Jump to content

ஈ வெ ராமசாமியின் உறவினரால் சிதைக்கப்படும் ஈழத்தமிழர் ஆதரவு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராடும் சக்திகளான விடுதலைப்புலிகளுக்கும் தமிழக மக்கள் ஆதரவு வழங்குவதை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ் இளங்கோவன், ஈ வெ ராமசாமி நாயக்கரின் நெருங்கிய உறவினர் ஆவார்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை 1991 இல் இருந்து அமுலில் உள்ள போதும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் தடவை மீள மீள புதிப்பிக்கப்படும். ஆனால் இவ்வாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டிய தடை இன்னும் புதிப்பிக்கப்படாத நிலையிலேயே இந்திய மத்திய உளவுப்படையும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரமுகர்களும் அதிமுக போன்ற கட்சியினரும் நேரடியாகவும் திமுக போன்ற கட்சியினர் மறைமுகமாகவும் தங்கள் அரசியல் நலனுக்காக அங்க புலி வருகுது இங்க புலி படகு வாங்குது என்று புரளிகளைக் கிழப்பி புலிகள் மீதான தடையை நீட்டிக்க முற்படுகின்றனர் என்று தமிழகத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

-------------

He also criticized Congress leader E.V.K.S. Elangovan's appeal to the Tamil Nadu government to arrest LTTE supporters in the state. Elangovan, is incidentally the grand-newphew of 'Periyar' E.V.Ramasamy Naicker,

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24022

------------

தமிழகத்தில் இன்னும் கன்னட ஈ வெ ராமசாமியை "தந்தையாக" "பெரியாராக" மதிப்பளிக்கின்ற போதும் அவரின் உறவினர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள கட்சிகள் சிலவற்றுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது ஈ வெ ராமசாமியின் வழியில் எவ்வாறு தமிழக தமிழ் மக்கள் பிறரால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களுக்காக புரட்சி பண்ணுவதாகக் கூறிக் கொண்டு தமிழர்கள் ஒற்றுமைப்படுவதையும் பிராந்தியத்தில் பலமாவதையும் முன்னர் திராவிடம் பேசி வஞ்சகமாக சிதைத்தது போல இப்போ மத்திய அரச விசுவாசம் பேசி சிதைக்கின்றனர் என்பதை இது அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது..!

ஆனால் தமிழக மக்களோ ஈ வெ ராமசாமி தமிழர்களுக்கு தனிநாடு கேட்டார் என்று அவர் திராவிட நாட்டை திராவிடர்களுக்காகக் கேட்டத்தை மாற்றி அவரைப் பெரியாராக்கி வைத்து சிலையும் வைக்க முனைகின்றனர்..! :lol:

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

தாயும் சேயும் ஆனாலும் .................. என்றொரு பழமொழி இருக்கிறது. ஆகவே தனிமனிதனாக தான் ஒவ்வொருவரையும் கருத வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் நீங்கள் கூறுவது 100 % உண்மை ! பெரியாரும் அவரது பேரன் இளங்கோவனும் தமிழரை ஏமாற்றிப் பிழைக்கும் தெலுங்கர்கள். இவர்கள் எப்போதுமே தமிழருக்குச் சார்பாக இருந்ததில்லை. பெரியார் சமூக சீர்திருத்தவாதியாக தன்னை அடையாளங்காட்டிக் கொண்டவரே ஒழிய தனிநாட்டுக்கான போராளியாக அடையாளங்காட்டிக் கொள்ளவில்லை. இளங்கோவன் தனது முழுமையான சுயரூபத்தைக் காட்டுகிறார், அவ்வளவுதான். அடிப்படையில் தெலுங்கர்களான இவர்களால் தமிழர்மேல் அநுதாபம் கொள்வதென்பது இயலாத காரியம்.

Link to comment
Share on other sites

ஏதோ கருணாநிதி மட்டும் திராவிடராக பிறந்து ஈழமக்களுக்கு 30 வருடங்களாக செய்ததை சொல்லுங்களேன் பெரியவர்களே தாய்மார்களே? இப்படியே பார்த்தால் விஜயகாந், வை.கோ ஒருவருமே தமிழர்கள் அல்ல.என்றாலும் எவ்வளவு தூரம் ஈழ போராட்டத்தை தன்பால் கொண்டுள்ளார்கள் என்பது உலகறிந்த உண்மை.

30 வருட கால போராட்ட உண்மை என்னவெனில் எவ்வளவு நண்பர்களை உருவாக்குகின்றோமென்பதே.

ஆகவே ஒரு சில தனிமனிதர்களால் பெரிதாக எதை சாதிக்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடம் தமிழ்ச்சேவை என்று சொல்லிச் சொல்லியே காலத்தைக் கடத்தப் பாக்கிறியள். இந்த 30 வர்ஷத்தில தமிழீழ தமிழருக்கு உருப்படியாக செய்த ஒரு வேலை சொல்லுங்கள் ? அறிக்கை விட்டதைத் தவிர ? தமிழ்செல்வனுக்காக கவிதை எழுதுவதால் மட்டும் எல்லாம் முடிந்து விடாது. எதிரிகளைச் சம்பாதிக்கிறோம் என்று சொல்லிச் சொல்லியே துரோகிகளை சேர்த்து வைத்திருக்கப் பார்க்கிறியள். மத்திய அரசு மாநில அரசு மேலும் ,மாநில அரசு மத்திய அரசு மேலும் குற்றம் சாட்டிக்கொண்டு மாறி மாறி தமிழர் அழிப்பில் ஈடுபடுவது தெரிந்துமா இந்த 30 வருடச் சேவை பற்றிக் கதை ?

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டு மக்களை தமிழர், தெலுங்கர், கன்னடர் என்று பிரித்துப் பேசுவது அறியாமை.

தமிழ்நாட்டில் வாழுகின்ற நாயுடுக்கள், நாயக்கர்கள் போன்றவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறி, அந்த மண்ணோடு கலந்து தமிழுணர்வோடு வாழ்ந்து வருபவர்கள்.

ஒவ்வொரு மனிதனுடைய உண்மையான இனம் எதுவென்று தேட முற்பட்டால், இன்றைக்கு யாருமே அவர்கள் நம்புகின்ற இனமாக இருக்க முடியாது.

மனித இனம் ஆபிரிக்காவில் உருவானதாக சொல்லப்படுகின்ற போது, எல்லோரும் ஆபிரிக்கர்கள் ஆகிவிடுவோம்.

"உண்மையான சுத்தமான இனம்" என்ற ஒன்று தற்பொழுது இல்லை.

தமிழை பேசி, தமிழுணர்வோடு, தமிழனாக வாழ்பவர்கள் அனைவரும் தமிழர்கள்தான். அவர்களின் முப்பாட்டார்கள் 500, 600 வருடங்களுக்கு முன்பு எங்கிருந்து வந்தார்கள் என்று ஆராய்பவன் முட்டாள்.

வைகோவின் முப்பாட்டனும் தெலுங்குதேசத்தில் இருந்து வந்தவர்தான். அதற்காக வைகோவை தெலுங்கன் என்று சொல்லிவிட முடியுமா? எத்தனை "சுத்தமான" தமிழர்களுக்கு வைகோ அளவிற்கு தமிழறிவு இருக்கிறது?

சரி, தலைப்பிற்கு வருவோம்.

இளங்கோவன் செய்வது வெட்கப்பட வேண்டிய விடயம். தமிழர்களுக்கா தன்னுடைய காலத்தை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார். அறிவற்று அடிமையாய் கிடந்த தமிழனை தட்டி எழுப்பியவர் தந்தை பெரியார். தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். ஈழத்திலோ, அல்லது வேறெங்கிலோமோ தமிழர்கள் போராடுகின்ற போது, அவர்களுக்கு ஆதரவாக இருக்கும்படியான பலமான தொண்டர் படையை உருவாக்கி விட்டவர் தந்தை பெரியார்.

ஆனால் வேதனைப்படும்படி தந்தை பெரியாரின் உறவினரான இளங்கோவன் தமிழர்களுக்கு எதிரியாக இருக்கிறார்.

இளங்கோவன் தன்னுடைய தாத்தா முறையான தந்தை பெரியாரை மதிக்காதது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. அவர் தன்னுடைய தாயுடனும் பேசுவது இல்லை. அவருடைய தாய் சுலோச்சனா சம்பத் அதிமுகவில் இருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்வார்கள்.

நல்ல ஒரு திராவிட பாரம்பரியத்தில் வந்த இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் இருந்து, பார்ப்பனியத்திற்கு சேவை செய்கிறார்.

ஆனால் இப்படியான சம்பவங்கள் பல நாடுகளில் உண்டு. தமிழர்களின் விடிவுக்காக பாடுபட்ட தந்தை செல்வாவின் மகனும் தமிழினத்திற்கு எதிரான வேலையைத்தான் செய்து வருகின்றார்.

மேலும் பிடல் காஸ்ரோவின் மகள், சதாமின் மருமகன்கள் என்று எதிரியோடு இணைந்து நிற்பவர்களுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது தமிழ்நாடு தமிழர்களுக்கு சொந்தமில்ல அது திராவிடர்களின் சொத்து. ஆனால் ஆந்திரா தெலுக்கருக்கும் கர்னாடகா கன்னடர்களுக்கு கேரளா மலையாளத்தவர்களுக்கும் சொந்தம்..! ஆக தமிழன் மட்டும் நாதியில்லாத பிடாரி..! இதே இதேதான் ஈ வெ ராமசாமியின் கொள்கையும்..! இதே இதேதான் எஸ் இளங்கோவனின் கொள்கையும்..!

