Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

தூறல் நாள் -24

நானா..நீயா

முதலில் மௌனத்தைக் கலைப்பது

என்ற இருவரது

இறுமாப்பையும்..

இரு மாதங்களில்.

புதிதாய் ஒருவன் வந்து

கலைப்பான் என்று

நான் எதிர்பார்க்கவேயில்லை!

அன்பே..

என் பிள்ளைக்கு நீ

தாயாகி என்

இதயக் கரும்பாறையை

இலகவைத்து உன் காலடியில்

இலவம் பஞ்சாக்கி

உனை நிதம் சுமக்க

வைத்தாய்!..

உன்னைப் பார்த்த

பிறகு நான்

மரணம் என்ற

வார்த்தைக்கு அஞ்சுகிறேன்!.

உன் வரவால்

என் படுக்கையறைகூட

படு வெளிச்சமானது

தேவதையே..

என் மனைவி

எவ்வளவு அடக்கமாம்..

அமைதியாய் இருக்கிறாறாம்..

பேச்சோ மிகக்குறைவாம்..

பெரியவர்களிடம் மிக

மரியாதையாக நடந்து

கொள்கிறாளாம்..

என் பெற்றோரின் புகழாரத்தை

ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன்..

தனிக்குடித்தனம் வந்த பிறகு..

நான் அதே மாதிரி

நடந்து கொள்ள

கற்றுக்கொண்டேன்..ஆனால்

அவள்? :rolleyes:

காதலியே..

காதல் சம்மதத்தை தர

ஐந்து வருடங்கள் எடுத்துக்கொண்டாய்.

நான் கல்யாண சம்மதத்தை தர

ஐந்து நாட்கள் எடுத்துக்கொண்டதற்கா

இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

கற்கண்டு கூட

கசந்தது..நீ

என்னை நிராகரித்த

பொழுதுகளில்..

வேப்பங்காய் கூட

அமுதமாயிருக்கிறது..

நீ என்னிடம்

சம்மதம் சொன்ன பிறகு...

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

தூறல் நாள் -25

கனவில் நீ வந்தாய்..

விடிந்தும்..இமைகளைத்

திறக்காமலே நான்..

உந்தன் வசீகரமான விழிகள்

என்னைப் பார்த்து

ஆசையுற்றதில்..பிறருக்கு

ஆச்சரியம்...என்னே

என் பேரதிர்ஸ்டம்!

நானும் அவளும்

மௌனிகளாய்

இருந்தபோதும்..எங்கள்

விழிகள் ஓயாது

பேசிக்கொண்டேயிருக்கின்றன..

அன்பே

இந்தக் காதலர் தினத்திற்கு

முதல் நாளாவது

ஏதாவது காரணத்திற்காக

என்னை வெறுத்து

விலக மாட்டாயா..

சில நாட்களாய் மனது

வேறொரு பெண்ணிடம்

நாட்டாப்படுகிறது..

"என்னிடம் ஒரு

கெட்ட பழக்கம் இருக்கிறது..

அழகான பெண்களுக்கு

ரோஜாப்பூ கொடுப்பது" என்றாவாறு

அவன் அவளிடம்

ரோஜாவைக் கொடுத்தான்..

"என்னிடம் ஒரு

கெட்டபழக்கம் இருக்கிறது..

என்னிடம் யாராவது காதல்கடிதம்..

ரோஜாப்பூ என்று தந்தால்.."என்ற

அவள் குனிந்து நிமிரும்முன்..

அவன் ஓடி வந்துவிட்டான்..

என்னெதிரே ஏதோ சத்தம்

என் நிலைக்கண்ணாடிதான்

காறித்துப்ப எத்தனிக்கிறதோ..

உலகமே திரண்டிருந்தாலும்

உள்ளம் துவண்டிருக்கமாட்டேன்..

என் காதலி நீயே..

உயிரோடு உயிராக என்றவள்..

உன் உறவுகளோடு..

ஊமையாயிருப்பதால்தான்..

உடைந்துபோய் நிற்கிறேன்.

Link to comment
Share on other sites

அன்பே

இந்தக் காதலர் தினத்திற்கு

முதல் நாளாவது

ஏதாவது காரணத்திற்காக

என்னை வெறுத்து

விலக மாட்டாயா..

