Jump to content

இந்தியாவுக்கு மலேசியா பதிலடி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர்

கோலாலம்பூர்: இந்தியர்களைப் பற்றி மட்டுமே இந்தியா கவலைப்பட வேண்டும். மலேசியர்கள் குறித்து அது கவலைப்படக் கூடாது, அது தேவையற்றது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறியுள்ளார்.

மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், மலேசிய தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து மலேசிய அரசுடன் பேசப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.

இந்தியாவின் இந்த கருத்துக்கு மலேசியா வெளியுறவு அமைச்சர் அல்பார் கண்டனம் ெதரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தி ஸ்டார் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தினால் நல்லது. மலேசியர்கள் குறித்தும், மலேசிய விவகாரங்கள் குறித்தும் அது கவலைப்படத் தேவையில்லை.

எங்களது நாட்டுப் பிரச்சினைகள் குறித்து, எங்களது நாட்டுச் சட்டப்படி நாங்கள் தீர்த்துக் கொள்வோம்.

இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திய அரசு, இந்தியர்கள் குறித்துக் கவலை தெரிவித்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அவர்கள் மலேசிய குடிமக்கள் குறித்துக் கவலைப்படுகிறார்கள். அது தவறானது.

மலேசிய குடிமக்களாக இருப்பவர்கள் - அவர்கள் எந்த நாட்டைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சரி - மலேசியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்.

இந்தியாவில் இருப்பவர்களை விட மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நன்றாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை.

சட்டத்தை மீறி நடக்க முயன்றால், நாங்கள் அதை தடுக்கத்தான் செய்வோம்.

மலேசியாவில் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். எனவே இனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் பிரச்சனை எழுப்பினால் மலேசியா சிதறிவிடும் என்று கூறியுள்ளார் அல்பார்.

தற்ஸ்தமிழ்.கொம்

-------------------

தென் ஆசிய நாடுகளுக்கும் (இந்தியா உட்பட்டவை) தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் (மலேசியா சிங்கப்பூர் உட்பட்டவை) எப்பவும் கொள்கை அளவில் ஒத்துப் போறதில்லை. காரணம் ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பொருளாதாரப் போட்டா போட்டியே.

மலேசியாவில் தமிழர் விவகாரத்தை இந்தியா தனது பொருளாதார நலன் கருதி தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறதே தவிர அங்குள்ள தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் அதற்கு எள்ளளவும் கரிசணை கிடையாது என்பதே உண்மை. எப்படி ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆரம்பத்தில் தனது பிராந்திய நலன் வேண்டி ஆதரவளித்ததோ அப்படி.. இதையும் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சாதமாக்கும் வகையிலும் மலேசியாவை ஒரு அரசியல் சாதகமற்ற தளமாக்கி சர்வதேசத்துக்குக் காட்டவும் முதலீட்டாளர்களுக்குக் காட்டவும் இந்தியா இதை கையாள எண்ணியுள்ளது. அதை தமிழக சாக்கடை அரசியல்வாதிகளூடு செய்ய முனைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தமிழர் அக்கறையில்லாத கட்சிகளே அதாவது காங்கிரஸ் கட்சி கூட இது விவகாரத்தில் முண்டியடித்து அறிக்கை விட்டதும் இந்திய மத்திய அரசின் சூழ்ச்சி வெளிப்பட்டது.

அண்டை ஈழத்தில் தமிழர்கள் சிங்களப் பயங்கரவாத அரசின் வன்முறைக்கு தினமும் இறக்கிறார்கள்.. மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் சிறீலங்கா அரச படைகளால் வகைதொகையின்றிக் கைதாகிறார்கள்.. அங்கெல்லாம் மெளனம் காத்ததுடன் சிறீலங்கா அரசுக்கு ஆயுத மற்று பொருளாதார உதவி செய்யும் இந்திய மத்திய அரசுக்கு என்னடா திடீர் பாசம் மலேசிய தமிழ் மக்கள் மீது என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டு மயங்கி விழும் நிலைக்குப் போய்விட்டார்கள்..!

ஆனால் இந்தியாவின் சூழ்ச்சி என்பது அதன் பொருளாதார போட்டியாளர்களின் சரிவை வேண்டுவதும் தன்னை நோக்கி முதலீட்டாளர்களை இழுப்பதும் தான். இந்திய மத்திய அரசும் ஏதோ தான் இந்த விவாகரத்தில் அக்கறையற்றவர் போல ஆரம்பத்தில் காட்டிக் கொண்டதும்.. பின்னர் தமிழகத்தில் இருந்து எழும் அழுத்தம் காரணமாக தான் தலையிடுவது போலவும் நல்ல நாடகம் ஒன்றை அரங்கேற்றியது.

