Jump to content

தமிழர் திருநாள் 2008


Recommended Posts

உந்தப் போஸ்ரரையும் தமிழர் போஸ்ராக போட முயற்சித்திருக்கலாம். பெரியவா எல்லாம் சம்பந்தப்படிருக்கிறேள். அடுத்த முறையாவது கவனத்தில எடுங்கோ.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் திருநாள் 2008 பிரான்ஸ் நிகழ்வுகள்

கடந்த 20ஆம்திகதி ஞாயிறன்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஆண்டில் முதல் தடவையாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2007 நிகழ்வுகளைப் போலவே இந்த இரண்டாவது நிகழ்வும் வெற்றிகரமாக நடந்தேறியது முன்னைய ஆண்டைப்போலவே தமிழர் திருநாள் 2008ஆம் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தன. இவ்வாண்டு தமிழர் திருநாள் இருநாள் நிகழ்வுகளாக அமைந்திருந்தன. முதல்நாளான 19012008 சனிக் கிழமை ஆய்வரங்கும் மறுநாள் அரங்கநிகழ்வும் இடம் பெற்றன. இன்னிய அணியின் வரவேற்புடன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தாயகத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தால் வடிவமைக் கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதான இன்னிய அணி முதல்தடவையாக தாயகத்திற்கு வெளியே இந்நிகழ்வில் அறிமுகமானது ஒரு வரலாற்று பதிவாகியது.

தாயகத்தில் இன்னிய அணியை வடிவமைத்தவர்களில் ஒருவரான கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பாலசுகுமாரின் நெறிப்படுத்தலில், நடன ஆசிரியை அனுஷா மணிவண்ணனாலும், செல்வி வினோதா சந்திரகுமாராலும் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ்“சோலை மாணவிகள் இதனை நிகழ்த்திக் காட்டினர். சிறப்புவிருந்தினர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்த தொடக்க நிகழ்வாக இன்னிய அணியின் வரவேற்பு அமைந்தது அனைவரையும் உற்சாகம் கொள்ளச் செய்தது.

தமிழர் திருநாள் 2008இன் சிறப்பு அழைப்பாளர்களாக பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப் பினர் பிரான்சுவா பொப்புனி, மொறீசியசின் முன்னாள் கல்வி அமைச்சரும், தற்போது யுனஸ் கோவின் இயக்குநர்களில் ஒரு வாராக பணியாற்றும் ஆறுமுகம் பரசுராம், மொறீசியசின் துணை பிரதமமந்திரியின் செயலாளர் பொன்னுசாமி கிருஷ்ணசாமி, புதுவை பல்கலைக் கழகத்தின் பிரெஞ்சுத்துறைத் தலைவர் பன் னீர்ச்செல்வம், மலேசியாவில் தமி ழினச் செயற்பாட்டளரும், தமிழா சிரியருமான திருமாவளவன், கிழக்கு பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பாலசுகுமார், பாரிஸ் பல் கலைக்கழக தமிழ்த்துறையை சேர்ந்த அ.முருகையன், கரீபியன் தீவைச் சேர்ந்த திருமதி.மரி வீரபத் திரன், எழுத்தாளர் பிரான்சிஸ் பொன்னமான் மற்றும் பாரிஸ் புறநகர்ப்பிரி மாநகரசபைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

தமிழர் திருநாள் 2008 விழா மண்டபத்தை நாடா ளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா பொப்புனியும் பொங்கல் அரங்கை மொறீசியசின் முன்னாள் கல்வி அமைச்சரும், தற்போது யுனஸ்கோவின் இயக்குநர்களில் ஒருவராக பணியாற்றும் ஆறுமுகம் பரசுராம் கோலம் அரங்கை மொறிசியசின் துணை பிரதமமந்திரியின் செயலாளர் பொன்னுசாமி கிருஷ்ணசாமியும் கண்காட்சி அரங்கை கரீபியன் தீவைச் சேர்ந்த திருமதி.மரி வீரபத்திரனும் நாடா வெட்டி தொடக்கி வைத்தனர்.

