Jump to content

அதிகம் கேளாத இனிய பாடல்கள்


Recommended Posts

டங்குவார், உங்கள் தேடல் தொடரட்டும். வேலைப்பளு காரணமாக தேடல் குறைந்து விட்டதா?

நேரக்குறைவு ஒரு காரணம்.. இப்பாடல்களில் பலருக்கு ஆர்வம் இல்லையோ என்ற ஒரு எண்ணமும் வந்துவிட்டது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 388
  • Created
  • Last Reply

இதனை இங்கு இணைக்கலாமோ தெரியவில்லை. விதிகளுக்கு முறண் எனில் நீக்கி விடவும்.

பின்வரும் இணைய தளத்தில் இளையராஜாவின் எல்லா பாடல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். 99% மான அவரின் பாடல்கள் உள்ளது. 'ரொரன்ட்ஸ்' தொழிட்னுப்பதில் உள்ளது

இணையம்: TMS"]TMS

thread

Link to comment
Share on other sites

இறைவன் கேட்ட "அழகே தமிழே.." பாடல், தரவிறக்கம் செய்து மகிளுங்கள்

Click_Here

Link to comment
Share on other sites

பாடல் 12:

பாடல்: நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்

படம்: சாட்டை இல்லாத பம்பரம் (1983)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், S. ஜானகி

இந்தப்பாடல் தற்செயலாக இணையத்தில் கிடைத்தது. கேட்டபோது பல ஆண்டுகளுக்கு முன் நாட்டில் கேட்ட ஞாபகம் வந்தது. பிறகென்ன நினைவு மீட்டல்தானே..

பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 13:

பாடல்: கலையோ சிலையோ

படம்: பகலில் ஓர் இரவு (1979)

இசை: இளையராஜா

பாடியவர்: P. ஜெயச்சந்திரன்

பகலில் ஓர் இரவு படத்தில் மிகவும் பிரபலமான பாடல் இளமையெனும் பூங்காற்று. அந்த அலையில் அடிபட்டு பெரிதும் பிரபலமாகாமல் போன ஒரு இனிய பாடல் இது. சரணத்தின் மெட்டு அழகு. குறிப்பாக முடிவில் வரும்,

வடிவமோ கன்னிக் கோலம்

வாலிபம் பூமழை

என்ற அழகிய வரிகள் இனிமையான மெட்டுடன் சரணத்தை நிறைவு செய்கிறது.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

டங்குவார்,

எனது தேவை.

"சந்ரோதயம் ஒரு பெண்னானதோ? "

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை"

" உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"

Link to comment
Share on other sites

டங்குவார்,

எனது தேவை.

"சந்ரோதயம் ஒரு பெண்னானதோ? "

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை"

" உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"

இறைவா,

இந்தப் பாடல்களில் கிடைப்பதை எடுத்து நடாவின் கேளுங்கள் கொடுக்கப்படும் பகுதியில் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

பாடல் 14:

பாடல்: ஹேய் வெண்ணிலா

படம்: இது ஒரு தொடர்கதை (1986?)

இசை: கங்கை அமரன்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி

இந்தப்பாடல் முதலில் சாதாரணமாகத் தோன்றினாலும் போகப் போக இனிமை கூடி சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக சரணத்தில் வரும் வயலின் ஒலி உணர்வுகளை எங்கோ இட்டுச் செல்கிறது.

பாடல் ஈசுக்குப் பிடிக்குமோ தெரியாது. :unsure: எதுக்கும் அதனுடைய ஒளிக்காட்சியையும் இணைத்து விடுகிறேன்.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி டங்குவார். 12/13/14 நல்ல பாடல்கள். 13 கேட்ட பாடல். 12 கேட்டதில்லை.

14, நான் பார்த்த படம். மோகன், அமலா, ரேகா நடித்தது என்று நம்புகிறேன். ஆனால் பாடல் ஞாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

பாடல் 15:

பாடல்: பொல்லாத ஆசை வந்து

படம்: குவா குவா வாத்துக்கள் (1984)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

குவா குவா வாத்துக்கள் ஒரு சிரிப்புப் படம். இதிலுள்ள பாடல்கள் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கின்றன. இன்று ஒரு தேடலில் பின்வரும் பாடல் கிடைத்தது.

