Jump to content

அன்பே வா..


Recommended Posts

அன்பே வா......

e0ae9ae0af86e0aeb2e0af8ob5.jpg

நீயும் நானும் அன்போடு

நீண்ட காலம் இன்போடு

உறவு என்ற ஓடத்தில் ஏறி

உல்லாசமாக ஒன்றாக

உலகைச் சுற்றி ரசிக்கணும் என

உறக்கத்தில் கனவு கண்டேன்

உன் பொல்லாத கோவம் கண்டு

என் கனவு நனவாகா என

இன்றுதான் உணர்ந்தேன் நான்

அன்று போலில்லை நீ என்பதை

எப்போதும் இனிமையாக இருந்தேன்

தப்பேதும் நான் செய்ததறியேன்

வேண்டாம் என்மேல் அன்பே

வீணான கோவம் உனக்கு

துன்பங்கள் புடைசூழ நீயின்றி

துவண்டு துடிக்கின்றேன்

உனைப்போல் வேறோர் துணையின்றி

ஊனை மறந்து கலங்குகின்றேன்

விட்டுவிடு உன் கோவமதை

கட்டியணை பாவியிவளை

கெட்டிக்காரி என அடிக்கடி

தட்டிக்கொடுப்பவனே

அடிமேல் அடிவைத்து உனக்கு

நடை பழக்கிய உன்னவளை

இடி போன்ற வார்த்தைகளால்

எட்டி உதைத்துவிட்டு

தனியான எங்கு சென்றாய்

இன்னிசையாக பாடியவள்

கண்ணீரில் மிதக்கின்றாள்

மண்டியிட்டுக் கதறுகின்றாள்

மன்னிப்பு தந்து இவள் மடிதனில்

உன் கண்களை இறுக்கி மூடி

கண்ணயர வா எங்கிருந்தாலும்

என் மீதுள்ள கோவம் மறந்து

Link to comment
Share on other sites

நிலா அக்கா...........நிலா அக்கா கவிதை ரொம்ப நல்லா இருக்கு யாரை கூப்பிடுறியள் என்று சொல்லவே இல்லை :lol: !!நிலா அக்கா மேல கோபம் போட்ட ஆளே எங்கிருந்தாலும் கோபத்தை மறந்து நிலாஅக்காவிடம் வரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்!! :lol:

இன்னிசையாக பாடியவள்

கண்ணீரில் மிதக்கின்றாள்

மண்டியிட்டுக் கதறுகின்றாள்

மன்னிப்பு தந்து இவள் மடிதனில்

உன் கண்களை இறுக்கி மூடி

கண்ணயர வா எங்கிருந்தாலும்

என் மீதுள்ள கோவம் மறந்து

அதிலும் இந்த வரிகள் ஏக்கத்தின் விளிம்பு கவிதை ஏக்கத்துடன் சேர்ந்த அழகு ஏக்கம் நிறைவேற வாழ்த்துகள் நிலா அக்கா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

நினைப்பதற்கும் நடப்பதிற்கும்

நடுவில் இடபட்ட

முகத்திரையை கிழித்துவிட்டு

மனதினுள் எட்டி பார்த்தால்

எரிமலையின் கொதி குழம்பாய்

வேதனைகள் கொந்தளித்து பொங்குவதைக்

காண்பாய்!! :D

Link to comment
Share on other sites

எப்போதும் இனிமயாக இருந்தேன்

தப்பேதும் நான் செய்ததறியேன்

வேண்டாம் என்மேல் அன்பே

வீணான கோவம் உனக்கு

நல்ல கவிதை

முக்கியமாக மேலுல்ல வரிகள் என் மனதை கவர்ந்துள்ளன.

என் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வரிகளும் கூட.

பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெண்ணிலா கவிதையை கண்ட பிறகாவது அவர் மனம் மாறி உங்களிடம் வரட்டும் :lol:

Link to comment
Share on other sites

அட வெண்ணிலாவுக்கும் தட்டச்சில் தகராறு வருமா? வருதே..... (நீயூற்றனின் மூன்றாவது விதி நினைக்க... சும்மா ஒரு தமாசுக்கு தான்... சினம் தவிர்க்க...)

