Jump to content

இந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் உண்மையில் யார்? -மயூரன்-

இன்று விஞ்ஞானம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. வான்வெளியில் விண்கலங்கள் ஏவுகணைகள். எனப்பல விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

இவைகள் அனைத்தும் விண்வெளி உலகின் தத்துவமேதை எனப்படும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரின் தீர்க்க தரிசணத்தால் உருவானவையே இன்று உலகத்தில் நாம் வானை அளந்துகொண்டிருக்கின்ற விமானங்களுக்கு ஆதாரமிட்டவர்கள் ரைட் சகோதரர்களே (1903) என உலகம் புழகாங்கிதம் அடைந்தாலும் உன்மையில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரே 1894ஆம் ஆண்டு அவர் இந்தசாதனையை நடாத்தி முடித்தார்.

உலகில் உள்ள பல நாட்டு நூல்களிலும் விமானங்கள் ஏவுகணைகள் பற்றிய செய்திகள் காணப்பட்டாலும் கூட தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மிகப்பழைய காலம் முதலே இவை பற்றி குறிப்புக்கள் காணப்படுவதோடு அவற்றின் அமைப்பு முறைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து விமானத்தின் முன்னோடிகள் நம் மூதாதையர்களான இந்துக்களா? என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்து

ரிக்வேதம். இராமாயணம். மகாபாரதம். சமரங்கன சூத்திரா. வைமானிக சாஸ்திரம் எனப்பழைய நூல்களில் விமானம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது. இவை வெறும் கற்பனையில் உருவானவை என்றோ மூடநம்பிக்கையை விதைக்கின்ற புராண இதிகாசங்கள் என்றோ நம்மால் அப்படியே ஒதுக்கி விடவும் முடியவில்லை.

ரிக் வேதமானது நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கருதப்படுகிறது. இதில் போர்க்கடவுளான இந்திரன் விமானரதத்தில் பறந்து வந்து அசுரர்கள் மீது போர் நடத்தியதாகவும் மயன் இவ் வானவூர்தியை ஓட்டியதாகவும் தகவல்கள் உள்ளன அத்துடன் வருணன் போன்ற தேவர்கள் மிகச்சிறந்த வானவ+ர்தியில் வானவெளியில் சென்றதாகவும் புஷன் என்பவன் மிகச்சிறந்த ஓட்டியாக திகழ்ந்தான். என்ற குறிப்பும் காணப்படுகிறது. இது கற்பனையில் உருவானது எனக்கூறினாலும் வானில் பறப்பது சாத்தியமே எனக்கூறியதிலிருந்து விமானத்தின் முன்னோடிகளாக எமது இந்துக்கள் திகழ்ந்தனர் எனக்கருதவும் இடமுண்டு.

அடுத்து இராமாயண காலத்தில் இராவணன் என்னும் தமிழ் மன்னன் புஷ்பக விமானத்தில் பறந்ததாகவும். மயன் என்பவனின் கைவண்ணத்தினால் இது உருவாகியதாகவும். குபேரன் என்னும் மன்னனுக்கே இப்புஷ்பக விமானம் சொந்தமானது எனவும் இதை இராவணன் கைப்பற்றி அதில் அவன் விண்வெளி முதல் கொண்டு பல உலகங்களையும் சுற்றி வந்தான் எனவும் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இது வால்மீகியின் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் இவற்றை ஆதாரப்படுத்துவது போல் இலங்கையிலே நுவரேலியா என்னும் மாவட்டத்திலே இராவணன் என்னும் மாமன்னன் இராமரின் மனைவியான சீதையை சிறை வைத்ததாகக் கூறப்படும் சீதாஎலிய என்று ஒரு இடம் உண்டு. இந்த இடத்திலிருந்து உலகத்தின் முடிவு (World End ) என்று அழைக்கப்படும் இடம் நோக்கி கிட்டத்தட்ட 8 மைல் தூரம் வரை சென்றால் குவான் பொல (Guvaan Pola) என்ற இடத்தை அடையலாம் இச் சிங்களப் பெயரின் தமிழ் வடிவம் விமானச்சந்தை என்பதே இந்த இடத்தில் விமானத்தின் இரு ஓடுபாதைகள் இருந்ததற்கான அடையாளங்களாக மலையில் நீண்ட மலைச் சமவெளிகளைக் கொண்டஇரு பிரதேசங்கள் உண்டு. இது இராவணன் பயன் படுத்தியதாகக் கூறப்படும் புஷ்பக விமானத்தின் ஓடுபாதை என்பது பலரது கூற்று. இதை உறுதிப் படுத்துவது போல் 1971ஆம் அமெரிக்க புவியியல் ஆய்வாளர் ஒருவர் இராவணன் என்றதொரு தமிழ் மன்னன் வானவூர்தியுடன் சிறப்பான ஆட்சி செய்தான். என்பதனை அறிந்து இப்பிரதேசத்திற்கு வந்து இப்பிரதேசத்தினை ஆராய்ந்து இது இராமாயணத்தில் வரும் இராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தின் ஓடுபாதையாக முன்னர் இருந்திருக்கலாம் எனவும். அதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. என்று தனது நூலில் கூறியுள்ளார். இதுவும் அவரின் கற்பனை என்று கூடக் கூறலாம்.

இக்கருத்துக் கூட கற்பனை என்று மட்டுமே நம்மால் எண்ண முடிகின்றது. உண்மையில் விஞ்ஞானக் கருவிகள் இருக்க முடியாத அந்தக்காலத்தில் ஆகாயத்தில் விமானங்கள் மூலம் பறப்பது பற்றியும் பல மைல்கள் ஏவுகணைகள் போல நெடுந்தூரம் தாண்டிச் சென்று தாக்கக் கூடிய அஸ்திரங்கள் பற்றியும் எப்படி அவர்களால் கற்பனை கூடச் செய்ய முடிந்தது. என்று நாம் சற்று நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாகவும் எம் இந்துக்களான பழந்தமிழர் விமானத்தின் முன்னோடிகள் தானா ஆராயவும் தலைப்பட்டவர்களாக உள்ளோம். அத்துடன் மயனால் எழுதப்பட்ட மயன் மதம் என்னும் நூலிலும் அதன் விளக்க உரை காட்டும் நூலிலும் வானவூர்தியைப் பற்றியும் அவைகளின் அமைப்புமுறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமரங்கன சூத்திரா 11ம் நூற்றாண்டில் இராமச்சந்திர தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது என்பார்கள் இதில் வானவெளிக்கப்பல்கள் எப்படிச் செலுத்தப்பட்டன. அதன் அமைப்பு முறை. என்பன பற்றி விரிவாகக்கூறுகின்றன. அதில் மூன்று விதங்களில் வான்வெளிக் கப்பல்களைச் செலுத்த முடியும் என்கிறது.

1. கீழிலிருந்து(பூமியிலிருந்து) விண்ணை நோக்கிப் பறப்பது.

2. வானவெளியில் பல திசைகளில் பறப்பது.

3. மேலிருந்து (விண்ணிலிருந்து) கீழே இறங்குவது. (பூமி நோக்கி வருதல்)

சில வான்வெளிக் கப்பல்களில் சூரியமண்டலம். மற்றும் நட்சத்திரங்கள் வரை சென்றுவர முடியும் என்றும் இவை மிக வேகமாகச் செல்லக்கூடியவை. அத்துடன் அவை பூமியிலிருந்து பறக்கும் போது அதன் ஒலி புவியில் உள்ளவர்களுக்கு மிக மெல்லிதாகவே கேட்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் வான்வெளி விமானங்கள் விண்வெளியில் ஏவப்படும் போர்க்கருவிகள் பற்றியெல்லாம் கூறப்பட்டாலும் கூட இதில் சில விடயங்கள் இருந்திருக்கலாம் என்று கருதலாமே தவிர. அவை இருந்தன. என்று கூறுவதற்கு புராண இதிகாசங்கள் ஆதாரமாகிவிடாது. அத்துடன் இதில் வரும் பாத்திரங்கள் கடவுளாகவும் அவதாரங்களாகவும் இருப்பதால் அவர்களால் மனிதனால் நடாத்தமுடியாத அற்புதங்களை நிகழ்த்தினார்கள் எனச்சொல்லலாம். நம்முன்னோர்கள் கர்ன பரம்பரையாகச் சொல்லப்பட்ட கதைகளை காவியமாக வடித்தனர் இருந்த போதும் அந்தக்காவியங்களில் கற்பனை இடம் பெறுவது தவிர்க்க முடியாததே. இருந்தபோதும் அந்தக்கால மனிதருக்கு விமானம் பற்றி தெளிவான சிந்தனை வெளிப்பட்டது வியப்பானதே.

அடுத்து வைமானிகா சாஸ்திரம் எனும் நூல் பரத்துவாஜரால் எழுதப்பட்டு இப்போதுள்ள சமஸ்கிருத வடிவில் சுப்புராய சாஸ்திரியால் உருவாக்கப்பட்டது. எனினும் இதை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் இதனை பறக்கும் சாஸ்திரம் பற்றிய விஞ்ஞானம் என்றே குறிப்பிட்டுள்ளனர். இதில் உள்ள கருத்துக்கள் பழங்கால விஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்டு நவீனகால விஞ்ஞான அறிவையும் மிஞ்சி நிற்கின்றது.

விமானம் என்றால் என்ன என வைமானிகா சாஸ்திரம் இலக்கணம் கூறும் போது ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு காற்று வழியாக பறந்து செல்லும் கருவியே விமானம் என்கிறது. விமானத்தில் 32 சூட்சுமங்கள் இருப்பதாகவும் இவை அனைத்தும் விமானிக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறியதுடன் விமான அமைப்பு. விமானம் பறப்பது (ஏறுவது). இறக்கும் போது விமானத்தின் கட்டப்பாடு. எனும் 3 தலைப்புக்களில் இந்த 32 சூட்சுமங்களும் அடக்குகின்றன.

அத்துடன் இதில் (வைமானிகா சாஸ்திரம்) விமான ஓட்டத்தைப் பதிவு செய்யும் கருவி. விமானத்திலிருந்து எதிரிகளைத் தாக்கும் ஏவுகணைகள். விஷவாயுக்கள். இறக்கைகளை நீட்டுவதும் மடக்குவதும். பருவ நிலைகளை உணர்த்தும் அமைப்பு சூரிய சக்தியைப் பயன்படுத்துதல். விமான ஓட்டி அணிய வேண்டிய உடை. உணவுப்பழக்க வழக்கம். விமானம் செய்யப் பயன்படுத்தப்படும் உலோகம். என்பன பற்றியெல்லாம் விரிவாகக் கூறுகின்றது.

