Jump to content

அதிகம் கேளாத இனிய பாடல்கள்


Recommended Posts

அன்பர்களே... மீண்டுமொருமுறை உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். :rolleyes:

சிறு வயதில் கேட்ட பல அரிய பாடல்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அதன் பலனாக பல பாடல்கள் கிடைத்துப் உள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே என் நோக்கம்.

பாடல் 1

பாடல்: எங்கும் நிறைந்த இயற்கையில்

படம்: இது எப்படி இருக்கு (1978)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: K.J. யேசுதாஸ், S. ஜானகி

பாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்.

இனி பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் 1978 இல் வெளிவந்தது. படம் தரமில்லாததால் பாடல் பெரிதும் பிரபலமாகவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் மெட்டிலும் இசைக்கோர்வையிலும் சிறந்துவிளங்கும் ஒரு பாடல். அத்துடன் இதைக்கேட்கும்போதெல்லாம் எங்கள் ஊரில் இருந்த ஞாபகம் வரும். அந்த ஒரு மகிழ்ச்சிக்காகவே இம்மாதிரியான பாடல்களைக்கேட்பதில் ஆர்வம் செலுத்துகிறேன்.

பாடலில் பிரதானமாக உபயோகிக்கப்பட்டுள்ள வாத்தியங்கள் கிட்டார், புல்லாங்குழல், தபலா, வயலின் போன்றவை. இவற்றில் கிட்டாரை எடுத்துக்கொண்டால் பேஸ் மற்றும் ரிதம் வகை கிட்டார்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. பேஸ் கிட்டாரை தமிழ் சினிமா இசையில் பெருமளவில் உபயோகிக்கத்தொடங்கிய ராஜா இந்தப் பாடலிலும் அதன் மூலம் தன் முத்திரையைப் பதிக்கின்றார். பேஸ் மற்றும் ரிதம் கிட்டாரில் நடை பழகும் அழகே அழகு. குறிப்பாக எங்கும் நிறைந்த அந்தப் பல்லவியில் இதனை அவதானிக்கலாம்.

இரண்டாவது இடையீட்டு இசை ஒரு இசைப்பிரவாகம்.குறிப்பாக 2:25 நிமிட நேரத்தில் தொடங்கும் கிட்டார் இசையும் அதனைத்தொடர்ந்த வயலின் குறிப்புகளும் மெய்சிலிர்க்க வைப்பவை. இவற்றுக்கான இசைக்குறிப்புக்கள் என்னிடம் உள்ளன. தேவையுள்ளவர்கள் தெரியப்படுத்துங்கள்.

என்னிடம் இதுமாதியான பாடல்கள் MP3 வடிவில் உள்ளன. யாழில் தரவேற்றம் செய்யும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும். மோகன் அண்ணை கவனிப்பாரா?

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 388
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் கேளாத பாடல்களை கேட்க வைக்கும் டங்குவார் க்கு நன்றி. இன்னும் பாடல்களை கேட்க ஆசையாக இருக்கிறேன் .

Link to comment
Share on other sites

அதிகம் கேளாத பாடல்களை கேட்க வைக்கும் டங்குவார் க்கு நன்றி. இன்னும் பாடல்களை கேட்க ஆசையாக இருக்கிறேன் .

நன்றி கறுப்பி.. என்னிடமுள்ள பாடல்களை முடிந்தமட்டும் தருகிறேன். மோகன் அண்ணை யாழில் பாடல்களைத் தரவேற்றம் செய்ய ஆவன் செய்வாரா? :rolleyes:

Link to comment
Share on other sites

பாடல் 2:

பாடல்: ஆசை நெஞ்சின் கனவுகள்

படம்: முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், P. சுசீலா

இந்தப்பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம் கேட்டபோது..அடேயப்பா.. அந்த ஆனந்தம் இருக்கிறதே.. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. :rolleyes:

பாடலைக் கேளுங்கள் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே அதிக வருடங்களுக்கு முன் கேட்ட பாடல். நன்றி டங்குவார். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து எம்பீ 3 யாக தரவேற்றம் செய்யுங்கள் தரம் குறையாது.

