Jump to content

முதற் காதல் --- வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

முதற் காதல்

வாடைக் காற்று

பசும்புல் நுனிகளில்

பனிமுட்டை இடும் அதிகாலைகளில்

என் இதயம் நிறைந்து கனக்கும்.

அன்னையின் முலைக்காம்பையும்

பால்ய சகியின் மென் விரல்களையும்

பற்றிக் கொண்ட கணங்களிலேயே

மனித நேயம்

என்மீதிறங்கியது.

நான் இரண்டு தேவதைகளால்

ஆசீர்வதிக்கப் பட்டவன்.

"பால்ய சகியைப் பற்றி

உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே"

என்று கேட்பான் எனது நண்பன்.

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும்

சந்தேகம் கொள்ளுதல்

சாலும் தெரியுமா?

அடுத்த வீட்டு வானொலியை

அணைக்கச் சொல்லுங்கள்

பஸ் வரும் வீதியில்

தடைகளைப் போடுங்கள்

இந்த நாளை

எனக்குத் தாருங்கள்.

என் பாதித் தலையணையில்

படுத்துறங்கும் பூங்காற்றாய்

என் முதற் காதலி

உடனிருக்கின்ற காலைப் பொழுதில்

தயவு செய்து

என்னைக் கைவிட்டு விடுங்கள்.

தேனீரோடு கதவைத் தட்டாதே

நண்பனே.

எனது கேசத்தின் கருமையைத் திருடும்

காலனை எனது

இதயத்துக்குள் நுழையவிடாது துரத்துமென்

இனிய சகியைப் பாடவிடுங்கள்

அவளை வாழ்த்தியோர் பாடல் நான்

இசைப்பேன்.

காடுகள் வேலி போட்ட

நெல் வயல்களிலே

புள்ளி மான்களைத் துரத்தும் சிறுவர்கள்

மயில் இறகுகளைச் சேகரிக்கும்

ஈழத்து வன்னிக் கிராம மொன்றில்

மனித நேயத்தின் ஊற்றிடமான

பொன் முலைக் காம்பை

கணவனும் குழந்தையும்

கவ்விட வாழும்

என் பால்ய சகியை வாழ்த்துக!

என் முதற் காதலின் தேவதைக் குஞ்சே!

இனிமை

உன் வாழ்வில் நிறைக.

அச்சமும் மரணமும்

உனை அணுகற்க.

ரைபிள்களோடு காவல் தெய்வமாய்

உனது

ஊரகக் காடுக்குள் நடக்குமென் தோழர்கள்

மீண்டும் மீண்டும்

வெற்றிகள் பெறுக.

ஒருநாள் அவருடன் நானும் சேர்ந்து

உனது கிராமத்து

வீதியில் வரலாம்

தண்ணீர் அருந்த உன் வீட்டின் கடப்பை

அவர்கள் திறந்தால்

எத்தனை அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டும்.

நடை வரப்பில்

நாளையோர் பொழுதில்

என்னை நீ காணலாம் .....

யார் மீதும் குற்றமில்லை.

என்ன நீ பேசுதல் கூடும்?

நலமா திருமண மாயிற்றா?

என்ன நான் சொல்வேன்?

புலப்படாத ஒரு துளி கண்ணீர்

கண்ணீர் மறைக்க

ஒரு சிறு புன்னகை

ஆலாய்த் தழைத்து

அறுகாக வேர் பரப்பி

மூங்கிலாய்த் தோப்பாகி

வாழ வேண்டும் எந்தன் கண்ணே.

1985

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் முலைக்காம்பையும்

பால்ய சகியின் மென் விரல்களையும்

பற்றிக் கொண்ட கணங்களிலேயே

மனித நேயம்

என்மீதிறங்கியது.

முதற்காதலில் கட்டுண்ட கவிதையில் பால்ய சகியின் மென் விரல்களை பற்றிக் கொண்டதை அழகாக எழுதும் உங்க பேனா அன்னையைப்பற்றிய எழுதிய வரிகளை ஜீரணிக்கமுடியாமல் இருக்கு.

Link to comment
Share on other sites

முதற்காதலில் கட்டுண்ட கவிதையில் பால்ய சகியின் மென் விரல்களை பற்றிக் கொண்டதை அழகாக எழுதும் உங்க பேனா அன்னையைப்பற்றிய எழுதிய வரிகளை ஜீரணிக்கமுடியாமல் இருக்கு.

