Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

விகடகவி உங்கள் சிறு சிறு தூறல்கள் இப்போது பெரும் வெள்ளமாக கரைபுரண்டு ஓடுகிறது களத்தில். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

எல்லோருடைய வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்.. பின்னூட்டல்களுக்கும்.. நன்றிகள்

தூறல் நாள் -12

கட்டிக்கொண்டு கிடந்து

கதைகள் பேசுவாள்..இதழ்

முத்தங்கள் பேசும்போது

விழிமூடிக்கிடப்பாள்..

பிரியும்போது அழுது நடிப்பாள்..

அவள் போலிக்காதலியென்றாள்..

"அண்ணா"என்றும் அபத்தமாய் அழைப்பாள்

கெட்டவனுக்கு வாய்ப்புகள் அதிகம்..

மௌனிகளுக்கு வாய்ப்புகள் நிரந்தரம்

நல்லவனுக்கு வாய்ப்புகள் குறைவு

மிகவும் நல்லவனென்றால்.. வாய்ப்புகளே இல்லை..

என்ன வாய்ப்பு என்று கேட்கிறீர்களா..

உயிர் வாழத்ததான்..

என் மௌனம் குமைந்து கொண்டிருக்கிறது..

உள்நின்று கனன்றுகொண்டிருக்கிறது..

ஆத்திரமாய்க் குமுறிக்கொண்டிருக்கிறது

இது எரிமலையாய் வெடித்தால்... நான்..

வாழ்வின் எல்லைவரை ஓடஓட விரட்டப்படுவேன்..

ஏனென்றால்..இது வீதிப்பையன்களின் அட்டகாசஉலகம்.

அம்மா..

ஒரு விடயத்தை

உன்னிடம் மறைத்துவிட்டேன்..

சொல்லநினைத்தேன்..

உன் மனம் உடைந்து விடுமோ

என்ற அச்சத்தில் தவிக்கிறேன்..

அம்மா..

உனக்குப் பிடிக்காத உன் தம்பியின்..

மகளை எனக்குப் பிடித்தது..

ஏனம்மா..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -13

உன்பார்வைக்கும்

என் பார்வைக்கும்..

விழுந்த முடிச்சு...

திருமண முடிச்சாகமாறும்..

என கனாக்கண்டேன்..

இப்போது உன் நினைவு முடிச்சுகள்..

என் கழுத்தை நெரிக்கிறது...

என் இரத்தத்தின் சத்தங்கள்..

அவளுக்கு கேட்கிறதாம்...

"ஆகா என்ன கேட்கிறது?"

என்று கேட்டேன்..

நிறைய பெண்களின்.. பெயர்

காதில் விழுந்ததாம்..

அட.. நான் என்ன செய்வேன்..

என் சுயரூபத்தை நாக்கைத்தவிர

எல்லாம் காட்டிக்கொடுத்துவிடுகிறது.

சந்தோசம் நாளைக்கு மாறலாம்..

நிம்மதி நாளைக்குப் போகலாம்..

வாலிபம் நாளைக்குத்தொலையலாம்..

இப்படி நாளையைப்பற்றிப்பேசி..

இந்த நாழிகையை வீணடிப்பானேன்..

நான் தமிழ் பேசும் நிலவைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தென்றலைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தேவதையைப் பார்த்திருக்கிறேன்..

ஆனால் அந்த அழகிக்கு எல்லா மொழிகளிலும்

கெட்ட வார்த்தை தெரியும் என்பதை நான்

காதலை அவளிடம் சொன்னபோது பார்த்தேன்..

Link to comment
Share on other sites

சந்தோசம் நாளைக்கு மாறலாம்..

நிம்மதி நாளைக்குப் போகலாம்..

வாலிபம் நாளைக்குத்தொலையலாம்..

இப்படி நாளையைப்பற்றிப்பேசி..

இந்த நாழிகையை வீணடிப்பானேன்..

