Jump to content

அவதானம்! அறிந்தவைகளிலிருந்து ....


Recommended Posts

இவற்றை நீண்ட நாட்களாக இங்கு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன், இன்று சந்தர்ப்பம் வந்திருக்கிறது!! இவைகள் சிலவேளை பிழையானவைகளாகக் கூட இருக்கலாம்!! ஆனால் அவதானமாக இருப்போம்!!! தெரிந்த, அறிந்த சிலவற்றைப் பகிர்வோம்! தொடர்ச்சியாக ....

எனது ஒரு நண்பன் "3G" இல் தொழில் புரிகின்றான். எப்போ அவனைச் சந்தித்தாலும் "மச்சான் உனது மொமைலை சுவிச் ஓப் பண்ணடாப்பா முதலில்" என்பான் அல்லது "தூர எங்கேயாவது வைத்து விட்டு வா" என்பான். நானோ எனது சக நண்பர்களோ அவன் கூறுவதை அலட்சியம் செய்வதும், அவனுக்கு விசர் என்று நையாண்டி செய்வதும் ஆகத்தான் முடியும்.

அவன் கூறும் காரணமோ, இன்று உள்ள இந்த மொபைல் போண்கள் நாம் ஒருவருடன் அதைப் பயன்படுத்தி கதைக்காமலேயே, அந்த மொபைல் போண் எம்மோடு இருக்குமாயின், நாம் கதைப்பதை வேண்டியவர்கள்(?!) தெளிவாக உரிய இடத்தில் இருந்து கேட்க முடியுமாம். நாம் எம்மை அறியாமலேயே சிலருக்கு தேவையானவற்றைக் கொடுத்து விடுகிறோம்.

விசர்க்கூட்டம் "அல்கைதா" இன் ஆய்கினைகள் தோன்றியதன்பின், இந்த மேற்கத்தைய நாடுகள் தமது புலனாய்வு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக "Network Monitering System" ஏற்படுத்தி இருக்கிறார்களாம். இது சிலவேளை இதற்கு முன்பே ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

"Network Monitering System" எவ்வாறு செயற்படுகிறது.

குறிப்பிட்ட நபர் தனது தொலைபேசியிலிருந்து தனக்கு வேண்டிய பத்துப் பேருக்கு போண் பண்ணுகிறார். அப்பத்துப் பேரோ நூறு பேருக்கும் ..... அப்படியே ஆயிரக்கணக்கான அல்ல கோடிக்கணக்கான தொலைபேசி அழைப்புகளை அவர்களால், அவர்களிடம் உள்ள தொழில்நுட்பத்தைப் பாவித்து மொனிற்றர் பண்ணவோ அல்லது அவற்றை பதிவு செய்யவோ முடியுமாம்.

இதில் உள்ள நுட்பமான விடயம் என்னவென்றால், நாம் எமக்கு தெரிந்த தேவையான ஒருவருக்கு எமது தொலைபேசியில் கூற வேண்டிய சில விடயங்களை கூற விரும்பாமல் ஒரு பப்ளிக் போண் பொக்ஸிலிருந்து அழைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் அழைத்தவரின் தொலைபேசி இலக்கம் மேலுள்ள பதியப்பட்ட நெட்வேக்கில் இருக்குமாயின், நாம் அவருக்கு முன்பு எப்பவோ ஒருதரம் வேறு அலுவலாக ஏதும் தொலைபேசியில் கதைத்திருந்தால், எமது குரலை அவர்களிடமுள்ள கொம்பியூட்டர் நாம் யாரென்று என காட்டுமாம்.

......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்குவைடா காரன் மட்டும் என்ன முட்டாளே. அவன் கோட் வேட்டில கதைக்க வேண்டியதை கதைச்சா கணணி அதையும் மொழி பெயர்க்குமாமோ..??! கணணிக்கு அல்கோரிதும் சொல்லிக் கொடுப்பது மனிதன் தானே. கணணியை முறியடிக்கத் தெரியாமல் இருக்கிறானே மனிதன்..??! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

னெடுக்ஸ்!

இங்கெல்லாம் பிடிபட்ட விசர்க்கூட்டம் முழுக்க முழுக்க கதைத்தது கோட்வேட்டில் தான்!!!!!! ஆனால் என்ன தம்மை அடையாளப்படுத்துவதால், அவர்கள் தொடர்ந்து கண்காணிப்புக்கு உள்ளாகிறார்கள். எப்போ தம்மை மறந்து காரியத்தில் இறங்க வெளிக்கிட முற்படும்போது, லபக் என்று அமத்தப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோழன்

உங்கள் கைத்தொலை பேசியிலிருந்து நீங்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்கலாம். அதில் சந்தேகமே வேண்டாம்.

