Jump to content

முதற் காதல் --- வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

முதற் காதல்

வாடைக் காற்று

பசும்புல் நுனிகளில்

பனிமுட்டை இடும் அதிகாலைகளில்

என் இதயம் நிறைந்து கனக்கும்.

அன்னையின் முலைக்காம்பையும்

பால்ய சகியின் மென் விரல்களையும்

பற்றிக் கொண்ட கணங்களிலேயே

மனித நேயம்

என்மீதிறங்கியது.

நான் இரண்டு தேவதைகளால்

ஆசீர்வதிக்கப் பட்டவன்.

"பால்ய சகியைப் பற்றி

உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே"

என்று கேட்பான் எனது நண்பன்.

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும்

சந்தேகம் கொள்ளுதல்

சாலும் தெரியுமா?

அடுத்த வீட்டு வானொலியை

அணைக்கச் சொல்லுங்கள்

பஸ் வரும் வீதியில்

தடைகளைப் போடுங்கள்

இந்த நாளை

எனக்குத் தாருங்கள்.

என் பாதித் தலையணையில்

படுத்துறங்கும் பூங்காற்றாய்

என் முதற் காதலி

உடனிருக்கின்ற காலைப் பொழுதில்

தயவு செய்து

என்னைக் கைவிட்டு விடுங்கள்.

தேனீரோடு கதவைத் தட்டாதே

நண்பனே.

எனது கேசத்தின் கருமையைத் திருடும்

காலனை எனது

இதயத்துக்குள் நுழையவிடாது துரத்துமென்

இனிய சகியைப் பாடவிடுங்கள்

அவளை வாழ்த்தியோர் பாடல் நான்

இசைப்பேன்.

காடுகள் வேலி போட்ட

நெல் வயல்களிலே

புள்ளி மான்களைத் துரத்தும் சிறுவர்கள்

மயில் இறகுகளைச் சேகரிக்கும்

ஈழத்து வன்னிக் கிராம மொன்றில்

மனித நேயத்தின் ஊற்றிடமான

பொன் முலைக் காம்பை

கணவனும் குழந்தையும்

கவ்விட வாழும்

என் பால்ய சகியை வாழ்த்துக!

என் முதற் காதலின் தேவதைக் குஞ்சே!

இனிமை

உன் வாழ்வில் நிறைக.

அச்சமும் மரணமும்

உனை அணுகற்க.

ரைபிள்களோடு காவல் தெய்வமாய்

உனது

ஊரகக் காடுக்குள் நடக்குமென் தோழர்கள்

மீண்டும் மீண்டும்

வெற்றிகள் பெறுக.

ஒருநாள் அவருடன் நானும் சேர்ந்து

உனது கிராமத்து

வீதியில் வரலாம்

தண்ணீர் அருந்த உன் வீட்டின் கடப்பை

அவர்கள் திறந்தால்

எத்தனை அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டும்.

நடை வரப்பில்

நாளையோர் பொழுதில்

என்னை நீ காணலாம் .....

யார் மீதும் குற்றமில்லை.

என்ன நீ பேசுதல் கூடும்?

நலமா திருமண மாயிற்றா?

என்ன நான் சொல்வேன்?

புலப்படாத ஒரு துளி கண்ணீர்

கண்ணீர் மறைக்க

ஒரு சிறு புன்னகை

ஆலாய்த் தழைத்து

அறுகாக வேர் பரப்பி

மூங்கிலாய்த் தோப்பாகி

வாழ வேண்டும் எந்தன் கண்ணே.

1985

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் முலைக்காம்பையும்

பால்ய சகியின் மென் விரல்களையும்

பற்றிக் கொண்ட கணங்களிலேயே

மனித நேயம்

என்மீதிறங்கியது.

முதற்காதலில் கட்டுண்ட கவிதையில் பால்ய சகியின் மென் விரல்களை பற்றிக் கொண்டதை அழகாக எழுதும் உங்க பேனா அன்னையைப்பற்றிய எழுதிய வரிகளை ஜீரணிக்கமுடியாமல் இருக்கு.

Link to comment
Share on other sites

முதற்காதலில் கட்டுண்ட கவிதையில் பால்ய சகியின் மென் விரல்களை பற்றிக் கொண்டதை அழகாக எழுதும் உங்க பேனா அன்னையைப்பற்றிய எழுதிய வரிகளை ஜீரணிக்கமுடியாமல் இருக்கு.

