Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அட அருமையான இந்தப்பக்கத்கை இவளவு நாளும் பார்க்காமல் விட்டுட்டனே.ஆரம்பத்தில் இருந்து முழுக்க லவாசித்தேன்.அத்தனையும் அருமையான தூறல்கள்.தொடருங்கள் விகடகவி.

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைத்துக் கவிதைகளும் அற்புதம் விகடகவி. குழந்தையின் கையை நீக்கி விடுகின்றீர்களா? பக்கம் வரவே ஏதோ செய்கின்றது.

தூயவனான என்னை நீ

ஒரு தடவை திருமணம்

செய்ததற்காக..நூறு

தடவை தீக்குளிக்க

கேட்கிறாயே..ஏனடி?..

ஓ நீங்கள் தான் தூயவனா? ஏன் இரண்டு பெயர்களில் எழுதுகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அருமையான இந்தப்பக்கத்கை இவளவு நாளும் பார்க்காமல் விட்டுட்டனே.ஆரம்பத்தில் இருந்து முழுக்க லவாசித்தேன்.அத்தனையும் அருமையான தூறல்கள்.தொடருங்கள் விகடகவி.

ஆஆஆஆஆ இந்தளவு நாளும் பார்க்காமல் விட்டு விட்டிங்களா?உங்க வாழ்க்கையின் ரசனைப்பகுதியை தொலைக்கப் பார்த்திங்களே.

விகடகவியின் கவித்துளிகள் அனைத்தும் முத்துக்கள். ஒரு புத்தகமே வெளியிடலாம்

Link to comment
Share on other sites

இரண்டு வரியில் சொன்னால்..

என் காதல் திருக்குறள்...

நான்கு வரியில் சொன்னால்..

நாலடியார்....நீயே..வந்து

ஒரே வார்த்தையில் சொன்னால்

அன்பே அது "வரம்"

விகடகவி மாமாவின் தூறள்கள் எல்லாம் அருமை அதிலும் என்னை தொட்டு சென்ற துளி இந்த துளி :unsure: ...அருமையான துளி...தொடரட்டும் மாமாவின் தூறள்கள்... :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எல்லாருக்கும் நன்றிகள்..

பொன்னையா அண்ணா..நான் ஒரு ஆள்தான்...விகடகவிதான்.. தூயவன் வேற ஆள்.. நான் சொன்ன தூயவன் வேற.... குழப்பிடாதீங்கோ தூயவனை...

Link to comment
Share on other sites

மேகங்கள் ஓடாத போது

நிலவு அதைத் திரத்துவதில்லை

நீ என்னை விலகாதபோது

நான் உன்னைத் தேடுவதும் இல்லை

அருகில் அருமை தெரிவது இல்லை

அன்பு மனங்கள் புரிவதுமில்லை!!

வழமையான தூறல்கள் போல இத்தூறலையும் அழகாக சொல்லி இருக்கிறீங்க.

Link to comment
Share on other sites

தூறல் நாள் 38

அக்னி குளித்து..

எரிமலையில் ஓய்வெடுக்கும்..

தைரியம்.. எனக்குண்டு..

நீ அருகில் இருக்கையில்

அம்மா...

தன்னை மறந்த பாவை

கூச்சங்கள் அங்கு இல்லை

ஆட்டத்தில் ஏறும் போதை

போதையில் மிதக்கும் பேதை

அவளை மொய்த்த நூறு ஜோடிக்

கண்களில் ஒரு ஜோடிக்கண்

எனக்குச் சொந்தம்!!

ஆண்மன இறுக்கம்

கட்டிலில் தளரும்..

பெண்மன இறுக்கம்-சுடு

காட்டினில்தான் எரியும்

ஊர் அழும..

உறவுகள் கதறும்..

ஒன்றிரண்டு மாதங்களில்

உருவமே மறந்து போகும்..

மரணம் கூட

மறக்கப்படும் சோகம்தானே..

ஏன் பேசவில்லை

என்பது உந்தன் வாதம்

என்னிலேதடி பிடிவாதம்..

உன்னோடு நான் வாழ

ஊருக்கே ஆசை..

ஏனோ துடிக்கிறதுன்

அப்பன் மீசை..

விறைத்த விடலையாய்..

நேருக்கு நேராய்

நெஞ்சை நிமிர்த்தி

எப்போதோ நின்றதை

இப்போது வஞ்சம் தீர்க்கும்

உன்னப்பன் மகாவில்லன்!!