குறிப்பாக விமானம் செய்யப்பயன்படும் உலோகம் பற்றிக் கூறும் போது வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும் உலோகமே உகந்தது எனக் கூறுகிறது. அத்துடன் விமானம் செய்யப் பயன்படும் உலோகங்களின் வகைகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் விமானத்தில் ஏழுவகையான கண்ணாடிகளும் லென்சுகளும் பொருத்தப்பட வேண்டும் இந்தலென்சுகள் ஆயுதங்களைப் பிரயோகிக்க உதவியதாகவும் இந்த வைமானிகா சாஸ்திரம் கூறுகின்றது.

அத்துடன் எதிரி விமானியின் கண்களை இருட்டாக்க லென்சுகளைப் பயன்படுத்த வேண்டும். என்றும் சூரிய ஒளியில் மின்சத்தியைப்பெற்று அதன் மூலம் எதிரி விமானிகளை அழிக்கும் முறைகளையும் கூறிப்பிட்டுள்ளது.

இது நவீன விமானத்தின் லேசர் தொழில் நுட்பத்தையும் விஞ்சி நிற்பதிலிருந்து விமானத்தின் முன்னோடிகள் எம் மூதாதையர்களா? என எண்ணத் தோன்றுகிறதல்லவா.

மேலும் ஏழு மோட்டார்கள் மூலம் இவ்விமானங்களை இயக்க சக்தி கிடைப்பதாகவும். சூரியசக்தி. இரசாயண சக்தி. மின்சக்தி. என்பவற்றின் மூலம் விமானம் முன்னோக்கி செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பறப்புக்களை மேற்கொண்டதாகவும் இதில் பெரும்பாலும் சூரியஒளியே பயன்படுத்தப்பட்டது. எனும் தகவலும் (வைமானிகா சாஸ்திரத்தில்) உள்ளது.

இந்தத்தகவல் நமக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது. அல்லவா!. அத்துடன் இதில் ருக்ம, சுந்தர, திரிபுர, சகுண, என நான்கு வகையான விமானவகைகள் இருந்ததாகக் கூறுகின்றது. அதில் ருக்மவிமானம், சுந்தவிமானம், ஆகியன சந்திர மண்டலத்திற்குச் சென்ற அப்போலோ விண்கலத்தை போன்ற அமைப்புடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திரிபுர விமானம் தரையிலும் நீரிலும் செல்லக்கூடியது. இதன் வேகம் குறைவானது. என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சகுன விமானமானது நம்முடைய நவீன விமானத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடைப்பட்ட அமைப்பைக்கொண்டது. இந்த விமானம் மூலம் எந்தக் கிரகத்திற்கும் சென்றுவர முடியும். என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இது வெறும் கற்பனையில் உருவான நூல் (வைமானிகா சாஸ்திரம்) என்று கூறமுடியாதுள்ளது. எனினும் அவற்றை கற்பனை எனக் கூறினாலும் அதில் உள்ள விமானம் பற்றி வியத்தகு நவீன தொழில் நுணுக்கங்கள் பற்றி பழங்கால மனிதன் ஒருவனுக்குத் தெரிந்திருந்தது வியப்பானதே.

சங்க இலக்கியமான புறநானூறு மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, போன்றவற்றிலும் வானவூர்தி பற்றிய கருத்து காணப்படுகிறது. பெருங்கதை என்னும் பழந்தமிழ்க் காவியத்தில் வானவூர்தி வடிவமும் அதை இயக்கும் விதமும் விவரிக்கப்பட்டுள்ளன.

சீவகசிந்தாமணியில் வரும் மயிற்பொறியின் (மயில் போன்ற பறக்கும் பொருள்) செய்தியானது நமக்கு வியப்பினை ஏற்படுத்துகிறது.

அதன் பொறியினை வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அம்மயிற் பொறி வானமேகங்களிடையே பறக்கவோ காண்பவர் மயிர்சிலிர்க்கும் வகையில் தரையில் இறங்கச்செய்யவோ முடியும் என்கின்றது அந்நூல்.

இராமாயணத்தில் இராவணன் செலுத்திய புட்பக விமானம் சீவகசிந்தாமணியில் விவரித்த மயிற்பொறி விமானத்தை விட எல்லாவகையிலும் மேம்பட்டது என்கின்றனர் சான்றோர். மணிமேகலையிலும் கூட வான்வழிப் பயணங்கள் பற்றிச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரத்திலும் வானவூர்தி பற்றிய செய்திகள் காணப்படுகின்றது. சங்கஇலக்கியமான புறநானூற்றில் வலவன் ஏவா வான ஊர்தி (புறம் -27. 8) என்ற வரி விமானத்தை ஓட்டுபவர் இல்லா வானவூர்தியைக் கொண்டிருந்தான். என்கின்ற கருத்து நம் தலையைச் சுற்ற வைக்கின்றது. விமான ஓட்டியை வலவன் எனஅழைக்கின்றது புறநானூறு. இது நிச்சயமாக கற்பனையில் உருவான கதை என கூற முடியாது.

புறநானூற்றுத்தமிழன் உண்மையில் நமக்கு முன்னோடிகளே! அந்த முன்னோட்டத்தை இன்றைய தமிழராகிய நாம் உணரவில்லை மாறாக தமிழை மறக்கவே முனைவது கவலையையே தருகின்றது. ஒரு காலத்தில் கற்பனையாக இருப்பது பிறிதொரு காலத்தில் நிஜமாகி விடுவதுண்டு உதாரணமாக ஜூல்வொர்னி என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உலகைச்சுற்றிவர எண்பது நாட்கள் எனும் கற்பனை நூலில் நீருக்கடியில் செல்லும் கப்பல்கள். சந்திர மண்டலத்திற்கு வான்வெளிக்கப்பல்களின் மூலம் பயணம் செய்வது பற்றியெல்லாம் எழுதியிருந்தார் ஆங்கிலத்தில் விமானப் பயணம் பற்றி எழுந்த நூல்களில் இதுவே முக்கியமானதாகும்.

பொதுவாக ஆங்கிலத்தில் எழுந்த நூல்கள் எல்லாம் பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் பின்னரே எழுந்தது எனலாம் விண்ணியல் பற்றிய வரலாற்றை இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் அறிந்திருந்தது. ஆனால் இது எங்கே அறிமுகமானது எனத்தெரியவில்லை. தமிழில் மட்டுமல்ல வேறு மொழிகளிலும் இவைபற்றிய அறிவுகாணப்பட்டது.

1232 களில் சீனத்தார்த்தாரி இனத்தவர்கள் ராக்கட்கள் பயன்படுத்தியதற்கான வரலாற்றுச்சான்றாக மொங்கோலிய அரசனான ஜெங்கிஸ்கானின் மகனான ஒக்டாயின் தலமையின்கீழ் மொங்கோலியர்கள் சீனத் தார்த்தாரியர்களின் காய்பெங்பூ நகரைத்தாக்கியபோது சீனர்கள் தமது நகரைக்காக்க ராக்கட்களை பயன்படுத்தினர். என்பதிலிருந்து அவர்கள் வானியல் பற்றி அறிந்திருந்தனர். என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

ஆனால் இது பிற்பட்ட காலத்திலேயே இதை இவர்கள் அறிந்திருந்தனர் எனவே விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் நிச்சயமாக இந்துக்களாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது.

மேலும் கி.பி.1280ல் ஹசன் அல்ரமா என்பவரால் அரபு மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதி ஒன்றில் ராக்கட்களை அமைப்பது விண்வெளியில் பயணத்தை மேற்கொள்வது அவற்றை எப்படி அமைப்பது வெடிமருந்து தயாரிப்பது என்பதுபற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது. ஆங்கிலேயருக்கெதிராக 1780இல் இளவரசன் ஹைதர்அலிகான் ராக்கட் தாக்குதல் செய்து ஆங்கிலேயரை வியப்பில் ஆழ்தினான் என்றுஒரு குறிப்பும் உண்டு.

இவையும் பிற்பட்ட காலத்தில் எழுந்தவைகளே எனலாம். அத்துடன் கிறிஸ்துவின் காலத்திலும் வானதேவதைகள் பற்றிக் குறிப்பிட்டாலும் அதற்கு முன்னரே இந்து இலக்கியங்களில் விமானம் பற்றிய சிந்தனை காணப்படுகிறது.

சீன. மற்றும் இலத்தீன் மொழிகளில் விமானம் பற்றிய செய்திகள் அந்நூல்களில் காணப்பட்டாலும் அவை எல்லாம் பிற்காலத்தில் எழுந்தவைகளே! எனலாம் ஆகவே இந்துதர்மத்தைக் கூறுகின்ற புராணங்கள். இதிகாசங்கள் காப்பியங்கள். ஆகியவற்றில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே விமானம் பற்றிய சிந்தனை இருந்திருக்கின்றது.

இதிலிருந்து விமானத்தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் இந்துக்களாகவே இருந்திருக்கின்றார்கள் என்ற கருத்தே முதன்மை பெறுகின்றது. இவை கற்பனைக்கதை எனக் கூறினாலும் இதிலுள்ள விமானத் தொழில்நுட்பம் வியப்புக்குரியதே.

http://www.pathivu.com/index.php?subaction...mp;ucat=35&

http://www.sooriyan.com/index.php?option=c...3&Itemid=32

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இராவணன் எப்படி திடீர் என்று இந்துவானார்? :huh:

இராவணன் சிவ பக்தன். சிவன் இந்துக்களின் கடவுள்களில் முதன்மையானவர். சைவத்தின் முழுமுதற் கடவுள்.. என்று அடையாளமிடப்பட்டுள்ளார்..!

அதுமட்டுமன்றி இராவணன் சிவபூசை செய்யும் அந்தணனும் கூட..! :D:D

Link to comment
Share on other sites

அப்ப இந்துக்கள் அதிக அளவில் வாழும் இந்தியாவில ஏன் சிவன் கோயில்களை காணக் கடினமாக இருக்கு?

