Jump to content

M.I.A. மாயா


Recommended Posts

இசை நடன அரங்கில் மாயா

எழுதியவர் தளநெறியாளர்

200x200.jpg

உலகெங்கும் ஆங்கிலத்தில் வெளிவரும், ஈழம் பற்றிய செய்திகளுக்கான இணைப்பை தரும், தமிழ் கனடியன் இணையத் தளத்தில்தான் அந்த செய்தி இணைப்பையும் [Jan. 27, 2005 Eye Weekly] பார்த்தேன். அதனைத் திறந்து படிக்கும் ஆர்வத்தை தலைப்பும் முன்குறிப்பும் சுட்டி நின்றன. Tiger, tiger, burning bright (Tamil pop provocatrice M.I.A. wages war on the dancefloor) என்ற தலைப்புடன் காணப்பட்ட அக்கட்டுரைக்குள் நுழைந்தபோது ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியங்கள் சிதறிக்கிடந்தன. உலகெங்குமான இளவயதினரை ஈர்த்திழுக்கும் நவீன இசை நடன அரங்கில் ஈழத்து தமிழ்ப்பெண் தடம்பதித்துக் கொண்டிருக்கின்றார் என்பதுடன் சர்வதேச ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டார் என்பதும் முக்கியமாகப்பட்டது. (ஊடகங்களில் வெளிவந்தவை இணைப்பாக கீழே தரப்படுகின்றது). மற்றது அவரின் இசையின் உள்ளடக்கமாக அரசியல் இருந்ததென்பதும் செவ்விகளின் போது தனது அடையாளத்தையும் குடும்ப நிலையையும் வெளிப்படையாக பேசியதென்பதும் முக்கியமாகப்பட்டது.

877901p1.jpg

மாயா அருட்பிரகாசம் (மாதங்கி அருட்பிரகாசம், வயது 27) என அறிமுகப்படுத்தப்படும் அவரின் அரங்கப்பெயரும் குறியீடும் M.I.A. என்பதாகும். இலண்டனில் பிறந்து தந்தையாரின் அரசியல் ஈடுபாடு காரணமாக பெற்றோரால் கைக்குழந்தையாக ஈழம் எடுத்துச்செல்லப்பட்ட அவர் பின்னர் பதினொரு வயதில் தாயாருடனும் இரு சகோதரர்களுடனும் இலண்டன் திரும்பினார். London's Central Saint Martins Art School ல் நுண்கலைத் துறையில் தன் பட்டப்படிப்பை முடித்த மாயா, அப்பட்டப்படிப்பில் சினிமாத்துறையையும் தன் கற்கைநெறியாக கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் ஓவியக் கண்காட்சியை இலண்டனில் நடாத்தியபோது அது (nominated for the alternative Turner prize) ருனர் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டதுடன் அவ்வோவியங்கள் தொகுப்பு நுலாக்கப்பட்டு Pocko நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இவ்வோவியங்களில் போர்க்கருவிகளும் பனைமரமும் முக்கிய இடத்தை பெற்றுள்ளனவாம்.

இசை நடனத் துறையில் ஆர்வம் கொண்ட மாயா தனது Galang என்னும் முதல் தனிப்பாடல் இறுவெட்டு வெளிவந்தபோதே ஊடகங்களின் கவனத்தை பெற்றார். Sunday Times Culture, The New Yorker போன்ற பத்திரிகைகள் புகழ்ந்து எழுதின.

பின்னர் Sunshowers என்னும் இறுவெட்டை வெளியிட்டிருக்கின்றார். இந்த ஆண்டு பெப்ரவரியில் அவரது மூன்றாவது இறுவெட்டு வெளிவர உள்ளது. அதன் பெயர் அருளர் (Arular) என்பதாகும். தனது தந்தையாரின் போர்க்களப் பெயர் அருளர் எனத் தெரிவிக்கும் மாயா, அவரது கடந்தகால அரசியல் செயற்பாட்டிற்காக இந்த இறுவெட்டை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அருளப்பு ரிச்சர்ட் அருட்பிரகாசம் என்னும் முழுப்பெயரைக் கொண்ட அருளர் முதுமாமணிப் பட்டம் பெற்ற இயந்திரவியல் பொறியாளர் என்பதும், ஈழத்து போராட்ட இயக்கங்களில் ஒன்றாக விளங்கிய ஈரோஸ் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்பதும், லங்காராணி என்னும் புதினத்தின் ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாயா தனது செவ்விகளில் தனது தந்தையார் பற்றியும் அவரது அரசியல் பற்றியும் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். எனக்கேற்பட்டு ஆச்சரியங்களை இப்போது நீங்கள் புரிந்திருப்பீர்கள்.