சில நாட்களாய் மனது

வேறொரு பெண்ணிடம்

நாட்டாப்படுகிறது..

அழகாக சொல்லி இருக்கிறீங்க யதார்த்தத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கச் சுகமாயிருக்கிறது கவிஞரே!!! வளரட்டும் தினமும் தூறல்கள்!!!

Link to comment
Share on other sites

நிலா சுவி..நன்றிகள்..உங்கள் ஊக்கங்களே....மேலும் மேலும் என்னை எழுத தூண்டுகிறது..

தூரல் நாள் 26

உன் காதலை

ஏற்கும் மனோநிலை

எனக்கில்லை

என் பேச்சைக்

கேட்கின்ற பக்குவம்

உனக்கில்லை..

நான் சமுதாயம் என்ற

சுழலில் நிற்கவில்லை

எதிர்காலம் என்ற

சிக்கலைச் சிந்திக்கிறேன்..

புரிவாய் சிறியவளே..

தொடாமல் சுகம் தரும்

தொலைபேசி உரையாடல்களும்..

எட்டி நின்று பார்த்து

ஏங்குகின்ற விழிகளும்..

கட்டில்வரை இழுத்துவிட

காளை படும் பாடுகளும்..

காதலனை நம்பிவிட்டு

கலங்கிநிற்கும் கன்னிகளும்..

தற்காலக் காதல் கண்காட்சி.

கருவளர்த்த தாய்..

கண்ணாய் வளர்த்தவள்..

உயிர் கொடுத்த தந்தை

உழைப்பால் காத்தவன்..

வாழ்வு முழுவதும்

கேட்டதெல்லாம் கொடுத்தவர்கள்...

நீ கேட்டிருக்கலாம்

காதலுக்கா மறுத்திருப்பார்கள்..

பெற்றமைக்கு நன்றிக்கடன்..

வளர்த்ததற்கு செய்நன்றி..

ஓடிப்போனாய்..இவளே..

இரண்டே மாதம் மட்டும்

பல்லிலளித்த பையனோடு..

பெற்ற பாவத்திற்கு பலன்..

வளர்த்த பாவத்திற்கு பிராயச்சித்தம்..

பிரமை பிடித்த அம்மாவையும்..

பேச்சிழந்த அப்பாவையும்;..

அவர்கள் ஆன்மா..கணமும்..

அணுஅணுவாய் அழவைக்கிறதே..

உன் வார்த்தைகள்

வலித்தபோதெல்லாம்

மௌனம் காத்தேன்..

உன் செயல்கள்

சினந்தந்த போதெல்லாம்

பொறுமை காத்தேன்..

என் மௌனமும் பொறுமையும்..

திருமணத்திற்கு முதலே..

கலைக்கப்பட்டிருந்தால்

விவாகரத்திற்காக..நான்..

அலையவேண்டி இருந்திராதே...

வண்டு தேனைக்

குடித்துவிட்டு இளைப்பாறும்..

பூக்கள் தேனைக்

கொடுத்துவிட்டு களைப்பாகும்..

நாகரீகம்..

நீ உன்னை ரசிப்பதல்ல..

மற்றவர்கள் உன்னை மதிப்பது.

Link to comment
Share on other sites

தூறல் நாள் 27

பார்வையிலே பதிலை வந்து சொல்லடி-உனைப்

பார்த்தபின்னே பசியேயில்லை ஏனடி

பாயதிலே தூக்கமில்லை பாரடி -உன்னால்

பாதியுடல் தேய்ந்துவிட்டேன் நானடி

அள்ளும் அழகு துள்ளும் இளமை

சொல்லும் காதல் வேதம்

ஆசைநூறு பேச நூறு

தேடும் ஜோடிப்பாதம்..

பூக்களை பார்த்து இரசிக்கும்

கிளையின் காதல் தெரியும்

பூக்களைத் தொட்டு செல்லும்

தென்றல் காதல் தெரியும்

பூக்களை ஆண்டு செல்லும்

வண்டின் காதல் தெரியும்

பூக்கள்தானே பெண்கள்

நாம் என்றும் ஊமைகள்.