குழந்தைகளுக்கு அகரம் எழுதுவிக்கும் சான்றோர்களாக புதுவைப் பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத்துறைத் தலைவர். பன்னீர்ச்செல்வமும் மலேசியாவில் தமிழினச் செயற் பாட்டளரும் தமிழாசிரியருமான திருமாவளவனும் செயற் பட்டனர். அகரம் எழுதிய 27 குழந்தைகளில் கரீபியன் தீவினைச் சேர்ந்த குழந்தைகளும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. அகரம் எழுதிய குழந்தைகள் பாரிஸ் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்து அ.முருகையன், மற்றும் கிழக்கு பல்கலைக் கழக கலைப்பீடாதிபதி பாலசுகுமார் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டனர்.

பொங்கல் பொங்கும் நிகழ்வரங்கை புதுச்சேரி வழிவந்த தமிழர்களின் சுயமரியாதை இயக்கத்தினர் முன்னெடுத் திருந்தனர். அவர்களே சிறுவர்களையும் இணைத்து திருக்குறள் அரங்கையும் சிறப்பித்தினர்.

கோலமிடல் அரங்கில் கடந்த ஆண்டு கோலமிட்ட திருமதி சாந் தாலுடன் இணைந்து திருமதி.ரவி ராஜேஸ்வரி, செல்வி சோபிதா வீரசிங் கம் ஆகியோர் கோலமிட்டனர். தொகு சொற்கோடியனாக.பாலசுகுமார் மாறி பார்வையாளர்களை ஈர்த்தார்.

கூத்து விபரண நிகழ்வை திருமறைக் கலாமன்றத்தைச் சேர்ந்த. சாம்பிரதீபன் நிகழ்த்தி பார்வையாளரின் பாராட் டைப் பெற்றார். 'கரிபியன் தீவில் தமிழ்" என்னும் தலைப்பில் கரீபியன் தீவுகளைச் சேர்ந்த தமிழர்கள் மேடையில் பாடி னர். அவர்களது பாடலில் சில சொற் களே புரியக்கூடியதாக இருந்தது. இது எதிர்காலத்தில் எமது தலைமுறையினர் எப்படி இருப்பார்கள் என்பதன் அபாயத்தை எடுத் துரைப்பதாக அமைந்திருந்தது.

பாரதியாரின் வாழ்க நிரந்தரம் பாடலுக்கான நடனத்தை நடன ஆசிரியை தனுஷா மதியின் மாணவிகள் ஆடினர். ஜேர்மனியில் இருந்து வருகை தந்த பொய்க்கால் குதிரை ஆட்டக்குழுவில் இங்கு பிறந்து வளர்ந்த தலைமுறை யினரே இணைந்திருந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத் தது. அவர்களது ஆட்டம் அத்தனை நேர்த்தியாக அமைந்திருந்தது.

இசையரங்கத்தை கடந்த ஆண்டைப்போலவே இவ் வாண்டும் திரு.உமாபதி குழுவினர் நடாத்தினர். இறுதி நிகழ்வாக ரவீந்திரன் குழுவினரின் களரி இடம் பெற் றது. எமது பாரம்பரிய கலை வடிவமான 'களரி" மேடையில் மிகச்சிறப்பாக மைந்திருந்தது. தமிழர் திரு நாள் 2008இன் சிறப்பு நிகழ்ச்சி களாக இன்னிய அணியையும், களரியையும் கொள்ளலாம். தமிழர் திருநாள் அரங்கத்துள் ஈழம், புதுவை, தமிழ்நாடு, மலேசியா, மொறீசியஸ், கரீ பியன் தீவுகள் என பல்தேசிய த்தமிழர்கள் குழுமியிருந்ததும் பங்கேற்றதும் உலகத் தமிழர் ஒன்றிணைவினை உணர்த்தி நின்றது. கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு தமிழர் திருநாள் பல அம்சங்களில் சிறப்புற்றிருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.