மெல்லென வீசிடும் தென்றல்

மேனியைத் தழுவிட சுகம்..

மெல்லியள் வாசப்பூவை.

மேனியைத் தழுவிட சுகம்..

மெல்லவே பிள்ளை விரல்..

மேனியைத் தழுவிட சுகம்..

மேலெலும் அக்னிப்பிழம்பு காட்டில்

மேனியைத் தழுவிட சுகம்..

இறுதிசுகம் பரமசுகம்!!

கடலே காய்ந்துபோகும்..

காலங்கள் கடந்தாலும்..-உன்

முத்தஈரங்கள்..காயாது..

கரையாது..அன்பே

வாழும் என் ஆத்மாவில்..

வாரம்..வாரம்..

தலைக்குளித்துப் பூச்சூடி

கோயிலுக்கு வரும் தேவி..

வரம்.. வரம்.. எனத்

தவங்கிடந்தேன்..

எப்போது தருவாயொரு வரம்..

நீ சூடிக்கொள்கின்ற பூவை..

நான் சூடிவிடப்போவதில்

உனக்கென்ன சிரமம்?...

Link to comment
Share on other sites

வாரம்..வாரம்..

தலைக்குளித்துப் பூச்சூடி

கோயிலுக்கு வரும் தேவி..

வரம்.. வரம்.. எனத்

தவங்கிடந்தேன்..

எப்போது தருவாயொரு வரம்..

நீ சூடிக்கொள்கின்ற பூவை..

நான் சூடிவிடப்போவதில்

உனக்கென்ன சிரமம்?...

ஆஹா நல்லாருக்கே :rolleyes:

தினசரி தூறும் தூறல்கள் எல்லாம் அருமை.... பாராட்டுக்கள். தொடருங்கள் விகடகவி அண்ணா!

Link to comment
Share on other sites

ஊர் அழும..

உறவுகள் கதறும்..

ஒன்றிரண்டு மாதங்களில்

உருவமே மறந்து போகும்..

மரணம் கூட

மறக்கப்படும் சோகம்தானே..

:rolleyes:

ஈழத்தமிழர்களின் வாழ்வும் இப்படித்தானே போய்க்கொண்டிருக்கின்றது. விகடகவி உங்கள் தூறல்கள் அருமை.....

Link to comment
Share on other sites

தூறல் நாள் 39

ஊமைக்குயிலாய்..

நான்...

உன் பெயரை

உள்ளே ஓயாமல்

இசைத்தும்..உனக்கும்..

கேட்காமல்..வேற்றாரும்

அறியாமல்!!

காலைச்சூரியன்..

கதிர் தொட்டாப்போல்...

மழையில் நனைந்துகொண்டே

கிணற்றுநீரில் குளித்தாப்போல்..

கொட்டும் வெயில்காலம்..

பளிங்கான சீமெந்துத் தரையில்

சயனித்தாப்போல்..

கொதிக்கும்வெயில்கால

குளிர்மோர் போல்..

அதிகாலைநேரத்து மல்லிகை

வாசம் நுகர்ந்தாற்போல்..

ஆயிரம் இதங்களெல்லாம்..

அன்பேயுன் மடியில்...

தலைசாய உணர்கிறேன்!!

காட்டிக்கொள்ளாமல்..

அக்கறையை உள்ளே

வைத்திருக்கிறாயாமே..

காயம் பட்ட இதயத்திற்கு

கனிவு தராத அக்கறையை..

நான் கதைவிட்டுப்போனபிறகு

கண்ணீராய்க் கரைப்பாயோ!!

கண்ணம்மாவின் நினைவில்

தீயைத் தீண்டல் கூட

இன்பமென பாரதி சொன்னார்..

பெண் நினைவில்

அழிவதிலும்..தீயில் அழியலாம்..

என்பதை அவர்

உணரவில்லைப் போலும்!!

தூக்கங்கள் கலைக்கும்..

தூயவளே..கன்னந்

தாங்கிக்கொண்டு..தொளில்

தூங்கவெனவே..அடிக்கடி

துயில் கலைகிறாயென்பது..

சற்று வேடிக்கைதான் அன்பே!!

என் இதயத்துடிப்பிற்குள்..

இயக்கம் இருந்தாலும்..