மலேசிய தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அவர்கள் இந்தியாவை நம்பி நிச்சயம் பெற முடியாது. தமிழகத்தில் உள்ள ஒரு சில தமிழுணர்வு மிக்க அரசியல்வாதிகளைத் தவிர மிகுதியானோரின் ஆதரவுக் குரலென்பது மத்திய அரசின் சொல்லுக்கு ஏற்ப எழுவதும் அடங்குவதும் ஆகும். அவை போலியானவை. இந்திய அரசியல் மயமானவை. இவற்றை நம்பி மலேசிய தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பின் இந்தியா தனது நலன் பூர்த்தியாகும் வேளையில் மலேசிய தமிழர்களையும் ஈழத்தமிழர்களைப் போல பாவித்துவிட்டு தூக்கி எறிவது நிச்சயம் நடக்கும். இறுதியில் உள்ள உரிமைகளையும் இழந்து மலேசிய தமிழ்மக்கள் மலேசிய அரசிடம் சரணாகதி அடையும் நிலையையே இந்தியா தோற்றுவிக்கும். இதற்காக மலேசிய அரசுடன் நெருங்கிச் சென்று வியாபாரம் பேசவும் இந்தியா தயங்காது. தன்னை நோக்கி பொருளாதார முதலீடுகளைக் கவர மலேசியாவுடன் ஒப்பந்தங்களை இயற்றவும் அதற்கான சந்தர்ப்பங்களை தேடவும் அதன் மூலம் தனது பொருளாதார வளர்ச்சிக்கு இவ்விவகாரத்தைப் பயன்படுத்தவுமே இந்தியா முயற்சிக்கும்.

எனவே மலேசிய தமிழ்மக்கள் தங்கள் உரிமைகளை தாங்களே போராடிப் பெற முனைவதுடன் யாரையும் முழுமையாக நம்பி அவர்களின் வழிநடத்தலின் பெயரில் போராட்டங்களை தீர்மானிக்கக் கூடாது. மலேசிய அரசவை விட இந்தியா ஆபத்தானது என்பதை மலேசிய தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு கூட மலேசிய தமிழ் மக்கள் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் என்ற நிலையில் நின்று எழுந்ததிலும் இந்திய மத்திய அரசின் ரகசிய குரலுக்கு அமைய எழுவதே அதிக சாத்திமானது. எனவே மலேசியத் தமிழ் மக்கள் தங்கள் போராட்டத்துக்கான ஆதரவை இந்தியாவை முழுமைக்கும் நம்பி ஏற்படுத்திக் கொள்வது மலேசிய அரசிடம் சரணாகதி அடைவதற்குச் சமனானது.

மலேசிய மக்கள் தமது அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை சர்வதேச மயப்படுத்துவதுடன் உலகத்தமிழினத்தின் ஆதரவை அதற்கு வேண்டிச் செயற்படுவது இந்தியாவையும் மலேசியாவையும் இவ்விடயத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் அக்கறை செய்ய அதிகம் வறுபுறுத்தும். இன்றேல் அவர்கள் தங்கள் சுயநலன்களை கவனிப்பதற்காக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது போல நாடகமாடிக் கொண்டே அவற்றைச் சீரழித்துவிடுவார்கள்..! இதுவிடயத்தில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கும் அறிக்கைப் போரை நம்பி.. மலேசிய தமிழ் மக்கள் ஏமாந்தும் விடக் கூடாது. இந்தியா மலேசியாவை விட சூழ்ச்சி மிக்க நாடு..! இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்கு விரோதமான அரசு. அதை அவர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் தெளிவுறக் காட்டிவிட்டுள்ளனர்...!

மலேசிய தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது. அதை சர்வதேச அரங்கிற்கு உலகத் தமிழர்களின் ஆதரவுடன் வெளிப்படுத்தும் அதேவேளையில் எந்த அரச சக்திகளையும் முழுமையாக நம்பி விடயங்களைத் தீர்மானிக்காமல் தங்களின் உரிமைகள் தொடர்பில் தேவைகள் தொடர்பில் தாங்களே விடயங்களைத் தீர்மானிப்பதே சிறந்தது. போராட்ட வெற்றிக்கு வகை செய்யும். அரசுகளுக்கு உண்மையான அழுத்தங்களை வழங்கும்.

Link to comment
Share on other sites

தங்கள் சுயநலன்களை கவனிப்பதற்காக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது போல நாடகமாடிக் கொண்டே அவற்றைச் சீரழித்துவிடுவார்கள்..! இதுவிடயத்தில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கும் அறிக்கைப் போரை நம்பி.. மலேசிய தமிழ் மக்கள் ஏமாந்தும் விடக் கூடாது. இந்தியா மலேசியாவை விட சூழ்ச்சி மிக்க நாடு..! இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்கு விரோதமான அரசு. அதை அவர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் தெளிவுறக் காட்டிவிட்டுள்ளனர்...!

உண்மையைத்தான் சொல்லியிருக்கிர் நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

இந்தியாவில் இருப்பவர்களை விட மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நன்றாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை.

அதெண்டால் 100வீதம் உண்மைதான் :)கொழும்பிலையும் பல நுறு இந்திய வம்சாவழி தமிழர் கைது இதுக்கும் இந்தியா ஒரு ஒப்புசபபபிலல்லா அறிக்கையாவது விடலாமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப்படைகளிடம் கடலில் உயிர்களையே தொலைத்துக் கொண்டிருக்கின்றது தமிழ்நாடு.

இங்கே எல்லாம் தன் சொந்த மக்களின் உணர்வுகளை மிதித்து அரசியல் நடத்தும் இந்திய போக்கு மலேயதமிழர்களின் பால் முதலைக்கண்ணீரதான் வடிக்க முடியும்!