நன்றி கறுப்பி, நீங்கள் தேடி தேர்ந்து இணையமேற்றும் சேதிகளின் முதல் வாசகன் நான். அதற்க்காக முதல் வணக்கம். தங்களுடன் சில கருத்துக்களளில் வேறுபடுவதையும் சொல்ல என்னை அனுமதியுங்கள். தவறாயின் எடுத்துச் சொல்லுங்கள். மறிவரும் கலாச்சார விடயங்களில் நிலையான உண்மை என்று ஒன்று இல்லையென்றே கருதுகிறேன். ஒத்தும் மாறுபட்டும் வளர்ந்துசெல்லும் கருத்து நிலைகள்தானே உள்ளது. அதுதானே வளற்ச்சிக்கு வழி வகுக்கிறது. தோழமைக்குரிய கறுப்பி இவ்விடயங்களில் முடிந்த முடிவுகளோ முழுமையான உண்மையோ என்று ஒன்றுமில்லை. தமிழில் கருத்துக்கள் சொற்கள் தொடர்பாக தடைகள் இருக்கு. இந்த நெறிப்படுத்தல் ஆணாதிக்க சிந்தனை என்றே நான் கருதுகிறேன். தவறாயின் எடுத்துச் சொல்லுங்கள். சிந்திக்கிறேன். இது சங்க காலத்திலோ ஆண்டாளின் இடைக்காலதிலோ இருந்ததில்லை. குறிப்பாக கிறிஸ்துவமும் அதன் செல்வாக்கினால் இந்துமதமும் ஒரு சில நூற்றாண்டுகளாக கொண்டுவந்த தடைகள்தான் இவை. கிறிஸ்தவ நாடுகள் தடைகளை தாண்டிவந்துவிட்டன. யதார்த்தத்தை வழி மறிக்கும் சமூக கலாச்சார அரசியல் தடைகள் நமது இலக்கியத்தை உலகத் தரத்துக்கு மேம்படவிடுவதாக இல்லை. அரசியல் கலாச்சாரரீதியாக உண்மையை எழுத தயக்கத்தால் ஈழத்து மண்ணும் எங்கள் முகத்துங்களுக்கும் (

http://noolaham.net/library/books/03/278/278.pdf

)பின்னர் நான் எனது காவிய முயற்ச்சிகளைப் பின்போட்டுவருகிறேன். எனது பொன்னான நேரத்தையெல்லாம் அரசியல் இராணுவ புவியியல் ஆய்வுகளில் இழந்துபோகிறேன். உலகின் எந்த முன்னணிக் கவிஞர்களும் தடைகளை ஏற்றுக் கொண்டதில்லை. இது என் கருத்துத்தான். எனினும் உங்கள் கருத்தையும் நான் மதிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி, நீங்கள் தேடி தேர்ந்து இணையமேற்றும் சேதிகளின் முதல் வாசகன் நான். அதற்க்காக முதல் வணக்கம். தங்களுடன் சில கருத்துக்களளில் வேறுபடுவதையும் சொல்ல என்னை அனுமதியுங்கள். தவறாயின் எடுத்துச் சொல்லுங்கள். மறிவரும் கலாச்சார விடயங்களில் நிலையான உண்மை என்று ஒன்று இல்லையென்றே கருதுகிறேன். ஒத்தும் மாறுபட்டும் வளர்ந்துசெல்லும் கருத்து நிலைகள்தானே உள்ளது. அதுதானே வளற்ச்சிக்கு வழி வகுக்கிறது. தோழமைக்குரிய கறுப்பி இவ்விடயங்களில் முடிந்த முடிவுகளோ முழுமையான உண்மையோ என்று ஒன்றுமில்லை. தமிழில் கருத்துக்கள் சொற்கள் தொடர்பாக தடைகள் இருக்கு. இந்த நெறிப்படுத்தல் ஆணாதிக்க சிந்தனை என்றே நான் கருதுகிறேன். தவறாயின் எடுத்துச் சொல்லுங்கள். சிந்திக்கிறேன். இது சங்க காலத்திலோ ஆண்டாளின் இடைக்காலதிலோ இருந்ததில்லை. குறிப்பாக கிறிஸ்துவமும் அதன் செல்வாக்கினால் இந்துமதமும் ஒரு சில நூற்றாண்டுகளாக கொண்டுவந்த தடைகள்தான் இவை. கிறிஸ்தவ நாடுகள் தடைகளை தாண்டிவந்துவிட்டன. யதார்த்தத்தை வழி மறிக்கும் சமூக கலாச்சார அரசியல் தடைகள் நமது இலக்கியத்தை உலகத் தரத்துக்கு மேம்படவிடுவதாக இல்லை. அரசியல் கலாச்சாரரீதியாக உண்மையை எழுத தயக்கத்தால் ஈழத்து மண்ணும் எங்கள் முகத்துங்களுக்கும் (