"என்னை விட்டுவிடு

என்றாயே" அன்றே

இறந்துவிட்டேன்..என்னை

நடைபிணம்போல் இருக்கிறாயே

என்கிறார்கள்.மெய்தான்

நான் நடைபிணமாய்;த்தான்

இருக்கிறேன்!!

மரதன் ஓட்ட வீரரைவிட

அதிகம் ஓடியிருக்கிறேன்..

தபால்காரரைவிட

அதிகம் நடந்திருக்கிறேன்..

காந்தியை விட

அதிகம் உண்ணாமலிருந்திருக்கிறேன்..

இவ்வளவு சாதனைகள்

தாண்டியபின்னும்...என் காதல்

கதைஜெயமில்லாமல்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொள்ளாமல்..

அக்கறையை உள்ளே

வைத்திருக்கிறாயாமே..

காயம் பட்ட இதயத்திற்கு

கனிவு தராத அக்கறையை..

நான் கதைவிட்டுப்போனபிறகு

கண்ணீராய்க் கரைப்பாயோ!!

அழகான வரிகள் விகடகவி

Link to comment
Share on other sites

நன்றி கபி..

காயம் பட்ட இதயத்திற்கு

கனிவு தராத அக்கறையை..

அதென்ன ..இந்தவரிகளில் இவ்வளவு அக்கறை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கபி..

அதென்ன ..இந்தவரிகளில் இவ்வளவு அக்கறை..

வரிகள் மனதைத் தொட்டது அவ்வளவுதான் விகடகவி

Link to comment
Share on other sites

தூறல் நாள் 40

உயிராய் மதித்த

என் காதல் தோற்றதைக் கூட

மறந்து உண்மையில்லாத

சினிமாவில் நாயகன் காதல்

தோற்றமைக்காக கலங்கிக்கொண்டிருக்கிறது

என் கால்களையே வாரிய..என் முட்டாளிதயம்!!

காதலைப் பரிமாறிக்கொள்ள

எங்களுக்கு வார்த்தைகள் கூட

தேவைப்படவில்லை..ஆனால்..

மணமாலைகளைப் பரிமாறிக்கொள்ள

வரதட்சிணை தேவைப்படுகிறதாம்!!

பெண் விடுதலை.சமவுரிமை..

எல்லாம் மதிக்கப்படுவதாக..

ஏற்கப்படுவதாக..வழங்கப்படுவதா

க..

சபைகளில் சப்பை கட்டும் ஆண்கள்..

வீட்டுக்குப்பைக்குள் அகப்பட்டு..

பாவம்.. அவர் வீட்டுப் பெண்கள்!!

ஈன்றபொழுதில் பெரிதும்

மகிழும் தாய்..

சுமந்த வலியை

ஈன்ற வலியை

சுழலும் பிள்ளை

வளர்ந்தபின்னும்

ஏன் சுமப்பதில்லை?..

சாமியாராய் ஆகி

தத்துவம் பேசுபவனும்..

ஒரு நாள்..மனச்

சஞ்சலத்தைக் காணும்

வண்ணம் தவறிழைத்திருப்பான்!

நேற்று நானும் அவளும்..

இன்று நான் மட்டும்..

நாளை நானுமில்லை..

இதுதானா வாழ்க்கை?

இருட்டுக்குள் இருந்தேன்..

வெளிச்சத்தில் இருந்தவர்கள்

வியப்பாக இருந்தார்கள்...வெற்றி

மமதையில் அவர்கள் என்னைக் கண்டு

கொள்ளவில்லையென்று சினந்தேன்..

அது அவர் இறுமாப்பு என நினைந்தேன்..

வெறியோடு வெளி வந்து..

வெற்றிமேல் வெற்றி கொண்டேன்..

இப்போது நிஜமாய்த்தான் சொல்கிறேன்..

இருட்டில் இருப்பவர்களே.. உங்களை

எனக்குத் தெரியத்தான் இல்லை!!

பஞ்சுத்தலையணையைவிட

என் கரடுமுரடான

உள்ளங்கையில் உன் கன்னம்

வைத்து தூங்குகிறாய்..

அதுதான் சுகமுமென்றாய்..

கண்ணாடிக் கன்னங்களுக்கும்..

கரடுமுரடான கைகளுக்கும்..

இடையே இதத்தை விதைத்ததென்ன

அன்பே எம் காதல் அலைகளா?..