பார்பானின் சட்டைப் பையுக்குள் இருக்கும் இந்திய அரசியல் அதிகாரம் வெளிப்பட்டால் தான் விடிவு இந்தியாவுக்கும், அதன் அயல் நாடுகளுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழமான பார்வை நெடுக்ஸ்

உண்மையின் தோலை உரித்துக் காட்டுகின்ற பொருத்தமான ஆதாரங்களும் வேறு!

ஆரம்பத்தில் சமாதானத்தின் சம்பந்தியோ என்று என் பார்வை உங்களை நினைக்க வைத்து விட்டது.

ஆதலால்தான் பதிவுகளால் இம்சைப்படுத்தி விட்டேன் துவக்கத்தில் மன்னிக்கவும் பழையன வற்றுக்கு.

Link to comment
Share on other sites

நெடுக்கண்ணை.. நல்ல கருத்துக்கள்..

மலேசியா மட்டுமல்லாமல் சிங்கப்பூரிலும் தமிழர் நிலை மோசமே. ஆனால் அவர்கள் மலேசியா மாதிரி போராட்டமெல்லாம் செய்யும் சாத்தியம் மிகமிகக் குறைவு. சிங்கப்பூரில் பெரும்பாலான தமிழர்கள் கல்வி கற்றுச் சிறப்புறுவதில்லை. சிலர் நல்ல நிலைக்கு வருகிறார்கள். பெரும்பாலோர் குறைந்த சம்பளத்துக்குத் தொற்சாலைகளிலும், பேப்பர் போடுதல், கார் கழுவுதல் போன்ற வேலைகளிலுமே ஈடுபடுகிறார்கள். இதற்கு அங்குள்ள ஒருவித கல்வித்தரப்படுத்தலும் ஒரு காரணம் எனக் கேள்விப்பட்டேன். உண்மை பொய் தெரியாது.

மலேசியாவில் பூமிபுத்திரா என்கிற சட்டப்படி மலாய்கள் எதிலுமே முன்னுரிமை பெறுகின்றனர். இந்தச் சட்டத்துக்கு நோக்கம் அங்குள்ள சீனர்களின் ஆதிக்கத்தை அழிப்பது. ஆனால் இதுபோன்ற சட்டங்களால் இந்திய வம்சாவழியினரும் பாதிப்படைகிறார்கள். இலங்கைச் சிக்கல் போலத்தான். இலங்கையும் மலேசியாவிடமிருந்துதான் தரப்படுத்துதல் திட்டத்தைப் பாடமாகக் கற்றுக்கொண்டதாக எங்கோ வாசித்த ஞாபகம். தெரிந்தவர்கள் விளக்கவும்.

மலேசியா சிங்கப்பூர் இரு நாடுகளும் இந்தியா பங்களாதேஷ் மாதிரியான நாடுகளிலிருந்து குறைந்த கூலிக்கு வேலையாட்களை எடுக்கின்றனர். சிங்கப்பூரிலே ஒரு பங்களாதேஷ் கூலி வேலைக்காரரின் சம்பளம் ஒரு நாளைக்கு 17 டொலர்கள். குப்பை அள்ளுவது, கூட்டுவது கட்டட கூலி வேலை போன்றவற்றை இவர்கள் செய்வார்கள். ஏற்கனவே பின்தங்கியிருக்கும் தமிழர்களுக்கு இவர்களின் வரவால் இன்னும் சம்பளப் பிரச்சினை. ஏனென்றால் இவர்கள் வேலை செய்ய மறுத்தால் முதலாளிமார் இந்தியாவிலிருந்தோ பங்களாதேஷிலிருந்தோ ஆட்களைப்பிடித்துவிடுவார்கள??. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள். இந்தியாவின் முன்னாள் தலைமைத்துவங்கள் தமிழர் பால் கொண்ட இரக்கத்தினால் ஆரம்பத்தில் உதவின என்ற கருத்து இன்றும் எம்மிடையே பலருக்கு உண்டு. இந்தியாவின் தலைவர்கள் எனும் போது தமிழ் நாட்டுத் தலைவர்களைத் தவிர்த்தே நான் சொல்கிறேன். ஏனெனின் உண்மையான தமிழ் உணர்வோடு உதவிய உதவிக்கொண்டிருக்கிற தமிழகத் தலைவர்களும் சாதாரண மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியப் பிரிவினை எனும் பூச்சாண்டியினால் அடக்கப் படுகிறார்கள் என்பதே நிஜம். மேலும் இந்தியாவிடம் அயல் நாட்டுறவுக் கொள்கைகளைப் பொறுத்த மட்டில் இரண்டு முக்கிய குணங்கள் உண்டு: ஒன்று பலம் வாய்ந்த இன்னொரு நாடு சம்பந்தப் பட்டிருந்தால் சைலன்டாக வாலைச் சுருட்டிக் கொள்வது. இரண்டு அப்படி ஒரு எதிர்ச் சக்தி இல்லாவிட்டால் பிராந்திய வல்லரசுச் சட்டையைப் போட்டுக் கொண்டு தான் என்ன பிடிக்கலாம் அந்தக் குழம்பிய குட்டையில் என்று தேடுவது. இரண்டாவது அணுகுமுறையில் தான் சிறி லங்கா மாட்டுப் பட்டிருக்கிறது. பங்களாதேஷ் அப்படித் தான் உருவாக்கப் பட்டது.அந்தக் காலப் பகுதியில் "இறைமை, ஆட்புல ஒருமைப் பாடு" போன்ற பதங்கள் இந்தியத் தலைமைத்துவத்திற்குப் பரிச்சயமாக இருக்கவில்லை. முதலாவது அணுகு முறைக்கு மியன்மார், திபெத் என்பன நல்ல உதாரணங்கள். இவ்விரு நாடுகளிலும் சீனாவின் ஆதிக்கம் இருப்பதால் வாலைச் சுருட்டிக் கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.இப்போது இன்னொரு உதாரணம் இந்த வால் சுருட்டும் அணுகு முறைக்குக் கிடைக்கப் போகிறது. வெளிநாட்டமைச்சர் சொல்வது போல எதுவும் நடந்து விடப் போவதில்லை. ஒரு சம்பிரதாயக் கவலை கூட இந்தியா மலேசியாவிடம் தெரிவிக்காது.ஏனெனில் மலேசியாவின் மத்திய கிழக்கு நண்பர்களின் மசகெண்ணெயில் தான் இந்தியாவின் பொருளாதாரம் ஓடுகிறது. எனவே மலேசிய இந்தியர்கள் தாமாகத் தனித்துத் தான் எதையாவது பெற முயல வேண்டும். இந்தியா இவர்களோடு தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளவே மாட்டாது. மேலும் இந்தியாவில் உள்ள மலேசிய முதலீடுகளை தனது சில லட்சம் மக்களுக்காக இழக்கும் அளவுக்கு இந்தியா மக்கள் நலன் பேணும் ஒரு நாடும் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குசாமி! உங்கள் இணைப்புக்கும் அதன்பின் வரும் பின்னணிக்கும் நன்றிகள் நல்லகருத்துகளை இணையுங்கள் தற்காலகட்டத்திற்கேற்ப மாதிரி செய்திகளை இணையுங்கள்.அதற்கேற்ப விவாதியுங்கள் அல்லது ஈழத்துக்கு தேவையானவற்றை விவாதியுங்கள் அதை விட்டு இராமர் பாலமும் பார்ப்பனியர் பிரச்சனையும் இன்றைய காலகட்டத்தில தேவையா?