கவிதையில் பொருள் மயக்கம் வருவது போல அடியேன் எண்ணம்....

Link to comment
Share on other sites

நிலா அக்கா...........நிலா அக்கா கவிதை ரொம்ப நல்லா இருக்கு யாரை கூப்பிடுறியள் என்று சொல்லவே இல்லை :D !!நிலா அக்கா மேல கோபம் போட்ட ஆளே எங்கிருந்தாலும் கோபத்தை மறந்து நிலாஅக்காவிடம் வரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்!! :lol:

அதிலும் இந்த வரிகள் ஏக்கத்தின் விளிம்பு கவிதை ஏக்கத்துடன் சேர்ந்த அழகு ஏக்கம் நிறைவேற வாழ்த்துகள் நிலா அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

நினைப்பதற்கும் நடப்பதிற்கும்

நடுவில் இடபட்ட

முகத்திரையை கிழித்துவிட்டு

மனதினுள் எட்டி பார்த்தால்

எரிமலையின் கொதி குழம்பாய்

வேதனைகள் கொந்தளித்து பொங்குவதைக்

காண்பாய்!! :(

:lol::lol: கோவம்போட்டு அடித்து எனைப் பிரிந்த ஆளை தெரியாமல் என்னமா கதைக்கிறியள் ஜம்முபேபி. எவ்வளவுதடவை தான் சொல்லுறது ஆ?

அட உங்கள் சிட்டுவேசன் கவிதை நல்லா இருக்குதே. நன்றிகள் பேபி :lol:

Link to comment
Share on other sites

ஊடலோடு கூடலாய் உங்கள் கவிதை அழகு வெண்ணிலா .

நன்றிகள் நண்பியே.

எப்போதும் இனிமையாக இருந்தேன்

தப்பேதும் நான் செய்ததறியேன்

வேண்டாம் என்மேல் அன்பே

வீணான கோவம் உனக்கு

நல்ல கவிதை

முக்கியமாக மேலுல்ல வரிகள் என் மனதை கவர்ந்துள்ளன.

என் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வரிகளும் கூட.

பாராட்டுக்கள்!

நன்றிகள் வல்வை அண்ணா,

அட எல்லோரும் தப்புக்கள் செய்யும் போது தெரியாமல் தான் செய்கின்றோம். ஆனால் அது மற்றவர்களுக்கு தப்பாக தெரியும்.

வெண்ணிலா கவிதையை கண்ட பிறகாவது அவர் மனம் மாறி உங்களிடம் வரட்டும் :lol:

ஹீஹீ அவர் வந்துட்டார் இன்னிசை. கவிதை கண்டு மறுநிமிடமே வந்துட்டார் ல. அப்புறாம் இருவரும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு இப்ப சந்தோசம். :lol:

அட வெண்ணிலாவுக்கும் தட்டச்சில் தகராறு வருமா? வருதே..... (நீயூற்றனின் மூன்றாவது விதி நினைக்க... சும்மா ஒரு தமாசுக்கு தான்... சினம் தவிர்க்க...)

கவிதையில் பொருள் மயக்கம் வருவது போல அடியேன் எண்ணம்....

அட பாவமே. இங்கை பாருங்களன் காலை வாருற இடைத்தை. :D இப்ப மயக்கம் வராது என்பது அடியேன் எண்ணம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவமென்டு சொன்னா நக்கலை பாரு :lol:

Link to comment
Share on other sites

:lol::lol: கோவம்போட்டு அடித்து எனைப் பிரிந்த ஆளை தெரியாமல் என்னமா கதைக்கிறியள் ஜம்முபேபி. எவ்வளவுதடவை தான் சொல்லுறது ஆ?

