Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

அனி அன்புக்கு நன்றி...

ஆனால் உண்மையா உங்க கருத்தை பார்த்தவுடன்..

வாய் சொன்னது

கிளம்பிட்டாங்கைய்யா...கிளம்ப

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

தூறல் நாள் 62

சிவப்பு மழைக்குளிக்கும்

ஈழ மண்ணே..உன்

இயற்கை மணம்

மீண்டும் வருவதெப்போ...

அழகான ஆல மரமே

உன் வேரைக்கூட

அறுத்துப்போட்ட செல்லடியை

மனம் மறந்து..உன்மடி சாய்வதெப்போ

பள்ளி மைதானமே

துள்ளிய வயது தொலைந்தாலும்

உன்னை பாரத்தாவது

என் நினைவுகளை மீட்டுவதெப்போ..

குளிக்க மறுக்காத

கோயில்குளமே...

பயத்திலேயே பாசி கொண்டாயோ..

நீ புதிதாய் வருவதெப்போ..

வண்ண விளக்குகளால்

இரவெல்லாம் பகலாய்

எண்ண இனிக்கும்..

பாவடைத்தாவணிகளும்..

பழகக்கேட்கும் பருவமும்..

தரைதொடாப் பாதங்கொண்டு

வீதி சுற்றும் கோயில் திருவிழாவே..

மீண்டும் கோலாகலம் கொள்வதெப்போ...

அலைகளால் பாதம் தடவும்

அன்னைக் கடலே...

உன் கரையோரம் தவழ

என் கிழவுடலே ஏங்கும்

ஆசைகள் தீர்வதெப்போ...

நிலாமுற்றமும்..

அன்னைக்கை குழையல் சோறும்..

அப்பா செல்லமும்..

அனுபவிக்கும் போதே..

அழிந்துபோன வாழ்க்கை கோலமே..

சிதறிப்போன சித்திரமே...

கலைந்து போன நிஜங்களே..

கதறி மனம் கேட்கிறது...

காலங்கள் சேர்வதெப்போ..

கதறிமனம் அழுகிறது...

அற்புதத்தின் அற்புதம்..

அம்மா அருகில் இல்லை

ஆசான்களின் ஆசான்

அப்பா அருகில் இல்லை

அன்பான அண்ணாவும்..

ஆசைத் தங்கையும்..

யாரும் அருகில் இல்லை

தொலைந்த சுற்றம்..

இழந்த நண்பர்கள்..

காணமுடியாத சொந்தங்கள்..

ஏக்கத்தோடே முடியும் என் வாழ்வு

மீண்டும் வேண்டும்..

என் மண்ணில்..இறைவா

அன்றாவது எம் ஈழமண்

சுதந்திரதேசமாய் இருக்கட்டும்..இனி

ஒருமுறை இழப்பதென்றால்..

பிறப்பே தேவையில்லை!.

Link to comment
Share on other sites

ஆஹா ..... கவித்தூறல் எல்லாம் அருமையாயிருக்கே......! பாராட்டுக்கள்...

விகடகவி அண்ணா....தல அண்ணா சொன்னது போல் ஒரு புத்தகமாக வெளியிடலாம் போலருக்கே ........ :wub:

:D விகடகவியின் தூறல்களை புத்தகமாக்குவதெனில் .................... எவ்வளவு பெரிய புத்தகமாகும்? எவ்வளவு தூறல்? நினைச்சுப்பார்க்கவே.................. :)

தொடருங்கள் உங்கள் தூறல் மனதுக்கு மென்மையாகவே தூறாட்டும் தொடர்ந்து.

Link to comment
Share on other sites

காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சே

மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துணிஞ்சிடிச்சே

எடுத்ததெற்கெல்லாம் காதலை குறை சொல்லாதீங்கோ...காதல் ரொம்ப பாவம்....

அது சரி வெண்ணிலா காதல் கொண்ட நீள...(ல)வானம் யாரோ... :lol:

Link to comment
Share on other sites

எடுத்ததெற்கெல்லாம் காதலை குறை சொல்லாதீங்கோ...காதல் ரொம்ப பாவம்....

