Jump to content

ஈ வெ ராமசாமியின் உறவினரால் சிதைக்கப்படும் ஈழத்தமிழர் ஆதரவு.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக நான் இப்படிப் பார்க்க விரும்புகின்றேன் நெடுக்ஸ்!

பெரியார் துவேசிகள் சொல்ல வருவது என்ன வென்றால், மத்தியின் போக்கின்மீது பெரியாரால் அடுக்கப்பட்ட குற்றங்கள் எவையும் நியாயமானவையே அல்ல? அதாவது இன்றய ஈழத்தின் சூழ்நிலைக்கு போராட்டம் என்பது அனாவிசயமே என்று ஒருவன் சொன்னால் அவன் எவளவு சிங்களவாத அடிவருடியோ அப்படியேதான் இந்திதுவ வெறியர்களின் அடிவருடி என்றே கொள்ளத் தோன்றுகிறது அந்த எழுத்தாளனை.

Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆக நான் இப்படிப் பார்க்க விரும்புகின்றேன் நெடுக்ஸ்!

பெரியார் துவேசிகள் சொல்ல வருவது என்ன வென்றால், மத்தியின் போக்கின்மீது பெரியாரால் அடுக்கப்பட்ட குற்றங்கள் எவையும் நியாயமானவையே அல்ல? அதாவது இன்றய ஈழத்தின் சூழ்நிலைக்கு போராட்டம் என்பது அனாவிசயமே என்று ஒருவன் சொன்னால் அவன் எவளவு சிங்களவாத அடிவருடியோ அப்படியேதான் இந்திதுவ வெறியர்களின் அடிவருடி என்றே கொள்ளத் தோன்றுகிறது அந்த எழுத்தாளனை.

நான் நினைக்கிறேன் ராமசாமி சாதாரண கன்னடனே. அவர் அரசியலுக்கு வந்ததும் அவரைப் பெரியாள் ஆக்கியிருக்காங்களே தவிர.. அவர் எதையும் தானா சிந்தனை செய்து சமூக அறிவியலோடு செய்ததாக தெரியல்ல. அவரின் பிற்பாடு அவரின் பெயரைப் பாவிச்சு பிழைப்பு நடத்த என்று அவருக்கு "பெரியார்" "தந்தை" "சுயமரியாதை" "பகுத்தறிவு" போன்ற அழங்காரங்களைப் புகுத்தி மக்கள் மேல சவாரி செஞ்சிருக்கிறதாவே படுகுது.

ஏனென்றால்.. ராமசாமி காலத்தில் வாழ்ந்த எந்த உருப்படியான அரசியல்வாதியும் ராமசாமியை மதிக்கல்ல என்பது மட்டுமன்றி.. அவரின் கருத்துக்களின் போலித்தனத்தை ஆதாரங்கள் சகிதம் முறியடிச்சிருக்காங்க என்பதும்.. ராமசாமி பிற்காலத்தில் சிலரால் தமது அரசியல் பிழைப்புக்காக திட்டமிட்டு உயர்த்தப்பட்ட மனிதர் என்பதையே காட்டுகிறது.

ஒருவேளை தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சி அமைக்காமல் போயிருந்தால் ராமசாமியும் காணாமல் போயிருப்பார்...!

ராமசாமிக்கு தமிழகத்திலேயே சண்டை பிடிச்சுத்தான் சிலை வைக்கிறாங்க. வேற எங்கையும் வைக்கவும் விடுறாங்க இல்ல. இது எதைக் காட்டுது...???! ஒரு தேசிய மதிப்பு மிக்க தலைவரா இருந்திருந்தா ஏன் இப்படி அவமதிக்கிறாங்க..??! :rolleyes::wub:

Link to comment
Share on other sites

அடி மட்டமானா மதவெறியில் சாதிய வெறியில் பெரியார் மீது அவதூற்றைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான அவதூறான தலைப்புக்களை இந்த 'அடிமட்டமான யாழ்க்கள' உறுப்பினர் நெடுங்காலமாகவே இணைத்து வருகிறார்.

இளங்கோவன் செய்யும் செயலுக்கு எங்கனம் பெரியார் பொறுப்பாகா முடியும் என்பதோ மறைந்து விட்ட ஒருவர் இன்று எவ்வாறு இன்னொருவரின் செயலுக்குப் பொறுப்பாக முடியும் என்பதோ எந்த வித அடிப்படையும் அற்ற கருத்து.ஆனால் அவதூற்றைச் செய்ய வேண்டும் என்றால் இவ்வாறுதான் எந்த தர்க்க நியதியும் அற்று கருதுக்களை எழுத முடியும்.

தூய இனம் என்னும் பாசிசத் தனமான கருதுக்களையும் , சாதிய வெறியின் உச்சமான 'அடிமட்டம்' என்னும் சொற் பிரயோகங்களையும்,பெண்கள் மீதான காழ்ப் புணர்வையும் ,மத வெறியில் மனித விழுமியங்களில் மிகவும் அடிமட்டமான தனது வக்கிரமான எண்ணங்களை பன் நெடுங்காலமாக யாழ்களத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.இவ்வாறான கீழ் நிலையிலான எண்ணக்கள் பொதுவாகவே சிறுவயதில் ஏற்பட்ட துயரமான சம்பவங்களினால் ஏற்பட்ட உள் மனப்பிறழ்வுகளில் இருந்தே எழுகின்றன என உளவியலாளர்கள் சொல்வார்கள்.

.

ஒருவர் இங்கு இவ்வாறான அவதூறுகளை எழுதுவதால் தமது சுய அரிப்பைத் தீர்த்துக் கொள்ளலாமே தவிர, தமிழ் மக்கள் பெரியார் மீது வைத்திருக்கும் அன்பையும் மரியாதையும் திராவிட இயக்கத்தினால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையோ மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

நாய் நிலவைப் பார்த்துக் குரைத்து நிலவுக்கு எங்காவது களங்கம் ஏற்பட்டதுண்டா?குரைத்து விட்டுப் போகட்டும் .அதனால் அதைத் தான் செய்து விட முடியும்.வேறு பிரயோசனமான உருப்படியான காரியம் எதையுமே ஆற்ற முடியாத இயலாமையின் வெளிப்பாடே இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக நான் இப்படிப் பார்க்க விரும்புகின்றேன் நெடுக்ஸ்!