இவர்கள் ஈழத்தையும் நாளைக்கு சிங்களவனுக்கும் சேர்த்து தாயகமாக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். ஏனெனில் சிங்களவனும் மனிதன் தானே..! அவன் மட்டும் என்ன வேறுக்கிரகவாசியா..??! அவனும் ஆபிரிக்க வழித்தோன்றல் தானே..! என்னே சித்தாந்தங்கள்.. நேரத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப இக்களத்திலேயே அடிக்கடி கொள்கைகளும் சித்தாந்தங்களும் மாறுது பாருங்க.. இந்தப் பச்சோந்தித்தனம் தான் தமிழன் என்ற நிலையை உலகில் நாம் இழக்கக் காரணம்..!

இன்றைய இனத்துவம் என்பதன் வரையறையின் கீழ் தமிழன் என்றொரு இனம் இருக்கா அவனுக்கு என்றொரு நிலம் இருக்கா இல்லையா.. இந்திய உபகண்டத்தில் இதை.. முதலில் தீர்மானியுங்கள். அடிக்கடி ஈ வெ ராமசாமியை பாதுகாக்க பச்சோந்திகளாகி தமிழர்களின் தனித்துவத்தன்மையை சீரழிக்காதீர்கள்..! :lol:

Link to comment
Share on other sites

நான் சொன்னது உங்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கின்றேன்.

தமிழைப் பேசி, தமிழனாக உணர்பவர்கள் தமிழர்கள். இதுதான் என்னுடைய கருத்து.

தமிழ்நாடு தமிழர்களுக்குத்தான் சொந்தம்.

தமிழ்நாட்டிலே தெலுங்கர்கள் உண்டு. கன்னடர்கள் உண்டு. அவர்கள் சிறுபான்மையினர். இவர்கள் தொடர்ந்தும் தெலுங்கையும், கன்னடத்தையும் பேசுகிறார்கள். தம்மை தெலுங்கர்களாகவும், கன்னடர்களாகவும் உணர்கிறார்கள்.

ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நாயக்கர்கள், களப்பிரர்கள் ஆட்சிக் காலங்களின் போது தமிழ்நாட்டிற்கு வந்து தமிழர்களாக மாறிய கோடிக் கணக்கான மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

அவர்களின் சாதிப் பெயரை வைத்துத்தான் அவர்கள், மற்றைய மொழிகளை சேர்ந்தவர்கள் என்று ஊகிக்க முடியும். மற்றையபடி அவர்கள் தமிழர்களாகத்தான் வாழ்கிறார்கள்.

அவர்களைப் பார்த்து "நீ தெலுங்கன், கன்னடன்" என்று சொல்வது இனவாதம்.

இன்றைக்கு தமிழ்நாட்டின் தென்பகுதியில் அதிகமானளவு நாயுடுக்களும், நாயக்கர்களும் வாழ்கிறார்கள். ஆகவே தமிழ்நாட்டின் தென்பகுதியில் தெலுங்கர்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று கொள்ள முடியுமா?

நீங்கள் சொல்வதன்படி பார்த்தால்தான் தமிழர்களுக்கு நிலம் இல்லாது போகும்.

500, 600 வருடங்களுக்கு முன்பு என்னவாக இருந்தார்கள் என்று ஆராய்ந்து, தமிழினத்தையும், தமிழ் மண்ணையும் கூறுபோடும் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்.

தமிழினத்திற்கு பெருமை சேர்த்த சேரர் பரம்பரை இன்றைக்கு மலையாளிகள் ஆகி விட்டது. அவர்களிடம் "நீ சில நூறு வருடங்களுக்கு முன்பு தமிழன், ஆகவே இப்பொழுதும் தமிழன்தான்" என்று சொல்ல முடியாது.

அதே போன்று தமிழ் மண்ணில் தமிழைப் பேசி, தமிழ் உணர்வோடு, தமிழர்களாக வாழ்பவர்களைப் பார்த்து "நீ சில நூறு வருடங்களுக்கு முன்பு தெலுங்கன், ஆகவே இப்பொழுதும் தெலுங்கன்தான்" என்று சொல்ல முடியாது.

அதுவும் தமிழினத்திற்காகவே வாழ்ந்த, வாழ்கின்ற தலைவர்களைப் பார்த்து இவ்வாறு சொல்வது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் விரோதமானது.

தமிழினத்தை கூறு போட்டு, பலவீனப்படுத்தும் வேலையை செய்து பார்ப்பனியத்திற்கு யாரும் துணை போக வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெலுக்கனை தெலுக்கன் என்று சொல்வது இனவாதமல்ல. அது அவர்களின் இன அடையாளத்தை தனித்துவப்படுத்துவது. கன்னடனை கன்னடன் என்பது இனவாதமல்ல அவர்களின் இனத்தை அது அடையாளப்படுத்துகிறது. சிங்களவனை சிங்களவன் என்பது அவனின் இனத்தை அடையாளப்படுத்துகிறது என்பது மட்டுமன்றி அவனின் இன அடையாளத்தை அங்கீகரிக்கின்றோம் என்பதும் தான் அர்த்தம்.

தமிழர்கள் தங்களை தமிழன் என்பதும் இனத்துவ அடையாளம் கருதியே அன்றி வேறல்ல. தமிழ் பேசுவதற்காக சிங்களவர்கள் தமிழர்களாகிட முடியாது. சிங்களம் பேசும் மலையக மக்கள் சிங்களவர்களாகிட முடியாது. அவர்கள் தமிழர்கள் தான்.

நீங்கள் உங்கள் உங்கள் வசதிக்கேற்பட இனத்துவ வரைவிலக்கணப்படுத்தலைச் செய்ய முடியாது.

தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து தமிழ் பேசும் பிற சிறுப்பான்மை இனத்தவர்களுக்காக தமிழர்கள் தங்கள் தனித்துவத்தை இழந்துதான் மதிப்பளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தமிழ்நாட்டில் தெலுங்கு வம்சாவளி தமிழ் பேசுவோர் இருக்கட்டும்.. கன்னடர் இருக்கட்டும்.. மலையாளம் பேசும் கேரளத்தவர் இருக்கட்டும் அவர்களுக்கான தனித்துவத்தை அவர்கள் பேணட்டும்.. தமிழ்நாட்டில் இருப்பதால் அவர்கள் தமிழர்கள் என்று இனங்காட்டப்படுதலே இனவாதம். அடுத்தவரின் இனத்துவ அடையாளத்தை தமிழ்நாட்டில் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதற்காக பறிக்க முற்படுவதே பேரினவாதம்..!

ஈ வெ ராமசாமி கன்னடனே. அவரைத் தமிழன் என்று இனங்காட்ட முடியாது. ஒருவேளை வைகோ கூட தெலுக்கரின் வழி வந்தவராக இருக்கலாம். அதற்காக அவர் தமிழர்களுக்கும் அவர்களின் போராட்டத்துக்கும் ஆதரவழிக்கக் கூடாது என்றில்லையே. எங்கோ பிறந்த சேகுவரா.. கியுப விடுதலைக்காகப் போராடிய போது எந்த இன அடிப்படையில் பங்களித்தார்..! அதற்காக அவர் தன்னைக் கியூபப் பிரஜையாக காட்டிக் கொள்ள கோரவில்லையே..!

ராமசாமி தமிழர்களை தமிழர்களாக இனங்காட்டிக் கொண்டு தமிழ்நாடு கேட்டிருப்பின் அவரை முன்னிலைப்படுத்தி தமிழர்கள் புகழாரம் சூட்டுவதில் நியாயம் இருக்கும்.

ஆனால் தமிழனின் நிலத்தில் நின்று கொண்டு திராவிடத்துக்கு கோசம் எழுப்பியதும் திராவிட தேசத்தை தமிழினனின் நிலத்தில் உருவாக்க நினைத்ததும் தான் தமிழினத் துரோகம் எங்கிறோம்.

ராமசாமி திராவிடம் பேசி தெலுக்கருக்கும் கன்னடருக்கு கேரளருக்கும் தனித்தனி நாடும் வாங்கி தமிழனுக்கு தமிழ்நாட்டையும் வாங்க கோரி இருப்பின் அது நியாயம். அல்லது நான்கு தேசங்களையும் ஒருங்கிணைத்து திராவிடம் என்ற பொது அலகின் கீழ் அவரவர் தனித்துவத்துடன் தென்னிந்திய தேசத்தை உருவாக்கி இருப்பின் அது ஏற்கக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் ராமசாமி தமிழகத்தில் நின்று கொண்டு திராவிட தேசத்தை தமிழகத்தில் நிறுவ நின்றது தமிழின தேசத்தை கபளீகரம் செய்யும் செயலே அன்றி வேறல்ல. கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளத்தவரும் தமக்கென்று நிலங்களைக் கொண்டிருக்க.. தமிழர்களுக்கு மட்டும் ஏன் திராவிட சாயம்..??!

