Jump to content

கணனி தொடர்பான அவசர உதவிகள்


Recommended Posts

சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிப்பது அவசியம். விசிறியில் வயர் ஏதாவது படுவதால் வரலாம். ஹாட் டிஸ்க் இல் இருந்து வருகிறது எனில் உங்கள் கோப்புக்களை Back Up எடுப்பது நன்று. CD Writer ல் இருந்தும் வரலாம். கம்பியூட்டரை திறந்து சத்தம் எங்கிருந்து வருகிறது என கண்டு பிடியுங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 550
  • Created
  • Last Reply

நல்ல கேள்ளி வலைஞன். எனது கணனியிலும் இருந்தது. நான் கழற்றிப்பார்த்தேன். வயர் விசிறியில் முட்டிக்கொண்டிருந்தது. எனது பிழைதான் திருத்தம் செய்யும்போது தவறுதலாக அப்படி பூட்டிவிட்டேன்.

அப்படியும் இன்னும் சத்தம் வந்தால் மருத்துவரை அழையுங்கள். இது குறட்டை சத்தம்

Link to comment
Share on other sites

விசிறியை சுத்தம் செய்தீர்களா..................

அடிக்கடி நிற்குதே எண்டுதான் எல்லாம் அழித்துவிட்டு புதுசா எல்லாம் போட்டன்.

பிறகும் இப்படி நடக்குது.

Link to comment
Share on other sites

இணைய உறவுகளிற்கு வணக்கம்

சிறிய உதவி

எனக்கு வித்தியாசமான ஒலி (baground sounds and sounds effects ) மற்றும் Video Bagrounds (naturals and graphics) தேவை. இணையத்தில் தரவிறக்க முடியுமாயின் அவற்றிற்கான இணையத்தளங்களையும் தாருங்கள்.

நட்புடன் பரணீதரன்

Link to comment
Share on other sites

கூகிளில் தேடவும்.

நிறையவே கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடம் இருக்கிறது. தரவேற்றியபின் இணைப்பு தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இதை கேட்டுப்பாருங்கள்.. இதைப் போன்ற ஒலிவேண்டுமாயின் மிகுதிப் பகுதியையும் இணத்துவிடுகிறேன்.
Link to comment
Share on other sites

நன்றி நண்பரே

மிகவும் பிரயோசனமாக இருந்தது.

மிகமிக நன்றி.

இதைத்தான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஏன் இப்படி?[/b]

என் கணனியில் பாடல் கேட்கும் போது Address வருகுதில்லை. ஆனால் என் நண்பனின் கணனியில் வருகிறதே. ஏன்? அபப்டி Address வருவதற்கு என்ன செய்யணும்?

untitledyt7.jpg

52260220ey6.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டும் வேறு வேறு பதிப்புக்கள். அதனால்தான் அவ்வாறு தோன்றுகின்றது என நினைக்கிறேன்.

comrh3.jpg

Link to comment
Share on other sites

ஆனால் பாடல் கேட்க முடிகிறதுதானே. அட்ரஸ் பார் மட்டும் தானே வருதில்லை. 2 உம் இன்ரநெட் எக்ஸ்புளர் தானே.

Link to comment
Share on other sites

நான் கணனி சம்பந்தமாக படிக்க விரும்புகிறேன். முக்கியமாக, வலைப்பக்கம் ஒன்றை வடிவமைப்பதோடு, லேஅவுட் மற்றும் எனது கணனி சம்பந்தமான சிறிய திருத்தவேலைகளையும் நானே செய்ய விரும்புகிறேன். அதற்கு நான் என்னென்ன பாடங்கள் எடுப்பது நல்லது? புரொகிராமிங் படிப்பதற்கு எந்தப் பாடத்தை முதலில் எடுக்கவேண்டும்? இவற்றை நான் பகுதிநேரமாகத்தான் படிக்கப்போகிறேன். டிப்ளோமா இல்லாமல் வெறும் பாடங்கள் மட்டுமே படிக்க விரும்புகிறேன். நான் இதுவரையிலும், மென்பொருள்களைப் பாவித்திருக்கிறேனே தவிர, கணனி பற்றிய எதனையும் கல்லூரியில் படித்ததில்லை. முதலில் எந்தப் பாடத்திலிருந்து தொடங்குவது நல்லது? புரோகிராமிங்கில் தொடங்குவது நல்லதா? அல்லது வலைப்பக்கம் சம்பந்தமான பாடங்களோடு தொடங்குவது நல்லதா? நன்றி :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் பாடல் கேட்க முடிகிறதுதானே. அட்ரஸ் பார் மட்டும் தானே வருதில்லை. 2 உம் இன்ரநெட் எக்ஸ்புளர் தானே.