காதல்தன்னை நானே..வந்து

எப்படி சொல்வேன்..மூங்கில்

பாட்டைப்போல காற்றினில் சொல்வேன்

உன்னைப் பார்த்த

கண்ணைப் பார்த்தேன்

இன்னும் மறையா வதனம்

மண்ணைப் பார்க்கும்

பெண்ணைப் பார்த்தேன்.

மென்மை கொண்ட நாணம்..

காலை மாலை காலமெல்லாம

காலடியில் பூக்கள் தூவுவேன்.

நீரை நெருப்பை நெருஞ்சி முள்ளை

உனக்காய் நெஞ்சில் சூடுவேன்..

எந்த மண்ணில் இருந்தபோதும்

எந்தன் எண்ணம் நீயடி

நாடி நரம்பு உரைக்கும் பேரை

தேடி ஓடும் காதலனாய் நான்.

Link to comment
Share on other sites

தூறல் நாள் 28

அடி இராட்சசி..

இரக்கமில்லாத அரக்கியே..

கொடூர குணம் கொண்ட

கொலைகாரியே...

சந்தேகப்பேய் பிடித்த

காட்டேரியே..என்னைத்

தாக்கவரும்..

சர்வதேச தீவிரவாதியே..

தூயவனான என்னை நீ

ஒரு தடவை திருமணம்

செய்ததற்காக..நூறு

தடவை தீக்குளிக்க

கேட்கிறாயே..ஏனடி?..

சிரிப்புக்கும் அழுகைக்குமிடையில்

கடவுளைத்தேடும் மனிதைனை

நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்குமிடையில்

கடவுள் தேடுவதால் தேடல் தொடர்கிறது...

பெண் பேசாதபோதெல்லாம்

அவள் கண்பேசுமே..

அவள் கண்ணீர் பேசுமே...

ஆண் பேசாத போதெல்லாம்

அவன் கோபம் பேசுமே..

அவன் அவசரம் பேசுமே..

உலகமென்ற அரங்கிலே..

ஓராயிரம் நாடகம்...இறுதிக்

காட்சியென்பது..மரணக்காட்சியா

ய்விடும்..

புரிந்திடாமல் அழுதுவாடும் மனிதம்..

பிறர் சிரிக்க ரசிக்க மறந்திடும்..

உனக்கும் எனக்கும்..

தெரிந்த கதை..

உனக்கும் எனக்கும்

தெரியாத முடிவு

நம் காதல்?..

இந்த பேனாவுக்கு

மட்டும் ஏனடி..

உன்னில் இவ்வளவு

காதல்..அதை

எதற்காக எடுத்தாலும்

உன் பெயரை மட்டுமே..

எழுதிக்கொண்டிருக்கிறதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடி இராட்சசி..

இரக்கமில்லாத அரக்கியே..

கொடூர குணம் கொண்ட

கொலைகாரியே...

சந்தேகப்பேய் பிடித்த

காட்டேரியே..என்னைத்

தாக்கவரும்..

ஆ........இந்தனை பெயர்களா :)

பெண் பேசாதபோதெல்லாம்

அவள் கண்பேசுமே..

அவள் கண்ணீர் பேசுமே...

ஆண் பேசாத போதெல்லாம்

அவன் கோபம் பேசுமே..

அவன் அவசரம் பேசுமே..

யதார்த்தம்

Link to comment
Share on other sites

தூறல் நாள் 29

காதல் மாயம்

உன்னைக் காதலிக்கவில்லையென்று

உலகத்திற்கு சொன்னேன்..

உண்மை அது இல்லை உயிரே..

உள்ளே உறவேயென்று உருகுகிறேன்..

உரிமையிருந்தும் ஊமையாய் துடிக்கின்றேன்..

உள்ளே எப்படி வந்தாய்..

உயிருக்குயிராய் எப்படியானாய்..

இது என்ன மாயம் பெண்ணே..

சிதறும் முத்துகளோ..

திறந்த சிப்பி

நிரம்பி விழுந்த

முத்தோ உன் விழி

நீர்த்துளிகள்..அழகியே..

சிந்தாமல் சிதறாமல்

கைகளில் ஏந்திக் கொள்வேன்..