http://noolaham.net/library/books/03/278/278.pdf

)பின்னர் நான் எனது காவிய முயற்ச்சிகளைப் பின்போட்டுவருகிறேன். எனது பொன்னான நேரத்தையெல்லாம் அரசியல் இராணுவ புவியியல் ஆய்வுகளில் இழந்துபோகிறேன். உலகின் எந்த முன்னணிக் கவிஞர்களும் தடைகளை ஏற்றுக் கொண்டதில்லை. இது என் கருத்துத்தான். எனினும் உங்கள் கருத்தையும் நான் மதிக்கிறேன்.

அசரவைத்தாய்.............. (,,,,,,) அசரவைத்தாய்!

Link to comment
Share on other sites

அசரவைத்தாய்.............. (,,,,,,) அசரவைத்தாய்!

தோழமைக்குரிய மருதங்கேணிக்கு எனது நன்றிகள். யாழ் இனைய தளத்தில் நிறைய எழுதிவிடேன் என நினைக்கிறேன். அவர்கள் தங்கள் நேரத்தையும் தங்கள் இடத்தையும் நிறையவே எனக்காகத் தந்திருக்கிறார்கள். யாழ் இணையதுக்கும் எனது நன்றிகள்.. மருதங்கேணி போன்ற பலரது மனம் கோணாத அன்புக்கு நன்றி. எல்லோரும் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் எத்பார்த்ததுமில்லை. எனது கவிதைகள், அவை பற்றிய பாராட்டுக்களும் மர்சனங்களும் மட்டுமன்றி வந்த ஒருசில வக்கிரமான குறிப்புகள்கூட பரவலாக வாசிக்கப் பாட்டிருக்கு. கவிஞர் கருணாகரனனோடு (நிதர்சனம்) இணைய அரட்டையில் (சட்) தமிழ் செல்வனின் படுகொலைச் செய்திபற்றி பேசிக்கொண்டே சடில் வரிவரியாக எழுதப் பட்ட கவிதை அஞ்சலிப்பரணி. உடனேயெ காருணாகரன் பரபர்ர்பூஉ அஞ்சல் தந்து அனுப்பும்படி கேட்டார். களத்தில் நிற்கும் போராளிகளுக் கலைஞர்களுக்கு மிகவும் பிடித்த அஞ்சலிப் பரணி கவிதை வரிகள் ********************** வக்கிரமாகக் கொச்சைப்படுத்தப் படும்போது அதைவாசித்த வன்னியைச் சேர்ந்த இன்னொரு கவிஞன் தீபன்செல்வன் கண்ணில் நெருப்பெரியுது என்று எனக்கு எழுதினான். போராட்டத்துக்காக அயராது பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் இன்னும் ஏன் அங்கு தொடர்ந்து எழுதுகிறீர்கள் அது அங்கு எழுதும் போஒலித் தனமான கடும்போக்காளர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதாக இருக்குமே என்று ஆரம்பதிலேயே கூறினார். நண்பர் புதுவை ஊடல்களிடையும் எப்பவும் தேச பக்தன் என்று என்னை வாய் நிறைய வாழ்த்துகிறவர். நோய்வாய்ப் பட்டிருந்த எனது அன்னையை போய்பார்க்கவில்லையென புதுவைக் கவிஞன்மீது மீது கோபப் பட்டு நான் எழுதிய " என் அன்னையைக் காக்க நீயும் உன் தலைவனும் மட்டுமல்ல, யானையின் மதநீர் உண்டு செளித்த காடும் உளதே" என்று முடிகிற கவிதையைத் தானே வெளியிடும் வெளிச்சம் 100 இதழில் பிரசுரித்திருக்கிறார். கவீதைகள் வர்ரலாறாகவும் வரலாறு கவிதைகளாகவும் மேம்படுகிற தரனங்கள் இது. வெளிச்சம் இதழுடன் யாழ் இணையத்தை ஒப்பிடமுடியுமா? மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்பார்கள். தமிழ்க் கவிதையில் மதநீர் எதன் குறியீடு என்பதை புதுவையிடமோ கருணாகரனிடமோ அவர்ர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். காவியம் ஏழுதுகிற மாகவிகள் காதலும் வீரமும் பின்னிப் பிணைந்த த்மிழ் கவிதை மரபையாவது தெரிந்துகொள்வதும் அவசியமல்லவா? ஊடலூம் கூடலுமாக புலிகளோடு ஆபத்தூகளுக்கூடாகத் துணைபோகிற கவிஞன் நான். யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. உங்களோடு போஒட்டி போட்டு உங்களுக்கான இந்த வெளியை ஆகிரமிக்கும்ம் நோக்கத்தோடு நான் வரவில்லை. அதற்க்கு அவசியமும் இல்லை. தொடர்ந்து உங்கள் வெளியை (space) அதிகம் எடுத்துக்கொள்ளும் நோக்கமும் அவகாசமும் எனக்கில்லை. எப்போதாவது நேரமுள்ளபோது எட்டிப் பார்க்கிறேன். புதுவருட நல்வாழ்த்துக்கள்.

