Jump to content

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் என்னுடைய தலைமையில் இயங்குகின்ற "அறிவியல் ஆய்வு மையம்" ராமர் பாலம் இல்லை என்று கண்டறிந்தள்ளது.

ஆனால் கடலில் இருக்கின்ற ஒரு மணற் திட்டைக் காட்டி இதை குரங்குகளும், கரடிகளும் கட்டிய பாலம் என்று சொல்வது எவ்வளவு மடமை?

அப்படியானால் நாயை கொண்டு துப்பறிவது, டொல்பினை கொண்டு போர் கப்பல்களை துறைமுகங்கள் போன்றவற்றை துப்பரிய அல்லது அழிக்க பயன்படுத்துவது, அமெரிக்க சில விஞ்ஞான கூடங்களில் குரங்குகளை கொண்டு வேலை செய்விப்பது

இவையெல்லாம் மடமைத்தனமா??

அந்தகாலத்தில் வந்தால் மடமைதனம். இப்போ என்றால் அறிவியலா? எம்மை விட பண்டைய காலம் மிகவும் முன்னேறியதாக இருக்கலாம். அந்த காலத்துக்கேற்ப சொற்பதங்கள் வேறுபடலாம்

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ்!

இங்கு திஸ்சமகாரகமவில் உள்ள பாறை பற்றி சொன்னீர்கள். அது பற்றிய குறிப்பு ராமாயணத்தில் எங்கு வருகின்றது? அந்தக் குறிப்பைத் தயவுசெய்து தருவீர்களா?

அந்த இடத்தின் மறுபெயர் இராமாயணத்தில் உள்ளது. தற்போது திஸ்சமகாரகம என்று அழைக்கபடுகிறது.

இலங்கையின் தென்பகுதியில் தான் இராவணன் சீதையை சிறைவைத்ததாக சொல்லபடுகின்றது. அந்த இடம் தான் திஸ்சமகாரகம இடத்திலுள்ள இராவணன் கோட்டை.

குறிப்பாக சொல்ல போனால் அந்த இடத்தின் பெயர் கிறிந்த. அங்கே தான் இப்போ Light House இருக்கின்றது.

குடா இராவணன் இடா இராவணன் என்று இரண்டு பாறைகள் உள்ளன.

யாரோ ஊர்காவற்றுரை தமிழ் பரம்பரையில் வந்த தமிழ் மக்கள் தான் நீண்ட காலமாக அந்த இடத்தில் விளகேற்றி வந்ததாகவும் சொல்லபடுகின்றது முன்னர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விடயம் அறிவியல் ரீதியான அணுகப்படும் போது எட்டப்படும் முடிவுகளை எல்லோரும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அறிவியல் உலகம் மதவாதிகளின் மனங்களையும் பல படிநிலைகளில் வென்றுதான் தனது நீண்ட வரலாற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு மேற்குலகம் மட்டுமன்றி இந்தியாவும் ஏன் தமிழகத்தில் உள்ள பகுத்தரிவு கூட்டமும் விதிவிலக்கல்ல..! :rolleyes::lol:

நெடுக்ஸ்! இந்திய அரசின் நீதி, நிர்வாக பிரிவு பிராமண வெறியின் சட்டைப் பையில் தான் உள்ளது என்பதற்க்கு

குழந்தைபிள்ளையின் அறிவுக்கே வெளிச்சமாகிற உண்மையாக; தொழில் உரிமைக்கு சாதிரீதியான பாகுபாட்டுச் சட்டம் கொண்டுவந்தமையே, போதுமான ஆதாரம்.

இந்த சட்டம் உலக அளவில் இந்தியஅரசின் மனித உரிமை எவ்வளவு தாழ்ந்தது என்பதற்கு அமைக்கப் பட்ட கல்வெட்டு! இப்படி ஒரு கல்வெட்டை உலகில் எந்த நாட்டிலாவது காட்டுவீர்களா?

அடுத்து தலையைக் கொண்டுவா என்று அதுவும் மததலைவர்களால் அதுவும் படு வெளிப்படையாக ஆணையிட்டதன் உள்ளார்ந்த கனம் எந்துணை பாதகமானது. கடவுளை இல்லை என்று சொல்பவனை அடித்து கொல்லு என்று பகிரங்கமாக சொல்வதற்க்கு சமமானது அல்லவா?