miacover_web.jpg

இந்த ஆச்சரியங்களுக்கு அப்பால் அவரது துணிச்சலும், கலைத்துவ சாதனையும் மிக்க இம்முயற்சியை பாராட்ட வேண்டியது எமது கடமையாகின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையினர் கட்டியெழுப்பப் போகும் புதிய உலகத்தின் முன்மாதிரிகளில் ஒருவராக மாயா திகழ்கின்றார் என்றால் மிகையல்ல. தன் அடையாளத்தை இழக்காமல் சர்வதேச அரங்கில் மேலும் வெற்றிகளைக் குவிக்க அப்பால் தமிழ் குழுமம் அவரை இதயம் கனிந்து வாழ்த்துகின்றது!

மகன் தந்தைக்கு ஆற்றுவது "வள்ளுவர் அறமாக" இருக்கலாம் மகள் தந்தைக்கும் தாய்க்கும் ஆற்றுவது "ஈழப்போராட்ட அறமாக" மாறுகின்றது என்பதற்கு மாயாவும் உதாரணமாகின்றார்.

மாயா பற்றிய மேலதிக விபரங்களிற்கும், அவரது படைப்புகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அவரது இணையத் தளத்திற்குச் செல்லுங்கள்.

மாயாவின் இணையத்தளம்:

www.miauk.com

மாயா பற்றி செய்தி இதழ்களில் வந்த செய்திகள்:

http://newyorker.com/critics/music/?041122crmu_music

http://www.japantimes.com/cgi-bin/getartic...m20050116a2.htm

http://www.pitchforkmedia.com/top/2004/sin...es/index5.shtml

http://www.dustedmagazine.com/features/324

http://www.230publicity.com/mia.html

http://www.google.de/search?hl=de&q=Maya+A...tnG=Suche&meta=

நிழற்படங்கள் வேறுதளங்களில் இருந்து பெறப்பட்டவை. அத்தளங்களிற்கு எம் நன்றிகள்.

நன்றி - அப்பால் தமிழ்

http://www.appaal-tamil.com/index.php?opti...&id=198&Itemid=

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

இந்தப் படங்களைப் பார்த்த போது இவர் ஈழத்தமிழர் என்ற எண்ணமே வரேல்ல...ஏதோ மியா மாயா என்று ஆபிரிக்க - அமெரிக்க அல்லது கறுப்புப் - பிரித்தானிய வடிவம் தான் ஞாபகம் வந்தது...ஈழத்து இளசுகளே நீங்க உலகத்தில முன்னுக்கு வாறது பெருமை வரவேற்கிறம்...ஆனா அதற்காக உங்க தனித்துவங்களக் காட்டாம...டி என் ஏ பிங்கர் பிறிண்ட் வைச்சுத்தான் ஈழத்தான் என்று காட்ட வைச்சுடாதேங்க....! :wink: :lol: :idea:

Link to comment
Share on other sites

.டி என் ஏ பிங்கர் பிறிண்ட் வைச்சுத்தான் ஈழத்தான் என்று காட்ட வைச்சுடாதேங்க....!

:lol:

Link to comment
Share on other sites

இங்கே பெரும்பாலும் ஈழத்து இளசுகள் பிரித்தானிய கறுப்பினத்தவர்களை நடை, உடை மற்றும் அனைத்து விடயங்களிலும் பின்பற்றுவதை அவதானித்திருக்கின்றேன், இவர்கள் பிரித்தானிய வெள்ளை இனத்தவரை பின்பற்றுவது குறைவு. இதற்கு ஏதாவது குறிப்பிடத்தக்க காரணம் உண்டா?

Link to comment
Share on other sites

ஐயோ உந்தப் பிள்ளையை பற்றி அறியத்தான் நோர்வேத் தம்பி no way இல்லாமல் தவிச்சவர். இப்போ :lol::lol: பிள்ளேன்ர படங்களை பார்க்க கலைத்துறையிலே கலக்குதோ இல்லையோ பொதுவாய் கலக்கும் எண்டு தெரியுது. :wink: :lol: :wink: :D

Link to comment
Share on other sites

  • 2 months later...

