாக்கியிருக்கலாம். :icon_idea:

தஞ்சாவூர் கோயில் எப்படி கட்டப்பட்டது. துயவன் தந்த இணைப்பில் யானைகள் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதில் ஒரு சந்தேகம் யானைகளால் சரியான இடத்தில் அந்த பிரமாண்டமான கற்களை நகர்த்தி சரியான நிலைகளில் வைக்க முடியுமா?? மனிதரால் அவை நகர்த்த முடியாது.

யானை கொஞ்சம் வேகமா தள்ளினாலே அம்போ தான் :lol: அந்த உயரத்திலிருந்த அந்த கல்லு விழுந்தால் யார் கச் பிடிப்பது :lol::lol:

Link to comment
Share on other sites

தமிழ் லினக்ஸ் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். யார்தான் தஞ்சைப் பெருங்கோவிலைக் கட்டியது. தமிழரின் கட்டடக்கலை வரலாற்றில் தஞ்சைப் பெருங்கோவில் தனித்துவம் மிக்கது.

தூயவன் இணைத்த இணைப்பில் மிகப்பாரிய கருங்கற்களை நகர்த்த யானைகளை பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யானைகளால் சரியாகச் செய்ய முடிந்திருக்காதான நீங்கள் சொல்கிறீர்கள். அப்ப எப்படி தஞ்சைப் பெருங்கோவில் கட்டப்பட்டது???

Link to comment
Share on other sites

தமிழ் லினிக்ஸ்

எமது பகுத்தறிவாளர்கள் பாலம் கட்டியதைக் காணவில்லை. அவர்களின் பகுத்தறிவு விதி 9 சொல்வதன் படி, காணாத ஒன்றை அவர்கள் நம்ப மாட்டார்கள். அதை விடுங்கோ!..நான் இருப்பதைக் கூட அவர்கள் நம்பமாட்டார்கள் ஏன் என்றால் என்னை ஒருத்தரும் காணவில்லை

தூயவன் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் காணப்படும் மணற்திட்டை மனிதனால் கட்டப்பட்ட பாலமா அல்லது இயற்கையினால் உருவானதா என்று நிறுவுவதற்குரிய எந்தவிதமான அறிவியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. தனியே இராமாயனத்தில் சொல்லப்பட்டதை வைத்து இராமர் பாலம் கட்டினார் என்றும் அது மட்டும்தான் உண்மையென்று நீங்கள் நம்புவதைப் போன்று மற்றவர்களும் நம்பவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் போலும்.

Link to comment
Share on other sites

தூயவன்

உண்மையில் தென்இந்தியாவில் இருக்கும் அந்த பிரமாண்டமான கோயில்கள் மற்றும் சிற்ப கலைகளை பார்க்கும் போது எவ்வளவு முன்னேறிய சமூதாயம் இப்போ இப்படி அடிமைதனமாய் இருக்க வேண்டியுள்ளதே என்ற எண்ணம் தான் ஏற்படுகின்றது.

எமது இதிகாசங்களில் பல உண்மைகள் மறைந்துள்ளன. அதற்கு சான்றாக இப்பவும் இருப்பது இந்த சிற்ப கலைகளும் அடையாள சின்னங்களுமே.

ஐயகோ எப்படித்தான் அடிமைத்தனமாய் போனதோ? சூத்திரன் எண்ட பெயரில் ஒதுக்கப்பட்டவன் கலைகள் கற்றால் ஈயம் காய்ச்சி அவன்ரை காதுக்கை ஊற்றினால். எப்படித்தான் முன்னேறும் சமூகம்?? அது சரி ஈழத்தமிழன் சிங்களவன் அடக்குகிறான். தமிழ்நாட்டு தமிழன் யாரிடம் அடிமைத்தனமாக அண்ணா இருக்கிறான்?

உங்கடை இதிகாசங்களிலில் இருக்கும் உண்மைகளில் எனக்குத் தெரிந்த சில...

- நரகாசுரன் உலகத்தை பாயாகச்சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளித்தான்

- பண்டியும் பூமியும் பாலுறவில் ஈடுபட்டு பிள்ளையும் பிறந்தது

- குரங்கு கரடியொல்லாம் இராமரோடு சேர்ந்து இராவனுடன் போரிட்டது.

