Jump to content

என் தேசம்


Recommended Posts

குருதி ஓடையும்

பிண வாடையும்

என் தேசத்து

தெருக்களில்...

உயிர் சுமந்து

இருப்பதில் சில

சுமந்து

இடையில் குழந்தை

சுமந்து

நடையில் என் தேசத்து

எல்லை கடக்கின்றனர்

மக்கள்!

என் மண்ணின்

உயிர்

ஆயிரமாயிரம்

'பூட்ஸ்' கால்களின்

காலடியில் நசுங்குண்டு

சுதந்திர தாகத்தோடு

காத்திருக்கிறது!

பலிகள் பல கொடுத்து

நரிகளின் ஊளை கேட்டு

பரிகளாகி மேனி விடைத்து

அரிகளின் தேகத்தை

'ரவை' களால் கிழித்து

கரிகாலன் கண்ணசைவில்

பாய்கின்றனர் புலிகள்!

இருந்தும்

அரசு கட்டில்

அமர்ந்திருக்கும்

ஆந்தைகள் அலறும்

ஒலி கேட்டு

காது பொத்தி

'அடைத்த செவியினர்'

ஆக வெளிநாடுகள்!

படை மட்டும்

நடாத்தி

கிடைப்பதல்ல வெற்றி!

சடை நிறைய

ஈரோடு பேன்

ஓடும்

அரசியல் அரங்கமேறி

உரை செய்தெம்

ஞாயம் சரியென

செவிகள் தோறும் சொல்லி

மரை கழண்ட

எம் நாட்டு

அரசியல் வாதிகளின்

செவிகள் திருகி

ஞானம் தருவதே

வெற்றி!

நான் ஒரு

கோழையாய்

சில சேதிகள்

சொன்னேன்!

ஆனாலும்

மறுபடியும்

மனசுக்குள் கனவொன்று

விரியும்...

அது

என் கடவுச் சீட்டில்

என் நாடு

'தமிழீழம்'

என்றிருப்பது!

--------------------

புரட்டாதி 2007

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.