நன்றி கறுப்பி, நீங்கள் தேடி தேர்ந்து இணையமேற்றும் சேதிகளின் முதல் வாசகன் நான். அதற்க்காக முதல் வணக்கம். தங்களுடன் சில கருத்துக்களளில் வேறுபடுவதையும் சொல்ல என்னை அனுமதியுங்கள். தவறாயின் எடுத்துச் சொல்லுங்கள். மறிவரும் கலாச்சார விடயங்களில் நிலையான உண்மை என்று ஒன்று இல்லையென்றே கருதுகிறேன். ஒத்தும் மாறுபட்டும் வளர்ந்துசெல்லும் கருத்து நிலைகள்தானே உள்ளது. அதுதானே வளற்ச்சிக்கு வழி வகுக்கிறது. தோழமைக்குரிய கறுப்பி இவ்விடயங்களில் முடிந்த முடிவுகளோ முழுமையான உண்மையோ என்று ஒன்றுமில்லை. தமிழில் கருத்துக்கள் சொற்கள் தொடர்பாக தடைகள் இருக்கு. இந்த நெறிப்படுத்தல் ஆணாதிக்க சிந்தனை என்றே நான் கருதுகிறேன். தவறாயின் எடுத்துச் சொல்லுங்கள். சிந்திக்கிறேன். இது சங்க காலத்திலோ ஆண்டாளின் இடைக்காலதிலோ இருந்ததில்லை. குறிப்பாக கிறிஸ்துவமும் அதன் செல்வாக்கினால் இந்துமதமும் ஒரு சில நூற்றாண்டுகளாக கொண்டுவந்த தடைகள்தான் இவை. கிறிஸ்தவ நாடுகள் தடைகளை தாண்டிவந்துவிட்டன. யதார்த்தத்தை வழி மறிக்கும் சமூக கலாச்சார அரசியல் தடைகள் நமது இலக்கியத்தை உலகத் தரத்துக்கு மேம்படவிடுவதாக இல்லை. அரசியல் கலாச்சாரரீதியாக உண்மையை எழுத தயக்கத்தால் ஈழத்து மண்ணும் எங்கள் முகத்துங்களுக்கும் (

http://noolaham.net/library/books/03/278/278.pdf

)பின்னர் நான் எனது காவிய முயற்ச்சிகளைப் பின்போட்டுவருகிறேன். எனது பொன்னான நேரத்தையெல்லாம் அரசியல் இராணுவ புவியியல் ஆய்வுகளில் இழந்துபோகிறேன். உலகின் எந்த முன்னணிக் கவிஞர்களும் தடைகளை ஏற்றுக் கொண்டதில்லை. இது என் கருத்துத்தான். எனினும் உங்கள் கருத்தையும் நான் மதிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கறுப்பி, நீங்கள் தேடி தேர்ந்து இணையமேற்றும் சேதிகளின் முதல் வாசகன் நான். அதற்க்காக முதல் வணக்கம். தங்களுடன் சில கருத்துக்களளில் வேறுபடுவதையும் சொல்ல என்னை அனுமதியுங்கள். தவறாயின் எடுத்துச் சொல்லுங்கள். மறிவரும் கலாச்சார விடயங்களில் நிலையான உண்மை என்று ஒன்று இல்லையென்றே கருதுகிறேன். ஒத்தும் மாறுபட்டும் வளர்ந்துசெல்லும் கருத்து நிலைகள்தானே உள்ளது. அதுதானே வளற்ச்சிக்கு வழி வகுக்கிறது. தோழமைக்குரிய கறுப்பி இவ்விடயங்களில் முடிந்த முடிவுகளோ முழுமையான உண்மையோ என்று ஒன்றுமில்லை. தமிழில் கருத்துக்கள் சொற்கள் தொடர்பாக தடைகள் இருக்கு. இந்த நெறிப்படுத்தல் ஆணாதிக்க சிந்தனை என்றே நான் கருதுகிறேன். தவறாயின் எடுத்துச் சொல்லுங்கள். சிந்திக்கிறேன். இது சங்க காலத்திலோ ஆண்டாளின் இடைக்காலதிலோ இருந்ததில்லை. குறிப்பாக கிறிஸ்துவமும் அதன் செல்வாக்கினால் இந்துமதமும் ஒரு சில நூற்றாண்டுகளாக கொண்டுவந்த தடைகள்தான் இவை. கிறிஸ்தவ நாடுகள் தடைகளை தாண்டிவந்துவிட்டன. யதார்த்தத்தை வழி மறிக்கும் சமூக கலாச்சார அரசியல் தடைகள் நமது இலக்கியத்தை உலகத் தரத்துக்கு மேம்படவிடுவதாக இல்லை. அரசியல் கலாச்சாரரீதியாக உண்மையை எழுத தயக்கத்தால் ஈழத்து மண்ணும் எங்கள் முகத்துங்களுக்கும் (