Link to comment
Share on other sites

அப்ப சேதுவுக்கு ஆப்பு எண்டிறியள்.

இது எதிர்பார்த்தது தானே இராமர் இல்லாட்டி அங்க ஒரு அரசியல் வண்டி ஓடாது. இஞ்ச பிழைச்சா பிறகு அயோத்தி எல்லாம் பிழைச்சுபோம்

Link to comment
Share on other sites

ஜேர்மனியில் என்னுடைய தலைமையில் இயங்குகின்ற "அறிவியல் ஆய்வு மையம்" ராமர் பாலம் இல்லை என்று கண்டறிந்தள்ளது.

கம்பராமாயணத்தை தீவிரமாக ஆராய்ந்ததில் எமது "அறிவியல் மையம்" இந்த அறிவியல் உண்மையை கண்டுபிடித்துள்ளது.

:rolleyes::lol::lol::D:D

பெங்களுரில் யாரோ ஒருவர் "அறிவியல் ஆய்வு மையம்" என்ற பெயரில் ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு வான்மீகி இராமாயணத்தை ஆராய்ந்து அறிவியில் உண்மையை கண்டுபிடித்துள்ளாராம்.

இதை சிலர் நம்புகிறார்களாம்

இராமாயணம், மகாபாரதம், புராணங்களில் இருப்பது அறிவியலா?

இதிலே இன்னும் ஒருவர் தஞ்சை பெரிய கோயிலையும் கடலில் இருக்கின்ற மணல் திட்டையும் ஒப்பிடுகின்றார்.

தஞ்சையிலே இருப்பது கோயில் என்பதில் யாருக்கம் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் கடலுக்கு அடியில் இருப்பது பாலாமா, மணல் திட்டுக்களா இன்பதே இன்னும் முடிவாகவில்லை.

இந்த இரண்டையும் ஒப்பிடுவதை என்னவென்று சொல்வது?

உலகம் முழுவதும் எத்தனையோ அற்புதக் கட்டிடக்கலைகள் இருக்கின்றன. இவைகள் அனைத்தும் மனிதர்கள் ஆண்டுக் கணக்கில் உழைத்து, ஆயிரக் கணக்கான மனிதர்கள் மடிந்து, கட்டி முடிக்கப்பட்டவை.

தரையில் இருக்கின்ற சீனப் பெருஞ்சுவரைக் கட்ட எத்தனை காலங்கள் சென்றன என்று தெரியுமா? இதன் போது எத்தனை மனிதர்கள் மடிந்தார்கள் என்று தெரியுமா?

ஆனால் கடலில் இருக்கின்ற ஒரு மணற் திட்டைக் காட்டி இதை குரங்குகளும், கரடிகளும் கட்டிய பாலம் என்று சொல்வது எவ்வளவு மடமை?

முதலில் அது பாலம்தான் என்று நிரூபிக்கப்பட வேண்டும்

அதன் பிறகு அதன் காலம் கண்டறியப்பட வேண்டும்.

அதன் பிறகு அக் காலத்தில் வாழந்த மனிதர்கள் பற்றி அறியப்பட வேண்டும்

இவைகள் எல்லாம் நடந்தால், அதன் பிறகு முக்கியமான ஒரு விடயம் தெரிய வரும். இந்தப் பாலத்தை தன்னுடைய கதையில் குறிப்பிட்ட வான்மீகி ஏறக்குறைய எக் காலத்தில் வாழ்ந்திருப்பார் என்பது தெரிய வரும்.

இங்கே ஒருவர் திருகேதிஸ்வரத்தில் உள்ள பாறை இராமாயணத்தில் வருவதாக சொல்லியுள்ளார். இராமாயணத்தில் உள்ள அந்தக் குறிப்பை தர முடியுமா?