பெரியார் துவேசிகள் சொல்ல வருவது என்ன வென்றால், மத்தியின் போக்கின்மீது பெரியாரால் அடுக்கப்பட்ட குற்றங்கள் எவையும் நியாயமானவையே அல்ல? அதாவது இன்றய ஈழத்தின் சூழ்நிலைக்கு போராட்டம் என்பது அனாவிசயமே என்று ஒருவன் சொன்னால் அவன் எவளவு சிங்களவாத அடிவருடியோ அப்படியேதான் இந்திதுவ வெறியர்களின் அடிவருடி என்றே கொள்ளத் தோன்றுகிறது அந்த எழுத்தாளனை.

:rolleyes::wub:

நெடுக்காலபோவான், தமிழ் தேசியத்துக்கு எதிராக கூட பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளனவே. இவற்றில் பல எழுத்தாளர்கள் றோ போன்ற அமைப்புக்களின் பணத்துக்காக மட்டும் எழுதியவர்களே. ஆகவே எப் பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப் பொருள் மெய் பொருள் காண்பதறிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::wub:

நெடுக்காலபோவான், தமிழ் தேசியத்துக்கு எதிராக கூட பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளனவே. இவற்றில் பல எழுத்தாளர்கள் றோ போன்ற அமைப்புக்களின் பணத்துக்காக மட்டும் எழுதியவர்களே. ஆகவே எப் பொருள் யார் யார் வாய் கேட்ப்பினும் அப் பொருள் மெய் பொருள் காண்பதறிவு.

அண்மையில் உரைநிகழ்த்திய சிறீலங்காவுக்கான பிரிட்டிஷ் தூதுவர் கூட பல கருத்து நிலைகளுக்கு வாய்ப்பளிக்கும் அரசியலை விடுதலைப்புலிகள் அங்கீகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துரைத்திருந்தார். அதுதான் ஜனநாயக உலகின் கருத்தியல் பண்பு என்றும் கூறினார்..!

தமிழ் தேசியம் என்பது எதிர்விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. அது தொடர்பான எதிர்விமர்சனங்களை ஜனநாயக உலகில் சந்திப்பதும் வெல்வதும் அவசியமானது. அப்போதுதான் அது பலப்படும்.

தமிழ் தேசியம் போன்றதல்ல. ராமசாமி கொள்கைகள். ராமசாமியின் குரலும் கொள்கையும் குருட்டு வாங்கில் சமூகத் தெளிவின்மையற்ற நிலையில் எழுந்தமானமாக விழுந்தவை என்பதையே பல அவர் காலத்து அறிஞர்களே சுட்டிக்காட்டி இருக்கின்றனர். அது மட்டுமன்றி ராமசாமியின் கொள்கைகளும் குரலும் நவீன அறிவியல் உலகான தற்காலத்துக்கு பொருந்தக் கூடியதா என்பது குறித்துப் பரிசீலிப்பதும் அவசியம்.

உதாரணமாகப் பாருங்கள் 50/60 ஆண்டுகளாகக் கடவுளை இல்லை என்பவர்களே இன்னும் சிலைக்குச் செருப்பால அடித்து கடவுளை இல்லாமல் செய்கின்றனராம்..! எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது இது. இதில் என்ன அறிவார்த்தமான அணுகுமுறை இருக்கிறது..??!

இன்று மக்கள் பல்துறை அறிவு மிக்கவர்களாக அறிவியல் உலகோடு நெருங்கி வாழ்ந்து வருகின்ற வேளையில் சாதியமும்.. கடவுளும்.. செருப்பும்.. பிராமணியமும்.. பார்ப்பர்னியமும்.. என்ற வேதகால விடயங்களை காவிட்டு.. முற்போக்குப் பேசி பொழுது கழிப்பதால் என்ன பயன்..??! :wub:

விஞ்ஞானத்தில் இந்தியா வளரவில்லை என்ற காலத்தில் வாழ்ந்த ராமசாமியின் கருத்துக்களும் விஞ்ஞானத்தால் சந்திரனுக்கே போய் கீலியம் 3 யை மூலப்பொருளாக்கி அணு உலைகளை இயக்க திட்டமிடும் இந்தியாவின் காலத்தில் உள்ள கருத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டு.

மக்களை அறிவியல் மற்றும் சமூக கல்வியூடு அணுக வேண்டிய வேளையில் வெறும் "பகுத்தறிவென்று" கடவுளுக்கு செருப்பாலடிக்கும் செப்படி வித்தைகளோடு சமூக அறிவியலை வளர்த்து சந்திரமண்டலத்துக்குப் போக முடியாது என்பதை உணர வேண்டும். காலமாற்றத்துக்கு ஏற்ப அறிவியலும் பெருக்கமும் மாற்றமும் காண்பது போல சமூகக் கருத்தியல் மாற்றங்களும் ஏற்பட வேண்டும்.

ராமசாமியின் 50 வருடகாலப் பழமை வாதங்களை வைச்சுக் கொண்டு பழமைவாத அரசியலை நடத்தலாம். எதிர்கால இந்தியாவுக்கான சந்ததியை உருவாக்க முடியாது. எனவே பயன்படக் கூடிய விடயங்களை நோக்கி கருத்தியல் மாற்றங்கள் வேண்டும். இன்னும் பொட்டும் தாலியும் சேலையும் வேணுமா என்ற பட்டிமன்றத்துக்குள் நிற்காமல்.. பொட்டை கிடக்கட்டும் சேலை கிடக்கட்டும்.. தாலி கிடக்கட்டும்.. அறிவியலில் நான் எதைச் சாதித்தேன் என்பதையிட்டு மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது..! பொட்டும் தாலியும் ராமசாமியும் அறிவியலுக்கு எள்ளளவும் பங்களிப்பதாக யாரும் கருதவில்லை. அப்படிக் கருதுவது கருத்தியல் போக்கிரித்தனமே..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்ஜென்டீனாவில் பிறந்த சே குவேரா கியூபாவில் இருந்த அராஜக ஆட்சியை கவிழ்க்க போராடவில்லையா? கியூபர்கள் என்ன அவரை ஆர்ஜென்டீனியன் என்று ஒதுக்கியாவிட்டார்கள்? கியூபாவின் வரலாற்றிலேயே அவருக்கென பெரிய இடத்தையல்லவா கொடுத்துளார்கள். நல்ல வேளை நீங்கள் மட்டும் கியூபனாக இருந்திருந்தால் அவரை வசை பாடியே கொன்றிருப்பீர்கள்.