Link to comment
Share on other sites

மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர்

நெடுக்ஸ்..அருமையான கருத்து. இந்திய அரசின் உண்மையான நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

அருமை..அருமை. இதைவிடவும் ஒருவரால் இந்தியாவின் கோரமுகத்த தோலுரித்துக் காட்டமுடியும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் கடைப்பிடித்த அதே இழி-பார்ப்பனக் கொள்கையைத்தான் மலேசியத் தமிழர் பிரசனையிலும் கடைப்பிடிக்கும். இதை இப்போதே மலேசியத் தமிழர்கள் கண்டுகொள்வது மிக மிக அவசியம். இல்லையேல் எம்மைப்போல் அவர்களும் இறுதியில் இந்தியாவினால் காட்டிக்கொடுக்கப்படவேண்டி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி,

ராமர் பாலத்தை விடுங்கள். ஆனால் பார்ப்பன உளவுத் துறையினால் நாம் படும் அவலங்களை பற்றி மட்டும் பேச வேண்டாம் என்று கேட்கவேண்டாம். நாங்கள் இவ்வளவு காலமும் படும் வேதனைகளுக்குக் காரணமே இந்த பார்ப்பனர்கள்தானே ???!!!

Link to comment
Share on other sites

நன்றி நெடுக்ஸ் இணைப்புக்கும், விளக்கத்துக்கும்.இந்தியா எல்லா இடமும் மூக்கை நுழைப்பது போல் மலேசியாவிலும் நுழைத்து நன்றாக வாங்கிகட்டியுள்ளது.

Link to comment
Share on other sites

இந்தியா மற்றவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதை நிறுத்துவது நல்லது. மிகச்சிறிய நாடான மலேசியாவிடமிருந்தே இவ்வாறு வாங்கிக் கட்டுகிறது என்றால், மற்ற நாடுகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒருபக்கத்தில், தமிழீழத்திலிருந்து ஏமாற்றம். மறுபக்கம் மலேசியாவிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டது. இரண்டுமே தமிழர்கள் சம்பந்தப்பட்டது. தலைவர் அவர்களின் உரைக்குப் பின்னர், தமிழ்நாட்டில், ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் கசிகின்றன.

Link to comment
Share on other sites

உண்மையை சொல்லப்போனல் இந்தியா ஒரு கண் துடைப்புக்கு மாத்திரம் தான் மலேசியா விடயத்தில் தனது விரக்த்தியை வெளியிட்டது.அது கூட இவ்வளவு எதிர்ப்பு ஏற்ப்படும் என்று நினைத்துக்கூடப் பார்த்து இருக்காது.பக்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா விடயத்தில் கூட பாராமுகம் காட்டும் இந்தியா எப்படி எங்கேயோ இருக்கும் மலேசியா விடயத்தில் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ளும்?