{Arular By M.I.A}

-டிசே தமிழன்-

இந்தப்பொழுதில், இசையின் தூறல் மெலியதாய் கணணியில் கசிந்தபடியிருக்கின்றது. காந்தக்குரலும், அற்புதமான சுருதியும் இணைந்த மாயா அருட்பிரகாசத்தின் (aka M.I.A) 'அருளர்' இசைத்தட்டு இதமாய் மனதை நனைக்க, இரவு இனிமையாக விரிக்கின்றது. போரால் பாதிக்கப்பட்டு, அகதியாய் அந்நியப்பட்டு, தனது சொந்தமண்ணைத் துறக்கவும் முடியாமல் அவதிப்படும் ஒரு பெண்ணின் வாழ்வு பின்னணியில் மங்கலாய்த் தெரிய, பாடல்கள் இன்னமும் நெகிழ்வூட்டுகின்றன. மாயா, திரைப்படம், ஒளிப்பதிவு சம்பந்தப்பட்ட முறைசார் கல்வியை ஒரு கல்லூரியில் கற்று பட்டமும் பெற்றவர். பிறகு ஒரு இசைக்குழுவின் பயணத்தின்போது, அவர்களின் இசைநிகழ்ச்சிகளை ஒளிப்பதிவுசெய்யப்போய், இசையின்பால் ஈர்க்கப்பட்டு இன்றொரு முக்கிய இசைக்கலைஞியாகிவிட்டார்.

2003ல் முதல் முதலில் வெளிவந்த Galang பாடல்மூலம் பிரித்தானியாவிலுள்ள இரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். அந்தப்பாடல் குழுக்களின் வன்முறையை, "Shot gun get down get down/ Too late you down, d-down" என்றும் "Don't let'em get to you if he's got 1 you get 2" எனவும் பாடுபொருளாக்குகிறது. ரேடியோக்கள், தொலைக்காட்சிகள் எதிலும் அதிகம் ஒளி/ஒலிபரப்படாதுவிட்டாலும், மாயாவின் பாடல் இணையத்தின் மூலம் மிக விரைவில் பிரபலமாகின்றது. இந்தியா, மேற்கிந்திய நாட்டவர்களின் நடன அரங்கங்களை இந்தப்பாடல் நிறைக்க, தனது முதல் Single ஆல்பத்தை வெளியிடுகின்றார். பிறகு, பலரால் பாராட்டவும், விமர்சிக்கவும்பட்டதுமான பாடலான, Sunshowers பாடலை மாயா எழுதுகின்றார். இது ஒரு முஸ்லிம் தற்கொலைப் போராளியைப் பற்றிக்கூறும் பாடல். அதிகாரத்திற்கு எதிராக அறைகூவல்விடும் வரிகள் அதில் இருக்கின்றது. "You wanna go?/ You wanna war?/ Like P.L.O I don't surrender.." என்றும் "Beat heart beat/ he's made it to the newsweek/sweet-heart seen it/he's doing it for the people" என்று தற்கொலைப்படையாய் போய் இறந்துப்போகின்றவனை பரிகசிக்காமல், பரிவுடன் பார்க்கின்றார் மாயா. இந்தப்பாடலில் இடையில் எப்படி ஒருவர் முஸ்லிமாய் இருப்பதால் சித்திரவதை அனுபவிக்கிறார் என்று

"Semi-9 and snipered him

on that wall they posted him

they cornered him

and then they just murdered him

he told them he didn't know them

he wasn't there they didn't know him

they showed him a picture then:

"Ain't that you with the MUSILMS?"

எதற்கும் பயப்பிடாமல் தனக்கு நியாயமாய் தெரிவதை தன் பாடல்களில் மாயா முன்வைக்கின்றார்.

இந்த பாடல்களிலுள்ள கூர்மையான வசனங்களைப்போலவே, ஒருவிதமான காந்தக்குரலில் நன்றாகப் பாடவும் செய்கின்றார். இந்த இரண்டு பாடல்களும் கொடுத்த வரவேற்பினைப் பார்த்தபின் பலர் மாயாவின் ஒரு முழுத்தொகுப்பான இசைத்தட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்று இந்த இசைத்தட்டுக்காய் எழுதப்பட்ட விமர்சனங்களை வாசிக்கும்போது தெரிகின்றது. இடையில் ஒருவர், தனது beats சிலதை மாயா திருடிவிட்டார் என்று குற்றஞ்சாட்டியதால் சென்ற ஆண்டே வரவேண்டிய தொகுப்பு, பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இப்போதுதான் வெளிவந்திருக்கின்றது.