நான் தமிழ் பேசும் நிலவைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தென்றலைப் பார்த்திருக்கிறேன்..

நான் தமிழ் பேசும் தேவதையைப் பார்த்திருக்கிறேன்..

ஆனால் அந்த அழகிக்கு எல்லா மொழிகளிலும்

கெட்ட வார்த்தை தெரியும் என்பதை நான்

காதலை அவளிடம் சொன்னபோது பார்த்தேன்

உங்கள் கவிதைகளின் ரசிகை நான்,இடஹியும் ரசித்தேன்!!

வாழ்த்துக்கள் விகடகவி

Link to comment
Share on other sites

தூறல் நாள் -14

வரவுக்கு மீறிய செலவாய்..

ஒரு முத்தத்திற்கு பதிலாக

ஒன்பது முத்தம் தந்தேன்..

செலவாளி என்று தப்பர்த்தம்

செய்து கொள்ளாதே.. செல்லமே..

திருமணத்திற்கு பிறகு வருமானம்..

அதிகரிக்கும் என்றே நம்புகிறேன்..

மெதுமெதுவென்றிருந்தாலும்..

அந்தப் பிஞ்சுவிரல்கள் ஐந்தும்..

என் விரலை இறுக்கமாய்..

பற்றிக்கொண்டபோது..

குளிர்ச்சியான நீர்வீழ்ச்சியொன்று

இதயச்சாரலின் ஓரமாய்.. அடடா..

குழந்தை உலகின் முதல் அதிசயம்!!.

சந்தித்தவேளை வயதை

சிந்திக்கவே இல்லை

தந்துவிட்டேன் என்னை

பேசியவேளை

யோசிக்கவேயில்லை

வாசித்துவிட்டேன் உன்னை

மன்னித்துவிடு (சின்னப்) பெண்ணே..

எல்லாவற்றிற்கும் விலையுண்டு..

என்று நினைத்தவன் நான்..

பணத்துக்கு பாசமும் அடிமை

என்றிருந்தவன் நான்..

ஆனால் அன்பே உன் குணத்தால்..

இன்முகத்தால்..புன்சிரிப்பால்

..

உன்பால் என்னை சுழலவிட்டாயே..

நீ என்னை செல்லநாய்க்குட்டிபோல்

செய்தனையே.. பணம் பாதாளம் பாயுமாம்

பெண்.. பாதாளத்தில் பல்லாங்குழி ஆடுவாள்..

நீ காதலிக்காமல் போனதும் கவலையில்லை

நீ என்னைத்திட்டியதும் கவலையில்லை

நீ என்னை மறந்ததும் கவலையில்லை

இன்னும் நீயென்னை தவறாகத்தான்

புரிந்து கொண்டிருக்கிறாயே என்ற

நினேவேதான் என் நெஞ்சில் நெருஞ்சி முள்.

முதல்நாள்

தொட்டுக்கொண்டோம்

இரண்டாம் நாள்..

ஒட்டிக்கொண்டோம்..

மூன்றாம் நாள்

கட்டிக்கொண்டோம்..

நான்காம் நாள்..

அவள் கொடுத்த

எச் ஐ விக்கு நான்..

கூலி கொடுத்தேன்..

வேலை விடுமுறையில்..

வாழ்க்கை விடுமுறையும்

வந்து சேர்ந்ததே..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -15

மின்னிக்கொண்டிருக்கும்

மூக்குத்திப்பூவில்தான்

உன் அழகு ஒளிந்துகொண்டிருக்கிறது..

ஏனென்று கேட்கிறாயா..

ஏதாவது ஒன்று தகுதி குறைவான

ஒன்றோடு ஒப்பிடப்படும்போதுதானே..

மெய்யான தரம் தெரிகிறது..

உன் கண்கள் அந்த வைரக்க்லை

விட அழகாக ஜொலித்துக்கொண்டிருக்கின்றன..

