Jump to content

அதிகம் கேளாத இனிய பாடல்கள்


Recommended Posts

அன்பர்களே... மீண்டுமொருமுறை உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். :rolleyes:

சிறு வயதில் கேட்ட பல அரிய பாடல்களை தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். அதன் பலனாக பல பாடல்கள் கிடைத்துப் உள்ளன. அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே என் நோக்கம்.

பாடல் 1

பாடல்: எங்கும் நிறைந்த இயற்கையில்

படம்: இது எப்படி இருக்கு (1978)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: K.J. யேசுதாஸ், S. ஜானகி

பாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்.

இனி பாடலுக்கு வருவோம். இந்தப் பாடல் 1978 இல் வெளிவந்தது. படம் தரமில்லாததால் பாடல் பெரிதும் பிரபலமாகவில்லை. ஆனால் என்னைப்பொறுத்தவரையில் மெட்டிலும் இசைக்கோர்வையிலும் சிறந்துவிளங்கும் ஒரு பாடல். அத்துடன் இதைக்கேட்கும்போதெல்லாம் எங்கள் ஊரில் இருந்த ஞாபகம் வரும். அந்த ஒரு மகிழ்ச்சிக்காகவே இம்மாதிரியான பாடல்களைக்கேட்பதில் ஆர்வம் செலுத்துகிறேன்.

பாடலில் பிரதானமாக உபயோகிக்கப்பட்டுள்ள வாத்தியங்கள் கிட்டார், புல்லாங்குழல், தபலா, வயலின் போன்றவை. இவற்றில் கிட்டாரை எடுத்துக்கொண்டால் பேஸ் மற்றும் ரிதம் வகை கிட்டார்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. பேஸ் கிட்டாரை தமிழ் சினிமா இசையில் பெருமளவில் உபயோகிக்கத்தொடங்கிய ராஜா இந்தப் பாடலிலும் அதன் மூலம் தன் முத்திரையைப் பதிக்கின்றார். பேஸ் மற்றும் ரிதம் கிட்டாரில் நடை பழகும் அழகே அழகு. குறிப்பாக எங்கும் நிறைந்த அந்தப் பல்லவியில் இதனை அவதானிக்கலாம்.

இரண்டாவது இடையீட்டு இசை ஒரு இசைப்பிரவாகம்.குறிப்பாக 2:25 நிமிட நேரத்தில் தொடங்கும் கிட்டார் இசையும் அதனைத்தொடர்ந்த வயலின் குறிப்புகளும் மெய்சிலிர்க்க வைப்பவை. இவற்றுக்கான இசைக்குறிப்புக்கள் என்னிடம் உள்ளன. தேவையுள்ளவர்கள் தெரியப்படுத்துங்கள்.

என்னிடம் இதுமாதியான பாடல்கள் MP3 வடிவில் உள்ளன. யாழில் தரவேற்றம் செய்யும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும். மோகன் அண்ணை கவனிப்பாரா?

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 388
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் கேளாத பாடல்களை கேட்க வைக்கும் டங்குவார் க்கு நன்றி. இன்னும் பாடல்களை கேட்க ஆசையாக இருக்கிறேன் .

Link to comment
Share on other sites

அதிகம் கேளாத பாடல்களை கேட்க வைக்கும் டங்குவார் க்கு நன்றி. இன்னும் பாடல்களை கேட்க ஆசையாக இருக்கிறேன் .

நன்றி கறுப்பி.. என்னிடமுள்ள பாடல்களை முடிந்தமட்டும் தருகிறேன். மோகன் அண்ணை யாழில் பாடல்களைத் தரவேற்றம் செய்ய ஆவன் செய்வாரா? :rolleyes:

Link to comment
Share on other sites

பாடல் 2:

பாடல்: ஆசை நெஞ்சின் கனவுகள்

படம்: முகத்தில் முகம் பார்க்கலாம் (1979)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், P. சுசீலா

இந்தப்பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம் கேட்டபோது..அடேயப்பா.. அந்த ஆனந்தம் இருக்கிறதே.. வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. :rolleyes:

பாடலைக் கேளுங்கள் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே அதிக வருடங்களுக்கு முன் கேட்ட பாடல். நன்றி டங்குவார். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து எம்பீ 3 யாக தரவேற்றம் செய்யுங்கள் தரம் குறையாது.