முதலைக் கண்ணீர் வடிக்கப்போய் இப்போ அவமானத்தால் இரத்த்க் கண்ணீர் வடிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்த மக்களையே பன்சாபிலும், அசாமிலும், கஷ்மீரிலும் வகை தொகையின்றி இலங்கை பாசிச அரசுக்கு நிகராக கொன்று குவித்த உலகின் மிகப் பெரிய ஜனனாயக அரசு வேறு நாட்டில் வாழும் ஒரு மக்கள் பிரிவுக்காக உதவி புரியும் என்று யாரும் நம்பினால்...என்ன சொல்வது ?

ஈழத் தமிழர்கலினதும், மலேஷியத் தமிழர்களினதும் உயிருக்கான போராட்டத்தை தமது பேரம் பேசும் பொருளாக, பொருளாதார விஷயமாகவும் கருதும் ஒரு நாடு ஒருபோதுமே எமக்கு விமோசனம் வாங்கித் தராது.

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்த வரையில் உலகில் குறைவான அளவு அடக்குமுறைக்கு உட்பட்டு வாழும் தமிழர்கள் வாழும் நாடுகள் மலேசியா, சிங்கப்பூர் ஆகியவை.

இவர்களுக்காக இந்திய அரசாங்கம் குரல் கொடுப்பது வேடிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலேசிய அரசு இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை முதலாவதாக வாங்கலாம் என்று எதிர்பார்க்கபடும் போது இந்த பிரச்சனை ஏன் வந்தது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியர்கள் குறித்து இந்தியா கவலைப்படத் தேவையில்லை - மலேசிய அமைச்சர்

கோலாலம்பூர்: இந்தியர்களைப் பற்றி மட்டுமே இந்தியா கவலைப்பட வேண்டும். மலேசியர்கள் குறித்து அது கவலைப்படக் கூடாது, அது தேவையற்றது என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறியுள்ளார்.

மலேசியத் தமிழர்கள் நிலை குறித்து முதல்வர் கருணாநிதி சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதைக் கண்டித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், மலேசிய தமிழர் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்திருந்தார். இதுகுறித்து மலேசிய அரசுடன் பேசப்படும் என வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.

இந்தியாவின் இந்த கருத்துக்கு மலேசியா வெளியுறவு அமைச்சர் அல்பார் கண்டனம் ெதரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தி ஸ்டார் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியா தனது உள்நாட்டு விவகாரங்களில் தீவிர கவனம் செலுத்தினால் நல்லது. மலேசியர்கள் குறித்தும், மலேசிய விவகாரங்கள் குறித்தும் அது கவலைப்படத் தேவையில்லை.

எங்களது நாட்டுப் பிரச்சினைகள் குறித்து, எங்களது நாட்டுச் சட்டப்படி நாங்கள் தீர்த்துக் கொள்வோம்.

இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்திய அரசு, இந்தியர்கள் குறித்துக் கவலை தெரிவித்தால் அது பொருத்தமானதாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அவர்கள் மலேசிய குடிமக்கள் குறித்துக் கவலைப்படுகிறார்கள். அது தவறானது.

மலேசிய குடிமக்களாக இருப்பவர்கள் - அவர்கள் எந்த நாட்டைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் சரி - மலேசியாவின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்க வேண்டும்.

இந்தியாவில் இருப்பவர்களை விட மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் நன்றாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை.

சட்டத்தை மீறி நடக்க முயன்றால், நாங்கள் அதை தடுக்கத்தான் செய்வோம்.

மலேசியாவில் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். எனவே இனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாடும் பிரச்சனை எழுப்பினால் மலேசியா சிதறிவிடும் என்று கூறியுள்ளார் அல்பார்.

தற்ஸ்தமிழ்.கொம்

-------------------

தென் ஆசிய நாடுகளுக்கும் (இந்தியா உட்பட்டவை) தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் (மலேசியா சிங்கப்பூர் உட்பட்டவை) எப்பவும் கொள்கை அளவில் ஒத்துப் போறதில்லை. காரணம் ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பொருளாதாரப் போட்டா போட்டியே.

மலேசியாவில் தமிழர் விவகாரத்தை இந்தியா தனது பொருளாதார நலன் கருதி தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறதே தவிர அங்குள்ள தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் அதற்கு எள்ளளவும் கரிசணை கிடையாது என்பதே உண்மை. எப்படி ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆரம்பத்தில் தனது பிராந்திய நலன் வேண்டி ஆதரவளித்ததோ அப்படி.. இதையும் தனது பொருளாதார வளர்ச்சிக்கு சாதமாக்கும் வகையிலும் மலேசியாவை ஒரு அரசியல் சாதகமற்ற தளமாக்கி சர்வதேசத்துக்குக் காட்டவும் முதலீட்டாளர்களுக்குக் காட்டவும் இந்தியா இதை கையாள எண்ணியுள்ளது. அதை தமிழக சாக்கடை அரசியல்வாதிகளூடு செய்ய முனைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள தமிழர் அக்கறையில்லாத கட்சிகளே அதாவது காங்கிரஸ் கட்சி கூட இது விவகாரத்தில் முண்டியடித்து அறிக்கை விட்டதும் இந்திய மத்திய அரசின் சூழ்ச்சி வெளிப்பட்டது.