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒரு நாளுக்கு 6.8 கி.மீ. படி ராமர் பாலம் கட்டியுள்ளார். இது எந்த தொழில்நுட்பத்தில் சாத்தியமானது என்று தெரியவில்லை. வெறும் பாறைகளைக் கொட்டுவதற்கே இதைவிட அதிக காலம் பிடிக்கும். அவர் கடவுள் அவதாரம்தானே.. அவருக்கு அது சாத்தியமென்றால் ஒரு வினாடியிலேயே அவர் அதை உருவாக்கியிருக்கலாம். :lol:

டங்குவார், இது கொஞ்சம் அதிகம்!

பிறகு நான், ஏன் கடவுள் ஒரு வினாடியிலேயே அரக்கர்களை அழிச்சு சீதையை சிறை மீட்டிருக்கலாமே என்று கேட்க, பிறகு சபேசன் வந்து, இராவணன் சிதையை கடத்த முன்னரே முற்றும் உணர்ந்த இராமன் சீதையை கடத்தி ஒளிச்சு வைச்சிருக்கலாமே என்று கேட்க, அதுக்கு நான் அப்ப இராமாயணமே எழுதப்பட்டிருக்காதே என்று சொல்ல, அப்ப யம்மு வந்து "பேபிக்கு இராமாயணக் கதை சொன்னால்தான் சாப்பிடுவன்" என்று அடம்பிடிக்க, கடைசியில வலைஞன் வந்து இராமாயணத்தில சந்தேகம் என்றால் மின்னஞ்சலில் வால்மீகியோட தொடர்புகொள்ளச் சொல்லி திரியை அணைக்க........... இதுதானே உங்கள் திட்டம்!

ஆகவே நான் அப்படிக் கேட்கப் போவதில்லை! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ அந்த கதைகளில் எப்படி அந்த பெயர்கள் வந்தன? சரி அதை விடுங்கள். 18ம் நுற்றாண்டில் தென்இந்தியாவில் கட்டப்பட்டு இன்றும் தலை நிமிர்ந்து நிற்கும் பிரமாண்டமான கோயில்களை பாருங்கள்.

அப்போ எப்படி அதை கட்டினார்கள்?

காரைக்காலுக்கு அண்மையில் கடலுக்கடியில் இருக்கும் நகரம் என்ன?

இது காலத்துக்கு காலம் அழிந்து மீண்டும் உருவாகும் யுகமாயும் இருக்கலாம்

ஆனால் ரோமிலிருக்கும் ஜேசுநாதர் இரத்தக்கரை படிந்ததாக சொல்லப்படும் துணியானது போலியானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது தெரியுமா.

தெனிந்தியாவில் பிரமாண்டாமான கோவில்களை கட்டி கொடுத்த கட்டிடக்கலை ஒரு விதையில் இருந்து மரமாக வளர்ந்த வளர்ச்சியே ஆகும். தலைமுறைகளின் பாதையில் இந்த கலைவளர்ச்சியின் பயணமும் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கும் அவ்வாறு இல்லாம ஒருசில தலைமுறைகளில் அந்தக்கலையை தொலைக்கப் பட்டிருந்தால் மக்களின், அரசுகளின் உரியபராமரிப்பின்றி அந்த சந்ததி தன் சொந்த தொழிலை துறந்திருக்கும்.

ஆனால் இதற்க்கும் இராமர் பாலத்துக்கும் என்ன முடிச்சு இருக்கின்றது.

அது இராமர்தான் கட்டுய பாலம் என்று சொல்பவர்கள், ஆககுறைந்தது இராமன்வரலாறு உண்மை என்பதை நீரூபித்தாலே போதுமாகின்றது பாலத்தின் கதையை ஏற்றுக்கொள்வதற்க்கு.

நாத்தீகர்கள் சொல்கிறார்கள் என்று நீங்கள் ஆத்திரத்துடன் பார்காது உண்மை மருந்துக்காவது உள்ளதா என்று யோசியுங்கள்.

வால்மீகி இராமாயணம் என்பது தமிழனுக்கு காதுகுத்தும் சடங்கு, அதை தமிழனின் தேசிய சடங்காக்கிய பெருமை கம்பராமாயாணம் என்பதையே சாரும்.

கம்பராமாயாணத்தின் பொய்களை தோலுரித்துக்காட்ட அதன் மூலக்கதை ஒன்றே போதும்.

