Jump to content

காதலர் தினம் 2008: யாழ் இணையத்தில் காதல் - யாழ் காதல் இளவரசன் 2008 - யமுனா!!


Recommended Posts

உண்மையான காதலுக்கு.. என்ன பரிசு கொடுக்கிறீங்க என்றது முக்கியமில்ல..

அத ஒரு முக்கியமான நாளா ..மறக்காம..முதல் ஆளா..கொடுக்கிறது தான் முக்கியம்..

நான்(நகரம்) என்கிட்ட காசில்லை எண்டா..அவாவிற்கு ஒரு அழகான ரோஸ்..ஒரு அழுத்தமான கிஸ்...

நான்(கிராமம்) எண்டா.. எட்டி நிண்டு வாழ்த்து..அவா பேரில செய்த அர்ச்சினைப் பழம்..விபூதி..(அட இவனே சரியான பழம் போல இருக்கே..)

காதலிக்கு காசிலதான் ஏதும் வாங்கணும் அப்பதான் அவ ஏத்துப்பான்னா அவ காதலி இல்லை..

..

கிஸ்ஸ ரோஸ் எண்டா சொல்லிறது? எனக்கு இண்டைக்குத்தான் தெரியும்.. :o அப்ப நான் ஆங்கிலத்தில படிக்கிறதுக்கு இன்னும் நிறைய இருக்கிது போல இருக்கிது.

அவா அல்லது அவன் ஒன்றையும் எதிர்பார்க்கா விட்டாலும், ஒண்டும் குடுக்காட்டிக்கு எங்கட மனம் சஞ்சலமா இருக்கும் தானே? நான் எண்டால் கட்டாயம் மனம் சஞ்சலப்படுவன், அட ஒண்டும் வாங்கிக் குடுக்க இல்லையே எண்டு! அதுவும்... தற்செயலாக பெரியா பார்டி மாதிரி என்னவும் நடந்தால் அதுக்கு நீங்கள் போகவேண்டி வந்தால் ஆக்களுக்கு முன்னால இது ஒரு சிக்கலாகப் போய்விடுமே?

ஊர் எண்டால் கோயில் அர்ச்சனை ஐடியா நல்லதுதான். முக்கியமா ஊருல இருக்கிற ஆண், பெண்கள் இப்படி தமது பெயருக்கு அர்ச்சனை செய்யப்படுவதை கட்டாயம் விரும்புவீனம் எண்டு நினைக்கிறன். கோயில், தேவாலயம்.. எண்டு இந்த விளையாட்டுக்கள் ஊரில செய்தால் கட்டாயம் எடுபடும். ஆனா இந்த ஐடியா வெளிநாடுகளில வேர்க் அவுட் ஆகுமோ தெரியாது.

வேற ஒருவருக்கும் ஒரு ஐடியாவும் வர இல்லையோ?

Link to comment
Share on other sites

  • Replies 229
  • Created
  • Last Reply

வீட்டுக்கு அழைக்கிறீர்கள். ஆசையாக கதைக்கிறீர்கள்.காதலன்/காதலிக்கு விருப்பமான உணவை சமைக்கிறீர்கள்.சேர்ந்து சாப்பிடுகிறீர்கள்.பின்னர் பார்கோ, பீச்சோ என ஒரு வோக் போகலாம்.ஐடியா எப்படி? :o:)

Link to comment
Share on other sites

வீட்டுக்கு அழைக்கிறீர்கள். ஆசையாக கதைக்கிறீர்கள்.காதலன்/காதலிக்கு விருப்பமான உணவை சமைக்கிறீர்கள்.சேர்ந்து சாப்பிடுகிறீர்கள்.பின்னர் பார்கோ, பீச்சோ என ஒரு வோக் போகலாம்.ஐடியா எப்படி? :o:)

ஓம் இந்த ஐடியா பெண்களூக்கு வேர்க் அவுட் ஆகும். உங்களுக்கு நான் பட்டிஸ் செய்தனான் எண்டு சொல்லி ஏதாவது சாப்பாட்டை குடுக்கலாம். இல்லாட்டி வீட்டுக்கு வரச்சொல்லி லன்ச் ஏதும் குடுக்கலாம். ஆனா ஆண்களூக்கு சரிவருமா?

மாதிரிக் கேள்வி 05: நீங்கள் ஒரு பெண் அல்லது ஆணை காதலிக்கிறீங்கள் எண்டு வைப்பம். அவரும் உங்களை காதலிக்கிறார். உங்கட வீட்டில ஓகே, ஆனா அவரிண்ட வீட்டில பெற்றோர் உங்கள் காதலை நிச்சயம் எதிர்க்கக்கூடும். அவரது பெற்றோரை எப்படி நீங்கள் சமாளிப்பீங்கள்? (சிறந்த ஐடியாவுக்கு புள்ளி தரப்படும்.. :D )

Link to comment
Share on other sites

பெண் வீட்டில் எதற்காக எதிர்க்கிறார்கள்...

தகுதிக்குறைவு...(அழகு..படிப்பு..

உத்தியோகம்..அந்தஸ்து)..தகுதிக்

Link to comment
Share on other sites

பெண் வீட்டில் எதற்காக எதிர்க்கிறார்கள்...

தகுதிக்குறைவு...(அழகு..படிப்பு..