http://noolaham.net/library/books/03/278/278.pdf

)பின்னர் நான் எனது காவிய முயற்ச்சிகளைப் பின்போட்டுவருகிறேன். எனது பொன்னான நேரத்தையெல்லாம் அரசியல் இராணுவ புவியியல் ஆய்வுகளில் இழந்துபோகிறேன். உலகின் எந்த முன்னணிக் கவிஞர்களும் தடைகளை ஏற்றுக் கொண்டதில்லை. இது என் கருத்துத்தான். எனினும் உங்கள் கருத்தையும் நான் மதிக்கிறேன்.

அசரவைத்தாய்.............. (,,,,,,) அசரவைத்தாய்!

Link to comment
Share on other sites

அசரவைத்தாய்.............. (,,,,,,) அசரவைத்தாய்!

தோழமைக்குரிய மருதங்கேணிக்கு எனது நன்றிகள். யாழ் இனைய தளத்தில் நிறைய எழுதிவிடேன் என நினைக்கிறேன். அவர்கள் தங்கள் நேரத்தையும் தங்கள் இடத்தையும் நிறையவே எனக்காகத் தந்திருக்கிறார்கள். யாழ் இணையதுக்கும் எனது நன்றிகள்.. மருதங்கேணி போன்ற பலரது மனம் கோணாத அன்புக்கு நன்றி. எல்லோரும் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் எத்பார்த்ததுமில்லை. எனது கவிதைகள், அவை பற்றிய பாராட்டுக்களும் மர்சனங்களும் மட்டுமன்றி வந்த ஒருசில வக்கிரமான குறிப்புகள்கூட பரவலாக வாசிக்கப் பாட்டிருக்கு. கவிஞர் கருணாகரனனோடு (நிதர்சனம்) இணைய அரட்டையில் (சட்) தமிழ் செல்வனின் படுகொலைச் செய்திபற்றி பேசிக்கொண்டே சடில் வரிவரியாக எழுதப் பட்ட கவிதை அஞ்சலிப்பரணி. உடனேயெ காருணாகரன் பரபர்ர்பூஉ அஞ்சல் தந்து அனுப்பும்படி கேட்டார். களத்தில் நிற்கும் போராளிகளுக் கலைஞர்களுக்கு மிகவும் பிடித்த அஞ்சலிப் பரணி கவிதை வரிகள் ********************** வக்கிரமாகக் கொச்சைப்படுத்தப் படும்போது அதைவாசித்த வன்னியைச் சேர்ந்த இன்னொரு கவிஞன் தீபன்செல்வன் கண்ணில் நெருப்பெரியுது என்று எனக்கு எழுதினான். போராட்டத்துக்காக அயராது பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் இன்னும் ஏன் அங்கு தொடர்ந்து எழுதுகிறீர்கள் அது அங்கு எழுதும் போஒலித் தனமான கடும்போக்காளர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதாக இருக்குமே என்று ஆரம்பதிலேயே கூறினார். நண்பர் புதுவை ஊடல்களிடையும் எப்பவும் தேச பக்தன் என்று என்னை வாய் நிறைய வாழ்த்துகிறவர். நோய்வாய்ப் பட்டிருந்த எனது அன்னையை போய்பார்க்கவில்லையென புதுவைக் கவிஞன்மீது மீது கோபப் பட்டு நான் எழுதிய " என் அன்னையைக் காக்க நீயும் உன் தலைவனும் மட்டுமல்ல, யானையின் மதநீர் உண்டு செளித்த காடும் உளதே" என்று முடிகிற கவிதையைத் தானே வெளியிடும் வெளிச்சம் 100 இதழில் பிரசுரித்திருக்கிறார். கவீதைகள் வர்ரலாறாகவும் வரலாறு கவிதைகளாகவும் மேம்படுகிற தரனங்கள் இது. வெளிச்சம் இதழுடன் யாழ் இணையத்தை ஒப்பிடமுடியுமா? மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்பார்கள். தமிழ்க் கவிதையில் மதநீர் எதன் குறியீடு என்பதை புதுவையிடமோ கருணாகரனிடமோ அவர்ர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். காவியம் ஏழுதுகிற மாகவிகள் காதலும் வீரமும் பின்னிப் பிணைந்த த்மிழ் கவிதை மரபையாவது தெரிந்துகொள்வதும் அவசியமல்லவா? ஊடலூம் கூடலுமாக புலிகளோடு ஆபத்தூகளுக்கூடாகத் துணைபோகிற கவிஞன் நான். யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. உங்களோடு போஒட்டி போட்டு உங்களுக்கான இந்த வெளியை ஆகிரமிக்கும்ம் நோக்கத்தோடு நான் வரவில்லை. அதற்க்கு அவசியமும் இல்லை. தொடர்ந்து உங்கள் வெளியை (space) அதிகம் எடுத்துக்கொள்ளும் நோக்கமும் அவகாசமும் எனக்கில்லை. எப்போதாவது நேரமுள்ளபோது எட்டிப் பார்க்கிறேன். புதுவருட நல்வாழ்த்துக்கள்.