வைகோ கூட தமிழகத்தில் நின்று தமிழர்களுக்காக குரலையென்ன தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கின்றார். அவரின் பூர்வீகம் வேறாக இருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடு தமிழினத்துக்கோ தமிழரின் பூர்வீக நிலத்துக்கோ ஆபத்தானதல்லாமல் தமிழரின் இன அடையாளத்தை அங்கீகரிக்க நிற்கின்றது. அந்த வகையில் வைகோவை தமிழர்கள் போற்றுதலும் விரும்புதலும் ஈ வெ ராமசாமிக்கு தந்தை .. பெரியார் போன்ற அநாவசியக் கெளரவமளிப்புச் செய்வது போன்றதல்ல..!

ஈ வெ ராமசாமி சாதி ஒழிப்பை செய்ய முற்பட்டிருப்பின் தமிழர்களிடத்தில் பிராமண சமூகத்தை பிரித்துக் காட்டி இருக்கக் கூடாது. அவர்களையும் தமிழர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு அவர்களையும் அரவணைத்துச் சென்றிருக்க வேண்டும். சாதி ஒழிப்பில் அவர்களின் பங்களிப்பையும் பெற்றிருக்க வேண்டும். அவர்களை எதிரிகளாக்கி பிற சாதிகளோடு மோதவிட்டு தமிழர்களைப் பிளவு படுத்தி இருக்கக் கூடாது.

அநாவசியமா பார்பர்னியத் திணிப்பை இதற்குள் செய்யாமல் மக்களை சிந்திக்க அனுமதியுங்கள்.

திராவிடம் பேசி தமிழனைப் பலவீனமாக்கி அதில் தமிழரின் பூர்வீகத்தையே கபளீகரம் செய்து இன்று கன்னடர்களாகவும் தெலுங்கர்களாகவும் மலையாளத்தாராகவும் அவரவருக்கு என்று எல்லை பெற்ற நிலப்பரப்புக்களை வைத்துக் கொண்டு அங்கு தங்களை தாங்களே ஆள ஆதிக்கம் செய்ய அனுமதித்துக் கொண்டு தமிழர்கள் மட்டும் தமிழர்களின் இனத்தனித்துவத்தைக் கூட அடையாளப்படுத்த முடியாதபடிக்கு இன்று இந்திய உபகண்டத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கு பார்பர்னியத்தை விட திராவிட மாயைதான் அதிகம் பங்காற்றியுள்ளது..!

தமிழ் பூர்வீகமுள்ள கன்னடர்களும் தெலுங்கர்களும் மலையாளத்தவரும் தனி இனமாகக் காட்சியளிக்க சேர சோழ பாண்டியன் என்று தென்னிந்தியாவையே ஆண்ட தமிழர் பரம்பரை பூர்வீகமிழந்து தமிழன் என்பதைக் கூட உச்சரிக்க முடியாதபடி திராவிடம் என்ற போர்வைக்குள் போட்டு மூடப்படுவதும் ஏன்..??! இதனால் காக்கப்பெற்ற தமிழ் தேசியம் என்பது என்ன...??! சிந்தியுங்கள்..!

பார்பர்னியத்தை விட திராவிடமே தமிழரின் இன அடையாளத்தனித்துவத்தை இன்று பறித்து நிற்கிறது..! தமிழன் தமிழனாக உலகில் காட்டப்பட வேண்டின் அவன் தனது பூர்வீகத்துடன் திராவிட மாயைக்குள் இருந்து வெளி வர வேண்டும். எப்படி தெலுங்கனும் கன்னடனும் மலையாளியும் தமிழ் பூர்வீகத்தில் இருந்து வந்திருப்பினும் திராவிடத்தை உச்சரித்துக் கொண்டு ஒரு பொதுமைப்பாட்டுக்குள் பதுங்கிக் கிடக்காமல் தமது தனித்துவத்தை காட்ட முனைகின்றனரோ அவர்களை விட பலமடங்கு தனித்துவ அங்கீகாரமுள்ள தமிழன் தான் தன் தனித்துவத்துடன் தமிழன் என்று வாழ வழி வகை செய்யப்பட வேண்டும். திராவிடம் என்ற பொதுப் பூச்சும் பேச்சு மேடையும் எனித் தமிழனுக்கு அவசியமில்லை. அதனால் தமிழன் இழந்தவை போதும் போதும்.

தமிழன் தமிழனாக தன்னை அடையாளப்படுத்துதல்.. தெலுக்கர்களுக்கும் கன்னடர்களுக்கும் மலையக்கத்தாருக்கும் வட இந்தியருக்கும் எதிரானதன்று. அது தமிழன் என்ற உலக இன இருப்பின் தனித்துவக் காப்பின் ஒரு அம்சமே அன்றி வேறல்ல..! அதற்கு உரிமைக்காகக் குரல் கொடுக்கும் எவரும் உதவலாம். அதில் தெலுங்கு கன்னடன் மலையாளத்தான் மராட்டியன் ஈழத்தான் என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் பங்களிக்கலாம். அதற்காக தமிழன் தனது தனித்துவத்தை மறைத்து திராவிடத்துள் நிற்க வேண்டும் என்ற அவசியமில்லை..! தேவைப்பாடும் இல்லை. அப்படி நிற்பது தமிழர்களுக்கே ஆபத்தானதாக அமையும்.

Link to comment
Share on other sites

இப்படி பார்க்க போனால் பாரதியும் தமிழர் அல்லவே. இவர் பார்ப்பாண இனத்தை சேர்ந்தவர். தமிழை மூச்சாக கொண்டு செயல்படும் தமிழர்களை பார்த்து நீ தமிழன் இல்லை என்று சொல்வது வேடிக்கையானது. எட்டப்பர்கள் இப்படித்தான் எழுதுவார்கள்.

இலங்கையில் வசிக்கும் சிங்கள்வர்களும் தமிழர்களே. புத்த சமயத் தமிழர்கள் தங்கள் மதத்தை காப்பாற்றுவதற்காக பாளியை தமிழுடன் கலந்து சிங்கள்தை உருவாக்கினார்கள்.

Link to comment
Share on other sites

நான் சொல்வதை சரியாகப் படித்துப் பாருங்கள்

நாம் யாரையும் "நீ தமிழன், நீ தெலுங்கன்" என்று வரையறுக்க முடியாது.

ஒரு மண்ணில் 500 வருடங்களாக வாழ்பவர்கள், அந்த மண்ணின் தாய்மொழியை தமது மொழியாக வரித்துக் கொண்டவர்கள், அந்த மண்ணின் இனமாக உணர்பவர்களை அங்கீகரிக்க வேண்டும்.

அதை விடுத்து, நீ எம்மவன் இல்லை என்று சொல்வது நாசிசவாதம்.

அவர்கள் தெலுங்கர்களாக இருக்கப்போகின்றார்களா, அல்லது தமிழர்களாக இருக்கப் போகின்றார்களா என்பது அவர்களின் முடிவு.

அவர்கள் தமிழர்களாக வாழ்வதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே போன்று அவர்கள் தெலுங்கர்களாக வாழ்ந்தால், அதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

இதில் எதை மறுத்தாலும், அது நாசிசவாதம்.

தந்தை பெரியார், வைகோ போன்றவர்கள் தமிழ் மண்ணோடு கலந்து தமிழர்களாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள்.

அவர்களைப் பார்த்து "நீ தெலுங்கன்" என்று சொல்லும் உரிமையோ, அருகதையோ யாருக்கும் இல்லை.

இனவாத சிந்தனையை விடுத்து, உலகத்தைப் பாருங்கள். எல்லாத் தேசிய இனங்களும் சேர்ந்து, அமெரிக்கர் என்ற தேசிய இனம் உருவானதையும் சிந்தித்துப் பாருங்கள்.

ஒரே இனமாக இருந்து காலவோட்டத்தில் தமிழர், மலையாளிகள், தெலுங்கர், கன்னடர் என்று ஒரு இனம் பிரிந்து போன வரலாற்றையும் பாருங்கள்

ஒரு இனத்தின் முடிவை தீர்மானிப்பது நானோ நீங்களோ அல்ல. காலம்தான் அதைச் செய்கிறது.

தமிழினத்தில் இருந்து பல கோடி மக்களை தனி இனங்களாக பிரித்த வரலாறு, அதே இனங்களில் இருந்து இலட்சக் கணக்கான மக்களை மீண்டும் தமிழர்களாக வாழ வழி செய்திருக்கிறது.

இதை யாராலும் மறுக்க முடியாது.

தந்தை பெரியார் தமிழ்நாடு கேட்டார் என்பதுதான் வரலாறு. பார்ப்பனர்கள் எழுதுகின்ற புத்தகங்களை படித்து பொய்யான செய்திகளை நம்பாது, உண்மையையும் அறிந்து கொள்ளுங்கள்.

தந்தை பெரியார் தமிழர்களுக்காக வாழ்ந்த ஒரு தலைவர். தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பியவர் தந்தை பெரியார். அதற்காக தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்தவர் தந்தை பெரியார்.

அந்த உணர்வோடுதான் அவருடைய தொண்டர்கள் தமிழனுக்கு ஒரு நாடு உருவாக வேண்டும் என்று எமக்காக குரல் கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களைப் பார்த்து "நீ தெலுங்கன்" என்று சொல்லும் உரிமையோ, அருகதையோ யாருக்கும் இல்லை.