அது சரி வெண்ணிலா காதல் கொண்ட நீள...(ல)வானம் யாரோ... :lol:

:lol::lol: கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை

கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை :)

நீள..(ல) வானம் இல்ல்லீங்கோ. செவ்வானம் ஆக்கும் :(:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூறல் நாள் 61

அத்தனையும் தந்தாய்..

பித்தனாயானேனே...

செத்துவிடத்தோணுதடி-உன்

மெத்தைமடி மோனத்திலே...

...

கட்டிலறை மக்கானேன்<<<

எல்லோரும் அப்படித்தான் போல :lol:

ஆயிரம் காலம் போதுமடி

பாயினில் ஆசைகள் கூடுதடி

தூயவளே வந்து ஆடடி-என்

நோய் விரகமென்றால் விட்டு ஓடுமடி!!

<<<<

காதலின் உச்சம்!!! கவிதைகளில் மிச்சம் வைக்காமல் வழிகிறது தம்பி!! போற போக்கைப் பார்த்தால்!! :D

தூறல் நாள் 62

சிவப்பு மழைக்குளிக்கும்

ஈழ மண்ணே..உன்

இயற்கை மணம்

மீண்டும் வருவதெப்போ...

ஊரின் நினைவலைகளை மீண்டும் அலையடிக்க வைத்துவிட்டீர்களே மனசுள்

பள்ளி மைதானமே

துள்ளிய வயது தொலைந்தாலும்

உன்னை பாரத்தாவது

**பார்த்தாவது**

வண்ண விளக்குகளால்

இரவெல்லாம் பகலாய்

எண்ண இனிக்கும்..

பாவடை<<

**பாவாடை** இப்படி எழுதவே எழுத்துப் பிழைக்குது :lol:

அலைகளால் பாதம் தடவும்

அன்னைக் கடலே...

உன் கரையோரம் தவழ

என் கிழவுடலே ஏங்கும்

ஆசைகள் தீர்வதெப்போ<<<

உங்களைத் தம்பி என்று நினைச்சன்...என்ன நீங்க இப்படிச் சொல்லுறியள் :lol:

...

நிலாமுற்றமும்..

அன்னைக்கை குழையல் சோறும்..

அப்பா செல்லமும்..

அனுபவிக்கும் போதே..

அழிந்துபோன வாழ்க்கை கோலமே..

சிதறிப்போன சித்திரமே...

கலைந்து போன நிஜங்களே..

கதறி மனம் கேட்கிறது...

காலங்கள் சேர்வதெப்போ..***

உணர்வலைகளை சுண்டி இழுக்கும் வரிகள்

என் மண்ணில்..இறைவா

அன்றாவது எம் ஈழமண்

சுதந்திரதேசமாய் இருக்கட்டும்..இனி

ஒருமுறை இழப்பதென்றால்..

பிறப்பே தேவையில்லை!.

இந்த ஏக்கம் தான் எல்லோர் மனதிலும் தம்பி.....சொல்ல வார்த்தைகள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கைப் பார்த்தால்!! :unsure:

நாங்கள் எழுதுவதை எல்லாம் கவிதை என்று சொல்லுறதை மூட்டை கட்டி வைக்க வேணும் என்று நினைக்கிறன் :lol:!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 63

மேடையில் பேசும்போது

பரந்த மனது..

விரிந்த கடல்...

திறந்த ஆகாயம்... என்று

தாராளமாகவே பேசுகிறேன்..

வீட்டுக்குள் நுழைந்தால்

கடுகின் அளவாய்..

கொலுவில் பொம்மையாய்...

பேசா மடந்தையாய் போகிறேன்..

புரட்சியாளன் ஆனாலென்ன..

பேச்சாளன் ஆனாலென்ன..-இல்

அவளின் ஆட்சிக்குள்..

அடிமை ஆண்தான் போல!..

சுட்டெரிக்கிறாயே சூரியனே..

என்று திட்டிவிட்டு..நிழலுக்காய்

மரத்துக்கு நன்றி சொல்லும்

மானிடா...அந்த..

நிழலுக்கு மூலம்..

மரமா...சூரியனா?...

பதினெட்டு வயது

நவரசம் நீயாக இருக்கலாம்..