இதே சாலையோரத்தில்

அம்மா..அப்பா விரல்பிடித்து

நடை பழகினானாம்

இதே சாலையோரத்தில்

பள்ளிப்பையோடு இவன்

துள்ளி ஓடி வருவானாம்..

இதே சாலையோரத்தில்

அவனைக்காண இவன்

காத்துக்கிடப்பானாம்..

இதே சாலையோரத்தில்

அவளோடு சேர்ந்து

நெருங்கி நடந்தானாம்..

இதே சாலையோரத்தில்

அவர்கள் திருமண

ஊர்வலம் நடந்ததாம்..

இதே சாலையோரத்தில்

கர்ப்பிணியான அவன் மனைவி..

குண்டில் சிதறுண்டு மடிந்தாளாம்..

இதோ இப்போது

இதே சாலையோரத்தில்

இவன் உருக்குழைந்து..

உடைகிழிந்து..

பைத்தியமாய்..

அழுதுகொண்டிருக்கிறானாம்..

இதே சாலையோரத்தில் இன்னும்..?

நெஞ்சு பொறுக்குதில்லையே..

எல்லோரையும்.. அழகாய்க் காட்டும்.

இந்தக் கண்ணாடி என்னை மட்டும்.

இவ்வளவு.......

அம்மா குளியலறையில்க்

கத்திக்கொண்டிருந்தார்.

"இந்தக் கண்ணாடி எப்ப உடைந்தது?"

நல்லவேளை இன்னும் யாரும்..

எப்படி உடைந்தது என்று

கேட்கவில்லை..

கண்ணுக்குள் தூசு விழுந்தது..

வலித்தது

கலங்கினேன்..

குணமாகிவிட்டது.

கண்ணுக்குள் நீ விழுந்தாய்..

இனித்தது..

சிரித்தேன்...

குணமாகவில்லை!!..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -16

நான் தூங்கிய பிறகு விழித்து...

நான் விழிக்கமுன்.. தூங்குவாள்..

என் மனைவியல்ல..அவள்

என் கனாப்பெண் அவள்..

என் பாடலை நான்..

கேட்கமுடியாது...

அப்பாடலை பிறர்

சகிக்கமுடியாது..

அந்த ஞானசூனியம்

என் குறட்டைதானாம்..

நினைவுகளாய்.. என்னை

நிரப்பிவிட்டு நீ

எட்டியிருக்கிறாய்.-என்னை

மறந்து இருக்கிறாய்..

என்னுடன் பேச விரும்பாமல்..

இருக்கிறாய்..-எதுவம்

புரியவில்லை பெண்ணே..

என் தவிப்பை எதற்காக

தாராளமாக்குகிறாய் என்பது

அவள் விழிகள்

நீர் சிந்தினால்

என்னுள்ளம் உடைந்துவிடுகிறது..

அவள் நீலக்கடலில் குளித்து

நிலவில் ஒளி வாங்கி

பூக்களின் வாசம் கொண்டு

பூவிதழ் நெளிந்து.

புன்னகை தந்து

காதல் வளர்த்தவள்..

அவள் மனமுடைந்தால் என்

இதயம் நொருங்கிப்போகாதா என்ன?..

சாதனை செய்வதற்காக..

பேனாவைத் தூக்கினேன்..

சோதனை செய்கிறேன்.. புரிகிறது..

என் எழுத்துகளைப் படிக்கும்..

அன்பர்கள் பொறுமையை..

இதுவும் சாதனை என்று எண்ணினாலும்..

மன்னிக்க வேண்டுகிறேன்..

உனக்கு வேண்டுமானால்

நீ போய் போட்டு சாப்பிடு

என்றாள் மனைவி....

முதலில் சாப்பிடுங்கள்

பிறகுதான் பேசுவேன்

என்றாள் காதலி..

ஒரு சின்ன மாற்றம்..

அந்தக் காதலிதான் இப்படி

மாறிவிட்ட என் மனைவி..