இங்கே உள்ள சட்டதின் நீதி உயிருக்கு பிச்சை அல்லவா எடுக்க வேண்டும்.

இவர்கள் தமக்கு இஸ்டம் இல்லாதவர்களை தூக்கி எறிந்த வரலாற்றுக்கு ஆதாரங்கள் மிக அண்மையிலேயே பல நிகழ்ந்துள்ளன அல்லவா?

Link to comment
Share on other sites

அட ராமா! :rolleyes:

நாய்க்குள்ள மோப்ப சக்தியைக் கொண்டு அதை துப்பறியப் பயன்படுத்துகிறார்கள். இதைப் போய் குரங்கு பாலம் கட்டிய விடயத்தோடு ஒப்பிடுகிறீர்களே!

குரங்குகள் தாம் வாழ்வதற்கே ஒரு வீடு கட்டத் தெரியாமல் மரக் கிளைகளில் வாழ்கின்றன. அவைகள் பாலம் கட்டுமா?

ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கின்றன. குரங்குகளால் குட்டிக்கரணம் அடித்து வித்தைதான் காட்ட முடியும். பாலம் கட்ட முடியாது. இதை புரிந்து கொள்ள பெரிய அறிவு எதுவும் தேவையில்லை.

ஆனால் ஒரு மனிதனை "குரங்குகள் பாலம் கட்டின" என்று நம்ப வைப்பதற்கு ஒரு மதத்தால் முடிகிறதே! இதை விட மதம் வேறு என்ன தீங்கை செய்து விட முடியும்?

திஸ்சகரகமவில் உள்ள பாறை பற்றிய ராமாயணக் குறிப்பைத் தாருங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏதோ, மாறி மாறி சொல்கிறீர்களே தவிர எதையும் தருகிறீர்கள் இல்லை.

வான்மீகி இராமாயணத்தில் இருந்தோ, கம்பராமாயணத்தில் இருந்தோ இந்தப் பாறை பற்றி வருகின்ற பாடல்களை தர முடியுமா?

உங்களால் முடியாது. காரணம் இந்தப் பாறை பற்றி இராமாயணம் எதுவும் சொல்லவில்லை. பிற்காலத்து மனிதர்கள் தாமாக ஒவ்வொன்றைக் காட்டி அதை இராமாயணத்தோடு தொடர்பு படுத்தி ஒவ்வொரு பெயரை வைத்து விட்டுப் போயுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் ஒரு மலையை அனுமானுடைய வால் என்று சொல்வர்கள். கச்சதீவு பற்றியும் ஒருவர் இங்கு சொல்லியிருந்தார். இப்படி சிலர் தாமாக வைத்த பெயர்களை இராமாயணத்திற்கு ஆதாரமாக கொள்ள முடியாது. இவைகள் புவியியல் ஆதாரங்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ்!

ராமர் பாலம் என்று சொல்லப்படுவது உண்மையிலேயே ஒரு பாலம்தானா?

அது பாலம் என்றால், அதை யார் கட்டியது என்று ஆராய்வதுதான் அறிவுள்ள செயலே தவிர, அதை ராமனும் குரங்குகளும் கட்டின என்று சொல்வது அறிவுள்ள செயல் அல்ல.

நீங்கள் அதை பாலம் என்று நம்பினால், அதை யார் கட்டியிருப்பதாக நம்புகிறீர்கள்?

வானத்திலே சந்திரன் இருப்பது உண்மை. சந்திர கிரகணத்தின் போது, அது கண்ணுக்குத் தெரியாமல் போவதும் உண்மை. அதற்காக சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்று நம்புகிறீர்களா?

பாலம் இருப்பது உண்மை என்று நிரூபிக்கப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அதை குரங்குகள் கட்டியதாக நம்புவீர்களா?