'அருளரில்' பதின்மூன்று பாடல்கள் இருக்கின்றன. மூன்று skits (தமிழில் எப்படிச்சொல்வது?) தவிர்த்து பார்த்தால், பத்து முழுமையான பாடல்கள் இருக்கின்றன. இரண்டாம் பாடலான 'Pull up the people, Pull up the poor'ல், மிகவும் விமர்சிக்கப்பட்டதான, "I've got the bombs/ To make you blow" என்ற வரிகள் வருகின்றது. இதைவிட, "Every gun in a battle is a son and daughter too" என்றும், I'm a fighter/ fighter god என்றும் வருகின்றது. இதை பல விமர்சகர்கள் ஈழப்போராட்டத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படுத்தித்தான் எழுதியிருக்கின்றார்கள். மாயா ஒரு நேர்காணலில் கூறியது நினைவிற்கு வருகின்றது. ஈழப்போர், இந்தியாவில் அகதி முகாம் வாழ்க்கை என்ற பாதிப்பில் வெறுப்படைந்து, தான் முற்று முழுதாக ஒரு மேலைத்தேயத்துக்காரியாக மாறி பல வருடங்களாக இருந்ததாகவும், பிறகு, தன்னைப்போல அதிஸ்டமில்லாது போரிலிருந்து தப்பிவர முடியாத குழந்தைகளை நினைத்துப்பார்த்தபோதுதான் தனக்கு தனது வேரும் அடையாளமும் மிக அவசியம் என்ற உணர்வு வந்தது என்று குறிப்பிட்டிருந்தார். அதையேதான் ஒரு பாடலில், "I got brown skin/ but I'm a west Londoner,/educated but a refugee still..." என்று தன்னை உலகிற்கு பிரகடனப்படுத்துகின்றார். போரின்/வன்முறையின் பீதியை Bucky Done Gun என்ற பாடலின்,

"They're comin through the window

They're comin through the door

They're bustin down the big wall

And sounding the horn"

என்று மாயா சொல்கின்றார். ஆனால் இறுதியில், "I'm armed and I'm equal" என்று கதவை, சாளரத்தை, சுவரை உடைப்பவர்களைப் பார்த்து திருப்பிக்கேட்கவும் செய்கின்றார் (இன்னொருவிதமாய் பெண்ணிற்கெதிரான ஆணின் வன்முறையாகவும் இந்தப் பாடலை வாசிப்புச்செய்யலாம்). பத்து டொலர் பாடலில் intro தமிழில் வருகின்றது (கிட்டத்தட்ட தமிழ் பாடலைப்போலவே பின்னணியும் இருக்கின்றது). இந்தப்பாடல் ஒரு சின்னப் பெண்ணை, விலைமாதராக மாற்றும் சமூகத்தின் கேடுகெட்ட நிலையை எடுத்துக்கூறுகின்றது. பத்து டொலர் தந்தால் நீ என்னவும் செய்யலாம் என்று ஒரு விலைமாதின் ( "What can I get for ten dollar/ everything you want/anything you want") குரலாய் அந்தப்பாடல் ஒலிக்கின்றது. மேலைத்தேயத்தின் அதிகாரத்தில் இருப்பவர்களையும் ("Need a Visa? Got with a geezer/ Need some money/ Paid him with a knees-up") என்று நக்கலடிக்கவும் தவறவும் இல்லை.

Hombre, Amazon ஆகிய இரண்டு பாடல்களும் காதலையும், காமத்தையும் பேசுகின்றன. Hombreல், "Take my number call me/I can get squeaky/So you can come and oil me/My finger tips and the lips/ Do the work yeah" என்று கிறங்கலாய் கூறினாலும், அமேசனில் ஒரு dating அனுபவத்தை வித்தியாசமாய் சொல்கின்றார். "When we shared raindrops/ That turned into lakes/Bodies started merging/And the lines got grey..." என்ற என்னைக் கவர்ந்த அழகான வார்த்தைகளும் அந்தப்பாடலில் இருக்கின்றது. இப்படிக் கிறங்கினாலும் இறுதியில், "Now I'm looking at him thinking/ May be he's ok" என்று ஆக உருகாமல் இயல்பாய்ச் சொல்வது இன்னும் பிடித்திருந்தது. காதலைப் பாடும் இந்தப்பாடலில் கூட "Palm tree silhouette smells amazing/blindfolds under home made lanterns/ somewhere in the amazon/ they're holding me ransom" என்றும், காதலின் களிப்பில் கூட "I'll scream for the nation" என்று நம்மைப் போன்ற பலரைப் போலத்தான் இந்தப்பெண்ணிற்கும் சொந்தமண் ஞாபகம் வந்து, இப்படித்தான் பாடமுடிகின்றது.