Link to comment
Share on other sites

இந்து மதம் தமிழர்களுடையதா?

தாயகத்து செய்திகளை உடனுக்குடன் தருவதில் முன்னணியில் நிற்கும் இணையத் தளங்களில் "பதிவு" இணையத் தளம் குறிப்பிடத்தக்கது. அதே போன்று "சூரியன்" இணையத்தளமும் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றி வருகின்றது. தேசியத்திற்கான பரப்புரைப் பணியில் இந்த இணையத் தளங்கள் தங்களுடைய பங்களிப்புகளை சிறப்பான வகையில் வழங்கி வருகின்றன

அறிவியல் சார்ந்த பல கட்டுரைகளையும் இந்த இணையத் தளங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மயூரன் என்பவர் எழுதிய ஒரு வெங்காயத்தனமான கட்டுரையை வெளியிட்டு தம்முடைய பெருமைக்கு களங்கம் சேர்த்துள்ளன.

அக் கட்டுரை இதுதான்: http://www.pathivu.com/index.php?subaction...mp;ucat=35&

கட்டுரையில் "நம் மூதாதையர்களான இந்துக்கள்", "எமது இந்துக்கள்" "எம் இந்துக்களான பழந்தமிழர்" போன்ற வசனங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன. இந்துக்கள்தான் விமானத்திற்கான அறிவை முதலில் உலகத்திற்கு தந்தார்களாம். அந்த இந்துக்கள் எங்களுடைய முதாதையர்களாம். என்னே கட்டுரையாளரின் அறிவு!!

ரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்றவைகள் எல்லாம் தமிழர்களின் இலக்கியங்களா? இவைகளுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? அட, இந்து மதத்திற்கும் தமிழர்களுக்கும்தான் என்ன சம்பந்தம்? கட்டுரை எழுதியவருக்கும், வெளியிட்டவர்களுக்கும் வரலாறே தெரியவில்லை. இதில் "அறிவியல்" மட்டும் எப்படி புரிந்து விடும்?

சங்க இலக்கியங்களில், ஐம்பெருங்காப்பியங்களில் வரும் வானூர்த்தி பற்றிய தகவல்களையும் தந்த கட்டுரையாளர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அங்கும் தன்னுடைய இந்துத்துவ வெறியை வெளிப்படுத்துகிறார்.

மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்றவற்றில் உள்ள வானூர்த்தி பற்றிய தகவல்களை கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். சீவகசிந்தாமணி "மயிற்பொறி" என்ற ஒரு வானூர்த்தி பற்றிய தகவலை தருகின்றது. ஆனால் சீவகசிந்தமாணியின் "மயிற்பொறியை" விட இராமாயணத்தின் "புஸ்பகவிமானம்" உயர்ந்தது என்று கட்டுரையாளர் சொல்கின்றார்.

இதில் ஒளிந்திருக்கும் அரசியலை புரிந்து கொள்வது ஒன்றும் கடினம் இல்லை. சீவகசிந்தமாணி சமண சமய தத்துவங்களை சொல்கின்ற ஒரு காப்பியம். ஆனால் "புஸ்பகவிமானத்தை" சொல்கின்ற இராமாயணம் இன்றைக்கு இந்துக்களுடைய காப்பியமாக இருக்கின்றது. சமணம் சொல்கின்ற "மயிற்பொறியை" விட இந்துத்துவம் சொல்கின்ற "புஸ்பகவிமானம்" உயர்ந்தது என்பது மதவெறி மிக்க இந்தக் கட்டுரையாளரின் கருத்து.

இந்தக் கட்டுரையாளருக்கு மதவெறி இல்லையென்றால், "தமிழர்களுடைய முதாதையர்கள் இந்துக்கள்" என்று வரலாற்றையே திரித்திருக்க மாட்டார். தமிழர்களுடைய முதாதையர்களுடைய மதம் இந்து மதம் அல்ல. இந்து மதம் மிகவும் பிற்காலத்தில் தமிழர்களிடம் பரவிய ஒரு மதம்.

தமிழர்களுடைய மூதாதையர்களின் வழிபாடு நடுகல் வழிபாடாகவும் சிற தெய்வ வழிபாடாகவும் இருந்தது. தம்மோடு வாழ்ந்து, தமக்காக சாவடைந்த பெருவீரர்களை போற்றி வழிபட்டார்கள். இந்தச் சிறு தெய்வங்கள் அனைத்தும் பின்பு வந்த இந்து மதத்தால் உள்வாங்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டன. எஞ்சியுள்ள சிறு தெய்வங்கள் கோயிலுக்கு வெளியே நிற்கின்றன.

தமிழர்களுடைய மூதாதையர்களின் காத்திரமான இலக்கியங்களுள் பெரும்பாலானவை சமண, பௌத்த மதத்தவர்களால் உருவாக்கப்பட்டவை. திருக்குறளாக இருக்கட்டும், ஐம்பெரும் காப்பியங்களாக இருக்கட்டும் சமண, பௌத்த மதத்தவர்களால் உருவாக்கப்பட்டவையே.

தமிழர்களுடைய மூதாதையர்களுடைய மதம் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சுட்டிக் காட்டுவது முட்டாள்தனம். அதுவும் தமிழர்களுடைய பல நூல்களையும், நாகரீகத்தையும் அழித்த இந்து மதத்தை சுட்டிக்காட்டுவது பெரும் மோசடியான செயல்.

ரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்றவற்றை எழுதியவர்களுடைய பேரன்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கட்டுரையாளர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் தேசியத்தை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் ஓடியாடிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்தேசியத்தை அழிக்கத் துடிப்பவர்களின் மூதாதையர்களை தமிழர்களுடைய மூதாதையர்களாக காட்டுகின்ற கேவலமான வேலையை யாரும் செய்ய வேண்டாம். அப்படிச் செய்வது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்கின்ற துரோகம் ஆகும்.

சமஸ்கிருத மொழிக்கும் தமிழுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று அறிவியல்ரீதியாக நிறுவப்பட்டுள்ளது. பல மொழியியல் வல்லுனர்கள் பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இதை நிறுவியுள்ளார்கள்.

சமஸ்கிருதம் "இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை" சேர்ந்தது. சமஸ்கிருத மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கியுள்ள வானூர்த்தி குறித்த நூல்களுக்காக, இந்தியாவில் இருக்கும் ஆரியமொழியினரோ அல்லது ஐரோப்பிய மக்களோ பெருமைப்பட்டுக் கொள்ளலாம். தமிழர்கள் இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.

முடிவாக தமிழர்கள் ஒவ்வொரு காலத்திலும் பல வகையான மதங்களை பின்பற்றி வந்திருக்கிறார்கள். நடுகல் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், இந்துத்துவம் என்று பல மதங்களை பல்வேறு காலகட்டங்களில் பின்பற்றியுள்ளார்கள். ஈழத்திலும் ஒரு காலத்தில் பெரும்பான்மையான தமிழர்கள் பௌத்தர்களாக வாழ்ந்துள்ளார்கள்.

ஒரு இனத்தின் மதம் என்றோ, அல்லது அந்த இனத்தின் மூதாதையர்களின் மதம் என்றோ ஒன்றை சுட்டிக்காட்ட முடியாது.

தமிழினத்தோடு எவ்விதத்திலும் பொருந்தாத ஒரு இனம் தன்னுடைய மொழியில் உருவாக்கிய ரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்ற நூல்களை எங்களுடையவை என்று சொல்வது கையாலாகத்தனமானது.

இந்த நூல்களை எம்முடைய மூதாதையர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்வது அறிவுகெட்டத்தனமானது. "தமிழர்களின் மூதாதையர்கள் இந்துக்கள்" என்ற கருத்து எந்த விதத்திலும் அறிவியலோடு சம்பந்தப்படாதது. மதவெறியை வெளிப்படுத்துகின்ற கருத்து இது.

தேசியத்திற்கு பணியாற்றும் ஊடகங்கள் இவ்வாறான கட்டுரைகளை வெளியிட்டு தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

http://www.webeelam.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன், மயூரன் தனது கட்டுரையை பார்பர்ன எதிர்ப்பு என்ற பூஞ்சணம் விழுந்த கண்ணோட பார்க்காமல்.. விமானத் தொழில்நுட்பம் என்ற அறிவியலுக்கான வரலாற்து வடிவம் எங்கிருந்து கிடைத்தது என்பதை இனங்காண முயன்றிருக்கிறார்.

நீங்கள் தான் அதற்கு வெங்காயத்தனமான சமணம்... பெளத்தம்.. மகிந்த ராஜபக்சம்.. என்று என்னென்னவோ விளக்கமெல்லாம் கொடுக்கிறீங்க..!

மயூரனுக்குப் போட்டியா ஒரு கட்டுரை எழுதிறது பெரிய விசமில்ல.. காத்திரமான சான்றுகளைச் சமர்ப்பிக்கிறதுக்கு எந்தத் திராணியும் இல்லாமல்.. " அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.. கும்பிட்டுள்ளனர்" என்று பச்சைப் பசப்பு வார்த்தைகளால் கோலம் போட்டு வழமையான மோசடித்தனத்தைப் புகுத்தி கட்டுரை எழுதிட்டு.. அதனால் வரலாற்றுத் தேடல்களை மலினப்படுத்தலாம் என்று நினைப்பது கனவு..! மயூரனின் பார்வையில் சரி தவறு இருப்பது வேறு விடயம். அதை அலசி ஆராய்வதும் சான்றுகள் தேடுவதும் நல்ல அணுகுமுறை. அதைவிடுத்து வெங்காயம் கத்தரிக்காய் என்று பெண்கள் அவசரச் சமையல் செய்யுறாப் போல கட்டுரை வரையுறது என்பது கேலிக்கூத்தானது. அதற்கும் அறிவியலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது..! :huh:

----------

இந்தியாவில் தென்னிந்தியாவில் மட்டுமன்றி வட இந்தியாவிலும் சிவன் மதிக்கப்படுகிறார். பதி பசு பாசம் என்ற சைவ சிந்தாந்தம் சிந்துவெளியிலேயே வெளிப்பட்டிருக்கிறது.!

இன்றும் கோடான கோடி இந்துக்கள் கங்கைக்குச் சென்று புனித நீராடி வருகின்றனர். சைவர்களின் புனித நதியான கங்கை கூட வட இந்தியாவில் தான் உள்ளது. ஏன் இமயம் கூட வட இந்தியாவில் தான் இருக்கிறது..! :D

450px-Statueofshiva.JPG

இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள சிவன் சிலை.