Link to comment
Share on other sites

தூறல் நாள் 41

என் காதலுக்கு

மொழி தந்தவளே...

உன் மொழியை

நான் புரிந்தேன்-ஆனால்

நம் தாய்மொழியை

ஏன் மறந்தாய்?..

நீ பேசுவாய் என்று நானும்

நான் பேசுவேன் என்று நீயும்...

ஊமையானதென்னவோ

நம் காதலும்தான்..

உன் வெறுப்பு

என் மேலா..

என் காதல் மேலா

தெரியவில்லை

ஆனால்..நீ

விலகியிருப்பது

என்னைத்தான்

என்றாலும்..என்

காதலை நீ

நெருங்கிக்கொண்டிருக்கிறாய்

பள்ளிக்காலங்களில்

படிக்கவேண்டியதை படித்து

எழுத வேண்டியதை

எழுதாமல் விட்டதால்..

இப்போது வேலையில்லாமல்

எதையெதையோவெல்லாம்

கிறுக்கிக்கொண்டு நான்!!

என் மாமன்மகளே..

நம் பாட்டி..

உன்னை அழகியென்றார்கள்..

என்னை அழகனென்றார்கள்..

உன்னை அழகியென்றபோது

யாரும் சிரிக்கவில்லை..

நீ அழகிதானே..ஆனால்

என்னை அழகனென்றபோது

எல்லோரும் சிரித்தார்கள்..

நீ கூட..

சிரிப்புத் தந்த எரிச்சலால்..

எல்லோரையும் வெறுக்கிறேன்..

உன்னை மட்டும்..

வெறுக்கமுடியாமல் நான்...

ஏனடி?..

உன்னை நான்

எவ்வளவு நேசிக்கிறேன் என்று

அடிக்கடி கேட்கிறாய்..

அப்போதெல்லாம்

பதில் சொல்லமுடியவில்லை..

இப்போது உன்

சந்தோசமான வாழ்க்கைக்கு

இடையூறு இல்லாமல்.

விலகி நின்று

உன் சந்தோசத்திற்காக..

வேண்டிக் கொள்ளும்போது

புரிகிறது..நான்.. என்னை விட

உன்னைத்தான்

அதிகம் நேசித்திருக்கிறேன் என்று!!!

மோகம் முப்பது நாளும்..

ஆசை அறுபது நாளும்..

போகமுதலே...இங்கே

விவாகரத்துகள்..

அரங்கேறுகின்றன..

இந்த வில்லங்க ஜோடிகளுக்கு

ஒருவருடக் காலக்கேடு..

ஒருவரையொருவர் உசுப்பேற்ற!!..

Link to comment
Share on other sites

மாம்ஸ் கடலில் விழுந்த பின் எந்த துளி மழைதுளி போல மாமாவின் எல்லா துளிகளுமே அருமையா இருக்கு :D எந்த துளி நன்னா இருக்கு என்று சொல்லவே முடியல்ல வாழ்த்துக்கள் மாமா :D ...மாம்ஸ் உந்த தத்துவமும் நன்னா இருக்கு... :D

நேற்று நானும் அவளும்..

இன்று நான் மட்டும்..

நாளை நானுமில்லை..

இதுதானா வாழ்க்கை?

நாளை வாழ்க்கை பூக்கும்

அதில் இன்னொரு நடிகர்கள்

உங்கள் கதையை

நடிப்பார்கள்..!! :D

இது தொடர்கதை..... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீ பேசுவாய் என்று நானும்

நான் பேசுவேன் என்று நீயும்...

ஊமையானதென்னவோ

நம் காதலும்தான்..

காதலின் பரிபாஷை மெளனம். உங்கள் கவிதை அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உங்கள் கவித்தூறல்கள் தொடரட்டும்.சில விரிகள் எமது நிகழ்கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் போது அதை திரும்பத்திரும்ப வாசிப்பதே ஒரு இன்பம்.(மகிழ்வான விடையங்களை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்காய்............... பல நேரங்களை செலவிடும்

உங்கள் உழைப்பு பாரட்டுதற்கு மட்டும் உரியதல்ல......

அழகிய தமிழால்......... எமை அடிக்கடி நனைக்கும்

உங்கள் உயரிய சிந்தனை சிறியதொரு கவியுமல்ல....

