Jump to content

தினசரி தூறல்கள்...


Recommended Posts

தூறல் நாள் 45

ஏகாந்தமும் ஆனந்தமும்

வந்தது..பெண்ணே

நீ வந்த பின்னால்

இந்த இரவுக்கு

மட்டும்..ஏனிந்த

அவசரம்..நான்

உன்னைக் கூட

வரும் நேரம்..

விரைந்து ஓடி விடுகிறதே..

கண்களின் கனிவை..

சிரிப்பின் தாய்மையை

பார்வையின் பரிவை

எல்லாம் பார்த்து

ஏமாந்து போகாதீர்கள்..

அவளுள்ளே..அழகான

இராட்சசி அமைதியாக

உறங்கிக்கொண்டிருக்கிறாள்!!

உன் அழகோவியத்தை

உன்னைக்கேளாமல்..

என் இதயச்சுவரில்.

மாட்டிக்கொண்டேன்..

உன் ஓவியம்

கனக்கத்தொடங்கியபின்

என்னிதயம்

வலுவிழந்து வலிக்கிறதே..

குணம்..

குப்பையானால்தான்..

பணம்..பையில் வருமாம்..

இல்லையே..

பணம் பையில் வந்தவுடன்..

குணமெல்லாம்

குப்பையாகிவிடுகிறதே!!

வலுவிழந்த கால்கள்

எண்ணி அழுகிறாயே..அன்பே..

காலமெலாம் உனை தோளில்

சுமப்பேன்..அன்பானவளே..

உன்னை சுமப்பதே என் சுகம்..

இல்லாததையெல்லாம் எண்ணி

உன் உள்ளத்தையும்..

ஊனப்படுத்திக்கொள்ளாதே..

Link to comment
Share on other sites

  • Replies 513
  • Created
  • Last Reply

தூறல் நாள் 46

நீக்கமற நிறைந்திருந்த

வண்ணப்பூக்களாய்...

வசந்தம் வீசிக்கொண்டிருந்த

திருமணவாழ்வைச் சிதறடித்தது

சின்னத்துளியாய்..எழுந்த

சந்தேகப்புயல்!..

விழுவதும்..எழுவதும்

வாழ்வாயிருந்தாலும்..

பிறரை வஞ்சித்து

வீழ்த்தாமல் எழுதலே

பெருவாழ்வு அன்றோ!!..

கடும்முள்மூடிய

பளாச்சுளை போல்..

கருத்த தோல்

போத்திய தங்கம்..

நான் என்பதை கண்டுபிடித்து

சொன்ன வித்தகி நீ!!

அன்று

சேற்றில் முளைத்தாலும்

செந்தாமரை மதிப்பிழப்பதில்லை..

ஆனால் தங்ககரண்டியோடு

பிறந்தும் தகரமாய்

இருக்கின்றாயே.. என்று

அரசரிடம் அர்ச்சனை

வாங்கிய இளவரசன்..

பின்னர் அரசன்..

வேறில்லை கதி..அதுவோ

விதிவழி..

இன்று...

குப்பையில் பிறந்து

கோடியில் புரண்டு..

நாட்டை ஆள்பவன்..

மகன் கேடியாயிருந்தாலும்..

அவனும் ஆளமுடிகிறது..

வேறிருந்தும் வழி.... இது

மக்கள் மதி!!

மனிதக்கண்கள் காணாமல்..

கோடிகோடியாய் அழகுகள்..

அடர்ந்த காட்டுக்குள்..

பூக்களாய்..செடிகொடியாய்..

அருவியாய்..ஓடையாய்..

கொட்டிக் கிடக்குமோ...

கிடக்கும்!!..யார் கண்டார்?..

ஒரு முறை திரும்பிப்பார்த்து...

இருமுறை கையசைத்து...

மறுமுறை கண்டபோது

மலர்த்திய வழிமடல்கள்..

மூடாமல்..விரிந்துநின்று

முழுமையாய்.. சிரித்து..

ஓடி வந்து.. கட்டிக்கொண்டு

"ஐய்.. மாம..மா..மாமா.."

என்றது மழலையாய்...

மனதைத் திருடிக்கொண்டு..

திறந்த ஜன்னல்..

கூதல் காற்று...

முழுநிலவு..

அதனை மூடாத முகில்கூட்டம்..

முற்றத்து மல்லிச்செடி...

அது அனுப்பிக்கொண்டிருக்கும்..

ஆளை மயக்கும் நறுமணம்..

சுகந்தம் மிக்க

சுகங்களையெல்லாம்..

உள் வாங்காமல்..

சுகந்தி விசும்பி

அழுதுகொண்டிருக்கிறாள்..

நாளை மணமேடையில்..

அவளிடத்தில் இன்னொருத்தி..