மணல்திட்டு அல்ல, அது பாலம்தான் என்று நிரூபிக்கப்பட்டால், நான் எவ்வித தயக்கமும் இன்றி அதை பாலம் என்று ஒத்துக்கொள்வேன். ஆனால் அதை இராமாயணத்தில் வருவது போன்று குரங்குகளாலும் இராமனாலும் கட்டப்பட்ட பாலம் என்பதை நம்புகின்ற அளவிற்கு நான் முட்டாள் அல்ல.

வானத்தில் சந்திரன் .....அதற்கான பதிலை என் சொந்த அனுபவத்தில் சொல்லியுள்ளேன்.

காலத்தில் திரிபு நிலையாகவும் இருக்கலாம். அல்லது அதன் உண்மையான கருத்து வேறொன்ராக இருக்கலாம்

குரங்கு விஞ்ஞான கூடங்களிலேயே இப்போ வேலை செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ராமா! :rolleyes:

வான்மீகி இராமாயணத்தில் இருந்தோ, கம்பராமாயணத்தில் இருந்தோ இந்தப் பாறை பற்றி வருகின்ற பாடல்களை தர முடியுமா?

உங்களால் முடியாது. காரணம் இந்தப் பாறை பற்றி இராமாயணம் எதுவும் சொல்லவில்லை. பிற்காலத்து மனிதர்கள் தாமாக ஒவ்வொன்றைக் காட்டி அதை இராமாயணத்தோடு தொடர்பு படுத்தி ஒவ்வொரு பெயரை வைத்து விட்டுப் போயுள்ளார்கள்.

சீதையை இராவணன் சிறை வைத்த இடம் என்பது புரியவில்லையா????

முதலில் இராமாயணத்தை சரியாக படியுங்கள். சீதையை இராவணன் சிறைவைத்த இடம் எங்கே என்று சொல்லப்பட்டிருக்கிறது?

ஜயோ இது என்ன குரங்குகள் விஞ்ஞான கூடங்களில் வேலை செய்யும் போது சும்மா சும்மா மண்ணை அள்ளி போடுறது பெரிய வேலையா அதுகளுக்கு.

விண்வெளிக்கே குரங்குகள் சென்று வருகின்றன எந்த குழப்படியும் செய்யாமல் :lol::lol: . அந்தளவுக்கு எமக்கு பகுத்தறிவு இல்லையா என்ற சந்தேகம் தான் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ராமா! :rolleyes:

நாய்க்குள்ள மோப்ப சக்தியைக் கொண்டு அதை துப்பறியப் பயன்படுத்துகிறார்கள். இதைப் போய் குரங்கு பாலம் கட்டிய விடயத்தோடு ஒப்பிடுகிறீர்களே!

குரங்குகள் தாம் வாழ்வதற்கே ஒரு வீடு கட்டத் தெரியாமல் மரக் கிளைகளில் வாழ்கின்றன. அவைகள் பாலம் கட்டுமா?

ஒவ்வொரு மிருகங்களுக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கின்றன. குரங்குகளால் குட்டிக்கரணம் அடித்து வித்தைதான் காட்ட முடியும். பாலம் கட்ட முடியாது. இதை புரிந்து கொள்ள பெரிய அறிவு எதுவும் தேவையில்லை.

ஆனால் ஒரு மனிதனை "குரங்குகள் பாலம் கட்டின" என்று நம்ப வைப்பதற்கு ஒரு மதத்தால் முடிகிறதே! இதை விட மதம் வேறு என்ன தீங்கை செய்து விட முடியும்?

நாய் மொப்ப சக்தி இருப்பது உண்மைதான். ஆனால் அது தானாக செய்கின்றதா? அல்லது யாரும் பயிற்றுவித்த பின்னர் செய்கின்றதா?

குரங்கு அதேபோல தான் குரங்கும்

Link to comment
Share on other sites

இராமாயணத்தில் சீதை சிறைவைத்த இடத்திற்கும் நீங்கள் சொல்கின்ற இடத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் எவை?

இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட இடம் நீங்கள் குறிப்பிட்ட இடம்தான் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?

இவைகளை இராமாயணத்தில் உள்ள குறிப்புகளையும் தந்த, அந்தக் குறிப்புகள் நீங்கள் சொல்கின்ற இடத்தோடு எந்த வகையில் ஒத்துப் போகின்றன என்று விளக்க முடியுமா?