Shiva is one of the principal deities of Hinduism.

http://en.wikipedia.org/wiki/Shiva

Link to comment
Share on other sites

கௌரிபாலன் தந்த இணைப்புக்களை பாருங்கள். அதிலே "இந்து மதம்" எங்கும் சம்பந்தப்படுத்தப்படவில்லை.

தமிழர்களுடைய முன்னோர்களின் வானூர்த்தி அறிவு பற்றி எழுதப்பட்டுள்ளது.

ஆனால் மயூரனுடைய கட்டுரை அப்படியா?

ஒரு இனத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தோடு சம்பந்தப்படுத்தி வரலாற்றி திரிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ரிக்வேதத்திற்கும் தமிழர்களிற்கும் என்ன சம்பந்தம்?

சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்றவைகளுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இவைகளையும் தமிழர்களையும் தொடர்பு படுத்துவதையும், தமிழர்களின் மூதாதையர்களை இந்துக்கள் என்று சொல்வதையும் "அறிவியல்" குறித்து சிந்தனை உள்ள மனிதன் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கௌரிபாலன் தந்த இணைப்புக்களை பாருங்கள். அதிலே "இந்து மதம்" எங்கும் சம்பந்தப்படுத்தப்படவில்லை.

தமிழர்களுடைய முன்னோர்களின் வானூர்த்தி அறிவு பற்றி எழுதப்பட்டுள்ளது.

ஆனால் மயூரனுடைய கட்டுரை அப்படியா?

ஒரு இனத்தை ஒரு குறிப்பிட்ட மதத்தோடு சம்பந்தப்படுத்தி வரலாற்றி திரிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ரிக்வேதத்திற்கும் தமிழர்களிற்கும் என்ன சம்பந்தம்?

சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்றவைகளுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இவைகளையும் தமிழர்களையும் தொடர்பு படுத்துவதையும், தமிழர்களின் மூதாதையர்களை இந்துக்கள் என்று சொல்வதையும் "அறிவியல்" குறித்து சிந்தனை உள்ள மனிதன் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அப்போ கெளரி இணைத்த கட்டுரையில் கையாளப்பட்ட இராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களை தமிழ் இலக்கியங்கள் என்று ஏற்றுக் கொள்ளுறீங்க. ரெம்பப் பெருமையா இருக்குது...! :D:huh:

"சீவகசிந்தாமணியில் விசயை ஊர்ந்து சென்ற மயிலூர்தியும், கம்பராமாயணத்தில் "ராவணன் சீதையின் குடிலைப் பெயத்தெடுத்துச் சென்ற புட்பக விமானமும் கவனிக்கத்தக்கவை. இதுபற்றி மேனான் தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர். மு. கருணாநிதி அவர்கள் எழுதியுள்ள ஒரு கவிதை இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். அக்கவிதை."

http://www.aaraamthinai.com/sirappuparvai/...pr28sirappu.asp

இராமாயணத்தை ஏற்றுக் கொள்ளும் போது வேதங்களை ஏன் ஒதுக்கனும். தமிழ் மக்கள்... இந்துக்கடவுள்களை வணக்கிற மக்கள் தானே. சைவத் தமிழ் மக்கள் வேத பாராயணம் செய்பவர்கள் தானே...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்னக் கதை சொல்லிகின்றேன். கேளுங்கள்.

ஒரு சீடன் ஒருத்தர், கங்கை நதி எப்படிப்பட்டது, எங்கெங்கே வளையும், எப்படி எல்லாம் திரும்பும் என்பதைப் பற்றி ஆழமாகப் படித்தானாம். படித்துவிட்டு ஒரு நாள் கங்கை நதியில் மேலே படகில் சொன்று பார்ப்போம் என்று போனபோது, அவர் படித்ததற்கும் கங்கைக்கு;ம சம்பந்தமில்லாத மாதிரி இருந்தது.

உடனே, இது கங்கை நதியில்லை வேறு எதையோ ஏமாற்றுகின்றார்கள் எனக் கத்திக் குழறினாராம்.

இப்போது சபேசனுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் எப்படி இந்துக்களுக்கு, அதைச் சொந்தமாக்கலாம் என்பது தான். அவர் படித்தது புராணக்கதைகளும், புராணங்கள் திருவுபட்ட காமக்ககதைகளும் தான். அதற்கு அப்பால் இப்படி ஒரு ஆய்வு வரும் என்பதை எதிர்பார்த்திருக்கமாட்டார்.

கட்டுரையாளர் இந்துக்களைப் பற்றி எழுத, தமிழரும் இந்துக்கள் என மனதாரநம்புகின்ற சபேசன் தமிழரைப் ப்றறி எழுதுவதாக நினைத்து, புலம்புகின்றார். மேலும் கட்டுரையாளர் ரிக்வேதம் மட்டுமல்லாமல், வெளிநாட்டிருந்து வந்தவர்கள், இசுலாமியர்கள் போன்றவர்களையும் தன்னுடைய ஆதாரங்களுக்குப் பயன்படுத்துகின்றாரே தவிர, அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என்று சொன்னதில்லை.

தணிக்கைக்குழுவிற்கு: பாய்தடித்துத் தணிக்கையும், பூட்டும் போட்டு முடக்க முனைவீர்கள் எனத் தெரியும். முதலில் தணிக்கை செய்வதாக இருந்தால், சபேசன் இந்துக்களையும், கட்டுரையாளரையும் வெறியர், அது இது என்றெல்லாம் எழுதியிருக்கின்றார். அதில் முதலில் கை வையுங்கள்.

Link to comment
Share on other sites

//இது கற்பனையில் உருவானது எனக்கூறினாலும் வானில் பறப்பது சாத்தியமே எனக்கூறியதிலிருந்து விமானத்தின் முன்னோடிகளாக எமது இந்துக்கள் திகழ்ந்தனர் எனக்கருதவும் இடமுண்டு.//

உலகில் எல்லாப் பண்டைய நாகரிகங்களிலும் இலக்கியங்களிலும் பறப்பது பற்றிக் கூறப்படுள்ளது.அதனால் அவை எல்லாம் மு நோடிகல் என்று கூறுவது அறிவியலுக்கு ஒவ்வாதது.

//போல் 1971ஆம் அமெரிக்க புவியியல் ஆய்வாளர் ஒருவர் இராவணன் என்றதொரு தமிழ் மன்னன் வானவூர்தியுடன் சிறப்பான ஆட்சி செய்தான். என்பதனை அறிந்து இப்பிரதேசத்திற்கு வந்து இப்பிரதேசத்தினை ஆராய்ந்து இது இராமாயணத்தில் வரும் இராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தின் ஓடுபாதையாக முன்னர் இருந்திருக்கலாம் எனவும். அதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. என்று தனது நூலில் கூறியுள்ளார். இதுவும் அவரின் கற்பனை என்று கூடக் கூறலாம். //

யார் அந்த ஆராச்சியாளர் அவர் எதன் அடிப்படியில் இந்த முடிவுகளுக்கு வந்தார் அவரின் ஆராச்சிக் கட்டுரை எது நூல் எது என்று எந்தத் தகவுலும் இல்லாமால் ஒரு மோசடியான கருத்து.இதனைக் கூறி விட்டு இதுவும் கற்பனையாக இருக்கலாம் என்றுவேறு எழுதுகிறார்.இது மோசடி அல்லாமல் வேறு என்ன?

//கீழிலிருந்து(பூமியிலிருந்து) விண்ணை நோக்கிப் பறப்பது.

2. வானவெளியில் பல திசைகளில் பறப்பது.

3. மேலிருந்து (விண்ணிலிருந்து) கீழே இறங்குவது. (பூமி நோக்கி வருதல்)

சில வான்வெளிக் கப்பல்களில் சூரியமண்டலம். மற்றும் நட்சத்திரங்கள் வரை சென்றுவர முடியும் என்றும் இவை மிக வேகமாகச் செல்லக்கூடியவை. அத்துடன் அவை பூமியிலிருந்து பறக்கும் போது அதன் ஒலி புவியில் உள்ளவர்களுக்கு மிக மெல்லிதாகவே கேட்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. //

மயஜாலப் படங்களுலும் விட்டலாச்சாரியார் கதைகளிலும் கூட இவ்வாறான வர்ணிப்புக்கள் வரும் விமானத்தொழில் நுட்பத்திற்கும் மேற்கூறியவற்றிற்க்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.அடிப்படைப் பொறியியல் அறிவுடைய எவருக்கும் இந்தக் கற்பனைகள் நகைப்புகிடமானவையாக இருக்கும்.

//ஆகவே இது வெறும் கற்பனையில் உருவான நூல் (வைமானிகா சாஸ்திரம்) என்று கூறமுடியாதுள்ளது. எனினும் அவற்றை கற்பனை எனக் கூறினாலும் அதில் உள்ள விமானம் பற்றி வியத்தகு நவீன தொழில் நுணுக்கங்கள் பற்றி பழங்கால மனிதன் ஒருவனுக்குத் தெரிந்திருந்தது வியப்பானதே.//

இந்தக் கடுரையில் கூறப்பட்ட எவையுமே எந்தவொரு நவீன விமனப்பொறியியல் அடிப்படைகளில் இல்லை.எல்லாம் வெறும் கற்பனைகளால் ஆனா கதைகள்.ஒரு தொழில் நுட்பம் என்பது திடீரெனத் தோன்றுவதில்லை.அது தோன்றுவதற்கான அடிப்படை பொறிமுறை பவுதீகவியல்,அதைக் கட்டுவதற்கான உபகரணங்களதை வடிவமைக்கப் பயன் படுத்தப்படும் மூலப் பொருட்கள் என எல்லாம் கண்டுபிடிக்கப் பட வேண்டும்.ஒரு தொடரானன கண்டுபிடிப்புக்களின் பின்னலையே விமானம் என்பது சாத்தியப்படும்.