தணிக்கை- யாழ்பாடி

Link to comment
Share on other sites

ஐயா, அவர்களே நீங்களுமா இவ்வளவு எழுத்து பிழை விடுகின்றீகள்.ஆச்சரியமாக உள்ளது?

தோழமைக்குரிய மருதங்கேணிக்கு எனது நன்றிகள். யாழ் இனைய தளத்தில் நிறைய எழுதிவிடேன் என நினைக்கிறேன். அவர்கள் தங்கள் நேரத்தையும் தங்கள் இடத்தையும் நிறையவே எனக்காகத் தந்திருக்கிறார்கள். யாழ் இணையதுக்கும் எனது நன்றிகள்.. மருதங்கேணி போன்ற பலரது மனம் கோணாத அன்புக்கு நன்றி. எல்லோரும் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் எத்பார்த்ததுமில்லை. எனது கவிதைகள் அவை பற்றிய பாராட்டுக்கள் வீமர்சனங்கள் ஒருசில வக்கிரமான குறிப்புகள் எல்லாமே பரவலாக வாசிக்கப் பாட்டிருக்கு. கவிஞர் கருணாகரன் (நிதர்சனம்) போன்ற களத்தில் நிற்கும் போராளிகளுக்கு மிகவும் பிடித்த அஞ்சலிப் பரணி கவிதை வரிகள் ************ வக்கிரமாகக் கொச்சைப்படுத்தப் படும்போது அதைவாசித்த வன்னியைச் சேர்ந்த இன்னொரு கவவிஞன் தீபன்செல்வன் கண்ணில் நெருப்பெரியுது என்று எழுதினான். போராட்டத்துக்காக அயராது பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் ஏன் அங்கு தொடர்ந்து எழுதுகிறீர்கள் அது அங்கு எழுதும் போஒலித் தனமான கடும்போக்காளர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதாக இருக்குமே என்று ஆரம்பதிலேயே கூறினார். நண்பர் புதுவை ஊடல்களிடையும் எப்பவும் தேச பக்தன் என்று என்னை வாய் நிறைய வாழ்த்துகிறவர். நோய்வாய்ப் பட்டிருந்த எனது அன்னையை போய்பார்க்கவில்லையென புதுவைக் கவிஞன்மீது மீது கோபப் பட்டு நான் எழுதிய " என் அன்னையைக் காக்க நீஇயும் உன் தலைவனும் மட்டுமல்ல, யானையின் மதநீர் உண்டு செளித்த காடும் உளதே" என்று முடிகிற கவிதையைத் தானே வெளியிடும் வெளிச்சம் 100 இதழில் பிரசுரித்திருக்கிறார். வெளிச்சம் இதழுடன் யாழ் இணையத்தை ஒப்பிடமுடியுமா? மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்பார்கள். தமிழ்க் கவிதையில் மதநீர் எதன் குறியீடு என்பதை புதுவையிடமோ கருணாகரனிடமோ அவர்ர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். காவியம் ஏழுதுகிற மாகவிகள் காதலும் வீரமும் பின்னிப் பிணைந்த த்மிழ் கவிதை மரபையாவது தெரிந்துகொள்வதும் அவசியமல்லவா? ஊடலூம் கூடலுமாக புலிகளோடு ஆபத்தூகளுக்கூடாகத் துணைபோகிற கவிஞன் நான். யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. உங்களோடு போஒட்டி போட்டு உங்களுக்கான இந்த வெளியை ஆகிரமிக்கும்ம் நோக்கத்தோடு நான் வரவில்லை. அதற்க்கு அவசியமும் இல்லை. தொடர்ந்து உங்கள் வெளியை (space) அதிகம் எடுத்துக்கொள்ளும் நோக்கமும் அவகாசமும் எனக்கில்லை. எப்போதாவது நேரமுள்ளபோது எட்டிப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

