Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

தூறல் நாள் -24

நானா..நீயா

முதலில் மௌனத்தைக் கலைப்பது

என்ற இருவரது

இறுமாப்பையும்..

இரு மாதங்களில்.

புதிதாய் ஒருவன் வந்து

கலைப்பான் என்று

நான் எதிர்பார்க்கவேயில்லை!

அன்பே..

என் பிள்ளைக்கு நீ

தாயாகி என்

இதயக் கரும்பாறையை

இலகவைத்து உன் காலடியில்

இலவம் பஞ்சாக்கி

உனை நிதம் சுமக்க

வைத்தாய்!..

உன்னைப் பார்த்த

பிறகு நான்

மரணம் என்ற

வார்த்தைக்கு அஞ்சுகிறேன்!.

உன் வரவால்

என் படுக்கையறைகூட

படு வெளிச்சமானது

தேவதையே..

என் மனைவி

எவ்வளவு அடக்கமாம்..

அமைதியாய் இருக்கிறாறாம்..

பேச்சோ மிகக்குறைவாம்..

பெரியவர்களிடம் மிக

மரியாதையாக நடந்து

கொள்கிறாளாம்..

என் பெற்றோரின் புகழாரத்தை

ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன்..

தனிக்குடித்தனம் வந்த பிறகு..

நான் அதே மாதிரி

நடந்து கொள்ள

கற்றுக்கொண்டேன்..ஆனால்

அவள்? :rolleyes:

காதலியே..

காதல் சம்மதத்தை தர

ஐந்து வருடங்கள் எடுத்துக்கொண்டாய்.

நான் கல்யாண சம்மதத்தை தர

ஐந்து நாட்கள் எடுத்துக்கொண்டதற்கா

இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

கற்கண்டு கூட

கசந்தது..நீ

என்னை நிராகரித்த

பொழுதுகளில்..

வேப்பங்காய் கூட

அமுதமாயிருக்கிறது..

நீ என்னிடம்

சம்மதம் சொன்ன பிறகு...

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

தூறல் நாள் -25

கனவில் நீ வந்தாய்..

விடிந்தும்..இமைகளைத்

திறக்காமலே நான்..

உந்தன் வசீகரமான விழிகள்

என்னைப் பார்த்து

ஆசையுற்றதில்..பிறருக்கு

ஆச்சரியம்...என்னே

என் பேரதிர்ஸ்டம்!

நானும் அவளும்

மௌனிகளாய்

இருந்தபோதும்..எங்கள்

விழிகள் ஓயாது

பேசிக்கொண்டேயிருக்கின்றன..

அன்பே

இந்தக் காதலர் தினத்திற்கு

முதல் நாளாவது

ஏதாவது காரணத்திற்காக

என்னை வெறுத்து

விலக மாட்டாயா..

சில நாட்களாய் மனது

வேறொரு பெண்ணிடம்

நாட்டாப்படுகிறது..

"என்னிடம் ஒரு

கெட்ட பழக்கம் இருக்கிறது..

அழகான பெண்களுக்கு

ரோஜாப்பூ கொடுப்பது" என்றாவாறு

அவன் அவளிடம்

ரோஜாவைக் கொடுத்தான்..

"என்னிடம் ஒரு

கெட்டபழக்கம் இருக்கிறது..

என்னிடம் யாராவது காதல்கடிதம்..

ரோஜாப்பூ என்று தந்தால்.."என்ற

அவள் குனிந்து நிமிரும்முன்..

அவன் ஓடி வந்துவிட்டான்..

என்னெதிரே ஏதோ சத்தம்

என் நிலைக்கண்ணாடிதான்

காறித்துப்ப எத்தனிக்கிறதோ..

உலகமே திரண்டிருந்தாலும்

உள்ளம் துவண்டிருக்கமாட்டேன்..

என் காதலி நீயே..

உயிரோடு உயிராக என்றவள்..

உன் உறவுகளோடு..

ஊமையாயிருப்பதால்தான்..

உடைந்துபோய் நிற்கிறேன்.

Link to comment
Share on other sites

அன்பே

இந்தக் காதலர் தினத்திற்கு

முதல் நாளாவது

ஏதாவது காரணத்திற்காக

என்னை வெறுத்து

விலக மாட்டாயா..