பாடலின் ஆரம்பம் அதாவது பல்லவி வழக்கமான இளையராஜா பல்லவி போன்றே சாதாரணமாக இருக்கும். ஆனால் அதிலும் ஒரு பரீட்சார்த்த முயற்சி செய்திருக்கிறார். அதாவது தென்னிந்திய வாத்தியமான மிருதங்கத்தை மேற்கத்திய டிரம்ஸ் மற்றும் கிட்டாருடன் கலந்து அசத்துகிறார். மேலும் பாடலில் வீணைக்குறிப்புகளும் உள்ளன. பாடல் முழுவதும் பேஸ் கிட்டார் பிரமாதமாக உபயோகிக்கப்பட்டுள்ளது. இடையீட்டு இசை மூலம் பாடலை வேறு ஒரு பரிணாமத்துக்குக் கொண்டு சென்று சரணத்தை பிரமாதமாக மாற்றியிருக்கிறார் இளையராஜ.

இரண்டாவது இடையீட்டு இசை அந்தக்கால இளையராஜாவின் மேற்கத்தைய இசை ஈடுபாட்டைக் காட்டுகிறது. அதிலும் அவர் எடுத்துக்கொண்ட சுரவரிசைகளை சுமூகமாக சரணத்தோடு இணைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அங்கேதான் ராஜாவின் இசை மற்றும் சுரக்கோர்வை மேலான ஆளுமை வெளிவருகிறது. வயலின்களைக் கொண்டு சுரங்களைத் தொடுத்து அதை லாவகமாகவும் அதே சமயம் இனிமையாகவும் சரணத்தோடு தொடுத்து விடுகிறார்.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 16:

பாடல்: பூந்தென்றலே

படம்: புவனா ஒரு கேள்விக்குறி (1977)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: P. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்

படத்தில் ஏமாற்றுப் பேர்வழி சிவகுமார் ஏமாற்றப்படும் கதாநாயகியுடன் பாடும் பாடல். எனக்குப் பிடித்த படங்களுள் ஒன்று.

இசையைப் பொறுத்தவரையில், சில வித்தியாசமான முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, முதல் சரணத்தில் உபயோகிக்கப்படும் தாள வாத்தியம் இரண்டாவது சரணத்தில் அதிகபட்சம் உபயோகிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ரிதம் கிட்டார் உபயோகிக்கிறார் ராஜா. மற்றும்படி பாடலின் மெட்டும் இனிமையானதே.

இனி, பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

டங்குவார்!

பாட்டு ஒரு பாட்டு

பாட்டு ஒரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரேஒரு பாட்டுஇ

T. M. S சுசீலா பாடியது. படம் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

பாடல் 17:

பாடல்: சித்திரமே உன் விழிகள்

படம்: நெஞ்சிலே துணிவிருந்தால் (??)

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்: K.J. யேசுதாஸ்

சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் வெளிவந்த பல நல்ல பாடல்களில் ஒன்று இது. இனிமையான மெட்டுக்கு யேசுதாஸ் அவர்களின் பாந்தமான குரல் இன்னும் சிறப்பு.

இனி பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

டங்குவார்!

பாட்டு ஒரு பாட்டு

பாட்டு ஒரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரேஒரு பாட்டுஇ

T. M. S சுசீலா பாடியது. படம் தெரியவில்லை.

இறைவன்,

இந்தப் பக்கத்தைப் பல நாட்கள் பாராததினால் பதிலளிக்க முடியவில்லை. உங்கள் பாட்டு நடாவிடம் கிடைத்து விட்டது தானே.. :huh:

Link to comment
Share on other sites

பாடல் 18:

பாடல்: தாம்த தீம்த

படம்: பகலில் ஓர் இரவு (1979)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ். ஜானகி மற்றும் குழுவினர்

ஓரளவு கேட்ட பாடல்தான் என்றாலும், சில வருடங்களுக்கு முன்னர்தான் இந்தப் பாடலில் உள்ள ஒரு சிறப்பு விளங்கியது. அதாவது இப்பாடலில் உபயோகிக்கப்பட்ட வாத்தியங்களை எடுத்துக் கொண்டால், தபலா, மேஸ் கிட்டார் மற்றும் சிம்பல்ஸ் மட்டுமே அடங்கும். வயலின் புல்லாங்குழல் போன்ற வாத்தியங்கள் உபயோகிக்கப் படவில்லை. அந்தக் கால கீபோர்ட் ஆரம்ப இசையில் கொஞ்சம் பயன்பட்டிருக்கிறது. ஆனால் கோரஸ் இசையை வைத்து பாடலை சரி செய்திருக்கிறார் ராஜா.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 20:

பாடல்: தென்ன மரத்தில

படம்: லட்சுமி (1979)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: இளையராஜா, P. சுசீலா

ஆரம்ப இசையைக் கேட்ட்டவுடனே கிராமத்துக்குச் சென்ற உணர்வு வராதோர் யார்? அந்தக்கால கிராமத்து ராஜாவின் குரலில் பாடல் அமர்க்களம். சுசீலா அவர்களும் சேர்ந்துகொண்டால் இனிமைக்குக் குறைவென்ன..!