நன்றி: வீரகேசரி

http://www.virakesari.lk/VIRA/culturenew/c...s.asp?key_c=147

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த பிரான்ஸின் தமிழர் திருநாள் -2008

தமிழர் திருநாள் - 2008 பிரான்ஸ் நிகழ்வுகள் 20-01-2008 ஞாயிறன்று கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஆண்டில் முதல் தடவையாக நடைபெற்ற தமிழர் திருநாள் - 2007 நிகழ்வுகளைப் போலவே இவ்வாண்டும் தொடர்ந்த இந்த இரண்டாவது நிகழ்வும் வெற்றிகரமாக நடந்தேறியது. முன்னைய ஆண்டைப்போலவே தமிழர் நிருநாள் - 2008ம் பல சிறப்பம்சங்களை கொண்டிருந்தது. இவ்வாண்டு தமிழர் திருநாள் இருநாள் நிகழ்வுகளாக அமைந்திருந்தன. முதல்நாளான 19-01-2008 சனிக்கிழமை ஆய்வரங்கும் மறுநாள் அரங்கநிகழ்வும் இடம்பெற்றன.

தாயகத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தால் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதான இன்னிய அணி முதல்தடவையாக தாயகத்திற்கு வெளியே இந்நிகழ்வில் அறிமுகமானது ஒரு வரலாற்று பதிவாகியது. தாயகத்தில் இன்னிய அணியை வடிவமைத்தவர்களில் ஒருவரான பாலசுகுமாரனின் நெறிப்படுத்தலில், நடன ஆசிரியை அனுஷா மணிவண்ணனாலும் செல்வி. வினோதா சந்திரகுமாராலும் பயிற்றுவிக்கப்பட்டு தமிழ்ச்சோலை மாணவிகள் நிகழ்த்தினர். சிறப்பு விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்து தொடக்க நிகழ்வாக இன்னிய அணியின் வரவேற்பு அமைந்தது அனைவரையும் உற்சாகம் கொள்ளச் செய்தது.

தமிழர் திருநாள் 2008ன் சிறப்பு அழைப்பாளர்களாக பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா பொப்புனி, மொறிசியஸின் முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போது யுனஸ்கோவின் இயக்குநர்களில் ஒருவராக பணியாற்றும் ஆறுமுகம் பரசுராம், மொறிசியஸின் துணைப் பிரதம மந்திரியின் செயலாளர் பொன்னுசாமி கிருஸ்ணசாமி, புதுவை பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத்துறைத் தலைவர் பன்னீர்ச்செல்வம், மலேசியாவில் தமிழ்ச் செயற்பாட்டாளராக உள்ள திருமாவளவன், கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பாலசுகுமார், பாரிஸ் பல்கலைக்கழக தமிழ்த்துறையைச் சேர்ந்த அ.முருகையன், கரீபியன் தீவைச் சேர்ந்த திருமதி மரி வீரபத்திரன், எழுத்தாளர் பிரான்சிஸ் பொன்னமான் மற்றும் பல மாநகரசபை உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர்.

விழா மண்டபத்தை பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா பொப்புனியும் பொங்கல் அரங்கை மொறிசியஸின் முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போது யுனஸ்கோவின் இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றும் ஆறுமுகம் பரசுராமும் கோலம் அரங்கை மொறிசியஸின் துணைப் பிரதம மந்திரியின் செயலாளர் பொன்னுசாமி கிருஸ்ணசாமியும் கண்காட்சி அரங்கை கரீபியன் தீவைச் சேர்ந்த திருமதி மரி வீரபத்திரனும் நாடாவை வெட்டி தொடக்கி வைத்தனர். குழந்தைகளுக்கு அகரம் எழுதுவிக்கும் சான்றோர்களாக புதுவை பல்கலைக்கழகத்தின் பிரெஞ்சுத்துறைத் தலைவர் பன்னீர்ச்செல்வமும் மலேசியாவில் தமிழ்ச் செயற்பாட்டாளராக உள்ள திருமாவளவனும் செயற்பட்டனர். அகரம் எழுதிய 27 குழந்தைகளில் கரீபியன் தீவினைச் சேர்ந்த குழந்தைகளும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அகரம் எழுதிய குழந்தைகள் பாரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அ.முருகையன், கிழக்கு பல்கலைக்கழக் கலைப்பீடாதிபதி பாலசுகுமார் ஆகியோரால் மதிப்பளிக்கப்பட்டனர்.