வாழ்வின் மேன்மை

தாயின் கருவறையில்

இருந்து..தூங்கும்

கல்லறை வரை..

கூட வரும்..அன்பு

தியாகம்

இந்த இரவுகள்

தூங்குவதற்காக..

மின்மினியாய் எரிகின்றன

நட்சத்திரங்கள்..

நிலவின் காதல்

ஏய் வானமே..

உன்னை இரவில்

வந்து காதலிப்பதற்காக..

பகலவனிடம்

வெளிச்சத்தை இரவல்

வாங்குகிறேன்..அதையறிந்தே..

அவனிடம் சிரித்து பிரகாசமாய்

கொஞ்சி விளையாடும் நீ..

என்னை ஓடவிட்டுத்

தேயவும் விடுகிறாய்?..

பெண்மனம் மாறுமா?

கல்மனதில்

காதல் எறிந்தவளே..

ஏன் இப்போது-என்

காதல் மனதில்

கல் எறிகிறாய்?..

உன் குற்றவுணர்வா இது?..

பலருக்கு முன்

அவமானப்படுத்திவிட்டு..

தனிமையிலே

மன்னிப்பு கேட்கிறாய்..

பிழையில்லாமல்..

சரிந்துபோன என்

நிலையை உன்

மன்னிப்பு என்ன

சரிசெய்யுமா நண்பா?..

காதல்மொழி

மௌனமொழி பேசி

மனதைக் கலைத்தவளே..

என் மரணமொழியாவது..

உன் மௌனத்தைக் கலைக்குமா?

Link to comment
Share on other sites

தூறல் நாள் 30

உனக்காக

பனித்துளிகளை

சேமிக்கிறேன்..

நீராட விரும்பினால்..

பகலவன் பார்க்கமுன்

வந்திடுவாய்..

சிட்டுக்குருவியே..

நீ காதல் பேசிய

மணித்துளிகளை

என் ஆயுளிலிருந்து

வருடங்களாகவே..

எடுத்துக்கொள்..

நீ தந்த சந்தோசத்திற்கு

என் நன்றிக்கடனாய்

இருக்கட்டும்!!!

மொட்டைமாடி நின்று

கோயில் கோபுரம்..

மாடப்புறாக்கள்..

பஞ்சுமேகம்...

மஞ்சள் வானம்..

நீலமதி..

நிறைந்த நட்சத்திரங்கள்..

அண்ணாந்து பாரத்தே

ரசித்துப் பழக்கப்பட்ட

என்னைக் கீழ் நோக்கி

ரசிக்கவைத்த குமாரியே...

முற்றத்திலிட்டாய் கோலம்..

மனமயக்கம்.. மாயாஜாலம்!!!

நீ அந்தப்பக்கமும்

நான் இந்தப்பக்கமும்..

பேசவும் தெரியாமல்..

வைக்கவும் விரும்பாமல்..

தொலைபேசிக்கட்டணங்களை

கன்னாபின்னாவென

ஏற்றிக்கொண்டால்..

கண்ணே..அது காதலடி!!

கம்பராமாயணம்..

சொல்லிக்கொண்டிருந்த...

பாட்டியை..டாமும் ஜெர்ரியும்

காட்டி தூங்க வைத்தான்..

ஐந்துவயதேயான சமர்த்துப்பேரன்!!

இருபது வருடங்களைக்

கடக்கமுடிந்த எனக்கு

உனக்காகக் காத்திருக்கும்..

இந்த இருபது நிமிடங்கள்..

பெரும் சுமை பெண்ணே...

நாதியற்று மனிதன்

அடிபட்டுக்கிடந்தான்..

சட்டத்தின் பிரகாரம்..

கைகொடுக்கமுடியாத

மனிதம்..நாய்களுக்கும்..

பூனைகளுக்குமான உரிமையை

சட்டத்தை நூறுவீதம்..

கடைப்பிடிப்பது மனிதநேயம்...

Link to comment
Share on other sites

தூயவனான என்னை நீ

ஒரு தடவை திருமணம்

செய்ததற்காக..நூறு

தடவை தீக்குளிக்க

கேட்கிறாயே..ஏனடி?..

