Jump to content

தொலைபேசி தொல்லைபேசியான கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொலைபேசி தொல்லைபேசியான கதை

டெலிபோன் மணி இடைவிடாமல் அடிச்சுக்கொண்டே இருக்கின்றது. நல்ல நித்திரையிலிருந்த என்னை எழுப்பி விட்டது. டெலிபோனை எடுப்போமா எண்டு யோசிச்சிககொண்டு நேரத்தை பார்க்கிறேன். நேரம் காலை 3.00 மணி. ஒருவேளை அம்மாதான் கொழும்பிலிருந்து அடிக்கிறாவா எண்டு நினைச்சுக் கொண்டு ஓடிப்போய் போனை எடுக்கிறேன்.

அம்மாதான் போனில்.

அம்மாவின் குரல் கேட்டதும் காலையில் பறவையினங்கள் ஒலி கேட்டால் எப்படி சந்தோசப்படுமோ அது மாதிரிதான் அம்மாவின் குரலைக்கேட்டதும் எனக்கும் சந்தோசம். கதைச்சு முடிந்தபின் மனசில ஒரு கவலை. அம்மாவின் மடியில் படுத்து ஒருமுறை பிரிஞ்சிருக்கிற துக்கத்தை நினைச்சு ஒருக்கா கண்ணீர் விட்டு அழனும் போலிருந்தது. அந்த நினைப்போடு அப்படியே தூங்கி விட்டேன்.

அதற்குள் திருப்பியும் டெலிபோன் மணி அடிச்சி எண்ட நித்திரையை குழப்பிட்டுது. டெலிபோன் இப்படியா எண்ட நித்திரையை குழப்பவேணும் . கொஞ்சம் கோபமாகவே அலோ சொல்கிறேன்.

மறுமுனையில் இந்தியாவில் இருக்கிற என்னுடைய மாமா .

புதுசா ஒரு handphone வாங்கினேன்.வேலை செய்யுதா என்டு ஒருக்கா பார்க்கவேணும் என்றார்.

ஓ......அதுக்கென்ன மாமா .நீங்கள போனை வையுங்க ஒரு நிமிசத்தில் அடிக்கிறேன். நம்பரைத்தாங்கோ என்று நம்பரை வாங்கிக்கொண்டேன்.

என்ன செய்யிறது மாமாவாச்சே மாமாவுக்கு மகன் வேற இருக்கிறார். அடிக்காமல் இருக்கமுடியுமா . அவரோடும் கதைத்துவிட்டு திருப்பியும் சுருண்டு நித்திரையாகிட்டேன்.

திருப்பியும் மறுபடி டெலிபோன் மணி அடிச்சி எண்ட நித்திரைய குழப்பிட்டுது.

அட கடவுளே இது என்ன திருப்பி எரிச்சலோடு நித்திரை மயக்கத்தில் அலொ என்கிறேன்.

மறுமுனையில் ஓர் உரத்த ஒலியில்

ஹாலோ கறுப்பி இருக்கிறாவா?

முன்பின் கேட்டிராத கரகரப்பான குரல் கேட்டவுடன் கொஞ்சம் பயந்துட்டேன்.

நீங்க யாருணு திருப்பி கேக்கிறேன்.

நான் தான் சாத்திரி என்கிறார்.

என்ன விசயம் என்று கேட்கத்தொடங்கியவுடனே எனக்கு ஏதும் வரண்தான் கொண்டு வந்திருக்கிறார் என்ற சந்தோசத்தில் கட்டிலில் ஏறி துள்ளிக் குதிக்கனும் போலிருந்தது.

ஆனால் அதற்குள் அவரே கறுப்பியின்ட போன் நம்பர் கிடைச்சிது . அதுதான் ஊருக்கு எடுத்த டெலிபோன் காட்டில் கொஞ்சம் கதைக்கலாம எண்டு சொல்லிச்சிது அதுதான் எடுத்தனான் எண்டு ஓர் இழுவல் கதை. அத்தோடு இணைப்பும் அறுந்து போச்சுது.

ஆ.........இது என்ன வம்பாப் போச்சே.. எண்ட சந்தோசமும் கூடவே போச்சுதே.

சாத்திரியின் நம்பரை டயரியின் பக்கங்களை தேடி எடுத்து புரட்டி போன் பண்ணுகிறேன்.