எப்படி கியூபாவிற்கு சேயோ அப்படித்தான் பெரியாரும் தமிழகத்துக்கு. இல்லை அதிலும் ஒரு படி மேல்.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பெரியார் மட்டும் நினைத்திருந்தால் தமிழகத்தின் முதல்வர் ஆகியிருக்கலாம். ஆனால் அவர் கொள்கை மட்டுமே பெரிதென வாழ்ந்தவர்.

Link to comment
Share on other sites

தமிழனுக்குப் பிறந்தவன் தான் தமிழன் என்றால் உலகில் இருப்பவர்கள் எல்லோரும் தமிழர்களாக இருக்க வேண்டும்.மனித இனம் என்பது ஒரு அடியில் இருந்து தான் வருகிறது.இனத்துவ அடையாளங்கள் காலாத்தால் ஏற்பட்டவை,இன்றும் மாறுபட்டுக் கொண்டிருப்பவை.இன்று தமிழனாக இருப்பவன் நேற்று வேறு ஒரு இனத்துவ அடையாளத்தோடு இருந்திருக்க முடியும்.இன்று சிங்களவனாகத் தன்னை அடையாளாம் காட்டிக்கொள்பவர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்கள்.யாழ்ப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத் தலைவர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் ஒருவர் இவ்வளவு காலமும் தமிழனத்திற்காக செய்த செயல் ஒன்றை இக்களத்தில் அவருக்காக வாதாடும் யாராவது கூறமுடியுமா ? தமிழுக்காக தொண்டு செய்தார்..தமிழுக்காக தொண்டு செய்தார் என்று சொல்கிறீர்கள். சரி அந்த இலக்கியத் தமிழ் வந்து எங்களுக்கு என்ன செய்தது ? தமிழ்ப்புலமை என்கிறீர்கள், அந்தத் தமிழ்புலமையால் எங்கள் போராட்டத்திற்கு என்ன லாபம் ? தமிழினத்தின் காவலர் என்கிறீர்கள், சரி அந்தக் காவலரால் ஈழத்தமிழர் இந்திய அரசின் உதவியோடு அழிக்கப்படுவதைத் தடுக்க முடிந்ததா ? தமிழ்மொழியில் வல்லமையும் ஆற்றலும் உள்ளவர் என்று கொண்டாடுகிறீர்கள், அந்த ஆற்றல் உள்ளவர் ஈழத்தமிழரின் போராட்டத்தை தனது சொந்த அரசியல் நலனுக்காகப் பாவிப்பதை எந்த வல்லமை என்று சொல்வது ? அரசியல் சாணக்கியர் என்கிறீர்கள், அந்தச் சாணக்கியம் தமிழர் தலைவிதியை தீர்மனிக்கப் பயன்பட்டதா? மாறாக ஜயலலிதாவுடன் குடுமிப்பிடிச்சண்டைக்குத்த

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமசாமியை நியாயப்படுத்த எப்படி ஈழப்போரட்டத்திற்கு முடிச்சுப் போடுவதை ஏற்கமுடியாதோ, அவ்வாறே ராமசாமியைத் தாக்குவதற்கும் ஈழப்போராட்டம் பற்றி இழுக்கப்படுவதை ஆதரிக்கமுடியாது. ராமசாமி என்ன கொள்கையில் இருந்தார் என்பதற்கும், அவருடைய பேரன் என்ன நிலமையில் இருக்கின்றார் என்பதையும் ஒப்பிட முடியாது.

ஆனால் ராமசாமி தமிழரைப் பிரிக்கத் தான் முயன்றாரே தவிர, தமிழனுக்காக எதையுமே செய்யவில்லை. அவர் குறைந்தபட்சம் அடிப்படை மக்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்குக் கூடப் போரடவில்லை. குருடன் கையில் வாகனம் கிடைத்தால் எப்படி ஓடுவானோ, அவ்வாறே தான் இன்றைக்கு தமிழ் மக்களைக் விட்டுச் சென்றுள்ளார்.

நெடுக்ஸ் சொன்னது போல, இந்து மதத்தை தூசிப்பதால் மட்டும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திடுமா? அல்லது அதை விட்டால் மட்டும் சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்திட முடியுமா? குறைந்த பட்சம் அடிப்படை மக்களுக்குத் தனக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி எத்தனை பாடசாலைகள் அமைத்தார்? எத்தனை வீடுமனைகள் அமைத்தார். தன் குடும்பச் சொத்து விலத்தக் கூடாது என்று கிழட்டு வயதில் கலியாணம் வேறு.

சில பேர் தோத்திரம் ஓதுவது போல,அவர் எல்லாம் வல்லர், நொள்ளவர் என்று புகழ்பாடுவதே கொண்டிருக்கின்றார்கள்.

பார்ப்பானி என்ற சொல்லைத் தவிர, வேறு ஒன்றையும் அவர் தமிழர்களுக்குத் தராததால் தான், அதை மட்டுமே இவர்கள் உச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரியாரின் காலத்தில் தமிழினத்திற்கு எதிராக நின்ற அனைத்தையுமே தந்தை பெரியார் எதிர்த்தார்.

ஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பனிய சிந்தனையை காவும் சில வேளாள மேலாதிக்க வாதிகளும் தந்தை பெரியார் மீது இன்றைக்கும் அவதூறு பரப்புகிறார்கள்.