ஐயா, அவர்களே நீங்களுமா இவ்வளவு எழுத்து பிழை விடுகின்றீகள்.ஆச்சரியமாக உள்ளது?

மன்னிக்கவும் நுணாவிலான், நேரம் அதிகமில்லை. மனவேகத்தில் எழுதுவதில் எப்பவும் நிறைய பிழைகள் வந்துவிடுகிறது. என்னை ஐயா என்று சொல்லாதீர்கள். ஜெயபாலன் என்றோ ஜெபி என்றோதான் என்னோடு பழகும் எல்லோரும் அழைக்கிறார்கள். அப்படியே அழையுங்கள். உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நன்றி ஜெபி. உங்களுக்கும் இனிய புத்தாண்டுகள் உரித்தாகட்டும்.

மிகவும் நன்றி நுணாவிலான். ஈழத்தின் தேன்கமழும் சோலையல்லவா நுணாவில். இன்று பாழடைந்து போய்கிடக்கிறது. உங்கள் ஊரில் இருந்து எதிரிகள் வெளியேறும் வருடமாக இந்த வருடம் மேன்மை பெறட்டும்.

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி நுணாவிலான். ஈழத்தின் தேன்கமழும் சோலையல்லவா நுணாவில். இன்று பாழடைந்து போய்கிடக்கிறது. உங்கள் ஊரில் இருந்து எதிரிகள் வெளியேறும் வருடமாக இந்த வருடம் மேன்மை பெறட்டும்.

எனது ஆசையும் அது தான். நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கவிஞரே,

அடிக்கடி நீங்கள் தாயகத்தில் இருக்கும் போராளிகளை உங்கள் தனிப்பட்ட நண்பர்களாக கூறிக்கொள்வதன் அர்த்தம் என்ன?

Link to comment
Share on other sites

வணக்கம் பண்டிதர்

வணக்கம் கவிஞரே,

அடிக்கடி நீங்கள் தாயகத்தில் இருக்கும் போராளிகளை உங்கள் தனிப்பட்ட நண்பர்களாக கூறிக்கொள்வதன் அர்த்தம் என்ன?

அர்த்தம் அவர்கள் என்னுடையாதனிப்பட்ட நண்பர்கள் என்பதுதான் பண்டிதர். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அவர்கள் உங்களுக்கும் தெரிந்தவர்கள்தானே. புதுவையோடு ஊடலாக நான் எழுதிய கவிதை வெளிச்சம் 100ல் வெளியாகி இருக்கிறது. அதற்க்கு என்ன அர்த்தமென்று புதுவைக்கே எழுதிக் கேளுங்கள். ராதேயன் தான் இந்திய சிறையில் இருந்தபோது விரக்தியடையும் போதெல்லாம் எனது நெடுந்தீவு ஆச்சிக்கு கவிதையை வாசித்ததாக ஈழநாதம் ஞாறு இதழ் ஒன்றில் குறிப்பு எழுதியிருந்தார். அவர்களிடமும் அர்த்தம் கேழுங்கள். இதுபோல பலதை எழுதலாம். அவர்களில் பலருக்கு மின்னஞ்சல் விலாசம் இருக்கு உங்கள் சந்தேகத்தை அவர்களுக்கே எழுதிக் கேளுங்கள். இங்கு பலர் தாங்களே விடுதலைக்கு குத்தகைக் காரர்களாக தீர்ப்புகள் எழுதுகிறார்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? யாழ்க்களம் எனக்கு பொருதமான இடமில்லை என்று எனது நண்பர்கள் பலரும் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனாலும் எனக்கு பிடித்திருந்தது. எழுதினேஎன். இப்போது விவாதங்களை முடித்துக்கொண்டு நண்பனாக. விடை பெறுகிற அவசரதில் இருக்கிறேன். புதுவருட நல்வாழ்த்துக்களுடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் வணக்கம் கவிஞரேஎ!

