Jump to content

கணனி தொடர்பான அவசர உதவிகள்


Recommended Posts

2004 இல நான் புதுசாய் ஒரு கணணி வாங்கி இருந்தன். அந்த நேரத்தில பள்ளிக்கூடத்தில இன்னொரு கணணியை பாவிக்கவேண்டி வர இதை... அப்போது சிறீ லங்காவில இருந்து வந்து இருந்த நண்பர்களிடம் குடுத்து இருந்தன். பிறகு என்ன எண்டால்..

இப்ப அந்தக்கணணியிண்ட தேவை வர அதை திருப்பி வாங்கீட்டன் அவையுட்ட இருந்து. ஆனால்.. அதுக்கால சத்தம் - சவுன்ட் வருகிது இல்லை [but when i check the sound card the system says the device working properly]. அப்ப என்ன செய்தன் எண்டால் பலவிதமான சோதினைகளுக்கு பிறகு External Midi Interface ஐ போட இப்ப சத்தம் வேலை செய்யுது.

ஆனால்... புது மென்பொருள் ஒண்டை போட்டபிறகு எண்ட மொனிட்டரிண்ட அரைவாசிக்கு கீழ நிறம் மாறி - பச்சை, நீலம், மஞ்சள் எண்டு வானவில்லாய் தெரியுது. மொனிட்டரிண்ட மேல் அரைவாசி ஒழுங்காய் இருக்கிது.

இதனால நான் System Restore செய்து பார்த்தன். அதுக்கு பிறகும் கூட அப்பிடித்தான் இருக்கிது. Color Management + Monitor இலையும் ஏதாவது இருக்கிமோ எண்டு பரிசோதனை செய்து பார்த்தன். எல்லாம் ஒழுங்காய் இருக்கிது.

மொனிட்டரில ஏற்பட்டு இருக்கிற இந்த நிறக்கோளாறை எப்படி சரி செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • Replies 550
  • Created
  • Last Reply

நன்றி வசி அதையும் பார்க்கிறன். ஆனால் திரும்ப இண்ஸ்டால் பண்ண முடியாது. அதுதான் பிரச்சனையே. நான் எனது கணணியை அவர்களிற்கு இரவல் கொடுத்தபோது Original CDs ஐயும் குடுத்து இருந்தன். இப்ப எல்லாத்தையும் அழிச்சுப்போட்டு திரும்பவும் போடுவன் எண்டால் அவையள் அந்த மூன்று தட்டுக்களையும் துலைச்சுப்போட்டீனம். கனகாலம் ஆச்சிது, எண்டாலும் முந்தி கணணியை வாங்கின கடையில துலைஞ்ச தட்டுகளுக்கு மாற்றீடாய் ஏதாவது வழிமுறை இருக்குமோ எண்டு கேட்டுப்பார்க்க வேணும்.

Link to comment
Share on other sites

முரளி graphics drivers சரியா இருக்கா? அல்லது திரும்பவும் install செய்து பாருங்கள்

ஒரு சந்தோசமான செய்தி என்ன எண்டால்.... ரெண்டு நாளைக்கு பிறகு நேற்று கணணியை திறக்க அது தன்பாட்டிலேயே எல்லாம் சரியாய் வந்திட்டிது. இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை. கடைசியாய் கணணியை பல முயற்சிகளுக்குப் பிறகு மூடித் திறந்தபோதும், மூடியபோதும் நிறக்கோளாறு இருந்திச்சிது. ஆனால்... கடைசியாய் நேற்று எப்பிடி அது சரியாய் வந்திச்சிது எண்டு தெரிய இல்லை.

சிலவேளைகளில குளிர் காரணமாய் இல்லாட்டிக்கு... அருகில இருக்கிற இதர மின்னியல் உபரகரணங்களிண்ட பாதிப்புக்கள் காரணமாய் இப்பிடியான குளறுபடி வந்திச்சிதோ தெரியாது.