இராமன் வரலாற்றை உண்மை என்று சொல்லவரும் எவராவது தெளிவாக கூறுங்கள்.

இராமன் வாழ்ந்த காலத்தில் இருந்து மனிதசந்ததி தொடர்ச்சியாக வாழ்கிறதா?

இல்லை புமி அழிவின் காரணத்தால் அந்த சந்ததி புவியில் இருந்து துடைக்கப்பட்டு இன்னொரு துவக்கம் தான் இன்றுள்ள சந்ததிக்கு ஆரம்பமாய் இருந்திருக்குமா?

இந்த சந்ததிக்கு விஞ்ஞானம் தான் உலகை ஆழ்வது, முன்னாள் சந்ததிக்கு மெய்ஞானம் ஆண்டது என்று சொல்லவருகின்றீர்கள். இரு சந்ததியினரும் ஒரேபூமியின் புதல்வர்கள்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வால்மீகி இராமாயணம் இருக்கு வேத காலத்திற்கு மிகப் பிந்திய நூலாகும் புத்தரின் காலத்திற்கும் பிந்தியது என்கிறார்கள். ஏனெனில் சாக்கியமுனி என்று புத்தரைப்பற்றியும் வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இது பற்றிய மேலதிக விபரங்கள் எனக்குத் தெரியாது. சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்துக்கு அண்மைய காலங்களில் வாழ்ந்த ஒரு மன்னனைப் போற்றவே இராமாயணம் இயற்றப்பட்டதாகவும் கூறுகிறார்கள். முழு விபரங்கள் இல்லை. ராகுல சங்கிருத்தியாயன் போன்ற பகுத்தறிவாளர்கள் காப்பியங்களை பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் நோக்கி பல ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். இராமன் என்பவன் ஒரு ஆரிய இளவரசன் அவன் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலிருந்த ஆழங்குறைந்த கடற்பகுதியூடாக இலங்கைக்குச் சென்று திராவிட மன்னனான ராவணனுடன் போர்தொடுத்தான் என்று சரித்திரம் சொல்லியிருந்தால் அதுபற்றிய சர்ச்சை இந்தளவுக்கு இருக்காது. பொய்யும் புரட்டும் கலந்த புனைகதையாய்ப் போனதால் இராமனை மட்டுமன்றி எமது மன்னனான ராவணனையும் மறுத்துரைக்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

Link to comment
Share on other sites

கடைசியில வலைஞன் வந்து இராமாயணத்தில சந்தேகம் என்றால் மின்னஞ்சலில் வால்மீகியோட தொடர்புகொள்ளச் சொல்லி திரியை அணைக்க........... இதுதானே உங்கள் திட்டம்!

:rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அறிவுக் கொழுந்துகளே..

இந்திய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்த விடயம் தொடர்பாக ஓர் அறிவியல் ஆய்வுக்காக அனுமதி பெற முன் வைக்கப்பட்டுள்ள முன்னோடி அறிக்கை (draft proposal). இதனடிப்படையில் ஒரு அறிவியல் ஆய்வுக்கான தகுதியை இந்த விடயம் கொண்டிருக்கா என்பதை அவங்க தீர்மானிப்பாங்க. அதன் பின் தான் அறிவியல் ஆய்வுக்கான சான்றுகளைத் தேட குறித்த பகுதிகளை மாதிரிகளாக்கி ஆய்வுகளைச் செய்வர். ஆய்வுகள் திரட்டும் சான்றுகளின் அடிப்படையில் இறுதி ஆய்வும் அதன் முடிவுகளும் வெளியாகும்.

வான்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள படிதான் பாலம் 5 தினங்களுக்குள் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏன் சாத்தியப்படாது. நீங்கள் இன்று கடலுக்குள் காணும் பகுதி முன்னர் மேட்டு நிலப்பகுதியாக இருந்திருக்கிறது. அதன்படி ஒரு தொடர் பாதையை இடையிடையே கடலரிப்பால் அள்ளுப்பட்டுப் போன பகுதிகளை நிரப்பி பாதையாக அமைத்திருக்கலாம் தானே..! அதற்கு 5 நாள் போதும் தானே 5000 மனித வலுவைப் பாவிச்சிருந்தா..???!