நான் இராமாயணத்தை படித்து விட்டே உங்களிடம் கேட்கிறேன். என்னால் இந்தப் பாறை பற்றிய குறிப்பை இராமாயணத்தில் கண்டுபிடிக்க முடியாததாலேயே உங்களிடம் கேட்கிறேன்.

உங்களால் அவைகளை தர முடியாது என்று எனக்குத் தெரியும். காரணம் அப்படியான குறிப்புகள் இராமாயணத்தில் இல்லை. இருந்தால் தாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராமாயணத்தில் சீதை சிறைவைத்த இடத்திற்கும் நீங்கள் சொல்கின்ற இடத்திற்கும் உள்ள ஒற்றுமைகள் எவை?

இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட இடம் நீங்கள் குறிப்பிட்ட இடம்தான் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள்?

இவைகளை இராமாயணத்தில் உள்ள குறிப்புகளையும் தந்த, அந்தக் குறிப்புகள் நீங்கள் சொல்கின்ற இடத்தோடு எந்த வகையில் ஒத்துப் போகின்றன என்று விளக்க முடியுமா?

நான் இராமாயணத்தை படித்து விட்டே உங்களிடம் கேட்கிறேன். என்னால் இந்தப் பாறை பற்றிய குறிப்பை இராமாயணத்தில் கண்டுபிடிக்க முடியாததாலேயே உங்களிடம் கேட்கிறேன்.

உங்களால் அவைகளை தர முடியாது என்று எனக்குத் தெரியும். காரணம் அப்படியான குறிப்புகள் இராமாயணத்தில் இல்லை. இருந்தால் தாருங்கள்!

இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்ட இடம் நான் சொல்லும் இடம் இல்லை என்று நீங்கள் எப்படி சொல்கின்றீர்கள???. இந்த இடம் பல்லாண்டு காலமாக சொல்லப்பட்டு வரும் இடம். நானும் சிறுவயதில் அங்கே சென்றுள்ளேன் பார்க்க.

இராமாயணத்தில் சீதையை இலங்கையில் தானே சிறை வைத்ததாக சொல்லப்படுகின்றது? அதில் ஏதும் சந்தேகம் இருக்கா?

இராமாயணத்தை நீங்கள் படித்தால் இலங்கையில் எந்த இடம் என்று சொல்லுங்கள் குறிப்பிட்ட பார்கலாம்.

அதை உங்களால் சொல்ல முடியாது. இது கூட தெரியாமல் எப்படி ஆராச்சி செய்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணத்தில் குரங்குக் கூட்டம் என்று சொல்லாமல் வானரக் கூட்டம் என்று தான் குறிப்பிட்டுள்ளனர். தென்னிந்தியப் பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகளை அப்படிக் குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு. ஆனால் எதற்கும் அறிவியற்பூர்வமான அணுகுமுறையுடன் கூடிய சான்றுகள் தேவை. அதற்கு அடிப்படையாகவே இராமர் அணை தொடர்பான அறிவியல் ஆய்வுகளைத் தொடங்க உத்தரவு கேட்கப்படுகிறது. அது கிடைக்கும் போது பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வரலாம். பல வரலாறுகள் மாற்றமடையலாம்.

மாறி மாறி வாயால் வெட்டி... எதையும் எவரும் சாதிக்கப் போவதில்லை. அறிவியல் தான் இந்த முடிச்சை அவிழ்க்க வேண்டும்.

இந்த விடயத்துக்கு அப்பால்..

குரங்குகளைப் பழக்கினா அவை வேலைகளையும் செய்யும் திறனைப் பெறவல்லனவே. குரங்குகள் வழமையாகவே மனிதர்களைப் போல அவையும் கருவிகளைப் பயன்படுத்தும் ஆற்றல் கொண்டவை. ஆனால் அவற்றின் தேவை என்பது எல்லாச் சந்தர்ப்பங்களும் மனிதர்களைப் போன்று மதிநுட்பத்துடன் அமைவது இல்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்

இன்னும் சில இடங்கள் இராமாயணத்துடன் தொடர்பு படுத்தி சொல்லப்படுகின்றன.

