Jump to content

இந்தியாவுக்கு மலேசியா பதிலடி..!


Recommended Posts

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது மலேசிய அரசு, இந்தியாவின் உலகாலாவிய ராஜதந்திரத்திற்க்கு இது ஒரு சிறிய உதராணம்
.

ஒரு புது வருடத்தின் போது தலபானால் கடத்தப்பட்ட இந்தியபணய கைதிகளை விடுவிக்க தலபானின் நிபந்தனைகளுக்கு ஒத்து போனதும் ஒரு ராஜதந்திரமோ? விளங்கவில்லை உங்களின் ராஜதந்திரமோ அல்லது இயலாமையோ?

Link to comment
Share on other sites

திரு நுனைவைன் அவர்களே,

மலேசிய பிரச்சனையை பற்றி பேசும் போது சம்பந்த மில்லாத ஒரு விசயத்தை பற்றி பேசுகிறீர்கள் !!!!!!!!!!!!1

ஆக, குதர்க்கமாக பேசுவதை பார்த்தால் தங்களின் நோக்கம் விவாதம் நடத்த வரவில்லை என்பது புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு நுனைவைன் அவர்களே,

மலேசிய பிரச்சனையை பற்றி பேசும் போது சம்பந்த மில்லாத ஒரு விசயத்தை பற்றி பேசுகிறீர்கள் !!!!!!!!!!!!1

ஆக, குதர்க்கமாக பேசுவதை பார்த்தால் தங்களின் நோக்கம் விவாதம் நடத்த வரவில்லை என்பது புரிகிறது.

தன் புண்ணைக்காட்டி பிச்சை எடுக்கும் பிச்சைக்காறனைப் போன்றதே, இந்தியவாததின் அரசியல் இப்படிப் பட்ட விவகாரங்களை கையாளுகின்ற விதம். புண்ணுக்கு மருந்து போடுவது ஒரு போதும் நோக்கமாய் இருக்காமல் புண்ணைக் கிண்டி பெரிதாக்குவதே அதன் உண்மயான நோக்கமாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது மலேசிய அரசு, இந்தியாவின் உலகாலாவிய ராஜதந்திரத்திற்க்கு இது ஒரு சிறிய உதராணம்.

சத்தம் போடாமல் பின் கதவு வழியாக இலங்கைக்கு ஒளிச்ச்சொளிச்சு ஆயுதம் கொடுப்பதும் உங்களின் இராச தந்திரங்களில் ஒன்றோ?

செய்யிற சேட்டையை நேரடியாக நெஞ்சை நிமித்திக்கொண்டு செய்யுங்கள். அமெரிக்கனைப் போல். மரியாதையாகவாவது இருக்கும். அதை விட்டுவிட்டு இப்படி பூனை போல் ...

Link to comment
Share on other sites

திரு காட்டாரு அவர்களே,

குண்டு வைப்பவர்கள், மனித குண்டாக வருபவர்கள் யாரும் சொல்லிக்கொண்டு வருவதில்லையே!!! ஏன்?!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு காட்டாரு அவர்களே,

குண்டு வைப்பவர்கள், மனித குண்டாக வருபவர்கள் யாரும் சொல்லிக்கொண்டு வருவதில்லையே!!! ஏன்?!!!!

நான் சொன்னது உங்கள் வலசரசின் இராச தந்திரத்தைப்பற்றி. நீங்கள் சொல்வது யாரைப்பற்றி? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குமெல்லோ முடிச்சுப்போடுறியள்?

பெரிய இராசதந்திரமென்று நீங்கள் பீத்தியதற்க்குத்தான் அந்தப் பதில்.

சரி நான் உங்களை அமேரிகனின் இராசதந்திரத்தோடல்லவா ஒப்பிட்டேன். ஆனால் நீங்கள் சில போராளிக் குழுக்களின் இராச தந்திரத்தைப்பற்றி சொல்கிறீர்கள். அடடா! நீங்களே உங்களைப்பற்றி அவ்வளவு மட்டமாகத்தான் நினைத்துவைத்திருக்கிறீர்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'rmsachitha'

இந்த நபர் இன்னும் இருக்கிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'rmsachitha'

இந்த நபர் இன்னும் இருக்கிறாரா?

இருக்கிறாரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

35216412462.jpg

மலேசியப் பிரதமர் படாவி அங்கு வாழும் தமிழர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கிறார்.