பாடல்கள் மட்டுமில்லாது இந்த இசைத்தொகுப்பின் முன்பக்கத்தைக் கூட வித்தியாசமாய்த்தான் செய்திருக்கின்றார் (ஓவியத்தில் மாயாவிற்கு மிகவும் ஈடுபாடுண்டு, அவரது இணையத்தளத்தில் ஓவியங்களைப் பார்க்கலாம்). பாலஸ்தீனிய முஸ்லிம் மக்களை பிரதிபலிக்க அவர்களது மொழியைக் கொண்ட எழுத்துக்களும், இலங்கை தேசப்படமும், அதில் தமிழீழப்பிரதேசம் பிரிக்கப்பட்டும் காட்டப்படுகின்றது. இறுதியில் நன்றி கூறும்போது கூட Mom, Grandma என்று எழுதாமல், Amma, Ammamma என்று எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, அவர் தமிழோடும் வாழவிரும்புகிறார் என்பதையும் தனது அடையாளத்தை மறைக்காமல் தனது இரசிகர்கள் முன் வெளிப்படையாக வைத்திருக்கின்றார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லத்தான்வேண்டும்

மாயாவின் இந்த இசைத்தட்டு நன்றாகவிருந்தாலும், இது ஜரோப்பிய, கீழைத்தேய சாயல் அதிகம் கலந்திருப்பதால், அமெரிக்காச் சூழலில் எப்படி (ஒரு விமர்சகர் சத்தம் அதிகமாய் இருப்பதாய் எழுதியிருந்தார்) ஏற்றுக்கொள்ளப்படும் என்று சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் யாரோ ஒருவர் கூறியதுமாதிரி, இந்தவருடத்தில் வெளிவந்த, அரசியலை நேரடியாகப்பேசும் இசைத்தொகுப்பு என்ற வகையில் அருளர் மிகவும் முக்கியமானது என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். தமிழராய், தனது நாட்டில் மட்டுமில்லாது, கொங்கோ, பாலஸ்தீனியம் என்று உலகெங்கிலும் நடக்கும் போராட்டங்களுக்காயும், மனித இழப்புக்களுக்காயும் குரல் கொடுக்கும் மாயாவின் பரந்த மனதை நாமும் பாராட்டி அவரது பாடல்கள் நியாயத்திற்காய் என்றும் உரத்துக்குரல்கொடுக்கட்டும் என்று வாழ்த்துவோமுமாக.

இறுதியில், "You could be a follower,/ but who's your leader/ Break that circle, it could kill ya." என்று மாயா கூறும் இந்த வார்த்தைகளை உங்களினதும், எனதும் சிந்தனைக்குமாய் விட்டுச்செல்கின்றேன்.

குறிப்புக்கள்: 'Freedom fighting dad' என்றொரு பாடலில் குறிப்பிடுடப்படும் மாயாவின் தந்தையார், ஒரு காலத்தில் ஈழப்போராளியாகவும், லங்கா ராணியையும் எழுதியவருமான அருட்பிரகாசம். தந்தையின் போராட்ட நினைவாகவே அருளர் என்றபெயரை இந்த இசைத்தட்டுக்கும் வைத்திருக்கின்றார். மாயாவின் இணையத்தளம்: www.miauk.com

நன்றி......மனஓசை சந்திவைதனா அக்கா

Link to comment
Share on other sites

இவரை பற்றி ஏற்கனவே ஒரு தலைப்பில் விவாதம் நடந்தது. அதை தேடினேன் கிடைக்கவில்லை.

நான் பொதுவாக ஆங்கில இசைகளை கேட்பதில்லை. எதிர் பாராத விதமாக இவரது Galang பாடலை கேட்கநேர்ந்தது. அதன் பின் இங்குள்ள வானோலிகளில் அடிக்கடி அதே பாடல் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பப்படுவதை உணரமுடிந்து. அவரது பாடல்கள் ஏனைய நாடுகளிலும் பிரபலமாவது புரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

877901p1.jpg

இந்தப் படங்களைப் பார்த்த போது இவர் ஈழத்தமிழர் என்ற எண்ணமே வரேல்ல...

ஈழத்தமிழர் என்று தெரியவேண்டும் என்றால் பார்க்க எப்படி இருக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர் என்று தெரியவேண்டும் என்றால் பார்க்க எப்படி இருக்க வேண்டும்?