இவை பற்றி முழுமையாய் எனக்கு தெரியாது.

நிலாவேரி என்னும் கேணி . இந்த கேணி இராமர் தண்ணி அருந்த வில்லால் துளையிட்ட இடம் என்று சொல்லப்படுகின்றது.

காரைநகரிலும் இது தொடர்பான ஒரு இடம் இருக்கு என்று சொல்கின்றார்கள்

அம்பாறைக்கு அண்மையிலிருக்கும் உகண என்ற பகுதியில் முன்பு இராவணன் கும்பிட்ட ஒரு கோயில் இருந்ததாக சொல்லப்படுகின்றது.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்பவைகள் அனைத்தும் இராமாயணத்தை அடிப்படையாக கொண்டும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கதைகள்.

இவைகள் பற்றி ராமாயணத்தில் எதுவும் இல்லை. இராமன் வில்லால் துளைத்து தண்ணீர் குடித்த கதையும் இல்லை, அனுமனின் கச்சை அவிழ்ந்து விழுந்த கதையும் இல்லை, திஸ்கரகம பாறை பற்றிய கதையும் இல்லை.

இராமாயணத்தை படித்து விட்டு மனிதர்கள், இது அதுவாக இருக்கும், அது இதுவாக இருக்கும் என்று பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

இவைகள் இராமாயணத்திற்கான ஆதரங்கள் இல்லை.

குரங்கு பாலம் கட்டியது என்று நம்புகின்ற நீங்கள், குரங்கு இந்தியாவில் இருந்து தாவி இலங்கைக்கு வந்தது பற்றியும், மலையை தூக்கி வந்தது பற்றியும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு விஞ்ஞான கூடங்களிலேயே இப்போ வேலை செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்லினக்ஸ்!

தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியதும் மனிதர்கள்தான். சீனப் பெருஞ்சுவரைக் கட்டியதும் மனிதர்கள்தான். தாஜ்மகாலைக் கட்டியதும் மனிதர்கள்தான். மனித சக்திதான் இவைகளை சாதித்தது.

எமக்கும் தெரியும் நீங்கள் எதை மறைக்க முற்படுகின்றீர்கள் என்று.

உலகில் பல இப்படிப்பட்ட இடங்கள் இருக்கின்றன. அவை எப்படி கட்டப்பட்டன என்று சொல்வது இலகு.

அவற்றின் கட்டிட கலை சாதாரண மனிதரால் என்றும் உருவாக்கலாம்

ஆனால் தஞ்சாவூர் கோயிலை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்று சரியான விளக்கம் சொல்ல முடியாமல் இருக்கின்றது.

மனிதனால் கட்டப்பட்டது என்றால் ஏன் மனிதனாலே பதில் சரிவர சொல்ல முடியவில்லை?

இந்த கோவில் இப்பவும் இருக்கின்றது அதனால் தான் மறுக்கவும் முடியலை பதில் சொல்லவும் முடியலை.

இப்போ கோயில் இல்லாவிட்டால் சொல்லி இருப்பாங்க அத்த பெரிய கல்லுகளை யானை அல்லது வேறு ஏதாவது துக்கியதா பொய் சொல்லுகின்றார்கள் என்று.

ஆனால் இராமாயணம் கதைவடிவில் இருக்கின்றது அதனால் மறுத்து அறிக்கைவிடலாம்.

அதில் வரும் திருக்கோணேஸவர திருத்தலம் இப்பவும் கடலுக்கடியில் இருக்கின்றது. இராமர் பாலம் என்பதும் அதில் குறிப்பிட்ட இடத்திலேயே இருக்கின்றது. So So......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பிலிருந்து விலகிச் செல்வதற்கு மன்னிக்க வேண்டும் தமிழ் லினக்ஸ். குரங்குகள் எந்த ஆய்வு கூடத்தில் வேலை செய்கின்றன? அறியும் ஆவலில் மட்டுமே கேட்கிறேன்.