எதுஎப்படியோ குறித்த பாலம் தொடர்பான புவியியல் கூறு அறிவியல் ஆய்வுக்கு உட்பட வாய்ப்புக் கேட்டு பிரேரிக்கப்பட்டிருப்பதானது முக்கியமான அம்சம். அதுதான் இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம். சேது கால்வாய் தொடர்பில் பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருக்கின்றன. அது வேறு விடயம். இது குறித்த புவியியல் அம்சமானது அறிவியல் ஆய்வுக்கு உட்பட வாய்ப்பளிக்கக் கோரி இந்தப் பிரேரிப்பு முன்வைகப்பட்டுள்ளது. இது வேறு விடயம். இது அங்கீகரிக்கப்படின் அறிவியல் ரீதியான ஆய்வுகள் ஆரம்பமாகும். இறுதியில் அறிவியல் ரீதியான முடிவுகள் எட்ட இது ஒரு முன்னோடி அவ்வளவும் தான்..!

இதை விளங்காம.. இங்கே பகுத்தரிவுக் கூட்டம்.. பினாத்திறது.. தேவையற்ற உணர்ச்சிப் பெருக்கின் விளைவு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா அறிவுக் கொழுந்துகளே..

இந்திய அறிவியல் மையம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்த விடயம் தொடர்பாக ஓர் அறிவியல் ஆய்வுக்காக அனுமதி பெற முன் வைக்கப்பட்டுள்ள முன்னோடி அறிக்கை (draft proposal). இதனடிப்படையில் ஒரு அறிவியல் ஆய்வுக்கான தகுதியை இந்த விடயம் கொண்டிருக்கா என்பதை அவங்க தீர்மானிப்பாங்க. அதன் பின் தான் அறிவியல் ஆய்வுக்கான சான்றுகளைத் தேட குறித்த பகுதிகளை மாதிரிகளாக்கி ஆய்வுகளைச் செய்வர். ஆய்வுகள் திரட்டும் சான்றுகளின் அடிப்படையில் இறுதி ஆய்வும் அதன் முடிவுகளும் வெளியாகும்.

வான்மீகி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள படிதான் பாலம் 5 தினங்களுக்குள் கட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏன் சாத்தியப்படாது. நீங்கள் இன்று கடலுக்குள் காணும் பகுதி முன்னர் மேட்டு நிலப்பகுதியாக இருந்திருக்கிறது. அதன்படி ஒரு தொடர் பாதையை இடையிடையே கடலரிப்பால் அள்ளுப்பட்டுப் போன பகுதிகளை நிரப்பி பாதையாக அமைத்திருக்கலாம் தானே..! அதற்கு 5 நாள் போதும் தானே 5000 மனித வலுவைப் பாவிச்சிருந்தா..???!

அட அறிவு பொங்கி வழியும் அற்புதமே!

இராமர் வரலாறே உண்மை என்பதை நிரூபிக்க வலு இல்லாத இந்திதுவ மதவாதம், பாலம் கட்டப்பட்டது உண்மையா, இல்லையா என்பதை சொல்லப் போகிறதா?

இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கேட்ட நாட்டின் முதலமைச்சர் தலையைக்கூட கேட்ட இந்துவெறி (இந்திவெறி) வாழும் நாட்டில் தலையை வைத்திருக்கு விரும்பும் எவனும் இந்த ஆராட்சி முடிவுகளின் உண்மையைச் சொல்ல விரும்புவானா?

Link to comment
Share on other sites

.....இதை விளங்காம.. இங்கே பகுத்தரிவுக் கூட்டம்.. பினாத்திறது.. தேவையற்ற உணர்ச்சிப் பெருக்கின் விளைவு. :rolleyes:

நேடுக்ஸ், ஆர் யூ ஒல்ரைட்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அறிவு பொங்கி வழியும் அற்புதமே!

இராமர் வரலாறே உண்மை என்பதை நிரூபிக்க வலு இல்லாத இந்திதுவ மதவாதம், பாலம் கட்டப்பட்டது உண்மையா, இல்லையா என்பதை சொல்லப் போகிறதா?

இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கேட்ட நாட்டின் முதலமைச்சர் தலையைக்கூட கேட்ட இந்துவெறி (இந்திவெறி) வாழும் நாட்டில் தலையை வைத்திருக்கு விரும்பும் எவனும் இந்த ஆராட்சி முடிவுகளின் உண்மையைச் சொல்ல விரும்புவானா?

இந்த விடயம் அறிவியல் ரீதியான அணுகப்படும் போது எட்டப்படும் முடிவுகளை எல்லோரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அறிவியல் உலகம் மதவாதிகளின் மனங்களையும் பல படிநிலைகளில் வென்றுதான் தனது நீண்ட வரலாற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு மேற்குலகம் மட்டுமன்றி இந்தியாவும் ஏன் தமிழகத்தில் உள்ள பகுத்தரிவு கூட்டமும் விதிவிலக்கல்ல..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

நேடுக்ஸ், ஆர் யூ ஒல்ரைட்?

நெடுக்ஸ்சை உணர்ச்சிவசப் பட்டி கதைக்கிறதென்று நேரடியாகவே கேட்கலாமே...??? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அறிவியல் ஆய்வு மையத்தின் இவ்வரிய பணி புல்லரிக்கச் செய்கின்றது.

இராமாயணத்தில் வரும் இராவணனுக்கு பத்து தலைகள் வந்தது பற்றியும், அதன் அமைப்பு முறை பற்றியும்,

அதன் உயிரியல் சாத்தியங்களையும் ஆய்வு செய்து முடிவுகளை அறிவித்தால் இராமாயண எதிரிகளுக்கு நல்ல பதிலடியாக இருக்கும்.

அப்புறம் பாலம் எல்லாம் கொசுறுப் பிரச்சனையாகிவிடும்.

அறிவியல் ஆய்வு மையமே உங்கள் பணிகளை முடுக்கிவிடுங்கள்.

இந்த அறிவிலிகளின் முகத்தில் அசடு வழியட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலரின் கேள்விகளுக்கான பதில்

திருக்கேதீஸவரம் இல்லை திஸ்சமகாரகமவில் உள்ள பாறை. இன்றும் இராவணன் கோட்டை என்று தான் அழைக்கபடுகிறது அங்கே.ஆரம்ப காலத்தில் அங்கே தமிழர் தான் இருந்தனர். இப்போ சிங்களவர் பூமியாக மாற்றப்பட்டுள்ளது.

தஞ்சை பெரும் கோயில் எப்படி கட்டப்பட்டதோ அக்காலத்தில். அதே போல இராமாயண காலத்திலும் அந்த பாலம் கட்டப்பட்டு இருக்கலாம்.

இராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று கேட்ட நாட்டின் முதலமைச்சர் அப்போ தஞ்சை பெரும் கோவிலை கட்டியவர் HARDARD UNIVERSITY தான் படிச்சவர் என்று சொல்ல போறிங்களோ :lol:

தூயவன் இணைத்த இணைப்பில் மிகப்பாரிய கருங்கற்களை நகர்த்த யானைகளை பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யானைகளால் சரியாகச் செய்ய முடிந்திருக்காதான நீங்கள் சொல்கிறீர்கள். அப்ப எப்படி தஞ்சைப் பெருங்கோவில் கட்டப்பட்டது

அதை தான் நானும் கேட்கிறேன்.

பாறைகளை யானைகளை கொண்டு நகர்த்தலாம். ஆனால் கோபுரத்தின் மேலே சரியான நிலையில் வைக்க முடியுமா? அந்த கோபுரம் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது அசையாமல்.

ஆனால் இத்தாலியில் சாய்ந்த கோபுரம் சாய்ந்து நிற்கின்றது :rolleyes:

தமிழ்நாட்டு தமிழன் யாரிடம் அடிமைத்தனமாக அண்ணா இருக்கிறான்?

இது கூட தெரியாத சின்னபுள்ள தனமா இருக்கே குஸ்புவிடம் :lol::D

இதிலே இன்னும் ஒருவர் தஞ்சை பெரிய கோயிலையும் கடலில் இருக்கின்ற மணல் திட்டையும் ஒப்பிடுகின்றார்.