சில நாட்களாய் மனது

வேறொரு பெண்ணிடம்

நாட்டாப்படுகிறது..

அழகாக சொல்லி இருக்கிறீங்க யதார்த்தத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கச் சுகமாயிருக்கிறது கவிஞரே!!! வளரட்டும் தினமும் தூறல்கள்!!!

Link to comment
Share on other sites

நிலா சுவி..நன்றிகள்..உங்கள் ஊக்கங்களே....மேலும் மேலும் என்னை எழுத தூண்டுகிறது..

தூரல் நாள் 26

உன் காதலை

ஏற்கும் மனோநிலை

எனக்கில்லை

என் பேச்சைக்

கேட்கின்ற பக்குவம்

உனக்கில்லை..

நான் சமுதாயம் என்ற

சுழலில் நிற்கவில்லை

எதிர்காலம் என்ற

சிக்கலைச் சிந்திக்கிறேன்..

புரிவாய் சிறியவளே..

தொடாமல் சுகம் தரும்

தொலைபேசி உரையாடல்களும்..

எட்டி நின்று பார்த்து

ஏங்குகின்ற விழிகளும்..

கட்டில்வரை இழுத்துவிட

காளை படும் பாடுகளும்..

காதலனை நம்பிவிட்டு

கலங்கிநிற்கும் கன்னிகளும்..

தற்காலக் காதல் கண்காட்சி.

கருவளர்த்த தாய்..

கண்ணாய் வளர்த்தவள்..

உயிர் கொடுத்த தந்தை

உழைப்பால் காத்தவன்..

வாழ்வு முழுவதும்

கேட்டதெல்லாம் கொடுத்தவர்கள்...

நீ கேட்டிருக்கலாம்

காதலுக்கா மறுத்திருப்பார்கள்..

பெற்றமைக்கு நன்றிக்கடன்..

வளர்த்ததற்கு செய்நன்றி..

ஓடிப்போனாய்..இவளே..

இரண்டே மாதம் மட்டும்

பல்லிலளித்த பையனோடு..

பெற்ற பாவத்திற்கு பலன்..

வளர்த்த பாவத்திற்கு பிராயச்சித்தம்..

பிரமை பிடித்த அம்மாவையும்..

பேச்சிழந்த அப்பாவையும்;..

அவர்கள் ஆன்மா..கணமும்..

அணுஅணுவாய் அழவைக்கிறதே..

உன் வார்த்தைகள்

வலித்தபோதெல்லாம்

மௌனம் காத்தேன்..

உன் செயல்கள்

சினந்தந்த போதெல்லாம்

பொறுமை காத்தேன்..

என் மௌனமும் பொறுமையும்..

திருமணத்திற்கு முதலே..

கலைக்கப்பட்டிருந்தால்

விவாகரத்திற்காக..நான்..

அலையவேண்டி இருந்திராதே...

வண்டு தேனைக்

குடித்துவிட்டு இளைப்பாறும்..

பூக்கள் தேனைக்

கொடுத்துவிட்டு களைப்பாகும்..

நாகரீகம்..

நீ உன்னை ரசிப்பதல்ல..

மற்றவர்கள் உன்னை மதிப்பது.

Link to comment
Share on other sites

தூறல் நாள் 27

பார்வையிலே பதிலை வந்து சொல்லடி-உனைப்

பார்த்தபின்னே பசியேயில்லை ஏனடி

பாயதிலே தூக்கமில்லை பாரடி -உன்னால்

பாதியுடல் தேய்ந்துவிட்டேன் நானடி

அள்ளும் அழகு துள்ளும் இளமை

சொல்லும் காதல் வேதம்

ஆசைநூறு பேச நூறு

தேடும் ஜோடிப்பாதம்..

பூக்களை பார்த்து இரசிக்கும்

கிளையின் காதல் தெரியும்

பூக்களைத் தொட்டு செல்லும்

தென்றல் காதல் தெரியும்

பூக்களை ஆண்டு செல்லும்

வண்டின் காதல் தெரியும்

பூக்கள்தானே பெண்கள்

நாம் என்றும் ஊமைகள்.