தமிழ்நாட்டில் வாழ்ந்திருப்பினும் ராமசாமியே தன்னை கன்னடன் என்று அடையாளப்படுத்தும் போது அவரும் நாசியவாதி ஆகிறாரா..??! :rolleyes::wub:

ராமசாமி கன்னடனே அதில் அவரெ பெருமைப்படுகிறார். ஆனால் அவரைத் தமிழன் ஆக்கி.. தந்தையாக்கி பெரியாராக்கி.. கேவலம் தமிழன் பாதை பூஜை செய்வது.. அநாவசியமானது. தேவையற்றது.

வைகோ தன்னைத் தமிழன் எங்கிறார். அந்த வகையில் அவர் தமிழனாக இருக்கட்டும். அதில் தவறே இல்லை..! அவர் தமிழன் என்று மட்டும் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.. உலகத் தமிழினத்தின் இருப்புக்காகவும் உழைக்கிறார். எனவே அவர் தமிழனாக தன்னை இனங்காட்டிக் கொள்வதால் தமிழருக்கு எந்தப் பாதகமும் இல்லை..! மாறாக அவர் தமிழினத் தொண்டனாகப்படுகிறார்.

ராமசாமி அப்படியானவர் அன்று. அவர் தன்னைக் கன்னடனாக இனங்காட்டிக் கொண்டு திராவிடத்தை முதன்மைப்படுத்திக் கொண்டு தமிழினத்தை பிராமண அடையாளமிட்டு சாதியமிட்டு பிளவுபடுத்தி சீரழிப்பதை கடமையாகக் கொண்டிருந்தவர். அவரை வைகோவோடு மற்றும் இதர தலைவர்களோடு சமன் செய்ய முற்படுதல் மோசமான செயல்..!

ஒருவரின் கொள்கையை ஏற்பதும் விடுவதும் வேறு. ஒருவர் கொண்ட கொள்கைக்காக அவரை தமிழனாக்குவது முழு முழு... மு .... தனம்..!

தமிழ்நாட்டில் வாழ்ந்ததற்காக தமிழன் ஆகிட முடியாது.. மனிதன் என்பவன் கூட தமிழன் ஆக வேண்டின் தமிழன் என்பதற்கான இனத்துவ அடையாளத்துக்கு உரிமையுள்ளவனாக இருக்க வேண்டும்.

தன்னைத் தமிழன் என்று அடையாளம் காட்ட விரும்பாத கன்னட ராமசாமியை வலுக்கட்டாயமாக தமிழன் ஆக்குவது அவரின் இனத்துவ உரிமையைப் பறித்து தமிழ் பேரினவாதம் பேசி அவரை அவரின் திராவிட மூட்டைக்குள் அடைப்பதாகும். இதுவே நாசியம்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராடும் சக்திகளான விடுதலைப்புலிகளுக்கும் தமிழக மக்கள் ஆதரவு வழங்குவதை தீவிரமாக எதிர்த்து வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ் இளங்கோவன், ஈ வெ ராமசாமி நாயக்கரின் நெருங்கிய உறவினர் ஆவார்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை 1991 இல் இருந்து அமுலில் உள்ள போதும் இரண்டு ஆண்டுகளுக்கு ஓர் தடவை மீள மீள புதிப்பிக்கப்படும். ஆனால் இவ்வாண்டில் புதுப்பிக்கப்பட வேண்டிய தடை இன்னும் புதிப்பிக்கப்படாத நிலையிலேயே இந்திய மத்திய உளவுப்படையும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரமுகர்களும் அதிமுக போன்ற கட்சியினரும் நேரடியாகவும் திமுக போன்ற கட்சியினர் மறைமுகமாகவும் தங்கள் அரசியல் நலனுக்காக அங்க புலி வருகுது இங்க புலி படகு வாங்குது என்று புரளிகளைக் கிழப்பி புலிகள் மீதான தடையை நீட்டிக்க முற்படுகின்றனர் என்று தமிழகத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

-------------

He also criticized Congress leader E.V.K.S. Elangovan's appeal to the Tamil Nadu government to arrest LTTE supporters in the state. Elangovan, is incidentally the grand-newphew of 'Periyar' E.V.Ramasamy Naicker,

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24022

------------

தமிழகத்தில் இன்னும் கன்னட ஈ வெ ராமசாமியை "தந்தையாக" "பெரியாராக" மதிப்பளிக்கின்ற போதும் அவரின் உறவினர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள கட்சிகள் சிலவற்றுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இது ஈ வெ ராமசாமியின் வழியில் எவ்வாறு தமிழக தமிழ் மக்கள் பிறரால் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. தமிழர்களுக்காக புரட்சி பண்ணுவதாகக் கூறிக் கொண்டு தமிழர்கள் ஒற்றுமைப்படுவதையும் பிராந்தியத்தில் பலமாவதையும் முன்னர் திராவிடம் பேசி வஞ்சகமாக சிதைத்தது போல இப்போ மத்திய அரச விசுவாசம் பேசி சிதைக்கின்றனர் என்பதை இது அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது..!

ஆனால் தமிழக மக்களோ ஈ வெ ராமசாமி தமிழர்களுக்கு தனிநாடு கேட்டார் என்று அவர் திராவிட நாட்டை திராவிடர்களுக்காகக் கேட்டத்தை மாற்றி அவரைப் பெரியாராக்கி வைத்து சிலையும் வைக்க முனைகின்றனர்..! :rolleyes:

பெரியாரோ, பெரியாரின் கட்சியோ ஈழத்தமிழர்களுக்கு எதிரானது என்று நிரூபிகக முடியாத இயலாமை, பெரியாரின் உறவு வழியில் தேடி நரிகளைக் கண்டு பிடிக்கின்றார்கள், மாமேதைகளுக்கு அசடர்கள் பிள்ளைகளாக வந்து வாய்பது இயற்கையின் விதியில் ஒன்றும் குற்றமாகப் கொள்ளப்படுவதில்லையே!

ஒரே குடும்பத்தில் தம்பி துரோகியாகவும், தமயன் தியாகியாகவும் இருப்பது அதிசயமான ஒன்றா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே குடும்பத்தில் தம்பி துரோகியாகவும், தமயன் தியாகியாகவும் இருப்பது அதிசயமான ஒன்றா?

இப்படி இருப்பது ஆபத்துக் குறைவு. பனங்காட்டு நரியாக எஸ் இளங்கோவன் வெளிப்படும் போது ஆட்டுத்தோல் போர்த்திய குள்ள நரி ராமசாமியையும் இனங்காட்டுதல்... தவறன்று..!

எம் ஜி ஆரின் பெயரைக் கட்சிக்கு வைச்சிட்டா அவரெல்லாம் எம் ஜி ஆர் ஆகிடுவாரா என்ன..??! அதேபோல் ராமசாமியின் பெயரில் கட்சி வைத்திருப்பதற்காக அவர்கள் எல்லோரும் ஆட்டுத் தோல் போர்த்திய குள்ளநரிகள் என்பதல்ல அர்த்தம்..!

சில கொள்கை ஈடுபாடு பெயரை முன்னிலைப்படுத்துகிறதே அன்றி வேறல்ல. ராமசாமியை கொள்கை அளவில் போற்றும் நெடுமாறன் ஐயா தமிழ் தேசியக் கட்சி நடத்திறார். திராவிடத் தேசியக் கட்சியல்ல..! இப்படி பல வேறுபாடுகள் உள்ளன.. பெயருக்குப் பின்னாடி..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிப்பென்பது ஒருவர் மீது வைப்பதற்கு மிகப்பெறுமதியான காரணமாக 'தமிழனாக இருக்கவேண்டும்' என்று சொல்வதைப் போல இருக்கின்றது இந்தவாதம்.

பெரியார் என்ற வரலாறு தமிழ் இனத்தின் பகுத்தறிவு மீது மண்டிக்கிடந்த இடுட்டை விரட்ட வந்த ஒளி அதனாலேயே நாம் அவரைப் போற்றுகின்றோம்.

போற்றுதல்களுக்கு தகுதியாக அவர் தமிழனாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பென்பது ஒருவர் மீது வைப்பதற்கு மிகப்பெறுமதியான காரணமாக 'தமிழனாக இருக்கவேண்டும்' என்று சொல்வதைப் போல இருக்கின்றது இந்தவாதம்.

பெரியார் என்ற வரலாறு தமிழ் இனத்தின் பகுத்தறிவு மீது மண்டிக்கிடந்த இடுட்டை விரட்ட வந்த ஒளி அதனாலேயே நாம் அவரைப் போற்றுகின்றோம்.

போற்றுதல்களுக்கு தகுதியாக அவர் தமிழனாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமானது.

தேவன், என்னைப் பொறுத்தவரை ராமசாமியின் கொள்கைகள் தெளிவற்றவை.. தமிழ் மக்களை பிரித்தாளும் நோக்கங்களோடும் செயற்பட உதவுகின்றன.. தமிழரின் தேசிய அடையாளங்களை திராவிட முலாமிடுகின்றன என்பவை போன்ற இன்னோரென்ன காரணங்களால் உங்களில் இருந்து நாம் அவரின் கொள்கைகைகள் தொடர்பில் ஏற்றுக் கொள்வதில் இருந்து விலகிச் செல்கின்றோம்.