இந்த ராமசாமிப் பக்தர்கள் முடிந்தால் தமிழனுக்காக என்னத்தைத் தந்தார் என்று சொல்லட்டும். எல்லாத்தையும் எதிர்த்தார் என்பது உண்மை தான். அதனால் தான் இன்றைக்குத் தமிழன் கூறு போடப்பட்டுப் பிரிந்து கிடைக்கின்றான். இந்தியாவில் எந்த மானிலத்திலும் இல்லாத அளவு சாதி அடிப்படையிலான கட்சிகள் இருப்பது தமிழகத்தில் தான். அதற்குக் தோற்றுவாயே இவர் தான்.

நிச்சயம் அவரின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும். ஏனென்றால் தமிழன் பிரிய வேண்டும் என்ற அவரின் கனவு மெய்ப்பட்டுவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமசாமியை நியாயப்படுத்த எப்படி ஈழப்போரட்டத்திற்கு முடிச்சுப் போடுவதை ஏற்கமுடியாதோ, அவ்வாறே ராமசாமியைத் தாக்குவதற்கும் ஈழப்போராட்டம் பற்றி இழுக்கப்படுவதை ஆதரிக்கமுடியாது. ராமசாமி என்ன கொள்கையில் இருந்தார் என்பதற்கும், அவருடைய பேரன் என்ன நிலமையில் இருக்கின்றார் என்பதையும் ஒப்பிட முடியாது.

ஆனால் ராமசாமி தமிழரைப் பிரிக்கத் தான் முயன்றாரே தவிர, தமிழனுக்காக எதையுமே செய்யவில்லை. அவர் குறைந்தபட்சம் அடிப்படை மக்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்குக் கூடப் போரடவில்லை. குருடன் கையில் வாகனம் கிடைத்தால் எப்படி ஓடுவானோ, அவ்வாறே தான் இன்றைக்கு தமிழ் மக்களைக் விட்டுச் சென்றுள்ளார்.

நெடுக்ஸ் சொன்னது போல, இந்து மதத்தை தூசிப்பதால் மட்டும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திடுமா? அல்லது அதை விட்டால் மட்டும் சமூகத்தில் நல்ல நிலைக்கு வந்திட முடியுமா? குறைந்த பட்சம் அடிப்படை மக்களுக்குத் தனக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி எத்தனை பாடசாலைகள் அமைத்தார்? எத்தனை வீடுமனைகள் அமைத்தார். தன் குடும்பச் சொத்து விலத்தக் கூடாது என்று கிழட்டு வயதில் கலியாணம் வேறு.

சில பேர் தோத்திரம் ஓதுவது போல,அவர் எல்லாம் வல்லர், நொள்ளவர் என்று புகழ்பாடுவதே கொண்டிருக்கின்றார்கள்.

பார்ப்பானி என்ற சொல்லைத் தவிர, வேறு ஒன்றையும் அவர் தமிழர்களுக்குத் தராததால் தான், அதை மட்டுமே இவர்கள் உச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த ராமசாமிப் பக்தர்கள் முடிந்தால் தமிழனுக்காக என்னத்தைத் தந்தார் என்று சொல்லட்டும். எல்லாத்தையும் எதிர்த்தார் என்பது உண்மை தான். அதனால் தான் இன்றைக்குத் தமிழன் கூறு போடப்பட்டுப் பிரிந்து கிடைக்கின்றான். இந்தியாவில் எந்த மானிலத்திலும் இல்லாத அளவு சாதி அடிப்படையிலான கட்சிகள் இருப்பது தமிழகத்தில் தான். அதற்குக் தோற்றுவாயே இவர் தான்.

நிச்சயம் அவரின் ஆத்மா சாந்தியடைந்திருக்கும். ஏனென்றால் தமிழன் பிரிய வேண்டும் என்ற அவரின் கனவு மெய்ப்பட்டுவிட்டது.

ஆதாரம் இல்லாமல் பெரியாரை திட்டும் நீங்கள் நிச்சயமாக பாலை கொடுத்துவிட்டு "ஆகா பிள்ளையாரின் அற்புதம். அரோகரா" என ஒப்பாரி வைக்கும் கூட்டத்தை சேர்ந்தவராய்த் தான் இருப்பீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழினத் தலைவர் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் ஒருவர் இவ்வளவு காலமும் தமிழனத்திற்காக செய்த செயல் ஒன்றை இக்களத்தில் அவருக்காக வாதாடும் யாராவது கூறமுடியுமா ? தமிழுக்காக தொண்டு செய்தார்..தமிழுக்காக தொண்டு செய்தார் என்று சொல்கிறீர்கள். சரி அந்த இலக்கியத் தமிழ் வந்து எங்களுக்கு என்ன செய்தது ? தமிழ்ப்புலமை என்கிறீர்கள், அந்தத் தமிழ்புலமையால் எங்கள் போராட்டத்திற்கு என்ன லாபம் ? தமிழினத்தின் காவலர் என்கிறீர்கள், சரி அந்தக் காவலரால் ஈழத்தமிழர் இந்திய அரசின் உதவியோடு அழிக்கப்படுவதைத் தடுக்க முடிந்ததா ? தமிழ்மொழியில் வல்லமையும் ஆற்றலும் உள்ளவர் என்று கொண்டாடுகிறீர்கள், அந்த ஆற்றல் உள்ளவர் ஈழத்தமிழரின் போராட்டத்தை தனது சொந்த அரசியல் நலனுக்காகப் பாவிப்பதை எந்த வல்லமை என்று சொல்வது ? அரசியல் சாணக்கியர் என்கிறீர்கள், அந்தச் சாணக்கியம் தமிழர் தலைவிதியை தீர்மனிக்கப் பயன்பட்டதா? மாறாக ஜயலலிதாவுடன் குடுமிப்பிடிச்சண்டைக்குத்த
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் இல்லாமல் பெரியாரை திட்டும் நீங்கள் நிச்சயமாக பாலை கொடுத்துவிட்டு "ஆகா பிள்ளையாரின் அற்புதம். அரோகரா" என ஒப்பாரி வைக்கும் கூட்டத்தை சேர்ந்தவராய்த் தான் இருப்பீர்கள்.

ஆஹா!

அற்புதமான கண்டு பிடிப்பு!

ஆழ்ந்த கருத்துக்கள்!

பகுத்தறிவின் வழிகாட்டி!