உங்களுடையது IE 6 அடுத்தது IE7 ஆக இருக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கணனி சம்பந்தமாக படிக்க விரும்புகிறேன். முக்கியமாக, வலைப்பக்கம் ஒன்றை வடிவமைப்பதோடு, லேஅவுட் மற்றும் எனது கணனி சம்பந்தமான சிறிய திருத்தவேலைகளையும் நானே செய்ய விரும்புகிறேன். அதற்கு நான் என்னென்ன பாடங்கள் எடுப்பது நல்லது? புரொகிராமிங் படிப்பதற்கு எந்தப் பாடத்தை முதலில் எடுக்கவேண்டும்? இவற்றை நான் பகுதிநேரமாகத்தான் படிக்கப்போகிறேன். டிப்ளோமா இல்லாமல் வெறும் பாடங்கள் மட்டுமே படிக்க விரும்புகிறேன். நான் இதுவரையிலும், மென்பொருள்களைப் பாவித்திருக்கிறேனே தவிர, கணனி பற்றிய எதனையும் கல்லூரியில் படித்ததில்லை. முதலில் எந்தப் பாடத்திலிருந்து தொடங்குவது நல்லது? புரோகிராமிங்கில் தொடங்குவது நல்லதா? அல்லது வலைப்பக்கம் சம்பந்தமான பாடங்களோடு தொடங்குவது நல்லதா? நன்றி :D

ஏற்கனவே கல்லூரியில் படிச்சவர் என்றால் இதில இருக்கிற எல்லா course யும் நீங்களே படியுங்கோ. வருடம் ஒரு $10 க்கு, domain ஜ் பதிவு செய்யுங்கோ. மாதம் ஒரு $5 க்கு hosting எடுங்கோ. வகுப்புக்கெண்டு வீண்செலவு இல்லாமல் நீங்களே உங்கள் வலைப்பக்கத்தை வடிவமைக்க கற்றுக்கொள்ளலாம். காசு குடுத்தாதான் படிப்பு வரும் எண்டால் என்னுடைவ வங்கிகணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டு இதில் உள்ளதை சுயமா படியுங்கோ. ஏதாவது விளங்கவில்லை எண்டால் கேளுங்கோ, முடிஞ்சளவு உதவி பண்ணுறேன்.

http://www.w3schools.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 3 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஒரு உதவி

நான் நீண்ட நாள்களாக wifi வலைத்தொடர்பு பயன் படுத்துகிறேன்(other people)

ஆனால் இப்பொளுது என்னால் முடியவில்லை(they use password)

உங்களிடம் எதாவது வளி இருக்கிறதா (any softwere)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யாராவது உதவி பண்ணுங்களேன்,

எனது கணனி திரையில் Magic Color Demo, Magic Color On, Magic Color Off என்று தொடர்ந்து கீழும் மேலும் move பண்ணிக்கொண்டெ இருக்கு எதையொ மாறி அழுத்திட்டன், தயவு செய்து உதவி செய்யுங்கோ

Link to comment
Share on other sites

  • 4 months later...

எனக்கு தமிழ் இணையத்தளங்களை திறக்கும் போது மேலே இணையத்தின் பெயர் தமிழில் தெரியாது பெட்டி பெட்டியாகவே தெரிகின்றன. இதற்கு எந்த Unicode Font ஐ இன்ஸ்ரோல் செய்தால் இப்பிரைச்சினை தீரும். ஏற்கனவே இ-கலப்பை பாமினி தரவிறக்கம் செய்தும் சரிவரவில்லை. எனவே தயவுசெய்து இதுபற்றித் தெரிந்தவர்கள் உதவி செய்யவும்.

Link to comment
Share on other sites

வசம்பு அண்ணா ... நீங்கள் Unicode Font எல்லலாம் தறவிறக்ககம் தேவயில்லை .... சுரதா கீமோன் டவுண்லோட் பண்ணிப்பாருங்கோ (www.suratha.com/vanni.zip ) தரவிறக்கம் செய்துட்டு அதில் Keyman Configuration என்றதுக்குள் இருக்கும் Optinons ல போய் யுனிகோட் தமிழ் ல தெரிய ஒரு சரி போடனும் .இ-கலப்பை யில் அப்படி செய்யலாம் எண்டால் செய்து பாருங்கள் .Optinons க்கு போனாலே உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன்..... உள்ள போய் செய்து பாருங்க முடியாவிட்டால் நாளைக்கு படத்துடன் போட்டு விடுறன்...!இத விட வேற வழியும் இருக்கு ... இது ஈஸி எண்டே நினைக்கிறன்.

»Startmenü: Start ~» Alle Programme ~»Tavultesoft Keyman ~»Keyman Configuration ~»Optinons

Link to comment
Share on other sites

மிக்க நன்றி அனிதா

நான் செய்து பார்த்துவிட்டு மீண்டும் எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி அனிதா

நீங்கள் சொல்லியபடி செய்தேன். இப்போது சரிவந்துவிட்டது. மீண்டும் மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

இ-கலப்பை யில் செய்து பார்த்தனீங்களா ? அல்லது சுரதா கீமோன் லயா ?

இ-கலப்பையில் முயற்சிக்கவில்லை. சுரதா கீமானில் முயற்சித்தேன் சரிவந்தது. அப்படியே விட்டுவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இ-கலப்பையில் முயற்சிக்கவில்லை. சுரதா கீமானில் முயற்சித்தேன் சரிவந்தது. அப்படியே விட்டுவிட்டேன்.

சுரதா கீமான் இ/கலப்பை போன்றதா அல்லது வித்தியாசமா? எனது கனினி cd வேலை செய்யவில்லை தெரிந்தால் உதவுங்கள் கீழ் உள்ள தொட்ரியில் போய்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=38894

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.