வாழவேண்டிய வாழ்வை..

பிறர் வக்கிரத்தால் தொலைத்து..

அழுதுகொண்டிருக்கிறாள்..

இன்னல் புகுந்த மன

ஜன்னல் மூடித்தான் இருக்குமோ..

ஈழத்தமிழர் இதயம் போல்!..

Link to comment
Share on other sites

கடும்முள்மூடிய

பளாச்சுளை போல்..

கருத்த தோல்

போத்திய தங்கம்..

நான் என்பதை கண்டுபிடித்து

சொன்ன வித்தகி நீ!!

ஆஹா கருத்த தோல் போத்திய தங்கத்தை கண்டுபிடிச்ச வித்தகி யாருங்கோ விகடகவி?

நல்லா இருக்கு தூறல்கள்

Link to comment
Share on other sites

வெண்ணிலா..என் கலரு தெரியும்தானே.. அல்டிமேட் கலரு :wub: ...அப்டில்லாம் கேட்கப்படாது. ^_^ .

தூறல் சிறிய இடைவெளிக்குப் பின் தொடரும்..

நன்றி

Link to comment
Share on other sites

வணக்கம் விகடகவி

இன்று தான் உங்கள் தூறல்களில் நனைய முடிந்தது.

சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

என் பாதங்களைக்

காக்க.. பாதி..

தேய்ந்த செருப்பே..உனக்கு

நான் கடமைப்பட்டிருக்கிறேன்.."

என்று மேடையில்..முழங்கும்..

புலத்துக் கவிஞனே..

ஊன் கரைத்து..

உனை வரைந்த தாய்..

ஊரில் உயிர்

கரைந்துகொண்டிருக்கிறாளாம்..

தெரியுமா..

எவ்வளவு யதார்த்தமான வார்த்தைகள். தொடருங்கள் தூறல்களை....

Link to comment
Share on other sites

தூறல் நாள் 47

பெண் விழிமேகங்கள்

தூவும் காதல் மழையில்..

நனைந்தேன்..அழகி

அவளிதழ் ஒத்தடம்

தரும்வரை தணியாமல்

ஒரு நோயாளியாய்

காத்திருப்புகளோடு!!..

உறவுகளைச் சேர்ப்பது

திருமணமாம்...முட்டாள் பேச்சு

பெண்டு(ஆட்டி) வந்ததும்

தனிக்குடித்தனம்..

அழைத்துப்போய்விடுகிறாள்!!..

அடி இவளே..

உன்னை எனக்குப் பிடிக்கும்தான்..

அதற்காக..உன்னைப்போல்

உன்; நாய்க்குட்டியையெல்லாம்

தூக்கி முத்தமிட

நான் தயாராக இல்லை!!

அவளுக்கும்

தேவதைக்கும்

சம்பந்தமிருக்கிறது

அழகாயிருக்கிறாள்...

அவளுக்கும்

இராட்சசிக்கும்

சம்பந்தமிருக்கிறது

இரங்காமலிருக்கிறாள்...

அவளுக்கும்

கடவுளுக்கும்

சம்பந்தமிருக்கிறது

கல்லாயிருக்கிறாள்....

அவளுக்கும்

எனக்கும்

சம்பந்தமிருக்கிறது

எதிர்வீட்டில் இருக்கிறாள்!!

என் மனைவி மீது

வெறுப்பாக இருக்கிறது

நான் எதைக் கிறுக்கினாலும்..

அழகு என்கிறாள்..

"கண்ணே..எவ்வளவுதான் என்

மனமேகங்கள் கவிமழை

பெய்தாலும்..இரசனையில்

நனையாத..நீ ஒரு

வெள்ளைத்தோல் எருமை"என்று

எழுதியிருந்தேன்..

"ஆகா..அருமை"என்றாள்

பாவி..பார்த்துவிட்டுத்தான்

சொல்கிறாள்..ஒருபோதும்

படித்துவிட்டுச் சொல்வதேயில்லைப்

போலும்..

எதிர்பார்ப்புகள்

ஏமாற்றங்கள்

நப்பாசைகள்..

நம்பிக்கைத்துரோகங்கள்

இவ்வாறிருந்த என்

காதல் வரலாற்றை

திருப்பி எழுதி

சுபமான ஜெயம்

போட்டவள் நீ!!!

ஆயிரம் பேர்

முன்னிலையில்..மேடையேறி

பாடல் சொல்லத் தயங்காத

நான்..உன்னெதிரே வந்து..

ஒரு வாரத்தை சொல்ல

உள்ளமும் உடலும்

உதறுகிறேன்..ஒரு

காதல் கோழையாகி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் விழிமேகங்கள்

தூவும் காதல் மழையில்..