அண்டை ஈழத்தில் தமிழர்கள் சிங்களப் பயங்கரவாத அரசின் வன்முறைக்கு தினமும் இறக்கிறார்கள்.. மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் சிறீலங்கா அரச படைகளால் வகைதொகையின்றிக் கைதாகிறார்கள்.. அங்கெல்லாம் மெளனம் காத்ததுடன் சிறீலங்கா அரசுக்கு ஆயுத மற்று பொருளாதார உதவி செய்யும் இந்திய மத்திய அரசுக்கு என்னடா திடீர் பாசம் மலேசிய தமிழ் மக்கள் மீது என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டு மயங்கி விழும் நிலைக்குப் போய்விட்டார்கள்..!

ஆனால் இந்தியாவின் சூழ்ச்சி என்பது அதன் பொருளாதார போட்டியாளர்களின் சரிவை வேண்டுவதும் தன்னை நோக்கி முதலீட்டாளர்களை இழுப்பதும் தான். இந்திய மத்திய அரசும் ஏதோ தான் இந்த விவாகரத்தில் அக்கறையற்றவர் போல ஆரம்பத்தில் காட்டிக் கொண்டதும்.. பின்னர் தமிழகத்தில் இருந்து எழும் அழுத்தம் காரணமாக தான் தலையிடுவது போலவும் நல்ல நாடகம் ஒன்றை அரங்கேற்றியது.

மலேசிய தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அவர்கள் இந்தியாவை நம்பி நிச்சயம் பெற முடியாது. தமிழகத்தில் உள்ள ஒரு சில தமிழுணர்வு மிக்க அரசியல்வாதிகளைத் தவிர மிகுதியானோரின் ஆதரவுக் குரலென்பது மத்திய அரசின் சொல்லுக்கு ஏற்ப எழுவதும் அடங்குவதும் ஆகும். அவை போலியானவை. இந்திய அரசியல் மயமானவை. இவற்றை நம்பி மலேசிய தமிழ் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பின் இந்தியா தனது நலன் பூர்த்தியாகும் வேளையில் மலேசிய தமிழர்களையும் ஈழத்தமிழர்களைப் போல பாவித்துவிட்டு தூக்கி எறிவது நிச்சயம் நடக்கும். இறுதியில் உள்ள உரிமைகளையும் இழந்து மலேசிய தமிழ்மக்கள் மலேசிய அரசிடம் சரணாகதி அடையும் நிலையையே இந்தியா தோற்றுவிக்கும். இதற்காக மலேசிய அரசுடன் நெருங்கிச் சென்று வியாபாரம் பேசவும் இந்தியா தயங்காது. தன்னை நோக்கி பொருளாதார முதலீடுகளைக் கவர மலேசியாவுடன் ஒப்பந்தங்களை இயற்றவும் அதற்கான சந்தர்ப்பங்களை தேடவும் அதன் மூலம் தனது பொருளாதார வளர்ச்சிக்கு இவ்விவகாரத்தைப் பயன்படுத்தவுமே இந்தியா முயற்சிக்கும்.

எனவே மலேசிய தமிழ்மக்கள் தங்கள் உரிமைகளை தாங்களே போராடிப் பெற முனைவதுடன் யாரையும் முழுமையாக நம்பி அவர்களின் வழிநடத்தலின் பெயரில் போராட்டங்களை தீர்மானிக்கக் கூடாது. மலேசிய அரசவை விட இந்தியா ஆபத்தானது என்பதை மலேசிய தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவு கூட மலேசிய தமிழ் மக்கள் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் என்ற நிலையில் நின்று எழுந்ததிலும் இந்திய மத்திய அரசின் ரகசிய குரலுக்கு அமைய எழுவதே அதிக சாத்திமானது. எனவே மலேசியத் தமிழ் மக்கள் தங்கள் போராட்டத்துக்கான ஆதரவை இந்தியாவை முழுமைக்கும் நம்பி ஏற்படுத்திக் கொள்வது மலேசிய அரசிடம் சரணாகதி அடைவதற்குச் சமனானது.

மலேசிய மக்கள் தமது அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை சர்வதேச மயப்படுத்துவதுடன் உலகத்தமிழினத்தின் ஆதரவை அதற்கு வேண்டிச் செயற்படுவது இந்தியாவையும் மலேசியாவையும் இவ்விடயத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் அக்கறை செய்ய அதிகம் வறுபுறுத்தும். இன்றேல் அவர்கள் தங்கள் சுயநலன்களை கவனிப்பதற்காக மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது போல நாடகமாடிக் கொண்டே அவற்றைச் சீரழித்துவிடுவார்கள்..! இதுவிடயத்தில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடக்கும் அறிக்கைப் போரை நம்பி.. மலேசிய தமிழ் மக்கள் ஏமாந்தும் விடக் கூடாது. இந்தியா மலேசியாவை விட சூழ்ச்சி மிக்க நாடு..! இந்திய மத்திய அரசு தமிழ் மக்களுக்கு விரோதமான அரசு. அதை அவர்கள் ஈழத்தமிழர் விவகாரத்தில் தெளிவுறக் காட்டிவிட்டுள்ளனர்...!