உத்தியோகம்..அந்தஸ்து)..தகுதிக்

��ுறைவை நிவர்த்தி செய்யலாம்.முழுமூச்சாய் முயற்சிக்கலாம்.

விரோதம்..பெரியவங்ககிட்ட மன்னிப்பு கேட்கலாம்...கூடவே ஒரு ஆளை வச்சிக்கலாம்(மன்னிச்சுடுங்க மன்னிப்பு கேட்கிறவன் மனிதன்..

மன்னிக்கிறவன் பெரிய மனிதன் அப்டின்னு சொல்ல)

வயது...மூஞ்சியும் முடியும் காட்டிக்கொடுக்கலைன்னா...இன்ன

Link to comment
Share on other sites

மாப்பூ என்ன..

காதல் மப்பா

கள்ளு மப்பா..

அத்தை..மாமாவ வெட்ட சொல்லி நாங்க எங்கப்பா சொல்லியிருக்கேன்...

படுபேஜார இருக்குப்பா உங்ககூட..

சரி அத்தைக்கு ஐஸ் வைக்க ஒரு ஜடியா...

1. அத்தைகிட்ட "வாவ் அத்தை நீங்க என்ன நம்ம ப்ரியாக்கு(உங்க காதலி) ஸிஸ்டர' மாதிரி ஸிலிமா ஜங்கா இருக்கீங்க எண்டு அவங்கள புகழ்ந்து புண்ணியம் தேடிக்கலாம்..

2. மாமாக்கு புடிச்சத கண்டுபிடிச்சு வாங்கி குடுத்து அசத்திடலாம்..

கா கா.... பிடிச்சா காரியம் நடக்கும்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாதிரிக் கேள்வி 05: நீங்கள் ஒரு பெண் அல்லது ஆணை காதலிக்கிறீங்கள் எண்டு வைப்பம். அவரும் உங்களை காதலிக்கிறார். உங்கட வீட்டில ஓகே, ஆனா அவரிண்ட வீட்டில பெற்றோர் உங்கள் காதலை நிச்சயம் எதிர்க்கக்கூடும். அவரது பெற்றோரை எப்படி நீங்கள் சமாளிப்பீங்கள்?

வங்கியில் இருக்கும் பணத்தையும், அந்த நாட்டு பாஸ்போட் டையும் காட்டுங்க .தற்போதைய காலத்துக்கு அதுதாங்க ஏத்த மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

இல்லை, விகடகவி நீங்கள் தானே கீழ இருக்கிறமாதிரி ஐடியா தந்தனீங்கள்..

ஆம்பிளையா சிங்கமாட்டம்.. அவங்க முன்னால போய் நானும் அவளும் ஒருத்தொருக்கொருத்தர் விரும்புறோம்..சேர்த்துவைச்சா நீங்கதான் நல்ல மாமி மாமா இல்லைன்னா சும்மா போமான்னுட்டு பொண்ணக்கூட்டிட்டு போயிட்டே இருக்கவேண்டியதுதான்

ஆனா கீழ இருக்கிற இந்த ஐடியா நல்லா இருக்கிது. முயற்சிசெய்து பாக்கலாம்..

சரி அத்தைக்கு ஐஸ் வைக்க ஒரு ஜடியா...

1. அத்தைகிட்ட "வாவ் அத்தை நீங்க என்ன நம்ம ப்ரியாக்கு(உங்க காதலி) ஸிஸ்டர' மாதிரி ஸிலிமா ஜங்கா இருக்கீங்க எண்டு அவங்கள புகழ்ந்து புண்ணியம் தேடிக்கலாம்..

2. மாமாக்கு புடிச்சத கண்டுபிடிச்சு வாங்கி குடுத்து அசத்திடலாம்..

கா கா.... பிடிச்சா காரியம் நடக்கும்பா

இதுக்கு புள்ளிதரலாம். :(

வங்கியில் இருக்கும் பணத்தையும், அந்த நாட்டு பாஸ்போட் டையும் காட்டுங்க .தற்போதைய காலத்துக்கு அதுதாங்க ஏத்த மாதிரி இருக்கு

ஓம் கறுப்பி.. ஆனா என்ன இருந்தாலும் அன்ரி, அங்கிள ஐஸ் வைக்காமல் காரியம் ஒண்டும் நடக்காதே...

மாதிரிக் கேள்வி 06: இப்ப நாங்கள் வாறகிழமை வைக்கப் போற இந்த "யாழ் காதல்" நேரடிப்போட்டி பற்றி.. யாழ் நிருவாகி மோகன், மற்றும் வலைஞன் அவர்கள் மனதில இப்போது என்ன நினைப்பார்கள் எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்.. (மிகச்சிறந்த நகைச்சுவைக்கு புள்ளி தரலாம்.. :mellow: ) (நீங்கள் இசகு பிசகா ஏதும் எழுதி வெட்டு வாங்கினா நான் பொறுப்பு இல்ல.. :D )

Link to comment
Share on other sites

வலைஞன்: மோகன் மாப்பி நிறைய தலைப்பை திறந்து காதலர்தினத்தை முக்கியப்படுத்தறது... அவ்வளவு சரியாப் படலை எல்லாத் தலைப்பையும் ஒண்டாக்கலாம் எண்டு யோசிக்கிறன்...