:(:lol::lol::lol:

Link to comment
Share on other sites

877901p1.jpg

ஈழத்தமிழர் என்று தெரியவேண்டும் என்றால் பார்க்க எப்படி இருக்க வேண்டும்?

மாயா கூயா... மாயாவி மாதிரி இருக்க வேணும்...! :wink: :(

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் என்று தெரியவேண்டும் என்றால் பார்க்க எப்படி இருக்க வேண்டும்?

நிச்சயமா காக்கை, குருவிபோல இருக்கக்கூடாது.. :P

Link to comment
Share on other sites

நிச்சயமா காக்கை, குருவிபோல இருக்கக்கூடாது.. :P

அதுகளப் போல இருக்கவே முடியாதே...அதுகளுக்கென்று உலகத்தில தனி அடையாளம் இருக்கு...( அது ஆபிரிக்காவில இருந்தால் என்ன அமெரிக்காபில இருந்தால் என்ன....!) எல்லாம் பறவையென்றாலும் காகம் என்றும் குருவியென்றும் ஏனிருக்குதுகள்...அதுகளுக்குச

Link to comment
Share on other sites

3240897513ee65fffef44f.gif டிங் டிங் டிங் rooster3.gif

சண்டையை ஆரம்பிக்கலாம் :(

வந்திடுவியளே...அவரவர் தங்கள் தங்கள் பார்வையை கருத்தைச் சொன்னா சண்டையா...என்ன உலகமப்பா இது...! :wink: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3240897513ee65fffef44f.gif டிங் டிங் டிங் rooster3.gif

சண்டையை ஆரம்பிக்கலாம் :(

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

மாயா கூயா... மாயாவி மாதிரி இருக்க வேணும்...! :wink: :(

படங்களை பார்க்கும் போது ஈழ தமிழர் என்ற எண்ணம் வரவில்லை என்று சொல்லுகின்றீர்கள். அந்த புகைப்படத்தில் என்ன வேறுபாடு என்pathaiyum புல தமிழர்கள் எப்படி இருந்தால் பார்த்தவுடன் தமிழர் என்று தோன்றும் என்பதையும் விளக்கமாக சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

EKAS089t.jpg

EKDE583t.jpg

இப்படி ஆடை அணியவேணுமோ என்னமோ.. ஆனால் பாருங்கோ தமிழ் சேவல் அணிஞ்சிருக்கிற ஆடையை..

rooster3.gif :wink:

Link to comment
Share on other sites

miacover_web.jpg

முதற் கண் மாயாவுக்கு என் வாழ்த்துக்கள்.

இவராவது தன்னை ஈழத் தமிழர் என்று சொல்லிக் கொள்கிறார்.

பலர் சொல்லிக் கொள்வது மட்டுமல்ல காட்டிக் கொள்ளவும் விரும்புவதில்லை.

சில சமயங்களில் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.

அதற்கு மேலும் பல விடயங்கள் இருக்கலாம்................

நான் அண்மையில் பிரன்சில் நடை பெற்ற

தமிழ் குறும்பட விழாவுக்கு வந்த குறும்படங்களைப் பார்த்த போது

அனைத்துப் படங்களும் பிரான்சை மையமாக வைத்தே பின்னப்பட்டிருந்தன.

இக் குறும்படங்களில் ஒரு முக்கிய விடயம் என் மனதைக் கவர்ந்தது.

அதாவது யாருமே வில்லன்களாகக் காட்டப் படாத தன்மை மற்றும் யதார்த்தத்தை ஒட்டிய கதைக் கருக்கள்.

தொழில் நுட்ப முன்னேற்றம் என்று சில திணிப்புகள் பிரச்சனையாக இருந்தன.

இதற்கான விவாத தளம் இதுவல்ல.

என் கண்ணில் பட்டதை உங்களோடு தேவை கருதி பகிர்ந்து கொண்டேன் என்றே நினைக்கிறேன்.

அதில் வந்த ஒரு சில தமிழ் குறும்படங்கள் பிரஞ்சு மொழி பேச தமிழ் உப தலைப்புகளுடன் உருவாக்கப்பட்டிருந்தன.

என்னைப் பொறுத்த வரை இதைத்தான் புலம் பெயர் இளைய தலை முறையினர் செய்வார்கள் என்று சொல்வேன்.

இதை மாற்றுவது புலத்தில் முடியாத காரியம்.

