Jump to content

அதிகம் கேளாத இனிய பாடல்கள்


Recommended Posts

டங்குவார், உங்கள் தேடல் தொடரட்டும். வேலைப்பளு காரணமாக தேடல் குறைந்து விட்டதா?

நேரக்குறைவு ஒரு காரணம்.. இப்பாடல்களில் பலருக்கு ஆர்வம் இல்லையோ என்ற ஒரு எண்ணமும் வந்துவிட்டது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 388
  • Created
  • Last Reply

இதனை இங்கு இணைக்கலாமோ தெரியவில்லை. விதிகளுக்கு முறண் எனில் நீக்கி விடவும்.

பின்வரும் இணைய தளத்தில் இளையராஜாவின் எல்லா பாடல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். 99% மான அவரின் பாடல்கள் உள்ளது. 'ரொரன்ட்ஸ்' தொழிட்னுப்பதில் உள்ளது

இணையம்: TMS"]TMS

thread

Link to comment
Share on other sites

இறைவன் கேட்ட "அழகே தமிழே.." பாடல், தரவிறக்கம் செய்து மகிளுங்கள்

Click_Here

Link to comment
Share on other sites

பாடல் 12:

பாடல்: நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள்

படம்: சாட்டை இல்லாத பம்பரம் (1983)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், S. ஜானகி

இந்தப்பாடல் தற்செயலாக இணையத்தில் கிடைத்தது. கேட்டபோது பல ஆண்டுகளுக்கு முன் நாட்டில் கேட்ட ஞாபகம் வந்தது. பிறகென்ன நினைவு மீட்டல்தானே..

பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 13:

பாடல்: கலையோ சிலையோ

படம்: பகலில் ஓர் இரவு (1979)

இசை: இளையராஜா

பாடியவர்: P. ஜெயச்சந்திரன்

பகலில் ஓர் இரவு படத்தில் மிகவும் பிரபலமான பாடல் இளமையெனும் பூங்காற்று. அந்த அலையில் அடிபட்டு பெரிதும் பிரபலமாகாமல் போன ஒரு இனிய பாடல் இது. சரணத்தின் மெட்டு அழகு. குறிப்பாக முடிவில் வரும்,

வடிவமோ கன்னிக் கோலம்

வாலிபம் பூமழை

என்ற அழகிய வரிகள் இனிமையான மெட்டுடன் சரணத்தை நிறைவு செய்கிறது.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

டங்குவார்,

எனது தேவை.

"சந்ரோதயம் ஒரு பெண்னானதோ? "

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை"

" உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"

Link to comment
Share on other sites

டங்குவார்,

எனது தேவை.

"சந்ரோதயம் ஒரு பெண்னானதோ? "

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை"

" உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"

இறைவா,

இந்தப் பாடல்களில் கிடைப்பதை எடுத்து நடாவின் கேளுங்கள் கொடுக்கப்படும் பகுதியில் இணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

பாடல் 14:

பாடல்: ஹேய் வெண்ணிலா

படம்: இது ஒரு தொடர்கதை (1986?)

இசை: கங்கை அமரன்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி

இந்தப்பாடல் முதலில் சாதாரணமாகத் தோன்றினாலும் போகப் போக இனிமை கூடி சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக சரணத்தில் வரும் வயலின் ஒலி உணர்வுகளை எங்கோ இட்டுச் செல்கிறது.

பாடல் ஈசுக்குப் பிடிக்குமோ தெரியாது. :unsure: எதுக்கும் அதனுடைய ஒளிக்காட்சியையும் இணைத்து விடுகிறேன்.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

நன்றி டங்குவார். 12/13/14 நல்ல பாடல்கள். 13 கேட்ட பாடல். 12 கேட்டதில்லை.

14, நான் பார்த்த படம். மோகன், அமலா, ரேகா நடித்தது என்று நம்புகிறேன். ஆனால் பாடல் ஞாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

பாடல் 15:

பாடல்: பொல்லாத ஆசை வந்து

படம்: குவா குவா வாத்துக்கள் (1984)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

குவா குவா வாத்துக்கள் ஒரு சிரிப்புப் படம். இதிலுள்ள பாடல்கள் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கின்றன. இன்று ஒரு தேடலில் பின்வரும் பாடல் கிடைத்தது.