ஐயோ அவள் கேட்கிறாள் என்பதற்காக நீங்கள் தீக்குளிக்க போறியளா விகடகவி? பாவம் பா நீங்கள்

மொட்டைமாடி நின்று

கோயில் கோபுரம்..

மாடப்புறாக்கள்..

பஞ்சுமேகம்...

மஞ்சள் வானம்..

நீலமதி..

நிறைந்த நட்சத்திரங்கள்..

அண்ணாந்து பாரத்தே

ரசித்துப் பழக்கப்பட்ட

என்னைக் கீழ் நோக்கி

ரசிக்கவைத்த குமாரியே...

முற்றத்திலிட்டாய் கோலம்..

மனமயக்கம்.. மாயாஜாலம்!!!

ஒவ்வொரு தூறலும் நல்லாகவே இருக்கு. அதிலும் எனக்கு பிடிச்ச தூறல் இதுவே. நல்லாக எழுதுறீங்கள். உங்கள் தூறல் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தூறல் நாள் 31

ஒரு கிண்ணச் சொர்க்கமும்

ஒரு விரல் ஊறுகாயும்..

சின்னத்துயரத்தை மறக்க செய்யும்...

மெல்ல நரகத்திற்கு அழைத்துச்செல்லும்..

வேண்டாப்பொண்டாட்டியைப்போல

தண்டச்சோறென..எப்போது

கண்டாலும் வைவார் தந்தை

மகனை காணாமல் அழுவதும் விந்தை

ஆறுநாள் உபவாசம்..

ஏழாம்நாள் பாரணை..

எட்டாம்நாள் ஆட்டிறைச்சி..

அவா அடக்கமுடியா.. ஆசைமனிதனின்..

வெளிவேசம்..மகா அபத்தம்..

பேயென்று தலைவிரித்தாடி..

கோழியைப் பலிகொண்டு..

மகாபலம் காட்டி

மண்ணோடு வீழ்ந்து..

வெளிப்போகுமாம் பேய்..

மனவியாதிகளுடன் நாம்

மருத்துவமறியா மூடராய்..

கனவுப்பூங்காக்களில்

கூட கண்ணயர

விடாத வெளிநாடு

வெளியே உல்லாசம்..

போலி சந்தோசம்

எல்லாம் வேசம்..

Link to comment
Share on other sites

தூறல் நாள் 32

புன்னகைக் காட்டுக்குள்

பூத்த சிவப்பு சூரியன்

தலைவன் வீரம்

ஆயிரம் நெறிகளும்

அற்புத வழிகளும்..

தலைவன் பலம்..

ஆயுள்நேரத்து உழைப்பும்..

ஈழத்து நினைப்பும்

தலைவன் தியாகம்

நெஞ்சுடைத் திடமும்

நேர்மையின் இடமும்

தலைவன் இதயம்

மக்களின் கைகளும்

மாவீரரின் ஆசியும்

தலைவன் பக்கம்

மூடரின் நெறியும்

மூத்தவர் அறிவும்

தலைவன் ஞானம்

போராளிகள் வரையும்

போர்முனைக் காவியம்

தலைவன் மதி விம்பம்

தமிழராய் இணைவோம்

ஈழத் தமிழராய் நிமிர்வோம்

தமிழ்ஈழத்தலைமகன் வெற்றிக்கு

விரைந்து வழிகள் சமைப்போம்..

Link to comment
Share on other sites

நன்றி வெண்ணிலா....

தூறல் நாள் 33

பசியோடு விழித்தாலும்..

பசியோடு தூங்காத

மனிதர்கள் மத்தியிலே

பசியோடே தூங்கிப்போகும்..

பாலகர்கள் மேல்கூட..இறைவா

உனக்கென்ன கொடுங்கோபம்?

சுதந்திரத்திற்காக

உயிர் கொடுத்துப்

போராடிய நாடுகளே..

தமிழன் சுதந்திரத்தை எதிர்த்து

போராடுகிறது!!!

நாய்க்கு அடிபட்டால்

"அச்சச்சோ" என்கிறாய்..

ஒரு நாள் சாப்பிடாத உன்

பிள்ளைக்காய்..நொந்துபோகிறாய்

..

தொடர் நாடகங்கள் பார்த்து

அழுதுவடிக்கிறாய்..