தணிக்கை- யாழ்பாடி

Link to comment
Share on other sites

ஐயா, அவர்களே நீங்களுமா இவ்வளவு எழுத்து பிழை விடுகின்றீகள்.ஆச்சரியமாக உள்ளது?

தோழமைக்குரிய மருதங்கேணிக்கு எனது நன்றிகள். யாழ் இனைய தளத்தில் நிறைய எழுதிவிடேன் என நினைக்கிறேன். அவர்கள் தங்கள் நேரத்தையும் தங்கள் இடத்தையும் நிறையவே எனக்காகத் தந்திருக்கிறார்கள். யாழ் இணையதுக்கும் எனது நன்றிகள்.. மருதங்கேணி போன்ற பலரது மனம் கோணாத அன்புக்கு நன்றி. எல்லோரும் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் எத்பார்த்ததுமில்லை. எனது கவிதைகள் அவை பற்றிய பாராட்டுக்கள் வீமர்சனங்கள் ஒருசில வக்கிரமான குறிப்புகள் எல்லாமே பரவலாக வாசிக்கப் பாட்டிருக்கு. கவிஞர் கருணாகரன் (நிதர்சனம்) போன்ற களத்தில் நிற்கும் போராளிகளுக்கு மிகவும் பிடித்த அஞ்சலிப் பரணி கவிதை வரிகள் ************ வக்கிரமாகக் கொச்சைப்படுத்தப் படும்போது அதைவாசித்த வன்னியைச் சேர்ந்த இன்னொரு கவவிஞன் தீபன்செல்வன் கண்ணில் நெருப்பெரியுது என்று எழுதினான். போராட்டத்துக்காக அயராது பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் ஏன் அங்கு தொடர்ந்து எழுதுகிறீர்கள் அது அங்கு எழுதும் போஒலித் தனமான கடும்போக்காளர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதாக இருக்குமே என்று ஆரம்பதிலேயே கூறினார். நண்பர் புதுவை ஊடல்களிடையும் எப்பவும் தேச பக்தன் என்று என்னை வாய் நிறைய வாழ்த்துகிறவர். நோய்வாய்ப் பட்டிருந்த எனது அன்னையை போய்பார்க்கவில்லையென புதுவைக் கவிஞன்மீது மீது கோபப் பட்டு நான் எழுதிய " என் அன்னையைக் காக்க நீஇயும் உன் தலைவனும் மட்டுமல்ல, யானையின் மதநீர் உண்டு செளித்த காடும் உளதே" என்று முடிகிற கவிதையைத் தானே வெளியிடும் வெளிச்சம் 100 இதழில் பிரசுரித்திருக்கிறார். வெளிச்சம் இதழுடன் யாழ் இணையத்தை ஒப்பிடமுடியுமா? மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்பார்கள். தமிழ்க் கவிதையில் மதநீர் எதன் குறியீடு என்பதை புதுவையிடமோ கருணாகரனிடமோ அவர்ர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். காவியம் ஏழுதுகிற மாகவிகள் காதலும் வீரமும் பின்னிப் பிணைந்த த்மிழ் கவிதை மரபையாவது தெரிந்துகொள்வதும் அவசியமல்லவா? ஊடலூம் கூடலுமாக புலிகளோடு ஆபத்தூகளுக்கூடாகத் துணைபோகிற கவிஞன் நான். யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. உங்களோடு போஒட்டி போட்டு உங்களுக்கான இந்த வெளியை ஆகிரமிக்கும்ம் நோக்கத்தோடு நான் வரவில்லை. அதற்க்கு அவசியமும் இல்லை. தொடர்ந்து உங்கள் வெளியை (space) அதிகம் எடுத்துக்கொள்ளும் நோக்கமும் அவகாசமும் எனக்கில்லை. எப்போதாவது நேரமுள்ளபோது எட்டிப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

