Jump to content

தமிழீழ பாடல்கள்


Recommended Posts

  • 11 months later...
  • 3 months later...
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

வரும் பகை திரும்பும் என்ற இறுவெட்டில் உள்ள

"நிலவினது ஒளிவந்து" 

"கூவி விழும் எறிகணைக்கு"

ஆகிய பாடல்கள் விடுதலைப் புலிகளின் சேணேவி(Artillery) படையணிகளின் 'முன்னிலை நோக்குநர் அணி'(FOT)களுக்காக பாடப்பட்டது ஆகும்.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 6 months later...
  • 1 month later...
  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

எஸ் ஜி சாந்தன் நினைவு பாடல்

 

நிகழ்படம்: https://eelam.tv/watch/வ-ன-வ-ள-தவழ-ம-vaanveli-thavazhum-new-eelam-song-எஸ-ஜ-ச-ந-தன-ந-ன-வ-ப-டல_qTndH7zRlbD3NmE.html

 

 

பாடல்: வான்வெளி தவழும்

பாடகர்: யெகதீஸ், கிருசிகா
பாடல் ஆசிரியர்: வன்னியூர் வரன்

பாடலின் சிறப்பு: எஸ் ஜி சாந்தன் அவர்களின் குரலையொத்த குரலில் பாடப்பெற்றிருப்பது ஆகும்.

 

பாடல்வரி:

  

ஆஆ....ம்ம்ம்...
ஆஆ...ம்ம்ம்...

வான்வெளி தவழும் வன்னிமண் காற்றே
விண்ணுலகம் சென்று வருவாயோ!
வயல்வெளி தழுவும் கதிரொளிக்கீற்றே
இசைக்குயில் சாந்தனைக் காண்பாயோ!

தாய்க்குயில் அன்று தூங்கியதென்று
தாயகக் குஞ்சுகள் கலங்குதிங்கே!
இசைமழை ஒன்று இடிந்ததேயென்று
ஈழத்தின் இதயங்கள் சிதைந்ததிங்கே! (ஈழத்தின்)

ஈழத்து இசைக்குயில் போனதெங்கே!
இதயங்கள் சோகத்தில் வாடுதிங்கே!
தாளத்தின் வேரக்குரல் ஓய்ந்ததிங்கே!
சாந்தனாகக் குயிலோய்வந்து சாய்ந்ததிங்கே!

காலங்கள் தந்த காவியனை காலனே வலைபோட்ட நீதியென்ன?
இசையென்னும் ஒளிதந்த பால்நிலவை மேகங்கள் திரைபோட்ட ஞாயமென்ன?
மாவீரம் பாடிய மாமலையில் நோய்வந்து வீழ்ந்ததன் ஞாயமென்ன?
மண்வீரம் பாடிய மாதவனின் மணிக்குரல் தான்கொண்ட காயமென்ன?
தலைமகன் நிலைபுகழ் பாடினின்ற கலைமகன் கண்மூடி போனதென்ன?

(ஈழத்து இசைக்குயில்)

தேசத்தின் ஆக மாளிகையில் புயல்வீசிப் போன வேகமென்ன?
பாசத்தின் வேத மாவிளக்கை மரணத்தினால் தின்ற பாவமென்ன?
தாலாட்டு பாடிய தாய்க்குருவின் வீரத்தின் இசைமூச்சு ஓய்ந்ததென்ன?
அழகோடு அடைகாத்து அவன்வளர்த்த இசையன்பு சொந்தங்கள் சோர்ந்ததென்ன?
எழில்கொஞ்சும் எமதீழத் தேசமெங்கும் சாந்தனின் சோகத்தில் சாய்ந்ததென்ன?

(ஈழத்து இசைக்குயில்)
(வான்வெளி)
(தாய்க்குயில்)

 

 

 

ஆழமான வரிகளும் சாந்தன் போன்ற குரலும் நடைமுறையரசின்ர காலத்தில வந்த நினைவு இயக்கப்பாடல் ஒப்ப காட்டுகிறது.