என்னமோ... கடைசியில எல்லாம் ஒழுங்காய் வேலை செய்யுது. சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளையின் நல்ல மனதிற்கு , எல்லாம் தன்ரை பாட்டில் சரிவரும் . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் கருவாட்டுவிலைக்கு புத்தம்புது கொம்பியூட்டரை வாங்கிவைச்சுக்கொண்டு புதுப்புது சேக்கஸ் காட்டுறான்.

இவரொருத்தர் ஒல்லாந்தர் போர்த்துக்கீசர் காலத்து கறல்புடிச்ச பொட்டியை வைச்சுக்கொண்டு ஆயிரத்தெட்டு கேள்வியள் கேட்டுக்கொண்டிருக்கிறார் <_<

Link to comment
Share on other sites

கொஞ்சக் காசு அனுப்பி வையுங்கோ நானும் கருவாட்டு விலைக்கு புதுசாய் ஒண்டு இறக்கிவிடுறன்...

அப்பிடி இல்லை கு.சா அண்ணா... old is gold எண்டு சொல்லுவார்கள். உங்களுக்கு தெரியுமோ தெரியாது.. பல நிறுவனங்களில Xpயைத்தான் இப்பவும் பாவிக்கிறீனம். Vistaக்கு மாற இல்லை. ஏன் எண்டால் பழசு காத்திரமானது, பிரச்சனைகள் குறைவானது. புதுசு பார்ப்பதற்கு கொஞ்சம் கண்ணைக் குத்துற மாதிரி கவர்ச்சியாய்த்தான் இருக்கும். ஆனால்.. நிலை இல்லாதது. எப்ப என்ன நடக்கும் எண்டு சொல்ல ஏலாது. Vista பாவிக்கிற ஆக்களுக்குத் தெரியும்.

தவிர, வீட்டில நான் சும்மா சின்ன வேலைகளுக்குத்தான் கணணி பாவிக்கிறது. மிச்சம் எல்லாம் பெரிய வேலைகள் பள்ளியிலதான் செய்யுறது. அங்க பெருந்தெருவில இருக்கிற எல்லாம் இருக்கும்.

super high way

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் Vista தான் பாவிக்கிறன் பிரச்சனை குடுத்ததாய் தெரியேல்லை :(

Link to comment
Share on other sites

நீங்கள் Applicationsகள் ஏதும் Vistaவில செய்யுறனீங்களோ? XPஇல செய்யும்போது பிறகு Vistaஇல செய்யும்போதும் எடுக்கிற நேரம், Crashகளிண்ட எண்ணிக்கை இவற்றில வேறுபாட்டை காணலாம்.

Link to comment
Share on other sites

Drivers தான் மிக பெரிய பிரச்சனையான ஒன்று. புதிய /பழைய hardware ஒன்றை இணைக்கும் போது Drivers அனேகமாக கிடைப்பதில்லை அல்லது மிக தரம் குறைந்தவையாக இருக்கும்.

மற்றது application. உதாரணம் :iTunes

(n) driver, device driver ((computer science) a program that determines how a computer will communicate with a peripheral device)

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Win32:Trojan-gen

இந்த வைரசை எப்படி அழிப்பது?

எந்த அன்டிவைரஸ் வைத்திருக்கிறீங்கள் avira இலவச அன்டிவைரஸ் அழிக்கும்

http://www.free-av.de/en/trialpay_download..._antivirus.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் AVAST antivirus இருக்கிறது.

ஆனால் அழித்தாலும் கொஞ்ச நாளுக்கு பிறகு திரும்ப வருது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடம் AVAST antivirus இருக்கிறது.

ஆனால் அழித்தாலும் கொஞ்ச நாளுக்கு பிறகு திரும்ப வருது

அழித்துவிட்டு system restroe பன்னிப்பாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழித்துவிட்டு system restroe பன்னிப்பாருங்கோ

சேகுவாரா.

பன்னிப்பார்த்தேனே

Link to comment
Share on other sites

First, clean up (delete) your cookies, temp files and temporary internet files. I prefer to use Ccleaner (available at www.filehippo.com) to do this, rather than the built-in DISK CLEANUP, as I feel it does a much more thorough job - for example, it will clean out the index files on your next reboot.