இங்கு நாம் முதன்மைப்படுத்துவது ராமசாமியின் கொள்கைகளை ஏற்கின்றோம் என்பதறாக கன்னடன் ஆக தன்னை இனங்காட்ட விரும்புபவரின் உரிமையைப் பறித்து அவரைத் தமிழனாக்குவதும் தமிழ் தேசியவாதி ஆக்குவதும்.. தனித் தமிழ்நாட்டின் முன்னோடி ஆக்குவதையுமே..!

இப்போது அதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மற்றும்படி ராமசாமியை தமிழனாக்க நான் எப்போதுமே முனையவில்லை..! அதையுமே எதிர்த்து வருகின்றேன்.! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி இருப்பது ஆபத்துக் குறைவு. பனங்காட்டு நரியாக எஸ் இளங்கோவன் வெளிப்படும் போது ஆட்டுத்தோல் போர்த்திய குள்ள நரி ராமசாமியையும் இனங்காட்டுதல்... தவறன்று..!

எம் ஜி ஆரின் பெயரைக் கட்சிக்கு வைச்சிட்டா அவரெல்லாம் எம் ஜி ஆர் ஆகிடுவாரா என்ன..??! அதேபோல் ராமசாமியின் பெயரில் கட்சி வைத்திருப்பதற்காக அவர்கள் எல்லோரும் ஆட்டுத் தோல் போர்த்திய குள்ளநரிகள் என்பதல்ல அர்த்தம்..!

சில கொள்கை ஈடுபாடு பெயரை முன்னிலைப்படுத்துகிறதே அன்றி வேறல்ல. ராமசாமியை கொள்கை அளவில் போற்றும் நெடுமாறன் ஐயா தமிழ் தேசியக் கட்சி நடத்திறார். திராவிடத் தேசியக் கட்சியல்ல..! இப்படி பல வேறுபாடுகள் உள்ளன.. பெயருக்குப் பின்னாடி..! :rolleyes:

பெரியாரின் பெயரில் நிகழும் அரசியல் தெருக்கூத்துக்களை நான் அறிவேன். அவற்றை விடுவோம். இப்போது பெரியாரின் கொள்கை இவை மனிதாபிமானத்துக்கு ஆகாதவை என்று இனம் காட்டுங்கள் அவற்றைப் பற்றி ஆராய்வது உபயோகமாய் இருக்கும்.

ஈழத்தில் பெரியார் கொள்கைக்கு தேவை அதிகம் இருக்கவில்லை அதனால் அவரின் கடவுள் மறுப்புக்கொள்கை மட்டும் அவதானிக்கப்படுகின்றது என நினைக்கின்றேன்.

தன் உணர்வுக்கு மனிதன் என்ற மதிப்பு கிடைக்காத போது, பதிலுக்கு எத்துணை வசதிகள் தரப்பட்டாலும் அந்த சூழலை எதிர்த்து எந்த அஸ்திரத்தையும் பிரயோகிக்கும் உரிமையை அவனுக்கு வளங்கவேண்டும். எனவே அதை வாங்கிக் கொடுக்கும் முகமாகவே ஒரு அஸ்திரமாக கடவுள் மறுப்புக்கொள்கையை விவகாரமாகவே பாவிக்க வேண்டிய சூழ்நிலை பெரியாருக்கு ஏற்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் பெயரில் நிகழும் அரசியல் தெருக்கூத்துக்களை நான் அறிவேன். அவற்றை விடுவோம். இப்போது பெரியாரின் கொள்கை இவை மனிதாபிமானத்துக்கு ஆகாதவை என்று இனம் காட்டுங்கள் அவற்றைப் பற்றி ஆராய்வது உபயோகமாய் இருக்கும்.

ஈழத்தில் பெரியார் கொள்கைக்கு தேவை அதிகம் இருக்கவில்லை அதனால் அவரின் கடவுள் மறுப்புக்கொள்கை மட்டும் அவதானிக்கப்படுகின்றது என நினைக்கின்றேன்.

ஒருவனுக்கு மனிதன் என்ற மதிப்பு கிடைக்காத போது, பதிலுக்கு எத்துணை வசதிகள் தரப்பட்டாலும் அந்த சூழலை எதிர்த்து எந்த அஸ்திரத்தையும் பிரயோகிக்கும் உரிமையை அவனுக்கு வளங்கவேண்டும். எனவே அதை வாங்கிக் கொடுக்கும் முகமாகவே ஒரு அஸ்திரமாக கடவுள் மறுப்புக்கொள்கையை விவகாரமாகவே பாவிக்க வேண்டிய சூழ்நிலை பெரியாருக்கு ஏற்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

எந்த அறிவியல் அடிப்படையும் அற்று எழும் பகுத்தறிவு கடவுள் மறுப்புக் கொள்கைகளை நான் ஏற்க மாட்டேன்..! ராமசாமியின் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது கூட பிராமண சமூக எதிர்ப்பு என்பதன் கீழும் தனது அரசியலுக்கு பிராமண சமூகம் தந்த தடைகளால் எழுந்த கோபத்தின் மூலமுமே தீவிரமாகிறதே தவிர சமூக அக்கறை என்பது பின்னாடி இணைப்புப் பெற்ற ஒன்று..!

கடவுள் மறுப்பை அறிவியல் மயப்படுத்தவோ சமூக மயப்படுத்தவோ தவறிவிட்டார்கள். கடவுள் மறுப்பை கட்சி அரசியலாக்கி சமூக (பிராமண சமூகத்துக்கு எதிராக) வெறுப்புணர்வை வெளிக்காட்டவே உபயோகித்து வருகின்றனர். இதை பிரிவினையற்ற ஏற்றத்தாழ்வற்ற ஒற்றுமையுள்ள சமூகம் என்பதை விரும்பும் எந்த நடுநிலை மனிதனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்..!

கடவுளின் பெயரால் அமைந்த மூடநம்பிக்கைகளைக் களைதல்.. கடவுளின் பெயரால் மக்களைச் சிந்தனையற்றவர்களாக செயற்பட தூண்டல் கடவுளின் பெயரால் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் பேணல் போன்ற விடயங்களைக் களைய கடவுள் மறுப்பு அவசியமன்று. அதற்கு சமூக அறிவியல் விழிப்புணர்வும் கல்வியூட்டலுமே அவசியம்.

கடவுளை ஏற்பதையும் விடுவதையும் மக்கள் தங்கள் அறிவியல் மற்றும் கல்வியியல் சார்ந்த சுய சிந்தனைக்குரிய பகுத்தறிவின் மூலம் பெற வேண்டுமே தவிர அடுத்தவரின் கருத்துத் திணிப்பினால் அல்ல..!

கடவுள் என்பதன் அடிப்படையில் சமூக நலனைப் பேணத்தக்க மெய்யியல் அறிவை ஊட்டுதல் தவறன்று. அது மூடநம்பிக்கைககளை வளர்ப்பதில் இருந்தும் தொடர்வதில் இருந்தும் மக்களை சிந்தனையற்றவளாக்குவதில் இருந்தும் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை புகுத்துவதில் இருந்தும் பாதுகாக்கும் வகையில் அமைந்திருத்தல் வேண்டும்..!

இதனால் ராமசாமியின் 100% கடவுள் மறுப்பு, ராமசாமியின் பகுத்தறிவுப் பிரச்சாரங்கள் தொடர்பில் என்னால் அறிவியல் பூர்வமான அணுகுமுறைகளை மக்கள் பெறுகின்றனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..!

அதனால் அவற்றை நிராகரித்துவிட்டு அதற்குப் பதிலாக மக்களை அறிவியல் மற்றும் சமூகக் கல்வி மூலம் சுயமாக சிந்திக்கத் தூண்டுதலும் மெய்யியல் கல்வி மூலம் சமூக ஒழுக்கத்தை விதைப்பதும் சாலச் சிறந்தது என்பதை நான் முதன்மைப்படுத்துகின்றேன்..!

இதுதான் எனக்கும் இங்கு ராமசாமியின் கடவுள் மறுப்பு பகுத்தறிவு என்பவற்றை திணிக்க முயல்வோருக்கும் இடையில் கருத்துமுரண்பாட்டுக்கான காரணமே அன்றி வேறல்ல..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த அறிவியல் அடிப்படையும் அற்று எழும் பகுத்தறிவு கடவுள் மறுப்புக் கொள்கைகளை நான் ஏற்க மாட்டேன்..! ராமசாமியின் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது கூட பிராமண சமூக எதிர்ப்பு என்பதன் கீழும் தனது அரசியலுக்கு பிராமண சமூகம் தந்த தடைகளால் எழுந்த கோபத்தின் மூலமுமே தீவிரமாகிறதே தவிர சமூக அக்கறை என்பது பின்னாடி இணைப்புப் பெற்ற ஒன்று..!

கொள்ளமாட்டான்..!

கடவுளின் பெயரால் அமைந்த மூடநம்பிக்கைகளைக் களைதல்.. கடவுளின் பெயரால் மக்களைச் சிந்தனையற்றவர்களாக செயற்பட தூண்டல் கடவுளின் பெயரால் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் பேணல் போன்ற விடயங்களைக் களைய கடவுள் மறுப்பு அவசியமன்று. அதற்கு சமூக அறிவியல் விழிப்புணர்வும் கல்வியூட்டலுமே அவசியம்.