இதற்கான முக்கிய பொறுப்பு தமிழ் ஊடகங்களையே சாரும்.

இவர்கள் விரும்பும் படைப்புகளே இடம் பெறுகின்றன.

இங்கு உள்ள செலவுகளுக்கு ஈடு செய்யக் கூடிய நிலையில் இந்த ஊடகங்கள் இல்லை என்பதும் உண்மை.

ஆனால் இங்கு வாழும் கலைஞர்களுக்கு அல்லது படைப்பாளிகளுக்காக இவர்கள் செய்ய வேண்டியது என்ன?????????????????????

இதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது

மாயா போன்றோர் சாதித்து தடம் பதித்து பேசப்படுகிறார்கள்.

இதற்கு பின்னால் இவர்கள் பட்ட வேதனைகள் அவமானங்கள் யாருக்கும் தெரியாது என்றே கருதுகிறேன்.

என்னால் ஒரு படி மேலே சென்று யோசிக்க முடிகிறதே தவிர எனக்கும் தெரியாது.

இங்கு ஐரோப்பிய இளம் தலை முறையினரே கறுப்பு இனத்தவரை நடை, உடை மற்றும் பாவனைகளில் பின் பற்றுவதை பரவலாக பார்க்க முடிகிறது.

அதற்கான காரணம் அவர்களது கலை மற்றும் விளையாட்டு துறை போன்றவற்றில் உள்ள திறமைகள்....................மற்றும்...............

............

இது தவிர கறுப்பினத்தவர் தமது தாழ்வு மனப்பான்மை மறந்து எவரோடும் கலந்து கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

நமக்கு யாராவது வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம்.

இங்கு வாழும் இளைய தலை முறையினர் தனக்கு தானே வழி காட்டியாக வாழ கல்லூரிகளில் பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.

நாங்கள் விவாதித்திக் கொண்டு அதே இடத்தில் அல்லது தளத்தில் நிற்கிறோம்.

இங்கு உள்ள இளைய தலை முறை விவாதிப்பதை விடுத்து

அவர்கள் விரும்பியதை அவர்களாகவே செய்யத் தலைப்படுகிறார்கள்.

அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லைதான்.

நம்மை நாம் மறு பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்றே சொல்லத் தொன்றுகிறது.

காய்க்கும் மரங்களுக்குத்தான் கல்லடிகள் விழும்.

அதைப் பழக்கப்படுத்திக் கொள்வது அந்த மரங்களுக்கு நல்லது.

அப்படியானால் மட்டுமே அந்த மரங்களால் தொடர்ந்து கனிகள் தர முடியும்.

மாயாவுக்கு என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா சொல்லும் கருத்து உடன்பாடானது.

ஒரு மைக்கல் ஜாக்சன் போல் எல்லோரும் இருக்க வேண்டும் என்பதல்ல.

அத்துடன் அவரால் ஈழத்தமிழ் பெண் என்று வெளிப்படையாக சொல்ல முடிகிறது.

விது இணைத்துள்ள பாடலை பார்த்தால் பின்னணியில் தமிழ் எழுத்துக்கள் குண்டு வீச்சுக்கள் வீர மரணமான மாலதியின் அவர்களது படம் போன்றவை வருகிறன. அவையும் எம்மை உலகத்திடம் பிரபலப்படுத்த ஒரு வழியே. அதை பாவிப்பதால் எம்மவர்கள் அவரது இசையை கேட்க போவது இல்லை அல்லது அவரது இசை பால் கவரப்படுவார்கள் என்பதுமில்லை. அவரது பாடலை கேட்கும் பார்க்கும் பல நாட்டவருக்கும் ஒரு காட்சிப்படுத்தவாக அவை இருக்குமே தவிர நம்மவருக்கல்ல. நாம் நமது அடையாளத்தை பேணுவதோடு உலகையும் நம்பக்கம் கவரவும் வேண்டும் அதில் அவரது பயணம் வெற்றி பெற வேண்டும் அவரது சாதனைகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

pop4mh.jpg

இதோ மேற்கத்தேய பொப் அல்பம் ஒன்றின் சாதாரண முன் பக்கம் வடிவமைப்பு...!

புலத்து இளைஞர்கள் புதிய உலகம் படைக்கவில்லை..உங்கள் பார்வைக்கு அது புதிதாகத் தெரிகிறதே தவிர புலத்துக்கு அது சாதாரணம்...அதையே பிரதிபலிக்கிறார்கள்...!