If you want to use Disk Cleanup, you can find it if you:

- Double-Click on My Computer to open it up

- RIGHT-click on your C: drive

- Choose PROPERTIES and then click on the DISK CLEANUP button

- When done, reboot your computer.

Delete these files daily or run Ccleaner every day right before you shut your computer down.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

First, clean up (delete) your cookies, temp files and temporary internet files. I prefer to use Ccleaner (available at www.filehippo.com) to do this, rather than the built-in DISK CLEANUP, as I feel it does a much more thorough job - for example, it will clean out the index files on your next reboot.

If you want to use Disk Cleanup, you can find it if you:

- Double-Click on My Computer to open it up

- RIGHT-click on your C: drive

- Choose PROPERTIES and then click on the DISK CLEANUP button

- When done, reboot your computer.

Delete these files daily or run Ccleaner every day right before you shut your computer down.

நன்றி நுனாவிலான்.

நாளை முயற்சித்து பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Win32:Trojan-gen

இந்த வைரசை எப்படி அழிப்பது?

கண்டகண்ட ஊத்தைவாளி இடங்களுக்கு போனல் இந்த நசல் வந்துதான் தீரும் :(

இதுக்கு ஒருசுகமான வழி ......

உங்களுக்கு உடனடியாய் ஒரு ஆண்துணையை தேடிக்கொள்ளோணும்? :lol:

என்னமாதிரி நெடுக்கற்றை சாதகத்தை வாங்கி பாக்கட்டோ? :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டகண்ட ஊத்தைவாளி இடங்களுக்கு போனல் இந்த நசல் வந்துதான் தீரும் :(

இதுக்கு ஒருசுகமான வழி ......

உங்களுக்கு உடனடியாய் ஒரு ஆண்துணையை தேடிக்கொள்ளோணும்? :lol:

என்னமாதிரி நெடுக்கற்றை சாதகத்தை வாங்கி பாக்கட்டோ? :blink:

குமாரசாமி ஐயா ஊத்தைவாளி இடங்களுக்கு எல்லாம போறது இல்லைங்கோ. தமிழ்நாதம் பக்கத்தில் இருக்கும் அநேகமான பக்கங்களுக்கு போவேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் அழிக்க முடியும் என நம்புகின்றேன் http://www.malwarebytes.org/

முயற்சித்து பார்க்கிறேன். உதவிக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து யாரவது உதவுங்கள் எனது மடிக் கணணி[LAP TOP] வேலை செய்து கொண்டு இருக்கும் போது அதன் மீது தவறாக சுடு நீரை ஊற்றி விட்டேன் அது உடனடியாக வேலை செய்யாமல் நின்று விட்டது அதன் பின்னர் துடைத்து விட்டு போட‌ அது திறக்குதில்லை[நான் பாஸ்வேட் போட்டு வைத்துள்ளேன்] விசைப்பலகையை அமர்த்தவும் அது வேலை செய்யவில்லை இதற்கு என்ன செய்யலாம்? முடிந்தால் உதவுங்கள் நன்றி.

Link to comment
Share on other sites

தயவு செய்து யாரவது உதவுங்கள் எனது மடிக் கணணி[LAP TOP] வேலை செய்து கொண்டு இருக்கும் போது அதன் மீது தவறாக சுடு நீரை ஊற்றி விட்டேன் அது உடனடியாக வேலை செய்யாமல் நின்று விட்டது அதன் பின்னர் துடைத்து விட்டு போட‌ அது திறக்குதில்லை[நான் பாஸ்வேட் போட்டு வைத்துள்ளேன்] விசைப்பலகையை அமர்த்தவும் அது வேலை செய்யவில்லை இதற்கு என்ன செய்யலாம்? முடிந்தால் உதவுங்கள் நன்றி.

http://www.trap17.com/index.php/spill-liquid-laptop_t64037.html

http://www.ozzu.com/hardware/spilled-water-laptop-and-will-not-work-can-fix-t1353.html

http://repair4laptop.org/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவிற்கு நன்றி கலைநேசன்...முயற்சி செய்து பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.