Link to comment
Share on other sites

இதை நான் ஆமோதிக்கின்ரேன்... 100% இருக்குமிடத்தை தெரிந்து கொள்ள முடியும். இதர்க்கு தொலை பேசியில் பேசவேண்டியது இல்லை. உயிரோட்டமான தொலைபேசியை வைத்திருந்தால் போதும். எனது தொழில் துறைசார்ந்த விடயம் ஏன்பதால் இதை என்னால் உறுதிப்படுத்தமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நான் ஆமோதிக்கின்ரேன்... 100% இருக்குமிடத்தை தெரிந்து கொள்ள முடியும். இதர்க்கு தொலை பேசியில் பேசவேண்டியது இல்லை. உயிரோட்டமான தொலைபேசியை வைத்திருந்தால் போதும். எனது தொழில் துறைசார்ந்த விடயம் ஏன்பதால் இதை என்னால் உறுதிப்படுத்தமுடியும்.

ஆமாம்.

அது மட்டுமல்ல நீங்கள் இணையத்தளத்தில் உங்கள் கணனியின் ip போலியானதை பாவித்தும் எழுதலாம்.

நீங்கள் இருக்கும் நாட்டை கூட மறைத்து வேறு நாட்டில் இருப்பது போல காட்டலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப இது குடும்ப சொத்தோ? வாகனம் கொடுத்ததில் தவறே இல்லை. வழக்கு முடிந்தது.
    • அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் எப்போதும் த‌மிழ‌ன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் அதிக‌ புள்ளி பெற‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு.................இர‌ண்டு முறை பின‌லுக்கு வ‌ந்த‌ குஜ‌ராத் அணி நேற்று 89 ர‌ன் ஓட‌ எல்லாரும் அவுட் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இது தான் குறைந்த‌ ஓட்ட‌மாய் இருக்க‌லாம் நுனா அண்ணாவும் மெள‌வுன‌மாய் இருந்து புள்ளிய‌ பெற‌க் கூடும்.......................... த‌லைவ‌ரும் நானும் ஆளை ஆள் க‌ட்டி பிடிச்சு கொண்டு கீழ‌ நிப்போம்......................த‌லைவ‌ரும் நானும் ஜ‌பிஎல்ல‌ 5ப‌வுன்ஸ் வென்று விட்டோம் ஆன‌ ப‌டியால் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்ன‌ த‌லைவ‌ரே.......................
    • இப்போதும் இதை ஒத்த பிரிவு அட்டவணை 3 இல் அமெரிக்கர்களுக்கு மட்டும் உள்ளது - ஆனால் சாதா சுற்றுலா வீசா, வியாபார மற்றும் ஜனரஞ்சக காரணங்களுக்காக என உள்ளது. 5 வருடம் செல்லும். ஒரு சேர 6 மாதம் நிற்கலாம் வெறும் 100 டொலர் மட்டுமே. SL embassyயில் விசாரித்துப்பாருங்கள். Business and entertainment க்குத்தான் போகிறீர்கள் என எந்த மாதிரியான ஆதாரங்கள் தேவை என. பெரிதாக தேவைப்படாது என நினைக்கிறேன். நாடக குழு, வில்லுப்பாட்டு குழு, இசைக்குழு ஒன்றில் உறுப்பினர் என ஒரு கடிதம் எடுத்து கொடுத்தால் போதுமாய் இருக்கும் என நினைக்கிறேன். (உலக தனி பெரும் வல்லரசல்லவா - தனியுரிமை - என் ஜாய்!) ————— இலங்கையர் ஒருவரை மணந்து கொண்டால் - ஒரு சிக்கலும் இல்லாதா வதிவிட வீசா கிடைக்கும். எல்லா விதத்திலும் செளகரியமாக இருக்கும். எந்த கேள்வியும் இல்லாமல் இலங்கைக்கு போகலாம், திருப்பி வீட்டுக்குள் வருவது அவரவர் சாமர்த்தியம்🤣.
    • குமாரசாமி அண்ணை...  நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂  
    • ஈழப்பிரியன் இன்றைக்கு களத்தில் இறங்கப் போகிறான். ஓரம்போ ஓரம்போ ஈழப்பிரியனின் வண்டி வருது. நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதலானவர்கள் இன்றும் நாளையும் போட்டியில் குதிப்பார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.