மிகவும் மட்டமான அறிவுடன் எழுதப்படும் இத்தகைய மோட்டுத் தனமான கட்டுரைகளை பதிவு இணையத் தளம் பிரசுரித்தது வெட்கக் கேடான விடயம்.தொழில் நுட்பம் அறிந்தவர்கள் வாசித்தால் சிரிப்பார்கள்.சரித்திரவியலா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையை விமர்சிப்பதில் தப்பில்லை. ஆனால் ஆ, ஊ என்றால் தாங்கள் இணைக்கின்ற கட்டுரைகளுக்கும், தாங்கள் இணைக்கின்ற கட்டுரையாளரின் விபரங்களையும் பகிர்ந்தால் மற்றவர்களுக்கு இலகுவாக இருக்கும். மேலே சொன்ன கதை தான் அடுத்து வந்தவருக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையின் தன்மை குறித்து சிலர் குழப்பமடைந்த நிலையில் கருத்து வெளியிடுகின்றனர். அவர்களின் ஒரே நோக்கு இந்துக்களும் அவர்களின் மதமும் 0.0000001% கூட அறிவுபூர்வமானதல்ல.. மூடநம்பிக்கைகளின் முதலிடம் மூலதனம் என்று எப்படியாவது சோடிப்பதுதான்..!

கட்டுரை விமான கட்டுமானப் பொறியியல் அல்லது விமானம் செலுத்தும் தொழில்நுட்பப் பயிற்சி எப்படி வழங்கப்படுதல் என்பவற்றுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க என்று செய்யப்பட்ட ஒன்றல்ல. இது ஒரு பூரணத்துவமான அறிவியல் ஆய்வுக்கட்டுரையல்ல. கட்டுரையாளரின் நோக்கம்.. அவரின் எழுத்தை வாசிக்கும் போதே இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

அவரின் நோக்கம் இதுதான்..

மனிதனின் சிந்தனையில் செயற்கையான ஒரு பொறிமூலம்.. மனிதனும் விண்ணில் பறக்க முடியும் என்ற சிந்தனைத் தோற்றத்தின் ஆரம்பம் எது என்பதை இனங்காண்பதாகவே அமைந்திருகிறது.

இது பற்றிய விவாதம் முன்னரும் இராமர் பாலம் தலைப்பில் இடம்பெற்றிருந்தது..! எமது இலக்கியங்கள் -நவகால அறிவியல் அடிப்படைகளுக்கான மனித சிந்தனைகளை தூவி இருக்கின்றன. அதை ஆராய்வது நல்லதென்று கருத்துரைத்திருந்தேன்..! அந்தச் சிந்தனைதான் முக்கியமே தவிர.. அதை சரியான தொழில்நுட்பமாக வடிவமைக்க வேண்டியது பின் வந்தவர்களின் பணி. அதைவிடுத்து புட்பக விமானம் பறந்தது எப்படி.. என்ன ஜெட் இஞ்சின் பூட்டினதா.. சில்லுப் பூட்டினதா.. என்று கேட்பது மிக மோசமான விசமத்தனத்தின் விளைவு..!

விமானம் என்ற ஒன்றை உருவாக்கி மனிதன் பறப்புச் செய்ய முடியும் என்ற சிந்தனையின் வெளிப்பாட்டின் மூலம் எது..??! அதன் பிரதிபலனே இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பிறந்த வானூர்திகள்..! அதற்கான ஒரு தேடல் முயற்சிதான் மேலுள்ள கட்டுரை..!

வலவன் ஏவா வானூர்தி அன்று மனித சிந்தனையில் இருந்திருக்கிறது. இன்று செயலில் இருக்கிறது. எம்மவர்கள் இலக்கியங்களில் இலக்கிய நயத்தை மொழிநயத்தைச் சுவைத்த அளவுக்கு அதன் அறிவியல் சிந்தனையின் வெளிப்பாட்டை இனங்காணவில்லை. இன்றும் அதே இலக்கியங்களை.. எந்த அலசலும் இன்றி.. மூடநம்பிக்கையின் மூலம் என்று குப்பையில் போடுங்கள் என்று சொல்கின்றனர். அவற்றை ஆராய முற்படுவதாக இல்லை.

ஆனால் மேற்குலகத்தவரோ அன்றை ஓவியங்களில் இருந்து பெறப்பட்ட சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு பொறிகளை செய்து பார்த்து தோற்று.. முயன்று.. மீண்டும் தோற்று.. முயன்று.. மாற்றங்களைப் புகுத்தி.. மீண்டும் முயன்று கண்ட வெற்றிகளால் பிறந்தவைதான் இன்றைய பொறியியல்.

நாம் இன்று யாரோ அன்று கஸ்டப்பட்டு சிந்திச்சு செயற்பட்டு கண்டறிந்த விமானப் பொறியியலை அப்படியே கொப்பி பண்ணிப் படிச்சிட்டு.. இஞ்சினியர் என்று கொலரைத் தூக்கிவிட்டு அடுத்தவனைப் பார்த்து நக்கல் பண்ணிட்டு திரியுறதிலேயே ரைம் பாஸ் பண்ணிட்டு இருக்கிறம்.

ஒருவர் இஞ்சினியர் ஆனால் அவர் அடுத்த படிக்கு எப்படி அந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு போகனும் என்று சிந்திக்கிறதில்ல. பட்டத்தை வாங்கி போட்டாவா மாட்டிட்டு.. மணப் பெண்.. தேடிறதும்.. நல்ல சம்பளத்தோட ஒரு ஜொப்பும் எடுத்துக் கொண்டு வெளிநாட்டில செற்றிலாகி பிள்ளை குட்டி பெத்து வளர்த்து அது வளர.. சாவுறதுதான்.. நம்ம அறிவியலுங்க..!

அதுக்க வந்து நீங்கள்.. இராமாயணம்.. வேதங்கள் அறிவியல் சிந்தனைகளைச் சொல்லுதென்று.. போட்டு மூடநம்பிக்கைகளை வளர்க்கிறது.. எவ்வளவு கஸ்டப்பட்டு பணத்தைக் கொட்டி.. இரவு பகலா கணக்கு எழுதி.. பிசிக்ஸ் படிச்சு பொறியியல் படிச்ச எங்களை இன்சல்ட் பண்ணுறதா எல்லோ இருக்குது..! அப்படி என்றால் இராமாயணம் படிபிச்சு எங்களை இஞ்சினியர் ஆக்கி இருக்கலாமே என்று வினவிறதை நாம் பகுத்தறிவின் வெளிப்பாடாக் கருதிறமில்ல..!

ஒரு கட்டுரையையே சரி வர விளங்க முடியாதவர்கள் எல்லாம் என்னத்தைப் படிச்சு என்ன பயன்.

இப்படி அரைகுறையா ஒரு கட்டுரையை நினைக்கிற மனிதரைப் பார்த்தா.. சிரிக்கிறதல்ல.. அழ வேணும் போல கிடக்கு.....! :D:huh:

Link to comment
Share on other sites

//இதிலிருந்து விமானத்தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் இந்துக்களாகவே இருந்திருக்கின்றார்கள் என்ற கருத்தே முதன்மை பெறுகின்றது.//

விமானத் தொழில் நுட்ப்பத்தின் முன் நோடிகள் இந்துக்கள் என்னும் கருத்தை தனது முடிவாகக்கட்டுரையாளர் எழுதி உள்ளார்.இங்கே அவர் தெளிவாகத் தனது கருத்தை முன் வைதுள்ளார்.விமானத் தொழில் நுட்ப்பம் என்பது கற்பனை அல்ல,அது பறப்பதற்கான அவாவும் அல்ல.

இந்தக் கட்டுரைக்கு இங்கே தலைப்பிட்டவர் இப்படித் தான் எழுதி எழுள்ளார்,;இந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம்.;

இந்த மோசடியான கட்டுரையை கட்டுடைத்தால் அதற்கு வேறுவகையான திருப்புக்களை மேற்கொள்கிறார்கள்.மேலே கட்டுரையாளர் எழுதியதே இந்தக் கடுரையாளரின் நோகத்தை மிகத் தெளிவாக் காட்டுகிறது.

தொடர்ந்தும் இவ்வாறுதான் இவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்.இந்து மதவெறிபிடித்த மனநோயாளர்.

இதே போன்று பறப்பது பற்றிய மனிதனின் புனைவுகள், மனித நாகரிகத்தின் பல்வேறு இலக்கியங்களிலும் விரவிக் கிடக்கின்றன.பறவைகளைப் பார்த்து தானும் பறக்க முடியும் பறக்க வேண்டும் என்னும் கனவு மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து இருக்கிறது.ஆனால் மனிதன் பறக்ககூடிய விமானத் த்ழில் நுட்ப்பம் என்பது எப்க்கே எவ்வாறு தோன்றியது என்பது பற்றிய தகவல்கள் மிகத் தெளிவாக ஆவணப்படுத்தப்படுள்ளன இங்கே.

http://en.wikipedia.org/wiki/Aviation_history

Aviation history deals with the development of mechanical flight, from the earliest attempts in kite-powered and gliding flight, to the demonstration of sustained, controlled and powered heavier-than-air flight, and beyond.

Humanity's desire to fly possibly first found expression in China, where human flight tied to kites is recorded (as a punishment) from the sixth century AD. Subsequently, the first hang glider was demonstrated by Abbas Ibn Firnas in Andalusia in the 9th century AD. Leonardo da Vinci's (15th c.) dream of flight found expression in several designs, but he did not attempt to demonstrate flight. It was in post-industrial Europe from the late 18th century that serious attempts at flight took place, with progression from lighter-than-air (hot-air balloons, 1783), unpowered heavier-than-air (Otto Lilienthal, 1891), and finally, powered, sustained, flight (Wright Brothers, 1903).

Since then, Aircraft designers have struggled to make their craft go faster, further, fly higher, and be controlled more easily: List of important factors involved in inventing an airplane:

Control: Initially gliders were controlled by moving one's entire body (Otto Lilienthal) or warping the wings (Wright brothers). Modern airplanes are controlled with the help of control surfaces such as ailerons and elevators, and these are stabilized by a computerized system to the extent that it is not possible to fly certain military aircraft without these controllers.

Power: Aircraft engines have become lighter and more efficient, from Clement Ader's steam engine to piston, jet and rocket engines.

Material: Initially made of canvas and wood, aircraft materials moved to doped fabric and steel tubing, all aluminum monocoque construction (around WWII), and increasingly today, composites.

Link to comment
Share on other sites

List of early flying machines

From Wikipedia, the free encyclopedia

Jump to: navigation, search

The human dream of flight: Utopian flying machines from the 18th Century (illustration from the late 19th Century).This is a listing of early flying machines.