இதன் பின்னணி பயங்கரமானது. இனி அங்கு வாழும் இந்தியர்கள் கவுரவத்துடன் வாழ முடியுமா என்ற கேள்வி எழுந்து விட்டது.கடந்த 2005ம் ஆண்டில் மலேசிய ராணுவத்தில் பணியாற்றிய மூர்த்தி என்ற வீரர் கொல்லப்பட் டார். அவர் உடலை முஸ்லிம்கள் நடைமுறைப்படி புதைப்பது என்றும், இல்லை இந்து முறைப்படி எரிக்க வேண்டும் என்றும் சர்ச்சை எழுந்தது. மூர்த்தி மனைவி நீதிமன்றம் சென்றார். ஆனால், ஷரிஅத் கோர்ட் வென்றது. அதற்குப் பின் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி படாங்ஜவா பகுதியில் மாரியம்மன் கோவில் தகர்க்கப்பட்டது. அதற்குப் பின் ஒருவாரம் கழித்து தீபாவளி நன்னாள் வந்த போது எல்லாரும் வேதனையுடன் அதைக் கொண்டாடினர்.மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி 3 ( பிரிவு 1) `மற்ற மதங்களை அமைதி நல்லிணக்கத்துடன் அனுசரிக்கலாம்' என்று குறிப்பிட்ட போதும், அரசமைப்புச் சட்ட விதி 12 (1) ன்படி இஸ்லாமிய கோர்ட் உத்தரவுக்கு நீதித்துறை கட்டுப்பட்டது என்றிருக்கிறது.முன்பு மகாதிர் முகமது பிரதமராக இருந்த போதே இஸ்லாமிய அடிப்படையில் நாட்டை வழி நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது உருவானதே `பூமிபுத்ரா' என்ற வார்த்தை.

கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறை அமலானது.ஆனால், மலேசியாவில் வாழும் பெரும்பான்மை இந்தியர்களில் பலர் பெரிய அளவில் வசதி வாய்ப்பற்றவர்கள். படிப் படியாக கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் கற்றுத்தரும் பள்ளிகள் குறைக்கப் பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் பத்தாயிரம் இந்துக் கோவில்கள் அழிக்கப் பட்டதால், இந்துக்களின் கவுரவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தோட்ட வேலை பார்க்க அழைத்துச் சென்ற மக்கள் அங்கே தொடர்ந்து வாழ்கின்றனர். இவர்களில் 70 சதவீதம் பேர் தமிழர்கள், அதே சமயம் அங்கே வர்த்தகர்கள், வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலுக்காக சென்றவர்கள், அதிகாரிகள் என்று செட்டியார்கள், மரைக்காயர்கள், இலங்கைத் தமிழர்கள் சென்றனர். மலையாளிகளும் அங்கு சென்று குடியேறினர்.தற்போது, மலேசியாவின் வளம் அதிகரித்திருப்பதால், சராசரி வருமானம் அதிகரித்ததால் அங்குள்ளவர்கள் வளமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆனால் தமிழரில் அதிகப் பணக்காரர் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்டவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் இலங்கைத் தமிழர். அதனால் தான் தற்போது போராட்டம் நடத்தும் இண்ட்ராப்' அமைப்பு தெரிவித்த தகவலில் `அரசு உயர் பதவிகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 40 சதவீதம் இருந்த தமிழர்கள் இன்று அதில் 2 சதவீதம் மட்டுமே என்று சுட்டிக்காட்டுகிறது. மலேசியாவில் 15 பொதுப் பல்கலை உள்ளது. அதில், மொத்தமுள்ள மாணவர்கள் 45 ஆயிரம். ஆனால் இந்தியர்கள் 5 சதவீதம் மட்டுமே' என்று குறிப்பிட்டிருக் கிறது. அதுமட்டுமல்ல, கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற மொத்த குற்றவாளிகளில் 40 சதவீதம் இந்தியர்கள் என்பதும் வேதனை தரும் தகவலாகும்.மலேசிய மக்கள் தொகை 2.7 கோடியில் 1.6 கோடிப் பேர் மலாய் மக்கள். 50 லட்சம் பேர் சீனர்கள், 27 லட்சம் பேர் இந்தியர். மலாய் என்றழைக்கப்படும் பூமிபுத்ரர்களுக்கு' அதிக வாய்ப்பு தரும் பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்ற

Link to comment
Share on other sites

திரு நுனைவைன் அவர்களே,

மலேசிய பிரச்சனையை பற்றி பேசும் போது சம்பந்த மில்லாத ஒரு விசயத்தை பற்றி பேசுகிறீர்கள் !!!!!!!!!!!!1

ஆக, குதர்க்கமாக பேசுவதை பார்த்தால் தங்களின் நோக்கம் விவாதம் நடத்த வரவில்லை என்பது புரிகிறது.

திரு அவர்களே, மலேசிய பிரச்சனை பற்றிய தலைப்பு எடுக்கப்பட்டபோது நீங்கள் தான் இந்திய பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது மலேசிய அரசு, இந்தியாவின் உலகாலாவிய ராஜதந்திரத்திற்க்கு இது ஒரு சிறிய உதராணம்.

ராஜதந்திரம் பற்றி பேசினீர்கள். அதாவது "பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டது மலேசிய அரசு, இந்தியாவின் உலகாலாவிய ராஜதந்திரத்திற்க்கு இது ஒரு சிறிய உதராணம்." என்று இந்தியாவின் இராஜதந்திரம் பற்றி குறிப்பிட்டீர்கள்.ஆக இன்னுமொரு உதாரணத்தை எடுத்துக்காட்டினேன்.இதனை இந்தியாவில் "குதர்க்கவாதம்" என்று நீங்கள் கூறி முதன்முறையாக அறிந்து கொண்டேன்.மிக்க மகிழ்ச்சி. :lol::D:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.