மோகன் : பையனுக்கு காதல் முத்திப்போச்சு போல..யாழை நான் எதையோ நினைச்சு ஆரம்பிச்சன்..ஒருத்தன் காதலைப் பத்தி எழுதறான்..ஒருத்தர் பெரியாரைப் பத்தி எழுதறான்.. மற்றவனைப் பத்தி எழுதறான்.. நாட்டைப்பத்தி நானும் நீங்களும்தான் எழுதணும் போல இருக்கு..

வலைஞன்: கவலையை விடுங்க ...அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுவம்.. அது சரி எந்த நாட்டைப்பத்தி

மோகன்:mellow:மனசுக்குள் கிழிஞ்சுது போ) ..

Link to comment
Share on other sites

[quote name='கலைஞன்' date='Feb 3 2008, 02:57 PM' post='379487']



[b]மாதிரிக் கேள்வி 06: [/b] இப்ப நாங்கள் வாறகிழமை வைக்கப் போற இந்த [b]"யாழ் காதல்"[/b] நேரடிப்போட்டி பற்றி.. யாழ் நிருவாகி மோகன், மற்றும் வலைஞன் அவர்கள் மனதில இப்போது என்ன நினைப்பார்கள்  எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ பாப்பம்.. [color="#FF0000"][b](மிகச்சிறந்த நகைச்சுவைக்கு புள்ளி தரலாம்..  :icon_mrgreen: )[/b][/color] (நீங்கள் இசகு பிசகா ஏதும் எழுதி வெட்டு வாங்கினா நான் பொறுப்பு இல்ல..  :mellow: )

[/quote]
மாப்பு பரவாயில்லை யாழ்களத்தை சுறுசுறுப்பாக இயங்க வைக்க நல்ல ஐடியாக்கள் எல்லாம் பண்ணுறார் எண்டு மோகன் நினைப்பார் இந்த மாப்பால பெரிய தொல்லைவரும்போல இருக்கே இசகு பிசகாக யாராவது இப்பிடி ஜோக்விட

காதலி: ஜம்மு பேபி போல ஒன்றுங்க.

காதலன்: மாப்பு.. ஜம்மு வைச்சிட்டாண்டா ஆப்பு

--------------

காதலன்: எனக்கு கலைஞனா வர ஆசை

காதலி: என் எக்ஸ் (Ex) கலைஞன் தாங்க.

காதலன்: அடி பாவி. அதுக்கு யாராவது இசகு பிசகாக கருத்தாடல் எழுத அதுபின்னர் தனிநபர் தாக்குதலாகமாற ஆற்றைய கொத்துறது ஆற்ரைய வெட்டுறது இந்த மாப்ப என்னசெய்யிறது எண்டு வலைஞன் யோசிப்பார்


காதலன்: ஏண்டியம்மா நமக்கு எப்படி பேபி பிறக்கும் என்று நினைக்கிறே?
Link to comment
Share on other sites

வலைஞன்: மோகன் மாப்பி நிறைய தலைப்பை திறந்து காதலர்தினத்தை முக்கியப்படுத்தறது... அவ்வளவு சரியாப் படலை எல்லாத் தலைப்பையும் ஒண்டாக்கலாம் எண்டு யோசிக்கிறன்...

மோகன் : பையனுக்கு காதல் முத்திப்போச்சு போல..யாழை நான் எதையோ நினைச்சு ஆரம்பிச்சன்..ஒருத்தன் காதலைப் பத்தி எழுதறான்..ஒருத்தர் பெரியாரைப் பத்தி எழுதறான்.. மற்றவனைப் பத்தி எழுதறான்.. நாட்டைப்பத்தி நானும் நீங்களும்தான் எழுதணும் போல இருக்கு..

வலைஞன்: கவலையை விடுங்க ...அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுவம்.. அது சரி எந்த நாட்டைப்பத்தி

மோகன்:Dமனசுக்குள் கிழிஞ்சுது போ) ..

ஹாஹா... பகிடி சூப்பர் அண்ணாச்சி. :rolleyes: ஆனா.. நீங்கள் சொல்லிற ஐடியாவக் கேட்டுப்புட்டு நிருவாகம் உண்மையிலேயே எல்லாத் திரிகளையும் ஒன்டாக்கிடுமோ என்டு பயமா இருக்கிது. :lol::unsure:

மாப்பு பரவாயில்லை யாழ்களத்தை சுறுசுறுப்பாக இயங்க வைக்க நல்ல ஐடியாக்கள் எல்லாம் பண்ணுறார் எண்டு மோகன் நினைப்பார்

காதலன்: ஏண்டியம்மா நமக்கு எப்படி பேபி பிறக்கும் என்று நினைக்கிறே?

காதலி: ஜம்மு பேபி போல ஒன்றுங்க.

காதலன்: மாப்பு.. ஜம்மு வைச்சிட்டாண்டா ஆப்பு

சிவா அண்ணை ஜம்மு பேபி அவ்வளவு மோசம் இல்லை. பேபியக் கண்காணிக்க பின்னால பேபி வீட்டில இருந்து ஒரு புலனாய்வுப்படையே பேபிக்கு பின்னால சுத்தித்திரியுது. :D

மாதிரிக் கேள்வி 07: நீங்கள் ஒருவனை இல்லாட்டி ஒருத்திய தீவிரமாக காதலிச்சுக்கொண்டு இருக்கேக்க இடையில வில்லன் இல்லாட்டி வில்லி (உங்களைவிட கூடிய தொழில், கல்வி தகமை மற்றும் அழகு, பணம் கொண்ட இன்னொருத்தன் இல்லாட்டி இன்னொருத்தி உங்கட லவ்வரை கொத்திக்கொண்டு போக முயற்சித்தால்..)வந்தாள் எப்பிடி அவனை இல்லாட்டி அவளை (வில்லன்/வில்லியை) சமாளிப்பீங்கள்? (சிறந்த ஐடியாவுக்கு புள்ளி..)