Claims regarding early flying machines vary in countries, books and encyclopedias. They all use different criteria when considering, among others, the validity of a claim, and the meaning of the phrase flying machine. These and other controversial issues are discussed in first flying machine.

In this list, various advancements are presented, including actual flying machines, prototypes, models, designs or important pieces of literature. But note that some of this information is disputed by some sources.

http://en.wikipedia.org/wiki/List_of_early_flying_machines

Literature, myth or designs only

Inventor Accomplishment Year

Indo-European mythology Sun chariot 2nd millennium BC

Greek mythology Story of Daedalus and Icarus 13th century BC

Hindu mythology, Sanskrit epics Vimanas 5th century BC or earlier

Roger Bacon Secrets of Art and Nature: ornithopter design c. 1250

Leonardo da Vinci Ornithopter design and literature c. 1490

Emanuel Swedenborg Flying Machine design and literature 1714

Sir George Cayley The Forces of Flight: technical literature 1799

Le Comte Ferdinand Charles Honore Phillipe d'Esterno On The Flight Of Birds (Du Vol des Oiseaux): technical literature 1864

Louis Pierre Mouillard The Empire Of The Air (L'Empire de L'Air): literature 1865

Horatio Frederick Phillips Sustainer design, literature 1884 - 1907

James Means The Problem of Manflight, Aeronautical Annual literature 1894 - 1897

Martin Wiberg Patent for design of "Luftmaskin": liquid fuel rocket powered machine 1903

Claims to first piloted flight by date

[edit] Pre-19th century

Anonymous, Chang'an, China, according to fifth-century records the first human in the air, using feathery wings — 19 [1]

Zhuge Liang, China, traditionally credited with invention of the Kongming lantern, which was the first hot air balloon, though not suitable for human transportation. — 2-3rd century.

Yuan Huangtou, Ye, China, first manned kite glide to take off from a tower — 559 [2]

Abbas Ibn Firnas (aka Armen Firman), al-Andalus, first parachute flight — 852

Abbas Ibn Firnas, (aka Armen Firman), al-Andalus, first hang glider with artificial wings and flight controls — 875 [3][4]

Eilmer of Malmesbury, England, a monk who flew a glider from an Abbey in the early 11th century

Hezarfen Ahmet Celebi, Istanbul, Turkey, first successful glider flight with artificial wings — 1630-1632 [5]

Lagari Hasan Çelebi, Turkey, first manned rocket aircraft — 1633

Pilâtre de Rozier, Paris, France, first trip by a human in a free-flying balloon (the Montgolfière). 9 km covered in 25 minutes. October 15, 1783

http://en.wikipedia.org/wiki/First_flying_machine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து விமானத்தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் இந்துக்களாகவே இருந்திருக்கின்றார்கள் என்ற கருத்தே முதன்மை பெறுகின்றது.

உலகம் பார்க்க மறந்துள்ள ஒரு கோணத்தை கட்டுரையாளர் அணுகி இனங்காட்ட முற்பட்டுள்ளார். பூரணத்துவமற்றதாயினும் நல்ல ஒரு முயற்சி.

விமானத் தொழில்நுட்பத்தின் முன்னோடிகள் என்ற கருத்தை அவர் விமானம் மூலம் மனிதன் விண்ணில் பறக்க முடியும் என்ற சிந்தனை வெளிப்பாட்டின் அடிப்படையில் கூறி இருக்கிறார் என்பது கட்டுரையை வாசிக்கும் போதே தெளிவாகிறது. அப்படி இருக்க.. இத்தலைப்பிலும் சரி குறித்த கட்டுரையாளரின் இறுதி வரிகளிலும் சரி தவறுகள் உள்ளதாக இனங்காணப்பட முடியவே இல்லை..! :huh:

Link to comment
Share on other sites

மனிதனால் விண்ணில் பறக்க முடியும் என்பது முதன்முதலாக கிரேக்க இதிகாசங்களிலையே கூறப்பட்டது.கி மு 13 ஆம் நூற்றாண்டில்.

அதன் பின்னரே கிமு 5 ஆம் நூற்றாண்டிலையே வேதங்களில் பறப்பது பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.விமானத் தொழில் நுட்பம் என்பதை ஓரத்தில் வைத்து விட்டு ,

பறப்பது பற்றிய கற்பனைகள் என்று பார்த்தால் கூட கிரேக்க இதிகாசங்களும் கிரேக்கக் கடவுளரும் முன் நோடிகள்.

வேதகால மதம் இந்து மதம் அல்ல என்பது சரித்திரம் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

இங்கே தமிழரின் முன் நோர் வேதகால ஆரியர் என்று கூறப்பட்டதைப் போன்ற விடயங்கள் கட்டுரை எழுதியவரின் சரித்திரவியல் அறியாமையைக் காட்டி நிற்கின்றன.

Link to comment
Share on other sites

கௌரிபாலன் தந்த இணைப்புக்களில் கம்பராமயணம் பற்றி ஒரு வரி வருகின்றது. அக் கட்டுரையை எழுதியவர் தமிழர்கள் எழுதிய இலக்கியங்கள் பலவற்றில் வானூர்த்தி இருப்பதை குறிப்பிடுகின்ற அவாவில் கம்பராமாயணத்தையும் சேர்த்துள்ளார். இராமாயணம் என்று குறிப்பிடாது கம்பராமாயணம் என்று அவர் யுக்தியாக குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் எனக்கு இது ஏற்புடையது அல்ல. எனினும் இந்த ஒரு வரி மொத்தக் கட்டுரையின் சாரத்தை பாதிக்கவில்லை என்பதால், இதை பொறுத்துக் கொள்ளலாம்.

ஆனால் மயூரன் எழுதிய கட்டுரை மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயல். இரண்டு மோசடிகளை மயூரனின் கட்டுரை செய்கின்றது.

1. இந்துக்கள்தான் வானூர்த்தி தயாரிப்பின் முன்னோடிகள்

2. தமிழர்களின் மூதாதையர்கள் இந்துக்கள்

இந்த இரண்டு விடயத்தையும் சுற்றித்தான் அவருடைய கட்டுரை அமைகின்றது. இரண்டுமே கடைந்தெடுத்த பொய்கள்.

ஒரு பேச்சுக்கு இந்துக்கள்தான் வானூர்த்தி தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

அதற்கு "தமிழர்களின் மூதாதையர்கள்" போன்ற பதங்களின் மூலம், இது குறித்து தமிழர்கள் பெருமைப்படலாம் என்ற செய்தியை இந்தக் கட்டுரை சொல்வது சரியா?

அவ்வாறான செய்தியை சொல்கின்ற ஒரு கட்டுரையை "தேசிய ஊடகம்" என்று தன்னை வெளிப்படுத்துகின்ற ஒரு இணையத்தளம் வெளியிட்டது சரியா?

Link to comment
Share on other sites

மயூரனின் அக் கட்டுரையில் கூறப்படுள்ள விமானிக்க சாஸ்திர என்னும் அண்டப்புளுகை இந்திய விஞ்ஞானக் கழகத்தின் அறிவியலாளர்கள் ஆரய்ந்து கீழ்க் கண்ட முடிவை எட்டி இருகிறார்கள்.

மேற் சொன்ன புத்தகத்தை எழுதியவர் வேதங்களில் இருந்து பல தகவல்களைத் திருத்து எழுதி உள்ளார் என்றும், எழுதப்பட்ட காலம் தொடர்பாகவும் மோசடியான விடயங்கள் கூறப்படுள்ளன எனவும்,இதில் சொல்லப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பறக்கக் கூடிய ஒரு விமானத்தைக் கட்ட முடியாது எனவும் அறிவியல் ரீதியாக ஆரய்ந்து எழுதி உள்ளனர்.

மேலும் இந்தத் தகவல்கள் விகிபிடீயாவில் ஏமாற்றுஅறிவியல் (pseudo science) என்னும் தலைப்பிலையே வகைப்படுதப்படுள்ளது.

பார்க்க http://en.wikipedia.org/wiki/Vimana

In pseudoscience and UFOlogy

Further information: Vaimanika Shastra

An illustration of the Shakuna Vimana with hinged wings and tail, drawn in 1923 under instruction of S. Shastry, author of the Vaimanika Shastra[3]Some modern UFO enthusiasts have pointed to the Vimana as evidence for advanced technological civilizations in the distant past, or as support for the ancient astronaut theory. Others have linked the flying machines to the legend of the Nine Unknown Men.[citation needed

அக்கவே இந்தப் புழுகு மூட்டையைத் தான் இங்கே இவர்கள் அறிவியல் என்று விற்கிறார்கள்.இந்து மதத்தை விற்பதற்க்கு இப்படியான மோசடிகளைத் தான் இவர்களால் செய்ய முடியும்.அதற்கும் இவர்களுக்கு அறிவியல் என்னும் சாயம் தேவையாக இருக்கிறது. வெட்கக் கேடு வெட்கக் கேடு.

http://cgpl.iisc.ernet.in/site/Portals/0/P...nikaShastra.pdf

A CRITICAL STUDY OF THE WORK

“VYMANIKA SHASTRA”

by

H.S. MUKUNDA§, S.M. DESHPANDE§, H.R. NAGENDRA§§,

A. PRABHU§, AND S.P. GOVINDARAJU§

Indian Institute of Science, Bangalore‐560012 (Karnataka)

SUMMARY – A study of the work “Vymanika Shastra” is presented. First, the historical

aspects and authenticity of the work are discussed. Subsequently, the work is critically

reviewed in respect of its technical content. It appears that his work cannot be dated

earlier than 1904 and contains details which, on the basis of our present knowledge, force

us to conclude the non feasibility of heavier‐than craft of earlier times. Some peripheral

questions concerning dimensions have also been touched upon.

1. Historical Aspects

1.1 ORIGIN

A book titled “Brihad Vimana

Shastra” by Shri Bramhamuni

Parivrajaka was published in the

year 1959 [1]. It contains verses in

Sanskrit (describing aircraft) with

their Hindi translation.

Recently, another book titled

“Vymanika Shastra” by Shri G.R.

Josyer has appeared [2], which

contains the same Sanskrit verses

with their English translation. One

notable feature of this English

version is that it contains drawings

of some crafts too, something not

to be found in the Hindi version.