Link to comment
Share on other sites

நன்றி கறுப்பி.. என்னிடமுள்ள பாடல்களை முடிந்தமட்டும் தருகிறேன். மோகன் அண்ணை யாழில் பாடல்களைத் தரவேற்றம் செய்ய ஆவன் செய்வாரா? :lol:

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

பலர் உதவி செய்வார்களென நினக்கின்றேன் :lol:

Link to comment
Share on other sites

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

அண்ணை, இன்னொரு கொள்கணினி வாங்கிப் போடுறதுதானே.. :D

கொள்கணினி = சேர்வர் (என்னுடைய கண்டுபிடிப்பாக்கும்.. :lol: )

Link to comment
Share on other sites

பாடல் 3:

பாடல்: நான் பேச வந்தேன்

படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

இது ராஜாவின் மூன்றாவது படம். இந்தப்படமும் ஒரு உதவாத படம் என்பதால் பாடல் பிரபலமாகவில்லை. இந்தப்பாடலின் மெட்டு மிகவும் இனிமையானது. எதுமாதிரியும் இல்லாத புது மாதிரியான ஒரு மெட்டு. பின்புல இசையும் அதற்கேற்றாற்போல் மென்மையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பாடலை இங்கே கேளுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

மிக நல்ல பாடல் டங்குவார். என்னைப்பொருத்தவரை இளையராஜா + பாலா + ஜானகி கூட்டணிதான் மிகவும் சிறந்த பாடல்களைத்தந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் டங்கு.தொடருங்கள் .இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் மனதுக்கு மகிழ்ச்சியையும் இனிமையையும் தரும்.

Link to comment
Share on other sites

நன்றி ஈஸ் மற்றும் குமாரசாமி... :)

Link to comment
Share on other sites

பாடல்: 4

பாடல்: ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்

படம்: உறவாடும் நெஞ்சம் (1976)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ் ஜானகி

இதுவும் ஒரு அருமையான பாடல். பல்லவி முடிந்து முதல் இடையீட்டு இசையின் ஆரம்பம் அமர்க்களம்.

இனி வெங்கட்டின் "உள்ளும் புறமும்" வலைப்பதிவிலிருந்து...

பாலூட்டி வளர்த்த கிளி வெளியாகி மிகக் குறைந்த இடைவெளியிலேயே இளையராஜாவின் மூன்றாவது படம் வெளியானது. இந்த முறை அன்னக்கிளியின் இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், தேவராஜ்-மோகன் கூட்டணி திரும்ப வந்தது. இன்னும் பெரிய எதிர்பார்ப்பு. இன்னும் பெரிய தோல்வி. பா.வ.கி முதலில் வெளியாகியிருந்தாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி முதலில் பாடியது இந்தப் பாடல்தான். திரைக்கு வருவதற்கு முன்னரே ராஜாவும் எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் அன்னக்கிளியில் எஸ்.பி.பியைப் பாடவைக்க இளையராஜா முயலவில்லை. முதல் காரணம், அன்னக்கிளியில் இருந்த ஒரே ஆண் குரல் பாடல் (அன்னக்கிளி உன்னத்தேடுதே) சோகத்தைப் பிழியும் பாடல். அந்தக் காலங்களில் பாலசுப்ரமணியம் ஒரு ஜாலியான பாடகர் (சந்திரபாபு போன்றவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் ‘ஒரே’ ஜாலியான பாடகர் என்றும் சொல்லலாம்). அவரை வைத்து இந்தப் பாடலைப் பாடவைக்கும் துணிவு ராஜாவுக்கு இல்லை. அதற்கும் மேலாக ராஜாவுக்கே அந்தப் பாடலில் திருப்தி இல்லை என்று சொல்லியிருக்கிறார். தான் எஸ்.பி.பியைப் பாடவைத்தால் அற்புதமான இசையமைப்புடன் கூடிய இனிமையான பாடலைத்தான் என்று இளையராஜா நினைத்து அதை டி.எம்.எஸ் தலையில் கட்டினார்.

முதலாவது பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாகப் பதிவு செய்த முதல்பாடல் இதுதான். இந்த முறை தைரியமாக எஸ்.பி.பி வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலத்திடமும் தே.மோ இரட்டையரிடமும் கேட்க முடிந்தது.