தஞ்சையிலே இருப்பது கோயில் என்பதில் யாருக்கம் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் கடலுக்கு அடியில் இருப்பது பாலாமா, மணல் திட்டுக்களா இன்பதே இன்னும் முடிவாகவில்லை.

இந்த இரண்டையும் ஒப்பிடுவதை என்னவென்று சொல்வது?

இதிலிருந்து என்ன உங்களை பற்றி தெரிகிறது.

இன்றும் பண்டைய நாகரிகம் எவ்வளவு வளர்ச்சியானது என்பதை சான்று பகிறுகின்றது தஞ்சை கோவில்.

அதேபோல இராமர் பாலம் ஏன் இருந்திருக்க கூடாது,

காரைக்கால் கடலுக்கு கீழ் புதைந்துள்ள நகரம் ஏக்காலத்தின் நகரம்? அதுவும் கடலுக்கு கீழே தான் உள்ளது.

திருகோணமலையில் கடலுக்கடியில் இருக்கும் கோவில் எக்காலத்தான்? இந்த கோவில் பற்றி இராமாயணத்தில் கூறப்படவில்லையா?

இவை இருப்பது நிருபிக்கப்பட்டுள்ளது

மின்னல்

உங்கடை இதிகாசங்களிலில் இருக்கும் உண்மைகளில் எனக்குத் தெரிந்த சில...

- நரகாசுரன் உலகத்தை பாயாகச்சுருட்டிக் கொண்டுபோய் கடலுக்குள் ஒளித்தான்

- பண்டியும் பூமியும் பாலுறவில் ஈடுபட்டு பிள்ளையும் பிறந்தது

- குரங்கு கரடியொல்லாம் இராமரோடு சேர்ந்து இராவனுடன் போரிட்டது.

காலாகாலத்தில் இவை திரிபடைந்து இருக்கலாம்.

உதாரணமாக ஒன்றை கூறுகிறேன் கேழுங்கள். நம்புவது உங்களை பொறுத்தது. ஆனால் இது பொய்யல்ல.

எனது மூப்பாட்டனார் பாட்டனார் எல்லோரும் சித்த வைத்தியர்கள்.

நான் ஈழத்திலிருக்கும் போது அவர்களுடைய மருத்துவ ஏடுகளை பொழுது போக்கா எடுத்து வாசிப்பேன். ஆனால் ஒன்றுமே விளங்காது.

அதில் எழுதியிருந்த ஒன்று இப்பவும் ஞாபகம் உள்ளது.

சூரியனை பிடித்து அண்டையில் போட்டு நுண்ணானுடன் காச்சினால் நாககர்ப்பம் கிடைக்கும்

இது என்ன?

எனது தந்தையாருக்கும் இது பற்றி தெரியாது. எனது தாயாரிடம் கேட்டபோது என் தந்தையார் சிறுவயதில் ரொம்ப குளப்படி அதனால் எனது பாட்டனார் அவருக்கு அந்த சித்த மருத்துவத்தை சொல்லிக் கொடுக்க மறுத்துவிட்டாராம்... அப்படி நிலைமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் லினக்ஸ் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். யார்தான் தஞ்சைப் பெருங்கோவிலைக் கட்டியது. தமிழரின் கட்டடக்கலை வரலாற்றில் தஞ்சைப் பெருங்கோவில் தனித்துவம் மிக்கது.

தூயவன் இணைத்த இணைப்பில் மிகப்பாரிய கருங்கற்களை நகர்த்த யானைகளை பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் யானைகளால் சரியாகச் செய்ய முடிந்திருக்காதான நீங்கள் சொல்கிறீர்கள். அப்ப எப்படி தஞ்சைப் பெருங்கோவில் கட்டப்பட்டது???

உண்மை தான். யானைகளால் தூக்கி வைத்திருக்க முடியாதது தான். ஆனால் எப்படிக் கட்டிமுடிக்கப்பட்டது. அதையும், கற்பனை என்றோ, பொய் என்றோ சொல்லப் போகின்றீர்களா?