ஹலோ என்கிறேன்.

மறுமுனையில் அதே கரகரத்த குரல் ஹலோ என்றவுடன் மெளனம்.

வீட்டில் ஒரு அம்மணியின் குரல் மட்டும் மெதுவாய் கேட்கிறது.

இப்ப எதுக்காக உந்த விடியக்காலத்துல லண்டனுக்கு போன் போட்டு கதைச்சிக்கொண்டு நிற்கிறியள். தெரிங்சவங்களோட போனில கதைக்கிறதுக்கே நேரமில்லை எண்டு சந்நதம் ஆடுறிங்கள். அதுக்குள்ள உந்த கறுப்பிக்கோ காப்பிலிக்கோ போனை போட்டுக்கொண்டு..............

ஆஆஆஆஆஆஆஆஆ.......இதுக்கும் மேலே கேட்டா எண்ட காதை வெடிச்சுடும் போனை அப்படியே சத்தமில்லாம வைச்சுட்டேன்.

அப்போதான் தெரிஞ்சது அங்கே மதுரை மீனாட்சி ஆட்சி நடக்குது எண்டு. அவர் வெளியில புலி. வீட்டில பூனை எண்டு.

இப்படியெல்லாம் தொல்லைபேசியின் தொல்லை அதிகம்

Link to comment
Share on other sites

முன்பின் கேட்டிராத கரகரப்பான குரல் கேட்டவுடன் கொஞ்சம் பயந்துட்டேன்.

நீங்க யாருணு திருப்பி கேக்கிறேன்.

நான் தான் சாத்திரி என்கிறார்.

என்ன விசயம் என்று கேட்கத்தொடங்கியவுடனே எனக்கு ஏதும் வரண்தான் கொண்டு வந்திருக்கிறார் என்ற சந்தோசத்தில் கட்டிலில் ஏறி துள்ளிக் குதிக்கனும் போலிருந்தது.

ஆனால் அதற்குள் அவரே கறுப்பியின்ட போன் நம்பர் கிடைச்சிது . அதுதான் ஊருக்கு எடுத்த டெலிபோன் காட்டில் கொஞ்சம் கதைக்கலாம எண்டு சொல்லிச்சிது அதுதான் எடுத்தனான் எண்டு ஓர் இழுவல் கதை. அத்தோடு இணைப்பும் அறுந்து போச்சுது.

ஆ.........இது என்ன வம்பாப் போச்சே.. எண்ட சந்தோசமும் கூடவே போச்சுதே.

சாத்திரியின் நம்பரை டயரியின் பக்கங்களை தேடி எடுத்து புரட்டி போன் பண்ணுகிறேன்.

ஹலோ என்கிறேன்.

மறுமுனையில் அதே கரகரத்த குரல் ஹலோ என்றவுடன் மெளனம்.

வீட்டில் ஒரு அம்மணியின் குரல் மட்டும் மெதுவாய் கேட்கிறது.

இப்ப எதுக்காக உந்த விடியக்காலத்துல லண்டனுக்கு போன் போட்டு கதைச்சிக்கொண்டு நிற்கிறியள். தெரிங்சவங்களோட போனில கதைக்கிறதுக்கே நேரமில்லை எண்டு சந்நதம் ஆடுறிங்கள். அதுக்குள்ள உந்த கறுப்பிக்கோ காப்பிலிக்கோ போனை போட்டுக்கொண்டு..............

ஆஆஆஆஆஆஆஆஆ.......இதுக்கும் மேலே கேட்டா எண்ட காதை வெடிச்சுடும் போனை அப்படியே சத்தமில்லாம வைச்சுட்டேன்.

அப்போதான் தெரிஞ்சது அங்கே மதுரை மீனாட்சி ஆட்சி நடக்குது எண்டு. அவர் வெளியில புலி. வீட்டில பூனை எண்டு.