ஐயா, அவர்களே நீங்களுமா இவ்வளவு எழுத்து பிழை விடுகின்றீகள்.ஆச்சரியமாக உள்ளது?

மன்னிக்கவும் நுணாவிலான், நேரம் அதிகமில்லை. மனவேகத்தில் எழுதுவதில் எப்பவும் நிறைய பிழைகள் வந்துவிடுகிறது. என்னை ஐயா என்று சொல்லாதீர்கள். ஜெயபாலன் என்றோ ஜெபி என்றோதான் என்னோடு பழகும் எல்லோரும் அழைக்கிறார்கள். அப்படியே அழையுங்கள். உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நன்றி ஜெபி. உங்களுக்கும் இனிய புத்தாண்டுகள் உரித்தாகட்டும்.

மிகவும் நன்றி நுணாவிலான். ஈழத்தின் தேன்கமழும் சோலையல்லவா நுணாவில். இன்று பாழடைந்து போய்கிடக்கிறது. உங்கள் ஊரில் இருந்து எதிரிகள் வெளியேறும் வருடமாக இந்த வருடம் மேன்மை பெறட்டும்.

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி நுணாவிலான். ஈழத்தின் தேன்கமழும் சோலையல்லவா நுணாவில். இன்று பாழடைந்து போய்கிடக்கிறது. உங்கள் ஊரில் இருந்து எதிரிகள் வெளியேறும் வருடமாக இந்த வருடம் மேன்மை பெறட்டும்.

எனது ஆசையும் அது தான். நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கவிஞரே,

அடிக்கடி நீங்கள் தாயகத்தில் இருக்கும் போராளிகளை உங்கள் தனிப்பட்ட நண்பர்களாக கூறிக்கொள்வதன் அர்த்தம் என்ன?

Link to comment
Share on other sites

வணக்கம் பண்டிதர்

வணக்கம் கவிஞரே,

அடிக்கடி நீங்கள் தாயகத்தில் இருக்கும் போராளிகளை உங்கள் தனிப்பட்ட நண்பர்களாக கூறிக்கொள்வதன் அர்த்தம் என்ன?

அர்த்தம் அவர்கள் என்னுடையாதனிப்பட்ட நண்பர்கள் என்பதுதான் பண்டிதர். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள்தானே. புதுவையோடு ஊடலாக நான் எழுதிய கவிதை வெளிச்சம் 100ல் வெளியாகி இருக்கிறது. அதற்க்கு என்ன அர்த்தமென்று புதுவைக்கே எழுதிக் கேளுங்கள். ராதேயன் தான் இந்திய சிறையில் இருந்தபோது விரக்தியடையும் போதெல்லாம் எனது நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதையை வாசித்ததாக ஈழநாதம் ஞாறு இதழ் ஒன்றில் குறிப்பு எழுதியிருந்தார். அவர்களிடமும் அர்த்தம் கேழுங்கள். இதுபோல பலதை எழுதலாம். அவர்களில் பலருக்கு மின்னஞ்சல் விலாசம் இருக்கு உங்கள் சந்தேகத்தை அவர்களுக்கே எழுதிக் கேளுங்கள். இங்கு பலர் தாங்களே விடுதலைக்கு குத்தகைக் காரர்களாக தீர்ப்புகள் எழுதுகிறார்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? யாழ்க்களம் எனக்கு பொருதமான இடமில்லை என்று எனது நண்பர்கள் பலரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனாலும் எனக்கு பிடித்திருந்தது. எழுதினேஎன். இப்போது விவாதங்களை முடித்துக்கொண்டு நண்பனாக. விடை பெறுகிற அவசரதில் இருக்கிறேன். புதுவருட நல்வாழ்த்துக்களுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் வணக்கம் கவிஞரேஎ!