பாடலின் ஆரம்பம் அதாவது பல்லவி வழக்கமான இளையராஜா பல்லவி போன்றே சாதாரணமாக இருக்கும். ஆனால் அதிலும் ஒரு பரீட்சார்த்த முயற்சி செய்திருக்கிறார். அதாவது தென்னிந்திய வாத்தியமான மிருதங்கத்தை மேற்கத்திய டிரம்ஸ் மற்றும் கிட்டாருடன் கலந்து அசத்துகிறார். மேலும் பாடலில் வீணைக்குறிப்புகளும் உள்ளன. பாடல் முழுவதும் பேஸ் கிட்டார் பிரமாதமாக உபயோகிக்கப்பட்டுள்ளது. இடையீட்டு இசை மூலம் பாடலை வேறு ஒரு பரிணாமத்துக்குக் கொண்டு சென்று சரணத்தை பிரமாதமாக மாற்றியிருக்கிறார் இளையராஜ.

இரண்டாவது இடையீட்டு இசை அந்தக்கால இளையராஜாவின் மேற்கத்தைய இசை ஈடுபாட்டைக் காட்டுகிறது. அதிலும் அவர் எடுத்துக்கொண்ட சுரவரிசைகளை சுமூகமாக சரணத்தோடு இணைப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அங்கேதான் ராஜாவின் இசை மற்றும் சுரக்கோர்வை மேலான ஆளுமை வெளிவருகிறது. வயலின்களைக் கொண்டு சுரங்களைத் தொடுத்து அதை லாவகமாகவும் அதே சமயம் இனிமையாகவும் சரணத்தோடு தொடுத்து விடுகிறார்.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 16:

பாடல்: பூந்தென்றலே

படம்: புவனா ஒரு கேள்விக்குறி (1977)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: P. ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்

படத்தில் ஏமாற்றுப் பேர்வழி சிவகுமார் ஏமாற்றப்படும் கதாநாயகியுடன் பாடும் பாடல். எனக்குப் பிடித்த படங்களுள் ஒன்று.

இசையைப் பொறுத்தவரையில், சில வித்தியாசமான முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, முதல் சரணத்தில் உபயோகிக்கப்படும் தாள வாத்தியம் இரண்டாவது சரணத்தில் அதிகபட்சம் உபயோகிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக ரிதம் கிட்டார் உபயோகிக்கிறார் ராஜா. மற்றும்படி பாடலின் மெட்டும் இனிமையானதே.

இனி, பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

டங்குவார்!

பாட்டு ஒரு பாட்டு

பாட்டு ஒரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரேஒரு பாட்டுஇ

T. M. S சுசீலா பாடியது. படம் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

பாடல் 17:

பாடல்: சித்திரமே உன் விழிகள்

படம்: நெஞ்சிலே துணிவிருந்தால் (??)

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்: K.J. யேசுதாஸ்

சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் வெளிவந்த பல நல்ல பாடல்களில் ஒன்று இது. இனிமையான மெட்டுக்கு யேசுதாஸ் அவர்களின் பாந்தமான குரல் இன்னும் சிறப்பு.

இனி பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

டங்குவார்!

பாட்டு ஒரு பாட்டு

பாட்டு ஒரே ஒரு பாட்டு

ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரேஒரு பாட்டுஇ

T. M. S சுசீலா பாடியது. படம் தெரியவில்லை.

இறைவன்,

இந்தப் பக்கத்தைப் பல நாட்கள் பாராததினால் பதிலளிக்க முடியவில்லை. உங்கள் பாட்டு நடாவிடம் கிடைத்து விட்டது தானே.. :huh:

Link to comment
Share on other sites

பாடல் 18:

பாடல்: தாம்த தீம்த

படம்: பகலில் ஓர் இரவு (1979)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ். ஜானகி மற்றும் குழுவினர்

ஓரளவு கேட்ட பாடல்தான் என்றாலும், சில வருடங்களுக்கு முன்னர்தான் இந்தப் பாடலில் உள்ள ஒரு சிறப்பு விளங்கியது. அதாவது இப்பாடலில் உபயோகிக்கப்பட்ட வாத்தியங்களை எடுத்துக் கொண்டால், தபலா, மேஸ் கிட்டார் மற்றும் சிம்பல்ஸ் மட்டுமே அடங்கும். வயலின் புல்லாங்குழல் போன்ற வாத்தியங்கள் உபயோகிக்கப் படவில்லை. அந்தக் கால கீபோர்ட் ஆரம்ப இசையில் கொஞ்சம் பயன்பட்டிருக்கிறது. ஆனால் கோரஸ் இசையை வைத்து பாடலை சரி செய்திருக்கிறார் ராஜா.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 20:

பாடல்: தென்ன மரத்தில

படம்: லட்சுமி (1979)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: இளையராஜா, P. சுசீலா

ஆரம்ப இசையைக் கேட்ட்டவுடனே கிராமத்துக்குச் சென்ற உணர்வு வராதோர் யார்? அந்தக்கால கிராமத்து ராஜாவின் குரலில் பாடல் அமர்க்களம். சுசீலா அவர்களும் சேர்ந்துகொண்டால் இனிமைக்குக் குறைவென்ன..!