Link to comment
Share on other sites

விகடகவி மாம்ஸ் சிறு தூறள்கள் தற்போதுமழையாக அல்லவா பொழிகிறது :D மிகவும் நன்றாக இருக்கிறது மழையில் நனைய!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

உனக்கு வேண்டுமானால்

நீ போய் போட்டு சாப்பிடு

என்றாள் மனைவி....

முதலில் சாப்பிடுங்கள்

பிறகுதான் பேசுவேன்

என்றாள் காதலி..

ஒரு சின்ன மாற்றம்..

அந்தக் காதலிதான் இப்படி

மாறிவிட்ட என் மனைவி..

எல்லா தூறல்களும் ஒரு வித இதமான தாலாட்டு.. அதிலும் இது சூப்பர் விகடகவி. தொடரட்டும் உங்கள் தூறல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினசரி தூறல்கள்

தினம் தினம்

பெருந்துளியாய்

நெஞ்சினை நிறைக்கின்றது

வரிவரியாய்

வடிக்கும் கவிதைஅழகு

தூரலில் நனைய

தொடர்ந்திடட்டும்

Link to comment
Share on other sites

தூறல் நாள் -17

என் கனவுத்தோட்டத்து தேவதேயே..

நான் காலார நடக்கையில்..

உன்னை உள்ளுர நினைக்கிறேன்..

தொட்ட இடம் இன்பம் சுரக்க -விரல்

பட்ட இடம்மின்சாரம் தெறிக்க..

கட்டழகைக் கட்டியணைக்க -காளை

முட்ட வரக் கன்னி சிரிக்க..

இதே தோட்டம்தான்..அடிப்பெண்ணே

இதே மரநிழல்தான்..அன்று

என்னிளமைக்காட்டாறில் - இன்ப

மீன்பிடித்த கைகாரியே..பூவே

பொய்க்கோபம் உனக்கேனடி..வா

ஊர் உறங்குகிறது..

ஓசையே இல்லை..

தூக்கம் வராமல்

புரளும் எனக்கே..

என்னிதயத்துடிப்பு கேட்க..

உற்றுக்கேள்..

உனக்கு கேட்காது

சுவற்றுப் பல்லியே..

எனக்கு கேட்கிறது..

நாளைக்குப் பரீட்சை முடிவு..

நான் சித்தியா இல்லை

மீண்டும் அடுத்த சித்திரையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினசரி தூரல்

தினம் தினம்

தூரல் விழாமல்

இருப்பதும் ஏனோ விகடகவி.

Link to comment
Share on other sites

மனதில் இப்போது..

கடும் கோடை..

வரண்டு போனது

கற்பனையல்ல..என்

இதயக் கார்மேகங்கள்..

தூரல்..இனி மெல்ல மெல்ல

வந்து விழும் க..பி

Link to comment
Share on other sites

தூறல் நாள் -18

குழந்தை குற்றமென்று

தெரியாமல்.. முகத்தில் கீறும்

வலித்தாலும் இனிக்கும்..

நீயும் குழந்தை போல்தானே..

அன்பே இதயத்தில் கீறினாய்

வலியில் உயிர் போகிறது..

வானவில்லின்

வளைவு அழகா..

வளைந்து கிடக்கும்..

வண்ணமழகா..

வண்ணவொளி

வந்து விழுவதழகா..

வளைவதழகா..என்றெல்லாம் என்னை

வாயோயாது கேட்கும் என்

வருங்காலத் துணையே..

வாடாதவுந்தன்

வதனமேயழகு..

வருத்தம் தந்திடாத

வளமான இதயமழகு..

வற்றிடாத சிரிப்பழகு..

வசீகர விழியழகு

வாய் மொழிவேன் நீயேயழகு!!!

என் பாதங்கள்

நடந்து தேய்ந்தவை..

என் விழிகள்..