யாழ்களத்தில் 1 வருடமாக நடக்கின்ற கூத்துக்களைத் இப்போது தான் கண்டுபிடித்த உங்களைப் பாராட்டமல் இருக்க முடியவில்லை. கண்டு பிடிக்கவே இவ்வளவு காலம் எடுத்தது என்றால்.... வாழ்க பகுத்தறிவு.

ஆதாரம் இல்லாதபடியால் தான் கேட்கின்றேன். தமிழனின் வளர்ச்சிக்கு அந்த மனிதர் என்ன செய்தவர் என்று சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா!

அற்புதமான கண்டு பிடிப்பு!

ஆழ்ந்த கருத்துக்கள்!

பகுத்தறிவின் வழிகாட்டி!

யாழ்களத்தில் 1 வருடமாக நடக்கின்ற கூத்துக்களைத் இப்போது தான் கண்டுபிடித்த உங்களைப் பாராட்டமல் இருக்க முடியவில்லை. கண்டு பிடிக்கவே இவ்வளவு காலம் எடுத்தது என்றால்.... வாழ்க பகுத்தறிவு.

ஆதாரம் இல்லாதபடியால் தான் கேட்கின்றேன். தமிழனின் வளர்ச்சிக்கு அந்த மனிதர் என்ன செய்தவர் என்று சொல்லுங்கள்.

ஏன் அப்பன். ஒரு வருசமாய் பெரியாருக்கு சாணியெடுத்து அடிச்சுக்கொண்டே இருக்கிறியள். எத்தினையோ பேர் உங்களுக்கு பெரியாரை பற்றி நல்ல கருத்துக்க்ளை சொல்லிக்கொண்டே இருக்கிறாங்கள். நான் மட்டும் சொல்லியென்ன ஏறவா போகுது. மர மண்டைக்குள்ள எந்த மண்ணாங்கட்டியும் நுழையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:wub: நல்ல கண்டுபிடிப்பு ! எனக்குப் பெரியாருக்கும் கருநாநிதிக்குமுள்ள வேறுபாட்டைக் கண்டு சொன்னதற்கு பாராட்டுக்கள். மற்றவரை மடையனாக நினைப்பதற்கும் ஒரு அளவு வேண்டும். இங்கு ஒருவர் பெரியார் பற்றிக் கதைக்கும்போது கருநாநிதி பற்றியும் வக்காலத்து வாங்கியிருந்தார். அதற்குத்தான் பதில் எழுதினேன். பிழை பிடிக்கிறேன் பேர்வழி என்று உங்களை நீங்களே முட்டாளாக்க வேண்டாம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவகால எழுத்துக்களில் குணா அவர்களின் திராவிடத்தால் வீழ்ந்தோம் எனும் நூலில் ராமசாமியின் திருகுதாளங்களையும் போலி உச்சரிப்புக்களையும் திறம்பட எடுத்தாண்டிருப்பதை அவதானிக்கலாம்..!

தற்கால சமூகப் பாகுபாட்டின் அடிப்படையில் தமிழர் என்பவர் சமூக அடிப்படையில் அமைந்த ஒரு இனக்குழும மக்களாகவே இனங்காணப்படுகின்றனர். கன்னடர் என்பவர் இன்னொரு இனக் குழும மக்கள். கன்னடராக தன்னை இனங்காட்ட விரும்புவரின் விருப்புரிமையைப் பறித்து அவரைத் தமிழராக இனங்காட்டுதல் தவறான பேரினவாத செயற்பாடு.

உயிரியலில் இனம் என்பதற்கான வரைவிலக்கணம் வேறு.. சமூக அடிப்படையில் அதற்கான வரைவிலக்கணம் வேறு..! மனிதன் இனத்துள் இருக்கும் மக்கள் குழுமங்கள் அவற்றின் பெளதீக தோற்றவியல் மற்றும் கலாசார புவியியல் குடியியல் வாழ்வியல் சார்ந்து இனக்குழுமங்களாக வகைப்படுத்தப்படுகின்றனவே தவிர.. மரபணு அடிப்படையில் மக்கள் குழுமங்கள் சமூக இன அடையாளம் இடப்படுவதில்லை, அப்படி இடப்படுவதை அறிவியலாளர்கள் விரும்புவதும் இல்லை. உலகில் தற்போது எங்குமே தூய இனம் என்ற வகைப்படுத்தல் கிடையாது. தமிழர்கள் எவரும் அப்படி வகைப்படுத்தப்படுவதும் இல்லை. ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்துவமானதும் கன்னடர்களிடமிருந்துமான சமூக இனத்துவ வேறுபாடுகள் உள்ளன..!

மேற்குறித்த தகவல் இனம் என்பது தொடர்பாக ஆளாளுக்கு கற்பனை அடிப்படையில் விளக்கம் கொடுக்க முனையப்படுவதை இட்டு தரப்படுகிறது..! :wub:

Link to comment
Share on other sites

திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று சொல்பவர்கள் சரியாக ஆராயும் திறமை அற்றவர்கள்.

திராவிட சிந்தனையின் தோற்றம் தமிழ் தேசிய எழுச்சிக்குத்தான் வித்திட்டது.

திராவிட சிந்தனையால் எந்தத் தமிழர்களும் மற்றைய திராவிட இனங்களோடு கூடிக் குலாவவில்லை. திராவிட சிந்தனை உருவாவதன் முன்பே மற்றைய திராவிட மக்கள் தமிழர்களோடு இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர்களின் பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள்.

திராவிட சிந்தனை என்பது ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்த்து உருவான ஒரு சிந்தனை. அதனால் பார்ப்பனியம்தான் பல இடங்களில் வீழ்ந்திருக்கிறது. தமிழன் தலை நிமிர்ந்திருக்கின்றான்.

தமிழர், தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்களை ஒன்றிணைப்பதற்கு உருவானது அல்ல திராவிடம். ஆரியத்தை வீழ்த்துவதற்கு உருவானதுதான் திராவிடம்.

இதை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் ஏதோ சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்: திராவிட எழுச்சி உருவாகாது விட்டிருந்தால், பார்ப்பனியமும், இந்திய தேசியமும் தமிழினத்தை விழுங்கியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று சொல்பவர்கள் சரியாக ஆராயும் திறமை அற்றவர்கள்.