என்னை கையில் பிடித்து பலஇடங்களுக்கு கவிதையின் ஊடாக என்னை அடிக்கடி அழைத்து செல்கிறீர்கள். சில இடங்கள் எனக்கும் பரிட்சயமாக இருப்பதால் நான் என்னையும் மறந்து சிந்தனைகளை சிறகடிக்க விடுவதுண்டு

தொடருங்கள் ..................நன்றி.

Link to comment
Share on other sites

எனக்கு பிடித்த வரிகள்.

இருட்டுக்குள் இருந்தேன்..

வெளிச்சத்தில் இருந்தவர்கள்

வியப்பாக இருந்தார்கள்...வெற்றி

மமதையில் அவர்கள் என்னைக் கண்டு

கொள்ளவில்லையென்று சினந்தேன்..

அது அவர் இறுமாப்பு என நினைந்தேன்..

வெறியோடு வெளி வந்து..

வெற்றிமேல் வெற்றி கொண்டேன்..

இப்போது நிஜமாய்த்தான் சொல்கிறேன்..

இருட்டில் இருப்பவர்களே.. உங்களை

எனக்குத் தெரியத்தான் இல்லை!!

விகடகவி, உங்கள் தினசரி தூறல்கள் பிரமாதம்.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

தூறல் நாள் 42

உனக்குப் பிடித்த நான்

பிடிக்காமல் போனேன்..

காலம் கிழித்த விரிசல்..

கனவுகளைக்கலைத்து

காதலின் கழுத்தை நெரித்து

காதலன் கண்கள் பிதுங்கி

இப்போது பெண்ணே..இவன்

யாருக்குமே பிடிக்காதவனாய்..

கோபத்திற்கும்..

போலி கௌரவத்திற்கும்..

இறுமாப்பை அடிபோட்டு

ஆணவப்பூச்சால்

காலத்திற்கும் உறவைப்பிரித்து

வைத்துக் காண்பது

என்ன மனிதா-நீ

சாதித்த சரித்திரம்தான் என்ன

வாழும் காலத்தில்

உறவோடு இருந்துபார்..

ஒன்றாக வாழ்ந்துபார்..

இனிதாக கலந்துபார்..

வாழ்வின் சந்தோசப்பக்கங்கள்

பூக்களாய் விரியும்!!

என் முற்கோபம்தான்

என் முதல்விரோதி

ஆனால் அன்பே..

அதுதான் என் முகவரி...

அந்தக் கோபம்தான் நான்..

கோபம் வராத நான்..

முகவரி தொலைத்த காகிதம்..

துளையில்லாத மூங்கில்

கண்ணிழ்ந்த கற்சிலை

என்னை மாற்ற

முயற்சிக்காதே..நான்..

நானாகவே இருந்துவிடுகிறேன்!!

எதிரே செழித்துக் கொழித்து

வளமாக வாசமாக விரிந்து

கிடக்குமிந்தப் பூக்களை

பார்க்கமுடியாத விழிகளும்..

ரசிக்கமுடியாத இதயமும்..

என்னுடையவை என்றுதானே..

குற்றம் சுமத்துகிறாய்..

அசடே..இவை

தெய்வீகப்பூக்கள்..என்போல்

தெருப்புழுதி தழுவலாமா சொல்!!

என் உணர்வுகள் மெழுகாய் உருகும்..

எரிமலையாய் வெடிக்கும்..

தென்றலாய் தழுவும்

தீயாய்க் காயும்...

அன்பு மனையாளாய்

எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டாய்..

ஆனால்..ஒரே ஒரு

ஊடலைத்தாங்க முடியாமல் நான்..

ஒத்துக்கொள்கிறேன்..ஆணைவிட

பெண்ணுக்குத்தான் மனவலிமை

அதிகமென்பதை!!

சிறுவயதில் இருந்து

காமிக்ஸ் கலாச்சாரத்தில் உழன்று

ஒரு சிலந்தி மனிதனாய்..

ஒரு மாயாவி மனிதனாய்..

ஒரு தில்லானாய்..

ஒரு ஸெரிப்பாய்..

ஒரு ஜேம்ஸ்பாண்டாய்..

ஒரு வெளவால் மனிதனாய்..

என் கனவு உலகத்தில்

பறந்து பறந்து சாகசங்கள்

செய்து கொண்டிருந்தேன்..

நிஜத்தில் நிகழ்த்த

ஆசைப்பட்ட நான்..