:rolleyes:

ஒருவனுடைய நம்பிக்கை கடவுள் என்று வணங்குகின்ற ஒன்றை செருப்பால் அடித்து இம்சை செய்வது என்பது, பண்பாடான உலகின் எந்த மூலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல்தான் நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் ஒரு சந்ததியை மனிதனாகப் பிறந்தும் மிருகதரத்தில் உள்ள ஒரு வாழ்கையை வாழ நிர்ப்பந்திக்கின்ற கொடுமைக்குள் இருந்து விடிவைத்தேடிக் கொடுக்கின்ற முயற்சி மேல் உள்ள பாவத்தைவிட மேலான பாவத்தை செய்வது கூட முற்போக்கான சிந்தனை உடையவர்களுக்கு உடன்பாடாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

பெரியார் தன்னை கன்னடன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் அல்ல.

பெரியாரிர் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி, மக்கள் எழுச்சியை உருவாக்கிய போது, அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் அவரை "தெலுங்கர்" என்று மக்கள் மத்தியில் சித்தரிக்க முயன்றனர்.

அப்பொழுது அவர் தன்னுடைய முன்னோர்கள் கன்னடத்தை சேர்ந்தவர்கள் என்பதை சொன்னார்.

அவரை கன்னடர் என்று சொல்லியிருந்தால், சில வேளைகளில் அவர் தன்னை தெலுங்கர் என்று பதில் சொல்லியிருப்பார்.

அவருடைய இந்தக் கூற்று சிலருடைய அர்த்தமற்ற வசைபாடலுக்கு பதிலாகத்தான் இருந்தது.

மற்றையபடி தந்தை பெரியார் என்றைக்கும் தன்னை "கன்னடன்" என்று பிரகடனப்படுத்தியவர் அல்ல.

தமிழினம் சிறக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு வாழ்ந்த தமிழினத் தலைவர் அவர். தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று போராடிய தலைவர் அவர்.

அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தமிழினத்தை அழிக்க முனையும் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற பெரும் தலைவர்.

பெரியாரின் காலத்தில் தமிழினத்திற்கு எதிராக நின்ற அனைத்தையுமே தந்தை பெரியார் எதிர்த்தார்.

ஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பனிய சிந்தனையை காவும் சில வேளாள மேலாதிக்க வாதிகளும் தந்தை பெரியார் மீது இன்றைக்கும் அவதூறு பரப்புகிறார்கள்.

பெரியாரின் சிந்தனை பரவி "அடித்தட்டு மக்கள்" முன்னேறி விடுவார்களோ என்ற பயம் இவர்களுக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனுடைய நம்பிக்கை கடவுள் என்று வணங்குகின்ற ஒன்றை செருப்பால் அடித்து இம்சை செய்வது என்பது, பண்பாடான உலகின் எந்த மூலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயல்தான் நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் ஒரு சந்ததியை மனிதனாகப் பிறந்தும் மிருகதரத்தில் உள்ள ஒரு வாழ்கையை வாழ நிர்ப்பந்திக்கின்ற கொடுமைக்குள் இருந்து விடிவைத்தேடிக் கொடுக்கின்ற முயற்சி மேல் உள்ள பாவத்தைவிட மேலான பாவத்தை செய்வது கூட முற்போக்கான சிந்தனை உடையவர்களுக்கு உடன்பாடாகவே இருக்கும்.

முற்போக்கு என்பதை நான் முரண்பாடாகச் செய்தல் என்பதாக கருதுவதில்லை. முற்போக்கு என்பது ஒரு சமூகத்தை குறித்த விடயம் தொடர்பில் அறிவு மயப்படுத்தி அதன் சுயசிந்தனையின் பால் மாற்றங்களை உண்டு பண்ணுதல்.. என்பதாகவே கருதுகின்றேன்.

எனவே கடவுள் சிலைக்கு செருப்பாலை அடிக்கிறதையும்.. தாலியைக் கழற்றி வீசுறதையும்.. பொட்டைக் கழற்றி வீசுறதையும் நான் முற்போக்காக்கக் கருதுவதில்லை. இவை வழமைக்கு முரண்படுதல் என்பதாகவே இனங்காண்கிறேன். இவற்றால் சமூகத்துக்குக் கிடைக்கப்பெற்ற அறிவியல் என்ன.. எதுவுமில்லை..! அது சமூகவியல் சார்ந்திருக்கட்டும்.. தனிமனித நடத்தையியல் சார்ந்திருக்கட்டும்..!

ஆனால் அறிவியல் கல்வியூட்டல் மூலமும் சமூகக் கல்வியூட்டல் மூலமும் இந்த செருப்பால் அடித்தல் தாலியைக் கழற்றி வீசல்.. பொட்டை வீசுதல் எந்தளவுக்கு சமூக உபயோகமானது என்பதுடன் குறித்த விடயங்களைப் பின்பற்றுதலால் ஏற்படத்தக்க விளைவுகளின் தன்மைகள் தொடர்பில் ஆய்ந்தறிந்து மக்களே தங்களைத் தாங்கள் தீர்வுகளைத் தேடி தம்மை மாற்றிக் கொள்ள செம்மைப்படுத்த இடமளித்தல் சிறப்பானது..! அதுவே சமூகத்தில் நீடித்து நிலைக்கக் கூடியதுடன் சமூக ஒற்றுமைக்கும் வழி சமைக்கும்..! :rolleyes:

பெரியார் தன்னை கன்னடன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் அல்ல.

பெரியாரிர் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி, மக்கள் எழுச்சியை உருவாக்கிய போது, அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் அவரை "தெலுங்கர்" என்று மக்கள் மத்தியில் சித்தரிக்க முயன்றனர்.

ராமசாமி தானே தனது பந்தி ஒன்றில் "நான் கன்னடன்" என்று தற்பெருமைபடப் பேசியதைக் இன்றும் காணலாம்.

"ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே. என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கர் - நாயுடு என்றே நினைக்கிறாங்க. நான் கன்னடக்காரன்."

ராமசாமி திராவிட ஈடுபாடு கொண்டிருந்த ஒருவரே தவிர மறந்தும் தமிழன் என்ற நிலையில் நின்று தமிழர்களுக்காக தமிழரின் நலனுக்காக என்று பணி செய்தவரல்ல. ஆனால் தற்போது தமிழக அரசியல் தேவைகளுக்காக அங்குள்ள கட்சிகள் அவரை தமிழன் நலன் விரும்பியாகக் காட்டி வருகின்றன என்பதே உண்மை..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தலைப்பையும் தொடரும் கருத்துகளும் மீண்டுமொரு கருத்துக்களத் தொடரொன்றாக மிளிர்கிறது. களக்கருத்துக்களால் தொடர்களைப் படைக்கும் தட்டெழுத்தர்களை நினைத்துச் சிரிக்கலாம்.. டிவி தொடர்களின் தாக்கம் கருத்துக்கள எழுத்தர்களையும் பாதிக்கிறது.

எய்தவனை (பின் மறைந்திருந்து ஆட்டிவிப்பவனை) நோக்காது அம்பை (இளங்கோவினது வாய்ச் சொற்கள்) நோகலாமா?- ஆராயலாமா?

இதை இணைத்தவரின் நோக்கம் நன்றாகவே புரிகிறது.

Link to comment
Share on other sites

1938 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழருக்கே என்ற விடுதலைக் குரல் பெரியாரால் எழுப்பப் படுகிறது. திராவிட நாடு திராவிடருக்கே என்று எழுப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின் 1940 இல் திருவாரூரில் நடைபெற்ற நீதிக் கட்சியின் மாநாட்டின் போது திராவிட நாடு திராவிடருக்கே என மாற்றப் படுகிறது.

தமிழ் நாட்டை திராவிட நாடு என பெரியார் ஏன் மாற்றினார்?

அப்போது தமிழ் நாட்டுடன் ஆந்திராவின் பெரும் பகுதியும், கன்னடம் கேரளம் அகியவற்றின் சில பகுதிகளுமாகச் சேர்ந்து சென்னைத் தலைமாகாணம் என அழைக்கப் பட்டது. அதையேதான் பெரியார் தமிழ் நாடு தமிழருக்கே என்றார். பெரியார் தமிழ் நாடு தமிழருக்கே என்றவுடன் அவரோடு இருந்த தெலுங்கர்களும் கன்னடர்களும் மலையாளிகளும் தமது மாற்றுக் கருத்தைத் தெரிவித்தனர். அதன் பின்தான் பெயர் மாற்றப் படுகிறது.

ஆனால் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக மாநிலங்கள் உருவாகி சென்னைத் தலைமாகாணத்திலிருந்து ஆந்திரம், கன்னடம், கேரளம் போன்றவைகள் வெளியேறியவுடன் தனித்து நின்ற தமிழ்ப் பகுதிகளுக்கு தமிழ் நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று பெரியார் கோரிக்கை விடுக்கிறார்.