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 21:

பாடல்: நெஞ்சத்தில்

படம்: உணர்ச்சிகள் (1976)

இசை: ஷ்யாம்

பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி

பாடலின் ஆரம்ப இசையில் பாடகர்கள் இருவரினதும் குரல்களும் பின்னிப் பிணையும் அழகே அழகு. பாடலின் மெட்டு இனிமையோ இனிமை. அந்நாளில் கேட்ட ஞாபகம் வருவதைத் தவிக்க இயலாது. :lol:

இனி பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

பாடல் 22:

பாடல்: ஞாயிறு ஒளி மழையில்

படம்: அந்தரங்கம் (1975)

இசை: தேவராஜன்

பாடியவர்: கமல்ஹாசன்

கமலின் குரலில் வெளிவந்த ஆரம்பகாலப் பாடல். பல ஆண்டுகளுக்கு முன் கேட்டது. இனிமையான இந்தப் பாடலுக்கு அருமையான இசையைத் தந்துள்ளார் தேவராஜன்.

இனி பாடல் இங்கே...

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 23:

பாடல்: தண்ணி கறுத்திருச்சு

படம்: இளமை ஊஞ்சலாடுகிறது ()

இசை: இளையராஜா

பாடியவர்: மலேசியா வாசுதேவன்

மிக வித்தியாசமான மெட்டமைப்பில் கிராமத்து இசை அட்டகாசம். இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இளையராஜாவின் கட்டுரையிலிருந்து..

(நன்றி: முத்தமிழ் மன்றம்)

மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார்.

இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.

அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங்.

ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டியூன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.

இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு.

"சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் `ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது!

இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன் னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.

ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். `டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன்.

அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந் தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டியூன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.

நான் அவரிடம் "சார்! இது ஹிட் ஆகும் நல்ல டிïன்தான். நிறுத்தி நிறுத்திப்பாடி முழுப்பாடலையும் கேட்க முடியாததால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது'' என்றேன்.

அதோடு, "இந்தப்பாடலை வேறு ஒருவரைக்கொண்டு பாடச் சொல்லலாம்'' என்றும் சொன்னேன்.

"வேறு யாரை பாட வைக்க நினைக்கிறீர்கள்?'' கேட்டார் ஸ்ரீதர்.

"மலேசியா வாசுதேவனை பாட வைக்கிறேன்'' என்றேன்.

"உங்கள் விருப்பம்'' என்றார், ஸ்ரீதர்.

சொன்னபடி மலேசியாவை பாட அழைத்தேன். ஜி.கே.வி.யும் கூட இருந்தார். மலேசியா வாசுதேவன் பாடி முடித்த நேரத்தில் ஜி.கே.வி. என்னிடம், "இவ்வளவு வித்தியாசமான பாடல் என்று எனக்கு ஏன் அன்றைக்கு தெரியாமல் போயிற்று?'' என்று கேட்டார்.

இனி பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 24:

பாடல்: அழகே உன்னை

படம்: வாலிபமே வா வா (1982)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: P. சுசீலா, மலேசியா வாசுதேவன்

மெல்லிசைப் பிரியர்களுக்காக இந்தப் பாடல். ஒரு தேடலில் வலைத்தளத்தில் கிடைத்தது.

பாடல் இங்கே..

நன்றி.

Link to comment
Share on other sites

பாடல் 25:

பாடல்: நாள் நல்ல நாள்

படம்: பணக்காரப் பெண்

இசை: M.S. விஸ்வநாதன்

பாடியவர்கள்: T.M. சௌந்திரராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இனிமையான இந்தப் பழைய பாடல் இங்கே..

Link to comment
Share on other sites

பாடல்#26

பாடல்: சந்தன மார்பிலே

படம்:நாடோடித்தென்றல்

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்கள்: மனோ, ஜானகி

சந்தன மார்பிலே

http://2luo.com/watch?v=Zpy08SYB3rY

Link to comment
Share on other sites

பாடல் 27: நினைப்பது நிறைவேறும்

படம்: நினைப்பது நிறைவேறும் (1976)

இசை: எம். எல். ஸ்ரீகாந்த்

பாடியவர்கள்: எம். எல். ஸ்ரீகாந்த் மற்றும் வாணி ஜெயராம்

இனிமையானதொரு பாடல்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.