-------------------------------------

சபேசனுக்கு மாதம் ஒரு அமைப்புத் தொடங்கின்றதே வேலையாகக் கிடக்குப் போல. ராமசாமி இயக்கம் தொடங்கினீர்கள் அதற்கு என்னாச்சு. ராமசாமியைப் பற்றிக் கொஞ்சமாவது தெரியும். அதனால் தொடங்கினீர்கள். மன்னிக்கலாம். இப்போது தொடங்கியிருப்பது அறிவியல்........... மன்னிக்கவே முடியாது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான். யானைகளால் தூக்கி வைத்திருக்க முடியாதது தான். ஆனால் எப்படிக் கட்டிமுடிக்கப்பட்டது. அதையும், கற்பனை என்றோ, பொய் என்றோ சொல்லப் போகின்றீர்களா?

-------------------------------------

சபேசனுக்கு மாதம் ஒரு அமைப்புத் தொடங்கின்றதே வேலையாகக் கிடக்குப் போல. ராமசாமி இயக்கம் தொடங்கினீர்கள் அதற்கு என்னாச்சு. ராமசாமியைப் பற்றிக் கொஞ்சமாவது தெரியும். அதனால் தொடங்கினீர்கள். மன்னிக்கலாம். இப்போது தொடங்கியிருப்பது அறிவியல்........... மன்னிக்கவே முடியாது. :rolleyes:

துயவன் இவர்கள்

போற போக்கை பார்த்தால் தஞ்சை கோவில் Ulead GIF Animator and Photoshop மூலம் தான் உருவானது என்று சொல்ல போயினம் போல இருக்கு :lol:

Link to comment
Share on other sites

தமிழ்லினக்ஸ்!

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியதும் மனிதர்கள்தான். சீனப் பெருஞ்சுவரைக் கட்டியதும் மனிதர்கள்தான். தாஜ்மகாலைக் கட்டியதும் மனிதர்கள்தான். மனித சக்திதான் இவைகளை சாதித்தது.

ஆனால் பிரச்சனை அதுவல்ல

ராமர் பாலம் என்று சொல்லப்படுவது உண்மையிலேயே ஒரு பாலம்தானா?

அது பாலம் என்றால், அதை யார் கட்டியது என்று ஆராய்வதுதான் அறிவுள்ள செயலே தவிர, அதை ராமனும் குரங்குகளும் கட்டின என்று சொல்வது அறிவுள்ள செயல் அல்ல.

நீங்கள் அதை பாலம் என்று நம்பினால், அதை யார் கட்டியிருப்பதாக நம்புகிறீர்கள்?

வானத்திலே சந்திரன் இருப்பது உண்மை. சந்திர கிரகணத்தின் போது, அது கண்ணுக்குத் தெரியாமல் போவதும் உண்மை. அதற்காக சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்று நம்புகிறீர்களா?

பாலம் இருப்பது உண்மை என்று நிரூபிக்கப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அதை குரங்குகள் கட்டியதாக நம்புவீர்களா?

மணல்திட்டு அல்ல, அது பாலம்தான் என்று நிரூபிக்கப்பட்டால், நான் எவ்வித தயக்கமும் இன்றி அதை பாலம் என்று ஒத்துக்கொள்வேன். ஆனால் அதை இராமாயணத்தில் வருவது போன்று குரங்குகளாலும் இராமனாலும் கட்டப்பட்ட பாலம் என்பதை நம்புகின்ற அளவிற்கு நான் முட்டாள் அல்ல.

அந்தப் பாலத்தை கட்டிய மனிதர்கள் யார்? எக் காலத்தில் கட்டப்பட்டது போன்ற விடயங்களையே அறிந்த கொள்ள ஆர்வம் காட்டுவேன்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? பாலத்தின் வயது கண்டறியப்பட்டால், அதுவே இராமாயணத்தில் உள்ள பல பொய்களை வெளிப்படுத்திவிடும்.

இங்கு திஸ்சமகாரகமவில் உள்ள பாறை பற்றி சொன்னீர்கள். அது பற்றிய குறிப்பு ராமாயணத்தில் எங்கு வருகின்றது? அந்தக் குறிப்பைத் தயவுசெய்து தருவீர்களா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.