காதல்தன்னை நானே..வந்து

எப்படி சொல்வேன்..மூங்கில்

பாட்டைப்போல காற்றினில் சொல்வேன்

உன்னைப் பார்த்த

கண்ணைப் பார்த்தேன்

இன்னும் மறையா வதனம்

மண்ணைப் பார்க்கும்

பெண்ணைப் பார்த்தேன்.

மென்மை கொண்ட நாணம்..

காலை மாலை காலமெல்லாம

காலடியில் பூக்கள் தூவுவேன்.

நீரை நெருப்பை நெருஞ்சி முள்ளை

உனக்காய் நெஞ்சில் சூடுவேன்..

எந்த மண்ணில் இருந்தபோதும்

எந்தன் எண்ணம் நீயடி

நாடி நரம்பு உரைக்கும் பேரை

தேடி ஓடும் காதலனாய் நான்.

Link to comment
Share on other sites

தூறல் நாள் 28

அடி இராட்சசி..

இரக்கமில்லாத அரக்கியே..

கொடூர குணம் கொண்ட

கொலைகாரியே...

சந்தேகப்பேய் பிடித்த

காட்டேரியே..என்னைத்

தாக்கவரும்..

சர்வதேச தீவிரவாதியே..

தூயவனான என்னை நீ

ஒரு தடவை திருமணம்

செய்ததற்காக..நூறு

தடவை தீக்குளிக்க

கேட்கிறாயே..ஏனடி?..

சிரிப்புக்கும் அழுகைக்குமிடையில்

கடவுளைத்தேடும் மனிதைனை

நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்குமிடையில்

கடவுள் தேடுவதால் தேடல் தொடர்கிறது...

பெண் பேசாதபோதெல்லாம்

அவள் கண்பேசுமே..

அவள் கண்ணீர் பேசுமே...

ஆண் பேசாத போதெல்லாம்

அவன் கோபம் பேசுமே..

அவன் அவசரம் பேசுமே..

உலகமென்ற அரங்கிலே..

ஓராயிரம் நாடகம்...இறுதிக்

காட்சியென்பது..மரணக்காட்சியா

ய்விடும்..

புரிந்திடாமல் அழுதுவாடும் மனிதம்..

பிறர் சிரிக்க ரசிக்க மறந்திடும்..

உனக்கும் எனக்கும்..

தெரிந்த கதை..

உனக்கும் எனக்கும்

தெரியாத முடிவு

நம் காதல்?..

இந்த பேனாவுக்கு

மட்டும் ஏனடி..

உன்னில் இவ்வளவு

காதல்..அதை

எதற்காக எடுத்தாலும்

உன் பெயரை மட்டுமே..

எழுதிக்கொண்டிருக்கிறதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி இராட்சசி..

இரக்கமில்லாத அரக்கியே..

கொடூர குணம் கொண்ட

கொலைகாரியே...

சந்தேகப்பேய் பிடித்த

காட்டேரியே..என்னைத்

தாக்கவரும்..

ஆ........இந்தனை பெயர்களா :)

பெண் பேசாதபோதெல்லாம்

அவள் கண்பேசுமே..

அவள் கண்ணீர் பேசுமே...

ஆண் பேசாத போதெல்லாம்

அவன் கோபம் பேசுமே..

அவன் அவசரம் பேசுமே..

யதார்த்தம்

Link to comment
Share on other sites

தூறல் நாள் 29

காதல் மாயம்

உன்னைக் காதலிக்கவில்லையென்று

உலகத்திற்கு சொன்னேன்..

உண்மை அது இல்லை உயிரே..

உள்ளே உறவேயென்று உருகுகிறேன்..

உரிமையிருந்தும் ஊமையாய் துடிக்கின்றேன்..

உள்ளே எப்படி வந்தாய்..

உயிருக்குயிராய் எப்படியானாய்..

இது என்ன மாயம் பெண்ணே..

சிதறும் முத்துகளோ..

திறந்த சிப்பி

நிரம்பி விழுந்த

முத்தோ உன் விழி

நீர்த்துளிகள்..அழகியே..

சிந்தாமல் சிதறாமல்

கைகளில் ஏந்திக் கொள்வேன்..