ஆனால் காதல்ரசம்

மட்டும் உன்னிடம்..

கம்மியாக இருக்கிறது..

உனக்கு தேவையான

அளவு தந்து உதவ

தயாராக இருக்கிறேன்..

பெற்றுக்கொள்வாயா?...

நூறு மடங்கு

ஆசையை அடக்கமுடியாத

ஆண் மாட்டிக்கொள்வதும்..

ஆயிரம் மடங்கு

ஆசைகொண்ட பெண்

அடக்கிக்கொள்வதும்..

அகப்படாமலேயே..

தப்பிச்செல்வதும்..

பேராச்சரியங்கள்!.

சிரிப்பு மட்டும்

இல்லையென்றால்..

மனிதன் அருகில்

மனிதன் கூட

மரம்தான்..

சிரிப்பை..செயலாக்கிய

சித்தன் யார்?..

பாட்டுக் கேட்;கமாட்டாள்...

சினிமா பார்க்கமாட்டாள்..

நகைச்சுவைக்கும் சிரிக்கமாட்டாள்..

நல்ல சமையல் கூட ருசிக்கமாட்டாள்..

என் பாட்டி..அவளை

ஏன் பாட்டி என்றேன்..

தாத்தாவோடு அனுப்பி வைத்து

விட்டாளாம்.. அனைத்து

இன்பங்களையும்....

தொலைந்த வாழ்க்கை யெண்ணி

துயருறும் என் மூதாட்டி..

உன் தொலையாத காதல்..

என்னை அசர வைக்கிறது..

காதலில் ஆசையும் வைக்கிறது!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டெரிக்கிறாயே சூரியனே..

என்று திட்டிவிட்டு..நிழலுக்காய்

மரத்துக்கு நன்றி சொல்லும்

மானிடா...அந்த..

நிழலுக்கு மூலம்..

மரமா...சூரியனா?...

அழகான வரிகள்.

இப்படித்தான் பலசந்தர்ப்பங்களில் மனித வாழ்வில் மூலத்தை மறந்து விடுகிறோம்

Link to comment
Share on other sites

அழகான வரிகள்.

இப்படித்தான் பலசந்தர்ப்பங்களில் மனித வாழ்வில் மூலத்தை மறந்து விடுகிறோம்

ம்ம்... :rolleyes:

Link to comment
Share on other sites

ம்ம்... :D

அட..மாமாவின் கண்ணில் இருந்து கண்ணீர் துளி :D ..(அவரின் கண்ணீர் துளியும்)..சிந்தும் ஒரு கவி தூறல்..அது தான் அந்த துளியை ஏந்த ஓடி வந்தனான் பாருங்கோ.. :o

"என் மேல் விழுந்த

மழை துளியே

இத்தனை நாளா

எங்கிருந்தாய்" :o

எண்டு பாடுமளவிற்கு இருக்கிறது எங்கண்ட மாமவின்ட தூறள்கள் :o ..தொடரட்டும் தூறள்கள் மாமோய் அப்பப்ப வாரேன் என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 64

அம்மா

என்னைப் படைத்த

பெண் பிரம்மாவே..

உன் அன்புக்கு

ஈடில்லாத உலகிலே

அலைக்கழிக்கப்பட்டுக்

கொண்டிருக்கும் ஜீவனே..

சேவகம் செய்யவேண்டிய

உன் மகன் சித்தத்தில்

தினசரி குற்றவுணர்வு

குத்திக்கிழித்துக்கொண்டிரு

Link to comment
Share on other sites

தூறல் நாள் 65

நள்ளிரவின் அமைதிக்குள்

யார் விசும்பும் சத்தம்..

நாயகனே..யாரும்

அறியாத கண்ணீரோ அட்டா

ஆறாய் ஓடுகிறதே..

அவளையன்றி வேறொரு

பெண்ணை ஏற்றிடாத மனமோ..