உங்கள் விளக்கத்திற்கு நன்றி.

********என்றாலும் யாழில் நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே எனது அவா.

ஜெயபாலனாக செல்வதாக முடிவெடுத்தாலும் முகமூடி அணிந்தாவது மீண்டும் வாருங்கள்.

நன்றி

****** தணிக்கை - யாழ்பாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் கருத்துக்கள் சொற்கள் தொடர்பாக தடைகள் இருக்கு. இந்த நெறிப்படுத்தல் ஆணாதிக்க சிந்தனை என்றே நான் கருதுகிறேன்

எனக்கு இதில்ல உடன்பாடு இல்லை.

அன்னையின் முலைக்காம்பையும்

பால்ய சகியின் மென் விரல்களையும்

பற்றிக் கொண்ட கணங்களிலேயே

மனித நேயம்

என்மீதிறங்கியது.

பல முறை படித்தேன் .

இந்த வரிகள் என் மன ஒட்டத்துக்கு சரியாக படல்ல.

இது என் தனிப்பட்ட கருத்து.

உங்க பதிலுக்கு நன்றிங்க .

Link to comment
Share on other sites

வ.ஐ.ச,

இங்கே புதியவன் இவன். உங்கள் கவிதைகளை ஒழுங்காக படிக்கிறேனோ இல்லையோ, கவிதையின் இயல்பான நடை அழகு...

இங்கே சில வார்த்தைகளை நேரடியாக சொன்னால் கொடி பிடிப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. நீ எப்படி அப்படிச் சொல்லலாம் என்கின்ற உணர்ச்சிப் பெருக்கில் எதிர் அம்பு விடுவர். கோயில் கோபுரங்களில் வெளிப்படையாக சிற்பங்களைச் செதுக்கி அழகு பார்ப்பவர்கள், அவை சொல்லவரும் பொருளில் முகம் சுளிப்பது கட்டாயம் நடக்கும். சில வேஷம்... சில ரசனைக் குறைவு ... அவ்வளவே... (தாழ்மையான கருத்து...)

நன்றி...

Link to comment
Share on other sites

தோழமைக்குரிய பண்டிதருக்கும் மதிப்புகுரிய கறுப்பிக்கும் நட்புள்ள கவிரூபனுக்கும் எனது நல் வாழ்த்துக்கள். நான் நம்மவர் பலருடனும் அளவளாவ விரும்பித்தான் யாழுக்கு வந்தேன். ********

கறுப்பிமீது பெருமதிப்பு வைத்திருக்கிறேன்.

என்றாலும் நான் பண்டைய தமிழ் இலக்கியங்களையும் ஆண்டாளையும் கம்பனையும் உலக இலக்கியங்களையும் எனது பாதையாக கொண்டிருக்கிறேன். எங்க்ள் தமிழ் கவிதை மரபையும் உலகக் கவிதை மரபையும் தூக்கி வீசிவிட மனசு இடம் கொடுக்குதில்லை. என் அம்மாவின் முலைப்பால் உண்டபோது தாய்ப் பாசமாய் முதல் மனித நேயம் என்மீதுஇறங்கியதை சொல்லி இருக்கிறேன். அதில் என்ன தப்பிருக்கிறது? நான் நேரடியாகத்தானே எழுதியிருக்கிறேன். கறுப்பி நீங்கள் இதை ஓடிபஸ் சிக்கல் கோட்பாட்டைப் பிரயோகித்து அதன் பின்னணியில் பொருள்கொண்டிருக்கிறீர்கள் போலும்? அது வலிந்து பொருள் கொள்ளுதல் அல்லவா ? இது தகுமோ? இது முறையோ? இதுதர்மம்தானோ?.

தணிக்கை -யாழ்பாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதற் காதல் கவி விளக்கம் அழகு.

நேரம் ஒதுக்கி விளக்கம் தந்த அழகும் அழகு.