பயிற்சி அளிப்பதன் மூலம் குரங்குகளைக் கொண்டு பல வேலைகளைச் செய்ய முடியும். ஆதிகாலத்தில் விலங்குகளுக்கு பயிற்சி அளித்து வேலை வாங்கினர். யானைகள் கூட பயன்படுத்தப்பட்டுள்ளன..!

http://helpinghandsmonkeys.org/pages/helpers.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்பவைகள் அனைத்தும் இராமாயணத்தை அடிப்படையாக கொண்டும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கதைகள்.

இவைகள் பற்றி ராமாயணத்தில் எதுவும் இல்லை. இராமன் வில்லால் துளைத்து தண்ணீர் குடித்த கதையும் இல்லை, அனுமனின் கச்சை அவிழ்ந்து விழுந்த கதையும் இல்லை, திஸ்கரகம பாறை பற்றிய கதையும் இல்லை.

இராமாயணத்தை படித்து விட்டு மனிதர்கள், இது அதுவாக இருக்கும், அது இதுவாக இருக்கும் என்று பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

இவைகள் இராமாயணத்திற்கான ஆதரங்கள் இல்லை.

குரங்கு பாலம் கட்டியது என்று நம்புகின்ற நீங்கள், குரங்கு இந்தியாவில் இருந்து தாவி இலங்கைக்கு வந்தது பற்றியும், மலையை தூக்கி வந்தது பற்றியும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறீர்களா?

ஓ...அப்போ திருக்கோணேஸவரர் கோயில் பற்றி ஏதும் இருக்கா?

சீதையை எங்கே சிறை வைக்கப்பட்டது என்று குறிபிட்டு சொல்லி இருக்கா? முக்கியமாக இலங்கை என்று சொல்லி இருக்கா :rolleyes:

பாலம் போட்டால் தாவி வருவது பெரிய வேலையா :lol::lol: குரங்கு தாவி தாவி தான் போகும் :D

மலை

இருக்கே ...உங்கள் வாதத்தின் படி

மனிதனால் இந்த பெரிய கல்லை தஞ்சாவூர் கோவிலில் துக்கி வைக்க முடியும் என்றால்.

ஏன் குரங்கால் முடியாது மலையை துக்க :D:lol:

மன்னிக்கவும் இந்த Key Board ல் சில தமிழ் எழுத்துக்கள் எழுத முடியவில்லை. (துக்க)

குரங்கு விஞ்ஞான கூடங்களிலேயே இப்போ வேலை செய்கின்றன.

தலைப்பிலிருந்து விலகிச் செல்வதற்கு மன்னிக்க வேண்டும் தமிழ் லினக்ஸ். குரங்குகள் எந்த ஆய்வு கூடத்தில் வேலை செய்கின்றன? அறியும் ஆவலில் மட்டுமே கேட்கிறேன்.

விண்வெளி ஆராச்சி கூடங்களில்

Link to comment
Share on other sites

இந்தியாவின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு பற்றி சிலஅவதானங்கள் குறிப்புகள்

http://www.sangam.org/2007/11/Indo_LTTE_Wa...gy.php?uid=2643

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்வெளி ஆராச்சி கூடங்களில்

தமிழ் லினக்ஸ், விண்வெளி ஆய்வு கூடத்தில் குரங்கு வேலை செய்யவில்லை. அது உடற்றொழிலியல் மாற்றங்களை ஆராய்வதற்கான ஆராய்ச்சிப் பொருளாக மட்டுமே பயன் பட்டது. நாயும் அப்படிப் பயன் பட்டிருக்கிறது. இவை பரிசோதனைப் பொருட்கள் மட்டுமே, ஆய்வாளர்கள் அல்ல. ஒரு உயிரியலாளராக இருப்பதால் தவறான கருத்துக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க இயலவில்லை. மன்னிக்கவும். புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. மேலும், நெடுக்கர் தந்த இணைப்பு உடல் ஊனமுற்றோருக்கு குரங்கு நாய் போன்ற செல்லப் பிராணிகள் உதவுவது பற்றியது. அது இப்போது சாதாரணமாக நடக்கும் ஒன்று. குரங்கின் இந்த ஆற்றல்கள் பயிற்சியால் வளர்க்கப் படக் கூடியவை. இராமர் பாலத்தை பயிற்சி பெற்ற குரங்குப் படை கட்டியதா எனத் தெரியவில்லை. முதலில் பாலம் கட்டப் பட்டதா என்பது மட்டுமே முக்கியமான விடை தேடும் கேள்வி.