வாழ்வின் மேன்மை

தாயின் கருவறையில்

இருந்து..தூங்கும்

கல்லறை வரை..

கூட வரும்..அன்பு

தியாகம்

இந்த இரவுகள்

தூங்குவதற்காக..

மின்மினியாய் எரிகின்றன

நட்சத்திரங்கள்..

நிலவின் காதல்

ஏய் வானமே..

உன்னை இரவில்

வந்து காதலிப்பதற்காக..

பகலவனிடம்

வெளிச்சத்தை இரவல்

வாங்குகிறேன்..அதையறிந்தே..

அவனிடம் சிரித்து பிரகாசமாய்

கொஞ்சி விளையாடும் நீ..

என்னை ஓடவிட்டுத்

தேயவும் விடுகிறாய்?..

பெண்மனம் மாறுமா?

கல்மனதில்

காதல் எறிந்தவளே..

ஏன் இப்போது-என்

காதல் மனதில்

கல் எறிகிறாய்?..

உன் குற்றவுணர்வா இது?..

பலருக்கு முன்

அவமானப்படுத்திவிட்டு..

தனிமையிலே

மன்னிப்பு கேட்கிறாய்..

பிழையில்லாமல்..

சரிந்துபோன என்

நிலையை உன்

மன்னிப்பு என்ன

சரிசெய்யுமா நண்பா?..

காதல்மொழி

மௌனமொழி பேசி

மனதைக் கலைத்தவளே..

என் மரணமொழியாவது..

உன் மௌனத்தைக் கலைக்குமா?

Link to comment
Share on other sites

தூறல் நாள் 30

உனக்காக

பனித்துளிகளை

சேமிக்கிறேன்..

நீராட விரும்பினால்..

பகலவன் பார்க்கமுன்

வந்திடுவாய்..

சிட்டுக்குருவியே..

நீ காதல் பேசிய

மணித்துளிகளை

என் ஆயுளிலிருந்து

வருடங்களாகவே..

எடுத்துக்கொள்..

நீ தந்த சந்தோசத்திற்கு

என் நன்றிக்கடனாய்

இருக்கட்டும்!!!

மொட்டைமாடி நின்று

கோயில் கோபுரம்..

மாடப்புறாக்கள்..

பஞ்சுமேகம்...

மஞ்சள் வானம்..

நீலமதி..

நிறைந்த நட்சத்திரங்கள்..

அண்ணாந்து பாரத்தே

ரசித்துப் பழக்கப்பட்ட

என்னைக் கீழ் நோக்கி

ரசிக்கவைத்த குமாரியே...

முற்றத்திலிட்டாய் கோலம்..

மனமயக்கம்.. மாயாஜாலம்!!!

நீ அந்தப்பக்கமும்

நான் இந்தப்பக்கமும்..

பேசவும் தெரியாமல்..

வைக்கவும் விரும்பாமல்..

தொலைபேசிக்கட்டணங்களை

கன்னாபின்னாவென

ஏற்றிக்கொண்டால்..

கண்ணே..அது காதலடி!!

கம்பராமாயணம்..

சொல்லிக்கொண்டிருந்த...

பாட்டியை..டாமும் ஜெர்ரியும்

காட்டி தூங்க வைத்தான்..

ஐந்துவயதேயான சமர்த்துப்பேரன்!!

இருபது வருடங்களைக்

கடக்கமுடிந்த எனக்கு

உனக்காகக் காத்திருக்கும்..

இந்த இருபது நிமிடங்கள்..

பெரும் சுமை பெண்ணே...

நாதியற்று மனிதன்

அடிபட்டுக்கிடந்தான்..

சட்டத்தின் பிரகாரம்..

கைகொடுக்கமுடியாத

மனிதம்..நாய்களுக்கும்..

பூனைகளுக்குமான உரிமையை

சட்டத்தை நூறுவீதம்..

கடைப்பிடிப்பது மனிதநேயம்...

Link to comment
Share on other sites

தூயவனான என்னை நீ

ஒரு தடவை திருமணம்

செய்ததற்காக..நூறு

தடவை தீக்குளிக்க

கேட்கிறாயே..ஏனடி?..