மேலும் தொடருங்க ஜெயபாலன் .

Link to comment
Share on other sites

முதற் காதல் கவி விளக்கம் அழகு.

நேரம் ஒதுக்கி விளக்கம் தந்த அழகும் அழகு.

மேலும் தொடருங்க ஜெயபாலன் .

உங்க்கள் வார்த்தைகளுக்கும் வரவேற்ப்புக்கும் மிகவும் நன்றி கறுப்பி. புதுவருடத்தில் எனது இரண்டாவது காவியத்தை எழுத விருப்பம். உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க்கள் வார்த்தைகளுக்கும் வரவேற்ப்புக்கும் மிகவும் நன்றி கறுப்பி. புதுவருடத்தில் எனது இரண்டாவது காவியத்தை எழுத விருப்பம். உங்களுக்கு எனது புதுவருட நல்வாழ்த்துக்கள்.

எழுத இருக்கும் காவியத்துக்கு வாழ்த்துகளும் ,

புதுவருட வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

எழுத இருக்கும் காவியத்துக்கு வாழ்த்துகளும் ,

புதுவருட வாழ்த்துகளும் உரித்தாகட்டும்

நன்றி கறுப்பி. இணையத்தில் நெற்றிக் கணும் இதயதில் ஆனிச்சம் பூவுமான. உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

.

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும்

சந்தேகம் கொள்ளுதல்

சாலும் தெரியுமா?

உங்கள் கவிதையிலேயே சொல்லியுள்ளீர்கள் தானே ஜெயபாலன் அண்ணா ...

(யாழில்) இங்கு பலதரப்பட்டவர்களும் வந்து போவார்கள் அதனால் பலதரப்பட்ட கருத்துக்களை எதிர்நோக்கவேண்டி வரும் வருத்தம் வேண்டாம் ...எப்போதாவது வரும்போது உங்கள் ஆக்கங்களையும் தேடிவாசிக்கும் ரசிகன் நான் தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்கள் காணும் ஆவலில் உள்ளேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

உங்கள் கவிதையிலேயே சொல்லியுள்ளீர்கள் தானே ஜெயபாலன் அண்ணா ...

(யாழில்) இங்கு பலதரப்பட்டவர்களும் வந்து போவார்கள் அதனால் பலதரப்பட்ட கருத்துக்களை எதிர்நோக்கவேண்டி வரும் வருத்தம் வேண்டாம் ...எப்போதாவது வரும்போது உங்கள் ஆக்கங்களையும் தேடிவாசிக்கும் ரசிகன் நான் தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்கள் காணும் ஆவலில் உள்ளேன்.

நன்றி.

உண்மைதான் கெளரிபாலன், உங்களைப்போன்றவர்களின் அன்புக்காகத்தான் எல்லாவற்றையும் விட்டும் விடுபட்டும் இந்த சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினுள்ளே நிற்கின்றேன். . தலைபணிய முடியாத கவிஞன் என்கிறதால் பலர் பாம்பாக தரையில் விழுந்து ஊரும் இசைஅமைப்பாளர்களின் பதிவான வாசல் பக்கம் செல்லவில்லை. விமர்சனங்களை எப்போதும் பாடப்புத்தகமாகக் கருதுகிறவன் தான். தேசியமும் கவிதையும் குத்தகைக்கு எடுத்த மாவி என்று கருதுகிற ஒருவரது அழுக்காறு மூக்கைப் பிடிக்க வைத்தது. அவ்வளவுதான். வேறு பிரச்சினையில்லை. * * * தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி பாலன்.

Link to comment
Share on other sites

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

--- தமிழ் ஆண் பயலுகளைப் பற்றி உங்களுக்கு எப்போதும் மேலான எண்ணந் தானுங்க கவிஞரே..

என்ன பண்ணுரது உங்க ளை பத்தி எப்பவும் மேலாக எண்ணுர உங்களால...... உங்க காதலை எண்ணுர ......உங்களால உக்கத்து வீட்டு தோழியின் விரல் தொடுகையில் மனிதம் உணர்ந்த உங்களால ... பக்கத்து வீட்டு ஆண் பயலை மட்டும் எப்பிடிங்க இப்ப்டி பார்க்க முடியுது....