Link to comment
Share on other sites

நேரடியா அவங்ககிட்டயே போய் நம்ம காதலோட தீவிரத்தை புரிய வைக்கலாம்..

அவங்களுக்கு நம்ம காதலிய விட அழகான பெண்ணை கைகாட்டிவிடலாம்

ஆளை வைச்சு இல்லன்னா நாமளே ஒரு மிரட்டு மிரட்டி வைக்கலாம்..

நாம தகதிய கூட்டிக்க முடிங்சா கூட்டிக்கலாம்..

நம்ம காதலிகிட்ட சம்மதம் வாங்கிட்ட இது எதுவுமே தேவையே இல்லை

Link to comment
Share on other sites

அவங்களுக்கு நம்ம காதலிய விட அழகான பெண்ணை கைகாட்டிவிடலாம்

எப்பிடி உங்களுக்கு மட்டும் இப்பிடி யோசனைகள் தோன்றுது? சொந்த அனுபவமோ? :unsure::lol:

விகடகவியோட போட்டி போட வேற ஒருவரும் இல்லையோ? பேபியையும் காண இல்ல.

போட்டியில அதிகபுள்ளியை பெறுபவர் யாழ் காதல் இளவரசன்/ இளவரசி என்ற பட்டம் சூடி முடிசூட்டப்படுவார். :rolleyes: மிச்ச என்ன பரிசு குடுக்கிறது எண்டு இன்னும் யோசிக்க இல்ல.

Link to comment
Share on other sites

அட இவ்வளவு கேள்விகள் க்கேட்கப்பட்டுவிட்டனவா? நாம தான் பிந்திட்டம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இவ்வளவு கேள்விகள் க்கேட்கப்பட்டுவிட்டனவா? நாம தான் பிந்திட்டம் போல.

வெண்ணிலா எப்படி சுகம்

Link to comment
Share on other sites

வெண்ணிலா எப்படி சுகம்

சுகங்கள் பரவாயில்லை. ஆனால் நாட்டில் நடமாட பயமாக உள்ளது :rolleyes:

Link to comment
Share on other sites

காதலன்: ஏண்டியம்மா நமக்கு எப்படி பேபி பிறக்கும் என்று நினைக்கிறே?

காதலி: ஜம்மு பேபி போல ஒன்றுங்க.

காதலன்: மாப்பு.. ஜம்மு வைச்சிட்டாண்டா ஆப்பு :lol:

அட...அட..அட...தாத்தா யார் அவா என்று எனக்கு கொஞ்சம் இன்டடியூஸ் பண்ணி வையுங்கோ :lol: வேறேன்னதிற்கு ரிளேசன்சிப்பை கொஞ்சம் மெயிண்டேண் பண்ணி கொள்ள தான் :lol: ...பின்னே ஜம்மு பேபி மாதிரி ஒரு பேபி வேண்டும் என்று கேட்டிருக்கா என்றா என்னால முடியல... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மாதிரி கேள்வி 05: நீங்கள் ஒரு பெண்ணை அல்லது ஆணை காதலிக்கிறீங்கள் எண்டு வைப்பம். உங்கட காதலன் அல்லாட்டி காதலிக்கு நாளைக்கு பிறந்தநாள். ஆனா இண்டைக்கு உங்கட கையில காசு ஒண்டும் இல்ல. இப்படியான நிலமையில நீங்கள் பிறந்தநாளுக்கு என்ன பரிசு குடுப்பீங்கள்.. (மிகச்சிறந்த ஐடியாவுக்கு புள்ளிதரலாம்..)

ஜெனரல் வந்துட்டேன்!!

