வியாபார ஊடகம் தான், இருந்தாலும் கொஞ்ச நஞ்சம் என்டாலும் ஏதோ நினைவுகள், மறவர்களின் நினைவேந்தல் நாட்கள். ஒருநாள் ஏதோ ஒரு வியாபார ஸ்தாப ஆதரவுடன் ஈழ விடுதலைப்பாடல்கள் என்று போட்டார்கள்
இப்ப யாழ்ப்பாணத்துக்கு கொண்டு போய் புலம் பெயர் மக்களின் விடுதலையின் பால் நடந்தவற்றை நினைவூட்டிக்கொண்டிருந்த அற்ப சொற்ப நினைவுகளை கூட போட முடியாமல் கொண்டு வந்து எல்லாவற்றையும் அழிக்க நினைக்கிறார்கள். இது ஒரு தூர நோக்கத்தோடு நிகழ்த்த படும் செயல் பாடு. யாழ்ப்பாணம் கலையகம் கொண்டு சென்றால் சிங்களவன் எங்கள் பக்க நினைவுகளை ஒலி பரப்ப விடமாட்டான் என்று பால் குடிக்கும் குழந்தைக்கும் விளங்கும். இதுக்கு வேற ஒலிபரப்பாளர்கள் சப்பைக்கட்டு. எல்லாம் போரின் மேல் ஏறி சவாரி செய்து வளர்ந்து விட்டு இழுத்து விழுத்தி அழிக்க நினைக்கிறார்கள் ஜ.பி.சி தமிழ் புலம் பெயர் தமிழரின் பிரான்ட் NAME . அந்த ஊடக பெயரை தனிப்பட்ட வியாபாரி தன் நலனுக்காக சிங்களத்தின் சட்ட அமைவுக்கு கீழ் கொண்டு சென்றது புலம் பெயர் தமிழருக்கு செய்யும் ஒரு அநீதி. மீண்டும் புலம் பெயர் தேசத்தில் சுதந்திரமாக இயங்கி எங்கள் உணர்வுகளை எங்களை பற்றி பாட நினைவூட்ட ,கருத்து சொல்ல எல்லாரும் சேர்ந்து ஆவண செய்வோம்... சினிமா பாட்டு போட யாழ்ப்பாணம் தேவை இல்லை ஆயிரம் இணைய வானொலிகள் வந்து விட்டன. எங்கள் வலியை எங்கள் தாகத்தை, எங்கள் ஆதங்கத்தை நாங்கள் பாடாமல் சொல்லாமல் யார் சொல்வது.? நன்றி
சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்
வேறு ஒருவரும் வரவில்லை பிராபகரனே நேரிலே வந்து அழைத்து சென்று தானே உபசரித்தார்
இப்பிடித்தான் வழமையாக ஈழத்தில் நடந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
சொறீலங்காவின் அரச பயங்கரவாத அடக்குமுறைகளை இன்னும் இன்னும் ஏன் மேற்கு நாடுகள் சகித்துக் கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை.
சீனாவின் ஆதரவு பெற்ற.. சேர்பியாவுக்கு அடித்தது போல்.. சதாம் குசைனுக்கு அடித்தது போல்.. கடாபிக்கு அடித்தது போல்.. அடித்தால் அன்றி..
சொறீலங்காவை சனநாயகப் பாதைக்கு திருப்புவது கடினம். காரணம்.. அது சிங்கள பெளத்த இராணுவ அரச பயங்கரவாதத்தின் அதிஉச்ச பிடிக்குள் சிக்கி உள்ளது.
இது இலங்கை வாழ் மக்களுக்கு மட்டுமல்ல.. உலகு வாழ் மக்களுக்கும் ஆபத்தானது.