நம்ம சமூகத்தின் சாபக் கேடுங்க.... உங்களால புரிஞ்சு கொள்ள முடிஞ்சதை ... அதில ஒரு பாதியை ஆவது தமிழ் ஆண்பயலுகளில ஒருவனால ஆவது புரிஞ்சு கொள்ள முடியாதா ?

இதியே புரிந்து கொள்ள விரும்பாத ஒரு சமூகக் கவிஞன்... ரொம்பவே நெருடுதுங்க.... கவிதை நயம் நன்று....கருத்து...? திருந்தணும்க ......நீங்க..நாங்க...மத்தவங்க எல்லாரும்....

-எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்கு பற்றிய பூமாலைகளாய்

நட்பை

காதலை

புணர்ச்சியை

குதறிக் குழப்பும்

தமிழ் ஆண் பயலிடம்

எப்படிப் பாடுவேன் என்முதற் காதல

--- தமிழ் ஆண் பயலுகளைப் பற்றி உங்களுக்கு எப்போதும் மேலான எண்ணந் தானுங்க கவிஞரே..

என்ன பண்ணுரது உங்க ளை பத்தி எப்பவும் மேலாக எண்ணுர உங்களால...... உங்க காதலை எண்ணுர ......உங்களால உக்கத்து வீட்டு தோழியின் விரல் தொடுகையில் மனிதம் உணர்ந்த உங்களால ... பக்கத்து வீட்டு ஆண் பயலை மட்டும் எப்பிடிங்க இப்ப்டி பார்க்க முடியுது....

நம்ம சமூகத்தின் சாபக் கேடுங்க.... உங்களால புரிஞ்சு கொள்ள முடிஞ்சதை ... அதில ஒரு பாதியை ஆவது தமிழ் ஆண்பயலுகளில ஒருவனால ஆவது புரிஞ்சு கொள்ள முடியாதா ?

இதியே புரிந்து கொள்ள விரும்பாத ஒரு சமூகக் கவிஞன்... ரொம்பவே நெருடுதுங்க.... கவிதை நயம் நன்று....கருத்து...? திருந்தணும்க ......நீங்க..நாங்க...மத்தவங்க எல்லாரும்....

-எல்லாள மஹாராஜா

2. நிறம்

வேறுபடுத்திக் காட்டுவதற்கு மட்டுமே நிறங்களைப் பயன்படுத்தவும். (எ.கா.: கருத்துக்கள் முழுவதையும் சிவப்பு நிறத்தில் எழுதுவதை தவிர்க்கவும்)

வலைஞன்
Link to comment
Share on other sites

வலைஞன்

முதல் சந்திப்பு

===========

கண்ணிமை மூடுவதற்குள் -ஒரு

புன்னகை மலர்வதற்குள்

விரலின் நடுக்கம் உணர்வதற்குள்

விருட்டென்று

ஒட்டிக்கொள்கிறது பயம்

எல்லாக் கண்களும்

எங்களையே பார்ப்பது போல

இருந்த போதும்

என்னுள் ஏதோ

இடம் மாறிப்போய் விட்டது

முதல் காதல் பலருக்கும் இப்படி இருந்திருக்கக் கூடும்... ஆணுக்கு ...மீசை துளிர்த்த பருவத்திலும் பெண்ணுக்கு ....தாவணியின் தேவை உணரப் பட்டபோதும் .... எதை அறிந்து எதை நினைந்து...இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கக் கூடும்.

எழுதிச் செல்லும் இயற்கையின் கரங்கள் ...புதிய பாத்தி கட்டி பயிர் செய்ய விளையும் போதே காதலும் உணரப் படுகின்றது...அதைப் போலவே காமமும்...

காமத்துப் பால் தந்த வள்ளுவமும் தமிழ் ஆண் பயல் தான்....கோவில் கோபுரங்களில் சிருங்காரம் செதுக்கி படைப்பியலின் முழுமை சொல்லியவர்களிலும் தமிழ் ஆண் பயல்கள் உண்டு. மோகத்தைக் கொன்று விடு அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு என்று பாடிய பாரதியும் ஒரு தமிழ் ஆண் பயல் தான்.....

இவர்களை எல்லாம் புரிந்து கொள்ள முடிந்தவர்களால் ஒரு பெண் பற்றியும் அவளோடு முகிழ்க்கும் முதல் காதல் பற்றியும் புரிந்து கொள்ள முடியாதா என்ன ?

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.