ஜந்தறிவு ஜீவன்கள் மனிதனால் பயிற்றுவிக்க பட்ட பின்னர் தான் அவற்றை கொண்டு வேலை செய்விக்கலாம்.இது போதுவான விடயம்.

1959ல் தான் முதன்முதலாக நாசா இந்த முயற்சியில் இறங்கியது என நினைக்கிறேன்.

உதாரணமாக விண்வெளி கூடங்களில் Monkeys joystick போன்றவற்றை இயக்கவில்லையா. இப்படி பல இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு அதற்குரிய கவசம் அணிவிக்கப் பட்டு அனுப்பப் பட்டதே தவிர அது எதையும் இயக்கியதாகத் தகவல்கள் இல்லை. அதன் உடலில் உடற்றொழில் மாற்றங்களை அளவிடும் சென்சர்கள் பொருத்தப் பட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குரங்கு அதற்குரிய கவசம் அணிவிக்கப் பட்டு அனுப்பப் பட்டதே தவிர அது எதையும் இயக்கியதாகத் தகவல்கள் இல்லை. அதன் உடலில் உடற்றொழில் மாற்றங்களை அளவிடும் சென்சர்கள் பொருத்தப் பட்டன.

உங்கள் கூற்றுப்படி குரங்கு ஒரே இடத்தில் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தது?

இது தானே உங்கள் பதில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கூற்றுப்படி குரங்கு ஒரே இடத்தில் ஒன்றும் செய்யாமல் அப்படியே இருந்தது?

இது தானே உங்கள் பதில்

வார்த்தைகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்து விட்டன. விவாதத் தலைப்பு எங்கேயோ நிற்கிறது. எனது கடைசிப் பதிவு இப்பகுதியில். இராமர் காலக் குரங்கு பாலம் கட்டியிருக்கும் என்று நம்ப வைக்கக் கூடிய எந்த அறிவு அல்லது பயிற்சி சார் வேலையும் நாசாக் குரங்கோ அல்லது எந்தக் குரங்கோ செய்யவில்லை. நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார்த்தைகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்து விட்டன. விவாதத் தலைப்பு எங்கேயோ நிற்கிறது. எனது கடைசிப் பதிவு இப்பகுதியில். இராமர் காலக் குரங்கு பாலம் கட்டியிருக்கும் என்று நம்ப வைக்கக் கூடிய எந்த அறிவு அல்லது பயிற்சி சார் வேலையும் நாசாக் குரங்கோ அல்லது எந்தக் குரங்கோ செய்யவில்லை. நன்றி வணக்கம்.

நாசாவின் பயிற்சியின் போது மற்ற பிராணிகளை விட குரங்கு தன் தேவைகளை சில ஆளிகளை இயக்கி தானே பூர்த்தி செய்தது. அதுமட்டமல்ல அதற்கு key bord மூலம் சில அவசர தகவல்களை அனுப்பும் முறையும் பயிற்றுவித்தார்கள்...இவை எல்லாம் சாதாரண தகவல்கள் ...இது கூட ............................ :huh::unsure::unsure:

Link to comment
Share on other sites

தஞ்சை பெரிய கோயில் விமானம் பற்றி தமிழினக்ஸ் கேள்விகளை எழுப்பியிருந்தார்.

தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் சாதனை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் விடை காண முடியாத அற்புதமும் இல்லை.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள 80 டன் எடை உள்ள விமானம் ஒரே கல்லால் கட்டப்பட்டது என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் இது உறுதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று அல்ல.

தஞ்சை கோயில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்றும் சொல்வார்கள். ஆனால் அது தவறு என்று பலர் நிறுவியுள்ளார்கள்.

கோபுர விமானத்தில் 12 விதமான கற்களின் கலவைகள் காணப்படுவதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சிறிய கற்களே மேலே கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்.