இப்படியெல்லாம் தொல்லைபேசியின் தொல்லை அதிகம்

ஆகா இப்பிடியெல்லாம் திட்டமிட்டு பழிவாங்க சிலபேர் கிழம்பியிருக்கிறாங்கள் எண்டு இப்பதான் விழங்கிது. என்ரை சாதகப்படி இந்த மாதம்் சனிபார்வை என்மேலை விழும் எண்டு இருந்தது அது இதுதான் போலை கறுப்பின்ரை பார்வை விழுந்திருக்கு :):lol::lol:

Link to comment
Share on other sites

கறுப்பி அக்காவிற்கு ஒரு போனால இவ்வளவு தொல்லையா :) ..........என்றாலும் சாத்திரி அங்கிளை பற்றி நல்லா சொல்லி இருகிறியள் கறுப்பி அக்கா :lol: ..........நல்லா இருக்கு கதை ரசித்தேன் வாழ்த்துகள்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆஹா............. தொலைபேசி தொல்லையாச்சுதோ இல்லையோ சாத்ரி தாத்தா வீட்டை மதுரை ஆட்சி என்று கண்டுபிடிச்ச நண்பிக்கு வாழ்த்துக்கள். ஹீஹீ

Link to comment
Share on other sites

கறுப்பி, சாட்திரியில் ஆத்திரம் இருந்தால் கூப்பிட்டு நாலடி அடிச்சிருக்கலாம்.அதுக்காக இப்படியா பழிவாங்கவேண்டும்.உங்கடை கோலாலே சாத்திரியின் மனைவி என்னமா துடிச்சுபோயிட்டா பாருங்க? :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இதுல என்ன வேதனை என்றால் கறுப்ஸ் சொல்ல வந்ததை ஒருத்தரும் சரியா விளங்கிக்கொள்ளவில்லை என்பது தான் :D சரி சரி சாத்திரி இனியாவது கறுப்பியின் குறிப்பை தூசு தட்டி கையில எடுங்கோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி அக்கா... சூப்பர்...சாத்திரி அண்ணாட நிலமை இப்படி இருக்கும் என்ரு நான் நினைச்சு பார்க்கலை. :D

Link to comment
Share on other sites

கறுப்பி அக்கா... சூப்பர்...சாத்திரி அண்ணாட நிலமை இப்படி இருக்கும் என்ரு நான் நினைச்சு பார்க்கலை

டாங்சுங்கோ,என்னமா புரிஞ்சிகிறீங்க போங்க அட அட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாக இருகிறது இந்த லோக்கல் கோல்சே பெரிய தொல்லை என்ட மனிசி சொல்லி இருக்கா சனி,ஞாயிறில இரண்டு ரிங் அடித்தவுடனே ஆன்சரிங்மேசினிற்கு செட் பண்ணிவிடுங்கோ என்று. :lol:

Link to comment
Share on other sites

கதை நல்லாக இருகிறது இந்த லோக்கல் கோல்சே பெரிய தொல்லை என்ட மனிசி சொல்லி இருக்கா சனி,ஞாயிறில இரண்டு ரிங் அடித்தவுடனே ஆன்சரிங்மேசினிற்கு செட் பண்ணிவிடுங்கோ என்று.

சாமாத்தியமான முயற்சி.இதையே தொடரலாம் போலுள்ளது.

கறுப்பியின் சிறு கதை நன்றாக உள்ளது.இன்னுமொரு அத்தியாயம் கூட எழுதலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமாத்தியமான முயற்சி.இதையே தொடரலாம் போலுள்ளது.

கறுப்பியின் சிறு கதை நன்றாக உள்ளது.இன்னுமொரு அத்தியாயம் கூட எழுதலாம். :lol:

நீங்க வாசிக்க தயார் எண்டால் நான் எழுதுறேன்.

Link to comment
Share on other sites

  • 2 months later...

இந்த கதையின் நடையை பார்க்கும் போது முன்பு எனக்கு பரிச்சியமான எழுத்து போலை இருக்கு

சில வேளையில் முற்பிறப்பு ஞாபகமோ தெரியலை...அது இருக்கட்டும்

ஆனால் இவர் கவிதையில் தூள் கிளப்பிறமாதிரி உரை நடை வடிவம் அந்தளவுக்கு இல்லை என்று சொல்லலாம்

இவர் இதிலும் பார்க்க நன்றாக எழுத கூடியவர் என்று மனம் எனக்கு படுகிறது. அதே நேரத்தில் அப்படி ஏன் எழுதமால் விட்டார் என்ற கேள்வியும் எழுகிறது

உண்மையாய் ஆரம்ப முயற்சியாக இருந்தால பாராட்டலாம் ...