ஈழமண்ணில் தினமும்..நிஜமாய்

குண்டடிபட்டும்...வெறிக்குரங்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு தூறல்களும் வித்தியாசமாக நல்லா இருக்கு விகட கவி.

அதிலும் இந்த தூறல்கள் சூப்பரா இருக்கு.

தூறல் நாள் -22

என் இதயப்பலகை

சுத்தமாக இருக்கின்றது..

யாராவது எழுத நினைத்தால்..

உங்கள்அப்பா..அம்மா..அக்கா..

தம்பி..தங்கை..மாமா..சித்தப்பன்..

எல்லா உறவுகளிடமும்..

அனுமதி பெற்றுவிட்டு வந்து

எழுதுங்கள்..மேலும்

எழுதும்போது தயவுடன்.

கூர்மைமிக்க ஆணிகொண்டு

எழுதாதீர்கள்..வாசம் மிக்க

மென்மலர்களால் எழுதுங்கள்..

வலிகளும் தழும்புகளும்..

இந்த இதயத்திற்கு புதிதல்ல

எழுதியவர்கள் எதற்காக..

எதற்காகவோ எல்லாம்

போய்விடுவார்கள்..

விட்டுச்சென்ற வாசத்தோடாவது

இந்த இதயம் வாழட்டுமே..

என் புது நண்பி..

பல நிமிடங்களாய்..

என் கவிதைகளை நோட்டமிட்டாள்..

ரசித்தாள்..

அப்பாடா..இவளாவது

எனக்கு ரசிகையாகிவிட்டாளே..

என்று எண்ணிக்கொண்டிருக்க..

கேட்டாள்"இந்த எழுத்துகள்

அழகாக இருக்கின்றதே..இதுதான்

நம் தமிழ் எழுத்தா" என்று

Link to comment
Share on other sites

விகடகவி மாமாவின் தூறள்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் :o வாழ்த்துக்கள் மாமா!! :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நன்றி ஜனனி..நன்றி ஜம்மு..

ஜம்மு (ஓட) பஞ்ச்..

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!

கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

வாழும்போது...மாலை ஏனோ நார் நாராகிவிடுகிறது...

காதலர் பேசும் மொழி பூக்ளுக்கு தெரியும்!!

பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...

இருவருடைய மொழியும்..நம்மாளுக்கு புரியவேயில்லை

அப்ப வரட்டா..

Link to comment
Share on other sites

நன்றி ஜனனி..நன்றி ஜம்மு..

ஜம்மு (ஓட) பஞ்ச்..

காதலிக்கும் போது பூக்கள் தூதாகின்றன!!

கல்யாணத்தின் போது அந்த பூக்கள் மாலையாகின்றன...

வாழும்போது...மாலை ஏனோ நார் நாராகிவிடுகிறது...

காதலர் பேசும் மொழி பூக்ளுக்கு தெரியும்!!

பூக்கள் பேசும் மொழி காதலருக்கு விளங்கும்...

இருவருடைய மொழியும்..நம்மாளுக்கு புரியவேயில்லை

அப்ப வரட்டா..

மாம்ஸ் இது என்னோட பஞ் இல்லை நம்ம கறுப்பி அக்காவின்ட பஞ் அல்லோ :wub: ....எப்படி இருக்கு கறுப்பி அக்காவின்ட பஞ் சும்மா அதிருதிலலல.... <_<

"குரங்கின் கையில் கிடைப்பதால் மாலை நாராகிவிடுகிறது அதையே இதயதிற்கு பிடித்தவனிடம் கொடுத்தாள் நாராகுது மாமா" :lol:

"யார் அந்த நம்மாள் மாமா சொல்லவே இல்லை <_< சொன்னா நான் புரியவைத்து விடுறேன் இருவருடைய மொழியையும் அவருக்கு" :huh:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 34

உறவுகளைச்சேர்த்துக்

கொள்ள உள்ளம் ஏங்கும்..சில

உறவுகள் சேர்ந்து கொண்டு

உயிரை வாங்கும்..

செல்வத்தால் சேர்ந்த உறவு

ஏழ்மையால் விலகும்

காதலின்

காதலி

காதலில்

காதலே..