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் பட்டியலில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இதில் வரும் இசையமைப்பு அந்தக் காலங்களில் தமிழ்த் திரையுலகிற்குப் புதுமையானது. இதே முறையைப் பின்னால் பருவமே.. புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே), ஓம் நமஹா.. (இதயத்தைத் திருடாதே) போன்ற படங்களில் ராஜா பயன்படுத்தியிருக்கிறார். (உறவாடும் நெஞ்சம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, இதயத்தைக் திருடாதே தலைப்பு ஒற்றுமை எதேச்சையாகத்தான் இருக்க வேண்டும்). பாடலின் முதல் இடையீட்டில் வரும் வயலின் இசை பின்னாட்களில் இளையராஜாவின் முத்திரைப் பாணியாக அமைந்துபோனது.

ஆமாம், ஒரு மாபெரும் வெற்றி. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ராஜா என்ன செய்தார்? நிமிர்ந்து நின்றார். படம் - பத்ரகாளி. இந்த முறை புதிதாக (அப்பொழுது கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த) யேசுதாஸ் கண்ணன் ஒரு கைக்குழந்தை-யைப் பாடினார். இந்தப் பாடலில் முதன் முறையாக பி.சுசிலாவும் ராஜாவின் இசையில் சேர்ந்தார். இது மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. அந்தப் படத்தின் கேட்டேளே அங்கே, ஒத்தரூவா ஒனக்குத்தாரேன் பாடல்களும் பிரபலமாயின. அப்புறம் 1977ல் பதின்மூன்று படங்களுக்கு ராஜாங்கம்தான். இதில் கவிக்குயில், பதினாறு வயதினிலே, காய்த்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, தீபம் எல்லாம் அடக்கம்.

பாடல் இங்கே.

Link to comment
Share on other sites

டங்குவார், சுசீலா அன்னக்கிளி படத்திலேயே ஒரு பாடல் (சொந்தமில்லை...) இளையராஜா இசையில் பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

டங்குவார், சுசீலா அன்னக்கிளி படத்திலேயே ஒரு பாடல் (சொந்தமில்லை...) இளையராஜா இசையில் பாடியுள்ளார்.

ஈஸ், நீங்கள் சொல்வது மிகவும் சரி.. அது ஒரு வலைப்பதிவிலிருந்து அப்படியே சுட்டது. நானும் சரியாகக் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.

:D

Link to comment
Share on other sites

மன்னிப்பதற்க்கு ஒன்றுமில்லை. உங்கள் தேடல் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

பாடல் 5:

பாடல்: வெள்ளி நிலாவினிலே

படம்: சொன்னது நீதானா(1978)

இசை: இளையராஜா

பாடியவர்: P. ஜெயச்சந்திரன்

பிரபலமாகாத இந்தப் பாடலை ஜெயச்சந்திரன் அற்புதமாகப் பாடியிருப்பார். மிகவும் இனிமையான இதன் மெட்டு ஒரு குழந்தையை நோக்கிப் பாடப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. இனிமையான மெட்டுக்களை பல்லவியிலும் சரணத்திலும் கொண்டுள்ளது.

பொதுவாக பேஸ் கிட்டாரின் உபயோகம் பாடல்களில் வெளியே மற்ற வாத்தியங்களைப்போல் தெரியாது. ஆனால் அதுவே ராஜாவின் பெரும்பாலான பாடல்களின் உயிர் நாடியாகும். பலருக்கு அது என்ன வாத்தியமென்றே தெரிந்திருக்காது. மேடையில் பாடல்களைப் பாடும்போதும் பெரும்பாலும் பேஸை உருப்படியாக வாசிக்காதிருப்பதால்தான் அசலைப் போல நகல் இருப்பதில்லை.