வெறி சாறி பாஸ் கீயுசன் எல்லாத்தையும் இப்ப அட்டண்ட் பண்ணுறதிற்கு :lol: ...நான் கொஞ்சம் பிசி அல்லோ அது தான்...சரி இப்ப மாட்டருக்கு வாரேன்..ம்ம் இப்ப நம்ம கேள்பிரண்டிற்கு பேர்டே நம்மகிட துட்டு இல்லை அது தானே மாட்டர் வெறி சிம்பிள் :( ...என்ன செய்யிறது என்றா உடனே றோட்டில இருக்கிற தலைமுடி (பெண்களின்ட)..எடுக்கிறது பிறகு எங்களின்ட நகத்தை வெட்டுறது...காய்ந்து போன ரோஸை எடுத்து வைக்கிறது...(அக்சுவலா ஒரு காம்பை எடுத்து வைத்தாலும் பரவாயில்லை :lol: )..ஏன் என்றா உது தான் அவா தந்த முதல் ரோஸ் என்று பில்டப் காட்ட தான் :D ...அப்படியே சோடாமூடி,ஜஸ்கீரிம் கப் என்று பொறுக்கி வைத்து..வேண்டும் என்றா ஒரு முள்ளையும் எடுத்து வைக்கிறது (ஏன் தெரியுமோ அவா கேட்டா சொல்லுறது இது தான் என்ட செல்லத்தின் காலிற்குள் நுழைந்த முள் என் இதயத்தை தைத்த முள் என்று வாயில அப்ப என்ன டயலக் வருதோ அதை விட்டிட வேண்டும் :wub: ...அப்படியே காதலியின் கண்களை பொத்தி கொண்டு டிம்லைட்டில கொண்டு வந்து கண்களிள் இருந்து கைகளை விலக்கி இது எல்லாம் தெரியுதா செல்லதிற்கு என்று கேட்க வேண்டும் :wub: ...அவா என்ன என்று வெட்கத்தோட பார்ப்பா பாருங்கோ :lol: அப்ப இது தான் உங்களின் தலைமுடி முதன் முதலில் தோலில் சாய்ந்த போது என் முதுகில் இருந்தது அது தான் இது :lol: ..இந்த சோடா மூடி நீங்க முதல் முதல் என்னோட சோடா குடித்த போது அந்த ஸ்ரோவில் தான் இருவரும் சோடா குடித்தோம் என்று பழசை எல்லாம் சொல்லி அப்படியே கட்டிபிடித்து ஒரு "உம்மா" கொடுங்கோ உதை விட நல்ல பரிசு இருக்காது பாருங்கோ... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மாதிரிக் கேள்வி 05: நீங்கள் ஒரு பெண் அல்லது ஆணை காதலிக்கிறீங்கள் எண்டு வைப்பம். அவரும் உங்களை காதலிக்கிறார். உங்கட வீட்டில ஓகே, ஆனா அவரிண்ட வீட்டில பெற்றோர் உங்கள் காதலை நிச்சயம் எதிர்க்கக்கூடும். அவரது பெற்றோரை எப்படி நீங்கள் சமாளிப்பீங்கள்? (சிறந்த ஐடியாவுக்கு புள்ளி தரப்படும்.. :) )

ம்ம்ம்...இது ஒன்றும் பெரிய மாட்டர் இல்லை ஜெனரல்..முதலில காதலியின் மம்மியின்ட பிரண்டை பிடிக்க வேண்டும் :wub: ...அக்சுவலா அவா கோயிலிற்கு வருவா தானே இல்லாட்டி சர்சிற்கு வருவா அப்ப நாம கோயிலில போய் நின்று நல்ல பிள்ளையாட்டம் அந்த அண்டிக்கு முன்னால அக்டிங் பண்ண வேண்டும் :wub: பத்தாதிற்கு வாயில எக்ஸ்ராவா இரண்டு..முன்று தரம்...முருகனையும் கூப்பிட வேண்டும் :lol: அப்படியே அந்த அண்டிக்கு என்ன கெல்ப் வேண்டும் என்றாலும் செய்ய வேண்டும் அப்ப அந்த அண்டி தன்ட பிரண்டிற்கு சொல்லுவா என்ன ஒரு நல்ல பெடியன் உவன் பாருங்கோ என்று அப்ப..மாமியார் மனதில ஒரு பக்கம் நாம வந்திடுவோம் :lol: பாருங்கோ பிறகு மாமியார கவர் பண்ண வேண்டும்...அவா எப்ப கோயிலிற்கு போறாவோ அப்ப நாமளும் கோயிலிற்கு போக வேண்டும் பட் அவாவை கண்டும் காணாத மாதிரி இருக்க வேண்டும் :lol: இந்த அண்டிக்கு கெல்ப் பண்ண வேண்டும்..அப்ப இந்த அண்டி அவாவிற்கு முன்னால நம்மளை புகழுவா அது நம்ம மாமியாருக்கு எரிச்சலா இருக்கும் ஆனா காட்டி கொள்ளமாட்டா பாருங்கோ :lol: ...பிறகு மாமியார் கூட பொண்ணு வாறா என்றா கண்டும் காணாத மாதிரி போக வேண்டும் அப்ப மாமியார் உவன் நல்ல பெடியனா இருக்கிறா என்ற இமேஜை நாமளே கிரியேட் பண்ண வேண்டும்... :(

பிறகு அங்கங்க மாமியார் கண்டா சிரிக்க தொடங்குவா அப்படியே சிரித்து விகடகவி மாமா சொன்ன மாதிரி நீங்க நல்ல இளமையா இருக்கிறீங்க என்று எல்லாம் சும்மா ஜஸை விடுறது அவாவும் அப்படியே மூழ்கி போயிடுவா :lol: பிறகு அவா ஆத்துகாரரின்ன்ட ரெக்கமன்ட் பண்ணுவா உவன் தான் என்ட மருமகன் என்று பிறகு ஆத்துகாரர் என்ன செய்ய முடியும் தலையை ஆட்டி போட்டு சேர்த்து தானே வைக்க வேண்டும்..எப்படி நம்ம ஜடியா..இதில ஏதாவது டவுட் இருந்தா கேளுங்கோ என்ன... :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

மாதிரிக் கேள்வி 07: நீங்கள் ஒருவனை இல்லாட்டி ஒருத்திய தீவிரமாக காதலிச்சுக்கொண்டு இருக்கேக்க இடையில வில்லன் இல்லாட்டி வில்லி (உங்களைவிட கூடிய தொழில், கல்வி தகமை மற்றும் அழகு, பணம் கொண்ட இன்னொருத்தன் இல்லாட்டி இன்னொருத்தி உங்கட லவ்வரை கொத்திக்கொண்டு போக முயற்சித்தால்..)வந்தாள் எப்பிடி அவனை இல்லாட்டி அவளை (வில்லன்/வில்லியை) சமாளிப்பீங்கள்? (சிறந்த ஐடியாவுக்கு புள்ளி..)

