Jump to content

பெர்த் டெஸ்ட் மூலம் அவுஸ்திரேலியா பல்வேறு சிறப்புக்களையும் இழந்தது


Recommended Posts

பெர்த் டெஸ்ட் மூலம் அவுஸ்திரேலியா பல்வேறு சிறப்புக்களையும் இழந்தது

[21 - January - 2008] [Font Size - A - A - A]

பெர்த் டெஸ்டின் 3 ஆவது நாளில் அவுஸ்திரேலியா குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 2 ஓவர்கள் வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து அந்த அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அபராதம் விதித்துள்ளது. கப்டன் என்ற முறையில் பொண்டிங்குக்கு 20 சதவீதமும் மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.

பறிபோன சிறப்புகள்

பெர்த் டெஸ்டில் தோல்வியடைந்ததன் மூலம் அவுஸ்திரேலியா நீண்ட காலம் தக்க வைத்திருந்த பல அரிய சிறப்புகளை இழந்திருக்கிறது.

* பெர்த் மைதானத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் அவுஸ்திரேலியா முதல் தோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக 1997 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணிக்கெதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது.

* 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிரன்ட்பிரிட்ஜில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 4 ஆவது டெஸ்டில் தோற்ற அவுஸ்திரேலியா சுமார் 2 1/2 ஆண்டுகளுக்குப் பின் முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

* சொந்த மண்ணில் 4 ஆண்டுக்குப் பின் முதல் அடி வாங்கியுள்ளது அவுஸ்திரேலியா. கடைசியாக 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிலெய்டில் நடந்த டெஸ்டில் இந்தியாவின் மண்ணைக் கவ்வியிருந்தது.

* தொடர்ச்சியாக 16 டெஸ்டுக்குப் பின் முதல் தோல்வியை சந்தித்திருப்பதுடன் இதுவரை பெர்த் மைதானத்தில் ஆசிய அணிகளால் வீழ்த்தப்படவில்லை என்ற பெருமையையும் பறிகொடுத்தது.

அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

அடிலெய்டில் 24 ஆம் திகதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான 12 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பெர்த் டெஸ்டில் சரியாக ஆடாத புதுமுகம் கிறிஸ் ரோஜர்ஸ் நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக பெர்த்தில் ஆடாத ஹைடன் அணிக்கு திரும்பியுள்ளார்.

அணி விபரம் வருமாறு:

ஹைடன், ஜக்ஸ், பொண்டிங் (கப்டன்), ஹஸி, மைக்கேல் கிளார்க், சைமண்ட்ஸ், கில்கிறிஸ்ட், பிரெட்லீ, பிராட்ஹொக், ஸ்ரூவர்ட் கிளார்க், ஜான்சன், ஷோன் ரைற்

இதேநேரம், அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடர் முடிந்ததும் இந்திய அணி முக்கோணப் போட்டியில் பங்கேற்கிறது. 3 ஆவது நாடாக இலங்கை கலந்து கொள்கிறது. பெப்ரவரி 3 ஆம் திகதி தொடங்கும் இந்த முக்கோணப் போட்டிக்கான இந்திய அணி நேற்று ஞாயிற்றுக்கிழமை மும்பையில் தேர்வு செய்யப்படவிருந்தது. ஒருநாள் தொடரில் நீக்கப்பட்டிருந்த ராகுல் டிராவிட் மற்றும் ஷேவாக் மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளது. அதேசமயம், காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் சகீர்கான், ஷ்ரீசாந்த், முனாப்பட்டேல் ஆகியோர் இடம்பெறுவது சந்தேகமே.

thinakural.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.