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

********என்றாலும் யாழில் நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே எனது அவா.

ஜெயபாலனாக செல்வதாக முடிவெடுத்தாலும் முகமூடி அணிந்தாவது மீண்டும் வாருங்கள்.

நன்றி

****** தணிக்கை - யாழ்பாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் கருத்துக்கள் சொற்கள் தொடர்பாக தடைகள் இருக்கு. இந்த நெறிப்படுத்தல் ஆணாதிக்க சிந்தனை என்றே நான் கருதுகிறேன்

எனக்கு இதில்ல உடன்பாடு இல்லை.

அன்னையின் முலைக்காம்பையும்

பால்ய சகியின் மென் விரல்களையும்

பற்றிக் கொண்ட கணங்களிலேயே

மனித நேயம்

என்மீதிறங்கியது.

பல முறை படித்தேன் .

இந்த வரிகள் என் மன ஒட்டத்துக்கு சரியாக படல்ல.

இது என் தனிப்பட்ட கருத்து.

உங்க பதிலுக்கு நன்றிங்க .

Link to comment
Share on other sites

வ.ஐ.ச,

இங்கே புதியவன் இவன். உங்கள் கவிதைகளை ஒழுங்காக படிக்கிறேனோ இல்லையோ, கவிதையின் இயல்பான நடை அழகு...

இங்கே சில வார்த்தைகளை நேரடியாக சொன்னால் கொடி பிடிப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. நீ எப்படி அப்படிச் சொல்லலாம் என்கின்ற உணர்ச்சிப் பெருக்கில் எதிர் அம்பு விடுவர். கோயில் கோபுரங்களில் வெளிப்படையாக சிற்பங்களைச் செதுக்கி அழகு பார்ப்பவர்கள், அவை சொல்லவரும் பொருளில் முகம் சுளிப்பது கட்டாயம் நடக்கும். சில வேஷம்... சில ரசனைக் குறைவு ... அவ்வளவே... (தாழ்மையான கருத்து...)

நன்றி...

Link to comment
Share on other sites

தோழமைக்குரிய பண்டிதருக்கும் மதிப்புகுரிய கறுப்பிக்கும் நட்புள்ள கவிரூபனுக்கும் எனது நல் வாழ்த்துக்கள். நான் நம்மவர் பலருடனும் அளவளாவ விரும்பித்தான் யாழுக்கு வந்தேன். ********

கறுப்பிமீது பெருமதிப்பு வைத்திருக்கிறேன்.

என்றாலும் நான் பண்டைய தமிழ் இலக்கியங்களையும் ஆண்டாளையும் கம்பனையும் உலக இலக்கியங்களையும் எனது பாதையாக கொண்டிருக்கிறேன். எங்க்ள் தமிழ் கவிதை மரபையும் உலகக் கவிதை மரபையும் தூக்கி வீசிவிட மனசு இடம் கொடுக்குதில்லை. என் அம்மாவின் முலைப்பால் உண்டபோது தாய்ப் பாசமாய் முதல் மனித நேயம் என்மீதுஇறங்கியதை சொல்லி இருக்கிறேன். அதில் என்ன தப்பிருக்கிறது? நான் நேரடியாகத்தானே எழுதியிருக்கிறேன். கறுப்பி நீங்கள் இதை ஓடிபஸ் சிக்கல் கோட்பாட்டைப் பிரயோகித்து அதன் பின்னணியில் பொருள்கொண்டிருக்கிறீர்கள் போலும்? அது வலிந்து பொருள் கொள்ளுதல் அல்லவா ? இது தகுமோ? இது முறையோ? இதுதர்மம்தானோ?.