மலேசிய தமிழ் மக்களின் போராட்டம் நியாயமானது. அதை சர்வதேச அரங்கிற்கு உலகத் தமிழர்களின் ஆதரவுடன் வெளிப்படுத்தும் அதேவேளையில் எந்த அரச சக்திகளையும் முழுமையாக நம்பி விடயங்களைத் தீர்மானிக்காமல் தங்களின் உரிமைகள் தொடர்பில் தேவைகள் தொடர்பில் தாங்களே விடயங்களைத் தீர்மானிப்பதே சிறந்தது. போராட்ட வெற்றிக்கு வகை செய்யும். அரசுகளுக்கு உண்மையான அழுத்தங்களை வழங்கும்.

உண்மையிலேயே தரமான உள்நோக்கு நெடுக்ஸ்அண்ணா!!!!!

இதை நாம் முடிந்த அளவில் மலேசிய தமிழர்களுக்கு புரிய வைக்க வேண்டும். பாவம் அவர்கள் இந்தியாவின்

நயவஞ்சகம் தெரியாமல் இந்தியாவுடன் கூடி இருந்ததையும் இழந்துவிட போகிறார்கள். நல்காலதிற்கு

ஈழதமிழருக்கு எல்லாக்காலத்திற்கும் உகந்த ஒரு தலைவன் கிடைத்தான்....... எந்த சூறாவளிகாலத்திலும் நாம் கவுண்டுவிடாது தானும் தளர்ந்துவிடாது எமை கரைசேர்த்தான். பாவம் மலேசியர்கள் வீணாக மாட்டிவிடப்போகிறார்கள்..............

.. கருணாநிதி கூட தான் ஏதோ தமிழருக்கு குரல்கொடுப்பாதாக நாடகம் போடுகிறார். நாளும் நாளும் தமிழக மீனவரை சிங்களவன் கொல்லுகிறான் இவர் என்ன செய்து கிழித்தார்????

டில்லியில் இருந்து றோ காரன் வந்து அது புலிகள்மாதிரி ஒரு அறிக்கையை விட செலல்ல கமிசனரும் விடுவார்...... இவர் முதல்வர் இப்போ மலேசிய தமிழரின் சோகம் கண்டு பொங்கி எழுந்துவிட்டார்.

Link to comment
Share on other sites

நல்ல கட்டுரை நெடுக்ஸ்! பராட்டுக்கள்!!

மலேசிய தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! இந்தியா கை கொடுக்கும் என்று நம்பி போராட்டங்களில் குதித்து விடாதீர்கள். கை கொடுப்பது போல் நடித்து தன் காரியம் (மலேசிய அரசாங்கத்திடம்) ஆனதும் அப்படியே உங்கள் காலை வாரிவிடும் இந்தியா!

ஆகவே சொந்த காலில் நீங்கள் நிற்கும் வண்ணம் உங்கள் அரசியல் பலத்தை கட்டி எழுப்புங்கள்! உலகத்தமிழர்களுடன் தொடர்புகளை பேணுங்கள்! அதுவே உங்கள் நியாயமான அரசியல் போராட்டத்தின் அடிப்படை காரணங்களை உலகமெங்கும் ஒலிக்க செய்யும்

முடிந்தால் இந்தியா, உங்கள் போராட்டத்தை சாக்காக வைத்து கொஞ்சம் ஆயுத வியாபாரமும் சில வர்த்தக ஒப்பந்தங்களும் மலேசிய அரசுடன் செய்து கொள்ளும். அவ்வளவு தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அவர்களே,

மலேசிய எம் தமிழ் உறவுகள் தொடர்பாக, இந்தியாவின் உள்நோக்கம் என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளீர்கள். ஆரோக்கியமான கருத்தை முன்வைத்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்

அண்டை ஈழத்தில் தமிழர்கள் சிங்களப் பயங்கரவாத அரசின் வன்முறைக்கு தினமும் இறக்கிறார்கள்.. மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்கள் சிறீலங்கா அரச படைகளால் வகைதொகையின்றிக் கைதாகிறார்கள்.. அங்கெல்லாம் மெளனம் காத்ததுடன் சிறீலங்கா அரசுக்கு ஆயுத மற்று பொருளாதார உதவி செய்யும் இந்திய மத்திய அரசுக்கு என்னடா திடீர் பாசம் மலேசிய தமிழ் மக்கள் மீது என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டு மயங்கி விழும் நிலைக்குப் போய்விட்டார்கள்..!

மலேசியத் தமிழ் உறவுகள், தங்களின் உரிமையை வென்றெடுப்பதற்குத் தீர்க்கமான வழியினைத் தேர்ந்தேடுக்கவேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுவிட்டார்கள்.

நன்றி

மறவன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நன்றி நெடுக்ஸ் இணைப்புக்கும், விளக்கத்துக்கும்.இந்தியா எல்லா இடமும் மூக்கை நுழைப்பது போல் மலேசியாவிலும் நுழைத்து நன்றாக வாங்கிகட்டியுள்ளது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது மலேசிய அரசு, இந்தியாவின் உலகாலாவிய ராஜதந்திரத்திற்க்கு இது ஒரு சிறிய உதராணம்.

Link to comment
Share on other sites

தனது சொந்த மக்களையே பன்சாபிலும், அசாமிலும், கஷ்மீரிலும் வகை தொகையின்றி இலங்கை பாசிச அரசுக்கு நிகராக கொன்று குவித்த உலகின் மிகப் பெரிய ஜனனாயக அரசு வேறு நாட்டில் வாழும் ஒரு மக்கள் பிரிவுக்காக உதவி புரியும் என்று யாரும் நம்பினால்...என்ன சொல்வது ?