அட உங்கள் சிட்டுவேசன் கவிதை நல்லா இருக்குதே. நன்றிகள் பேபி :lol:

நிலா அக்கா நிசமா நேக்கு தெரியாது யார் அவர் என்று :D ஒரு வேளை பேபி மறந்திருக்கும் மறுபடி ஒருக்கா சொல்லுங்கோ பார்போம்... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நீயும் நானும் அன்போடு

நீண்ட காலம் இன்போடு

உறவு என்ற ஓடத்தில் ஏறி

உல்லாசமாக ஒன்றாக

உலகைச் சுற்றி ரசிக்கணும் என

உறக்கத்தில் கனவு கண்டேன்

நிலா, உங்கள் கனவு நிசமாகும்.

Link to comment
Share on other sites

இடம்மாறும்போதும்

தடம்மாறும்போதும்

தாலாட்டி ஓராட்டி

சோறுட்டி நீராட்டி

பாராட்டி வைத்தவளே

பரிதவிக்க வைத்தவளும் நீதானே

அடிமேல் அடிவைத்து உனக்கு

நடை பழக்கிய உன்னவளை

இடி போன்ற வார்த்தைகளால்

எட்டி உதைத்துவிட்டு

தனியான எங்கு சென்றாய்

Link to comment
Share on other sites

இடம்மாறும்போதும்

தடம்மாறும்போதும்

தாலாட்டி ஓராட்டி

சோறுட்டி நீராட்டி

பாராட்டி வைத்தவளே

பரிதவிக்க வைத்தவளும் நீதானே

எப்படி, இப்படி முடிவுகளை உங்களால் எடுக்க முடிகிறது?

Link to comment
Share on other sites

பாவமென்டு சொன்னா நக்கலை பாரு :o

உண்மையை சொன்னால் நக்கலாக தெரியுதா? என்ன கொடுமைப்பா இது :):(

நிலா அக்கா நிசமா நேக்கு தெரியாது யார் அவர் என்று :lol: ஒரு வேளை பேபி மறந்திருக்கும் மறுபடி ஒருக்கா சொல்லுங்கோ பார்போம்... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஆமா ஆமா பேபி இப்ப காதலில் சிக்கிட்டுது போல. காதல் வந்தால் மறதியும் வரும் என்பது உண்மை தான் போல :lol:

நிலா, உங்கள் கனவு நிசமாகும்.

நன்றிகள் நுணா. :o

இடம்மாறும்போதும்

தடம்மாறும்போதும்

தாலாட்டி ஓராட்டி

சோறுட்டி நீராட்டி

பாராட்டி வைத்தவளே

பரிதவிக்க வைத்தவளும் நீதானே

ஹீஹீ அதெப்படி பரணியண்ணா இப்படி துல்லியமாக சொல்லுறீங்க? உண்மையில் நான் சொன்ன ஒரு வார்த்தையால் தான் என்மேல் அவன் கோவப்பட்டு சென்றான். ஆனாலும் நான் நினைக்கவே இல்லை இப்படி அவன் கோவம் கொள்வான். நான் சொன்னது தப்பு எனவும் தெரியலை. மொத்தத்தில் என் பரிதவிப்புக்கும் காரணமே நான் தான் :(

Link to comment
Share on other sites

முடிவில் என்ன தவறு கண்டீர்கள்.

ஊட்டிய கரம் உதறுவதில்லையா ?

இடம்மாறும்போதும்

தடம்மாறும்போதும்

தாலாட்டி ஓராட்டி

சோறுட்டி நீராட்டி

பாராட்டி வைத்தவளே

பரிதவிக்க வைத்தவளும் நீதானே

எப்படி, இப்படி முடிவுகளை உங்களால் எடுக்க முடிகிறது?

Link to comment
Share on other sites

நீயும் நானும் அன்போடு

நீண்ட காலம் இன்போடு

உறவு என்ற ஓடத்தில் ஏறி

உல்லாசமாக ஒன்றாக

உலகைச் சுற்றி ரசிக்கணும் என

உறக்கத்தில் கனவு கண்டேன்

அழகாக உள்ளது !!

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.