Link to comment
Share on other sites

நன்றி கறுப்பி.. என்னிடமுள்ள பாடல்களை முடிந்தமட்டும் தருகிறேன். மோகன் அண்ணை யாழில் பாடல்களைத் தரவேற்றம் செய்ய ஆவன் செய்வாரா? :lol:

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

பலர் உதவி செய்வார்களென நினக்கின்றேன் :lol:

Link to comment
Share on other sites

ஏற்கனவே உள்ள "சேர்வர்" பழுவினை சமாளிக்க மிகவும் சிரமப்படுகின்றோம். அதனால் தரவேற்றம் செய்வதற்கான வசதியினைச் செய்து தர முடியாமைக்கு வருந்துகின்றோம்.

அண்ணை, இன்னொரு கொள்கணினி வாங்கிப் போடுறதுதானே.. :D

கொள்கணினி = சேர்வர் (என்னுடைய கண்டுபிடிப்பாக்கும்.. :lol: )

Link to comment
Share on other sites

பாடல் 3:

பாடல்: நான் பேச வந்தேன்

படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

இது ராஜாவின் மூன்றாவது படம். இந்தப்படமும் ஒரு உதவாத படம் என்பதால் பாடல் பிரபலமாகவில்லை. இந்தப்பாடலின் மெட்டு மிகவும் இனிமையானது. எதுமாதிரியும் இல்லாத புது மாதிரியான ஒரு மெட்டு. பின்புல இசையும் அதற்கேற்றாற்போல் மென்மையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பாடலை இங்கே கேளுங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

மிக நல்ல பாடல் டங்குவார். என்னைப்பொருத்தவரை இளையராஜா + பாலா + ஜானகி கூட்டணிதான் மிகவும் சிறந்த பாடல்களைத்தந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் டங்கு.தொடருங்கள் .இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் மனதுக்கு மகிழ்ச்சியையும் இனிமையையும் தரும்.

Link to comment
Share on other sites

நன்றி ஈஸ் மற்றும் குமாரசாமி... :)

Link to comment
Share on other sites

பாடல்: 4

பாடல்: ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்

படம்: உறவாடும் நெஞ்சம் (1976)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ் ஜானகி

இதுவும் ஒரு அருமையான பாடல். பல்லவி முடிந்து முதல் இடையீட்டு இசையின் ஆரம்பம் அமர்க்களம்.

இனி வெங்கட்டின் "உள்ளும் புறமும்" வலைப்பதிவிலிருந்து...

பாலூட்டி வளர்த்த கிளி வெளியாகி மிகக் குறைந்த இடைவெளியிலேயே இளையராஜாவின் மூன்றாவது படம் வெளியானது. இந்த முறை அன்னக்கிளியின் இளையராஜா, பஞ்சு அருணாச்சலம், தேவராஜ்-மோகன் கூட்டணி திரும்ப வந்தது. இன்னும் பெரிய எதிர்பார்ப்பு. இன்னும் பெரிய தோல்வி. பா.வ.கி முதலில் வெளியாகியிருந்தாலும் இளையராஜா இசையில் எஸ்.பி.பி முதலில் பாடியது இந்தப் பாடல்தான். திரைக்கு வருவதற்கு முன்னரே ராஜாவும் எஸ்.பி.பியும் நெருங்கிய நண்பர்கள். இருந்தாலும் அன்னக்கிளியில் எஸ்.பி.பியைப் பாடவைக்க இளையராஜா முயலவில்லை. முதல் காரணம், அன்னக்கிளியில் இருந்த ஒரே ஆண் குரல் பாடல் (அன்னக்கிளி உன்னத்தேடுதே) சோகத்தைப் பிழியும் பாடல். அந்தக் காலங்களில் பாலசுப்ரமணியம் ஒரு ஜாலியான பாடகர் (சந்திரபாபு போன்றவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் ‘ஒரே’ ஜாலியான பாடகர் என்றும் சொல்லலாம்). அவரை வைத்து இந்தப் பாடலைப் பாடவைக்கும் துணிவு ராஜாவுக்கு இல்லை. அதற்கும் மேலாக ராஜாவுக்கே அந்தப் பாடலில் திருப்தி இல்லை என்று சொல்லியிருக்கிறார். தான் எஸ்.பி.பியைப் பாடவைத்தால் அற்புதமான இசையமைப்புடன் கூடிய இனிமையான பாடலைத்தான் என்று இளையராஜா நினைத்து அதை டி.எம்.எஸ் தலையில் கட்டினார்.