உங்கள் கவிதை திறமை மாதிரி எதிர்காலத்தில் உரைநடை வடிவத்திலும் திறமையை காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கதையை வாசித்து வாசித்துதான் கொஞ்சமாவது எழுதுறேன் சின்னக்குட்டி .கவிதை மாதிரி கதையும் எழுத முயற்சிக்கிறேன் . உங்கள் பதிவுக்கு நன்றி :D.என்ன செய்யிறது பதிவையும் கேட்டுத்தான் வாங்க வேண்டியிருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம். சின்னக்குட்டி சொல்வது போல எழுத்தில் தொய்வு இருப்பதாகத் தோன்றினாலும், அசத்தும் படைப்பு. தொடர்ந்து படையுங்கள் கறுப்பி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம். சின்னக்குட்டி சொல்வது போல எழுத்தில் தொய்வு இருப்பதாகத் தோன்றினாலும், அசத்தும் படைப்பு. தொடர்ந்து படையுங்கள் கறுப்பி

நன்றி நன்றி தூயவன் .

Link to comment
Share on other sites

இந்த கதையின் நடையை பார்க்கும் போது முன்பு எனக்கு பரிச்சியமான எழுத்து போலை இருக்கு

சில வேளையில் முற்பிறப்பு ஞாபகமோ தெரியலை...அது இருக்கட்டும்

ஆனால் இவர் கவிதையில் தூள் கிளப்பிறமாதிரி உரை நடை வடிவம் அந்தளவுக்கு இல்லை என்று சொல்லலாம்

இவர் இதிலும் பார்க்க நன்றாக எழுத கூடியவர் என்று மனம் எனக்கு படுகிறது. அதே நேரத்தில் அப்படி ஏன் எழுதமால் விட்டார் என்ற கேள்வியும் எழுகிறது

உண்மையாய் ஆரம்ப முயற்சியாக இருந்தால பாராட்டலாம் ...

உங்கள் கவிதை திறமை மாதிரி எதிர்காலத்தில் உரைநடை வடிவத்திலும் திறமையை காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்

அட பாவி சின்னக்குட்டி இவ்வவு நாளும் என்ன கோமாவோ.இவ்வளவு பவரான சாமான் என்னவெண்டு சொன்னால் நானும் பாவிச்சு பாப்பன் தானே

Link to comment
Share on other sites

அட பாவி சின்னக்குட்டி இவ்வவு நாளும் என்ன கோமாவோ.இவ்வளவு பவரான சாமான் என்னவெண்டு சொன்னால் நானும் பாவிச்சு பாப்பன் தானே

சாத்திரி ..என்னப்பா சொல்றீர் ... என்னத்தை எங்கை எப்படி எவ்விடத்திலை பாவிக்கப்போறீர் .....

பாவிக்கிறதை பற்றி ஏதோ சொல்லிறியள் ஒரு இழவும் விளங்கல்லை...

Link to comment
Share on other sites

//உங்க கதையை வாசித்து வாசித்துதான் கொஞ்சமாவது எழுதுறேன் சின்னக்குட்டி ..//

அட்ரா..அட்ரா, அடி சக்கையண்டாணாம் அம்மன் கோயில் புக்கை எண்டாணாம் :D

ஏன் லண்டனில் பூகம்பம் வந்தது என்று இப்ப தானே விளங்குது :D

Link to comment
Share on other sites

தொலைபேசி தொல்லைபேசியான கதை

அதற்குள் திருப்பியும் டெலிபோன் மணி அடிச்சி எண்ட நித்திரையை குழப்பிட்டுது. டெலிபோன் இப்படியா எண்ட நித்திரையை குழப்பவேணும் . கொஞ்சம் கோபமாகவே அலோ சொல்கிறேன்.

மறுமுனையில் இந்தியாவில் இருக்கிற என்னுடைய மாமா .

புதுசா ஒரு handphone வாங்கினேன்.வேலை செய்யுதா என்டு ஒருக்கா பார்க்கவேணும் என்றார்.

ஓ......அதுக்கென்ன மாமா .நீங்கள போனை வையுங்க ஒரு நிமிசத்தில் அடிக்கிறேன். நம்பரைத்தாங்கோ என்று நம்பரை வாங்கிக்கொண்டேன்.