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 9 months later...
  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

                                          மாவீரர்கள் வாரத்தில் மாவீரர் பாடல்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🪔🪔வரி வரியாய் உங்கள் நினைவுகள் மாவீரர் பாடல்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூடுப்பில் நாம் என்ன‌ தான் இணைத்தாலும் பின்னைய‌ கால‌ங்க‌ளில் பாட‌ல்க‌ளை நீக்குவாங்க‌ள்...............ப‌ல‌ காணொளிக‌ள் யூடுப்பில் இருந்து காணாம‌ போய் விட்ட‌து.............

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் வாழும் எரிமலையின் தேசம்

 

இசையமைத்தவர்: இசைத்தென்றல்
பாடல் வரிகள் கு. வீரா
பாடகர்: திருமலைச் சந்திரன் மற்றும் இளங்கீரன் 

இறுவெட்டு: அறியில்லை/ தனிப்பாடல்

 

கரும்புலிகள் வாழும் எரிமலையின் தேசம் - அந்தக்
காலனையே கலக்கிடும் கந்தக வாசம்!
(இது கரும்புலிகள்)

தமிழீழ மண்ணில் உயிராய் வைத்தோம் பாசம் - அந்தப்
பாச உணர்வில் தேசப்புயலாய் நாங்கள் உருவானோம்! 
(இது கரும்புலிகள்)

தலைவனின் விழிகளில் தீப்பிழம்பினால்,
தடைகளை உடைத்துமே தூள் கிளப்புவோம்! 
(தலைவனின்)
(கரும்புலிகள்)

வெடிமருந்தில் உடையணிந்து விரைவோம் - எந்த
வேளையிலும் காற்றுக்குள் நுழைவோம்!
(வெடிமருந்தில்)

கொடிகொண்டு ஆளும் தமிழீழ மண்ணில்  - நாங்கள் 
கொலுவிருந்து பார்ப்போம் தலைவனது கண்ணில்!
(கொடிகொண்டு)
(தலைவனின்)
(தலைவனின்)

தீயாக எரியுமே பகைவீடு - அந்தக் 
கனலோடு தெரியும் எங்கள் வரலாறு!
(தீயாக)

இரும்பிலும் இறுகிய மனமென்பார் - எங்கள்
இதயத்தின் மென்மையை எவர் அறிவார்?!
(இரும்பிலும்)
(தலைவனின்)

நெய் விளக்கை ஏற்றிவைத்து நெஞ்சம் அழும் - அந்த 
நினைவினிலே விடுதலைத்தீ விஞ்சி எழும்!
(நெய் விளக்கை)

மெய்யுணர்வு விழித்துவிட களம் வந்தோம் - நாங்கள்
மீண்டும் தமிழ் ஆளவென்று பலம்கொண்டோம்!
(தலைவனின்)
(தலைவனின்)
(கரும்புலிகள்)
(இது கரும்புலிகள்)
(தமிழீழ)
(இது கரும்புலிகள்)
(தலைவனின்)
(தலைவனின்)

 

 

 

==========================================

 

 

 

 

 

புலிகள் யாரென எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்தியம்பும் பாடல்

பாடலிற்கான கொழுவி: வேங்கை மாவீரரெல்லாம்

"வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள்" எனத் தொடங்கும் இப் பாடலின் வரிகள்: 

  • பல்லவி:

வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள், 
வேலுப்பிள்ளை பிரபாகரன் சொல் நடந்தார்கள்!

  • அனுபல்லவி

தம் இனிய நாளையெல்லாம் தந்தார் அன்று - அதில்
நாளை எங்கள் சந்ததிகள் வாழ்வாரென்று!

  • சரணம்:

மாண்டவர்கள் மீண்டுமினிப் பிறப்பதில்லையே - எங்கள்
மாவீரர் புகழ் மண்ணில் இறப்பதில்லையே!
தமக்காக இவர்கள் என்றும் வாழ்ந்ததுமில்லை - இவர் 
தாள்போற்ற மறுப்பவனும் தமிழனுமில்லை!