முதலாவது பட வெற்றிக்குப் பிறகு அடுத்ததாகப் பதிவு செய்த முதல்பாடல் இதுதான். இந்த முறை தைரியமாக எஸ்.பி.பி வேண்டும் என்று பஞ்சு அருணாச்சலத்திடமும் தே.மோ இரட்டையரிடமும் கேட்க முடிந்தது.

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல் பட்டியலில் இதற்கு முக்கிய இடம் உண்டு. இதில் வரும் இசையமைப்பு அந்தக் காலங்களில் தமிழ்த் திரையுலகிற்குப் புதுமையானது. இதே முறையைப் பின்னால் பருவமே.. புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே), ஓம் நமஹா.. (இதயத்தைத் திருடாதே) போன்ற படங்களில் ராஜா பயன்படுத்தியிருக்கிறார். (உறவாடும் நெஞ்சம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, இதயத்தைக் திருடாதே தலைப்பு ஒற்றுமை எதேச்சையாகத்தான் இருக்க வேண்டும்). பாடலின் முதல் இடையீட்டில் வரும் வயலின் இசை பின்னாட்களில் இளையராஜாவின் முத்திரைப் பாணியாக அமைந்துபோனது.

ஆமாம், ஒரு மாபெரும் வெற்றி. இரண்டு தோல்விகளுக்குப் பிறகு ராஜா என்ன செய்தார்? நிமிர்ந்து நின்றார். படம் - பத்ரகாளி. இந்த முறை புதிதாக (அப்பொழுது கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த) யேசுதாஸ் கண்ணன் ஒரு கைக்குழந்தை-யைப் பாடினார். இந்தப் பாடலில் முதன் முறையாக பி.சுசிலாவும் ராஜாவின் இசையில் சேர்ந்தார். இது மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது. அந்தப் படத்தின் கேட்டேளே அங்கே, ஒத்தரூவா ஒனக்குத்தாரேன் பாடல்களும் பிரபலமாயின. அப்புறம் 1977ல் பதின்மூன்று படங்களுக்கு ராஜாங்கம்தான். இதில் கவிக்குயில், பதினாறு வயதினிலே, காய்த்ரி, புவனா ஒரு கேள்விக்குறி, தீபம் எல்லாம் அடக்கம்.

பாடல் இங்கே.

Link to comment
Share on other sites

டங்குவார், சுசீலா அன்னக்கிளி படத்திலேயே ஒரு பாடல் (சொந்தமில்லை...) இளையராஜா இசையில் பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

டங்குவார், சுசீலா அன்னக்கிளி படத்திலேயே ஒரு பாடல் (சொந்தமில்லை...) இளையராஜா இசையில் பாடியுள்ளார்.

ஈஸ், நீங்கள் சொல்வது மிகவும் சரி.. அது ஒரு வலைப்பதிவிலிருந்து அப்படியே சுட்டது. நானும் சரியாகக் கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.

:D

Link to comment
Share on other sites

மன்னிப்பதற்க்கு ஒன்றுமில்லை. உங்கள் தேடல் தொடரட்டும்.

Link to comment
Share on other sites

பாடல் 5:

பாடல்: வெள்ளி நிலாவினிலே

படம்: சொன்னது நீதானா(1978)

இசை: இளையராஜா

பாடியவர்: P. ஜெயச்சந்திரன்

பிரபலமாகாத இந்தப் பாடலை ஜெயச்சந்திரன் அற்புதமாகப் பாடியிருப்பார். மிகவும் இனிமையான இதன் மெட்டு ஒரு குழந்தையை நோக்கிப் பாடப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. இனிமையான மெட்டுக்களை பல்லவியிலும் சரணத்திலும் கொண்டுள்ளது.

பொதுவாக பேஸ் கிட்டாரின் உபயோகம் பாடல்களில் வெளியே மற்ற வாத்தியங்களைப்போல் தெரியாது. ஆனால் அதுவே ராஜாவின் பெரும்பாலான பாடல்களின் உயிர் நாடியாகும். பலருக்கு அது என்ன வாத்தியமென்றே தெரிந்திருக்காது. மேடையில் பாடல்களைப் பாடும்போதும் பெரும்பாலும் பேஸை உருப்படியாக வாசிக்காதிருப்பதால்தான் அசலைப் போல நகல் இருப்பதில்லை.