தணிக்கை -யாழ்பாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற் காதல் கவி விளக்கம் அழகு.

நேரம் ஒதுக்கி விளக்கம் தந்த அழகும் அழகு.

மேலும் தொடருங்க ஜெயபாலன் .

Link to comment
Share on other sites

முதற் காதல் கவி விளக்கம் அழகு.

நேரம் ஒதுக்கி விளக்கம் தந்த அழகும் அழகு.

மேலும் தொடருங்க ஜெயபாலன் .

உங்க்கள் வார்த்தைகளுக்கும் வரவேற்ப்புக்கும் மிகவும் நன்றி கறுப்பி. புதுவருடத்தில் எனது இரண்டாவது காவியத்தை எழுத விருப்பம். உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க்கள் வார்த்தைகளுக்கும் வரவேற்ப்புக்கும் மிகவும் நன்றி கறுப்பி. புதுவருடத்தில் எனது இரண்டாவது காவியத்தை எழுத விருப்பம். உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.

எழுத இருக்கும் காவியத்துக்கு வாழ்த்துகளும் ,

புதுவருட வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

எழுத இருக்கும் காவியத்துக்கு வாழ்த்துகளும் ,

புதுவருட வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

நன்றி கறுப்பி. இணையத்தில் நெற்றிக் கணும் இதயதில் ஆனிச்சம் பூவுமான. உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

.

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும்

சந்தேகம் கொள்ளுதல்

சாலும் தெரியுமா?

உங்கள் கவிதையிலேயே சொல்லியுள்ளீர்கள் தானே ஜெயபாலன் அண்ணா ...

(யாழில்) இங்கு பலதரப்பட்டவர்களும் வந்து போவார்கள் அதனால் பலதரப்பட்ட கருத்துக்களை எதிர்நோக்கவேண்டி வரும் வருத்தம் வேண்டாம் ...எப்போதாவது வரும்போது உங்கள் ஆக்கங்களையும் தேடிவாசிக்கும் ரசிகன் நான் தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்கள் காணும் ஆவலில் உள்ளேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

உங்கள் கவிதையிலேயே சொல்லியுள்ளீர்கள் தானே ஜெயபாலன் அண்ணா ...

(யாழில்) இங்கு பலதரப்பட்டவர்களும் வந்து போவார்கள் அதனால் பலதரப்பட்ட கருத்துக்களை எதிர்நோக்கவேண்டி வரும் வருத்தம் வேண்டாம் ...எப்போதாவது வரும்போது உங்கள் ஆக்கங்களையும் தேடிவாசிக்கும் ரசிகன் நான் தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்கள் காணும் ஆவலில் உள்ளேன்.

நன்றி.

உண்மைதான் கெளரிபாலன், உங்களைப்போன்றவர்களின் அன்புக்காகத்தான் எல்லாவற்றையும் விட்டும் விடுபட்டும் இந்த சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே நிற்கின்றேன். . தலைபணிய முடியாத கவிஞன் என்கிறதால் பலர் பாம்பாக தரையில் விழுந்து ஊரும் இசைஅமைப்பாளர்களின் பதிவான வாசல் பக்கம் செல்லவில்லை. விமர்சனங்களை எப்போதும் பாடப்புத்தகமாகக் கருதுகிறவன் தான். தேசியமும் கவிதையும் குத்தகைக்கு எடுத்த மாவி என்று கருதுகிற ஒருவரது அழுக்காறு மூக்கைப் பிடிக்க வைத்தது. அவ்வளவுதான். வேறு பிரச்சினையில்லை. * * * தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி பாலன்.

Link to comment
Share on other sites

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

--- தமிழ் ஆண் பயலுகளைப் பற்றி உங்களுக்கு எப்போதும் மேலான எண்ணந் தானுங்க கவிஞரே..

என்ன பண்ணுரது உங்க ளை பத்தி எப்பவும் மேலாக எண்ணுர உங்களால...... உங்க காதலை எண்ணுர ......உங்களால உக்கத்து வீட்டு தோழியின் விரல் தொடுகையில் மனிதம் உணர்ந்த உங்களால ... பக்கத்து வீட்டு ஆண் பயலை மட்டும் எப்பிடிங்க இப்ப்டி பார்க்க முடியுது....