ஐயோ அவள் கேட்கிறாள் என்பதற்காக நீங்கள் தீக்குளிக்க போறியளா விகடகவி? பாவம் பா நீங்கள்

மொட்டைமாடி நின்று

கோயில் கோபுரம்..

மாடப்புறாக்கள்..

பஞ்சுமேகம்...

மஞ்சள் வானம்..

நீலமதி..

நிறைந்த நட்சத்திரங்கள்..

அண்ணாந்து பாரத்தே

ரசித்துப் பழக்கப்பட்ட

என்னைக் கீழ் நோக்கி

ரசிக்கவைத்த குமாரியே...

முற்றத்திலிட்டாய் கோலம்..

மனமயக்கம்.. மாயாஜாலம்!!!

ஒவ்வொரு தூறலும் நல்லாகவே இருக்கு. அதிலும் எனக்கு பிடிச்ச தூறல் இதுவே. நல்லாக எழுதுறீங்கள். உங்கள் தூறல் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தூறல் நாள் 31

ஒரு கிண்ணச் சொர்க்கமும்

ஒரு விரல் ஊறுகாயும்..

சின்னத்துயரத்தை மறக்க செய்யும்...

மெல்ல நரகத்திற்கு அழைத்துச்செல்லும்..

வேண்டாப்பொண்டாட்டியைப்போல

தண்டச்சோறென..எப்போது

கண்டாலும் வைவார் தந்தை

மகனை காணாமல் அழுவதும் விந்தை

ஆறுநாள் உபவாசம்..

ஏழாம்நாள் பாரணை..

எட்டாம்நாள் ஆட்டிறைச்சி..

அவா அடக்கமுடியா.. ஆசைமனிதனின்..

வெளிவேசம்..மகா அபத்தம்..

பேயென்று தலைவிரித்தாடி..

கோழியைப் பலிகொண்டு..

மகாபலம் காட்டி

மண்ணோடு வீழ்ந்து..

வெளிப்போகுமாம் பேய்..

மனவியாதிகளுடன் நாம்

மருத்துவமறியா மூடராய்..

கனவுப்பூங்காக்களில்

கூட கண்ணயர

விடாத வெளிநாடு

வெளியே உல்லாசம்..

போலி சந்தோசம்

எல்லாம் வேசம்..

Link to comment
Share on other sites

தூறல் நாள் 32

புன்னகைக் காட்டுக்குள்

பூத்த சிவப்பு சூரியன்

தலைவன் வீரம்

ஆயிரம் நெறிகளும்

அற்புத வழிகளும்..

தலைவன் பலம்..

ஆயுள்நேரத்து உழைப்பும்..

ஈழத்து நினைப்பும்

தலைவன் தியாகம்

நெஞ்சுடைத் திடமும்

நேர்மையின் இடமும்

தலைவன் இதயம்

மக்களின் கைகளும்

மாவீரரின் ஆசியும்

தலைவன் பக்கம்

மூடரின் நெறியும்

மூத்தவர் அறிவும்

தலைவன் ஞானம்

போராளிகள் வரையும்

போர்முனைக் காவியம்

தலைவன் மதி விம்பம்

தமிழராய் இணைவோம்

ஈழத் தமிழராய் நிமிர்வோம்

தமிழ்ஈழத்தலைமகன் வெற்றிக்கு

விரைந்து வழிகள் சமைப்போம்..

Link to comment
Share on other sites

நன்றி வெண்ணிலா....

தூறல் நாள் 33

பசியோடு விழித்தாலும்..

பசியோடு தூங்காத

மனிதர்கள் மத்தியிலே

பசியோடே தூங்கிப்போகும்..

பாலகர்கள் மேல்கூட..இறைவா

உனக்கென்ன கொடுங்கோபம்?

சுதந்திரத்திற்காக

உயிர் கொடுத்துப்

போராடிய நாடுகளே..

தமிழன் சுதந்திரத்தை எதிர்த்து

போராடுகிறது!!!

நாய்க்கு அடிபட்டால்

"அச்சச்சோ" என்கிறாய்..

ஒரு நாள் சாப்பிடாத உன்

பிள்ளைக்காய்..நொந்துபோகிறாய்

..