எதிர்பார்த்திருந்து ஓய்ந்தவை

என் முதுகு

உன் காலடி தேடியே கூன்கண்டது

என் கைகள் கைத்தடி

தாங்கித் தான் வலுக்கொண்டது..

இந்த வெண்நரை கூட

உன்னிடம் சமாதானம்தான் பேச வந்தது..

என் கன்னக்குழி

உன்னிடம் அழகாக

சிரித்துக்காட்டசொன்னது..

முப்பதில் சொன்னாய்

காத்திருக்கச் சொல்லி..

அறுபதாகியும்

காதலியே பார்த்திருக்கிறேன்..

ஆள் வரவில்லை...

எனக்குத் தெரியும்

நீ வருவாய்

என் சமாதியில் பூப்போட..

நான் இளைத்துப்போய்விட்டதாக

அம்மா கவலைப்படுகிறார்கள்..

என் பிள்ளை

படித்துக் களைத்து இளைத்ததாக..

பெருமை வேறு பேசிக்கொள்கிறார்கள்..

உண்மையில்..நான்..

உன் காதலுக்கு ஏங்கி..துயில் நீங்கி

உடல் மெலிந்தததை...

பாவம் அவர்கள் தவறாக புரிந்து

வைத்திருக்கிறார்கள்..வழமை போல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இளைத்துப்போய்விட்டதாக

அம்மா கவலைப்படுகிறார்கள்..

என் பிள்ளை

படித்துக் களைத்து இளைத்ததாக..

பெருமை வேறு பேசிக்கொள்கிறார்கள்..

உண்மையில்..நான்..

உன் காதலுக்கு ஏங்கி..துயில் நீங்கி

உடல் மெலிந்தததை...

பாவம் அவர்கள் தவறாக புரிந்து

வைத்திருக்கிறார்கள்..வழமை போல..

நாங்கள் உங்களைச் சரியாகப் புரிந்து கொண்டோம் கவிஞரே!!! :lol::wub:

Link to comment
Share on other sites

வரும்வழியில் அமிழ்ந்து

போனாலும்..நுரைகள்..

அலையாய்.. என்றோ

ஓர் நாள் கரை சேரும்..

இந்தக் காதலும்..

ஓர் நதள் கரை சேரும்..

அம்மாகிட்ட சொல்லமாட்டீங்க..

ம்கூம் மாட்டீங்க அம்மாவைத்தான் உங்களுக்கு தெரியாதே.. :lol:

Link to comment
Share on other sites

தூறல் நாள் -19

கொலைவாள் விழி கொண்டு

அலைபாயும் மனதை அறுத்தாள்..

வலை வீசிப்பிடித்தாள்..என்

நிலையின்று அவள் நிழல் போல

உலகில் வென்ற காதல்நிலையிதுதானோ..

அருகில் இருந்தபோது

உணராத ஆத்ம நெருக்கத்தை

பிரிந்து விலகி தூரமாகிய அந்த

ஆத்ம தேடலில் உணர்ந்தேன்..

அவள் அவனை நினைத்துக்கொண்டிருந்தாள்

அவன் அவளை விதைத்துக்கொண்டிருந்தான்

ஆனால் இருவர் விற்பனைக்கும் பெற்றோர்கள்

ஊர்ஊராய் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தூங்கமுன் புதுமலராய் இருந்தவள்..

தூக்கம் கலைந்த போது..இதழ்

கலைந்த ரோஜாவானாள்.. கேளாமல்

ஜன்னலின் வழி வந்த விடியலின்

வெளிச்சம் காட்டியது.. இந்த

இதழ் கலைந்த ரோஜா அழகோ அழகென்று..

தொலைக்காட்சி விளம்பரமொன்று

தமிழைக்கொன்றுகொண்டிருந்தது..

.

விளம்பரத்தில் வேற்று தேச அழகி-இளம்

தமிழனைக் கொன்றுகொண்டிருந்தாள்.