நம்ம சமூகத்தின் சாபக் கேடுங்க.... உங்களால புரிஞ்சு கொள்ள முடிஞ்சதை ... அதில ஒரு பாதியை ஆவது தமிழ் ஆண்பயலுகளில ஒருவனால ஆவது புரிஞ்சு கொள்ள முடியாதா ?

இதியே புரிந்து கொள்ள விரும்பாத ஒரு சமூகக் கவிஞன்... ரொம்பவே நெருடுதுங்க.... கவிதை நயம் நன்று....கருத்து...? திருந்தணும்க ......நீங்க..நாங்க...மத்தவங்க எல்லாரும்....

-எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதல

--- தமிழ் ஆண் பயலுகளைப் பற்றி உங்களுக்கு எப்போதும் மேலான எண்ணந் தானுங்க கவிஞரே..

என்ன பண்ணுரது உங்க ளை பத்தி எப்பவும் மேலாக எண்ணுர உங்களால...... உங்க காதலை எண்ணுர ......உங்களால உக்கத்து வீட்டு தோழியின் விரல் தொடுகையில் மனிதம் உணர்ந்த உங்களால ... பக்கத்து வீட்டு ஆண் பயலை மட்டும் எப்பிடிங்க இப்ப்டி பார்க்க முடியுது....

நம்ம சமூகத்தின் சாபக் கேடுங்க.... உங்களால புரிஞ்சு கொள்ள முடிஞ்சதை ... அதில ஒரு பாதியை ஆவது தமிழ் ஆண்பயலுகளில ஒருவனால ஆவது புரிஞ்சு கொள்ள முடியாதா ?

இதியே புரிந்து கொள்ள விரும்பாத ஒரு சமூகக் கவிஞன்... ரொம்பவே நெருடுதுங்க.... கவிதை நயம் நன்று....கருத்து...? திருந்தணும்க ......நீங்க..நாங்க...மத்தவங்க எல்லாரும்....

-எல்லாள மஹாராஜா

2. நிறம்

வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்களைப் பயன்படுத்தவும். (எ.கா.: கருத்துக்கள் முழுவதையும் சிவப்பு நிறத்தில் எழுதுவதை தவிர்க்கவும்)

வலைஞன்
Link to comment
Share on other sites

வலைஞன்

முதல் சந்திப்பு

===========

கண்ணிமை மூடுவதற்குள் -ஒரு

புன்னகை மலர்வதற்குள்

விரலின் நடுக்கம் உணர்வதற்குள்

விருட்டென்று

ஒட்டிக்கொள்கிறது பயம்

எல்லாக் கண்களும்

எங்களையே பார்ப்பது போல

இருந்த போதும்

என்னுள் ஏதோ

இடம் மாறிப்போய் விட்டது

முதல் காதல் பலருக்கும் இப்படி இருந்திருக்கக் கூடும்... ஆணுக்கு ...மீசை துளிர்த்த பருவத்திலும் பெண்ணுக்கு ....தாவணியின் தேவை உணரப் பட்டபோதும் .... எதை அறிந்து எதை நினைந்து...இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கக் கூடும்.

எழுதிச் செல்லும் இயற்கையின் கரங்கள் ...புதிய பாத்தி கட்டி பயிர் செய்ய விளையும் போதே காதலும் உணரப் படுகின்றது...அதைப் போலவே காமமும்...

காமத்துப் பால் தந்த வள்ளுவமும் தமிழ் ஆண் பயல் தான்....கோவில் கோபுரங்களில் சிருங்காரம் செதுக்கி படைப்பியலின் முழுமை சொல்லியவர்களிலும் தமிழ் ஆண் பயல்கள் உண்டு. மோகத்தைக் கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு என்று பாடிய பாரதியும் ஒரு தமிழ் ஆண் பயல் தான்.....

இவர்களை எல்லாம் புரிந்து கொள்ள முடிந்தவர்களால் ஒரு பெண் பற்றியும் அவளோடு முகிழ்க்கும் முதல் காதல் பற்றியும் புரிந்து கொள்ள முடியாதா என்ன ?

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.