ஜெனரல்!!

ம்ம்ம்...என்னை பொறுத்தவரை போய் காதலியிட்ட கேட்பேன் என்னை பிடித்திருக்கா என்று அவா ம்ம்ம் என்றால் :lol: அவனை பற்றி கேட்பேன் ஒரு வேளை அவன் தான் வேண்டும் என்று சொன்னா பிறகு கெஞ்சி கொண்டு எல்லாம் இருக்க மாட்டேன் அப்படியே போயிடுவேன் :lol: ...பட் அவளிற்கு என்னை பிடித்திருந்தா என்ன சொல்லுவேன் தெரியுமோ ஏற்கனவே எனக்கும் அவளிற்கும் :lol: ஒரு பிள்ளை இருக்குது என்று அதற்கு பிறகு உங்களிற்கு விருப்பம் என்றா கல்யாணம் பண்ணுங்கோ என்று அதற்கு பிறகும் அவன் அந்த இடத்தில நிற்பான் என்று நினைக்கிறீங்களோ.... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஜெனரல்!!

ம்ம்ம்...என்னை பொறுத்தவரை போய் காதலியிட்ட கேட்பேன் என்னை பிடித்திருக்கா என்று அவா ம்ம்ம் என்றால் :wub: அவனை பற்றி கேட்பேன் ஒரு வேளை அவன் தான் வேண்டும் என்று சொன்னா பிறகு கெஞ்சி கொண்டு எல்லாம் இருக்க மாட்டேன் அப்படியே போயிடுவேன் :lol: ...பட் அவளிற்கு என்னை பிடித்திருந்தா என்ன சொல்லுவேன் தெரியுமோ ஏற்கனவே எனக்கும் அவளிற்கும் :lol: ஒரு பிள்ளை இருக்குது என்று அதற்கு பிறகு உங்களிற்கு விருப்பம் என்றா கல்யாணம் பண்ணுங்கோ என்று அதற்கு பிறகும் அவன் அந்த இடத்தில நிற்பான் என்று நினைக்கிறீங்களோ.... :lol:

அப்ப நான் வரட்டா!!

:lol::(:D

Link to comment
Share on other sites

அட இவ்வளவு கேள்விகள் க்கேட்கப்பட்டுவிட்டனவா? நாம தான் பிந்திட்டம் போல.

இல்ல. சோதின வாற ஞாயிறு. நான் இப்ப பிள்ளைகளுக்கு பயிற்சி குடுக்கிறன். சோதின பிள்ளைகள் குண்டு அடிச்சால் யாழுக்குத்தானே வெக்கக்கேடு!

..இந்த சோடா மூடி நீங்க முதல் முதல் என்னோட சோடா குடித்த போது அந்த ஸ்ரோவில் தான் இருவரும் சோடா குடித்தோம் என்று பழசை எல்லாம் சொல்லி அப்படியே கட்டிபிடித்து ஒரு "உம்மா" கொடுங்கோ உதை விட நல்ல பரிசு இருக்காது பாருங்கோ... :D

அப்ப நான் வரட்டா!!

கட்டிப்பிடித்து உம்மா குடுக்கிற அளவுக்கு காதல் எண்டால் பிறகு ஏன் இவ்வளவு பிரச்சனை? பிறந்தநாளுக்கு பரிசே குடுக்கத்தேவையில்லையே? எல்லாரும் காதலிக்கும் மட்டும்தான் பரிசுகள், குடுக்கல் வாங்கல் எல்லாம். கலியாணம் கட்டினாப்பிறகும் அப்பிடியே இருப்பீனமா?

..பிறகு அங்கங்க மாமியார் கண்டா சிரிக்க தொடங்குவா அப்படியே சிரித்து விகடகவி மாமா சொன்ன மாதிரி நீங்க நல்ல இளமையா இருக்கிறீங்க என்று எல்லாம் சும்மா ஜஸை விடுறது அவாவும் அப்படியே மூழ்கி போயிடுவா :lol: பிறகு அவா ஆத்துகாரரின்ன்ட ரெக்கமன்ட் பண்ணுவா உவன் தான் என்ட மருமகன் என்று பிறகு ஆத்துகாரர் என்ன செய்ய முடியும் தலையை ஆட்டி போட்டு சேர்த்து தானே வைக்க வேண்டும்..எப்படி நம்ம ஜடியா..இதில ஏதாவது டவுட் இருந்தா கேளுங்கோ என்ன... :lol:

அப்ப நான் வரட்டா!!

இது வாசிச்சு பாக்க நல்லா இருக்கிது. நடைமுறைக்கு சரிவருமா? சிலது அங்கிள், அண்டி கோயிலுக்கு போகாமல் கடவுள் நம்பிக்கை இல்லாத ஆக்கள் எண்டால் என்ன செய்யுறது? இதவிட கோயில், சேர்ச்சுக்கு வாற பசங்கள் டா அடிக்கத்தான் வாறாங்கள் எண்டு ஏற்கனவே மனதில ஒரு அபிப்பிராயம் வச்சு இருந்தா என்ன செய்யுறது?

ஜெனரல்!!