காதலையும்

காதலித்து

காதலா..

காதலைக்

காதலி!!!

துறுதுறுக்கும் காதலி

விழிகள்..

அலைபாயும் காதலன்

விழிகள் கலந்து

இதயத்தில் இன்ப

ஈட்டி நுழையும்.

கண்முழித்தபிறகும்

கலையாத கனவாய்..

கண்மூடிய பிறகும் அழியாத

நினைவாய்..என்னுள் நீ!!

என் அழகானவளே..

உன் கோப அழகையும்..

கொவ்வைச் செவ்வாயழகையும்..

என்னுள் புதைத்துவைத்திருக்கிறேன்..

அசைபோடும் வேளைகள் மீட்டி..

நினைவுகளுக்கு உயிரூட்டி

ஆனந்தப்பட்டுக்கொண்டே..நான்!!

எண்ணுவாளா எனத்

தவமாய்த் தவங்கிடந்து

ஏற்றவள் எண்ணும்போது

சற்றும் கணக்கெடான் ஆண்..

அலையட்டும் எனத் தவிக்கவிட்டு

ஆமென்று தாலிக்குத்

தலை நீட்டி...அங்கே..

கணப்பொழுதும் தவமாய்த்

தவங்கிடப்பாள் பெண்!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 35

மேன்மக்களென்போர்

உள்ளத்தாலும்...

செயலாலும் உயர்ந்தவர்கள்

என்பதை

பலத்தாலும்

பதவியாலும் என

மாற்றியவர்கள்..

வாழ்வால் சபிக்கப்படுகின்றனர்..

வந்தாரை வாழவைப்பான்

தமிழன்...அந்த தமிழன்

நாதியற்று..நாடுநாடாய்..

தஞ்சம் கேட்டு..உயிர்மெய்

வாடிக்கிடக்கிறான்..

நாடிழந்து!!

சொல்லாதே..

சொல்லக்கூடாதெனச்

சொன்னால்

சொல்ல மறக்காத பிள்ளை

சொல் இதை யென்றாலும்

சொல்லும்..விடுங்களேன்

சொல்லிவிட்டுப்போகட்டும்!

என் ஆண்மையை

அழவைத்தது..உன்

அன்பு..அதனால் நீ

என் எதிரியா..தோழியா?..

சோகம் வரும்போதெல்லாம்

தனிமையை விரும்பும் மனம்..

சந்தோச வேளைகளில்

பகிர்ந்துகொள்ள உறவைத் தேடும்

இயல்பாகவே..உத்தமமானமனிதம்!!

பாடத்தூண்டுகின்ற

புன்னகை விடாமல்

இருக்கியழுத்துகின்ற இதழ்கள்..

முரண்பாட்டு அழகி நீ!!!

மெல்லிய இடையும்..

மெல்லென நடையும்..

சின்னதாய் குடையும்..

சீரிய உடையும்..

பின்னிய சடையும்..

பெண்ணே.. என்னே அழகடி நீ!!

பெருந்துன்பமடி அது எனக்கு !!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 36

மின்னும்.. கன்னங்களுக்கும்

வண்ணமிட்டு..அவள்

வளர்த்தாள் அழகை

கள்ள எண்ணங்களுக்கு

வண்ணமிட்டு அவன்

வடித்தான் கவிதை

கவிதை அழகைக்

காதலித்தது.. பாவம்..

அழகோ கவிதையைக்

காதலிக்கவில்லை!!!

உன்னால் என்னை

மறக்கமுடியாது..ஆனால்

என்னால் உன்னை

மறக்கமுடியுமென்று சொன்னாய்..

நானும் மெய்தானோ என நினைத்தேன்..

ஆனால் பைத்தியக்காரா

உன் மகளுக்கு என் பெயரை

ஏன் வைத்தாய்?

வண்ணத்துப்பூச்சிகளின் வசீகரம்..

வானவில்லின் வளைவுகள்..

கார்மேக நிறத்துக்கூந்தல்..

கொடியினளில் இடை..

மல்லிகையின் வாசம்..

முல்லைமொட்டுச்சிரிப்பு...

கிளிமூக்கு...சங்கெனக்கழுத்து..

எல்லாம் எதிர்பார்த்தால்..