தொடர் நாடகங்கள் பார்த்து

அழுதுவடிக்கிறாய்..

ஈழமண்ணில் தினமும்..நிஜமாய்

குண்டடிபட்டும்...வெறிக்குரங்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு தூறல்களும் வித்தியாசமாக நல்லா இருக்கு விகட கவி.

அதிலும் இந்த தூறல்கள் சூப்பரா இருக்கு.

தூறல் நாள் -22

என் இதயப்பலகை

சுத்தமாக இருக்கின்றது..

யாராவது எழுத நினைத்தால்..

உங்கள்அப்பா..அம்மா..அக்கா..

தம்பி..தங்கை..மாமா..சித்தப்பன்..

எல்லா உறவுகளிடமும்..

அனுமதி பெற்றுவிட்டு வந்து

எழுதுங்கள்..மேலும்

எழுதும்போது தயவுடன்.

கூர்மைமிக்க ஆணிகொண்டு

எழுதாதீர்கள்..வாசம் மிக்க

மென்மலர்களால் எழுதுங்கள்..

வலிகளும் தழும்புகளும்..

இந்த இதயத்திற்கு புதிதல்ல

எழுதியவர்கள் எதற்காக..

எதற்காகவோ எல்லாம்

போய்விடுவார்கள்..

விட்டுச்சென்ற வாசத்தோடாவது

இந்த இதயம் வாழட்டுமே..

என் புது நண்பி..

பல நிமிடங்களாய்..

என் கவிதைகளை நோட்டமிட்டாள்..

ரசித்தாள்..

அப்பாடா..இவளாவது

எனக்கு ரசிகையாகிவிட்டாளே..

என்று எண்ணிக்கொண்டிருக்க..

கேட்டாள்"இந்த எழுத்துகள்

அழகாக இருக்கின்றதே..இதுதான்

நம் தமிழ் எழுத்தா" என்று

Link to comment
Share on other sites

விகடகவி மாமாவின் தூறள்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் :o வாழ்த்துக்கள் மாமா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நன்றி ஜனனி..நன்றி ஜம்மு..

ஜம்மு (ஓட) பஞ்ச்..

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!

கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

வாழும்போது...மாலை ஏனோ நார் நாராகிவிடுகிறது...

காதலர் பேசும் மொழி பூக்ளுக்கு தெரியும்!!

பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...

இருவருடைய மொழியும்..நம்மாளுக்கு புரியவேயில்லை

அப்ப வரட்டா..

Link to comment
Share on other sites

நன்றி ஜனனி..நன்றி ஜம்மு..

ஜம்மு (ஓட) பஞ்ச்..

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!

கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

வாழும்போது...மாலை ஏனோ நார் நாராகிவிடுகிறது...

காதலர் பேசும் மொழி பூக்ளுக்கு தெரியும்!!

பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...

இருவருடைய மொழியும்..நம்மாளுக்கு புரியவேயில்லை

அப்ப வரட்டா..

மாம்ஸ் இது என்னோட பஞ் இல்லை நம்ம கறுப்பி அக்காவின்ட பஞ் அல்லோ :wub: ....எப்படி இருக்கு கறுப்பி அக்காவின்ட பஞ் சும்மா அதிருதிலலல.... <_<

"குரங்கின் கையில் கிடைப்பதால் மாலை நாராகிவிடுகிறது அதையே இதயதிற்கு பிடித்தவனிடம் கொடுத்தாள் நாராகுது மாமா" :lol:

"யார் அந்த நம்மாள் மாமா சொல்லவே இல்லை <_< சொன்னா நான் புரியவைத்து விடுறேன் இருவருடைய மொழியையும் அவருக்கு" :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 34

உறவுகளைச்சேர்த்துக்

கொள்ள உள்ளம் ஏங்கும்..சில

உறவுகள் சேர்ந்து கொண்டு

உயிரை வாங்கும்..

செல்வத்தால் சேர்ந்த உறவு

ஏழ்மையால் விலகும்

காதலின்

காதலி

காதலில்

காதலே..

காதலையும்

காதலித்து

காதலா..

காதலைக்

காதலி!!!