இந்தப்பாடலில் உதாரணத்துக்கு,

வெள்ளி நிலாவினிலே..தமிழ் வீணை வந்தது.. என்ற பல்லவியில் வந்தது என்றவரியின் து என்ற சொல்லில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு சுரம் பேஸ் கிட்டாரில் வாசிக்கப்படுகிறது. அது அடுத்த வரியான அது பாடும் பாடல் நீ ராஜா.. என்ற வரிக்கு முன்னோட்டமாகும். அந்த மாதிரி சுரமாற்றங்கள் வரும்போது ஒரு இனம் புரியாத இனிமை பிறக்கும். இதுவே ராஜாவின் மிகப்பெரிய பலம். ராஜாவின் அனேகமான பாடல்களில் இதனைக் கவனிக்கலாம்.

அலட்டல் போதும். இனி பாடலை இங்கே கேளுங்கள். :D

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 6:

பாடல்: மேகமே தூதாக வா

படம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், P.சுசீலா

எந்த நாழிகையில் கேட்கவைத்தாலும் எனக்கு சலிக்காத ஒரு பாடல். இதுவரை எத்தனை நூறுதடவைகள் கேட்டிருப்பேனோ தெரியாது. பாடலின் பல்லவியும் சரணமும் இருவித சுர ஸ்தாயிகளில் அமைக்கப்பட்டிருப்பதும், சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் போது வரும் சுரமாற்றமும் இனிமையைக் கொடுக்கின்றன.

பாடலின் வரிகள் இங்கே..

பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல் 7:

பாடல்: சிந்து நதியோரம்

படம்: மலர்களிலே அவள் மல்லிகை

இசை: கங்கை அமரன்

பாடியவர்கள்: P.ஜெயச்சந்திரன், P.சுசீலா

ஆரம்பத்தில் மிகச் சாதாரண பாடல் போல இருக்கும். மீண்டும் மீண்டும் கேட்க மிக இனிமையாகக் தோன்றும். பாடலைக் கேளுங்கள் இங்கே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவாருக்கு நீங்கள் செய்யும் முயற்சி பலருக்கு உபயோகமாக இருக்கவேண்டும். நீங்கள் RM தரவேற்றும் செய்வதால் பாடலின் தரம் குறைகிறது. MP3 யாக தரவேற்றம் செய்ய நிறைய தளங்கள் உண்டு அவற்றில் தரவேற்றம் செய்து இணைப்பை இங்கு தொடுத்து விடுங்கள்

http://rapidshare.com

http://www.mediafire.com

Link to comment
Share on other sites

டங்குவாருக்கு நீங்கள் செய்யும் முயற்சி பலருக்கு உபயோகமாக இருக்கவேண்டும். நீங்கள் RM தரவேற்றும் செய்வதால் பாடலின் தரம் குறைகிறது. MP3 யாக தரவேற்றம் செய்ய நிறைய தளங்கள் உண்டு அவற்றில் தரவேற்றம் செய்து இணைப்பை இங்கு தொடுத்து விடுங்கள்

http://rapidshare.com

http://www.mediafire.com

நடா,

இதுவரை நான் குறிப்பிட்ட பாடல்களெல்லாம் என்னால் தரவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. அவை ஏற்கனவே தளங்களில் உள்ளவை. என்னிடமும் பல பாடல்கள் உள்ளன. அவற்றை நீங்கள் சொன்ன முறையில் தரவேற்றம் செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி டங்குவார். பாடல்கள் கோடி கோடி அவை கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் கிடைப்பவை தரமானதாக இருந்தால் நல்லது. நீங்கள் பாடல்களை இணையுங்கள் நானும் தரமானதாக என்னிடமிருந்தால் இணைக்கின்றேன்.

நன்றி

Link to comment
Share on other sites

பாடல் 8:

பாடல்: மாலை மயங்கினால்

படம்: இனிக்கும் இளமை (1979)

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்கள்: P.B. சிறீநிவாஸ், S.P. சைலஜா

பாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்.

இந்தப் பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம்தான் கேட்டேன். மிகவும் இனிமையாக இருந்தது. பாடல் வரிகளும் மிக அழகு. நுணாவிலான் பாட்டுக்குள்ளே பாட்டு பகுதியில் இந்தப்பாடலைக் குறிப்பிட்டிருந்தார். என்ன நுணா.. பழைய பாடலெல்லாம் தலைகீழ் பாடம் பொல.. :mellow:

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.