Also, the English work by Josyer

makes no mention whatsoever of

the earlier work in Hindi.

Our main concern in this report

will be with the above two works.

These books contain verses

which, according to their texts, are

supposed to form only part (about

§ Departmental of Aeronautical Engineering

§§ Department of Mechanical Engineering

a fortieth) of “Yantra Sarvaswa” by

sage Bharadwaja, which is devoted

to a summary of the work on

vimana vigyana by a number of

other sages and is said to be for the

benefit of all mankind.

1.2 DATING OF THE WORK

In his introduction to the

“Brihad Vimana Shastra” (hereafter

denoted as BVA) the translator has

tried to hind at the Vedic origin of

the text. In support of this he has

invoked Maharshi Dayananda

Saraswati’s work entitled

“Rigaveda Bhashya Bhumika” [3].

Also, some quotations from

western scholars are given in

support of the clain for antiquity.

According to Maharshi

Dayananda Saraswati’s

commentary (first published in

1878 or earlier), there are

references to aircraft in the Vedic

mantras:

§ÉrÉ: xMüqpÉÉxÉ: xMüÍpÉiÉÉxÉ AÉUpÉå

̧ÉlÉ£ü rÉÉjÉÎx§ÉuÉï μÉlÉÉ ÌSuÉÉ || 5 ||

G0 AwOû0 1 | A0 3 | uÉaÉïç 4 |

qÉ0 2 ||

….going from one island to

another with these crafts in three

days and nights….and

AÉ lÉÉå lÉÉuÉÉ qÉiÉÏlÉÉÇ rÉÉlÉçÇ mÉÉUÉrÉ

aÉliÉuÉå ........ || 9 || G0 AwOû0 1 |

A0 3 | uÉ0 34 | qÉÇ0 2 || M×üwhÉÇ

ÌlÉrÉÉlÉÇ WûUrÉ: xÉÑmÉhÉÉï AÇmÉÉå uÉxÉÉlÉÉ ÌSuÉ

qÉÑimÉiÉÎliÉ | iÉ AÉuÉuÉקÉlixÉSlÉ....||10||

²ÉSzÉ mÉëkÉrÉzcÉ¢üqÉåMü §ÉÏÍhÉ lÉqrÉÉÌlÉ Mü

EiÉΊMåüiÉ | iÉÎxqÉlixÉÉMü ̧ÉzÉiÉÉ lÉ

zÉMüuÉÉå Å ÌmÉiÉÉ bÉÎwOûlÉÇ cÉsÉÉcÉsÉÉxÉ:

|| 11 || G0 AwOû0 2 | A0 3 |

uÉ0 23 | qÉ0 1 | 2 ||

Just an intelligent people

constructed ships to cross

oceans…..jumping into space

speedily with a craft using fire and

water…..containing 12 stamghas

(pillars), one wheel, three

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாங்களே தரவுகளையும் தந்திட்டு தாங்களே திரிவுகளையும் செய்யுறாங்கப்பா...??!

Indo-European mythology Sun chariot 2nd millennium BC

கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் மிலேனிய காலத்திலேயே சூரியத் தேர் என்ற பறப்பியல் சிந்தனை இந்தோ (அப்போ இந்தியா என்ற தேசம் இருக்கவில்லை...??! ஆய்வாளர்களால் தற்போதைய இந்தியா அல்லது உலகின் இந்திய உபகண்டம் சார்ந்து பெயரிடப்பட்டுள்ளது) ஐரோப்பிய ஐதீகங்களில் கலந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நோக்கின் அந்த இந்தோவுக்குள் மறைந்திருக்கும் ஆதாரங்கள்... மயூரன் தேடியவற்றோடு இசையலாம் போல் இருக்கே..! மயூரனின் முயற்சி பாராட்டத்தக்க ஒன்றே. நல்ல ஒரு முயற்சி..! :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

அட இந்துக்களின் தேர் வந்து யுத்த டாங்கிகளின் முன்னோடி அல்லவா. பறக்கும் சூரியத் தேர் என்ற சிந்தனையில் இருந்து தான் பறக்கும் யுத்த டாங்கி என்று இன்று அழைக்கப்படும் சோவியத் யூனியன் காலத்து தாக்குதல் உலங்கு வானுர்தி Mi24 உருவாகியிருக்கிறது என்று நிறுவலாம் போலிருக்கே. :rolleyes:

Link to comment
Share on other sites

Solar barge / Sun chariot

Ra in his solar bargeA solar barge (also solar bark, solar barque, solar boat, sun boat) is a mythological representation of the sun riding in a boat. The "Khufu ship", a 43.6-meter-long vessel that was sealed into a pit in the Giza pyramid complex at the foot of the Great Pyramid of Giza around 2500 BC, is a full-size surviving example which may have fulfilled the symbolic function of a solar barque.

Examples include:

Neolithic petroglyphs which (it has been speculated) show solar barges

The many early Egyptian goddesses who are related as sun deities and the later gods Ra and Horus depicted as riding in a solar barge. In Egyptian myths of the afterlife, Ra rides in an underground channel from west to east every night so that he can rise in the east the next morning.

The Nebra sky disk, which (it has been speculated) features a depiction of a solar barge [2]

Nordic Bronze Age petroglyphs, including those found in Tanumshede often contains barges and sun crosses in different constellations.

A sun chariot is a mythological representation of the sun riding in a chariot. The concept is younger than that of the solar barge, and typically Indo-European, corresponding with the Indo-European expansion after the invention of the chariot in the 2nd millennium BC.

Indo-European people

From Wikipedia, the free encyclopedia

(Redirected from Indo-Europeans)

Jump to: navigation, search

For other uses, see Indo-European (disambiguation).

Indo-European topics

Indo-European languages

Albanian · Armenian · Baltic

Celtic · Germanic · Greek

Indo-Iranian (Indo-Aryan, Iranian)

Italic · Slavic

extinct: Anatolian · Paleo-Balkans (Dacian,

Phrygian, Thracian) · Tocharian

Indo-European peoples

Albanians · Armenians

Balts · Celts · Germanic peoples

Greeks · Indo-Aryans

Iranians · Latins · Slavs

historical: Anatolians (Hittites, Luwians)

Celts (Galatians, Gauls) · Germanic tribes

Illyrians · Indo-Iranians (Iranian tribes)

Italic peoples · Thracians · Tocharians

Proto-Indo-Europeans

Language · Society · Religion

Urheimat hypotheses

Kurgan hypothesis · Anatolia

Armenia · India · PCT

Indo-European studies

Indo-Europeans are speakers of Indo-European languages. The term may apply to:

In anthropology, ethnology and sometimes linguistic anthropology, Indo-European people refers to the original people that historically spoke Indo-European languages, their ethnicity and their culture.

The Proto-Indo-Europeans a hypothetical group of people whose existence from around 4000 BCE and spoke Proto-Indo-European language.

Bronze Age (third to second millennia BC) speakers of Indo-European languages that had not yet split into the attested sub-families, viz.: early Centum and Satem dialects (speakers of languages predating Proto-Indo-Iranian, Proto-Armenian, Proto-Greek, Proto-Celtic, Proto-Italic, Proto-Germanic, Proto-Balto-Slavic etc.)

Modern day speakers of Indo-European languages, or descendants of the original speakers of Indo-European languages

Indo-European என்றால் யார் என்று தெரியாமல் உளறல் :D:D:D

எழுதிய அத்தனை புளுகும் அம்பலம் ஏறிய பின்னும் இன்னும் இன்னும் முறியிற கொப்பில தாவித் தாவித் திரியவேண்டிய கவலைக்கிடமான நிலை. :rolleyes::unsure::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோவுக்கு அர்த்தம் புரியாமல் உளறுவது.. நாமல்ல...!

Indo-European (Indo refers to the Indian subcontinent) has the largest numbers of speakers of the recognised families of languages in the world today, with its languages spoken by approximately three billion native speakers.

http://en.wikipedia.org/wiki/Indo-European_languages

பார்வையாளர்கள் தீர்மானிப்பார்கள் யாரடா கொப்பு முறியுது பிடியுடா பிடியுடா என்று அலறுறதென்று..! :unsure::rolleyes:

Link to comment
Share on other sites

இந்தோவுக்கு அர்த்தம் புரியாமல் உளறுவது.. நாமல்ல...!

Indo-European (Indo refers to the Indian subcontinent) has the largest numbers of speakers of the recognised families of languages in the world today, with its languages spoken by approximately three billion native speakers.

http://en.wikipedia.org/wiki/Indo-European_languages

பார்வையாளர்கள் தீர்மானிப்பார்கள் யாரடா கொப்பு முறியுது பிடியுடா பிடியுடா என்று அலறுறதென்று..! :D:rolleyes:

அப்ப Indo-european இல் வரும் European என்ன? தெளிவாக இந்தோ அய்ரோப்பியன் என்னும் மக்கள் யார் யாரின் மூதாதையர் என எழுதப்பட்டிருந்தும் ஆப்பிளந்த குரங்கு போல் துள்ளிக் கிதிப்பதேன்? இந்தோ அய்ரோப்பியருக்கும் இந்து மததிற்க்கும் என்ன சம்பந்தம்?பெயர் குறியீடுகள் பற்றிய விளக்கம் இன்மையே இப்படியான பிழையான திரித்தல் வியாக்கியாங்கள்..

இந்தோ அய்ரோப்பியரிற்கும் இந்து மததிற்கும் முடிச்சுபோட்டா, கிரித்துவ மதத்திற்கும், இசுலாமிய மததிற்கும் அதைவிடக் கிட்டிய உறவு இருக்கு. :unsure:

2000–1500: Invention of the chariot, which leads to the split and rapid spread of Iranian and Indo-Aryan from the Andronovo culture and the Bactria-Margiana Archaeological Complex over much of Central Asia, Northern India, Iran and Eastern Anatolia. Proto-Anatolian splits into Hittite and Luwian. The pre-Proto-Celtic Unetice culture has an active metal industry (Nebra skydisk).

மேலே காட்டிய பந்தியில் சரியட் கண்டுபிடிக்கப்பட்டது மத்திய ஆசியாவில் இருந்த அண்ற்றொனொவா நாகரிகத்தில் என்றும் பின்னர் அதில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இந்தோ ஆரியராகவும், இரானியராகவும்,கிழக்கு அந்தோலியராகவும் பிரிந்தனர்.அந்தோலியர் கைடி மற்றும் லுவியன் ஆகப்பிரிந்தனர்.