ஈழத் தமிழர்கலினதும், மலேஷியத் தமிழர்களினதும் உயிருக்கான போராட்டத்தை தமது பேரம் பேசும் பொருளாக, பொருளாதார விஷயமாகவும் கருதும் ஒரு நாடு ஒருபோதுமே எமக்கு விமோசனம் வாங்கித் தராது.

பஞ்சாப் அச்சாம் மற்றும் காழ்மீர் போன்ற மாநிலங்களின் நடைபெற்று வரும் தீவிரவாத நடவடிக்களின் ஏறாளமான தீவிரவாதிகளை வெட்டையாடி வந்தது தொடர்ந்து அதை செய்து கொண்டு இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது மலேசிய அரசு, இந்தியாவின் உலகாலாவிய ராஜதந்திரத்திற்க்கு இது ஒரு சிறிய உதராணம்.

வழக்கை வாபஸ் வாங்க வைப்பதற்குப் பெயர் இராஜதந்திரம் அல்ல. அந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வைப் பெற்றுக் கொடு;கக முயலுவது தான் ராஜதந்திரம். எவ்வித தீர்வுமின்றி, மக்கள் அதே நிலையில் தான் இருக்கின்றார்கள் என்றால் அவர்களின் போராட்ட்ததிற்கு என்ன பலன். போராட்டம் செய்யும்போது, கொலை, நீதிமன்றம், சித்திரவதைகள் என்று எதுவுமே கிடைக்காது என்று நம்பி அவர்கள போராட்டத்தில் இறங்கியிருக்கமாட்டார்கள். எனவே வழக்கை வாபஸ் வாங்க வைப்பது தான் தீர்வு என்பது என்ன நியாயம்?

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்த வரையில் உலகில் குறைவான அளவு அடக்குமுறைக்கு உட்பட்டு வாழும் தமிழர்கள் வாழும் நாடுகள் மலேசியா, சிங்கப்பூர் ஆகியவை.

இவர்களுக்காக இந்திய அரசாங்கம் குரல் கொடுப்பது வேடிக்கை.

மிகவும் அமைதியான முறையில் பேரணி நடத்தியவர்கலின் மீது பெண்கள் எனும் பாராமல் கொடுரமான தாக்குதல் நடத்தியதும் மட்டும்மில்லாமல் அவர்களை கொலை முயர்ச்சி தேச துரோகம் போன்ற வழுக்கு பதிவுசெய்ததையா குறைவான நடக்கைகல் என்கிறீர்கள்,

மலேசிய தமிழர்கள் மீதான தாக்குதலை இந்தியா அரசு கண்டிக்காமல் இலங்கை அதிபரா கண்டிப்பார், மிகவும் பிற்போக்காக சிந்தித்து எழுதி இருக்கிறார் நெடுக்கலப்போவன், இவர் நல்ல மனநல மறுத்துவரிடம் வைத்தியம் பார்ப்பது நல்லது.

Link to comment
Share on other sites

வழக்கை வாபஸ் வாங்க வைப்பதற்குப் பெயர் இராஜதந்திரம் அல்ல. அந்தப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்வைப் பெற்றுக் கொடு;கக முயலுவது தான் ராஜதந்திரம். எவ்வித தீர்வுமின்றி, மக்கள் அதே நிலையில் தான் இருக்கின்றார்கள் என்றால் அவர்களின் போராட்ட்ததிற்கு என்ன பலன். போராட்டம் செய்யும்போது, கொலை, நீதிமன்றம், சித்திரவதைகள் என்று எதுவுமே கிடைக்காது என்று நம்பி அவர்கள போராட்டத்தில் இறங்கியிருக்கமாட்டார்கள். எனவே வழக்கை வாபஸ் வாங்க வைப்பது தான் தீர்வு என்பது என்ன நியாயம்?

வணகத்திற்குறிய தூயவன் அவர்களே,

அப்பிரச்சனைக்கு தீர்வுக்காக இந்திய அரசு கண்டனம் தெறிவிக்கவில்லை, மலேசிய தமிழர்கள எந்த காரணத்திற்க்காக அந்த பேரணிய நடத்தினார்கள் என்பதி தாங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள், இன்கிலாந்து அரசிடம்தான் அவர்களின் கோறிக்கைகளை வலியுறுத்தினார்கள், மலேசிய அரசு கண்மூடித்தனமான பெண்கள் என்றும் பாரமல் தாக்கியதைதான் இந்திய அரசும் சரி, தமிழக முதல்வரும் கண்டித்தார்களே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இதில் இல்லை. மலேசிய தமிழர்களின் பிரச்ச்னைக்கு தீர்வு என்பது அப்பார்பட்ட பிரச்சனை காட்டுமிறாண்டித்தனமான தாக்குதலை மத்திய அரசு கண்டித்தது எவ்வளவு பெறிய ஆறுதல்.

காலமும் மாறும் காட்ச்சியும் மாறும் மலேசியத்தமிழர்களின் அவல நிலைகல் ஒரு நால் மாறியே தீரும். அதற்க்கான முயற்ச்சியின் முதல் வெற்றி இந்திய அரசு மலேசியத்தமிழர்களுக்கு குரல் கொடுத்ததுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.