Link to comment
Share on other sites

தினசரி தூறல்கள் மாம்ஸ் தினசரி என் நெஞ்சை தளுவி சென்றதால் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது :( அவ்வளதிற்கு நன்றாக இருந்தது மாம்ஸ் :( ....எல்லாம் சரி ஜம்முபேபி காதலிக்கும் போது நீங்க தான் கவிதை எழுதி தரவேண்டும் நான் வந்து என்ட பெயரை போட்டு கொடுப்பேன் என்ன மாமோய்!! :(

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் -20

என் கண்களில்

விழுந்த ஒரு தூசு..

கண்களைக் கலங்க வைத்தது...

என் இதயத்தில் விழுந்த ஒரு தூசு

வாழ்வைக் கலங்க வைத்தது..

பெண்ணே மன்னித்துக்கொள்..

உன்னை தூசு என்றதற்காக...

விழும்போது தட்டி விட்டிருந்தால்

நீ தூசுதானே...நான்..

விருட்சமாக வளரவிட்டபின்

வேதனைப்படுகின்றேன்.

முத்தம்

பத்துவயதில் ச்சீ என்றாய்..

பதினாறில் வெட்கப்பட்டாய்..

பதினெட்டில் ஓடிஒளிந்தாய்..

பத்தினியாகி பரவசப்பட்டாய்..

உற்றவளாய் ஒட்டிக்கொண்டாய்..

பெற்றவளாய் விலகிக்கொண்டாய்..

முத்தம் மொத்தத்தில் என்தேவியே..

தந்ததெல்லாம் தங்கமாய்..

பெற்றதெல்லாம்பொன்னாய்..

தெருவுக்குத்தெரியாத தேவதை வரமாய்..

நினைவுகளில் இனிய சுகமாய்..

நன்றிகள் கோடி என் நாயகியே..

தூதுகள் செல்ல

நூறு கிளிகள்..

ஆயிரம் வழிகள்..

வாசலைக் காதலி

நீயே அடைத்துவைத்திருந்தால்

அடி காதல் எங்ஙனம் வாழும்?..

சிலநேரங்களில் உனக்கு காதல்

பொங்கினால்.. பார்வைச் சாரலிலும்

முத்தத்தேன் மழையிலும் நனைத்துவிடுகிறாய்..

ஆனால் பானையில் பொங்கும்போது

அகப்பையால் துலாவி அடக்கிவிடுவது போல்

எனக்கு காதல் பொங்கும்போது மட்டும்...

சப்பென்று அடக்கிவிடுகிறாயே.. ஏனன்பே..

எல்லாப் பெண்களுமா இப்படி?..

மழையில்லாமலே குடைபிடித்தேன்..

குடைக்குள் இருந்து கொண்டே

நனைந்தும்போனேன்..எல்லாம்..

உன்னை நினைத்துக்கோண்டே..

நடந்ததால்தான்!!!..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -21

வெள்ளை வல்லூறுகள்

பெற்ற "சொனிக்" கழுகுகள்..

தீமுட்டை போட்டு -ஈழத்தின்

அழகுப்பூங்காக்களைக்

கருக்கிப்போகிறது..

பூங்காவில் வாசத்தோடிருந்த...

வனப்போடிருந்த...

வாலிபத்தோடிருந்த..

கனவோடிருந்த..

கண்குளிரவிருந்த..

எவ்வளவு பூக்கள்.

மண்ணோடு மண்ணாக

சருகாகி..எரியுண்டு போயின..

பராசக்தியே..வல்லூறுகளைக்

கொல்ல வல்லமை கேளேன்

இனி உன்னிடம்..

கேட்டுக் கேட்டுத்தான்

நீ தந்தாயா என்ன?..

என்னால் முடிந்ததைச் செய்கிறேன்..

மூத்தவர் முடிவெடுக்கட்டும்..