அதே வேளை ஒரே கல்லால்தான் கட்டப்பட்டது என்று கூறுபவர்களும், அந்தக் கல் மேலே எப்படிக் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கம் தருகிறார்கள்.

கோபுரம் கட்டப்பட்டதன் பின்பு அது மண்ணைக் கொண்டு "மண்கும்பி" போன்று மூடப்பட்டது. மலை போன்ற தோற்றம் பெற்ற அதில் பல யானைகளின் உதவியோடு அந்தக் கல் மேலே கொண்டு செல்லப்பட்டது. பின்பு மண் மீண்டும் அகற்றப்பட்டது.

இது அவர்களுடைய விளக்கம்.

எப்படித்தான் பார்த்தாலும், இதில் மனிதனுடைய உழைப்புத்தான் தெரிகிறதே தவிர, எந்த விளங்கமுடியாத அற்புதமும் தென்படவில்லை.

தஞ்சைக் கோயில் கட்டுவதற்கு பல ஆயிரக் கணக்கான சிற்பிகள் பயன்படுத்தப்பட்டார்கள். கட்டி முடிய 6 வருடங்கள் சென்றன.

தமிழர்களின் பெரும் சாதனையாக கருதப்படுகின்ற தஞ்சை பெரிய கோயிலை ஒரு மணல்திட்டோடு ஒப்பிடுவதற்கு சிலருடைய மதவெறியும் மூடநம்பிக்கையும் காரணமாக இருப்பது வேதனையான விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசாவின் பயிற்சியின் போது மற்ற பிராணிகளை விட குரங்கு தன் தேவைகளை சில ஆளிகளை இயக்கி தானே பூர்த்தி செய்தது. அதுமட்டமல்ல அதற்கு key bord மூலம் சில அவசர தகவல்களை அனுப்பும் முறையும் பயிற்றுவித்தார்கள்...இவை எல்லாம் சாதாரண தகவல்கள் ...இது கூட ............................ :huh::unsure::unsure:

ஐயா ஆக மனிதனை அனுப்பாது குரங்கை அனுப்பியதன் நோக்கம் மனிதனை மிஞ்சிய சக்தி இருப்பதால்தான் என்பதே உங்கள் கருத்தா?

மனித உயிருக்கு இருக்கும் மதிப்பே காரணம் மனித உயிரை பாதிக்கும் ஆராச்சிகளை சட்டம் அனுமதிக்காது.

என்பதாலேயே மனிதனை அனுப்பவில்லை.

விண்வெளியில் உள்ள சூழ்நிலை மனித உயிருக்கு எப்படி பொருத்தமானது என்றா ஆராச்சியும் அடங்கியதே அந்தப் பயணம்.

அமுக்க சமநிலை பேணப்பட விலை என்றால் உயிர் வாழ்தல் முடியாத காரியம்.

ஊதா கடந்தகதிர்களின் செறிவு அதிகம் என்றால் உடனே கைலாயம் பார்க்கவேண்டியதுதான்.

ஈர்பு விசை பலமடங்கு அதிகம் என்றால் தன்கால்களுக்கே தன் சுமையை சுமக்க முடியாது என்புகள் நொருங்கிவிடும். இவைகள் இங்கிருந்தே எம்மால் சிந்திக்க தக்கன ஆனால் இதற்க்கும் அப்பால் பல பிரச்சினைகள் எதிர்பார்க்கப் படலாம். எனவே அவை என்ன வென்று தெரியாத போது முன்னேற்பாடுகள் எவையும் அவற்றுக்கு எடுக்க முடியாது.

அதனால் தான் இப்படி குரங்கையும், நாயயும் வைத்து அனுப்புவதன் நோக்கம்.

இம் மிருகங்களில் வெளிப்படும் பாதிப்புக்களில் இருந்து அந்த காரணிகளின் தன்மையை கண்டு அறிவதே அதன் நோக்கம்.

இதை விட்டு கடவுள் குணம் குரங்கில் கொஞ்சம் இருப்பதால் தான் அனுப்பபட்டது என்று கூற வராதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.