பொங்கல் பொங்கும் நிகழ்வினை புதுச்சேரி வழிவந்த தமிழர்கள் முன்னெடுத்திருந்தனர். அவர்களே சிறுவர்களையும் இணைத்து திருக்குறள் அரங்கை சிறப்பித்தனர். கோலமிடல் அரங்கினை கடந்த ஆண்டு கோலமிட்ட திருமதி சாந்தாலுடன் இணைந்து திருமதி ரவி ராஜேஸ்வரி, செல்வி சோபிதா வீரசிங்கம் ஆகியோர் கோலமிட்டனர். தொகுசொற்கோடியனாக பாலசுகுமார் மாறி பார்வையாளர்களை ஈர்த்தார். கூத்து விபரண நிகழ்வை திருமறைக்கலாமன்றத்தை சேர்ந்த சாம்பிரதீபன் நிகழ்த்தி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். கரீபியன் தீவில் தமிழ் என்னும் தலைப்பில் கரீபியனைச் சேர்ந்த தமிழர்கள் மேடையில் பாடினர். அவர்களது பாடலில் சில சொற்களே புரியக்கூடியதாக இருந்தது. இது எதிர்காலத்தில் எமது தலைமுறையினர் எப்படி இருப்பார்கள் என்பதன் அபாயத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது.

பாரதியாரின் வாழ்க நிரந்தரம் பாடலுக்கான நடனத்தை நடன ஆசிரியை தனுஷா மதியின் மாணவிகள் ஆடினர். ஜேர்மனியில் இருந்து வருகை தந்த பொய்க்கால் குதிரை ஆட்டக்குழுவாக இங்கு பிறந்து வளர்ந்த தலைமுறையினரே விளங்கியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.அவர்களது ஆட்டம் அத்தனை நேர்த்தியாக அமைந்திருந்தது. இசையரங்கத்தை கடந்த ஆண்டைப்போலவே இவ்வாண்டும் உமாபதி குழுவினர் நடாத்தினர். இறுதி நிகழ்வாக ரவீந்திரன் குழுவினரின் களரி இடம்பெற்றது. எமது பாரம்பரிய கலைவடிவமான களரி மேடையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர் திருநாள் 2008ன் சிறப்பு நிகழ்ச்சிகளாக இன்னிய அணியையும் களரியையும் கொள்ளலாம்.

தமிழர் திருநாள் அரங்கினில் ஈழம், புதுவை, தமிழ்நாடு, மலேசியா, மொறீசியஸ், கரீபியன் தீவுகள் என பல்தேசிய தமிழர்கள் குழுமியிருந்ததும் பங்கேற்றதும் உலகத் தமிழர் ஒன்றிணைவினை உணர்த்தி நின்றது. கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு தமிழர் திருநாள் பல அம்சங்களில் சிறப்புற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினக்குரல்

http://www.thinakkural.com/news%5C2008%5C1...unday/page9.htm

பிரான்சில் நடைபெற்ற தமிழர் திருநாள் - 2008

ஜனவரி 24,2008,09:38 IST

பாரிஸ்: பிரான்சில் தமிழர் திருநாள்- 2008 வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சியாக 19.01.08 அன்று ஆய்வரங்கமும் மறுநாள் அரங்க நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சுவா பொப்னி பங்கேற்றார். மேலும் பலர் தவைர்கள் இதில் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.இதில் கரீபியன் தமிழர்கள் தமிழ் எனும் தலைப்பில் பாடல்கள் பாடி மகிழ்ந்தனர். இந்த தமிழர் திருநாள் அரங்கினில் ஈழம் , தமிழ்நாடு ,மலேசியா ,கரீபியன் தீவுகள் , என பல தேசிய தமிழர்கள் கலந்து கொண்டது உலகத் தமிழர்களின் ஒற்றுமையை உணர்த்தியது

நன்றி: தினமலர்

http://www.dinamalarbiz.com/nri/Country-de...ope&cat=new

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.