திராவிட சிந்தனையின் தோற்றம் தமிழ் தேசிய எழுச்சிக்குத்தான் வித்திட்டது.

திராவிட சிந்தனையால் எந்தத் தமிழர்களும் மற்றைய திராவிட இனங்களோடு கூடிக் குலாவவில்லை. திராவிட சிந்தனை உருவாவதன் முன்பே மற்றைய திராவிட மக்கள் தமிழர்களோடு இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர்களின் பகுதிகளை ஆண்டிருக்கிறார்கள்.

திராவிட சிந்தனை என்பது ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்த்து உருவான ஒரு சிந்தனை. அதனால் பார்ப்பனியம்தான் பல இடங்களில் வீழ்ந்திருக்கிறது. தமிழன் தலை நிமிர்ந்திருக்கின்றான்.

தமிழர், தெலுங்கர், மலையாளிகள், கன்னடர்கள் போன்றவர்களை ஒன்றிணைப்பதற்கு உருவானது அல்ல திராவிடம். ஆரியத்தை வீழ்த்துவதற்கு உருவானதுதான் திராவிடம்.

இதை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் ஏதோ சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்: திராவிட எழுச்சி உருவாகாது விட்டிருந்தால், பார்ப்பனியமும், இந்திய தேசியமும் தமிழினத்தை விழுங்கியிருக்கும்.

அதுதான் இப்ப தமிழ் தேசியம் என்பது கோலோஞ்ச ஆரம்பித்துவிட்டதே. அதற்கு பின்னரும் ஏன் திராவிடம் என்ற மாயை காவிக்கொண்டிருக்கிறீர்கள். காலத்துக்கு எது தேவையோ அதை முதன் நிலைப்படுத்தி தமிழினத்தின் இருப்பை உலகில் காக்க முனையுங்கள்.

தமிழர்களே தமிழ் தேசிய எழுச்சியின் தேவை புரியாமல் திராவிட மாயைக்குள் மண்டியிட்டுக் கொண்டு இன்னொரு மாயையான ஆரியவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு பார்பர்னி என்று தமிழனே தமிழனை கூறுபோட்டுக் கொண்டு பிளவுகளை ஆழப்படுத்திக் கொண்டு வாழ்ந்ததும் பிறரால் ஆளப்பட்டதும் போதும்..!

மூவேந்தர்கள் உருவாக்காத திராவிடத்தை ஏன் கன்னடனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கட்டிக்காக்க வேண்டும்..! எமது பண்டைய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் விளங்கிய தமிழ் தேசிய இருப்பை மீண்டும் நிலை நிறுத்தி.. தமிழர்களின் தாய் நிலத்தில் தமிழர்களுக்கான தேசத்தை மீட்பதே இன்றைய தேவை..!

தமிழின எழுச்சி என்பது திராவிடத்தினூடன்றி தமிழ் தேசியத்தினூடு உலகெங்கும் நடைபெற வேண்டும்..! அப்போதுதான் உலகத்தமிழினம் தமிழ் தேசியத்தின் கீழ் தனி ஒரு இன அடையாளத்துக்குரிய மக்கள் குழுமமாக பூமிப்பந்தில் மீண்டும் பரிணமிப்பர்..!

திராவிடம் மூலம் தமிழினத்தின் தமிழ் தேசிய எழுச்சியை மறைத்துவிட முனைவதும்.. திராவிடவாதம் மூலம் தமிழினத்தின் தனித்துவத்தை சிதைப்பதையும் நிறுத்துவது கட்டாய வரலாற்றுத் தேவையாகியுள்ளது..!

தமிழின தமிழ் தேசியம் சார்ந்த ஆய்வுகள் கூட திராவிடத்துக்கு அப்பால் தமிழர் பண்டையம் என்பதன் அடிப்படையில் எழ வேண்டும்..! அதற்கான சரியான சூழல் தற்போது உலகில் தோன்றியுள்ளது.

திராவிட மாயைக்குள் கட்டுண்டு தமிழன் தன்னிலை இழந்தது போதும். ஆரியத்தை வெட்டி விழுத்திறம் பார்பர்னியத்தை வெல்லுறம் என்று தமிழன் தமிழன் என்ற அடையாளத்தை இழந்து அந்நியருக்கு அடிமைப்பட்டு வாழ்ந்த நிலை போகட்டும். மீண்டும் தமிழ் தேசிய அடையாளத்துடன் தமிழர் தேசத்தை மீட்க வேண்டும். திராவிட மாயைக்குள் குளிர் காயும் வரை தமிழ் தேசிய எழுச்சியும் அதன் தேவையும் சரிவர உணரப்படாது என்பதற்கு தமிழ் தேசிய எழுச்சி சுருங்கி திராவிட கழகங்கள் பெருகிக் கிடக்கும் தமிழகமே சான்று..! :wub:

Link to comment
Share on other sites

திராவிடத்தால் வீழ்ந்தோம் புத்தகம் மாதிரித்தான் முறிந்த பனை மரம் என்றும் ஒரு அருமையான புத்தகம் இருக்கு. அதில தமிழீழ மாயையால் எப்படி சிறீலங்காவின் தமிழ்ச் சமூகம் அழிந்து போகுது என்று நல்ல வடிவாக விளங்கப்படுத்தியிருக்கு. தமிழ்நெற்பாணியில் சொல்லுவதானால் Incidently all four who co-authored Broken Palmera hail from Jaffna. How many of them belong to Hindu upper cast is an interesting topic to debate too.

Link to comment
Share on other sites

மனிதன் இனத்துள் இருக்கும் மக்கள் குழுமங்கள் அவற்றின் பெளதீக தோற்றவியல் மற்றும் கலாசார புவியியல் குடியியல் வாழ்வியல் சார்ந்து இனக்குழுமங்களாக வகைப்படுத்தப்படுகின்றனவே தவிர.. மரபணு அடிப்படையில் மக்கள் குழுமங்கள் சமூக இன அடையாளம் இடப்படுவதில்லை, அப்படி இடப்படுவதை அறிவியலாளர்கள் விரும்புவதும் இல்லை. உலகில் தற்போது எங்குமே தூய இனம் என்ற வகைப்படுத்தல் கிடையாது. தமிழர்கள் எவரும் அப்படி வகைப்படுத்தப்படுவதும் இல்லை. ஆனால் தமிழர்களுக்கு என்று தனித்துவமானதும் கன்னடர்களிடமிருந்துமான சமூக இனத்துவ வேறுபாடுகள் உள்ளன..!