1500–1000: The Nordic Bronze Age develops (pre-)Proto-Germanic, and the (pre-)Proto-Celtic Urnfield and Hallstatt cultures emerge in Central Europe, introducing the Iron Age. Proto-Italic migration into the Italian peninsula. Redaction of the Rigveda and rise of the Vedic civilization in the Punjab. Flourishing and decline of the Hittite Empire. The Mycenaean civilization gives way to the Greek Dark Ages.

1000 BC–500 BC: The Celtic languages spread over Central and Western Europe. Northern Europe enters the Pre-Roman Iron Age, the formative phase of Proto-Germanic. Homer initiates Greek literature and early Classical Antiquity. The Vedic civilization gives way to the Mahajanapadas. Zoroaster composes the Gathas; rise of the Achaemenid Empire, replacing the Elamites and Babylonia. The Scythians supplant the Cimmerians (Srubna culture) in the Pontic steppe. Separation of Proto-Italic into Osco-Umbrian and Latin-Faliscan, and foundation of Rome. Genesis of the Greek and Old Italic alphabets. A variety of Paleo-Balkan languages have speakers in Southern Europe. The Anatolian languages suffer extinction

அதன் பின்னர் இவ்வாறு பிரிந்தவர்களே இன்றைய அய்ரோப்பாவின் பல்வேறு இனக்குழுக்கள் ஆகினர் என்பதுவும் கூறப்படுள்ளது.

மேற்கூறியவற்றின் மூலம் எவ்வாறு ஆரியர் மத்திய ஆசியாவில் இருந்து குடிப்பரம்பினர் என்பதுவும் அவர்களுக்கும் அய்ரோப்பியருக்கும் பொதுவான தாயகம் மத்திய ஆசியா என்பதுவும் சொல்லப்படுகிறது.இந்தக் களத்தில் முன்னர் நடந்த பல விவாதங்கலில் இந்த உண்மைகளை மறுத்த ஒருவர் இப்போது மத்திய ஆசியாவில் இருந்தே ஆரியர் குடிப்பரம்பினர் என்பதை ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கப் பட வேண்டிய ஒரு முன் நேற்றம்.இப்படித் தான் பொய்களைச் சொல்வோர் தாங்களாகவே உண்மைகளை ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கிறது.

எத்தினை காலம் தான் இவர்களால ஏமாற்றிக் கொண்டிருக்க முடியும்?

மத்திய ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சூரிய வண்டிகள் என்று சொல்லப்பட்ட சில்லுப்பூட்டிய வண்டிகளுக்கு இந்து மதம் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா மதங்களும் உரிமை கோர முடியும்.அதிலும் மத்திய ஆசியாவில் உருவான இசுலாமிய மதமும் கிரித்துவ மதமும் பூகோளோ ரீதியாக அதிக உரிமை பாரட்ட முடியும்.இந்த மதங்கள் அந்தக்காலத்தில் உருவாகி இருக்கவில்லை என்பதுவும்,வேதாகாலம் என்பதே இதன் பின் ஏற்பட்ட ஒன்று என்பதுவும் இங்கே மறக்கபட்ட விடயம்.

சில்லுப்பூட்டிய வண்டிக்கும் விமானத்துக்குமான சம்பந்தம் மடுவும் மலைக்குமான சம்பந்தமக இருந்தாலும்.

ஆரியர் மத்திய ஆசியாவில் இருந்து இடம் பெயர்ந்த வெளியார் அவர்கள் வழி வந்தது இந்து மதம் என ஏற்றுக் கொண்டது வரவேற்கக் கூடிய மாற்றம்,ஏனெனில் ஆரியர் என்பவர்களே சரித்திரத்தில் இருந்து இருக்கவில்லை அவர்களை உருவாக்கியவர்கள் திராவிட இயக்கத்தவர் என்று கூறியவர்களே இன்று அதை ஏற்றுக் கொண்டு கருத்தாடுவது வரவேற்க்கப் படக்கூடிய விசயம். :D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வாசகர் கவனத்துக்கு...

விடயம் 1:

Indo - Europen மக்கள் எனப்படுவோர் இந்திய உபகண்ட மொழிகள் பேசிய மற்றும் ஐரோப்பா மொழி பேசிய மக்கள் கூட்டத்தை குறித்து நிற்கிறது.

இந்தோ ஐரோப்பிய மொழி பேசுவோர் கீழ் வரும் இணைப்பில் கடும் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளனர். அதில் தென்னிந்தியா இலங்கை உட்பட அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளன.

http://en.wikipedia.org/wiki/Image:IE_countries.svg

கடும் பச்சை - Countries with a majority of speakers of IE languages

ஒளிர் பச்சை - Countries with an IE minority language with official status

யாழ் வாசகர்களை குழப்பி அடிக்கும் திரிபுகள் இங்கு ஏராளமாக இடப்படுகின்றன. இந்திய மொழிகள் பேசிய மக்கள் கூட்டமும் ஐரோப்பிய மொழிகள் பேசிய மக்கள் கூட்டமும் என்பதை ஒருங்கிணைக்கும் போதே இந்தோ - ஐரோப்பிய மொழி பேசிய என்ற சொல்லாடல் எழுகிறது..!

Indo-Europeans are speakers of Indo-European languages.

The Indo-European languages comprise a family of several hundred related languages and dialects,[1] including most of the major languages of Europe, the northern Indian subcontinent (South Asia), the Iranian plateau (Southwest Asia), and much of Central Asia. Indo-European (Indo refers to the Indian subcontinent) has the largest numbers of speakers of the recognised families of languages in the world today, with its languages spoken by approximately three billion native speakers

இரண்டு வகை மொழிகளையும் கலந்து ஒரு மொழியாக்கிப் பேசிய ஒரு வகை மக்கள் கூட்டமல்ல Indo - Europeans..! :rolleyes:

----------

விடயம் 2:

மேலே தலைப்புடன் கூடிய கட்டுரையானது இந்துக்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம் என்ற வகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்கள் காட்டிய விமானத் தொழில்நுட்பம் என்பதாக அது தொடரவில்லை.

தமிழ் மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர். தமிழ் மக்களின் முதன்மை மதமாக வரலாற்றோடு பல்வேறு படிநிலைகளில் இந்து - சைவம் தொடர்சியாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில் இந்து மதத்தை தமிழ் மக்களின் பெரும்பான்மையினோரின் மதமாகக் கருதுகின்றனரே தவிர தமிழ் மக்களின் உருவாக்கமே இந்து மதம் என்ற கோட்பாட்டை இங்கு குறித்த கட்டுரையாளரோ நாமோ ஆராய்ந்து கூறிட முயல்வில்லை.

---------

விடயம் 3:

இந்தோ - ஐரோப்பிய மொழிகள் பேசிய மக்கள் கூட்டங்களிடமும் (இந்திய உபகண்டம் வாழ் மக்கள் உள்ளடங்க) சூரிய வழிபாட்டின் படி.. சூரியத் தேர் என்பதனூடு பறப்பியல் ஐதீகம் இருந்துள்ளமை விகிபிடியா இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதே அன்றி கட்டுரையாளர் அதை முதன்மைப் படுத்தவே அறிமுகம் செய்யவோ இல்லை..!

அவர் வேத காலத்தில் இருந்தான ஆதாரங்களோடுதான் குறித்த கட்டுரையை ஆதாரவழி முன்னெடுத்து வந்துள்ளார். அதற்கான ஆதாரங்களையும் இனங்காட்டியுள்ளார்..!

---------

இந்தோ - ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் ஆரியர்கள் என்பதையோ திராவிடர்கள் என்பதையோ ஏற்றுக் கொண்டல்ல இங்கு நாம் வாதம் புரிகிறோம். அதற்கான அவசியம் இங்கில்லை. இங்கு இந்துமதம் சார்ந்த கருத்துருவாக்கங்களுடன் விமானத் தொழில்நுட்பச் சிந்தனை (அதாவது மனிதன் விண்ணில் பறப்பதற்கான பறப்பியல் சிந்தனை) எவ்வாறு எழுந்தது என்பதை ஆதாரங்கள் சகிதம் முன்மொழிவதை மட்டுமே கட்டுரையாளரும் நாமும் செய்கின்றோம்..! :unsure:

விடயம் 4

விகிபிடியாவின் தரவின் படி... இந்தோ - ஐரோப்பிய மொழிகள் பேசிய மக்களால் சூரியத் தேர்.. அதாவது சூரியன் (கடவுளாக மதிக்கப்பட்டது) தேரில் ஏறி விண்ணில் வருவதான சிந்தனை உருவாகியுள்ளது. அதையே அவர்கள் மனிதனின் சிந்தனையில் எழுந்த முதற் பறப்பியல் சிந்தனை எங்கின்றனர்..!

அடிப்படையில் சூரிய வழிபாட்டைச் செய்த கிரேக்கமும் இந்திய உபகண்டமும் இது தொடர்பில் தொடர்ந்து சிந்தித்து மனிதனை விண்ணேக வைத்துள்ளன.. கற்பனையில் என்பதாவது இலகுவாக உணரப்படுகிறது..!

இங்கு இன்னொரு உண்மை இருக்கிறது வேத காலம் என்பது கூட (Based on literary evidence, scholars place the Vedic period in the 2nd and 1st millennia BCE) கிரேக்க காலம் பறப்பியல் பற்றி சிந்திக்க முதல் அமைந்த காலமாகிறது.

மயூரனின் கட்டுரை வேத காலப் பறப்பியல் சிந்தனைகளை இனங்காட்டியுள்ளது. அந்த வகையில் விகிபிடியா தரவு என்பது கூட வேத கால அடிப்படையில் இருந்திருக்க வாய்ப்புண்டு. இந்து மதம் அதன் ஆதியான நிலையை வேத காலத்திலேயே கொண்டிருந்தது. சிந்துவெளி (3300- 1700 BCE) மக்களால் அது வழிபாட்டுமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் வரை அதற்கு இந்து என்ற பெயர் வரவில்லையே அன்றி வேதகாலத்திலேயே இந்து மத அடிப்படை அனுஸ்டானங்கள் தோன்றிவிட்டன..!

http://en.wikipedia.org/wiki/Vedic_period

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.