நடக்கமுடியாமல் கட்டிலில்!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 43

உனக்கு கண்ணில்லையா

என்று என்னையா கேட்டாய்..

உண்மைதான்..இருந்திருந்தால்

இதயமே இல்லாத உன்னைக்

காதலித்திருப்பேனா?..

நேற்றைக்கும்..இன்றைக்கும்

வித்தியாசமெ இல்லாமல்.

நாட்கள் ஓடுகிறது..

நானும் ஓடுகிறேன்..

யாரடி நீ..

எங்கே இருக்கிறாய்.

நீ சண்டை போடுகிற

பெண்ணாக இருந்தாலும்..

பரவாயில்லை..வந்து

என் வாழ்வில்

மாற்றத்தை ஏற்படுத்து!!

இத்தனை நாட்கள்

என்னால் எப்படி உன்னோடு

பேசமுடியாமல் இருக்கிறது

என்று தப்பாய் எண்ணாதே..

நான் பேசப்போய் தப்பாய்

ஆகிவிடக்கூடாதே என்றுதான்...

தள்ளிப்போகிறேன்!!!

தொட்டணைத்ததும்..என்

தோள் சாய்ந்ததும்..

முத்தமிட்டதும்..இதழ்தொட்டே

உச்சி மோர்ந்ததும்

காதல் மொழி கலந்து

கட்டிக்கொண்டதும்..என்று

நூறு நினைவுகளால் இறுமாந்தேன்..

காலநதி அடித்துச்சென்ற

காதலியை சேரமுடியாமல்

கலங்கிக் கல்லானேன்!!

ஒவ்வொரு தொலைபேசி

அஞ்சல் ஒலி வரும்போதும்

உன்னதுதான் என்று

இதயப்படபடப்புடன்

திறந்து பார்த்து..

அது உன்னிடமிருந்து வரவில்லை

என்றதும்..உள்ளே..

உயிர் ஓய்ந்ததுபோல் வலிக்கும்..

என் எதிர்பார்ப்பையும்.. ஏமாற்றத்தையும்..

வேதனையையும்..விழிநீரையும்..

நீயா..இறைவனா...

யார் இரசிக்கிறீர்கள்?..

தமிழ் தட்டுத்தடுமாறினாலும்..

தரம் தாளாது..அதன்

இனிமை நூறு கண்டால்..

இதயமென்றும் இடம் மாறாது..

தமிழா..தமிழை வாழவை

வளர வை!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 44

உனக்காக எழுதி எழுதி

என்பேனா முனை தேய்ந்தது

உன்னை எழுதி எழுதி..

என் இதயம் தேய்கிறது!!

என் இதயம்

முழுவதிலும் நீயாய்

இருக்கிறாய்..

உன் இதய ஓரத்திலேனும்

நான் இருக்கிறேனா?..

என் நிம்மதிக்காக

உன் சந்தோசத்தைக்

குழிதோண்டிப்புதைத்தாய்..

முளைவிட்டசோகத்தில்

உன் கண்ணீர்ப்பூக்களை

என் இலட்சியப்பயணத்திற்காக

சமர்ப்பித்தாயே...

தவறு செய்துவிட்டேனடி..

இந்தக் காதலிக்காக

எத்தனை இலட்சியங்களை

வேண்டுமானாலும் நான்

இழந்திருக்கலாமடி!!

செஞ்சோற்றுக்கடனுக்காக

நீ என்னை விட்டுக்கொடுத்தாய்..

எங்கு பட்ட கடனுக்காக

நம் காதலை விட்டுக்கொடுத்தாய்?..

உன் விழிகள்

கலந்தபோது புரியவில்லை

என்னுள் விசம் கலந்துகொண்டிருக்கிது

என்பது..

அன்பே...

வண்ணமிழந்த வானவில்

ஒளியில்லாத நிலவு

பாடாத குயில்

வீசாத தென்றல்.

இவையெல்லாம் மௌனிகளானாலும்..

என் தூரிகை காய்ந்துபோகாது..

அது..ஜீவனுள்ள காலமெல்லாம்..

உன்னை எழுதிக்கொண்டே

இருக்கும்!!

காதலியைப் பார்த்து பார்த்து

அலுத்துப்போன

எனக்கு ஆச்சரியமாக

இருக்கிறான்...காதல்கவிகளை

புதிது புதிதாய்

பிரசவிக்கும் கவிஞன்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.