மாயாவும் அந்த வகைதான்... ஒரு மேற்கத்தைய கலாசாரப் பின்னணிக்குள் இருந்து அதன் வழி எழும் தனது சிந்தனைக்குள்ளாக தனக்குப் பிடித்தமான கலை வடிவத்தைப் பிரதிபலிக்கிறார்...அதற்குள் தனது குடும்ப பாதிப்பின் மூலம் திணிக்கப்பட்ட ஈழத்து போரியலைப் புகுத்தி...பொப்புக்குள்ள அதே பழைய சித்தாந்தத்தைத் (பொப் கலைஞர்கள் போரியலை விளம்பரமாக்குவதில் எப்போதும் நாட்டமுள்ளவர்கள் காரணம்...போரியல் என்பது எங்கும் இளைய தலைமுறையைக் கவரும் ஒரு அம்சம்...!) தழுவி வழுக்கிச் செல்கிறார்...! அது பிழைக்கத் தெரிந்த அவரின் திறமை... இப்ப பிரச்சனை அவரும் அல்ல... அவரைப் போன்றவர்களும் அல்ல...அவர்களுக்கு ஈழத்தமிழர் முத்திரை குத்த முனைவோரே...???!

இப்போ அவரை... ஈழத்தில் போரியல் பாதிப்பால் எழுந்த அல்லது அங்குள்ள மக்களின் உண்மையான எதிர்பார்ப்புக்களை உலகுக்குச் சொல்லவெனவே அவதரித்த ஈழத்தமிழ்... பொப் ஸ்ரார் என்றால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது...! அதைக் காலம் உங்களுக்கும் உணர்த்தும் அதுவரை பொறுத்திருந்து நடப்பதைப் பார்ப்போமே...!

Link to comment
Share on other sites

அவர்கள் ஈழத்தழிழர் பிரச்சினையை உலகுக்கு சொல்ல தேவையில்லை. ஈழத்தமிழன் என்று எதோ ஒருவகையில் பிரபலமாவதன்மூலம் ஈழத்தழிழரின்பால் உலக மக்களின் பார்வையை தக்க வைக்க முடியும்.. 84ல் ஜேர்மனிக்கு வந்தபோது.. சைலோனா.. சிலோனா.. இந்தியாதானே..காந்தியைத்தான் தெரியும் என்றவர்கள் இன்று ஈழத்தமிழர்களைப்பற்றி பலதை அறிந்துள்ளார்கள்.. ஆகவே.. ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு துறையிலும் பிரபலமாகும்போது.. அவர்களின் மொழி சூழல் போன்ற பலவிடயங்கள் பிரபலமாகின்றன.

அந்த வகையில் மாயாவின் முயற்சிகளையும் அவரது வெற்றிகளையும் பாராட்டத்தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

அவர்கள் ஈழத்தழிழர் பிரச்சினையை உலகுக்கு சொல்ல தேவையில்லை. ஈழத்தமிழன் என்று எதோ ஒருவகையில் பிரபலமாவதன்மூலம் ஈழத்தழிழரின்பால் உலக மக்களின் பார்வையை தக்க வைக்க முடியும்.. 84ல் ஜேர்மனிக்கு வந்தபோது.. சைலோனா.. சிலோனா.. இந்தியாதானே..காந்தியைத்தான் தெரியும் என்றவர்கள் இன்று ஈழத்தமிழர்களைப்பற்றி பலதை அறிந்துள்ளார்கள்.. ஆகவே.. ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு துறையிலும் பிரபலமாகும்போது.. அவர்களின் மொழி சூழல் போன்ற பலவிடயங்கள் பிரபலமாகின்றன.

அந்த வகையில் மாயாவின் முயற்சிகளையும் அவரது வெற்றிகளையும் பாராட்டத்தான் வேண்டும்.

அந்த வகையில் ஈழத்தமிழன் கதிர்காமரையும் பாராட்டலாமே... மாயாவை விட ஐநா வரை துரிதமாக ஈழத்தமிழரை உலகுணர வைத்த பெருமைக்குரியவர்...! புலம்பெயர்வு என்பது சமூக விளைவு...அது உலக அரங்கில் தந்த தாக்கத்தின் வடிவம் வேறு...அதற்கான பின்னணிகளை உலகம் தனித்துப் பாக்கிறது கூர்ந்து கவனிக்கிறது...அதுவும் புலம்பெயர்ந்தவர்கள் காட்டும் தனித்துவமான அடையாளங்களே உலகை விழிக்கப்பண்ணுகிறது...மேற்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.