திசைகள் அதிர ஒரு

தமிழ்பேரிகை..முழங்கட்டும்.

எனக்குள் அழுகிறேன்

ஈழம் எரிகின்றது..

எனக்குள் அழுகிறேன்

சர்வ தேசம் சிரிக்கின்றது..

எனக்குள் அழுகிறேன்

உறவுகள் மறைகின்றது..

எனக்குள் அழுகிறேன்

சந்தோசம் மறக்கினறது..

எனக்குள் அழுகிறேன்

துயரங்கள் உறைகின்றது..

அழுகை வற்றிப்போன

கண்கள் சிவக்க..

சிரித்தவனை வெறித்தேன்..

மௌனமாக இருக்கிறான்..

எரித்தவனை முறைத்தேன்..

போருக்கு வருகிறான்..

நொந்து சாவதிலும் - மானத்துடன்..

வென்றிடச் சாவதே மேலென

போருக்குச்சித்தமானேன்..

போர்..போர்..போர்..போர்..

எழுத்துகளாளேனும் இதம் தரத்தான்

நான் ஏதோ ஏதோ எழுதுகிறேன்..

என் தேசத்து இரத்த வாடையும் அழுகுரலையும்..

நான் மறக்கவில்லை..உள் விழுங்கிக்கொண்டிருக்கிறேன்..

தினமும் குமைந்துகொண்டிருக்கிறேன்..

வீரமாய்ச் சொல்லலாம் நான் பாரதியில்லையே..

அழுகையைச் சொல்லலாம் இணியழக் கண்ணீர் இல்லயே..

பிறந்த மண்ணையும்.. பெற்ற தாயையும்

எந்நிலை மாறினம் எக்கணமும் மறவேன்..

என்னையும் என் தட்டச்சையும் கோபித்துக்கொள்ளாதீர்கள்!..

Link to comment
Share on other sites

தூறல் நாள் -22

என் இதயப்பலகை

சுத்தமாக இருக்கின்றது..

யாராவது எழுத நினைத்தால்..

உங்கள்அப்பா..அம்மா..அக்கா..

தம்பி..தங்கை..மாமா..சித்தப்பன்..

எல்லா உறவுகளிடமும்..

அனுமதி பெற்றுவிட்டு வந்து

எழுதுங்கள்..மேலும்

எழுதும்போது தயவுடன்.

கூர்மைமிக்க ஆணிகொண்டு

எழுதாதீர்கள்..வாசம் மிக்க

மென்மலர்களால் எழுதுங்கள்..

வலிகளும் தழும்புகளும்..

இந்த இதயத்திற்கு புதிதல்ல

எழுதியவர்கள் எதற்காக..

எதற்காகவோ எல்லாம்

போய்விடுவார்கள்..

விட்டுச்சென்ற வாசத்தோடாவது

இந்த இதயம் வாழட்டுமே..

நீ பேசினால்

ரணங்கள் குணமாகும்..

நீயெதிர் தோன்றினால்

மரணங்கள் சுகமாகும்..

நீ என்னோடு இணைந்தால்..

ஏய் அழகியே..

நான்தான் கடவுள்!!!

விழிகளின் அருகே

நீ இருந்தென்ன..

விரல்தொடும்

உரிமை தந்தென்ன

நீர் ஊறா நிலமாய்..

நெஞ்செல்லாம் கல்லாய்..

வாசம் தராப் பூவாய்..

வண்ணமில்லா காத்தாடியாய்..

வளையாத வில்லாய்..

யோசித்துப் பார்

நீ ஏன்தான் எனக்கு?

உன்னை யாரும் குற்றம் சொல்வதில்

எனக்கு சம்மதமே இல்லை

என் தேவதை நீ..

நானேதான் குற்றவாளி..

எனக்கு உன் சந்தோசம்தான்

கடைசி ஆசை..

என் புது நண்பி..

பல நிமிடங்களாய்..

என் கவிதைகளை நோட்டமிட்டாள்..