அது வரைக்கும் திராவிட நாடு கோரிய பெரியார் அன்றிலிருந்து அதைத் தூக்கிப் போட்டு விட்டு தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். தனது விடுதலை நாளேட்டில் தங்கள் கட்சியின் கொள்கை முழக்கமாக இருந்த திராவிட நாடு திராவிடருக்கே என்ற பதத்தை மாற்றி தமிழ் நாடு தமிழருக்கே என்று எழுதினார். இறுதிவரைக்கும் அதிலிருந்து அவர் விலகவில்லை.

1960 ஆம் ஆண்டு இந்திய வரை படத்தை பெரியார் தீயிட்டுக் கொளுத்தும்போது தமிழ் நாடு நீங்கலான வரைபடத்தையே கொளுத்தினார். இந்திய வரை படத்தில் ஆந்திராவும் கன்னடமும் கேரளாவும் அடங்கியிருந்தன.

தான் இறப்பதற்கு முன் அவர் பேசிய இறுதி உரையின்போது, என் தமிழனுக்கு என்னால் விடுதலையை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என அவர் வேதனையால் முனகியது தமிழ் நாட்டு விடுதலை தொடர்பான அவரது வேட்கையையே வெளிக்காட்டி நிற்கிறது. பெரியாரின் விடுதலை முழக்கமானது தமிழ் நாடு எனத் தொடங்கி பின் திராவிட நாடு என மாறி அதன் பின் இறுதியில் தமிழ் நாடு என்றே முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு ராமசாமி பற்றி இல்லை எனினும் இங்கு ராமசாமி பற்றி போலிப் புகழ்பாட திரிவுகளை முன் வைப்பதையிட்டு இப்பதிவு இடப்படுகிறது.!

நூல் அறிமுகம்: ம.வெங்கடேசன் எழுதிய 'ஈ வெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் '

விஸ்வாமித்ரா

சமீபத்தில் வெளியான 'ஈவெ ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் ' என்ற

புத்தகத்தை சென்ற வாரம் சென்னையில் வாங்கிப் படிக்கும் வாய்ப்புப் பெற்றேன்.

அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியினர் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது.

ஆசிரியர் ம.வெங்கடேசன் மதுரையைச் சேர்ந்தவர்.

'இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர்

கண்டிப்பாக ஒரு பிராமணனாகத்தான் இருக்க வேண்டும் என்ற

எண்ணம்தான் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு.

நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் '

என்று தொடங்கும் இந்த நூலில் பல அரிய தகவல்கள் தொகுக்கப்

பட்டிருக்கின்றன.

தாம், இந்த நூலினை எழுத முற்பட்டதின் காரணங்களையும் முதலிலேயே

பின்வருமாறு பட்டியலிட்டு விடுகிறார் ஆசிரியர்.

'நான் முதன்முதலில் ஈவே ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக்

கொண்டிருந்த எண்ணம் இதுதான்:

1. ஈவேரா தமிழுக்காக பாடுபட்டவர்

2. தாழ்த்தப்பட்டவர்களுக்காக தொண்டாற்றியவர்

3. பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்

4. பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்

இந்த எண்ணத்தின் காரணமாக இவரைப் பற்றிய பல புத்தகங்களைப்

படித்தேன். பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள

புத்தகங்கள் அனைத்தையும் படித்தேன்.

அது மட்டுமில்லாமல் ஈவெராவின் சமகாலத்தில் வாழ்ந்த மபொ.சிவஞானம்,

ப.ஜீவானந்தம், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், உ.முத்துராமலிங்கத்தேவர்,

கி.ஆ.பெ.விசுவநாதம், காமராஜர், பாவாணர் போன்றவர்கள் எல்லாம்

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை எல்லாம் தோலுரித்துக்

காட்டியிருப்பதையும் படித்தேன்.

அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி

எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ - அந்தக் கருத்துக்கு

- அந்த எண்ணத்திற்கு முரண்பாடாகவே அவர் செயல்பட்டு இருக்கிறார்

என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஈவேராவின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள்

அவருடைய மறுபக்கத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆகவே அவர்கள் மூடி

மறைத்த மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின்

கடமையெனக் கருதி இந்தப் பணியை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று

கொண்டு வந்திருக்கிறேன்.

இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர்கழக

மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால்

அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும். '

மேற்படி அறிமுகத்துடன் தொடங்கும் இந்தப் புத்தகத்தில் -

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு,

இஸ்லாத்தில் சாதியைப் பற்றிய பொய்கள்,

ஈவேராவின் போலிக் கடவுள் மறுப்புக் கொள்கை,

சொல்லும் செயலும் முரணானவையே,

வரலாற்றுத் திரிபுகள்,

தாழ்த்தப் பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈவேரா ?,

வைக்கம் போராட்டம் - ஈவேராவின் புளுகும், காந்தியடிகளின் பங்கும்,

ஈவேராவின் ஆணாதிக்க மனோபாவம்,

தேசப்பற்றி இல்லாத ஈவேரா,

பின்னாளில் மணியம்மையின் புளுகும், மூடநம்பிக்கைகளும்,

சீடர் வீரமணியின் முரண்பாடுகளும், மூடநம்பிக்கைகளும்

என்று பல்வேறு தலைப்புகளில் ஆதாரத்துடன் தம் கருத்துகளை நிறுவுகிறார்

ஆசிரியர் வெங்கடேசன்.

பிற்சேர்க்கையாய் 'ஈவேராவைப் பற்றி இவர்கள் ' என்று முத்துராமலிங்கத்தேவர்,

பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், காமராஜர், ஜீவானந்தம்

ஆகியோரின் மேடைப் பேச்சுகளும் தொகுக்கப் பட்டுள்ளன.

'ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தமிழ்மொழி வெறுப்பு ' என்ற முதல் அத்தியாயத்தில்

இருந்து சில சுவையான பகுதிகளைப் பார்ப்போம்.

'ஈவேரா நாட்டாலும், பழக்கவழக்கங்களாலும் தமிழராயினும், மொழியால்

கன்னடர்தான். ஆம், அவரது வீட்டுமொழி கன்னடம். தாம் கன்னடர் என்பதை

அவரே தமது பேச்சிலும், எழுத்திலும் பன்முறை மிகவும் பெருமிதத்தோடு

சொல்லிக் கொண்டவர். - (டாக்டர் ம.பொ.சிவஞானம், நூல்-தமிழகத்தில்

பிறமொழியினர்) என்ற குறிப்போடு முதல் அத்தியாயம் தொடங்குகிறது. '

ஈவேரா தமிழரா ?

'ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஒரு தமிழர், தமிழ் மொழிக்காக அரும்பாடு பட்டவர்

என்றெல்லாம் இன்று ஈவெராவின் அடிவருடிகள் சொல்லிக் கொண்டு

தமிழருக்காகவே வாழ்ந்தவர் அவர் என்ற பொய்ஹ்தோற்றத்தைத் தமிழகத்திலே

உருவாக்கி வந்தனர். இன்னும் உருவாக்கி வருகின்றனர். ஆனால் 'தமிழர்

தலைவர் ' என்றெல்லாம் ஈ.வே.ராமசாமி நாயக்கரைச் சொல்கிறார்களே -

அவரே தம்மை பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டது எப்படித் தெரியுமா ?

'கண்ணப்பர் தெலுங்கர், நான் கன்னடியன், அண்ணாதுரை தமிழர் ' (பெரியார்

ஈவேரா சிந்தனைகள் - முதல் தொகுதி) என்றும், 'நான் கர்நாடக பலிஜவார்

வகுப்பைச் சேர்ந்தவன் ' (குடியரசு 22/8/1926) என்றும் தம்மை அறிமுகப்

படுத்திக் கொள்கிறார். '

'நான் கன்னடியன் ' என்று தம்மைப் பெருமையோடு சொல்லிக்

கொண்டவரைத்தான் தமிழர் என்றும், தமிழர் தலைவர் என்றும் சொல்லிக்

கொண்டிருக்கின்றனர். 'நான் கன்னடியன் ' என்று சொல்லிக் கொண்டே

ஈவேரா தமிழ்மொழியையும், தமிழ்ப்புலவர்களையும் விமர்சித்தது

கொஞ்சநஞ்சமல்ல.

'தமிழும் தமிழரும் ' என்ற நூலில் ஈவேரா கூறுகிறார்:

' 'இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் சில புலவர்களின் பெயர்கள்

அடிக்கடி அடிபடுகின்றன. அவர்கள் 1.தொல்காப்பியன், 2.திருவள்ளுவன்,

3.கம்பன். இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக

செய்துவிட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்துக்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு

கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும்

முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் - தேசபக்தர்கள் பலர்போல் அவர்

படித்த தமிழ் அறிவை, தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய்

பயன்படுத்தித் தமிழரை இழிவுபடுத்திக் கூலிவாங்கிப் பிழைக்கும் மாபெரும்

தமிழ்த்துரோகியே ஆவான். இவன் முழுப்பொய்யன். முழுப்பித்தலாட்டக்காரன்.

தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான் கூட சொல்லப்

பயப்படும் கருத்துக்களை எல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கி

விட்ட துரோகியாவான். இம்மூவருமே ஜாதியையும் ஜாதித்தொழிலையும் ஏற்றுக்

கொண்டவர் ஆவார்கள். '

20/1/1929 குடியரசு இதழில் திருவள்ளுவரைப் பற்றி மேலும் சொல்வது:

'அவரது குறளில் இந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலிய தெய்வங்களையும்,

மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம், மேலோகம், பிதுர், தேவர்கள் முதலிய ஆரிய மத

சம்பிரதாயங்களையும், மூடநம்பிக்கைகளையும் கொண்ட விஷயங்களைப்

பரக்கக் காணலாம். '

இதுதான் மாபெரும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய இவரது பார்வை.

தொல்காப்பியரும், கம்பரும், வள்ளுவரும் துரோகிகள். சரியான பட்டம்!

தமிழ்வளர்க்கப் பார் புகழும் இலக்கண இலக்கிய நூல்களைப் படைத்த

இவர்கள் தமிழ்த் துரோகிகள் என்றால் அதே தமிழைப் பழித்த ஈவேராவும்

துரோகிதானே ?

இப்படிப் பல தகவல்களை தக்க நூலாதாரத்துடன் பட்டியலிடும் ஆசிரியர்

பிற்சேர்க்கையாய் அக்காலத்திய தேசியவாதத் தலைவர்கள் சிலரின்

பேச்சுகளையும் தொகுத்திருப்பதும் அரிய தகவல்களஞ்சியமாய் உள்ளது.

இதில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் 1957 'ம் ஆண்டு பிப்ரவரி

21 அன்று காஞ்சிபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது அருமை. தெய்வ பக்தியையும், தேச பக்தியையும் தன் இரு கண்களாக எண்ணிய பொன்முத்துராமலிங்கத் தேவரின் உரையை வெங்கடேசன் தன் புத்தகத்தில் எடுத்து இட்டுள்ளார்.

பசும் பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை:

'தமிழ் அபிமானம் வேண்டும், தமிழ்நாடு வாழ வேண்டும் ' என்று

கூறிக்கொண்டு ஒரு கூட்டம் தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ்

அபிமானம் வேண்டியதுதான். ஆனால் இவர்கள் தமிழின் மேல்

அபிமானம் கொண்டாடுகிற முறை எப்படியிருக்கிறது என்றால்,

அவர்கள் பொதுக்கூட்டங்கள் நடத்துகிறபோது, 'வட

இந்தியர்கள், தென்னிந்தியர்கள்; வடநாடு, தென்னாடு ' என்று

பிரிப்பதிலேயே குறியாய் இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபோது ஜின்னா

பார்க்கில் கூட்டம் நடை பெறுகிறது என்கிறார்கள். அடுத்தாற்போல்

ராபின்சன் பார்க்கில் நடைபெற்றால் ராபின்சன் பார்க் என்று

போடுகிறார்கள்.

அதே நேரத்தில் திலகர் கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது என்றால்

அவர் பெயரைச் சொல்ல இவர்களுக்குக் கோபம் வருகிறது. வட

இந்தியர் என்று சொல்லி அவர் பெயரைப் போடாமல் தந்தை திடலில்

நடை பெறுகிறது என்று போடுகிறார்கள்.

(கிண்டலாக ஆங்கிலத்துக்கு மாறி)

In what way Jinnah is not a North Indian ? How is the

names Jinnah and Robinson so sweet to you Sir ? How is

the name of poor Tilak so bitter to you Sir ? I am not

able to understand.

ஜின்னா எந்த வகையில் வட இந்தியன் அல்ல; எந்த வகையில்

ராபின்சன் என்ற வெள்ளைக்காரன் உங்களுக்கு வேண்டியவன் ? திலகர்

பெயர் மாத்திரம் உங்களுக்குக் கசப்பாக இருப்பானேன் ? இது இந்த

நாட்டு அரசியலுக்கு விரோதமாக நீங்கள் செய்யும் தேசத் துரோகம்

அல்லவா ?

ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்த

கூட்டத்தில் வந்த எண்ணம் என்பதைத் தவிர வேறு எதைக்

காட்டுகிறது ? அதற்கு மேல் 'வடநாட்டான் திராவிட நாட்டை

சுரண்டுகிறான். வட இந்தியன் பெயர் இந்த நாட்டில் இருக்க

வேண்டாம். இருந்தால் போராடி மாற்றுவோம் ' என்று சொல்கிறார்கள்.

மிக்க மகிழ்ச்சி.

டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றப் போராடிய நீங்கள் நான் எடுத்துச்

சொன்ன ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற ஏன் சத்தியாகிரகம்

பண்ணவில்லை ? வெள்ளைக்காரன் பெயர் இருக்கலாம்; அதைப்

பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கணும். அதே நேரத்தில்

'டால்மியாபுரம் ' என்ற பெயர் போகணும் என்றால் அறிவுடையவன்

கேட்பானா ?

ஹார்வி மில்லில் பட்டிவீரன்பட்டி செளந்தரபாண்டியன் வகையறா பங்கு

இருக்கிறது. அந்த செளந்தரபாண்டியன் திராவிட முன்னேற்றக்

கழகத்தின் தந்தையாக இருந்ததால், ஹார்விபட்டி என்ற பெயரை மாற்ற

வேண்டுமென்று சொன்னால் உங்கள் கட்சிக்குப் பணம் வராது.

ஆகையால் தமிழ் என்ற பெயரால் மக்களிடம் உண்மையை

மறைப்பதில் பிரயோசனம் இல்லை. இதைப் புரிந்து

கொள்ள வேண்டும். இதுதான் அதனுடைய ரகசியம்.

அதற்குமேல் திராவிடநாடு என்று கோஷிக்கிறார்கள். திராவிட நாடு

யார்கிட்டே கேட்கிறாய் ? முறையாக இருந்து வெள்ளையன் நம்மை

அடிமையாக வைத்திருந்த காலத்தில், சுதந்திரப்போரில் மக்கள்

பக்கத்தில் இருந்திருந்தால் கேட்க உரிமை இருக்கிறது என்றாவது

சொல்லலாம்.

வெள்ளையனை எதிர்த்துப் போராட்டம் நடைபெற்றபோது

வெள்ளைக்கார சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு, அவனுக்கு

அனுகூலமாக யுத்த 'புரபகண்டா ' 'செய்துவிட்டு, இப்போது திராவிடநாடு

கேட்டால் என்ன அர்த்தம் ? பாகிஸ்தான் கேட்டு வாங்கி அவன் ரகசிய

ஒப்பந்தம் செய்து கொண்டது மாதிரி, நீ வெள்ளைக்காரனுக்கு ஐந்தாம்

படையை அமைப்பாய். அப்படி ஏமாற நாங்கள் பைத்தியக்காரர்கள்

அல்ல.

'தமிழ் வேண்டும் ஹிந்தி வேண்டாம் ' என்கிறார்கள். 1937-லேயே ஹிந்தி

எதிர்ப்பு வருகிறபோது, 'ஹிந்தியைப் புகுத்தாதே ' என

ராஜகோபாலாச்சாரியர் மந்திரி சபைக்குச் சொன்னவன் அடியேன். இது

சரித்திரம். எங்கள் அரசாட்சி அமைந்தால் 'தமிழ் மாகாணம் ' என்று

பெயர் வைப்போம். Residuary Madras State என்கிற பெயரை

எடுப்பதில் பின்னடைந்தவர்கள் அல்ல நாங்கள். ஆனால் தமிழ்

என்பதன் பெயராலும், தமிழ் உரிமையைக் காப்பாற்றுகிறோம் என்கிற

பெயராலும் தமிழன் நாகரீகத்தைக் கெடுக்கக்கூடிய

போராட்டங்களையும், பிராமணர் பிராமணர் அல்லாதார் என்று

சொல்லிக் கொண்டு நாஸ்திகத்தை வளர்ப்பதையும் நாங்கள்

அனுமதிக்க மாட்டோம்.

'ரோமாபுரி ராணி ' என்ற கதையை எழுதுவதா நீ பிராமணர்

அல்லாதோரைக் காப்பாற்றுகிற யோக்யதை ?

எத்தனை பள்ளிக்கூடப் பையன்களை பாழாக்கி

இருக்கிறாய் இதைப் போன்ற கதைகளை எழுதி ? ரோமாபுரி ராணி

கதை போதாது என்று 'தங்கையின் காதல் ' என்று ஒரு கதை

எழுதியிருக்கிறாய். தங்கையைக் கண்டு காதல் கொள்ளுகிறான்

அண்ணன் என்று எழுதியிருக்கிறாய்.

அடுத்து மகன் தாயைத் தாலிகட்ட வேண்டியதுதானே ? வேறு என்ன ?

இதுவா தமிழ் நாகரீகம் ?

சின்னச்சின்ன பள்ளிப் பிள்ளைகளைப் பாழாக்கி நாட்டை மிக

விபரீதமான பாதைக்குக் கொண்டு போகக்கூடிய இத்தகைய

கட்சிகளை, தாங்கள் தேர்தலில் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக்

கொள்கிறேன்.

நன்றி திண்ணை.

ராமசாமி மற்றும் அவரது பேரன் போட்ட கூத்துக்களை படிக்க விரும்புறவை இங்கும் போய் பாருங்க.. :rolleyes:

http://www.tamilnadutalk.com/portal/index....c=5946&st=0

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.