Jump to content

குறைந்த விலை லேப்டாப்கள் பயனளிக்குமா?


Recommended Posts

குறைந்த விலை லேப்டாப்கள் பயனளிக்குமா?

லேப்டாப்கள் மற்றும் கணினிகளின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதை, தற்போதைய நாளிதழ், தொலைக்காட்சி விளம்பரங்கள் திரும்பத் திரும்ப அறிவித்தாலும், அவற்றை வாங்குபவர்கள் பயன்பெறுவார்களா என்பது அலசப்பட வேண்டிய விஷயம்.அனைத்து குறைந்த விலை லேப்டாப்களும் லினக்ஸ் (Linux) அல்லது டிஓஎஸ் (Dos) போன்ற ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் வருகின்றன.

ஏனெனில் சட்டபூர்வமான மைக்ரோசாஃப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் (Authorised Microsoft Operating System) மற்றும் அதன் வேர்ட் (Word), எக்செல் (Excel) ஆகியவற்றுடன் ஒரு கணினி அல்லது லேப்டாப் தயாரிக்க வேண்டுமென்றால், அதன் விலை தற்போதைய குறைந்த விலை கணினிகளின் விலையை காட்டிலும் 20 முதல் 35 சதவீதம் வரை அதிகரிக்கும்.

தற்போது கணினிகளில் பதிவு செய்து தரப்படும் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் இலவசம் தான் என்றாலும், அதனை பரமாரிக்க ரெட் ஹேட் (Red Heat) அல்லது நாவெல் (Novell) ஆகியவை மூலம் நிர்மாணம் செய்தால் மட்டுமே பலனளிக்கும். ஆனால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

இது தவிர இந்தியாவில் கணினி பயன்படுத்தும் 22 மில்லியன் மக்களில், 95 சதவீதத்தினர் மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்துகின்றனர். இதில் 70% மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் 90% மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் ஆகியவை கள்ளத்தனமாக நகல் செய்யப்பட்டவைகளே என்ற தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது இந்த சட்டவிரோத நகல் விவகாரத்தை (Software piracy) மைக்ரோசாப்ட் ஒடுக்கினால், சட்டபூர்வமான ஆபரேட்டிங் சிஸ்டத்தை வாங்குவது கட்டாயமாகிவிடும். இதனால் குறைந்த விலையில் லேப்-டாப்களையோ, கணினிகளையோ அளிக்க முடியாது.

வன்பொருள் (Hardware) நிபுணர்கள் கணினி விலையை குறைக்க நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி வரும் வேளையில், மென்பொருள் (Software) நிறுவனங்கள் தங்கள் விலையை குறைப்பதில்லை. இதனால் ஒரு கணினி விற்பனை விலையில் இடைவெளி விழுந்துள்ளது.

கணினி தொழில்நுட்பத்தின் இந்த இரண்டு பிரிவும் ஒருங்கிணைந்து திட்டங்களை தீட்டினால் மட்டுமே குறைந்த விலை லேப்டாப்களை சகல வசதிகளுடன் அளிக்க முடியும்.

ஹெச்.சி.எல் (HCL) சமீபத்தில் அறிமுகப்படுத்திய மலிவு விலை மைலீப் லேப்டாப்கள் லினக்ஸ், ஃபிளாஷ் டிரைவ் மற்றும் 7 அங்குல வண்ணத்திரை ஆகியவற்றை உள்ளடக்கியது. பெரிய திரை மற்றும் சில கூடுதல் வசதிகளுடன் கூடிய லேப்டாப்கள் வேண்டுமானால் விலை அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.

விண்டோஸ் விஸ்டாவுடன் ஆபரேட்டிங் சிஸ்டத்தை கொண்ட கூடுதல் பயன்பாடுகளை அளிக்கவல்ல ஹெச்.சி.எல் நிறுவனத்தின், ஒய் சீரீஸ் (Y-Series) லேப்டாப்கள், ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் விலையில் கிடைக்கிறது.

லினக்ஸ் மற்றும் டி.ஓ.எஸ் உள்ள லேப்டாப்களிலேயே சில மேம்பாடுகளை செய்து கொள்கிறோம் என்றால் பயனாளர்களின் பயன்பாடுகளை பொறுத்து மேலும் ரூ.7000 செலவு செய்ய வேண்டி வரும்.

இந்தியா சீனா போன்ற நாடுகளில் மென்பொருளின் விற்பனை விலை குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி டூக் ஹாகர் கூறியுள்ளார்.

சட்டபூர்வமான மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் நிர்மாணிக்கப்பட்ட (Install) ஒரு கணினி அல்லது லேப்டாப் விலை, மற்ற ஆபரேட்டிங் சிஸ்டத்தை கொண்ட கணினிகளுடன் ஒப்பிடுகையில் 25 முதல் 35 சதவீதம் வரை விலை அதிகமாக காணப்படுகிறது என்பதையும் டூக் ஹாகர் ஒப்புக் கொள்கிறார்.

இதனால் குறைந்த விலை லேப்டாப்களை சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக மட்டுமே வாங்குவது சிறந்தது. அதிக பயன்பாடுகள் தேவைப்படுபவர்கள் மலிவு விலை லேப்டாப்களை வாங்கினால் எப்படியும் பிற பயன்பாடுகளை சேர்ப்பதற்கு கூடுதல் செலவு பிடிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

"bbc"

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.