ரசித்தாள்..

அப்பாடா..இவளாவது

எனக்கு ரசிகையாகிவிட்டாளே..

என்று எண்ணிக்கொண்டிருக்க..

கேட்டாள்"இந்த எழுத்துகள்

அழகாக இருக்கின்றதே..இதுதான்

நம் தமிழ் எழுத்தா" என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கண்களில்

விழுந்த ஒரு தூசு..

கண்களைக் கலங்க வைத்தது...

என் இதயத்தில் விழுந்த ஒரு தூசு

வாழ்வைக் கலங்க வைத்தது..

பெண்ணே மன்னித்துக்கொள்..

உன்னை தூசு என்றதற்காக...

விழும்போது தட்டி விட்டிருந்தால்

நீ தூசுதானே...நான்..

விருட்சமாக வளரவிட்டபின்

வேதனைப்படுகின்றேன்.

உங்க கவிதை அழகு

பெண்ணை தூசாக உவமித்து அழகாக வந்திருக்கிறது

Link to comment
Share on other sites

நன்றி ஜம்மு..(பேபியோட பேச்சே ஆயிரம் கவிதை..பிறகேன்.. பேபிக்கு கவிதை..)

நன்றி கபி..(நான் எல்லா பெண்ணையும் தூசா சொல்லலை..அவளை மட்டும்தான்)

Link to comment
Share on other sites

தூறல் நாள் -23

அம்மா...

அரவணைப்பிற்கும்..

அன்பிற்கும் மட்டுமல்ல

என் வாழ்க்கை முழுவதற்குமே..

ஆதாரம் நீதான் தாயே..

தடுமாறும் என்னை

தடம் மாறச் செய்யுமோ..

உன் பிரிவு என்று

கவலைப்படுகிறாயாமே..

கண்ணைப் பிடுங்கியபின்

என் தூக்கத்தைப் பற்றி

கவலையேனடி? ..

இருட்டுக்குள்

இருந்துகொண்டே

நிலவை ரசித்தேன்..

நிலவுக்கு ஆசைப்பட்டு

நிம்மதியைத்தொலைத்தேன்..

நிம்மதியைத் தேடி

நெடுந்தூரம் நடந்தேன்..

நெடுந்தூரம் தாண்டியபின்

நான் மறக்க நினைத்தவளை

நினைக்க மறக்கவில்லலை

என்ற மெய்நிலையறிந்தேன்!

அன்பே..

உன்னுடைய

ஒவ்வொரு முத்தமும்

சேமிப்புக் கணக்கில் சேரும்..

அதிக பட்ச வட்டியாய்..

கூட்டு வட்டி தருகிறேன்..

என் கணக்கை

நடைமுறைக்கணக்காய் வைத்துவிடு

அடிக்கடி வைப்பு செய்வதும்..

எடுத்துக்கொள்வதும்..

மொத்த வியாபாரி எனக்கு அவசியம்!

சில உண்மைகளை

அறிந்துகொள்ள-மனிதனே..

ஊமையாயிரு..

உன் ஊமைவேடம்

கலைந்துவிட்டால்

உண்மையாயிரு..

முயற்சிக்கு..தூக்கம்

முட்டுக்கட்டை..

களைப்புக்குத் தூக்கம்

பஞ்சுமூட்டை

காதலுக்குத் தூக்கம்

வருவதேயில்லை

கணவனான மனிதனுக்கு

தூக்கமேயில்லை

நிஜத்தில் நடிப்பவர்களை

வெறுக்கிறேன்..

வாழ்க்கை என்ன

நாடகமா?..

நிஜம் மறைப்வர்களைக் கண்டு

பயப்படுகிறேன்..

எதை நம்புது?..

மெய்யான என் முகம்

பிடிக்கவில்லை பலருக்கு

பிடித்த ஒரு சிலருக்காகவாவது

உண்மையிருக்கிறேனே..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.