அவளைத் தொட்ட பின்னர்

தொடர்ந்த வினையால்

விளைந்ததிந்த ரணமோ

அவளிடம் நீ பேச பல வழிகள் உண்டு

அவளிடம் நீ பேச பல மொழிகள் உண்டு

அவளிடம் நீ பேச உனக்கு உரிமையும் உண்டு

அவளுக்குமுன் மீது ஆசை உண்டு

அவளுக்கு உயிரில் கரைய பாசமுண்டு

அவளுக்கு உறவில் நனைய மோகம் உண்டு

இது என்ன லீலை காதலர்கள்

தம்மைத் தாமே தடுக்கவில்லை

தாகங்கொண்ட கொக்கு இரண்டும்

ஏனோ நாடவில்லை..

பிரிப்பதென்ன விதியோ..சதியோ..

மதிக்கூர்மை கொண்ட குழுக்களின்

செயலோ..சீற்றங்களோ..

அவள் அங்கே...

நீ இங்கே...

அழுவதை...துயர்

எழுவதை...காண்பதே

பெரு வதை..

பேசாதவனே... காதல் மூடா..

உன் ஆண்மைதான் குருடா..

பின்னிக்கொண்ட விரல்களை வெறுக்கிறாய்..

முத்தமிட்ட உதடுகளை சபிக்கிறாய்..

குலவிக்கொண்ட கோதையையும்..

கலவிகொண்ட இரவையும் தேடுகிறாய்..

அவள் நினைவோடு வாழகிறாய்..

உன் சுயத்தை தொலைத்துவிட்டாய்..

இல்லாத மறுஜென்மக் கனவுகள் கொண்டு

இப்போது முடியாததை எப்போது கேட்கிறாய்..

இருமனம் சேர்ந்தபின் திருமணம்தானே..

இடையில் இருப்பவர் தடைக்கல் மூடா..

வீரன்தானே விலக்கிப் போடா..

முட்டத்தெரியாத காளை-காதலில்

வெல்லமுடியாத கோழை

உன்னை நினைப்பவள்

உருகி வடிகிறாள்..

கூண்டில் கிளியென

குறுகிக்கிடக்கிறாள்...

கிளியை மீட்டு வாடா...

உன் வீரம் காட்டு தோழா!!

Link to comment
Share on other sites

தூறல் நாள் 66

நீயில்லாத

வாழ்க்கையை

நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை

என்று அவன் சொன்னான்..

அவள் சொன்னாள்..

எனக்கும்தான்...

நீயுள்ள

வாழ்க்கையை நினைத்துக்கூட

பார்க்கமுடியவில்லை என்று

ஒரு துறவியிடம்..

மனிதன் வசைக்கு உள்ளாவது எப்போதென்றால்...

கற்றதை தொழிலாக்காதவன்..

கட்டியவளை தாயாக்காதவன்..

பெற்றபிள்ளையை முறையாக வளர்க்காதவன்..

வாழ்வுமுறைப் பாதை விலகியவன்..

பஞ்சமகா பாதகங்களை புரிபவன்..

யாராயிருந்தாலும் ஊர் வையுமென்றார்..

சாமி தங்களைப்பற்றி என்றவுடன்

நானா வசைக்கு பயந்து துறவியான பிறவி என்றார்

நீ

நீல வானத்தை நிறைக்கிறாய்

நீண்ட சாலையை நிறைக்கிறாய்

வீட்டுக்கூரையை நிறைக்கிறாய்

வெற்று சுவரை நிறைக்கிறாய்

மலர்ந்த இமைக் காட்சியை நிறைக்கிறாய்..

மூடிய இமை முழுவதையும் நிறைக்கிறாய்

இப்போது பெண்ணே

நீ மட்டும் தெரியும் குருடனாக்கிவிட்டாய்!

அவள் மேனி காகிதமாம்..

அவன் விரைல்கள் எழுத்தாயுதமாம்..

அவள் சொல்கிறாள்..

"என்ன வேண்டும் எழுது-வரிகள்

எண்ணவேண்டும் எழுது"என

அவன் செயல்வீரன்..

எழுதஆரம்பித்துவிட்டான் எப்போதோ..

நிலவாய்

என் கனவுகளில் தினம் எழும்

என் கனவு தேவதையே..

இரவில் வருவது

நீ மட்டுமல்ல

பல சினிமா நடிகைகள் கூடத்தான்

பகலில் வா..

