Jump to content

ஐயோ என்னை விடுங்கோ...நான் கழட்டமாட்டேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய மத கலாச்சார இன கருத்தாடல்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு எமது ஈழம் எதிர்காலத்தில் எப்படி உருவாக வேண்டுமென அவரவர் சிந்தனைகளை இங்கே சிந்திக்குமாறு வேண்டுகின்றேன். :(

கு.சா.. ஊரில உழைச்சாத்தான் வாழ்வு. ஆனால் புலம்பெயர் நாடுகளில உழைக்கா விட்டாலும் அரசாங்கம் பணம் கொடுக்கும். ஊரில ஒரு பிள்ளையைப் பெற்று வளர்க்கிறதுக்கு நிதியே பெரும் திண்டாட்டம் பலருக்கு. அதுக்கு ஓடி உழைக்கவே சரி. புலம்பெயர் நாடுகளில பிள்ளை பெற்றாலும் காசு.. அது 18 வயசு வரும் வரை காசு..!

காசிருந்தா அதை வைச்சு முதலாளித்துவ உலகம் விரிச்சுள்ள சந்தைச் சமூகத்தில எப்படியும் வாழலாம். அப்படி ஒரு நிலைல... நாங்க கடந்து வந்த பாதையைப் பார்த்து.. என்னடா.. ஒரே கல்லுரோட்டில நடந்து வந்திருக்கமே.. இப்ப என்னமா பளிங்கு போல ரோட்டில நிக்கிறம் பார்.. என்றதுதான் எம்மவர் நிலை.

இந்தப் பளிங்கு ரோட்டுக்குக் கீழ வெள்ளைக்காரன் பயணித்து வந்த கல்லு ரோட்டு இருக்கிறது இவைக்குத் தெரியாது..! காரணம்.. யாரோ போட்ட ரோட்டில நாங்க பயணிச்சிட்டு இருக்கிறதால தான்.. இவை இப்படித் தட்டுத் தடுமாறி நிக்கினம்.

ஆனால் மேற்குலம் இன்று வரை... தன்னை வலுவான கிறீஸ்தவ மத சார்புள்ள வளமிக்க பகுதி என்று காட்டிறதை விடவே இல்லை..! அதற்கு.... ரஷ்சியா தொடங்கி அமெரிக்கா வரை சான்று..!

அண்மையில் கூட கிறீஸ்தவ மதத்தினர்.. சொர்க்கத்துக்குப் போறமென்று அமெரிக்காவில் கூண்டோடு தற்கொலை செய்தனர்..! இன்னும் கொஞ்சம்.. வெள்ளைகள் கறுப்புப் போட்டுக் கொண்டு வம்பயர்களின் வாரிசுகள் என்று அலையுதுகள்... அந்த வகையில நம்ம ஊரில இருந்து வந்தவையிட வாரிசுகளும் கூர்ப் பல்லும்.. கறுப்புக் காவியும்.. ஆறுமுளம் உயர்ந்த சப்பாத்தும் போட்டிட்டு அலையினம். அதைப்பற்றி.. யாரும் கதைக்கினமோ.. கிடையாது.

ஏனென்னா.. அவை பின்பற்றுறது.. பளிங்கு ரோட்டுச் சமாச்சாரங்கள். கல்லுறோட்டுச் சமாச்சாரங்கள்.. உவையிட கடந்த காலத்தை இனங்காட்டிடும் என்ற பயத்தில... தான் அவசர அவசரமா மூடி மறைப்புக்களைச் செய்திடுவம் என்று நிக்கினம்..!

ஆனா..............???! முழுப் பூசனிக்காயை.. சோத்தில மறைக்க ஏலுமோ...???! :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான உங்கள் சிந்தனை மற்றும் நகைச்சுவையான எழுத்துதான் உங்கள் கருத்துகள் சிலவற்றில் முழு உடன்பாடு இல்லாவிடினும் முழுவதுமாக படிப்பேன்.

உண்மையில் நல்லதொரு கருத்து சுகன்.ஆனால் இந்து மததத்திலிருந்து மதம் மாறுபவனை பணத்திற்காகவும் பாணுக்காவும் மாறுகிறான் என்று தூற்றுபவர்கள் அவன் மதம் மாறுவதற்கான அடிப்படை பிரச்சனைகளை ஆராய்வதில்லை; அதே போல சில எழுந்தமனதாக மதம் மாறியவனும் தான் தன்னுடைய மதத்திலிருந்தே தன்னுடைய மதத்தின் சீர்கேடுகளை சீர்தூக்க எந்தளவு முயற்சி செய்தேன் என்றும் சிந்தித்து பார்ப்பதில்லை.மதத்தை மாறிவிட்டு தன் சார்ந்த பழைய மதத்தை திட்டுவது என்பது.இதைதவிர்த்து சாமியும் இல்லை மதமும் இல்லை என்று நாத்திகம் பேசுபவர்களோ புதியதொரு மதத்தை உரு வாக்குகின்றார்கள். உதாரமாக எனக்கு தெரிந்த முதல் நாத்திகன் புத்தன் ஆனால் இன்று புத்தன் பெயராலே ஒரு மதம் சாத்திரம் சம்பிரதாயம் வழிபாட்டு முறை என்று எல்லாத்தையும் எதிர்து அன்பே கடவுள் அடுத்தவனை அன்பு செய் என்கிற அந்த மதத்தை நிலை நிறுத்த எத்தனை கொலைகள் அதே பேல சிலையை உடைத்து சிலையில் கடவுள் இல்லை மனிதனே கடவுள் என்ற பெரியாரிற்கு சிலை வைத்து அவரை ஒரு கடவுளாக்கும் கூட்டம.; இதே சிலைக்கு நாளையொருவன் மாலையிடுவான் இன்னொருவன் பால் வார்ப்பான் இதே சிலை கடவளாகும்

இதுதான் 100% உண்மை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.