இந்தப்பாடலில் உதாரணத்துக்கு,

வெள்ளி நிலாவினிலே..தமிழ் வீணை வந்தது.. என்ற பல்லவியில் வந்தது என்றவரியின் து என்ற சொல்லில் மிகைப்படுத்தப்பட்ட ஒரு சுரம் பேஸ் கிட்டாரில் வாசிக்கப்படுகிறது. அது அடுத்த வரியான அது பாடும் பாடல் நீ ராஜா.. என்ற வரிக்கு முன்னோட்டமாகும். அந்த மாதிரி சுரமாற்றங்கள் வரும்போது ஒரு இனம் புரியாத இனிமை பிறக்கும். இதுவே ராஜாவின் மிகப்பெரிய பலம். ராஜாவின் அனேகமான பாடல்களில் இதனைக் கவனிக்கலாம்.

அலட்டல் போதும். இனி பாடலை இங்கே கேளுங்கள். :D

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 6:

பாடல்: மேகமே தூதாக வா

படம்: கண்ணன் ஒரு கைக்குழந்தை (1978)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், P.சுசீலா

எந்த நாழிகையில் கேட்கவைத்தாலும் எனக்கு சலிக்காத ஒரு பாடல். இதுவரை எத்தனை நூறுதடவைகள் கேட்டிருப்பேனோ தெரியாது. பாடலின் பல்லவியும் சரணமும் இருவித சுர ஸ்தாயிகளில் அமைக்கப்பட்டிருப்பதும், சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் போது வரும் சுரமாற்றமும் இனிமையைக் கொடுக்கின்றன.

பாடலின் வரிகள் இங்கே..

பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

பாடல் 7:

பாடல்: சிந்து நதியோரம்

படம்: மலர்களிலே அவள் மல்லிகை

இசை: கங்கை அமரன்

பாடியவர்கள்: P.ஜெயச்சந்திரன், P.சுசீலா

ஆரம்பத்தில் மிகச் சாதாரண பாடல் போல இருக்கும். மீண்டும் மீண்டும் கேட்க மிக இனிமையாகக் தோன்றும். பாடலைக் கேளுங்கள் இங்கே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டங்குவாருக்கு நீங்கள் செய்யும் முயற்சி பலருக்கு உபயோகமாக இருக்கவேண்டும். நீங்கள் RM தரவேற்றும் செய்வதால் பாடலின் தரம் குறைகிறது. MP3 யாக தரவேற்றம் செய்ய நிறைய தளங்கள் உண்டு அவற்றில் தரவேற்றம் செய்து இணைப்பை இங்கு தொடுத்து விடுங்கள்

http://rapidshare.com

http://www.mediafire.com

Link to comment
Share on other sites

டங்குவாருக்கு நீங்கள் செய்யும் முயற்சி பலருக்கு உபயோகமாக இருக்கவேண்டும். நீங்கள் RM தரவேற்றும் செய்வதால் பாடலின் தரம் குறைகிறது. MP3 யாக தரவேற்றம் செய்ய நிறைய தளங்கள் உண்டு அவற்றில் தரவேற்றம் செய்து இணைப்பை இங்கு தொடுத்து விடுங்கள்

http://rapidshare.com

http://www.mediafire.com

நடா,

இதுவரை நான் குறிப்பிட்ட பாடல்களெல்லாம் என்னால் தரவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. அவை ஏற்கனவே தளங்களில் உள்ளவை. என்னிடமும் பல பாடல்கள் உள்ளன. அவற்றை நீங்கள் சொன்ன முறையில் தரவேற்றம் செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி டங்குவார். பாடல்கள் கோடி கோடி அவை கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் கிடைப்பவை தரமானதாக இருந்தால் நல்லது. நீங்கள் பாடல்களை இணையுங்கள் நானும் தரமானதாக என்னிடமிருந்தால் இணைக்கின்றேன்.

நன்றி

Link to comment
Share on other sites

பாடல் 8:

பாடல்: மாலை மயங்கினால்

படம்: இனிக்கும் இளமை (1979)

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்கள்: P.B. சிறீநிவாஸ், S.P. சைலஜா

பாடலை இங்கே தரவிறக்கம் செய்யுங்கள்.

இந்தப் பாடலை பல வருடங்கள் கழித்து போன வருடம்தான் கேட்டேன். மிகவும் இனிமையாக இருந்தது. பாடல் வரிகளும் மிக அழகு. நுணாவிலான் பாட்டுக்குள்ளே பாட்டு பகுதியில் இந்தப்பாடலைக் குறிப்பிட்டிருந்தார். என்ன நுணா.. பழைய பாடலெல்லாம் தலைகீழ் பாடம் பொல.. :mellow:

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.