உன்னை மட்டும்

நிரந்தரமாக்குகிறேன்

உறவுக்கு பகை கடனாம்..

யார் சொன்னது..

ஊருக்கே பகை

காதலாக இருக்கும்போது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விகடகவி .................

தினசரி தூறல் நன்றாக உள்ளது .சோகம் சிலவும் தாகம் பலவும் மழையாக பொழிகிறது .

.தினமும் நனைய மிக்க ஆவலுடன் உள்ளோம்

நன்றி வணக்கமுடன்

நிலாமதி

Link to comment
Share on other sites

தூறல் நாள் 67

பெருமை பேசிக்கொண்டிருக்கும்

தமிழ்த் தாத்தா

உன் பேரன் தமிழ் மறந்ததேன் தாத்தா

என்றால்...

மகனை மேலே படிப்பானென்னு அனுப்பிவைத்தேன்..

அவன் தமிழை விற்பானென்பதை அறிந்திருக்கேன்..

என்றார்...

தாத்தா "ஐயையோ"என்கிறார்..

தந்தை"என்ன செய்வது"என்கிறார்..

தனயன்"அம்மி"என்கிறான்

கலப்பு மணங்களுக்குள்

கரைந்து போக

கலாச்சாரத்தைப் பற்றி

கவலையெதற்கு அம்மா

உன் பைந்தமிழே

பாதித் தமிழாய்

தேய்ந்துகொண்டிருக்கும் போது

வெள்ளைக்கார நாட்டில்

வேட்டி சட்டை

அவமானமா..பரவாயில்லை..

தமிழ்நாட்டில் தமிழ்

பேசுவதையே அவமானம்

என்கிறார்கள்..

பொங்கு தமிழ்

பானையில்..ஆங்காங்கே

ஏராளமான ஓட்டைகள்

அடைக்க ஆளில்லை

தமிழ்த்தாய் நெருப்பை..

பிள்ளையின்

அலட்சியப்போக்குகள்..

கசியும் நீராய்

அணைத்துக்கொண்டிருக்கிறது..

தமிழின் சுவை

அருமை அருமை

தமிழின் தொல்மை

பெருமை பெருமை

தமிழின் நிலமை

வறுமை வறுமை

தமிழை இரசிக்கும்

என் தமிழா....

நம் மொழியை கரையான்கள் போல

நம் அகதி நிலமை

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் அலைச்சல் நிலமை

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் அந்நிய தேவைகள்

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் அலட்சியப்போக்குகள்

அரித்துக்கொண்டிருக்கிறது

நம் மேலைத்தேய மோகங்கள்

அரித்துக்கொண்டிருக்கிறது

காப்பாற்றுங்கள்..நம் தாயின்

அடையாளத்தை ...

நம் தேசியத்தின்..

சின்னத்தை...

நம் பிறப்பின் பெருமையை

காப்பாற்றுங்கள்..

எப்படி...?

எப்படியாவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பு மணங்களுக்குள்

கரைந்து போக

கலாச்சாரத்தைப் பற்றி

கவலையெதற்கு அம்மா

உன் பைந்தமிழே

பாதித் தமிழாய்

தேய்ந்துகொண்டிருக்கும் போது

தினசரி தூரல்கள்

தினம் தினம்

சிந்தனைகளை

தூண்டுகிறது.

தூரல் கள் அழகு விகட கவி

Link to comment
Share on other sites

தினசரி தூரல்கள்

தினம் தினம்

சிந்தனைகளை

தூண்டுகிறது.

தூரல் கள் அழகு விகட கவி

நன்றி கபி

Link to comment
Share on other sites

தினசரி தூறல்களில் நனைய கொடுத்துவைக்கவில்லை என்று கவலை இன்றுடன் கலைந்தது. இன்று தெப்பமாக நனைந்துவிட்டேன்.

எனக்கு ஒரு சந்தேசகம் நீங்கள் விகடகவியா அல்லது கவிச்சுரங்கமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உங்கள் தூறல்கள் மிகவும் அருமை. தொடர்ந்தும் நனையக் காத்திருக்கிறேன்.பாராட்டுக்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.