துறுதுறுக்கும் காதலி

விழிகள்..

அலைபாயும் காதலன்

விழிகள் கலந்து

இதயத்தில் இன்ப

ஈட்டி நுழையும்.

கண்முழித்தபிறகும்

கலையாத கனவாய்..

கண்மூடிய பிறகும் அழியாத

நினைவாய்..என்னுள் நீ!!

என் அழகானவளே..

உன் கோப அழகையும்..

கொவ்வைச் செவ்வாயழகையும்..

என்னுள் புதைத்துவைத்திருக்கிறேன்..

அசைபோடும் வேளைகள் மீட்டி..

நினைவுகளுக்கு உயிரூட்டி

ஆனந்தப்பட்டுக்கொண்டே..நான்!!

எண்ணுவாளா எனத்

தவமாய்த் தவங்கிடந்து

ஏற்றவள் எண்ணும்போது

சற்றும் கணக்கெடான் ஆண்..

அலையட்டும் எனத் தவிக்கவிட்டு

ஆமென்று தாலிக்குத்

தலை நீட்டி...அங்கே..

கணப்பொழுதும் தவமாய்த்

தவங்கிடப்பாள் பெண்!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 35

மேன்மக்களென்போர்

உள்ளத்தாலும்...

செயலாலும் உயர்ந்தவர்கள்

என்பதை

பலத்தாலும்

பதவியாலும் என

மாற்றியவர்கள்..

வாழ்வால் சபிக்கப்படுகின்றனர்..

வந்தாரை வாழவைப்பான்

தமிழன்...அந்த தமிழன்

நாதியற்று..நாடுநாடாய்..

தஞ்சம் கேட்டு..உயிர்மெய்

வாடிக்கிடக்கிறான்..

நாடிழந்து!!

சொல்லாதே..

சொல்லக்கூடாதெனச்

சொன்னால்

சொல்ல மறக்காத பிள்ளை

சொல் இதை யென்றாலும்

சொல்லும்..விடுங்களேன்

சொல்லிவிட்டுப்போகட்டும்!

என் ஆண்மையை

அழவைத்தது..உன்

அன்பு..அதனால் நீ

என் எதிரியா..தோழியா?..

சோகம் வரும்போதெல்லாம்

தனிமையை விரும்பும் மனம்..

சந்தோச வேளைகளில்

பகிர்ந்துகொள்ள உறவைத் தேடும்

இயல்பாகவே..உத்தமமானமனிதம்!!

பாடத்தூண்டுகின்ற

புன்னகை விடாமல்

இருக்கியழுத்துகின்ற இதழ்கள்..

முரண்பாட்டு அழகி நீ!!!

மெல்லிய இடையும்..

மெல்லென நடையும்..

சின்னதாய் குடையும்..

சீரிய உடையும்..

பின்னிய சடையும்..

பெண்ணே.. என்னே அழகடி நீ!!

பெருந்துன்பமடி அது எனக்கு !!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 36

மின்னும்.. கன்னங்களுக்கும்

வண்ணமிட்டு..அவள்

வளர்த்தாள் அழகை

கள்ள எண்ணங்களுக்கு

வண்ணமிட்டு அவன்

வடித்தான் கவிதை

கவிதை அழகைக்

காதலித்தது.. பாவம்..

அழகோ கவிதையைக்

காதலிக்கவில்லை!!!

உன்னால் என்னை

மறக்கமுடியாது..ஆனால்

என்னால் உன்னை

மறக்கமுடியுமென்று சொன்னாய்..

நானும் மெய்தானோ என நினைத்தேன்..

ஆனால் பைத்தியக்காரா

உன் மகளுக்கு என் பெயரை

ஏன் வைத்தாய்?

வண்ணத்துப்பூச்சிகளின் வசீகரம்..

வானவில்லின் வளைவுகள்..

கார்மேக நிறத்துக்கூந்தல்..

கொடியினளில் இடை..

மல்லிகையின் வாசம்..

முல்லைமொட்டுச்சிரிப்பு...

கிளிமூக்கு...சங்கெனக்கழுத்து..

எல்லாம் எதிர்பார்த்தால்..

கவிஞனே..உன் மணப்பெண்..

