Jump to content

மனசு எனும் மந்திரக்கிண்ணம்!


Recommended Posts

ஒலி வடிவம்

-------------------------------------

நெஞ்சில்

ஓர் மூலையில்

ஏதோவொரு சோகம்

எனை அணைக்கும்

உடம்பு

சோர்வின்

கைப் பிள்ளையாகும்!

மனசு

விரக்தியின் விளிம்பில்

தற்கொலை செய்யும்

எதிர்காலம் கண்முன்

விஷ்வரூபமெடுக்கும்

தனிமையில் தத்தளித்து

தாய் மடி

தேடும் மனம்

பொல்லாத கற்பனைகளால்

இதயம் வெடிக்கும்

தலை கோதி

நெஞ்சில் முகம்

சேர்த்து

அணைக்க

ஓருயிர் வாராதா

என விழிகள் தேடும்!

"எனக்கு மட்டும்

ஏன் இப்படி"

கண்முன் தெரியா

கடவுளிடம்

விசாரணை நடக்கும்

கால் போனால்

ஊன்றுகோல்

மனசு உடைந்தால்

என்ன உதவும் ?

"நம்பிக்கை" என்ற

பழகிப்போன பதிலில்

சமாதானம் ஆகாமல்

போலியாய் சிரிக்கும்

உதடுகள்...

விநாடிகளை விழுங்கி

காலம்

கன கதியில் பறக்கும்!

சூரிய தேவன்

இரதமேறி

ஒளிக்கைகளால்

பூமிப்பெண்ணை

தொடுவான்

மனசு இலேசாகிப்

பஞ்சாகப் பறக்கும்!

'ம்..."

புரியவில்லை தான்

எனக்கும்!

--------------------------------

5-12-2007

Link to comment
Share on other sites

கஜந்தியக்காவின் குரலில் கவி வாசிப்பு சூப்பரா இருக்கு. சின்னப்ப்பொண்ணின் குரல் போல இருக்கு. :lol:

ஆனால் எனக்கும் தான் புரியலை ஏன் தட்டச்சு செய்யும் போது எழுத்துப்பிழைகள் விடுகிறியள் என. :lol:

Link to comment
Share on other sites

"மனசை" பற்றிய ஆழமாக சிந்தித்து உள்ளீர்கள் போல கவிரூபன் அண்ணா நன்றாக இருக்கு கவிதை அழகிய வரிகள் :lol: !!அதிலும் இந்த வரிகள் எத்தனை உண்மை வாழ்த்துகள்!! :)

"நம்பிக்கை" என்ற

பழகிப்போன பதிலில்

சமாதானம் ஆகாமல்

போலியாய் சிரிக்கும்

உதடுகள்...

கஜந்தி அக்காவின் இனிமையான குரல் இந்த கவியை மேலும்மெருகூட்டுகிறது வாழ்த்துகள் இருவருக்கும்!! :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை

மனதைத் திறந்து விடு

அது உலகைக் கடந்து

பறந்து வரும்!! :lol:

Link to comment
Share on other sites

ஏன் தட்டச்சு செய்யும் போது எழுத்துப்பிழைகள் விடுகிறியள்

என்ன வெண்ணிலா பிழைகள் என்று பன்மைப் படுத்தி இருக்கிறீர்கள்.... பல பிழையோ என்று நினைச்சன்.... ஒரு பிழை தானே....(யானைக்கும் அடி சறுக்குமாமே .... உண்மையா?)

-------

ஜம்மு பேபி...(இன்னும் தொட்டிலிலா....?) நன்றி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிமையில் தத்தளித்து

தாய் மடி

தேடும் மனம்

கவிரூபன் அருமையான கவிதை. உண்மையாகவே நாமெல்லாரும் இப்படி தான் நினைத்திருப்போம் எமக்கென்று பிரச்சனைகள் வரும் போது :)

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா பிழைகள் என்று பன்மைப் படுத்தி இருக்கிறீர்கள்.... பல பிழையோ என்று நினைச்சன்.... ஒரு பிழை தானே....(யானைக்கும் அடி சறுக்குமாமே .... உண்மையா?)

:):lol: பதில் சொல்ல விரும்பலை. :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தலை கோதி

நெஞ்சில் முகம்

சேர்த்து

அணைக்க

ஓருயிர் வாராதா

என விழிகள் தேடும்!

அருமையான கவிதை வாழ்த்துக்கள் கவிரூபன்.

அதுவும் மேலே குறிப்பிட்ட வரிகள்

ஒவ்வொருவர் மனதிலும் கண்டிப்பாக

ஏதோவொரு கணத்தில் தோன்றியே இருக்கும்.

Link to comment
Share on other sites

மருமகன்(யாருக்கு என்று சொல்லவே இல்லையே...:-)), இன்னிசை கருத்திட்டதிற்கு நன்றிகள்... தொடர்ந்து சந்திப்பம்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.