ம்ம்ம்...என்னை பொறுத்தவரை போய் காதலியிட்ட கேட்பேன் என்னை பிடித்திருக்கா என்று அவா ம்ம்ம் என்றால் :wub: அவனை பற்றி கேட்பேன் ஒரு வேளை அவன் தான் வேண்டும் என்று சொன்னா பிறகு கெஞ்சி கொண்டு எல்லாம் இருக்க மாட்டேன் அப்படியே போயிடுவேன் :lol: ...பட் அவளிற்கு என்னை பிடித்திருந்தா என்ன சொல்லுவேன் தெரியுமோ ஏற்கனவே எனக்கும் அவளிற்கும் :lol: ஒரு பிள்ளை இருக்குது என்று அதற்கு பிறகு உங்களிற்கு விருப்பம் என்றா கல்யாணம் பண்ணுங்கோ என்று அதற்கு பிறகும் அவன் அந்த இடத்தில நிற்பான் என்று நினைக்கிறீங்களோ.... :(

அப்ப நான் வரட்டா!!

ஓ இது நல்ல ஐடியாவா படுகிது. நேர காதலிக்கிறவருட்டையே போய் கதைச்சு விசயத்த கிளீயர் பண்ணினா பிரச்சனை இல்ல. இதுக்கு உங்களுக்கு புள்ளி தரலாம்.

மாதிரி கேள்வி 08: உங்கள் நண்பன் அல்லது நண்பி அல்லது கூடப்பிறந்த சகோதரம் ஒருவனை அல்லது ஒருத்தியை உயிருக்குயிராக காதலிக்கிறார் எண்டு வைப்பம். அவர் காதலிக்கிற ஆளோ இன்னொருவரை காதலிப்பதை நீங்கள் கண்டுபிடிக்கிறீங்கள். ஆனால் உங்கள் நண்பன் அல்லது நண்பி அல்லது கூடப்பிறந்தவரை சும்மா டைம் பாஸ் பண்ண காதலிப்பதாக பாசாங்கு செய்கின்றார். இந்த விசயம் உங்கள் நண்பன்/ நண்பி/ சகோதரத்திற்கு தெரியாது. தெரிந்தால் அவர் தற்கொலைகூடச் செய்யக்கூடும். ஏனென்றால் அவர் மிகவும் மென்மையானவர். இந்தநிலையில் நீங்கள் எப்படி உங்கள் நண்பன்/ நண்பி/ சகோதரத்தை காப்பாற்றுவீங்கள்? (மிகச் சிறந்த ஆலோசனைக்கு புள்ளி தரப்படும்..)

Link to comment
Share on other sites

காதலிக்கிறவங்க உண்மையானவங்க இல்லை எண்டுறத யாரும் சொன்னா நம்பமாட்டாங்க..அதால எடுத்துச்சொல்லுறது பக்குவமா சொல்லுறது எல்லாம் சரி வராது..அவங்கள கொஞ்ச நாளைக்கு தூரமா கூட்டிகிட்டு போய்.. காதலிக்கிறவங்ககிட்ட இருந்து பிரிக்கிறாமாதிரி இல்லாம.. ஏதாவது வேலை விடுமுறை மாற்றங்கள் எண்ட கணக்கிலயோ உறவுக்காரங்ககிட்யோ கூட்டிப்போய் கொஞ்சம் சொஞ்சமாய்.. காதலோட தீவிரத்தை குறைச்சு பின்னர் சொல்லலாம்..

நடைமுறை உலகத்தில காதல் என்பது இதிகாசம்..புராணம்..சினிமா எல்லாம் சித்தரிக்கின்ற மாதிரி காதல் தெய்வீகம் இல்லை.. அதில் எவ்வளவு ஏமாத்துக்காரர்கள்...எவ்வளவு சுயநலவாதிகள் இருக்கிறார்ரகள் என்ற உண்மையை எடுத்துக்காட்டுகளோடு கொஞ்சம் கொஞ்சமாய் புரியவைத்து அவர் காதலரைப்பற்றி சொன்னால்.. அப்போது அவர் பெரிதாக உடைந்து போக மாட்டார் என்று தோணுகிறது...

கலைஞன் உங்கள் கேள்விகள்.. அற்புதம்..சபாஸ்

Link to comment
Share on other sites

காதலிக்கிறவங்க உண்மையானவங்க இல்லை எண்டுறத யாரும் சொன்னா நம்பமாட்டாங்க..அதால எடுத்துச்சொல்லுறது பக்குவமா சொல்லுறது எல்லாம் சரி வராது..அவங்கள கொஞ்ச நாளைக்கு தூரமா கூட்டிகிட்டு போய்.. காதலிக்கிறவங்ககிட்ட இருந்து பிரிக்கிறாமாதிரி இல்லாம.. ஏதாவது வேலை விடுமுறை மாற்றங்கள் எண்ட கணக்கிலயோ உறவுக்காரங்ககிட்யோ கூட்டிப்போய் கொஞ்சம் சொஞ்சமாய்.. காதலோட தீவிரத்தை குறைச்சு பின்னர் சொல்லலாம்..