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 21:

பாடல்: நெஞ்சத்தில்

படம்: உணர்ச்சிகள் (1976)

இசை: ஷ்யாம்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி

பாடலின் ஆரம்ப இசையில் பாடகர்கள் இருவரினதும் குரல்களும் பின்னிப் பிணையும் அழகே அழகு. பாடலின் மெட்டு இனிமையோ இனிமை. அந்நாளில் கேட்ட ஞாபகம் வருவதைத் தவிக்க இயலாது. :lol:

இனி பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

பாடல் 22:

பாடல்: ஞாயிறு ஒளி மழையில்

படம்: அந்தரங்கம் (1975)

இசை: தேவராஜன்

பாடியவர்: கமல்ஹாசன்

கமலின் குரலில் வெளிவந்த ஆரம்பகாலப் பாடல். பல ஆண்டுகளுக்கு முன் கேட்டது. இனிமையான இந்தப் பாடலுக்கு அருமையான இசையைத் தந்துள்ளார் தேவராஜன்.

இனி பாடல் இங்கே...

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 23:

பாடல்: தண்ணி கறுத்திருச்சு

படம்: இளமை ஊஞ்சலாடுகிறது ()

இசை: இளையராஜா

பாடியவர்: மலேசியா வாசுதேவன்

மிக வித்தியாசமான மெட்டமைப்பில் கிராமத்து இசை அட்டகாசம். இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இளையராஜாவின் கட்டுரையிலிருந்து..

(நன்றி: முத்தமிழ் மன்றம்)

மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார்.

இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.

அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங்.

ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டியூன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.

இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு.

"சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் `ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது!

இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன் னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.

ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். `டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன்.

அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந் தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டியூன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.

நான் அவரிடம் "சார்! இது ஹிட் ஆகும் நல்ல டிïன்தான். நிறுத்தி நிறுத்திப்பாடி முழுப்பாடலையும் கேட்க முடியாததால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது'' என்றேன்.

அதோடு, "இந்தப்பாடலை வேறு ஒருவரைக்கொண்டு பாடச் சொல்லலாம்'' என்றும் சொன்னேன்.

"வேறு யாரை பாட வைக்க நினைக்கிறீர்கள்?'' கேட்டார் ஸ்ரீதர்.

"மலேசியா வாசுதேவனை பாட வைக்கிறேன்'' என்றேன்.

"உங்கள் விருப்பம்'' என்றார், ஸ்ரீதர்.

சொன்னபடி மலேசியாவை பாட அழைத்தேன். ஜி.கே.வி.யும் கூட இருந்தார். மலேசியா வாசுதேவன் பாடி முடித்த நேரத்தில் ஜி.கே.வி. என்னிடம், "இவ்வளவு வித்தியாசமான பாடல் என்று எனக்கு ஏன் அன்றைக்கு தெரியாமல் போயிற்று?'' என்று கேட்டார்.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 24:

பாடல்: அழகே உன்னை

படம்: வாலிபமே வா வா (1982)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: P. சுசீலா, மலேசியா வாசுதேவன்

மெல்லிசைப் பிரியர்களுக்காக இந்தப் பாடல். ஒரு தேடலில் வலைத்தளத்தில் கிடைத்தது.

பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 25:

பாடல்: நாள் நல்ல நாள்

படம்: பணக்காரப் பெண்

இசை: M.S. விஸ்வநாதன்

பாடியவர்கள்: T.M. சௌந்திரராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இனிமையான இந்தப் பழைய பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

பாடல்#26

பாடல்: சந்தன மார்பிலே

படம்:நாடோடித்தென்றல்

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்கள்: மனோ, ஜானகி

சந்தன மார்பிலே

http://2luo.com/watch?v=Zpy08SYB3rY

Link to comment
Share on other sites

பாடல் 27: நினைப்பது நிறைவேறும்

படம்: நினைப்பது நிறைவேறும் (1976)

இசை: எம். எல். ஸ்ரீகாந்த்

பாடியவர்கள்: எம். எல். ஸ்ரீகாந்த் மற்றும் வாணி ஜெயராம்

இனிமையானதொரு பாடல்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.