பொய், களவு, மது, மாது, புகை, சூது 
என்றும் புன்செயல்கள் இல்லை இவர் ஒருபோதும்.
பொன் பொருளில் ஆசையில்லை இவர்களுக்கு 
புகழ் கொடுத்தார் ஈன்று பெற்ற தாய்களுக்கு!

தன்மானத் தமிழர்களாய் பிறந்தார்கள்
ஏற்றத் தாழ்வின்றி ஒரு குலமாய் சிறந்தார்கள்.
உண்மையான இறைவன் இவர்கள் தானே
எங்கள் உரிமைக்காய் ஈடுவைத்த மறவர்கள் தானே!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

'செம்மணி' நினைவாக ஒரு பாடல்

 

 

 

பாடலாசிரியர்: புதுவை இரத்தினதுரை

பாடியவர்கள்: திருமலைச் சந்திரன்மணிமொழிஇசைவாணர் கண்ணன்

இசை: முரளி

 

 

குரல்

 

ஊருமற்றுப் பேருமற்று உப்புத்தரைக்குள் உறங்கும்

உறவுகளுக்காகப் பாடுறோம் - கேட்க

யாருமற்றுப் புதைகுழிக்குள் போனவருக்காக இசைப்

பாடலொன்றை நாங்கள் பாடுறோம்.

 

பல்லவி

 

செம்மணியின் மீதெழுந்து ஓலமிடும் சின்னச்

சிட்டுக் குருவியே கூவி அழு – அந்த

"வெண்புறாப் பாடலைதந்தவர் வீட்டில் எம்

வேதனைப் பாடலைத் தூவி விடு.

 

சரணங்கள்

 

சின்னச்சின்ன ஆசைகளைக் கண்ணிற் சுமந்தோடி வந்து

செம்மணியிற் புதைந்ததேனம்மா? - இந்த

வண்ணவண்ணக் கனவுகளை வாசலிலே புதைத்துவிட்டு

வாக்களிக்கச் சொன்னது யாரம்மா ?

 

நாய்கதறத் தாய்கதற நம்பிவந்த பேய்குதற

நள்ளிரவில் நடந்ததென்னம்மா? - அந்த

வாய்கள் திறந்து அலறும்போது யாரருகில் இருந்ததென்று

சொல்லும் வாய்கள் இல்லைத்தானம்மா

 

காலப்பெருவெளியில் எங்கள் ஓலக்குரல் தமிழனென்ற

காரணத்தால் தொடர்வதேனம்மா - இது

ஆளவந்தோர் அமைதிப்புறா ஆனதென உலகம் நம்பும்

காலம்வரை நீளும் தானம்மா.

 

ஸ்ரீலங்கா அரசின் ரூபவாஹினியில் ஒளிபரப்பாகும் சமாதானத்துக்கான ஒரு பாடல்

 

 

 

 

 

 

 

 

 

Official English Translation of the Song

Writer: Vaanan and Michael

 

 

In memory of our blood relations,

Gone into this mass grave,

Without names or addresses and with no one to question,

Sleeping under this salt land

We sing this song!

 

Oh little bird!

Flying high from the bottom of Chemmani wasteland. 

Sing louder!

And sow our painful song to the home of the hypocrites who gave the White Dove song…

 

How do your little hopes cherished in your eyes get buried in Chemmani?

What made you bury your colourful dreams at your doorstep?

 

What happened at midnight?

When the dogs were barking and your mother was screaming?

While the saviour ghosts were tearing you into pieces…

Mouths opened to scream but no mouths dared to say who they were!

 

In the open space of time, our sorrowful voice continues…

Why? Just because we are Tamils…

This will continue till the world believes that the Ruler is a Peace Dove…

 

உசாத்துணைகள்

  • நிதர்சனம் ஒளிவீச்சு டிசம்பர் - 1998
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.