நடைமுறை உலகத்தில காதல் என்பது இதிகாசம்..புராணம்..சினிமா எல்லாம் சித்தரிக்கின்ற மாதிரி காதல் தெய்வீகம் இல்லை.. அதில் எவ்வளவு ஏமாத்துக்காரர்கள்...எவ்வளவு சுயநலவாதிகள் இருக்கிறார்ரகள் என்ற உண்மையை எடுத்துக்காட்டுகளோடு கொஞ்சம் கொஞ்சமாய் புரியவைத்து அவர் காதலரைப்பற்றி சொன்னால்.. அப்போது அவர் பெரிதாக உடைந்து போக மாட்டார் என்று தோணுகிறது...

கலைஞன் உங்கள் கேள்விகள்.. அற்புதம்..சபாஸ்

அண்ணாச்சி, நான் கேட்கிற கேள்விகள விட நீங்கள் சொல்லிற விடைகள்தான் அற்புதம்.. :lol:

எங்க மிச்ச ஆக்கள் உங்கட ஐடியாக்கள சொல்ல இல்ல?

போட்டியில அப்ப விகடகவிதான் யாழ் காதல் இளவரசனா முடிசூடப்போறாரோ?

மிச்ச ஆக்களும் உங்கட ஐடியாக்கள சொல்லுங்கோ.. நன்றி!

Link to comment
Share on other sites

மாதிரி கேள்வி 08: உங்கள் நண்பன் அல்லது நண்பி அல்லது கூடப்பிறந்த சகோதரம் ஒருவனை அல்லது ஒருத்தியை உயிருக்குயிராக காதலிக்கிறார் எண்டு வைப்பம். அவர் காதலிக்கிற ஆளோ இன்னொருவரை காதலிப்பதை நீங்கள் கண்டுபிடிக்கிறீங்கள். ஆனால் உங்கள் நண்பன் அல்லது நண்பி அல்லது கூடப்பிறந்தவரை சும்மா டைம் பாஸ் பண்ண காதலிப்பதாக பாசாங்கு செய்கின்றார். இந்த விசயம் உங்கள் நண்பன்/ நண்பி/ சகோதரத்திற்கு தெரியாது. தெரிந்தால் அவர் தற்கொலைகூடச் செய்யக்கூடும். ஏனென்றால் அவர் மிகவும் மென்மையானவர். இந்தநிலையில் நீங்கள் எப்படி உங்கள் நண்பன்/ நண்பி/ சகோதரத்தை காப்பாற்றுவீங்கள்?

காதலிப்பதாக பாசாங்கு செய்யும் காதலனையோ காதலியையோ அல்லது அவன்/அவள் உயிருக்குயிராக காதலிக்கும் மற்றவனை/மற்றவளை கொலை செய்துட வேண்டியதுதான். மன்மதன் ஸ்ரைல் இல்.

டைம் பாசிற்கு காதலிப்பது தப்பு என அவனுக்கோ/அவளுக்கோ உதாரணங்களோடு எடுத்தியம்புதல். கேட்க மறுக்கும்பட்சத்தில் .... கொலை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
    • ராம‌ன், ர‌ஹ்மான் சர்ச்சை: எவ‌ரையேனும் புண்ப‌டுத்தியிருந்தால் ம‌ன்னியுங்கள்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் அப்துல் ம‌ஜீத்.- ”சில‌ வ‌ருட‌ங்களுக்கு முன் உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் என்ற‌ வ‌கையில் தன்னால்  கூற‌ப்ப‌ட்ட‌ ராம‌ன், ர‌ஹ்மான் க‌ருத்துக்க‌ள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால்  அதற்காக  தான் ப‌கிர‌ங்க‌ ம‌ன்னிப்பு கேட்பதாக” முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இஸ்லாமிய‌ ம‌த‌த்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு முஸ்லிமாக‌வே வாழ்ந்தார் என்ப‌தால் உல‌கில் உள்ள‌ அனைத்து ம‌த‌ங்க‌ளைச்  சேர்ந்தோரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே ஆவர். இத‌னால் ஆதிகால‌ முஸ்லிம்க‌ளின் சிறிய‌ க‌தைக‌ள் பின்னாளில் பெரும் க‌ற்ப‌னை காவிய‌ங்க‌ளாக‌ மாறியுள்ள‌ன‌ என்ப‌தே என‌து ந‌ம்பிக்கை. இந்த‌ வ‌கையில்தான் நான் மேற்ப‌டி க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தேன். ஆனால் அர்ர‌ஹ்மான் என்ப‌து இறைவ‌னின் திருப்பெய‌ர்க‌ளில் ஒன்று என்ப‌தால் அத‌னோடு ஒருவ‌ரை இணைப்ப‌து இறைவ‌னை அவமதிக்கும் செயல்  என‌ நான்  ம‌திக்கும், ஒருவ‌ர் என‌க்கு வ‌ருத்த‌த்துட‌ன் கூறிய‌தால்  நான் தெரிவித்த கருத்து அவ‌ர‌து ம‌ன‌தை மிக‌வும் காய‌ப்ப‌டுத்தியுள்ள‌து என்ப‌தைப் புரிந்துகொண்டேன். ம‌க்களை எமாற்றும், இன‌வாத‌, ல‌ஞ்ச‌ம் வாங்கும், மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளின் உள்ள‌ங்க‌ளை விட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் ம‌ன‌து புண்படும் என்றால் அத‌னை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌து. அந்த‌ வ‌கையில் ர‌ஹ்மானோடு ராம‌னை இணைத்து க‌ருத்து சொன்ன‌மைக்காக‌ நான்  ம‌ன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378686 @colomban
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.