நனைந்தேன்..அழகி

அவளிதழ் ஒத்தடம்

தரும்வரை தணியாமல்

ஒரு நோயாளியாய்

காத்திருப்புகளோடு!!..

அழகான வரிகள் விகடகவி

Link to comment
Share on other sites

தூறல் நாள் 48

ஊருக்குப் போய்..

பள்ளிக்கூடம் சென்ற

பாதைகளில் நடந்து...

முருகன் கோவில் வீதி

மணலில் அமர்ந்து..

மூலையில் இருந்த புளியமரத்தில்..

கொஞ்சம் சாய்ந்து...

அந்தக் காற்றை..

நன்றாய் இழுத்து சுவாசித்து...

கோவில் குளத்தில்..

ஐயருக்கு தெரியாமல்..

களவாய்க் குதித்து..

கும்மாளமிட்டு குளித்து..

திருட்டுத்தனமாய் சேலன் மாங்காயடித்து..

அரைத்த உப்பும். தூளும் தொட்டு

ஸ்ஸ்ஸ்ஸ்....அப்படி சுவைத்து..

இழந்து போன என்

தேசத்து சுகங்களை....

உயிரில் நுகர்ந்து

மறந்துபோன தேசத்துத்

தடங்களை வெற்றுக்

காலில் அளந்து...

தாய் மண்ணே...உன்னில்

தலை சாய்ந்து விழி

மூடமாட்டேனா..!!!

Link to comment
Share on other sites

விகடகவி உங்கள் தூறலைப் பார்த்த உடனே எனக்கும் சேலன் மாங்காயும் தூளும் உப்பும் சாப்பிடணும் போல இருக்கு. நல்ல நினைவுத்தூறல்

Link to comment
Share on other sites

தூறல் நாள் 49

சந்தோச சிறகுகளை

உல்லாசமாக விரித்தாலும்..காதலியே..

உயர உயர பறக்கும்போதுதான்..

உணர்கிறேன்.. அருகில்

நீயில்லாத குறையை..

மல்லாந்து படுத்துக்கொண்டு

முகட்டைக்கேட்டேன்..

எப்படா வருவாயென்று..

குளியலறைக் கண்ணாடியைக்

குட்டிக்கேட்டேன்...

எப்படா வருவாயென்று..

சுண்ணாம்புச்சுவரை

சுரண்டிக்கேட்டேன்

எப்படா வருவாயென்று..

என்னடா இவன்..

தனக்குத்தாளே பேசுகிறானே.. என்று

மற்றவர்கள் கிசுகிசுக்கிறார்கள்..

அவர்களிடம் சொல்லவா..

முகம் தெரியாத...

முகவரி தெரியாத..

அறிமுகம் இல்லாத..என்

அவளிடம்தான்

பேசிக்கொண்டிருக்கிறேனென்று!!!.

ஆயிரமாயிரம்..

ஆசைச்சொற்கள்..உதிர்த்த

உதடுகள்..அனைத்தையும்..

எரித்தது..ஒரு சந்தேகக்

தீச்சொற்கணையால்!!

அழகான..

பூமிப்பந்தில்..

நாளை நானும்

அவளும் காணமல் போகலாம்..

ஆனால் நீ..

மட்டும் நித்திய அழகுடன்

வாழ்வாய்..காதலே!!

ஏழு ஸ்வரங்கள்

இருந்தும் என்ன பயன்..

எட்டாவது ஸ்வரம்..

நீ ஏறாத மேடையில்!!..

கோடிப் பட்டாம்பூச்சிகள்

என்னை உரசிப்பறந்தன..

உன் சேலை உரசலில்..

Link to comment
Share on other sites

கவரிமான்..உங்கள் வாழ்த்துகள் கொண்டு

எனக்கு சவரி வீசிவிட்டீர்கள்.. நன்றி நன்றி நன்றி

Link to comment
Share on other sites

தூறல் நாள் 50

இருண்ட வானத்தை

அண்ணாந்து பார்த்து

தடதடவென இறங்கிய

மழைத்துளிகள்..என்னை

அறைவதனை..ஏற்றுக்

கொண்டேன்...என் குழந்தை

முகத்தில் தன்

பிஞ்சுவிரல்களால்..

தாளமிட்ட அந்த நொடி

சுகங்கள் மீள..மெல்ல

எட்டிப்பார்க்கிறது!..

ஆணின் இளமை..

காத்திருக்க தேயுமாம்...

பெண்ணின் இளமை

பார்த்திருக்க தேயுமாம்..

காதலின் இளமை மட்டும்..

கல்யாணமானவுடனே

தேய்ந்துவிடுகிறதே!!!..

நானாய்க் காதலித்தேன்..

அப்போதும் நான் துடித்தேன்..

அவள் பறந்து போனபோது...