இப்படியெல்லாம் தொல்லைபேசியின் தொல்லை அதிகம்

கறுப்பிக்கு வந்தமாதிரி டிசம்பர் மாதம் விடியப்பறம் 2.40இற்கு ஒரு தொல்லையிலபோனபேசி வந்திச்சு. வேலைக்கு 4.10இற்கு எழும்பும் வவுனியனுக்கும் பிள்ளைகளுக்கும் நித்திரை குழம்பப்போகுதெண்டு அடிச்சவிழுந்து ஓடிப்போய் தொல்லையில போன பேசியை எடுத்தா மறுமுனையில இருந்து கதைச்ச சொந்தம் ''நாங்கள் புதுசா ஒரு handphone வாங்கியிருக்கிறோம் அதுதான் வேலைசெய்யுதோண்டு அடிச்சனானங்கள்" என பதில் சொல்லிச்சுது.

உங்களுக்கு தொல்லைபேசி வேலைசெய்யுதோண்டு பாக்க நாங்கள்தானா கிடைச்சோம் ? கேக்க வேணும்போலைதானிருந்திச்சு. என்னேயிறது பிறகு பொல்லாதவள் என்று சொல்லீடுவினமெண்டு கதைச்சு முடிச்சு வைச்சாச்சு.

இப்ப இரவு 9மணிக்குப்பிறகு தொல்லைபேசியை கழட்டிவிடவேண்டிய நிலையாப்போச்சு.

அவசரத்துக்கு உதவுற தொலைபேசியை தொல்லையிலபேசியாக்கின எங்கடை இலங்கை இந்திய உறவுகளின் தொல்லைமட்டுமில்லை. அகில உலகம் முழுவதிலிருந்தும் அநாமதேய தொல்லைபேசிகளும் கூடிப்போச்சு.

ஆகா இப்பிடியெல்லாம் திட்டமிட்டு பழிவாங்க சிலபேர் கிழம்பியிருக்கிறாங்கள் எண்டு இப்பதான் விழங்கிது. என்ரை சாதகப்படி இந்த மாதம்் சனிபார்வை என்மேலை விழும் எண்டு இருந்தது அது இதுதான் போலை கறுப்பின்ரை பார்வை விழுந்திருக்கு :huh::huh::huh:

கறுப்பியைப்பற்றி சின்னக்குட்டித்தாத்:தா கதையெழுதி கை ஓய முதல் சாத்திரி கறுப்பு விழுந்திட்டுதெண்டு உப்பிடி எழுதிறது சரியில்லை. :wub:

"கறுப்புத்தான் கறுப்பிக்குப் பிடிச்ச கலரு"

அதுசரி சாத்திரி உங்களுக்கே சனி பார்வை விழுந்தா எங்களுக்கு சனிதோசம் மாற சொன்ன சாத்திரிமெல்லாம் பொய்யோ ? :wub:

கிபீராமி அம்மனிட்டைச் சொல்லிதான் இனி சனிதோசம் மாத்த வேணும். :wub:

Link to comment
Share on other sites

ஆஹா............. தொலைபேசி தொல்லையாச்சுதோ இல்லையோ சாத்ரி தாத்தா வீட்டை மதுரை ஆட்சி என்று கண்டுபிடிச்ச நண்பிக்கு வாழ்த்துக்கள். ஹீஹீ

மதுரையெண்டு நினைச்சு சாத்திரியின்ரை வீட்டை ஒருவரும் எரிச்சிடாதையுங்கோ.

Link to comment
Share on other sites

//கறுப்பியைப்பற்றி சின்னக்குட்டித்தாத்:தா கதையெழுதி கை ஓய முதல் சாத்திரி கறுப்பு விழுந்திட்டுதெண்டு உப்பிடி எழுதிறது சரியில்லை.//

:huh::huh::wub:

//சின்னக்குட்டித்தாத்:தா //

???????????

:huh::wub::wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:huh: கறுப்பிய வைச்சு ஒருத்தரும் காமடி கீமடி பண்ணலையே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி! கதை நன்றாக உள்ளது. சாத்திரியிடம் லைட்டான சீன்டலும் சுகமாகத்தான் இருக்கு. தொடருங்கள். வாழ்த்துகள்!!! :D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைசி நிமிடத்தில் வந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணையம் போல் சாக்குப் போக்குச் சொல்லாமல் போட்டியில் என்னையும் இணைத்துக் கொண்ட கிருபன்ஜிக்கு நன்றி
    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??   அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள்  1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.   3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்  4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்  
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.