கலாச்சார குடியியல் வாழ்வியல் சார்ந்தே இனக்குழுமங்கள் வகைப்படுத்தப்படுகின்றன என்றால் எங்கனம் பெரியார் கன்னடர் ஆக முடியும்? அவரும் அவர் போன்ற பலரும் (வைகோ கருணானிதி எனப் பலர்) கலாச்சரா குடியியல் வாழ்வியல் சார்ந்து தமிழராகவே வாழ்ந்தனர், அவர்களின் மூதாதையர் பண்டைய சேர பாண்டிய நாடுகளின் வழித் தோன்றல்களாக இருப்பதால் எங்கனம் அவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது.எவரும் தம்மைத் தமிழர்களாக அடையாளம் காட்டும் போது அவர்கள் தமிழர்கள் தான்.இந்த வகையிலையே தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடரும் இலங்கையில் மலையகத்தில் வாழும் தெலுங்கு கன்னட இன மூதாதையரை உடைய மக்களும் தமிழைப் பேசி தமிழ் கலாச்சாரா வாழ்வை வாழ்ந்து தம்மைத் தமிழராகவே இனங்காட்டுகின்றனர்.

யாழ்ப்பணத்தவரின் அடி கேரளாவாக இருக்கும் போது யாழ்ப்பாணத்தவரை மலையாளிகள் என எவ்வாறு அழைக்க முடியாதோ எவ்வாறு சிங்களவராக தன்னை அடையாளம் காட்டும் ஜெயராஜ் fஎராண்fஓபிள்ளை தன்னைத் தமிழராகக் கருத முடியாதோ, இனத்துவ அடையாளாம் என்பது ஒவ்வொருவரினதும் சுயமான தெரிவு, அது கலாச்சார வாழ்வியல் நெறிகளின் அடிப்படையிலையே தீர்மானிக்கப்படுகிறது என்பதே இங்கே பல இடங்களிலும் சுட்டிக் காட்டப்பட்டது.அதற்கு மாறாக பெரியார் கன்னடவழிதோன்றலை உடையவர் அதனால் அவர் கன்னடர் தமிழர்களுக்கு விரோதமானவர் என அவர் மீது அவதூற்றைப் பொழிய வேண்டும் என்பதற்காக எழுதுவது என்பது இன வெறியின் பாற்பட்ட சிறுமையான கருத்தாடல் .

குணா என்பவர் ஒரு தமிழ் இன வெறியர் என அடையாளம் காட்டப்பட்டு பலராலும் ஒதுக்கப்படவர்.தமிழ் நாட்டில் பன் நெடுங்காலமாக வசிக்கும் இன்று தமிழராகவே தங்களை அடையாளம் காட்டும் தெலுங்கு கன்னட மூதாதையரை உடைய மக்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரியவர்.

தேசிய விடுதலை என்பது அடக்கப்படும் ஒரு இனம் தன் விடுதலைக்காக எடுக்கும் ஒரு எதிர் நிலைத் தேசியமாகவே இருக்க வேண்டும்.இன்னொரு இனத்தையோ மக்களையோ அடக்கவோ அவர்களைத் தூற்றவோ பயன் படும் போது அது இன வெறியாக மாறுகிறது.சிங்கள பவுத்த இனத் தேசிய எழுச்சியும் இன வெறியாக அவ்வாறே மாறியது.இங்கு நெடுக்காலபோவான் காட்டுவது அத்தகைய இன வெறியே.

தமிழ்த் தேசியம் என்பது அடக்கு முறையில் இருந்தும் விடுபடப் போராடும் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியே தவிர மற்ற இனத்தவரைத் தூற்றவோ இகழவோ வாழும் நிலங்களில் இருந்து வெளியேற்றவோ உருவான தேசிய இன வெறி அல்ல. இவ்வாறான இனவெறிக்கும் அறிவியலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அய்யா நெடுக்காலபோவான் உங்கள் வழிக்கே வருகின்றேன்.

பெரியார் செருப்பு மாலை சாத்தி தெய்வ நிந்தனை செய்தார் என்கிறீர்கள்.

சரி உங்கள் கடவுள் தான் எல்லாம் வல்ல பரம் பொருளாயிற்றே. அப்படியான இறைவன் ஒரு அற்ப மானிடன் ராமசாமியாலா களங்கப்பட்டுவிடுவார்? அவர் (கடவுள்) தான் ஏல்லாவற்றையும் பொறுத்தருளும் பெருந்தகையாயிற்றே. அவரே பெரியாரின் பாவங்களுக்கேற்ற தண்டனை தருபவராயிற்றே. பிறகேன் நீங்கள் கவலைப்படுகிறீர்கள்?

நீங்கள் கொதிப்பதைப்பார்த்தால் கடவுள் என்பவர் உங்கள் (பக்திமான்கள்) அரசியல் தலைவர் போலல்லவா உள்ளது. இது மதவெறியல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாச்சார குடியியல் வாழ்வியல் சார்ந்தே இனக்குழுமங்கள் வகைப்படுத்தப்படுகின்றன என்றால் எங்கனம் பெரியார் கன்னடர் ஆக முடியும்? அவரும் அவர் போன்ற பலரும் (வைகோ கருணானிதி எனப் பலர்) கலாச்சரா குடியியல் வாழ்வியல் சார்ந்து தமிழராகவே வாழ்ந்தனர், அவர்களின் மூதாதையர் பண்டைய சேர பாண்டிய நாடுகளின் வழித் தோன்றல்களாக இருப்பதால் எங்கனம் அவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது.எவரும் தம்மைத் தமிழர்களாக அடையாளம் காட்டும் போது அவர்கள் தமிழர்கள் தான்.இந்த வகையிலையே தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னடரும் இலங்கையில் மலையகத்தில் வாழும் தெலுங்கு கன்னட இன மூதாதையரை உடைய மக்களும் தமிழைப் பேசி தமிழ் கலாச்சாரா வாழ்வை வாழ்ந்து தம்மைத் தமிழராகவே இனங்காட்டுகின்றனர்.............
நல்ல பகிடி. தன்னைக் கன்னடர் என்று நிறுவிய ராமசாமி தமிழர் என்று ஆகலாமாம். ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பு வந்து தமிழரோடு இணைந்ததாகக் கருதப்படுகின்றவர்களும், தமிழில் பல படைப்புக்களையும், ஆக்கங்களையும் தந்து தமிழின் வளர்ச்சிக்கு உதவிய பிராமணர்கள் தமிழரில்லையாம்.