ஓவியத்தில்தான் அப்பனே..

இரவுக்கு வெள்ளையடித்தான்

ஆதவன்..அவன்

நிழலுக்கு..இருள் கொடுத்தாள்

இராமகள்!!

உன் நட்பு..

என் சோம்பல் துலக்கியது..

என் உழைப்பை ஊக்குவித்தது..

என் சாதனையை சாத்தியமாக்கியது..

என் வெற்றிப்பொழுது புலர்ந்தபோது...

நட்பு வாழ்ந்துகொண்டிருக்கிறது...

நணபனே.. நீதான் அருகிலில்லை..

குழந்தை மனது..

ஈரமான வெள்ளைச்சேலை

எதையெறிந்தாலும் ஒட்டிக்கொள்ளும்..

பூ விதைத்தால் பூ முளைக்கும்..

முள் உதிர்த்தால் முள் செழிக்கும்...

அன்பும் பண்பும் வளமாகும்..

முத்தமும் அணைப்பும் உரமாகும்..

தட்டிக்கொடுத்தால் சிறப்பாகும்..

சொல்லிக்கொடுத்தால் சுகமாகும்..

நல்ல செயல்களைப் பதிவு செய்து..

நலம் வாழத் துணை செய்வோம்..

Link to comment
Share on other sites

kifr_kili_22208_4.jpg

:lol::D:D

விழியில் கனவுகள்

விரியும் முன்னே..

விழிகள் மூடினா யஞ்சுகமே..

கொடூரமென் பதிதுதானோ...

கொஞ்சிய குழந்தைகை

கொய்தது முறைதானோ..

பிஞ்சே மணியே.. ஆருயிரே.

பெருந்துயரை விதைத்துனை

போக்கடித்தனரோ..

நீ மண்ணில் சிந்திய இரத்தங்கள்

நெஞ்சுக்குள் வெறிதரும் பூவே

நாளை பூத்திடில் ஈழத்தில் பூத்திடுவாயே..

அழிந்திடப்பிறந்தவன் தமிழனா..

அலைந்திடப்பிறந்தவன் தமிழனா

அழுதிடப்பிறந்தவன் தமிழனா..-இல்லை

ஆழப்பிறந்தவன் தமிழன்..நாளை

ஆழ்வான் ஈழத்தமிழன்!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 37

உன் விழி நீரை..

சிந்தும் காதலியே.. என்னை

வலி செய்யும் வழி அறிந்தது

எப்படியோ?...

அவள் விதைத்த காதலை

முளையிலே கொய்தாள்..

அவளை துயரை அவளே

அறுவடை செய்தாள்..

ஆணை அலையவிட்டு

துன்பம் காணவெண்ணி

துயரக்கடல் குளித்தாள்..

ஆணை அசண்டை செய்து

பெருமிதம் கொண்டே

வாழ்வை இழந்து நின்றாள்..

இறங்கிப் போவதில்

அன்புக்கு இழுக்கா?..

இகழ்வாரெண்ணி

இணையாமை யழகா?...

வாழ்க்கைஎன்பது வாசப்பூங்கா

வழுக்கிவிழுந்தால்

சேற்றில் ரோஜா..

அழகே ஆனாலும்

அழுக்குப்பட்டால்..

தலையிலா சூடுவார்..

குப்பையில் போடுவார்!

அமைதியான இதழ்கள்..

அலைபாயும் கண்கள்..

என்னை ஏழையாக்கிய

அழகு..அவள் பெண்மை...

என்னை கோழையாக்கிய

அழகு அவள் புன்னகை..

இரண்டு வரியில் சொன்னால்..

என் காதல் திருக்குறள்...

நான்கு வரியில் சொன்னால்..

நாலடியார்....நீயே..வந்து

ஒரே வார்த்தையில் சொன்னால்

அன்பே அது "வரம்"

மேகங்கள் ஓடாத போது

நிலவு அதைத் திரத்துவதில்லை

நீ என்னை விலகாதபோது

நான் உன்னைத் தேடுவதும் இல்லை

அருகில் அருமை தெரிவது இல்லை

அன்பு மனங்கள் புரிவதுமில்லை!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.