Jump to content

காமம்


Recommended Posts

காமம்

Namitha7.jpg

அரவணைத்துக் கொள்! அன்பே

அரவணைத்துக் கொள்!

புறம் மறைத்தாய் பொறுத்துக் கொண்டேன்

அகம் மறைக்காதே ஆத்திரப்படுவேன்

ஆசைப்படு!

அதிகாரத்தோடு கேட்டுக்கொள்

மோகப் படு!

முடிந்தவரை முத்தமிட்டுக்கொள்

உன் கரம் மட்டும் அறிந்த

என் நெஞ்சத்தை

உன் மார்பு கொண்டு பழுது பார்

விதைத்துக் கொள்!

விளைய விடு!

மேய்ந்து கொள்!

மீதம் வைக்கதே!

அங்கம் அனைத்தும் அடக்கி விடு!

ஆண்மை கொள்! பெண்ணே

ஆண்மை கொள்

என் ஆயுள் முழுவதும்

உன் அங்கம் மட்டும் பணி செய்ய!

மோகப் புரட்சி செய்!

நீயே தொடங்கு!

நீயே முடி!

சேர்த்துக் கொள்! செப்பனிடு!

படர்ந்து கொள்! பறக்க விடு!

என் விரல் கொண்டு

உன் உடல் உழுது கொள்!

என் உதட்டு வரிகளில்

உன் உதடுகளால் எழுதிக் கொள்!

உன் விரல்களில்

என் தலை முடிகளை தரம் பார்!

உன் வெட்கத்தை என்னில் ஊற்றி..

என் வீரத்தை பிடுங்கிக் கொள்!

அடைத்துக் கொள்!

என்னில் உன்னை...

உன்னில் என்னை...

என் சுவாசப் பைகளில்

உன் வாசத்தை மட்டும் நிரப்பு!

உன் இடையினை என் கரங்களால்

கட்டிப் போடு!

உன் தீண்டல்களில்

என் தோல்களை தூய்மைப்படுத்து!

உன் உரசல்களில்

என் ஆண்மையை தீயுட்டு!

ஆக்கிரமித்துக் கொள்! அழகே

ஆக்கிரமித்துக் கொள்!

உன் சிருங்காரத்தில்

என்னை சிறைப்படுத்து!

உன் பாதம் தொட

என் சிரம் தாழ்த்தி சினுங்க வை!

உன் இடை சுற்ற

என் கரம் வேண்டு!

உன் கனவுப் பொய்களை

என்னில் மட்டும் நிஜமாக்கு!

எதை வேண்டுமானலும் எடுத்துக் கொள்

என்னிலிருந்து,

உன்னைத்தவிர...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்திய சினிமாவை விட மோசமா இருக்கே. அந்தப் பொண்ணு நமீதாவை காமத்தின் சின்னமாக்கிக் காட்டுறது கொடுமை...! :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

காமத்தை காமத்துடனேயே எழுதியுள்ளீங்க .... :D இந்தப் பெண்ணுக்கு எழுதியதா.?? இல்லை..... :rolleyes: ம்..தொடருங்கள் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

A.R. மணிகண்டனின் இணைப்பையும் தந்திருக்கலாமே!

http://flashmani.blogspot.com/2006/10/ii.html

இன்னுமொரு காமக் கவிதை..

காமம் - I

காயம் பட்டதென்னவோ

உண்மைதான்!

உன் மார் கூர்முனைகளில்

குத்திக் கிழிக்கப்பட்ட என் நெஞ்சம்..

உன் பஞ்சுப் பற்க்களால்

கடித்து சுவைக்கப்பட்ட என் உதடு..

உன் நகத்தூரிகைகளில்

வரைந்து இறுக்கப்பட்ட என் கன்னம்..

உன் இறுக்கங்களில்

இளகி இடிபட்டுப் போன என் உடல்..

உன் இயக்கங்களால்

இடம் பெயர மறுக்கும் என் இடை..

உன் விரல் அழுத்தங்களில்

விரைத்துப் போன என் விரல்கள்..

ஒரு சாமத்தில்..

என்னவளின் காமத்தில்..

காயம் பட்ட தென்னவோ

உண்மைதான்!

http://flashmani.blogspot.com/2006/10/i.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.