Jump to content

சார்லி சப்லின் (Charlie Chaplin )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சார்லி சாப்ளின். ம்...ம்... சூப்பர். :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 2 weeks later...
  • 2 weeks later...
  • 4 weeks later...
  • 4 weeks later...
  • 3 months later...
  • 1 year later...

'நான் கோமாளியாக இருக்கவே விரும்புகிறேன்' - சார்லி சப்ளின்

சு. காளிதாஸ்

‘சிரி... உன் இதயம் வலித்தாலும்

சிரி... அது உடைந்தாலும்

வானத்தில் இருக்கும் மேகத்தைக்கூட

வாங்கி விடலாம்.

நீ வலியில் சிரிக்கத் தெரிந்தால்

சிரி... நாளை அந்த சூரியனின் ஒளியும்

உன் முகத்தில் பிரகாசிக்கும்.

உன் முகத்தில் மகிழ்ச்சியை நிறைத்து

துன்பச் சுவடுகளை மறை.

கண்ணீர் உன் அருகில் நிரந்தரமாக இருந்தாலும்

நீ சிரித்தாலும் முயற்சியை கைவிடாதே.

சிரி... அழுவதால் என்ன லாபம்?

சிரி உன் வார்த்தையின் அர்த்தத்தை

கண்டு கொள்வாய்’

‘Modern Times’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலாகும் இது. இப்பாடலுக்கு சாப்ளின் இசையமைக்க John Turner and Geoffrey Parsons இப்பாடல் வரிகளை எழுதினார்.

சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத்தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு. சார்லி சாப்ளின் ஏப்ரல் 16-1889இல் லண்டனில் உள்ள வால்வொர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார்.

5 வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார் சாப்ளின். முதன் முதலில் 1894இல் மியூசிக் ஹால்-இல் அவர் தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயது இருந்தபொழுது, சிட்னி லண்டன் ஹிப்பொட்ரொமில் ‘சின்ட்ரெல்லா‘ பாண்டொமைமில் ஒரு பூனையாக (நகைச்சுவைக் கதாபாத்திரம்) நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903இல் ஜிம் அ ரொமான்ஸ் ஆஃப் காக்கையன் (Jim A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவருக்கு நிரந்தர வேலை கிடைத்து. செர்லாக் ஹொம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் 'பில்லி' வேடத்தில் நடித்தார். தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey’s Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno’s Fun Factory Slapstick) நகைச்சுவை நிறுவனத்திலும் கோமாளி வேடத்திலும் நடித்தார்.

சாப்ளினின் திறமையைத் தயாரிப்பாளர் மாக் செனட் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னை பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது அசாதாரண வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையாகும். 1914இல் சாப்ளின் வாரத்திற்கு $150 சம்பளம் வாங்கினார். ஆனால் மூன்றே வருடங்களில், 1 மில்லியன் ஊதியம் பெற்ற முதல் நடிகர் என்ற பெருமை இவரையே சாரும்.

இவர் 1919இல் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ் மற்றும் கிரிபித்துடன் இணைந்து யுனைடெட் ஆர்ட்டிஸ் ஸ்டூடியோவைத் துவக்கினார். 1927இல் டாக்கீஸ் (ஓசையுடன் கூடிய திரைப்படங்கள்) வெளிவரத் துவங்கி மிகவும் பிரபலம் அடைந்தாலும் 1939வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சினிமாவின் பல துறைகளில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். சாப்ளின் 1952இல் வெளிவந்த ‘லைம் லைட்’ திரைப்படத்தில் (Lime Light) திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928இல் திரைப்படம் ‘தி சர்க்கஸ்’ (The Circus) இன் தலையங்க இசையமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் அதிகப்புகழ் பெற்றது ஸ்மைல் (Smile).

இவரது முதல் டாக்கீஸ் 1940இல் வெளியான தி கிரேட் டிக்டேட்டர் (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிஸ்ட் கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் புகுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு அஙகு வெளியிடப்பட்டது. இதில் சாப்ளின் ‘ஹிட்லர்’ மற்றும் நாஜியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச்சேர்ந்த ஒரு நாவிதன் என இருவேடங்கள் பூண்டிருந்தார். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லரும் இப்படத்தை இருமுறை பார்த்துள்ளார். (போர் முடிந்து ஹிட்லரின் கொடுமை உலகத்திற்கு தெரிய வந்த பிறகு சாப்ளினுக்கு இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருக்காமல் ஹிட்லரையும் நாஜியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என திரைத்துறையைச் சார்ந்தவர்கள் பலவாறாக கருத்து கூறினர். எல்லா கருத்துக்கும் பதிலாக சாப்ளின் “நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. என்னால் இயன்றளவு அனைவருக்கும் உதவுவேன். நாம் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். துக்கத்தோடு அல்ல” என எளிய மனிதராகத் தன்னை உருவகித்தார்.

சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சாரியானதாக கருதப்படுகிறது. இதனையே இவரது திரைப்படங்களில், முக்கியமாக ‘மாடர்ன் டைம்ஸ்’ (Modern Times) பிரதிபலித்தன. இப்படம் தொழிலாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது. இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட் எனவும் சந்தேகிக் கப்பட்டார். FBI (ஜே. எட்கார் ஹவர்) இவரை கண்காணிக்குமாறு உத்தரவிட்டு, அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீக்க முயற்சித்தார். அவர் பிரிட்டிஷ் குடியுரிமையிலேயே கடைசிவரை நீடித்தார். வாழ்வின் கடைசி நாள்களில் அவர் பெரும்பாலும் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். 1972, ஆஸ்கார் வாழ்நாள் சாதனை விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார்.

சாப்ளின் 1914-1923 (Between Shaver முதல் The Pilgrim)வரை மொத்தம் 69 குறும்படங்களையும் 17 முழு நீளப்படங்களையும் இயக்கி நடித்திருந்தார். ‘The Kid’ அவர் நடித்து இயக்கிய முதல் முழு நீளப் படம். அப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை. பின்னர் 1928இல் வெளியான ‘தி சர்க்கஸ்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் ஆஸ்கார் விருதுகளுக்கு தேர்வு பெற்று வெற்றி அடைந்தார். அவருடைய இரண்டாவது ஆஸ்கார் 44 ஆண்டுகளுக்குப்பின் 1972இல் ‘சினிமாவை இந்நூற்றாண்டின் கலை வடிவாக்குவதில் அளவிட முடியாத பங்கிற்காக’ வழங்கப்பட்டது.

சாப்ளின், 1977ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று அவரது எண்பத்தி எட்டாவது வயதில் வெவெயில் இறந்தார். அவரது உடல் (vaud) நகரிலுள்ள கார்சியர் -சர்-வெவெ கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

சார்லி சாப்ளினின் பிம்பத்தை அவரது ரசிகர்களும், விமர்சகர்களும் பலவாறாகத் தொடர்ந்து கட்டமைத்த வண்ணம் உள்ளனர். எல்லா காலத்திலும் சார்லி சாப்ளினின் கூற்று அதன் அர்த்தங்களை மாற்றி வடிவமைத்து கடந்து கொண்டே இருக்கிறது.

'நான் பிறருக்காகவே வாழ்கிறேன். நான் கோமாளியாக இருக்கவே விரும்புகிறேன். அரசியல்வாதிகளுக்கு மேலாக அது என்னை உயர்த்துகிறது. வாழ்க்கை அழகானதுதான். போராடாமல் தோற்பதே நீ செய்யும் தவறு. வாழ்க்கை மரணத்தைப் போன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாதது. நிலத்தைப் பெயர்த்து மரங்களைத் தருவிக்கும் பூமியின் சக்தியை நினைத்துப் பார். உன்னுள் இருப்பதும் அதே சக்தியே; உன்னிடம் அதே அளவு நம்பிக்கையும் அதை உபயோகிக்கும் உத்வேகமும் இருக்குமானால் அதற்காக இறுதி வரை போராடு......’

http://www.vallinam.com.my/issue20/column1.html

http://www.youtube.com/watch?v=J53feA5e5SM

http://www.youtube.com/watch?v=ULhMWXVuvHQ&feature=related

http://www.youtube.com/watch?v=6WGC9HdxJJs&feature=related

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
    • ஓமண்ணை…. பெரிய அநியாயம்….எனக்கெல்லாம் வாழ்க்கையின் பேக்ரவுண்ட் மியூசிக் அது. 70% க்கு மேல இப்ப wok style தாச்சிதான்.
    • மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது.    டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது.   டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்" என்று விமர்சித்திருக்கிறார். Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன? | DD News logo changes to saffron colour (vikatan.com)
    • கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂 அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது. தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.
    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.