கவிஞனே..உன் மணப்பெண்..

ஓவியத்தில்தான் அப்பனே..

இரவுக்கு வெள்ளையடித்தான்

ஆதவன்..அவன்

நிழலுக்கு..இருள் கொடுத்தாள்

இராமகள்!!

உன் நட்பு..

என் சோம்பல் துலக்கியது..

என் உழைப்பை ஊக்குவித்தது..

என் சாதனையை சாத்தியமாக்கியது..

என் வெற்றிப்பொழுது புலர்ந்தபோது...

நட்பு வாழ்ந்துகொண்டிருக்கிறது...

நணபனே.. நீதான் அருகிலில்லை..

குழந்தை மனது..

ஈரமான வெள்ளைச்சேலை

எதையெறிந்தாலும் ஒட்டிக்கொள்ளும்..

பூ விதைத்தால் பூ முளைக்கும்..

முள் உதிர்த்தால் முள் செழிக்கும்...

அன்பும் பண்பும் வளமாகும்..

முத்தமும் அணைப்பும் உரமாகும்..

தட்டிக்கொடுத்தால் சிறப்பாகும்..

சொல்லிக்கொடுத்தால் சுகமாகும்..

நல்ல செயல்களைப் பதிவு செய்து..

நலம் வாழத் துணை செய்வோம்..

Link to comment
Share on other sites

kifr_kili_22208_4.jpg

:lol::D:D

விழியில் கனவுகள்

விரியும் முன்னே..

விழிகள் மூடினா யஞ்சுகமே..

கொடூரமென் பதிதுதானோ...

கொஞ்சிய குழந்தைகை

கொய்தது முறைதானோ..

பிஞ்சே மணியே.. ஆருயிரே.

பெருந்துயரை விதைத்துனை

போக்கடித்தனரோ..

நீ மண்ணில் சிந்திய இரத்தங்கள்

நெஞ்சுக்குள் வெறிதரும் பூவே

நாளை பூத்திடில் ஈழத்தில் பூத்திடுவாயே..

அழிந்திடப்பிறந்தவன் தமிழனா..

அலைந்திடப்பிறந்தவன் தமிழனா

அழுதிடப்பிறந்தவன் தமிழனா..-இல்லை

ஆழப்பிறந்தவன் தமிழன்..நாளை

ஆழ்வான் ஈழத்தமிழன்!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 37

உன் விழி நீரை..

சிந்தும் காதலியே.. என்னை

வலி செய்யும் வழி அறிந்தது

எப்படியோ?...

அவள் விதைத்த காதலை

முளையிலே கொய்தாள்..

அவளை துயரை அவளே

அறுவடை செய்தாள்..

ஆணை அலையவிட்டு

துன்பம் காணவெண்ணி

துயரக்கடல் குளித்தாள்..

ஆணை அசண்டை செய்து

பெருமிதம் கொண்டே

வாழ்வை இழந்து நின்றாள்..

இறங்கிப் போவதில்

அன்புக்கு இழுக்கா?..

இகழ்வாரெண்ணி

இணையாமை யழகா?...

வாழ்க்கைஎன்பது வாசப்பூங்கா

வழுக்கிவிழுந்தால்

சேற்றில் ரோஜா..

அழகே ஆனாலும்

அழுக்குப்பட்டால்..

தலையிலா சூடுவார்..

குப்பையில் போடுவார்!

அமைதியான இதழ்கள்..

அலைபாயும் கண்கள்..

என்னை ஏழையாக்கிய

அழகு..அவள் பெண்மை...

என்னை கோழையாக்கிய

அழகு அவள் புன்னகை..

இரண்டு வரியில் சொன்னால்..

என் காதல் திருக்குறள்...

நான்கு வரியில் சொன்னால்..

நாலடியார்....நீயே..வந்து

ஒரே வார்த்தையில் சொன்னால்

அன்பே அது "வரம்"

மேகங்கள் ஓடாத போது

நிலவு அதைத் திரத்துவதில்லை

நீ என்னை விலகாதபோது

நான் உன்னைத் தேடுவதும் இல்லை

அருகில் அருமை தெரிவது இல்லை

அன்பு மனங்கள் புரிவதுமில்லை!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.