தமிழ்மொழி பேசுகின்ற அல்லது, தமிழனாகவே நினைத்து வாழ்கின்றவர்கள் எல்லோரும் தமிழர்கள் தாம். அவர்கள் வெள்ளையர்களாக்க கூடக் இருக்கலாம். அதில் எவ்வித தவறுமில்லை. ஆனால் ஒரு தரப்பைத் தமிழர்கள் என்று கொஞ்சிக் கொண்டும், அவர்களைப் போன்ற இன்னுனொரு தரப்பை தமிழர்களில்லை என்று சொல்வதற்கும் எவருக்கும் உரிமம் கிடையாது.

எல்லோரையும் தமிழர் என்று மதிக்கத் தெரிந்திருந்தால் ராமசாமியும் தமிழன் ஆகியிருப்பான். ஆனால் மற்றவர்களைத் தமிழிரில்லை என்று சொன்ன அவனுருக்கு தமிழன் என்ற ஸ்தானத்தை வழங்கிட முடியாது. அவர் கொன்ன கொள்கைப்படி அவர் ஒரு கன்னடமனிதனே!

குணா என்ற வெறியர் ஒதுக்குப்பட்டார் நியாயமானது. ஆனால் ராமசாமி என்ற வெறியர் ஏன் ஒதுக்குப்படவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிபட்ட தலைப்பில் விபாதிப்பதில் என்ன இலாபம் காணுகின்றீர்கள்?.

இதனால் உங்கள் அறிவு வழருகின்றதா?

இந்த தலைப்பை விபாதிப்பதால் ஈழத்தமிழருக்கு எதாவது நன்மையுண்டா?

யாரோ பெரியார் என்று புலம்புகின்றிர்கள்.... அவர் ஈழதமிழர் பற்றி ஏதும் சொல்லியிருக்காரா?

இந்த பெரியார் என்பவரும் இரண்டு பெண்டாட்டிகாரரா? தெரியாமல் தான் கேட்கிறேன்.

இல்லை நீங்கள் எல்லோரும் பாப்பாணர்கள்...ஆனால் யாழ் களத்தில் வந்து தமிழ் ஈழத்தவர்கள் போல நடிக்கின்றீர்களா?

ஈழத்தமிழர்களை முட்டாளாக்குவதற்காகவே சில இந்திய அடிமைகள் அல்லது பாப்பாணர்கள் இப்படியான ஆக்கங்களை பிரசுரித்து தமக்குள் தாமே வாதிடுவார்கள். இதில் நாம் அவதானமாக இருத்தல் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பகிடி. தன்னைக் கன்னடர் என்று நிறுவிய ராமசாமி தமிழர் என்று ஆகலாமாம். ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பு வந்து தமிழரோடு இணைந்ததாகக் கருதப்படுகின்றவர்களும், தமிழில் பல படைப்புக்களையும், ஆக்கங்களையும் தந்து தமிழின் வளர்ச்சிக்கு உதவிய பிராமணர்கள் தமிழரில்லையாம்.

தமிழ்மொழி பேசுகின்ற அல்லது, தமிழனாகவே நினைத்து வாழ்கின்றவர்கள் எல்லோரும் தமிழர்கள் தாம். அவர்கள் வெள்ளையர்களாக்க கூடக் இருக்கலாம். அதில் எவ்வித தவறுமில்லை. ஆனால் ஒரு தரப்பைத் தமிழர்கள் என்று கொஞ்சிக் கொண்டும், அவர்களைப் போன்ற இன்னுனொரு தரப்பை தமிழர்களில்லை என்று சொல்வதற்கும் எவருக்கும் உரிமம் கிடையாது.

எல்லோரையும் தமிழர் என்று மதிக்கத் தெரிந்திருந்தால் ராமசாமியும் தமிழன் ஆகியிருப்பான். ஆனால் மற்றவர்களைத் தமிழிரில்லை என்று சொன்ன அவனுருக்கு தமிழன் என்ற ஸ்தானத்தை வழங்கிட முடியாது. அவர் கொன்ன கொள்கைப்படி அவர் ஒரு கன்னடமனிதனே!

குணா என்ற வெறியர் ஒதுக்குப்பட்டார் நியாயமானது. ஆனால் ராமசாமி என்ற வெறியர் ஏன் ஒதுக்குப்படவில்லை

நிச்சயமாக அவர் தமிழன் இல்லை. தமிழுக்காக தான் போராடுவதாக அவர் ஒரு போதும் சொன்னதும் இல்லை. நீங்கள் ஏன் அவரை ஒரு தமிழர் தலைவரென வைத்து குழப்பியடிக்கிறீர்கள்?

அவர் ஒரு புரட்சியாளன்.

மூட நம்பிக்கையையும், அதற்கு மூல காரணமான இந்து மதத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

சாதி என்னும் பெயரில் சிலர் மிதிக்கப்படுவதையும், சிலர் தலை மேல் வைத்துப் போற்றப்படுவதையும் எதிர்த்தார்.

அது பிழை என்று சொல்கிறீர்களா?

அதை ஒரு சுத்தத் தமிழன் மாதிரம் தான் செய்யலாம் என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கோள் போட்டு எழுதுவது எதற்காக என்பது குறித்துத் தனியாகப் பாடம் எடுக்க வேண்டு;ம போலுள்ளது. இங்கே நடக்கின்ற விவாதங்களை அவதானிக்காமல் கதைத்தால் நாம் என்ன செய்வது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.