பெண் அவளாய்க் காதலித்தாள்..

அப்போதும் நான்தான் துடித்தேன்..

காதலித்தவளே... கைவிட்டு சென்றபோது!..

அத்தை மகளே..

தண்ணீரிலே மிதந்தாலும்..

தாமரை இதழ்கள் மேல்

நீர்த்துளி ஒட்டுவதில்லை..

நீ தாமரைப்பூ.

நான் நீர்த்துளி..

இருக்கலாம்.அதற்காக

இப்படியா உருட்டி விடுவது?...

அவசரமாக..

ஓடிக்கொண்டிருக்கும்

உலகத்தில்..

அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும்

குழந்தையாகவே இருந்திருக்கலாம்..

இன்று தினமும்..

என்னை அலாரமும்...

ஆத்துக்காரியும்..

துரத்திக்கொண்டிருக்கத்

தேவையில்லை!!

Link to comment
Share on other sites

ஏன் எந்தன் மெத்தை முள்ளானதோ...

நினைவுகள் பாறாங் கல்லானதோ..

பாவம் இந்தப் பையனென்று பல்லி சொல்லுதோ...

பல்லி சொல்லும் நேரம் துக்கம் முட்டி மோதுதோ..

தமிழீழம் நம் தேசம் அங்கேதான் என் சுவாசம்...

இப்போது ..இங்கேது சுகவாசம்தானோ..

தாய் தங்கை முகத்தை நினைந்தழுதாய்...

தந்தையின் துயரை உணர்ந்தழுதாய்..

வார்த்தையிங்கே வரண்டதனாலே...

வலியையும் சமையையும் புதைக்கின்ற நெஞ்சே..

என்தேசத்தாயின் மடி தேடுதே...

ஊர்க்காற்றை கேட்டு மூர்ச்சையாகுதே...

மண்ணும் மரமும்...ஆலும் வேரும்..

என்றும் நினைவில் ஆட

இது பெரும் வாழ்வியல் சோதனை

தாயின் அழுகுரல் பேரிய வேதனை

காலங்கள் கடுகதியாய் போகின்றதே...உன்

கடமையேனும் செய்யச்சேருமாதாய் ஜீவனே...

பண்பாடு இங்கே திண்டாடுதே...

கற்காலம் நோக்கித் தானோடுதே...

ஆடைகுறைக்கும் பெண்களினாலே...

அலையும் ஆண்கள் அகதிகள் போல..

மதுபோதை நாடும் இளம்பிள்ளையே...

தாயாக ஆகும் சிறுமுல்லையே...

ஆடும் நதியில் வள்ளம்..

நாளும் எந்தன் உள்ளம்..

பூ நெஞ்சம் ஏற்குமோ புழுதியை

கண்ணாடி தாங்குமோ கறைகளை

யார் வந்து படகேற்றுவார்..

தப்பிச் செல்ல தாயின் தேசமே...

Link to comment
Share on other sites

என்ன விகடம் பாட்டா?

வாய் முணுமுணுக்கறாப்போல கிடக்கு.... அட ஆதி வாய்தான் முணுமுணுக்குது பாட்டை... உணர்வுகள் திண்டாடுகிறது. பாராட்டுக்கள் ஆமா எப்ப இவையெல்லாவற்றையும் இறுவட்டில் ஏற்றி இறுமாப்புக் காட்டப் போகிறீர்கள்?

Link to comment
Share on other sites

இறுமாப்பு எண்டால் என்ன எண்டே எனக்குத் தெரியாது :blink: ....எங்க ஆதி அடிக்கடி காணாமல் போறேள்...அறுபடுற வால் வளரும் வரைக்கும் மறைவா இருப்பியள் போல :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக..

ஓடிக்கொண்டிருக்கும்

உலகத்தில்..

அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கும்

குழந்தையாகவே இருந்திருக்கலாம்..

இன்று தினமும்..

என்னை அலாரமும்...

ஆத்துக்காரியும்..

துரத்திக்கொண்டிருக்கத்

தேவையில்லை!!

கவிஞரே! என்ன என் இல்லின் சாரளமூடாக நோக்கிப் புனைந்தீரோ அறியேன். அதும் அப்படியே.

இனிய அழகிய சாரல்கள் கவி. தொடரட்டும்! வாழ்த்துகள். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சுவி!..

எல்லா தூறலும்...(மெய்யாய் உளறலும்..)

என் உணர்வுகள் மட்டுமல்ல...

பார்த்த பார்வைகள்.. எதிர்வீட்டு சாளரங்கள்..

பழகிய இதயங்கள்..படித்த தமிழ்..

என்று பலவற்றால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்..

மனவோட்டக்கூத்துகள்.கும்மாளங

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.